Jump to content

திருமா உண்ணாவிரதம்: பல இடங்களில் வன்முறை, பஸ்கள் எரிப்பு-உடைப்பு


Recommended Posts

திருமா உண்ணாவிரதம்: பல இடங்களில் வன்முறை, பஸ்கள் எரிப்பு-உடைப்பு

விடு தலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தி்ல் பல்வேறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர் உண்ணாவிரம் இருந்து வருகிறார்.

சென்னை மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவனுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர்.இதற்கிடையே மதுரை, கடலூர், சேலம், புதுச்சேரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

மதுரை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டது. மதுரையில் இருந்து மாத்தூர் சென்ற அரசு டவுன் பஸ் மீது குருத்தூர்பட்டி என்ற இடத்தில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பஸ் தீ பிடித்துக் கொண்டது. பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். அலங்காநல்லூரில் இருந்து அழகர்கோவில் சென்ற பஸ்சை சத்திரப்பட்டி அருகே சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். இதில் பஸ் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. கும்பல் பஸ்சை மறித்ததுமே பயணிகள் இறங்கிவிட்டதால் உயி்ர்ச் சேதம் ஏற்படவில்லை.

மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து அலங்காநல்லூருக்கு நேறறு இரவு டவுன் பஸ் போய்க்கொண்டிருந்தது. அப்போது, மாலப்பட்டி என்ற இடத்தில் பஸ்சை மறித்த ஒரு கோஷ்டியினர், பயணிகளை கட்டாயப்படுத்தி கீழே இறக்கினர். பின்னர் பஸ்சுக்கு தீவைத்து விட்டு தப்பினர். அதே போல மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு ஆங்காங்கே அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. அண்ணாநகர், செல்லூர், ஒத்தக்கடை, கோரிப்பாளையம், செக்கானூரணி, கே.புளியங்குளம், அவனியாபுரம் ஆகிய இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன.

பழனியில் இருந்து மதுரைவந்த அரசு பஸ்சை சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே நேற்றிரவு ஒரு கும்பல் வழிமறித்து கல்வீசி தாக்கியது. பின்னர் பயணிகளை இறங்கச் சொல்லிவிட்டு அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ்சின் இருக்கைகள் எரிந்து நாசமாயின. இதனால் மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று காலையில் மீண்டும் பஸ்கள் ஓடத் தொடங்கின.

இந் நிலையில் இன்று காலையும் சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதிகளில் 18 பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன. காராமணி குப்பம் அருகே பஸ் மீது கல்வீசப்பட்டதில் அந்த பஸ்சில் பயணம் செய்த சுகுணா என்ற கர்ப்பிணி காயமடைந்தார்.

பண்ருட்டியில் இருந்து கடலூர் சென்ற அரசு டவுன் பஸ், கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே வந்தபோது ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பஸ்சின் பின் பக்க டயர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து டிரைவரும், கண்டக்டரும் பயணிகளை கீழே இறங்குமாறு கூறி இறக்கி விட்னர்.

இதையடுத்து அக்கும்பல் பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது. இந்த சம்பவங்களையடுத்து கடலூரில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் பெருமபாலான பஸ்கள் நிறுத்தப்பட்டன. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் 2வது நாளாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் உடைப்பு தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதே போல மேட்டூரை அடுத்த கொளத்தூரில் நேற்று மாலை அரசு பஸ் உடைத்து நொறுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. அரூரில் இருந்து ஊத்தங்கரை சென்ற தனியார் பஸ் மீது தீர்த்தமலை அருகே சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

புதுவையில் இருந்து சென்னை புறப்பட்ட தமிழக அரசு பஸ்சை புதுவையில் அண்ணாசிலை அருகே சிலர் மறித்தனர். இதையடுத்து டிரைவர் மாற்றுப்பாதையில் பஸ்சை ஓட்டினார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் பஸ் மீது கல்வீசியும், இரும்பு பைப்களாலும் தாக்கி உடைத்தனர்.

