Jump to content

மொத்தாமான தாலிக்கொடி


Recommended Posts

தாலி தமிழ் திருமணத்தில் அணிவிக்கப்படும் ஒரு முக்கிய ஆபரணம். இதிலும் தாலியை கோர்க்கும் கொடி முக்கியத்துவம் பெரும். கொடி என்று வரும் போது அதன் அளவு என்ன என்ற கேள்வி வருவது உண்டு. முன்னெரெல்லம் சாதாரணமாக 11 தொடக்கம்15இக்குல் செய்ய்வது உண்டு. ஆனால் புலத்தில் பலர் 30,40 ஏன் 70 பவுணையும் தாண்டி மொத்தமான் தாலி கொடிகளை செய்கிறர்கள். கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளக தாலிக்கொடிகளின் அளவு அதிகரிக்க காரணம் என்ன? நான் பார்ர்தவரை மொத்தமான தாலிகொடி போடும் போது எல்லோரும் பெண்களயே விமர்சனம் செய்வது உண்டு. அதைவிட பல சந்தர்பன்களில் ஏற்கனவே மெல்லியதாக இருந்த தாலிக்கொடியை மொத்தமாக செய்பவர்களும் உண்டு. நான் கடந்த சில வருடங்களக யோசிப்பது உண்டு ஏஞ் எல்லொறும் மொத்த்மாக கொடி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்று. முன்ன்ரெல்லாம் தாலிக்கொடி ஓரளவுக்கு மொத்தமாக செய்வது உண்டு, ஆனால் 1970ளின் பின்னர் உலகில் ஏற்பட்ட பொருளாதார் நெருக்கடி காரணமாக தங்க விலை உயர தாலி கொடிகளின் அளவும் குறைந்தது, ஆனால்1990Mஇல் தங்க விலை குறையவும் எம்மவர்களின் கொள்வனவு சக்தியும் சேர்ந்து அதிகரிக்க மீண்டும் தாலி கொடிகளின் அளவு அதிகரித்தது.ஆனால் இம்முறை 100 பவுணில் கொடி செய்தவர்களும் உண்டு. குறிப்பாக மொத்தமாக ஜேர்மனி, சுவிஸ் நாட்டவர்கள் அதிகம். கள உறுப்பினர்கள் தமக்குத் தெரிந்த காரணன்கள் இது சம்பந்தமாக தெரிந்த விடயங்களை பகிர்வீர்கள் என எதிர்பார்க்ரேன். நான் அறிந்த சில சம்பவங்கள் சில

1.மணமகன் லண்டனில் இருந்தாளும் அவரிடம் பெரிசாக பண வசதி இருக்கவில்லை, எனவே அவரது மச்சான் தான் அந்தச் செலவை ஏற்றார் ஆனால் மணமகனின் தாயாரோ 18 பவுணில் தாலிக்கொடி செய்ய வேண்டும் என்று கேட்டார், மச்சானோ மறுத்து விட்டு இறுதியில் 9 பவுணில் தான் தாலிகொடி செய்ய பணத்தை நான் தருகிரேன் ஆனால் மீதி 9 பவுணுக்கு நீங்கலே செலவு செய்யுங்கள் என்று கூறி விட்டார்.இறுதியில் மணமகனின் தாயாரும் அவ்வெண்ணத்தை விட்டுவிட்டார்.

2. இச்சந்தர்ப்பத்தில் திருமணமே தடைப்பட்ட்து. மணமகளின் பெற்றோர் 25 பவுணில் தாலிக்கொடி செய்ய வேன்டும் என்று நிர்பந்தித்தனர், ஆனால் மணமகன் வீடு மறுத்து விட்டனர், இறுதியில் தாலிக்கொடி பிரச்சனை வேறு பிரச்சனைகளக உருவெடுத்து, ஒரு சந்தர்பத்தில் சீதனம் வாங்காமல் தானே செய்கிரோம் என்று வக்குவாதம் முற்றி இறுதியில் இருவருமே திருமணம் செய்யவில்லை, இதில் முக்கியமான் விடயம் என்னவென்றால் அவர்கல் இருவர்ம் காதலித்து தான் திருமணம் செய்யவிருந்தனர்.

