Jump to content

வன்னி ஒரு வரலாறு படைக்கும் ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி ஒரு வரலாறு படைக்கும் ............

எதிரி எக்காளமிடுகிறான் கிளி நொச்சி விழுந்து விட்டது ,

முல்லை விழுந்தது ஆனையிறவு விழுந்தது ,என்று

அவனுக்கு சொல்லுங்கள் தலைவன் வழியில்

தமிழன் விழ விழ எழுவான் என்று

கடந்த காலத்தை ,சற்று புரட்டி பார் ,

நம் வீரர் பதுங்கி தான் பாய்ந்தார்கள்

,புலத்து உறவுகளுக்கு ஒரு சஞ்சலம்

"என்றும் நாம் வீழ மாடோமேன்று "

உரத்து சொல்லுங்கள். அது

காலத்தின் தேவை என்று ".

ஏன் கலக்கம் சுனாமியும் உள் இழுத்து

தான் வாரிக்கொண்டு போனது , ஏன்

இது நம் தலைவனின் உள்நோக்கிய

இழுப்பாக இருக்க கூடாது ?

பிடிப்பார் பிடிப்பார் எப்படி?

மக்கள் இல்லாமல் தக்க வைப்பார்.

இருந்து பாருங்கள்" பெரும் அதிரடி" ஒன்று

கருக்கொள்ளும் பின் மழையாக பொழியும்

வன்னி ஒரு வரலாறு எழுதும் ...............

Last edited by nilaamathy (Today 01:34:3Cool//

_________________

நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டாயம் படைக்கம் நிலாமதி உங்கள் கவிதைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

சோர்வடைந்து இருக்கும் தமிழ் உறவுகளுக்கு உற்சாகமூட்டுகிறது உங்கள் வரிகள்... வாழ்த்துக்கள்

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் தங்கை நிலாமதி அவர்களுக்கு. பென்மன் அன்புடன் எழுதிக்கொள்வது.

உணர்ச்சிமிக்க கவிதை, சோர்ந்து போயுள்ள புலம் வாழ் தமிழ் நெஞ்சங்களுக்கு வலுசேர்க்கும், ஒற்றுமை சேர்க்கும் உன்னத கவிதை.

கரைதுறைப்பற்றிலும், அடங்காப்பற்றிலும் உள்நுளைந்த சிங்களப்படை ஒழித்துநிற்கும புலிப்படை- தமிமழர் படையுடன் ஒழித்துபிடித்து விளையாட தமிழ் மண்-வன்னிமண்ணின் எல்லைகளில் வந்துநிற்க ஒட்டுமொத்த சிங்களமும்

ராஜபக்ஸ சகோதரர்களும், சரத்பொன்சேகா புலி அழி;;ந்துவிடும் அல்லது அழித்துவிடுவோம் என்று ஓலம் இடுகிறார்கள்.

சிங்கராஜ வனத்திலும் சிங்கம் இருப்பது என்பது கேள்விக்குறி. ஆனால் தமிழ்மண்ணில்-வன்னி மண்ணில் புலி வாழ்ந்தது, வாழ்கிறது, வாழும், ஏன் சிங்களத்திலும் புலி வாழ்கிறது, வாழும். இது காலத்தின் கட்டாயம். சிங்கம் அடிபட்டாலும் மறந்து உறங்கும், ஆனால் புலி அடிபட்டால் மறந்தும் தூங்காது.

ஒட்டுமொத்த தமிழ்மண்ணில்-வன்னிமண்ணில் சிங்கம் வாழ்ந்தது என்று வரலாறு இல்லை வாழவும் முடியாது உண்மைiயினை உரைத்தால் சரித்திரத்தின் பெயரால் இஸ்ரவேல் ஆக்கிரமிப்பும் எதிர்காலத்தில் ஈழம் நம் தாயகம்

(ஈழம் - கோம் லான்ட்) அனுராதபுரம் நிட்சிபெற்று பிரபாகரன் என்ற தமிழ்மன்னன் ஆட்சிக்குள் வீழ்ந்துபோகும், சிங்களம் வீழழ்ந்து மகிந்தன் ஆட்சி சிங்ளத்திலேயே மடிந்து போய் அஸ்தமிக்க போகிறது. இது பென்மன் சொல்வாக்கு அல்ல, இது காலத்தின் கட்டாயம்;.

பென்மன்

என். வை.

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.

Link to comment
Share on other sites

நிச்சயம் வன்னி ஒரு வரலாறு படைக்கும். ஈழத்தமிழர் வரலாற்றில் என்றுமில்லாத மக்கள் அழிவு நடந்ததாக வரலாற்றில் எழுதப்படும்.

