Jump to content

மொத்தாமான தாலிக்கொடி


Recommended Posts

ஓம்...ஓம் நல்லா இருக்கு...... நாட்டை முழுவதுமா பிடிச்சாச்சு எமது நாட்டு மக்களை திருப்பி அனுப்பலாம் என மஹிந்த ஒரு அறிக்கைவிட்டால் போதும் எல்லோரும் போக வேண்டியது தான். அதுசரி மொத்தமான தாலிக்கொடி இருந்தால் நல்லது தான் வித்தாவது சாப்பிடலாம் . ஓய் ஏன் காணும் யார் மொத்தமாய் போட்டால் என்ன மெல்லீசா போட்டால் என்ன நீங்கள் ஏன் காணும் ஓய் அதுகளை பாக்கிறீங்கள். பார்த்து விட்டு ஏன் காணும் எரிச்சலில் வார்த்தைகளை அள்ளி விடுகின்றீர்கள். இருக்கின்றவள் ஆசை உள்ளவள் போடுகின்றாள் உங்களாலும் முடிந்தால் போடுங்கள் இல்லாவிட்டால் முடியாவிட்டால் இப்படி எரிந்து புகைவது நியாயம் இல்லை

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு தாலி பற்றியது என்று நான் நினைக்கிறேன்....

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் குமாரசுவாமிஅண்ணே?

மருதங்கேணி! தாலிக்கொடியைப்பற்றிய தலைப்பிலைதான் நான் என்னக்கு தெரிஞ்ச இன்னும் இரண்டொரு விசயத்தையும் சேர்த்து என்ரை பாசையிலை சொல்லியிருக்கிறன்.

மொத்த தாலிக்கான காரணங்களிலை ஒண்டையும் மறைமுகமாக சொல்லியிருக்கிறன். :rolleyes:

சரி எல்லாத்தையும் விடுவம்.உதாரணத்துக்கு ஒரு கலியாணவீட்டிலையோ இல்லாட்டி செத்தவீட்டிலையோ அங்கை கூடியிருக்கிற ஆக்கள் மாப்புளைபொம்புளையைபற்றியோ இல்லாட்டி செத்த ஆளைப்பற்றியோ தொடர்ந்து கதைச்சுக்கொண்டிருக்க மாட்டினம்.அப்பப்ப இடைக்கிடை வேறை வேறை விசயங்களும் வந்துபோகும் கண்டியளோ?அதுமாதிரித்தான் இதுவும் எண்டு நினையுங்கோவன். :(

அதையதை அந்த இடத்திலைதான் நிண்டு சொல்லோணுமெண்டால் கனபேருக்கு கனவிசயங்கள் தெரியாமல் போடும் மருதங்கேணி. :(

மற்றது எனக்கு இந்த தலைப்பை திசை மாத்தோணும் எண்ட எண்ணம் எள்ளளவும் இல்லை :)

அதுசரி மருதங்கேணி! இஞ்சை அனேகமான தலைப்புகளிலை எல்லாம் திசைமாறி சிக்குப்பட்டு நிக்கேக்கை இதிலை மட்டும் என்னவிசயம் உங்களுக்கு சுட்டுப்போட்டுது? :lol:

மருதங்கேணி தயவுசெய்து பதிலளிக்கவம்.நான் திருந்துவதற்கு வசதியாக இருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்...ஓம் நல்லா இருக்கு...... நாட்டை முழுவதுமா பிடிச்சாச்சு எமது நாட்டு மக்களை திருப்பி அனுப்பலாம் என மஹிந்த ஒரு அறிக்கைவிட்டால் போதும் எல்லோரும் போக வேண்டியது தான். அதுசரி மொத்தமான தாலிக்கொடி இருந்தால் நல்லது தான் வித்தாவது சாப்பிடலாம் . ஓய் ஏன் காணும் யார் மொத்தமாய் போட்டால் என்ன மெல்லீசா போட்டால் என்ன நீங்கள் ஏன் காணும் ஓய் அதுகளை பாக்கிறீங்கள். பார்த்து விட்டு ஏன் காணும் எரிச்சலில் வார்த்தைகளை அள்ளி விடுகின்றீர்கள். இருக்கின்றவள் ஆசை உள்ளவள் போடுகின்றாள் உங்களாலும் முடிந்தால் போடுங்கள் இல்லாவிட்டால் முடியாவிட்டால் இப்படி எரிந்து புகைவது நியாயம் இல்லை