சென்னையில் பெரியார் நகரில் இருந்து பிராட்வேக்கு நேற்று இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் நடராஜ் தியேட்டர் எதிரே பஸ்ஸை வழி மறித்து சிலர் தாக்கினர். இதில் பஸ்சின் பின் புற கண்ணாடி உடைந்தது. இதற்கிடையே கடலூர் மாவட்ட பஸ்களில் ”உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவனை காப்பாற்று” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நன்றி: தட்ஸ் இந்தியா (17.01.2009)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதைத்தவினையை இந்தியா அறுவடை செய்யும் நேரம் ஆரம்பமாகிறதா....?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை : சென்னை மறைமலைநகரில் 3வது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்றுவரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, தொல்.திருமாவளவன் இன்று 3வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதனை மேற்கொண்டது. அதில் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பது தெரியவந்தது. தொல்.திருமாவளவன் மிகவும் சோர்வாகக் காணப்படுவதாகவும், அவருக்கு 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, திருமாவளவன் கைது செய்யப்பட்டதாக மதுரையில் இன்று வதந்தி பரவியதை அடுத்து, அவரது கட்சியினர் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டதால், அங்கு பதற்றம் நிலவியது.

நன்றி: குமுதம் இந்தியா (17.01.2009)

Link to comment
Share on other sites

விதைத்தவினையை இந்தியா அறுவடை செய்யும் நேரம் ஆரம்பமாகிறதா....?????????

ஓம் ஓம் விடுதலைச் சிறுத்தைகள் சுத்தி வளைச்சு இந்தியாவுக்கு கும்மாங்குத்து குத்தபோகினம். புலிகள் மிச்சத்துக்கு BMP1 ஆலை விளாசப் போகினம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம் விடுதலைச் சிறுத்தைகள் சுத்தி வளைச்சு இந்தியாவுக்கு கும்மாங்குத்து குத்தபோகினம். புலிகள் மிச்சத்துக்கு BMP1 ஆலை விளாசப் போகினம் :lol:

தமிழ் நாட்டில் சுனாமி எழும்பும் போலதான் இருக்கு :D:( :(

Link to comment
Share on other sites

உண்ணாவிரதம் இருப்பதத குழப்புவதுக்கு காங்க்ராஸுக்கு காரணம் தேவை தானே அதுக்கு இவர்களாகவே வழிமைத்து கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறு ஒன்றும் செய்யமுடியாது மத்திய அரசு அலுவலகங்களை முடக்குவது ஒன்றே முடிந்த காரியம்.

Link to comment
Share on other sites

உண்ணாவிரதமிருக்கும் திருமாவளவன் உயிருடன் வாழவிடவேண்டும்... தற்போதைய இலங்கையுடன் சேர்ந்த சதி செய்யும் மலையாளிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்திய கொள்கைகளின் படி தமிழகத்தில் என்ன நடந்தாலும் யார் யார் இறந்தாலும்கவலையில்லை புலிகள் அழிந்து இலங்கை இராணுவம் தமிழர்பகுதிமுழுவதும் கைப்பற்ற வேண்டும்..

இதற்கேற்ற வேலைகள் அரங்கு ஏற்றப்படுகின்றன..

தமிழகமக்கள் பாதிக்கப்படாத போரட்டங்கள் கொண்டு நடத்தப்படல் வேண்டும், மத்தியரசின் நடவடிக்கைகளில் மக்களிற்கு விழிப்பு உணர்ச்சி ஏற்படுத்தல் மூலம் அகிம்சை முறையில் எதிர்வரும் தேர்தலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி தமிழக தமிழ்மக்களில் உண்மையான ஈடுபாடு உள்ள கட்சியை பலமாக்குதல் மூலம் மத்தியில் மலையாளிகள், தமிழருக்கு எதிரான கொள்கை உடையவர்களை அகற்ற முடியும்.. எனவே தமிழக மக்கள் மிகத்தெளிவாக ஒற்றுமையாக செயல் படவேண்டிய நேரம்... உணர்ச்சிகளை விட அறிவிற்கு வேலை கொடுக்க வேண்டும்.. தமிழக மீனவர்கள் 600பேருக்கு மேல் கொலை செயப்பட்டும் வேடிக்கை பார்க்கும் மத்தியரசு.. இந்த உதாரணம் ஒன்றே போதும்... இலஙையரசும் நன்றாக மத்திய்ல் ஊடுருவியுள்ளது.. தமிழருக்கு எதிராக செயல்படுபவர்களை கையில் போட்டுள்ளது.. உண்ணவிரதம் போரட்டங்கள் எல்லாம் மக்கள் பாதிக்கதவரையில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் ஆனால் மத்தியரசில் கல்லில் நார் உரிப்பது போல்தான்..

Link to comment
Share on other sites

சுதந்திர போர் என்பது போய் இண்டைக்கு போர் வேண்டாம் நாயை பிடியுங்கோ நிலைமைக்குள் திட்டமிட்டு மக்களை கொண்டு சென்று கொண்டு இருக்கிறார்கள் சிலர்... இது அப்பட்டமான நயவஞ்சகம்...

