Jump to content

யாழ்களத்தில் கவனயீர்ப்பு அணுகுமுறை பற்றிய போட்டி


Recommended Posts

புலம்பெயர்ந்த சமூகங்களில் அவர்களது கலாச்சார வாழ்வு முறைகள் பொழுது போக்குகள் பழக்கவளக்கங்களிற்கு ஏற்ற முறையில் கவனயீர்பு நிகழ்வுகளை எப்படி ஒழுங்கமைக்கலாம் என்பது பற்றி ஒரு போட்டி யாழ்களத்தில் நடத்தப்பட இருக்கிறது.

இதற்கு உங்களின் ஆர்வமான பங்களிப்பு வேண்டப்படுகிறது.

போட்டியை ஒழுங்கமைக்கவோ அல்லது பங்குபற்றவோ விரும்புவர்கள் உங்கள் ஆர்வத்தை இந்த திரியில் தெரிவிக்கவும்.

மேலதிக விபரங்கள் விரைவில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை போட்டிகளுக்கான வழிமுறைகள் அல்ல. எமது மக்களின் அன்றாட வாழ்வோடு.. எமது ஈழத்து உறவுகளின் வாழ்வின் நிலைகளை.. ஒருங்கிணைத்துக் காட்டும் சில வழிமுறைகள்..

1.. தமிழ் பள்ளிகள் மற்றும் கலை பயில்விக்கும் இடங்கள் என்று கூடும் சிறுவர்கள் சிறுமிகள் மத்தியில் முத்திரை மூலம்.. வன்னியில் சிறுவர்களுக்கு பங்களிப்புச் செய்ய நிதி திரட்டக் கோரலாம். இங்கிலாந்தைப் பொறுத்தவரை.. பாடசாலை மட்டத்தில் கூட இவ்வாறான பொது தொண்டுகளை மாணவர்கள் செய்ய ஊக்குவிக்கும் நிலை இருப்பதால்.. நிதிப்பங்களிப்புக்கு முத்திரை (ஸ்ரிக்கர்) என்ற வகையில் எமது சிறார்களின் துன்பங்களை விளக்கும் சிறிய படங்கள்.. வாசகங்களை ஆங்கிலத்தில்... அல்லது அந்தந்த நாட்டு மொழிகளில் அடக்கி ஒரு பொதுச் சேவையைக் காண பங்களிப்பை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் ( இப்படியான முத்திரைகள் வெளியிடப்படின்.. நிறைய மாணவர்களிடமிருந்து இதற்கான பங்களிப்பை என்னாலும் பெற்றுத்தர முடியும்).. நிதிப்பங்களிப்புக்களையும்.. தகவல் பரி்வர்த்தனைகளையும் செய்ய முயலலாம். இவ்வாறான ஸ்ரிக்கர்களை தமிழர் அச்சகங்கள் தொண்டு அடிப்படையில் பிரசுரித்து வழங்கலாம்.

2. அண்மையில் பலஸ்தீனச் சிரார்களுக்கான நிதிச் சேகரிப்புத் தொடர்பான கூப்பன்கள்.. இலவச பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு ஆர்வமுள்ள மக்களிடமிருந்து பங்களிப்புக் கோரப்பட்டுள்ளன. பத்திரிகைகளில் வரும் கூப்பன்களில் கோரப்படும் விபரங்கள் மூலமே நிதிப்பங்களிப்பைச் செய்யலாம். அந்தக் கூப்பன்களில் அதற்குரிய விபரங்கள் கோரப்பட்டுள்ளன. (உதாரணத்துக்கு இங்கிலாந்தில் வசிப்பவர்கள் 12-01-2009 மற்றும் அதன் பின்னர் வெளியான மெற்றோ ஆங்கிலப் பத்திரிகையை பார்க்கவும்.) எமது பத்திரிகைகளும் இவ்வாறான செயற்பாடுகளை செய்யலாம். அவை நம்பிக்கைகுரிய தமிழர் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன்.. அவ்வவ் நாட்டு சட்டதிட்டங்களுக்குள் நின்று இதைச் செய்யலாம். குறிப்பாக வன்னிச் சிறார்களை மையப்படுத்தி பல செயற்பாடுகளை செய்யலாம். அதற்கு யுனிசெப் போன்ற நிறுவனங்கள் நிச்சயம் உதவ முன்வரும்..!