3.எனது நண்பி ஒருத்தி திருமணம் செய்ய்த போது அவரது கணவர் திருமணத்தின் பின் தாலியை எப்போதும் அணிய வேண்டும் என்று கூறினாறாம், இவரும் ஒத்துக்கொண்டு விட்டார். ஆனால் தாலி கட்டிய பொது தான் புரிந்தது தாலி கொடின் அளவு 50 பவுண் என்று, அதை அணிந்து கொண்டு எமது வீட்டிற்கு வந்த போது எனது அம்மா கேட்டார் "எப்படி ஆத்தை நீ உதை போட்டுக்கொண்டு திரியிராயி என்றுகேற்க அவர் மிகவும் கஷ்ட்டமாகத் தான் இருக்கிரது இன்னும் சில நாட்கள்க்கு பின் ஒரு மெல்லிய சங்கிலிக்கு மாத்தப் போரேன் என்று கூறினார். இது நடந்து 2004 இல் ஆனால் சில வாரங்களுக்கு முன் நான் அவருடன் பேசிய போது அவர் கூறினார் இன்னமும் தான் அதே 50 பவுண் கொடியயை தான் அணிவதாகக் கூறினார் ஏன்னென்றால் தான் கணவரிடம் எவ்வள்வோ கேட்டும் அவர் மறுத்து விட்டார் என்வே இதை நான் அவ்வாரே அணிகிறேன் என்றார்.எனவே அவர் கடந்த 4 1/2 வருடங்களக 400 கிராம் எடையுள்ள கொடியை இடைவிடாது அணிகிறார்.

4. இச்சம்பவம் கிட்டதட்ட 12 மாதங்களுக்கு முன் நான் வசிக்கும் வீதியில் வசித்த தமில் குடும்பத்தில் நடந்தது. மனைவிக்கு ஒருவருக்கு மொத்தமான தாலி கொடி போட வேண்டும் என்று ஆசை, ஆனால் அவரது கணவருக்கு அப்போது பொதுமான் பண வசதி இருக்கவில்லை. அவருக்கு திருமணம் நடந்தது 1988 இல் அதன் பின்னர் புலத்திற்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட 9 வருடங்காளாக பணம் சேர்த்து 2007ம் ஆண்டில் டிசெம்பர் மாதமளவில் 39 பவுணில் கொடி செய்தார். ஜனவரி மாதம் அவருடய 20வதாவது திருமண நிறைவின் போது அதை முதல் முறையாக அணிந்து கோயிலுக்கு பொக வேண்டும் என்று கூறிக்கொன்டிருந்தார், ஆனால் விதி அவரை விடவில்லை அவரது கணவர்

தாலி கொடியை நகை கடையில் இருந்து எடுத்துக்கொன்டு வந்து வீட்டில் வைத்து விட்டு இருந்தவர்ருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்ட்டு வைத்தியசலையில் அன்று மலைலே மரணமானர். அதாவது அவரது மனைவி தனது புது தாலி கொடியயை பார்க்க முன் கணவர் இற்ந்து விட்டார். இறுதியில் அவர் தான் ஆசையாய் செய்த 39 பவுண் தாலி கொடியை கணவரின் மரணச்சடங்கில் தான் போடும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த மொத்த கொடியுடன் அவர் நின்று அலுததை பார்க்க மிகவும் கவலையாக இருந்து. மரணச் சடங்கின் இறுதியில் தாலி கொடியை கழட்டிஇ வைக்க வேன்டிய நேரம், அவரோ மறுத்து விட்டார் கிட்டத்தட்ட 10 நிமிடங்களக முயற்சித்தும் முடியவில்லை இருதியைல் 2 பெண்கல் அவரை இறுகப் பிடிக்க அவரது மைத்துனி கழட்டி பாலில் வைத்துவிட்டு அதை அவரது கணவ்ரின் மார்பில் வைத்தார்.