என்ன தங்கச்சி? ஏன் தங்கச்சி? ஏன் இதெல்லாம்? ஆர் போகப்போறான்?மகிந்தன் எப்ப சொன்னவன் வெளிநாட்டிலை இருக்கிற ஆக்களை திருப்பி அனுப்பவேண்டாமெண்டு?

ஆருக்கு தங்கச்சி எரிச்சல் பொறாமை எல்லாம்?இந்த அண்ணை நல்லதைத்தானே சொன்னவன்?நகைநட்டு வாங்கிறது இப்ப பெரிய பிரச்சனையே?எல்லாரும் எல்லாந்தான் வாங்கலாம்.அதுஅதுக்கெண்டு அளவு மதிப்புமரியாதை ஒண்டு இருக்கெல்லே தங்கச்சி :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி! தாலிக்கொடியைப்பற்றிய தலைப்பிலைதான் நான் என்னக்கு தெரிஞ்ச இன்னும் இரண்டொரு விசயத்தையும் சேர்த்து என்ரை பாசையிலை சொல்லியிருக்கிறன்.

மொத்த தாலிக்கான காரணங்களிலை ஒண்டையும் மறைமுகமாக சொல்லியிருக்கிறன். :unsure:

சரி எல்லாத்தையும் விடுவம்.உதாரணத்துக்கு ஒரு கலியாணவீட்டிலையோ இல்லாட்டி செத்தவீட்டிலையோ அங்கை கூடியிருக்கிற ஆக்கள் மாப்புளைபொம்புளையைபற்றியோ இல்லாட்டி செத்த ஆளைப்பற்றியோ தொடர்ந்து கதைச்சுக்கொண்டிருக்க மாட்டினம்.அப்பப்ப இடைக்கிடை வேறை வேறை விசயங்களும் வந்துபோகும் கண்டியளோ?அதுமாதிரித்தான் இதுவும் எண்டு நினையுங்கோவன். :)

அதையதை அந்த இடத்திலைதான் நிண்டு சொல்லோணுமெண்டால் கனபேருக்கு கனவிசயங்கள் தெரியாமல் போடும் மருதங்கேணி. :unsure:

மற்றது எனக்கு இந்த தலைப்பை திசை மாத்தோணும் எண்ட எண்ணம் எள்ளளவும் இல்லை :unsure:

அதுசரி மருதங்கேணி! இஞ்சை அனேகமான தலைப்புகளிலை எல்லாம் திசைமாறி சிக்குப்பட்டு நிக்கேக்கை இதிலை மட்டும் என்னவிசயம் உங்களுக்கு சுட்டுப்போட்டுது? :o

மருதங்கேணி தயவுசெய்து பதிலளிக்கவம்.நான் திருந்துவதற்கு வசதியாக இருக்கும். :)

குமாரசாமியண்ணே.

நீங்கள் என்னை தவறாக புரிந்துள்ளீர்கள்!

நான் உங்களை குறைகாணவுமில்லை குற்றம்சொல்லவுமி;ல்லை.

நீங்கள் எழுதிய கருத்தில் இரட்டை அர்த்தம் நிறையவே இருக்கின்றது. அதை நீங்கள் தெரியாமலும் எழுதியிருக்கலாம் தெரிந்தும் எழுதியிருக்கலாம். அதை தெரிந்துகொள்ளவே நான் பகிடியா உங்களை வினாவினேன். தலைப்பு தாலிபற்றியது என நான் நினைக்கிறேன் என்று.