பொது மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பதுதான் இண்றைய வேண்டுகோளும் தேவையும்... வேண்டு கோள்கள் இலங்கை அரசால் ஏற்று கொள்ள பட மாட்டாது என்பதுதான் உண்மை... அதன் மூலம் இலங்கை அரசை தமிழ் மக்கள் விரோத அரசாக அடையாளப்படுத்துங்கள் என்பதுதான் காலத்தின் தேவை...

புலிகளுடன் போரை நிறுத்துங்கள் எனும் வேண்டு கோள்களும் கூட மக்களின் அவலம் நீக்க பட வேண்டும் எனும் அர்த்ததில் தோய்ந்ததே தவிர புலிகள் பலவீன பட்டு போய் விட்டார்கள் அவர்களால் முடியாது நிறுத்துங்கள் என்பதாக இல்லை...

புலிகள் பலவீனர்களாக ஒரு போர் நிறுத்தம் வந்தாலும் அது நிரந்தரமானதாகவும் நியாயமாகவும், உண்மையான தீர்வை தருவதாகவும் அமையாது எனும் உண்மையை சில மர மண்டைகள் புரிந்து கொள்ள வேண்டும்...

இதை சிலர் திசை திருப்பி புலிகளின் போர் வடிவங்களை கோவலப்படுத்துதல் கண்டிக்க பட வேண்டியது... முதுகெலும்பு உள்ள எல்லா தமிழனுக்கும் புரிய வேண்டியது...

Link to comment
Share on other sites

உண்ணாவிரதம் இருப்பதத குழப்புவதுக்கு காங்க்ராஸுக்கு காரணம் தேவை தானே அதுக்கு இவர்களாகவே வழிமைத்து கொடுக்கிறார்கள்.

உண்ணா விரதம் அமைதியான முறையில் ஆனால் உணர்வு பூர்வமாக ஈழத் தமிழனின் உரிமைக்கு கைகொடுக்கும் போராட்டமாக அமையாதவிடத்து, இது வெறும் தீவிரவாதமாக முத்திரை குத்தப் பட்டு செயலிழக்க வைக்கப் படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து அலங்காநல்லூருக்கு நேறறு இரவு டவுன் பஸ் போய்க்கொண்டிருந்தது. அப்போது, மாலப்பட்டி என்ற இடத்தில் பஸ்சை மறித்த ஒரு கோஷ்டியினர், பயணிகளை கட்டாயப்படுத்தி கீழே இறக்கினர். பின்னர் பஸ்சுக்கு தீவைத்து விட்டு தப்பினர். அதே போல மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு ஆங்காங்கே அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. அண்ணாநகர், செல்லூர், ஒத்தக்கடை, கோரிப்பாளையம், செக்கானூரணி, கே.புளியங்குளம், அவனியாபுரம் ஆகிய இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன.

பழனியில் இருந்து மதுரைவந்த அரசு பஸ்சை சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே நேற்றிரவு ஒரு கும்பல் வழிமறித்து கல்வீசி தாக்கியது. பின்னர் பயணிகளை இறங்கச் சொல்லிவிட்டு அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ்சின் இருக்கைகள் எரிந்து நாசமாயின. இதனால் மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று காலையில் மீண்டும் பஸ்கள் ஓடத் தொடங்கின.

இந் நிலையில் இன்று காலையும் சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதிகளில் 18 பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன. காராமணி குப்பம் அருகே பஸ் மீது கல்வீசப்பட்டதில் அந்த பஸ்சில் பயணம் செய்த சுகுணா என்ற கர்ப்பிணி காயமடைந்தார்.

இப்படியான செய்கைகளை புலனாய்வுத்துறையே செய்து , மக்களுக்கு சிரமத்தை கொடுத்து , திருமாவளவன் அவர்களின் உண்ணாவிரதத்தை திசை திருப்ப முனையலாம் .

Link to comment
Share on other sites

இப்படியான செய்கைகளை புலனாய்வுத்துறையே செய்து , மக்களுக்கு சிரமத்தை கொடுத்து , திருமாவளவன் அவர்களின் உண்ணாவிரதத்தை திசை திருப்ப முனையலாம் .