மொத்தமான் தாலிகொடிகளைபொருத்தவரையில் அதை மொத்தமாக செய்ய விரும்பியவர் ஆணாக இருந்தாலும் சரி பெண் என்றாலும் சரி எல்லொரும் பிலை கூறுவது பெண்களைத்தான்.மொத்தாமான தாலிக்கொடி செய்வதை பைத்தியக்காரத்தனம் என்று கூறுவது உண்டு. இன்னும் சிலர் பட்டிக்காடுத்தனம் என்றும் கூறுவது உண்டு அல்லது படிக்காத சனம் என்ரும் விமர்சிப்பர்.. ஆனால் மொத்தமான தாலிக்கொடியை இவ்வாரெல்லாம் விமர்சிப்பவர்கல் வருங்காலமெல்லம் தமக்குத் துணையாக இருப்பாவளிடம் லட்சக்கணக்கில் சீதனம் வாங்கும் போது மட்டும் அது பைத்தியக்காரத்தனமாகவோ படிக்காத சனமாகவோ தெரிவதில்லை. ஏன் எமக்குத் தெரிந்த பெண் சத்திர சிகிச்சை நிபுணர் கூட தனது கொடியை மீண்டும் புதிசாக 41 பவுணில் செய்தார்.

அப்படி பார்க்கும் போது அவர் படிக்காதவரா இல்லயே. மொத்தமான கொடிகலை விமர்சிப்பவர்கல் பெரும்பாலும் மெல்லிய கொடி பொடுபவர்கள் என்பதை விட மொத்தமாக கொடி பொட வசதி இல்லாதோராகத் தான் கணப்படுகிறனர். இது எட்டக்கனி புளிக்கும் என்ற கதை தான்.

நான் கள உருப்பினர்களிடம் தாங்கல் அறிந்த சம்பவஙகள் அல்லது ஆர்வதிர்குரிய சம்பவங்கள் மற்றும் விடயங்கலை பகிர்ந்து கொள்வீர்கள் என எதிர்பார்கிரேன். அத்தோடு மொத்தமான தாலிக்கொடிகள் சம்பந்தமான உங்களது கருதுக்கள் போன்றவற்ரை எதிர்பார்கிரேன்.

தயவு செய்து இவ்விவாததுடன் சம்பந்தமில்லாத கருதுக்காளை ஆரம்பிக்கவேண்டாம் என் கேட்டுக்கொள்கிரேன்.

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply

எனக்கும் தாலி செய்ய வேண்டிய தருணம் வந்தபோது இருப்பதிலேயே மிக குறைந்த தெரிவான 9 பவுணில் செய்து போட்டேன். தாலிக் கொடி பல விசயங்களுக்கு எந்தளவுக்கு 'இடைஞ்சல்' ஆக இருக்கும் என்று அன்று இரவே

எனக்கு புரிய கூடியதாக இருந்தது. அன்று கழட்டி எறி என்று சொன்னது தான்... இன்றுவரை, இந்த 4 வருடத்தில்.. அதனை பின்பு பார்த்தாக நினைவு இல்லை..

(தாலி கட்டாமல் living together முறையில் வாழ்வோமா என்று கேட்டு பலரிடம் அடி வாங்காத நிலமை வந்த விடயங்கள் எல்லாம் பின் ஒரு நாளில் எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் ஒரு பொது நிகழ்ச்சியில் , ஒரு பெண்ணை தற்செயலாக பார்த்தபோது அவர் அணிந்திருந்த தாலிக்கொடி நடு விரல் அளவு மொத்தம் இருந்தது . நிச்சயம் அதன் நிறை மூன்று கிலோ ஆவது இருக்கும் .

அவர் அதனை நெடுகவும் அணிந்திருந்தாலோ என்னவோ , அவவின் கழுத்தின் பின் பகுதி அவ்வளவு நிறையையும் தாங்கி , வண்டில் மாடுகளுக்கு கழுத்தில் காய்த்திருப்பது போல் கறுத்து காய்த்திருந்தது .

இதனை விட கொடுமை அவரின் கணவர் 500 கிராம் ( 1/2 கிலோ , அதாவது ஒரு இறாத்தல் ) தங்க பிஸ்கட்டை கழுத்தில் பென்ரனாக கட்டி தொங்க விட்டிருக்கிறாராம் .

அப்போது தான் யோசித்தேன் ..... அது தொங்க எத்தனை கிலோ தங்க சங்கிலி வேண்டும் என்று .

என்ன செய்வது இவர்கள் ஒரு வித மன நோயாளிகளாகவோ .........