நீங்கள் எழுதிய கருத்தை விலக்கிவிட்டு நான் எழுதியதை மட்டுமே பார்த்ததால்தான் உங்களுக்கு அப்படி தெரிந்திருக்கின்றது என நினைக்கிறேன். என்னை மன்னித்துக்கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்...ஓம் நல்லா இருக்கு...... நாட்டை முழுவதுமா பிடிச்சாச்சு எமது நாட்டு மக்களை திருப்பி அனுப்பலாம் என மஹிந்த ஒரு அறிக்கைவிட்டால் போதும் எல்லோரும் போக வேண்டியது தான். அதுசரி மொத்தமான தாலிக்கொடி இருந்தால் நல்லது தான் வித்தாவது சாப்பிடலாம் . ஓய் ஏன் காணும் யார் மொத்தமாய் போட்டால் என்ன மெல்லீசா போட்டால் என்ன நீங்கள் ஏன் காணும் ஓய் அதுகளை பாக்கிறீங்கள். பார்த்து விட்டு ஏன் காணும் எரிச்சலில் வார்த்தைகளை அள்ளி விடுகின்றீர்கள். இருக்கின்றவள் ஆசை உள்ளவள் போடுகின்றாள் உங்களாலும் முடிந்தால் போடுங்கள் இல்லாவிட்டால் முடியாவிட்டால் இப்படி எரிந்து புகைவது நியாயம் இல்லை

ஒரு சமூக பழக்க வழக்கங்களை....... எடுத்தோம் எறிந்தோம் என நாம் கடைபிடித்தால் அது பற்றி வினாவவும் விழங்கவும் அது சார்ந்த சமூகத்திற்கு நிறையவே பங்குண்டு என நான் நினைக்கிறேன். எதை செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்ற கேள்வியில்லாமல் ஒருவன் வாழ்ந்து வந்தால் அவனால் பல இடர்களை அவனை சூழ உள்ளோர் தாங்க நேரிடும். ஆகவே அவனுக்கு தேவையான அறிவை கல்வியூடாவோ சமூக விழிப்புணர்வு ஊடாகவோ தற்போதைய உலகில் எல்லா சமூகமும் ஊட்டி வருகின்றது. இந்து கடவுளை முன்நிறுத்தி ஒரு கோவிலை நீங்கள் கட்டினால் இந்து மத கோட்பாட்டை நீங்கள் நன்கு அறிந்து அன்றி அதை அறிந்தவரை நாடி அதற்கமைவாக கட்டினால்தான் அது இந்து மதத்திற்கும் அது சார்ந்தோருக்கும் துணை நிற்கும். நான் கட்டுறன் விரும்பினா வந்து கும்பிடுங்கோ இல்லாட்டி உங்கட வேலையை பாருங்கோ என்ற எண்ணம்தான் இப்போது இந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் உள்ளார்கள் என்பது யாருக்குமே தெரியாதுபோய் வெறும் சாதி வளர்கும் அருவெருப்புடைய சமயமாக நிற்கின்றது. அதை ஆதியில் நிறுவியவர்களின் எண்ணம் நிற்சயமாக அதுவாக இருந்திராது மாறாக அந்தகால மனிதர்கள் நலன் பெற கூடியதாகவே அது இருந்திருக்கும். பிற்காலத்தில் தமது சொந்த வயிறை வளர்க்க பாம்புபுற்றிற்கு பாலுற்றி வந்த வினைகள்... நான் எழுதி தெரியவேண்டியதில்லையே. ஆகவே உங்கள் கருத்து தனிமனித சுதந்திரம் எனும் பொருள்படா. மாறக திட்டமி;ட்ட சமூக சீர்குலைப்பு என்பதுதாகவே இது பார்க்க படவேண்டும்.