Link to comment
Share on other sites

அத்தோடு புலம்பெயர்ந்த *** விதம் விதமாக உப்புச்சப்பற்ற கவிதை எழுதி கைய்யாலததனமாக வாய்பாத்தாகவும் வரலாற்றில் பதியப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வு பூர்வமான உணர்ச்சிக் கவிதை. தொடருங்கள் வாழ்த்துகள் நிலாமதி.

Link to comment
Share on other sites

நிலாமதி கவிதை காலத்தின் தேவையான படைப்பு.. நம்மனதில் எழும் எண்ணங்களை சிந்தனைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துபவையே கவிதை என நினைக்கிறேன் அதனை சரியாக செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்..

நானும் சில வரிகளை முயற்சி செய்கிறேன் என்பங்கிற்கு.. இதோ..

Link to comment
Share on other sites

தமிழ்மக்களையும் நிலத்தையும் விழுங்கு மலைப்பாம்பே.. காலம் பதில் சொல்லும்..

ஆளும் அரச பதவி வெற்றிக்கு தேவை சிங்கள இனவெறியர்களுக்கு தீனிபோடல்

அதற்கு தேவை தமிழின அழிப்பு சதி மூலம் தனிச்சிங்களத்தீவு சதி..

அதற்கு தேவை ஆயுதத்திற்கு இராணுவத்திற்கு நிதி..

அதற்கு தேவை பயங்கரவாத ஆபத்து என்பதே கதி...

அதற்கு தேவை உன் நடிப்புக்கு மயங்கும் சில நாட்டு பதிகள்

அதற்கு விரைவில் காலம் சொல்லும் பதில்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் சிறு கவியை வாசித்தவர்களுக்கும். கருத்து பகிர்ந்தவர்களுக்கும் குறிப்பாக ,புஷ்பாவிஜி ,இளங்கவி , என் வை . பென்மன் ,சுகன் ,சுவி, குக்கூ யாவருக்கும் .என் இதயம் சொல்லு வார்த்தை "நன்றி " ..........அக்கா நிலாமதி .

Link to comment
Share on other sites

மனதில் தெம்பை கொடுக்கும் கவிதையை தந்தமைக்கு நன்றி நிலாமதி.

பி.குறிப்பு: ஒருவருக்கு உப்பு காணாதாம். அடுத்த முறை கொஞ்சம் உப்பு கூட போட்டு கொடுத்து விடுங்கோ நிலாமதி. :)

Link to comment
Share on other sites

"கிளிநொச்சி பாவைக்காய்" "ஆனையிறவு பாவைக்காய்" எண்ட கவிதைகளுக்கும் கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடலாம் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது அவர் கொஞ்சம் "உப்பு " போட்டு சாபிடார் என்பதில் எனக்கு திருப்தி.

கருத்து தானே அது சொன்னவரை பொறுத்தது . . ஏற்று கொள்கிறேன். நன்றி நுனாவிலன் .

Link to comment
Share on other sites

"கிளிநொச்சி பாவைக்காய்" "ஆனையிறவு பாவைக்காய்" எண்ட கவிதைகளுக்கும் கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடலாம் போல கிடக்கு.

மற்றவரை மட்டம் தட்டும் போது அதனை வாங்கவும் வக்கு வேணும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொன்ன வை விரைவில் நனவாகும்

Link to comment
Share on other sites

வன்னி ஒரு வரலாறு படைக்கும் ............

ஏன் கலக்கம் சுனாமியும் உள் இழுத்து

தான் வாரிக்கொண்டு போனது , ஏன்

இது நம் தலைவனின் உள்நோக்கிய

இழுப்பாக இருக்க கூடாது ?

பிடிப்பார் பிடிப்பார் எப்படி?

மக்கள் இல்லாமல் தக்க வைப்பார்.

இருந்து பாருங்கள்" பெரும் அதிரடி" ஒன்று

கருக்கொள்ளும் பின் மழையாக பொழியும்

வன்னி ஒரு வரலாறு எழுதும் ...............

மூன்றரை இலட்சம் மக்கள்... இனி அவர்களுக்கு போக இடமில்லை. எங்கை அடிச்சாலும் மனித உயிர்கள் ஊசலாடும் நிலையில் தமிழர்.

இந்த வெற்றிகள் கருக் கொண்டு நிக்கிற நேரத்திலை அங்கை தமிழ் நாட்டிலை ஒருத்தர் தீர்க்க தரிசனம் இல்லாமல் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து சண்டையை நிப்பாட்ட பாக்கிறார்.

சுனாமி... அதிரடி... மழை... ம்ம்ம்ம் தொடருங்கோ அக்கா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.