அல்லது அதனை பெருமையாகவோ நினைக்கிறார்களோ தெரியாது .

உண்மையில் இவர்களின் செய்கைகளை பார்த்து , மற்றவர்கள் சிரிப்பாய் சிரிக்கின்றார்கள் என்பதனை இவர்கள் அறிய மாட்டார்கள் .

Link to comment
Share on other sites

சில பேர் 3,4 தாலிக்கொடிகளும் வைத்திருக்கினமாம். ஒன்று கலியாண வீட்டுக்கு, மற்றது கடைக்கு, மற்றது சொந்தகாரர் வீட்டுக்கு என்று. கேள்விபட்டது தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் 3,4 தாலிக்கொடிகளும் வைத்திருக்கினமாம். ஒன்று கலியாண வீட்டுக்கு, மற்றது கடைக்கு, மற்றது சொந்தகாரர் வீட்டுக்கு என்று. கேள்விபட்டது தான். :)

3 , 4 தாலிக்கொடிகளா .......... அப்போ அதனை கட்டியவர் ஒருவரா ? :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இன்னும் தாலி கட்டவில்லை கட்டேக்க பார்ப்பம் ஒருகிலோவில செய்வம் என்டு யோசிச்சனான் இதப்பார்த்தாப்பிறகு இரண்டுகிலோவில செய்வமென்டு தீர்மானிச்சிருக்கிறன் :D

3 , 4 தாலிக்கொடிகளா .......... அப்போ அதனை கட்டியவர் ஒருவரா ? :):)

அதில நுனாவிலானும் ஒருத்தர் :)

Link to comment
Share on other sites

3 , 4 தாலிக்கொடிகளா .......... அப்போ அதனை கட்டியவர் ஒருவரா ? :):)

கட்டியவர் ஒருவர் தான். உள்ளாடை போல மாற்றி மாற்றி போடத்தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி செய்வதால் தான் .....திருடர்கள கவரப்படுகிறார்கள்.... வைப்பு பெட்டகங்களில் (.bank locker..) தூங்குகிறது .இப்போதெலாம் நம் இளம்பெண்களில் இந்த மோகம் அவ்வளவு இல்லை , மாமியாருக்கு இருக்க லாம் . கலர் கலராக் அல்லவா நகை போடுகிறார்கள். . கொடி மட்டும் போடுவதில் அர்த்தம் இல்லை . தாலி (கணவன் ) நெஞ்சில் இருக்கவேண்டும் போலியான உலகில் எத்தனை வேஷங்கள். .எதுவும் அளவாக இருந்தால் போதும். உண்மையான மண உறவுக்கு மஞ்சள் கயிறே போதும் .வசதி வந்த பின் தான் அது தங்க பவுணில் ஆனது. உண்மையான திரு மணம்(ஆண் பெண்ணுக்கான புனித உறவு )இருவர் மனங்களில் தான் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி செய்வதால் தான் .....திருடர்கள கவரப்படுகிறார்கள்.... வைப்பு பெட்டகங்களில் (.bank locker..) தூங்குகிறது .இப்போதெலாம் நம் இளம்பெண்களில் இந்த மோகம் அவ்வளவு இல்லை , மாமியாருக்கு இருக்க லாம் . கலர் கலராக் அல்லவா நகை போடுகிறார்கள். . கொடி மட்டும் போடுவதில் அர்த்தம் இல்லை . தாலி (கணவன் ) நெஞ்சில் இருக்கவேண்டும் போலியான உலகில் எத்தனை வேஷங்கள். .எதுவும் அளவாக இருந்தால் போதும். உண்மையான மண உறவுக்கு மஞ்சள் கயிறே போதும் .வசதி வந்த பின் தான் அது தங்க பவுணில் ஆனது. உண்மையான திரு மணம்(ஆண் பெண்ணுக்கான புனித உறவு )இருவர் மனங்களில் தான் உள்ளது .