Link to comment
Share on other sites

அப்ப இதன் மூலம் மற்றவன் என்ன செய்கின்றான் என அவனின் தனிப்பட்டவிடயங்களுக்குள் எல்லாம் எம் மூக்கைவிட்டு அலசி அலசி பார்க்கனும் என கூறுகின்றீர்கள்? ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால் தனி ஒரு பெண் தனது சொந்த பணத்தில் தனக்கே மொத்தமான தாலிக்கொடி போடுவதால் சமூகத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளை கூறமுடியுமா?

Link to comment
Share on other sites

31 பவுணில் தாலிக்கொடி செய்த நண்பிக்கு திருமணம் முடிந்து விட்டது. நானும் திருமணத்திற்கு சென்றதால் ஒரு விடயத்தின் அவதானித்தேன், மணமக்களுக்கு வாள்து தெரிவிக்க சென்றவர் பெரும்பாலோர் இங்கால் வந்து தமக்குள் கொடி எத்தனை பவுணாக இருக்கும் என்று தான் பேச்சு. அப்படியானால் எல்லோரும் என்னத்தை நோக்குகிறார்கள் என்பது புரியும். பெண் வீட்டார் கூட கொடி வடிவாகத் தெரிய வேன்டும் என்றதில் அக்கறையாக அவர் அணிந்திருந்த மாலைகள் கொடிYஐ மறைக்காத வண்ணம் பார்துக்கொண்டனர். எனது நண்பி தான் பாவம், மற்றவர்களுடைய விருப்பத்ற்காக தனது சொந்தப்பணத்தில் கொடி செய்து கிட்டதட்ட 1/4 கிலோதஙத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடி எப்படியிருந்தாலும் தாலி ஒரு பவுனுக்குமேல் செய்வது வழக்கமில்லை. அதுபோல் கொடிக்கும் ஒரு கட்டுப்பாடு இருந்திருந்தால் நல்லாயிருந்திருக்கும்!

எப்படியாயினும் கொடி பெரிதானால் பாக்கிறவைக்கு கண்ணை உறுத்தும், கட்டியிருக்குறவைக்கு கழுத்தை அரிக்கும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு " ............அளவு ,போதும் என்ற மனம் ,பாதுகாப்பு என்பதை கருத்தில் கொண்டால் ,எல்லாமே நன்று ." படித்தவர்கள் " எல்லாருமே " வாழ்கையை" படித்தவர்கள் ஆக மாட்டார்கள் . அது வெறும் புத்தக படிப்பாக இருக்கலாம் .சிந்தித்து செயல் பட்டு ,(பின் வருவதை )வாழ்வதே வாழ்கை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :o:unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :o:unsure::unsure:

ஓமோம் அப்பத்தான் தூக்கி மாட்ட சுகம். ஆச்சிரமத்திலேயே கணக்கா எலும்புக்கூடுகள் இருக்கு அதுபற்றிய விசாரணைகளை டங்குவார் தொடங்கப்போறார்.மச்சான் சிறி பார்த்திங்களே இவற்ற வேலையை இப்படியென்றால் நான் எப்படி ஆச்சிரமத்தை கொடுப்பன் சொல்லுங்கோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் அப்பத்தான் தூக்கி மாட்ட சுகம். ஆச்சிரமத்திலேயே கணக்கா எலும்புக்கூடுகள் இருக்கு அதுபற்றிய விசாரணைகளை டங்குவார் தொடங்கப்போறார்.மச்சான் சிறி பார்த்திங்களே இவற்ற வேலையை இப்படியென்றால் நான் எப்படி ஆச்சிரமத்தை கொடுப்பன் சொல்லுங்கோ :unsure:

அது தானே ..... மச்சான் , ஆச்சிரமம் பறி போனதோடை முனிவருக்கு புத்தி பிசகீற்றுது போலை ..... :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :o:unsure::)