எடுத்ததற்கெல்லாம் புலனாய்வுத்துறையிலேயே பழியைப் போட்டு விட முடியாது. பல இணையத்தளங்களில் வந்த செய்திகளில் திருமாவளவனின் கட்சியினரே வன்முறையில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். அது உண்மையாயின் திருமாவளனுக்குத் தான் அவப்பெயரை உண்டாக்கும் என்பதை அவரது கட்சித் தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் இப்படியான வன்முறைகள் இலங்கைத் தமிழர்களுக்காக ஆதரவு தரும் தமிழ் நாட்டு மக்களின் மனநிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்திவிடும்.

Link to comment
Share on other sites

...புலிகளுடன் போரை நிறுத்துங்கள் எனும் வேண்டு கோள்களும் கூட மக்களின் அவலம் நீக்க பட வேண்டும் எனும் அர்த்ததில் தோய்ந்ததே தவிர புலிகள் பலவீன பட்டு போய் விட்டார்கள் அவர்களால் முடியாது நிறுத்துங்கள் என்பதாக இல்லை...

புலிகள் பலவீனர்களாக ஒரு போர் நிறுத்தம் வந்தாலும் அது நிரந்தரமானதாகவும் நியாயமாகவும், உண்மையான தீர்வை தருவதாகவும் அமையாது...

இந்த நிலை திடீரெனத் தோன்றியதல்ல, இந்த மக்கள் இடம்பெயர்வதொன்றும் புதியதுமல்ல. இராணுவம் கிழக்கை முற்றாக ஆக்கிரமித்து மன்னாரில் போருக்கான முஸ்தீபுகளில் ஈடுபடும் போதே இதற்கான அத்திவாரம் இடப் பட்டு விட்டது.

இராணுவம் அடைந்த சில வெற்றிகளையும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடனான அதனது இராணுவ பலத்தையும் மதிப்பிட்டு, சில சர்வதேச நிறுவனங்கள் ஏற்கனவே இப்போது ஏற்பட்டிருக்கும் மனித அவலம் குறித்து எச்சரித்திருந்தனர் (சில வேளை அவர்கள் வேறு மதிப்பீடுகளுடன் இந்த எச்சரிக்கையை செய்திருக்கலாம்)

இந்த மனித அவலம் தொடர்பாக யாழ் களத்திலும் சிலர் தமது முன்னனுமானங்களை செய்திருந்தனர். புலிகள் முற்றாக நிலப் பகுதிகளை இழந்தாலும் தொடர்ந்து போராட்டத்தை ஆதரிக்க நாம் தயாரா? என்ற வகையில் கூட விவாதம் நடந்தது.

இப்போது போர்நிறுத்தம் பற்றி முழக்குபவர்கள் மடு, விடத்தல் தீவு, நாச்சிக்குடா பின்னர் பூநகரி என்று விழுந்த போது என்ன புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

இறுதிப் போர்

உள்ளே விட்டடிக்கும் தந்திரம்

தேள் வடிவ வியூகம்

புலிகள் கிழித்த கோடு இன்னும் இராணுவத்தால் அடையப் படவில்லை. முட்டினா இருக்கு விளையாட்டு

ஊள்ளே இழுத்து அள்ளிச் செல்லும் சுனாமி

கிளிநொச்சி பாதுகாக்கப் பட வேண்டுமாயின் கிளிநொச்சியைச் சுற்றி 'பண்ட்' அமைத்து மட்டும் சாதித்து விட முடியாது. இது புலிகளுக்கும் நன்கு தெரிந்த விடயம் தான். பூநகரி விழுந்த போது கிளிநொச்சியின் பாதுகாப்பு கேள்விக்குள்ளானது. அப்போதாவது இந்த மனித அவலம் உணரப் பட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான வன்முறைகளை இந்திய மத்திய அரசும் இந்திய உளவுப் பிரிவும் தூண்டிவிட்டு.. திருமாவின் உண்ணாவிரதத்தை, வன்முறைகளைக் காட்டி தமிழக அரசைக் கொண்டு அதிகாரபலத்தால் அடக்கிவிடவே முனைவர். எனவே தமிழக மக்களும் விடுதலைச் சிறுத்தைகளும் பொறுமை காத்து.. அவர்களின் தலைவரின் உயரிய எண்ணம் அகிம்சை முறையில் ஈடேற ஒத்துழைப்பதே நன்று..! தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கச் செய்வது அவர்களுக்கு ஈழத்தமிழர் மீது வெறுப்பை ஊட்டுவதாகவும் அமைந்துவிடும்..! :D

Link to comment
Share on other sites

தமிழகத்தில் பொதுமக்கள் உடைமைகள் மற்றும் அரச உடமைகளுக்கு சேதம் விளைவிப்பது தமிழீழ அதரவாக அமையாது.