ஆகாவாசிக்கவே இவ்வளவு சந்தோசமாய் கிடக்கு

Link to comment
Share on other sites

தாலியைவிட தாலிக் கொடியில்தான்

பெண்களுக்கு விருப்பு அதிகம்

தாலி சின்னனா பெரிதா என்பதில்

பெண்களுக்கு கவலையில்லை

கவலையெல்லாம் கொடியில்தான்

கொடி மொத்த்த்த்த்தமாக நிறை கூகூகூகூகூகூகூகூடிகதாக இருக்கவேண்டுமென்பதுதான்

பெண்களின் மிகப் பெரிய்ய்ய்ய்ய்ய ஆசை

கொடி பெரிதாக இருப்பதிலும் சில நன்மைகள் உண்டு

கொடி பெரிதாக இருந்ததால் திரடர்களிடம் இருந்து தப்பியது

உண்மைசம்பவம் ஒன்று

பல வருடங்களுக்குமுன் மொன்றியலில் ஒரு தமிழ் குடும்பத்தவர்களது வீ;டடில் களவு நடைபெற்றது:விலை மதிப்புள்ள பொருட்களையும் மற்றும்நகைகளையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார்கள்

கொடிமட்டும் மூலையில் அனாதரவாகக்கிடந்தது(விலை மதிப்பில்லை போலும்)

வெள்ளையளோ கறுவல்களோ வந்து கொள்ளையடித்திருக்கிறார்கள் கொடிபற்றி தெரிந்திருக்கவில்லை இந்தளவு மொத்தத்தில் பவுண் இருக்காது எனநினைத்து

தூக்கி எறிந்துவிட்டு போய்விட்டார்கள். இப்பொழுதென்றால் விடமாட்டார்கள்

ஏனெனில் நம்மைப்பற்றி எல்லாவிடயமும் அவர்கழுக்கு தெரியும்

ஆக மொத்தத்தில் மொத்தமாக கொடி போடுவதில் நன்மைக்கும் இடமுண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தங்கத்தில் தாலி எல்லாத்தையும் விட மஞ்சள் கயிறு ரொம்ப விசேசம்.

இந்த பொண்ணுங்களுக்கு தங்கம் எண்டாலே பிரியம் அதிகமாக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் எப்போதும் விலை கூடிக் கொண்டே போகும் ஒரு முதலீடு தான். ஆனால் தாலிக் கொடியில் உள்ள தங்கம் முதலீடு அல்ல. அது பெட்டிக்குள் பூட்டி வைக்க அல்லது கொள்ளையரிடம் பறிகொடுக்க நாங்கள் வைத்திருக்கும் சொத்து, யாருக்கும் ஒரு பயனும் இல்லை. எனது சகோதரியின் 15 பவுண் தாலிக்கொடி போன வருஷம் கொள்ளை போய் விட்டது. 11 பவுணில் செய்ய இருந்த தாலிக் கொடியை, சகோதரியே கேட்டு 15 பவுணில் செய்து கொண்டார். பிறகும் திருந்தினதா மனுசி என்றால் இல்லை. அவர்களின் காணியில் ஒரு பகுதியை விற்று மீளவும் ஒரு தாலியும் கொடியும் செய்து கொண்டார்-எனது திருமண வீட்டுக்கு அணிய வேண்டுமென்பதற்காக. அதிர்ந்து போனேன் நான், வீடு கட்டக் கூடிய பயிர் செய்யக் கூடிய காணியை விற்றுச் செய்த தாலி அடுத்த கொள்ளையரின் வரவை எதிர் பார்த்து பெட்டிக்குள் காத்திருக்கிறது இப்போது.

Link to comment
Share on other sites

எனக்கும் காதல் திருமணம், திருமணத்தின் போது கையில் காசும் இல்லை, வேலையும் இல்லை... தாலியை மட்டும் தங்கத்தில் செய்து மஞ்சள்கயிற்றில் கட்டினேன். பின்னர் மனைவி தன்னிடம் இருந்த சங்கிலியில் கோர்த்து அணிந்து கொண்டார். அதைக் கூட சில சந்தர்ப்பங்களில் பாதகாப்பு கருதி அணிவதில்லை. இப்போது நாம் நன்றாகத்தான் இருக்கிறோம். கல்யாண வீடுகளுக்கு போகும் போது மட்டும் கொஞ்சம் சங்கடமாக உணருவார். அப்போதெல்லாம் நான் அவருக்கு கூறும் பதில், நாம் கஸ்டப்படும் போது அவர்கள் யாரும் ஏன் என்ன என்று கேட்கப் போவதில்லை. எனவே நாம் அவர்களுக்காக வாழாமல் எங்களுக்காக வாழுவோம் என்று!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த காலத்தில் தாலியை எவ்வளவு மொத்தமாக செய்து போட முடியுமோ அவ்வளவு மொத்தமாக செய்வது ஆண்களுக்கு நல்லது காரணம்.

