Jump to content

முக்கிய அறிவித்தல் [யனவரி 2009]


Recommended Posts

அன்பான யாழ் இணைய உறவுகளுக்கு,

தாயகத்தின் இன்றைய அவலச் சூழலை யாவரும் அறிவீர்கள். அவசரமும் - மிக அவசியமானதுமான செயற்பாடுகளை முன்னெடுத்து எமது மக்களின் அவலங்களை சர்வதேசத்துக்கு எடுத்தியம்பி, சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இனவழிப்புப் போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டியதும் எமது கடமையாகும். எனவே, இதனைக் கருத்திற் கொண்டு கருத்துக்களத்திலும் சில விடயங்களை நாம் அறிவுறுத்த விரும்புகிறோம். அவசிமற்ற + பொழுதுபோக்கு விடயங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்து - தாயக நிலைமை தொடர்பாக வெளியுலகின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுகிறோம். இன்றைய தொழில்நுட்ப உலகின் வளங்களை - குறிப்பாப இணையத்தை - எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சனையை வெளி உலகுக்கு கொண்டு செல்லுங்கள். தனி மனித முயற்சியாகவோ - கூட்டு முயற்சியாகவோ அது அமையலாம். யாழ் கருத்துக்களத்தை அதற்கான ஒரு தளமாகப் பயன்படுத்துவதையே நாம் விரும்புகிறோம்.

(வண்ணத்திரை பகுதிக்குள்) "கங்கனாவின் கழிப்பறைக் காட்சி", "நயந்தாரா வீட்டு நாய்க்குட்டிக்கு வியர்த்தது" போன்ற மூன்றாந்தரச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நாம் - எப்படி - சர்வதேச ஊடகங்களிடம் எமது மக்களின் அவலங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று கேட்க முடியும்?. எனவே முழுமையாக இதுபோன்ற செய்திகளை யாழ் கருத்துக்களத்தில் தவிருங்கள். அதேபோல் செய்தித் திரட்டி பகுதிக்குள் "கணவனின் ஆண்குறியை எரித்த மனைவி" போன்ற செய்திகளையும் தவிருங்கள்.

அதேநேரத்தில் வண்ணத்திரை பகுதிக்குள் ஆக்கபூர்வமான சினிமா விமர்சனங்களை, சினிமாத் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை, நல்ல திரைப்படங்கள் பற்றிய அறிமுகங்களை எழுதுவதை வேண்டாம் என்று நாம் தடுக்கவில்லை. அப்படியான விடயங்களை எழுதுங்கள். ஆனால், மூன்றாந்தரச் செய்திகளை இணைப்பதைத் தவிருங்கள் என்றே நாம் வேண்டிநிற்கிறோம். தாயகம் சார்ந்த செய்திகளுக்கும், ஆக்கபூர்வமான கட்டுரைகளுக்கும் - குறிப்பாக சுய ஆக்கங்களுக்கும் - மொழிபெயர்ப்பு ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

வீண் விதண்டாவாதங்களையும், தனிமனித தாக்குதல்களையும் தவிர்த்து ஆக்கபூர்வமான வகையில் - இன்றைய தாயக சூழலை உணர்ந்து - செயற்படுமாறு அனைத்து கள உறவுகளையும் வேண்டி நிற்கிறோம். தாயக விடுதலைக்கான ஆக்கபூர்வமாக செயற்பாடுகளை நாம் ஊக்குவிக்க விரும்புகிறோம்.

தொழில்நுட்ப + அறிவு வளங்களை ஒருங்கிணைத்து - தமிழ்ச் சமூகம் புலம்பெயர்ந்து வாழுகிற நாடுகளில் முன்னெடுக்கிற போராட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க நாம் கருத்துக்களத்தில் தயாராகுவோம். எனவே, ஆர்வமும் திறமையும் உள்ள கருத்துக்கள உறவுகள் கருத்துக்கள நிர்வாகத்துடன் தொடர்புகளை மேற்கொண்டு உங்களால் எவ்வகையான பங்களிப்பை வழங்கமுடியும் என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

குறிப்பாக, தாயக அவலங்கள் தொடர்பான சிறிய ஆவணப்படங்களை பிறமொழிகளில் உருவாக்குவது, சர்வதேசம் நோக்கிய கருத்துப்படங்களைக் கீறுவது, யுத்தம் + அவலங்கள் தொடர்பான அனிமேசன் படங்களை உருவாக்குவது, பிறமொழி ஊடகங்களுக்கான கட்டுரைகளை எழுதுவது போன்ற பல்வேறு விடயங்களில் உங்களின் பங்களிப்புகளை நீங்கள் வழங்கலாம்.

மீண்டுமொருமுறை: தயவுசெய்து தாயகத்தின் இன்றைய அவல + நெருக்கடியான சூழலை உணர்ந்து - அதற்கமைய உங்கள் செயற்பாடுகளை முன்னெடுங்கள்.

நன்றியுடன்

கருத்துக்கள நிர்வாகம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.