அது நிச்சயம் எமக்கு ஆதரவாக இருக்கிற மக்களை ஒடுக்கவே வழியமைக்கும்.

இது கவனமாக கையாள வேண்டியதொன்று. இதனால் டில்லி மகிழவே செய்யும்.

தமிழக மக்களின் குரலை கணக்கெடுக்காத டில்லி அரசு.

நிச்சயம் இதை எமக்காக பேசுவோரையும் ஆதரவாக இருப்போரையும் சிறையிட்டு ஒடுக்க முயலும்.

எனவே இது போன்ற செயல்கள் எமது ஆதரவுகளை பலவீனமடையச் செய்யும். கவனம்.

Link to comment
Share on other sites

இந்த நிலை திடீரெனத் தோன்றியதல்ல, இந்த மக்கள் இடம்பெயர்வதொன்றும் புதியதுமல்ல. இராணுவம் கிழக்கை முற்றாக ஆக்கிரமித்து மன்னாரில் போருக்கான முஸ்தீபுகளில் ஈடுபடும் போதே இதற்கான அத்திவாரம் இடப் பட்டு விட்டது.

இராணுவம் அடைந்த சில வெற்றிகளையும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடனான அதனது இராணுவ பலத்தையும் மதிப்பிட்டு, சில சர்வதேச நிறுவனங்கள் ஏற்கனவே இப்போது ஏற்பட்டிருக்கும் மனித அவலம் குறித்து எச்சரித்திருந்தனர் (சில வேளை அவர்கள் வேறு மதிப்பீடுகளுடன் இந்த எச்சரிக்கையை செய்திருக்கலாம்)

இந்த மனித அவலம் தொடர்பாக யாழ் களத்திலும் சிலர் தமது முன்னனுமானங்களை செய்திருந்தனர். புலிகள் முற்றாக நிலப் பகுதிகளை இழந்தாலும் தொடர்ந்து போராட்டத்தை ஆதரிக்க நாம் தயாரா? என்ற வகையில் கூட விவாதம் நடந்தது.

இப்போது போர்நிறுத்தம் பற்றி முழக்குபவர்கள் மடு, விடத்தல் தீவு, நாச்சிக்குடா பின்னர் பூநகரி என்று விழுந்த போது என்ன புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

இறுதிப் போர்

உள்ளே விட்டடிக்கும் தந்திரம்

தேள் வடிவ வியூகம்

புலிகள் கிழித்த கோடு இன்னும் இராணுவத்தால் அடையப் படவில்லை. முட்டினா இருக்கு விளையாட்டு

ஊள்ளே இழுத்து அள்ளிச் செல்லும் சுனாமி

கிளிநொச்சி பாதுகாக்கப் பட வேண்டுமாயின் கிளிநொச்சியைச் சுற்றி 'பண்ட்' அமைத்து மட்டும் சாதித்து விட முடியாது. இது புலிகளுக்கும் நன்கு தெரிந்த விடயம் தான். பூநகரி விழுந்த போது கிளிநொச்சியின் பாதுகாப்பு கேள்விக்குள்ளானது. அப்போதாவது இந்த மனித அவலம் உணரப் பட்டதா?

இது எல்லாம் நடந்தது புலிகளின் பலவீனத்தால் எண்று நிறுவ நினைக்கிறீர்களா...???? இல்லை யூரியுப்பில் போர்கள காட்ச்சிகளை இணைக்காது இருந்தால் ஏதாவது நாடு ஓடி வந்து அங்கீ கரித்து இருக்கும் எண்று நினைக்கிறீர்களா...??

மனித அவலத்தை புலிகளோ இல்லை தமிழ் மக்களோ விரும்பி எதிர் நோக்க இல்லை... இராணுவ பலப்பிரயோகத்தின் தன்மைக்கு ஏற்ப இண்றைய நிலைக்கு சிறந்த முடிவை எடுக்க வேண்டியது புலிகளின் பணி.. அதுக்கு ஏற்ப நகர வேண்டியதுதான் பிரச்சாரப்படுத்தல்... தங்களின் நோக்கம் என்ன என்பதை சொல்லி அதன் பாதையில் போரை நடத்துவது அல்ல புலிகளின் பாணி... ஆனாலும் ஒரு வகை பிராச்சார படுத்துகிறார்கள்...