1) இந்த காலத்தில் பெண்கள் தலை குனித்து வெட்கப்படுவதை பார்க்கமுடியாது ஆகவே நீங்கள் தாலியை பாரமாக செய்தால் கட்டாயம் தலை குனியத்தான் வேண்டும் (ஆனாலும் வெட்க்கப்படமாட்டார்கள் நீங்கள் அவர்கள் வெட்கப்படுவதாக நினைத்து கொள்ளுங்கள்)

2) பல பெண்களுக்கு இப்ப கலியாணம் கட்டினவுடனேயே தங்களுக்கு கலியாணம் ஆகிட்டுது என்றது மறந்து போகுது ஆகவே கழுத்தில ஏதாவது பாரமாக தொங்கிட்டு இருந்தால் ஏன் தொங்குது என்றாவது கொஞ்சம் ஜோசிப்பினம்.

3) வீட்டில் மனிசியை கட்டி வைக்கவேண்டும் என்றால் கழுத்தில வேற கயிறு போற தேவையில்லை அந்த தாலியிலேயே நீங்கள் வேலைக்கு போகும் போது கட்டி வைத்து விட்டு போகலாம்.

4) கழுத்தில அதுவே பெரிய இட பரப்பை பிடித்திருப்பதால் அடிக்கடி நகைகள் வங்க தேவையில்லை வாங்கிய நகைகளின் டிசைன் மாற்றவும் தேவையில்லை.

5) உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஊஞ்சல் கட்ட தேவையில்லை தாலியிலேயே தொங்கி விளையாட சொல்லலாம் (மோசமான பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல).

தீமைகள்

1) மிருகவதை தடை சட்டத்தின் கீழ் உங்களை போலிஸ் கைது செய்து சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது.

2) உங்கட மனைவிக்கு கோவம் வந்து தாலியை கழட்டி உங்களுக்கு ரெண்டு போட்டால் ரெண்டு நாளைக்கு அப்புறம் தான் எழுந்திருப்பிங்கள்.

3) இரவு நேரங்களில் அதாவது வெளிச்சம் இல்லாத நேரங்களில் மனைவியின் கழுத்தில் பாம்பு என்று நீங்கள் பயப்படவும் சந்தர்ப்பம் உள்ளது.

4) கள்வர்கள் களவாட சந்தர்ப்பம் உண்டு (தாலியையும் அதை போட்டிருப்பவரையும்)

இப்பிடி கணக்கா வருகுது ஆனால் எழுத நேரமில்லை. :unsure:

Link to comment
Share on other sites

தாலி கட்டாமல் விடுவதால் மட்டும் என்ன பயன் வரப்போகிறது ???? எல்லா மதத்திலும் தான் திருமணதின் போது ஏதாவது மணமகளுக்கு அணிவிக்கப்படும் அப்படியானல் ஏன் எல்லோறும் தாலியை மட்டும் நக்கல்?????.

Link to comment
Share on other sites

மொத்தமான தாலிகொடிகளை அதிகம் விரும்புவது யார் ? ஆண்களா ? பெண்களா?? அதை விட மொத்தமான தாலிகொடிகளை போடத் தோன்டும் காரணி என்ன??? இவ் நோக்கில் சில கருத்துக்களை இடலாமே ?????