3. பல்கலைக்கழகங்களில் மாணவர் அமைப்புக்களில்.. உள்ளவர்களைக் கொண்டு.. எமது சிறார்கள்.. மற்றும் மக்கள் சார்ந்த மனிதாபிமான மற்றும் உரிமைப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல.. சிறிய அல்லது மத்திய அளவிலான Canvassing செய்யலாம். அதற்கான விளம்பர உடைகளை.. அணிந்து கொண்டு.. இதனைச் செய்யலாம். இதனைத் தொடர்ச்சியாக ஒரு ஒழுங்கமைக்கட்ட முறையில் மேற்கொள்ள வேண்டும். ஓரிரு நாள் அல்லது வாரங்களுக்கு என்று செய்துவிட்டு விடுவதால்.. அதனால் பிரயோசனம் குறைவு. குறிப்பாக அரசுகளை.. போராளிகளை பகிரங்கமாக சம்பந்தப்படுத்தாமல்.. படங்கள் வாயிலாக மறைமுகமாக இனங்காட்டிக் கொண்டு.. அதற்குரிய வகையில் உடையணிந்து கொண்டு.. செய்யலாம். Canvassing பங்கெடுக்கும் மக்களை ஊக்குவிக்கும் வகையில்.. எமது சிறுவர்கள்.. அல்லது மக்களின் நிலையை விளக்கும் சிறிய பொம்மைகள் அல்லது பட்ச் வழங்கலாம். அத்தோடு பங்களிக்க விரும்புபவர்களிடம் நிதியும் சேகரிக்கலாம்..!

4. எம்மவர்கள் கலந்து கொள்ளும் களியாட்ட நிகழ்வுகளில்.. இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட விளம்பரங்களை வைத்தல். இப்போ ஓரிரு புரோகிராம் செய்யப்பட்ட ஸ்கிரின் டிஸ்பிளே களில் காண்பிக்கப்படும் விளம்பரங்களை.. மக்களின் கவனத்தை கவரும் வகையில் வடிவமைத்து.. வழங்குதல். குறிப்பாக.. ஒரு போர் விமானம் கண்ணை உறுத்தும் வகையில் பறந்து வருவது போன்றும்.. அது போடும் பொருள் வெடித்து மக்கள் கதறி அழுவதையும்.. அவர்கள்.. தமிழில் அழுவதாக.. தமிழிலும்.. ஆங்கிலத்திலும் செய்தியாக விடலாம்.

இவ்வாறான ஸ்கிரின் டிஸ்பிளே விளம்பரங்களில் வரும்.. வீடியோ செய்திகளை.. கையடக்கத் தொலைபேசிகளில் பரிமாறவும் செய்யலாம். ஒரே சோகமாக அன்றி.. மக்களை கவரச் செய்து.. அதன் மூலம்.. துன்பங்களை இனங்காட்டும் வகைக்கு.. அமைக்க வேண்டும்.

5. மற்றும் தனியார் வாகனங்களில் எமது மக்களின் துயர் விளக்கும் ஸ்ரிக்கர்களை ஒட்ட விற்பனை செய்யலாம். அவற்றில் பங்களிப்புக்கள் சேர வேண்டிய விபரங்களையும் அடக்கலாம்.

6. எம்மவர்கள் நடத்தும் உணவு விடுதிகளில்.. எம் சிறார்களின், மக்களின் நிலை விளக்கும்.. பொம்மைகளை செய்து வைக்கலாம். அல்லது பொதி செய்யும் பைகளில்.. படங்களாக அச்சடித்து வழங்கலாம். சிறுவர்கள் மத்தியில்.. டிஸ்பிளே விளையாட்டு பொருட்களை வழங்கலாம். அவை பெறுமதிமிக்க மூலப் பொருட்களால் அன்றி.. சாதாரண மூலப் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு.. சிறுவர்கள் சிறுமிகள் மத்தியில்.. தமது உறவுகளை நிலையை எடுத்துச் சொல்ல செய்யலாம்.