நாளை வன்னிக்குள் இருக்கும் மக்கள் எல்லாம் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரலாம்.. அப்போதும் அவலங்கள் நிகழும்.. தேர்தல்கள் நடக்கும்... சிறீலங்க அரசின் நிழல் அரசு கூட உருவாகும்... அப்போதும் போராட்டம் தொடரும்... அப்போதும் புலிகள் பலமாக தான் இருப்பார்கள்... இருக்க வேண்டும்... அது மட்டும்தான் தீர்வை நோக்கி எல்லாரையும் சிந்திக்க தூண்டும்...

மற்றும் படி போர் நிலபர படங்கள் வீடியோகளை வெளியிடாது விட்டு, அதை பார்த்து தமிழ் மக்கள் இராணுவத்துக்கு( அடக்கு முறை இராணுவம்.?) ஏற்படும் அழிவில் மகிழவில்லை எனும் செய்தி சர்வதேச அளவில் அவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லும்... அந்த செய்தி என்ன என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம் விடுதலைச் சிறுத்தைகள் சுத்தி வளைச்சு இந்தியாவுக்கு கும்மாங்குத்து குத்தபோகினம். புலிகள் மிச்சத்துக்கு BMP1 ஆலை விளாசப் போகினம் :)

இப்படி தண்ணிக்கு பின்னால கருத்தெழுத வந்தால் வாசகர்களுக்கு எரிச்சல்தான் மிச்சமாகும்.

Link to comment
Share on other sites

இது எல்லாம் நடந்தது புலிகளின் பலவீனத்தால் எண்று நிறுவ நினைக்கிறீர்களா...???? இல்லை யூரியுப்பில் போர்கள காட்ச்சிகளை இணைக்காது இருந்தால் ஏதாவது நாடு ஓடி வந்து அங்கீ கரித்து இருக்கும் எண்று நினைக்கிறீர்களா...??

... தங்களின் நோக்கம் என்ன என்பதை சொல்லி அதன் பாதையில் போரை நடத்துவது அல்ல புலிகளின் பாணி... ஆனாலும் ஒரு வகை பிராச்சார படுத்துகிறார்கள்...

அதுவல்ல நான் சொல்ல வந்த விடயம். இப்போது போர் நிறுத்தம் செய்யப் பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துபவர்கள் அதன் தேவையை திடீரென உணர்ந்தவர்கள் போல் திகைத்து நிற்கின்றனர். ஆனால் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது விஸ்பரூபம் எடுத்து நிற்கிறது. இதை ஆரம்பத்தில் உணர்ந்து கொள்ள பலருக்கும் விருப்பம் இருக்கவில்லை அல்லது 'வெற்றி போதை' அவர்களை உண்மையை நம்ப விடவில்லை. தூக்கம் கலைந்து இவர்கள் பேசும் யதார்த்தம் வெளி உலகால் (சிங்கள தேசம் உட்பட என்பது சொல்லத் தேவையில்லை) ஏளன பார்வையுடனேயே நோக்கப் படுகிறது. இதற்கான பொறுப்பை கற்பனையான வெற்றி போதையூட்டியவர்களே ஏற்க வேண்டும்.

இராணுவ வெற்றிகளை வெளியிடுவதில் அடிப்படையில் தவறு இல்லை. ஆனால் அதற்கு கொடுக்கப் படும் முன்னுரிமை கொடுக்கப் படும் தரம், அது மட்டுமல்லாது அதிலேயே கிறங்கிப் போன பல இரசிகர்கள் தமது கடமையை மறந்து திருப்தி கொள்ளும் மனப் பாங்கு என்பவை சம்பந்தமாகவே விமர்சனம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசியமான ஒன்றே. இப்படி நடத்தாவிடின், மத்தியஅரசு கண்டுகொள்ளாமையைத் தான் தொடரும்.

திருமா அவர்கள் மேற்கொள்கின்ற உண்ணாவிரதம், மத்தியஅரசு குறித்தான உண்மை முகத்தினைத் தமிழக மக்களுக்குக் காட்டவே. அது போர் பற்றிய அவாவவில் இருப்பதையும், சிறிலங்கா அரசுக்கு அது உதவிக் கொண்டிருக்கின்றது என்பதையும் வெளிப்படுத்தவே.

மற்றும்படி உடனே மத்தியஅரசு போர்நிறுத்தத்தைக் கொண்டு வந்து தமிழ்மக்களைக் காப்பாற்றும் என்று யாரும் நினைத்திடக் கூடாது.

ஆனால், வரலாற்றில் இக்கண்டுகொள்ளாமை மத்தியஅரசுக்கு சில பாடங்களைப் படிப்பிக்கும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.