சரியான தீர்ப்பு. முனிபக்குவரே.! இப்ப எல்லாம் ஆண்கள் இரவில நிம்மதியா நித்திரையே கொள்ள முடியுதில்லையாம். அப்படி இருக்கேக்க.. கழுத்தில ஒரு நைலோன் கயிறை மாட்டி வைக்கிறது.. அவசரத்துக்கு பிடிச்சு.. இழுத்து.. இறுக்கி தற்காத்துக் கொள்ள ஆண்களுக்கு உதவும்..! :unsure: :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவது சரி, ஆனால் பல பெண்களுக்கு தாலிக்கொடியின் அளவு எவ்வளவு என்று தாலி கட்டும் போது தானே தெரிகிரது, எனவே அச்சந்தர்பத்தில் என்ன செய்ய முடியும். எனது கணவர் எனக்குத் தாலி கட்ட பக்கத்தில் வந்து நின்ற போது தான் புரிந்தது அதன் மொத்தம் என்ன என்று !!! எனது கணவர் 25 பவுணில் செய்யப் போகிறென் என்று எனக்குக் கூறவே இல்லை !!!!!

.சரி,நீங்கள் 25 பவுனில் செய்த கொடியை போட்டுக்கொன்டு வலம் வருவதை பெருமையாக நினக்கிறீர்களா அல்லது அவமானமாக நினைக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

எனக்கு தாலிக்கொடியின் அளவு பற்றி அக்கரை இருந்ததில்லை. ஆனால் அதற்கு எண்டு ஒரு மரியாதை உண்டு, அதை வைத்திருக்கிரேன். என்னைப் பொறுத்த்வரையில் அதன் அளவு என்பது அணிவிப்பவரின் விருப்பம் அது 5 பவுணாக இருந்தாலும் சரி 50 பவுணாக இருந்தாலும் சரி, எந்தவிதமான குறையும் சொல்லாமல் அணிய வேண்டியது மனிவியின் கடமை. ஆனால் என்னுடைய கொடியைப் பார்த்து பலர் பகிடி பண்ணியது உண்டு. தவறு என்று சொல்ல மாட்டேன் ஏனென்றால் நானும் அவ்வறு கடந்த காலத்தில் நினைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதன் மூலம் மற்றவன் என்ன செய்கின்றான் என அவனின் தனிப்பட்டவிடயங்களுக்குள் எல்லாம் எம் மூக்கைவிட்டு அலசி அலசி பார்க்கனும் என கூறுகின்றீர்கள்? ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால் தனி ஒரு பெண் தனது சொந்த பணத்தில் தனக்கே மொத்தமான தாலிக்கொடி போடுவதால் சமூகத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளை கூறமுடியுமா?