உதாரணத்துக்கு.. பிளாஸ்ரிக் உறைகளில் இதயம் ஒன்று பேசுவது போல செய்து.. அதனை விரிக்கச் சொல்லி சொல்ல.. அதனை விரிக்கும் போது.. குருதி சொட்டுவது போன்று.. ஒரு ஈழக்குழந்தை இருப்பதாகக் காட்டலாம்..! குழந்தைகள்.. பயப்பிடும் படியாக அன்றி.. அவர்கள் உணரத்தக்க வகையில் அமைவது நன்று.

அல்லது இலவசமாக வழங்கத்தக்க வகையில் puzzles விளையாட்டுக்களை வடிவமைத்து.. ஈழத்தின் துயர் விளக்கும் உருவங்களையும் பொருத்தச் செய்து காண்பிக்கலாம்..!

7. பத்திரிகைகளில்.. தொலைக்காட்சிகளில்.. ஈழத்தின் நிலை விளக்கும்.. சிறுவர்களுக்கான சிறிய காட்டூன் கதைகளை.. ஆங்கிலத்தில் அல்லது பிற நாட்டு மொழிகளில் கீறி, எழுதி வழங்கலாம். பல சிறுவர்கள் காட்டூன் படிப்பதில் ஆர்வமுள்ளவர்களாகவே இருக்கின்றனர். குறிப்பாக வானொலி.. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடல் கேட்க வரும் சிறுவர்கள் சிறுமிகள் மத்தியில் கேட்கப்படும் இதர கேள்விகளோடு.. தாயகம் சம்பந்தப்பட்ட அவலங்களைச் சொல்லத் தக்க சில விடயங்களையும் உள்ளடக்கிக் கொள்வது நன்று.

உதாரணமாக.. நீங்கள் பி எஸ் பியில் இப்போ என்ன கேம் விளையாடுகிறீர்கள்.. என்றால் பிள்ளை ஒரு பதிலைச் சொல்லும். அப்போது அது பற்றி உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லி பிள்ளையின் கவனத்தை ஈர்க்கும் வகையி பேசி உற்சாகப்படுத்தி விட்டு.. உங்களுக்கு இந்த உலகில்.. இவ்வாறான கேம் விளையாட முடியாத சிறுவர்கள் உள்ள இடம் இருக்கு தெரியுமா என்று கேட்கலாம். நிச்சயம்.. பல சிறுவர்களுக்கு எமது வன்னிக் குழந்தைகளுக்கு பி எஸ் பி என்றால் என்னென்று தெரியாத சங்கதி தெரியாது..!

வெறுமனவே விஜய் மாமாவை பிடிக்குமா.. நயனதாராவை பிடிக்குமா என்று சிறுவர்களிடம் கேள்வி கேட்பதை கட்டுப்படுத்திக் கொண்டு.. இவ்வாறான எமது மக்களின் துயர் விளக்கும் கேள்விகளையும் கலந்து கேட்பதை வானொலி.. தொலைக்காட்சி நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்..!

இவ்வாறு.. பலவற்றை நாம் பட்டியலிட்டுக் கொண்டு போகலாம். ஆனால் செயற்படுத்த.. எம்மவர்களிடம்.. உள்ள வளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பயன்படுத்தப்படவும்.. தேவையான ஒத்துழைப்பும் அவசியம். அதை செய்ய முன்வந்தால்... நிச்சயம்.. நிறைய விடயங்களைச் செய்யலாம். இப்போதைய அளவில் இருப்பதை விட.. மக்களின் ஒவ்வொரு அன்றாட நிகழ்வுக்குள்ளும் தாயகம் பற்றிய விடயங்களைப் புகுத்திக் கொண்டால் மட்டுமே மக்களை தாயகம் நோக்கி தொடர்ச்சியாக சிந்திக்க வைக்க முடியும்..! ஆண்டுக்கொருக்கா ஆவணிக்கொருக்காக கூடிவிட்டுப் போவதால்.. நிச்சயம்.. அதன் தாக்கம் பெரிதாக அமையாது..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌ர்க‌ள் ஓன்று கூடும் இட‌ங்க‌ளான கோயில்க‌ள்,த‌மிழ் பாட‌சாலைக‌ள்,விழாக்களுக்கு செல்லும் இட‌ங்க‌ளில் வெறும‌னே அர‌சிய‌லும் ம‌க்க‌ளின் அவல‌ங்க‌ளை ப‌ற்றி க‌தைத்து விட்டு அந்த‌ இட‌ங்க‌ளில் அதை மறந்து விட்டு செல்லாமல் தாயக‌த்தில் உள்ள ம‌க்களுக்காக ஆக்க பூர்வ‌மான நட‌வ‌டிக்கையில் ஈடுபட‌லாம்.