Link to comment
Share on other sites

இது அவரவர் விருப்பம் DASH இதற்கு நாங்கள் என்னத்தை தான் கூறமுடியும்? ஆனால் கணவன் விரும்பியதால் மனைவி அதனை வேண்டா வெறுப்போடு அணிந்திருப்பது தான் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

மொத்தமான தாலி கொடிகளை செய்ய தோன்றும் காரணிகள்

பணவசதி

பொறாமை

இதனை செய்ய தூண்டுபவர்கள் என பார்த்தால்

பெண்களே அதிகம் பங்கெடுக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இந்த உலகில் ஒரு தொகைப்பணத்தை கொண்டுபோய் தாலிக்கொடி எனும் பெயரில் வீசுவது தான் கொஞ்சம் கூடாத செயல் போல் எனக்கு தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த வரை ஆண்கள் தான் தங்கள் மனைவிமார் தாலி அணீய வேண்டும் என விரும்புகிறார்கள்.(இல்லாவிட்

டால் யாரவது வேறுஆண்கள் வளைத்து போடுவார்கள் என்ற நினைப்பு)ஆனால் பெண்கள் தான் மற்ற பெண்களுடான போட்டியில் மொத்தமாக செய்கிறார்கள்.எனக்கு தெரிந்த ஒரு பெண் தனது முதலிரவு அன்றே தனது தாலியை கழட்டி உடுப்பு போடும் (கங்கரில்) தொங்கவிட்டார்.தாலியின் மரியாதை அந்த அளவிற்கு இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த வரை ஆண்கள் தான் தங்கள் மனைவிமார் தாலி அணீய வேண்டும் என விரும்புகிறார்கள்.(இல்லாவிட்

டால் யாரவது வேறுஆண்கள் வளைத்து போடுவார்கள் என்ற நினைப்பு)ஆனால் பெண்கள் தான் மற்ற பெண்களுடான போட்டியில் மொத்தமாக செய்கிறார்கள்.எனக்கு தெரிந்த ஒரு பெண் தனது முதலிரவு அன்றே தனது தாலியை கழட்டி உடுப்பு போடும் (கங்கரில்) தொங்கவிட்டார்.தாலியின் மரியாதை அந்த அளவிற்கு இருக்குது.

ஆண்களுக்கு குடைதல் கொடுப்பவர்கள் முதலில் பெண்கள் தான் அவள் எந்தம் பெரிய தாலிகொடி போட்டிருக்காள் இதை பாருங்கள் நூல் போல் உள்ளது என்று குடையிறது பெண்கள் தான் பின்பு ஆண்கள் மீது எப்படி குற்றம் சொல்லலாம்[....வளைத்து போடுதல் என்பது தவறு] :unsure::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் காதல் திருமணம், திருமணத்தின் போது கையில் காசும் இல்லை, வேலையும் இல்லை... தாலியை மட்டும் தங்கத்தில் செய்து மஞ்சள்கயிற்றில் கட்டினேன். பின்னர் மனைவி தன்னிடம் இருந்த சங்கிலியில் கோர்த்து அணிந்து கொண்டார். அதைக் கூட சில சந்தர்ப்பங்களில் பாதகாப்பு கருதி அணிவதில்லை. இப்போது நாம் நன்றாகத்தான் இருக்கிறோம். கல்யாண வீடுகளுக்கு போகும் போது மட்டும் கொஞ்சம் சங்கடமாக உணருவார். அப்போதெல்லாம் நான் அவருக்கு கூறும் பதில், நாம் கஸ்டப்படும் போது அவர்கள் யாரும் ஏன் என்ன என்று கேட்கப் போவதில்லை. எனவே நாம் அவர்களுக்காக வாழாமல் எங்களுக்காக வாழுவோம் என்று!

வாழ்த்துக்கள் சாணக்கியன் இப்படியே இருக்க என்னடைய வாழ்த்துக்கள் நானும் இப்படித்தான் ஆனால் இன்னும் திருமணம்முடிக்கவில்லை. நாங்கள் எப்போதுமே இப்படித்தான் அவன் என்ன நினைப்பான் இவன் என்ன நினைப்பான் என்று நினைத்துத்தான் இப்படி இருக்கிறறோம். உங்களுடைய செயலை நான் பாராட்டுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தங்களுக்கிடையிலான போட்டியில் தான் மொத்தமாக தாலி அணீவார்கள் அதை நான் ஒத்து கொள்கிறேன் ஆனால் ஆண்கள் தங்கள் மனைவிமாரை விழாக்களுக்கோ அல்லது வேறு எங்காவது தன்னொடு அழைத்து செல்லும் போது கட்டாயம் தாலி அணீய சொல்வார்கள் அங்கு இருப்பவர்களுக்கு காட்டுவதற்காக குறீப்பாக ஆண்களுக்கு காட்டுவதற்காக இது என் மனைவி ஒருதரும் பார்க்க கூடாது என்ற காரணத்திற்காக அணீய சொல்வார்கள் அல்லாவிடின் வேறு ஆண்கள் பார்க்க கூடும்(சைட் அடிக்க கூடும்).புலத்தில் பெண்கள் தாலி அணீயாவிட்டால் அப் பெண் திருமணம் ஆனவரா இல்லையா என்பது தெரியாது.திருமணம் ஆன பெண்கள் தான் இங்கு இளமையாகவும் கவர்ச்சிகரமாகவும் உள்ளனர். :unsure:

