Jump to content

காதலின் வலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் வலி

நீண்டிருந்த

கடற்கரை மணல்

வந்து கரையை

தொட்டு விட்டு

மீளும் அலை

கடலை அள்ளி

தின்று

ஏப்பம் விடத் துடிக்கும்

வானம் கடலுடன்

கைகோர்த்தபடி

கட்டித் தழுவியது

நடுக்கடலில்

தவிக்குது

துடுப்பிழந்த

ஒரு படகு

கரைசேரும் ஆவலுடன்

காதலில் விழுந்த

என் இதயம் போல

- தியா -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.இப்ப சகலரையும் பொதுவான பெரும் வலி சூழ்ந்து கொன்டதால் உங்கள் காதல் வலி க்கு கருத்து எழுதாமல் விட்டிருக்கலாம்.இப்ப நான் கூட உங்களை ஊக்கப்படுத்தும் எண்ணத்தில்தான் இதை பதிகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பு இழந்த படகாக வலிக்கும் இதயம் ஒரு நாள் .........வலிமை பெறும் . வலி புரிகிறது

தொடருங்கள் உங்கள் கவிதைகளை. நிலாமதி அக்கா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.இப்ப சகலரையும் பொதுவான பெரும் வலி சூழ்ந்து கொன்டதால் உங்கள் காதல் வலி க்கு கருத்து எழுதாமல் விட்டிருக்கலாம்.

சஜீவன் ,

உங்கள் கருத்து சரியானதுதான் இது எனது முதல் படைப்பு தொடர்ந்து தாயகம் பற்றிய படைப்புக்களை நான் தருவேன்.

நிலாமதி உங்கள் கருத்துக்கும் நன்றி

Link to comment
Share on other sites

"காதலின் வலி" தியாவின் கன்னிக்கவிதை அழகு. யாரையோ நீங்கள் யாழில் நினைவூட்டுகிறீர்கள்(கவிதையி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீயாவுக்கு

காதலின் வலி சொன்ன உங்கள் கன்னிக் கவிதை அழகு... மேலும் தொடர வாழ்த்துக்கள்..

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ^_^

ம்ம்ம்ம்........இந்த காதல் தான் பெரும் பிரச்சினையாக உள்ளது :wub::)

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்........இந்த காதல் தான் பெரும் பிரச்சினையாக உள்ளது :wub::)

காதலின்றி முனியுமில்லை.. ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலின்றி முனியுமில்லை.. :rolleyes:

ச்ச ...நம்ம விளக்கம் எல்லோருக்கும் தெரியும் போல :rolleyes::rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்........இந்த காதல் தான் பெரும் பிரச்சினையாக உள்ளது

சொந்த மண்ணின்

பெருமைகளை

சுவையுடனே சொல்ல

என் நா

எப்போதும் தடுத்ததில்லை

கிட்டிப் புள்ளடித்து

கிளித்தட்டு மறித்து

எட்டியெட்டி நின்று

கெந்தித்தொட்டு விளையாடி -எம்

செம்மண் பூமியிலே

பட்டகதை சொல்லிடவா?

கன்னியம்மன் கோயிலிலே

காரிருள் பூசைவேளையிலே

எம்

சுட்டிப் பருவமதில்

கள்ளன் பொலிஸ்

விளையாடி

விழுந்துடைபட்ட கதை

சொல்லிடவா?

அகதியாகி

அல்லல் பட்டு

அலைந்த போது

அரை றாத்தல் பாணுக்கு

அஞ்சு மணிநேரம்

வரிசை கட்டி நின்ற

சோகக்கதை சொல்லிடவா?

புழுத்த பயற்றையும்

உழுத்த உழுந்தையும்

சோற்றுக் குதவாத

அரிசியையும்

அகதிக்கென்று தந்திடவே

அதை

கை கட்டி நின்று

வாங்கியுண்ட

கதை சொல்லிடவா?

செம்மணி தாண்டி வந்து

கிளாலிக் கரையினிலே

மழை நீரை

குடைபிடித்து

மடிச்சீலை

அதில் நனைத்து

அடிநாக்கில்

பிழிந்து விட்டு

தாகம் தணித்த அந்த

தவிப்புக் கதை

சொல்லவா?

தமிழனுக்கு

தோழ் வலிமையுண்டு

தோழமை உணர்வுண்டு

விரைவில் மீண்டு புது

யுகம் படைக்கும்

வெறியுண்டு

தமிழனாய் வாழ்வோம்

தலை நிமிந்து நிற்போம்

Link to comment
Share on other sites

அகதியாகி

அல்லல் பட்டு

அலைந்த போது

அரை றாத்தல் பாணுக்கு

அஞ்சு மணிநேரம்

வரிசை கட்டி நின்ற

சோகக்கதை சொல்லிடவா?

ஒருகணம் கடந்தகாலம் சட்டென படம் போலவிரிந்தது சோகம் என்னவென்றால் நிகழ்காலம் அதைவிடக்கொடுமையானதாக இருக்கிறது...பாராட்டுக்கள் தியா தொடர்ந்தெழுதுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதியாகி 

அல்லல் பட்டு 

அலைந்த போது 

அரை றாத்தல் பாணுக்கு 

அஞ்சு மணிநேரம் 

வரிசை கட்டி நின்ற 

சோகக்கதை சொல்லிடவா?

இது தமிழனுக்கென்று எழுதப்பட்ட தலைவிதியோ என்னவோ இன்னமும் முடிந்தபாடில்லை.

காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.

உங்கள் கருத்துக்கு நன்றி ஜீவராஜ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.