த‌மிழ் பாட‌சாலைக‌ளிலும்,கலைக‌ள் படிப்பிக்கும் ஆசிரிய‌ர்க‌ள் த‌ங்க‌ள் மாண‌வ‌ர்க‌ளுக்கு தாயக‌த்தில் மக்க‌ள் ப‌டும் கஸ்ட‌ங்க‌ளையும்,இல‌ங்கை வர‌லாற்றினையும் போதிக்க‌ வேண்டும்.

எங்க‌ளுக்கு தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு விழிப்புணர்வினை ஊட்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

இதை எங்கு குறிப்பிடுவது என்று தெரியவில்லை.... அதனால் இங்கு எழுதுகிறேன்..!

சிரிலங்கா அரசாங்கம் மற்றும் மக்கள் ராணுவவெற்றியில் தன்முனைப்பு பெற்றுள்ளனர். முல்லைத்தீவு வீழ்ச்சி அல்லது பிரபாகரன் கைது அல்லது தப்பியோட்டம் என்ற செய்திக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். இந்தச் செய்தி அவர்களுக்கு கிடைக்குமா அல்லது கிடைக்க எவ்வளவு காலம் செல்லும் என்பது குறித்து நாங்கள் இங்கே விவாதிக்க வேண்டாம்!

இவர்களின் இந்த மனோநிலையை எப்படி எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து சிந்திப்பது நல்லது. இந்த நிலையில் எவர் சமாதானம், மனிதஉரிமை என்று பேசிக்கொண்டு வந்தாலும் சிங்களம் அவர்கள் முகத்தில் காறி உமிழும். அல்லது உதாசீனம் செய்தும். இதன் மூலம் குறித்தரப்பினரை எங்கள் பக்கம் கொண்டுவருவது இலகுவானது. திறமையான இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இது சாத்தியமாகும்! இது குறித்து புலம்பெயர்ந்த புத்திஜீவிகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அரசுகள் மாத்திரமல்ல... ஊடகங்களை கூட இந்த முயற்சியில் அணுகலாம்... உதாரணமாக இதுவரை அரசை ஆதரித்து எழுதிய பிரபல ஊடகங்களில் மனிதாபிமான அவலங்களை விமரிசித்து அரசிற்கெதிரான கட்டுரை வெளிவந்தால் அதற்கெதிராக அரசும் அரசுசார்ந்தவர்களின் செயற்பாடுகளும் மூர்கத்தனமானதாக இருக்கும். இதன் மூலம் எமது எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ள முயலலாம்.

இரண்டாவது, இலங்கை அரசு சகலவழிகளிலும் போரை காரணம் காட்டி ஜனநாயக செயற்பாடுகளை முடக்கியுள்ளது. இந்த யுத்தத்தில் அரசு முழுவெற்றி பெற்று யுத்தம் ஒரு ஓய்வுக்கு வந்தாலும், இலங்கை அரசு இந்த ராணுவபலத்தை தொடர்ந்து பேணவே முயற்சிக்கும். அதற்காக இனி ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ளது. அப்படி ஒரு இராணுவ அரசாக மாறும் பட்சத்தில் ஏற்படும் சர்வதேச மாற்றங்களை சாதகமாக பயன்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எங்கு குறிப்பிடுவது என்று தெரியவில்லை.... அதனால் இங்கு எழுதுகிறேன்..!

சிரிலங்கா அரசாங்கம் மற்றும் மக்கள் ராணுவவெற்றியில் தன்முனைப்பு பெற்றுள்ளனர். முல்லைத்தீவு வீழ்ச்சி அல்லது பிரபாகரன் கைது அல்லது தப்பியோட்டம் என்ற செய்திக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். இந்தச் செய்தி அவர்களுக்கு கிடைக்குமா அல்லது கிடைக்க எவ்வளவு காலம் செல்லும் என்பது குறித்து நாங்கள் இங்கே விவாதிக்க வேண்டாம்!