தங்கம் எப்போதும் விலை கூடிக் கொண்டே போகும் ஒரு முதலீடு தான். ஆனால் தாலிக் கொடியில் உள்ள தங்கம் முதலீடு அல்ல. அது பெட்டிக்குள் பூட்டி வைக்க அல்லது கொள்ளையரிடம் பறிகொடுக்க நாங்கள் வைத்திருக்கும் சொத்து, யாருக்கும் ஒரு பயனும் இல்லை. எனது சகோதரியின் 15 பவுண் தாலிக்கொடி போன வருஷம் கொள்ளை போய் விட்டது. 11 பவுணில் செய்ய இருந்த தாலிக் கொடியை, சகோதரியே கேட்டு 15 பவுணில் செய்து கொண்டார். பிறகும் திருந்தினதா மனுசி என்றால் இல்லை. அவர்களின் காணியில் ஒரு பகுதியை விற்று மீளவும் ஒரு தாலியும் கொடியும் செய்து கொண்டார்-எனது திருமண வீட்டுக்கு அணிய வேண்டுமென்பதற்காக. அதிர்ந்து போனேன் நான், வீடு கட்டக் கூடிய பயிர் செய்யக் கூடிய காணியை விற்றுச் செய்த தாலி அடுத்த கொள்ளையரின் வரவை எதிர் பார்த்து பெட்டிக்குள் காத்திருக்கிறது இப்போது.

ஏன் ஜஸ்டின் சகோதரிக்கு உதவி பண்ணக் கூடாது தாலிக்கொடி வாங்க வெளீநாட்டில் தானே இருக்கீங்க. :unsure:

Link to comment
Share on other sites

ஆண்கள் தங்கள் மனைவிமாரை விழாக்களுக்கோ அல்லது வேறு எங்காவது தன்னொடு அழைத்து செல்லும் போது கட்டாயம் தாலி அணீய சொல்வார்கள் அங்கு ஆண்களுக்கு காட்டுவதற்காக இது என் மனைவி ஒருதரும் பார்க்க கூடாது என்ற காரணத்திற்காக அணீய சொல்வார்கள் அல்லாவிடின் வேறு ஆண்கள் பார்க்க கூடும்.

இன்றைய நாட்களில் அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளில் இப்படி எதிர்பார்ப்பது தப்பு கண்டியளோ. பிகர் கொஞ்சம் நல்லா இருந்தால் திருமணமாகியிருந்தாலும், ஏன் குழந்தைகள் இருந்தாலும் இவர்கள் தம் கை வரிசையை காட்ட பின் நிற்கமாட்டார்கள். இப்படியானவர்களுக்கு தாலி ஒன்றும் பொருட்டல்ல.

Link to comment
Share on other sites

இன்றைய நாட்களில் அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளில் இப்படி எதிர்பார்ப்பது தப்பு கண்டியளோ. பிகர் கொஞ்சம் நல்லா இருந்தால் திருமணமாகியிருந்தாலும், ஏன் குழந்தைகள் இருந்தாலும் இவர்கள் தம் கை வரிசையை காட்ட பின் நிற்கமாட்டார்கள். இப்படியானவர்களுக்கு தாலி ஒன்றும் பொருட்டல்ல.

இப்படி எல்லாம் ஒரே அடியாக போட்டுடைக்க கூடாது கண்டியளோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் ஒரே அடியாக போட்டுடைக்க கூடாது கண்டியளோ....

என்னத்தை ..... ? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:):):) தாலி போட்டு கொண்டு போகும் போதே உங்களை போன்று பலர் சைட் அடிக்கினம் போடாமல் போனால்?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.