இவர்களின் இந்த மனோநிலையை எப்படி எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து சிந்திப்பது நல்லது. இந்த நிலையில் எவர் சமாதானம், மனிதஉரிமை என்று பேசிக்கொண்டு வந்தாலும் சிங்களம் அவர்கள் முகத்தில் காறி உமிழும். அல்லது உதாசீனம் செய்தும். இதன் மூலம் குறித்தரப்பினரை எங்கள் பக்கம் கொண்டுவருவது இலகுவானது. திறமையான இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இது சாத்தியமாகும்! இது குறித்து புலம்பெயர்ந்த புத்திஜீவிகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அரசுகள் மாத்திரமல்ல... ஊடகங்களை கூட இந்த முயற்சியில் அணுகலாம்... உதாரணமாக இதுவரை அரசை ஆதரித்து எழுதிய பிரபல ஊடகங்களில் மனிதாபிமான அவலங்களை விமரிசித்து அரசிற்கெதிரான கட்டுரை வெளிவந்தால் அதற்கெதிராக அரசும் அரசுசார்ந்தவர்களின் செயற்பாடுகளும் மூர்கத்தனமானதாக இருக்கும். இதன் மூலம் எமது எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ள முயலலாம்.

இரண்டாவது, இலங்கை அரசு சகலவழிகளிலும் போரை காரணம் காட்டி ஜனநாயக செயற்பாடுகளை முடக்கியுள்ளது. இந்த யுத்தத்தில் அரசு முழுவெற்றி பெற்று யுத்தம் ஒரு ஓய்வுக்கு வந்தாலும், இலங்கை அரசு இந்த ராணுவபலத்தை தொடர்ந்து பேணவே முயற்சிக்கும். அதற்காக இனி ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ளது. அப்படி ஒரு இராணுவ அரசாக மாறும் பட்சத்தில் ஏற்படும் சர்வதேச மாற்றங்களை சாதகமாக பயன்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

சிங்கள அரசின் உண்மை முகத்தை வெளிக்காட்டி எமது போராட்ட நியாயத்தை இனங்காட்ட இதுவே சரியான தருணம். அப்படி ஒரு நியாயப்பாட்டை நாம் உலகின் பார்வையில் எமது போராட்டம் நோக்கி உருவாக்கிவிட்டால்.. சிறீலங்கா அரசின் பயங்கரவாதக் கோசமும்.. போரும்.. போர்க்களத்தினூடன்றிக் கூட வெற்றி கொள்ளப்படக் கூடிய ஒன்றாக அமையும்.

பலஸ்தீன தேச உருவாக்கம்.. கிழக்குத்திமோர் போன்றவை.. போராடி இராணுவ வெற்றிகளால் வெல்லப்பட்ட தேசங்கள் அல்ல. மாறாக.. சர்வதேசத்தின் கவனத்தை தம்பக்கம் ஈர்த்துக் கொண்டதால் அவற்றின் அனுதாபத்தைப் பெற்றுக் கொண்டதால்.. சர்வதேசத்தின் ஆதாய பக்கங்களை தம்பக்கம் வைத்துக் கொள்ள முயன்றதால் பெறப்பட்ட வெற்றிகள். ஆயுதப் போராட்டங்கள் அதற்கான கருவியாக மட்டும் பாவிக்கப்பட்டன.

சாணக்கியனின் இக்கருத்து வரவேற்கப்படக் கூடியது மட்டுமன்றி.. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற எம்மவர் பழமொழிக்கு அமைய நாம் செயற்பட வேண்டிய கட்டாயத்தையும் உணர்த்தி நிற்கிறது..!

வெறும்.. நில அபகரிப்புக்காக ஒப்பாரி வைப்பதிலும்.. சோகப்பட்டு வாடி வீழ்வதிலும்.. மனித உரிமைகளை முன்னுறுத்தி.. சிறீலங்காவின் உண்மை முகத்தை.. பேரினவாத சிந்தனைப் போக்கை வெளி உலகுக்கு உணர்த்த இதுவே சரியான தருணமாகும். இதை அடைய நாம் பெரும் தியாகங்களைச் செய்தே வந்துள்ளோம்.

எமது போராட்ட முதன்மை இலக்கை அடைய... சாத்தியமான எல்லாச் சூழ்நிலைகளையும் எமக்கு சார்ப்பாக ஆக்கிக் கொள்ளும் திறனை வளர்க்கவும் பாவிக்கவும் நாம் முனைய வேண்டும்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எல்லோரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.