கொடி மட்டும் இல்லை இந்த நகை போடுற விசயமே மற்றவன் பாக்கிறதுக்காக செய்யிறதுதானே.உதாரனத்துக்கு நான் நேரடியாக பார்த்த இரன்டு சம்பவத்தை கூறுகிறேன்.ஒருமுறை நான் கொழும்பில் விடுதியில் தங்கி நின்ற போது ஒரு வெளிநாட்டுக் குடும்பம் வந்து இறங்கியது.அதில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரம் ஒரு நடமாடும் நகைக்கடை.அப்போது அங்கு ஏற்கனவே இருந்த ஒரு உள்ளூர் தாய்யும் மகளும்.அதில் அந்த மகள் தாய்யைப்பார்த்து,அம்மா அங்க பார் அவர்கள் போட்டிருக்கிறதுகளை என்று.அதுக்கு அந்த அம்மா,அதுகளுக்கென்ன அதுகள் வெளிநாட்டுச்சனம் அதுகள் போடுங்கள் தானே என்று சொன்னா.இது பாதிப்புஇல்லையா?(எந்தக்காரனத்தால வெளிநாட்டுக்கு வந்து கிலோக்கணக்கில நகை வாங்க கூடியதாக இருந்துதோ அதே காரனத்தால அங்கு நொந்து நூலாய்ப்போயிருக்கும் மக்களுக்கு பிலிம் காட்டுறது)மற்றது ஊரில ஒரு அண்ணன் வெளி நாட்டிலிருந்து வந்து நிக்கும் தன் தங்கையிடம் சொல்கிறார் பெட்டி நிறைய நகையிருந்தும் ஆசைக்கு போட முடியவில்லை என்று(கள்ளர் பயமாம்)ஆசைக்கு போட வேண்டும் என்றால் இரவில் வீட்டைப்பூட்டிப்போட்டு போட்டுக்கொன்டு அங்கும் இங்கம் கொஞ்ச நேரம் நடந்து திரியலாம் தானே.ஆனால் அது இல்லையே ஆசை.நாலு பேர் பார்க்க வேனும்,ஏங்க வேனும்,விசாரிக்க வேனும்.இது தானே நோக்கம்.இப்ப உங்களுக்கு பிடிச்ச ஒரு சாப்பாடு சாப்பிடுகிறீர்கள்.அது மற்றவர்களுக்கு தெரிந்தாலும் சரி தெரியாவிட்டாலும் சரி உங்களுக்கு திருப்தி.ஆனால் நகை விசயம் அப்படி இல்லையே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதன் மூலம் மற்றவன் என்ன செய்கின்றான் என அவனின் தனிப்பட்டவிடயங்களுக்குள் எல்லாம் எம் மூக்கைவிட்டு அலசி அலசி பார்க்கனும் என கூறுகின்றீர்கள்? ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால் தனி ஒரு பெண் தனது சொந்த பணத்தில் தனக்கே மொத்தமான தாலிக்கொடி போடுவதால் சமூகத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளை கூறமுடியுமா?

தாலியை ஒரு பெண் தானாகவே அணிந்தால் நீங்கள் சொல்வது பொருத்தமானதே.

ஆனால் அது ஒரு சமூகத்திற்கு சாட்சியாக வழங்கபடுகிறது. சமூகத்தின் கலாச்சார பின்னணியே இங்கு தலைநிமிர்ந்து நிற்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25 பவுணோ,50 பவுணோ காசு செலவழித்து வாங்கிய பின்னர் பெட்டிக்கு உள்ளையும்,லொக்கருக்கு உள்ளையும் சும்மா இருக்கும் போது அதை விட விலை கூடிய உடுப்புகள்,JACKET வேண்டி போட்டுக் கொண்டு திரியலாம்.தாயகத்தில் எவ்வளவு சனம் சாப்பாடு இல்லாமல் கஸ்டப்படுது.தாலியை சின்னதாக செய்து கொண்டு மிச்ச காசை அவர்களுக்கு குடுத்தால் புண்ணியமாவது கிடைக்கும்.

Link to comment
Share on other sites

இங்கே படிதவர்கள் மொத்தமாக தாலிகொடி போடுவதால் அவர்களையும் கண்டித்து இருக்க்றீர்கள் ஆனால், அதே படிப்பை காரணம் காட்டி சீதனம் வாங்குகிறார்களே அதை என்னவென்று கூறுவது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை நான் நினைச்சதை நீங்கள் சொல்லிட்டிங்கள் ஆமா.....றூம் போட்டிருந்து யோசிப்பிங்களோ?

அப்புறம் தாலிக்கொடி போடுறதெல்லாம் வந்து வேள்விக்கு ஆடு வெட்ட முதல் மாலை போட்டு,நல்லா குழை எல்லாம்

குடுத்திட்டு வெட்டுறது போலத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :D:o:(

எண்டைக்கோ ஒருநாளைக்கு பெட்டையள்(சிஷ்யைமார்) உங்களை தூக்கி கட்டத்தான்போறாளவையள்.அது நிச்சயம். :o

எதுக்கும் நைலோன் கயிறை விட்டுட்டு சணல்கயிறாய் பாத்து கட்டுங்கோ. பிற்காலத்துக்கு உதவும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணை ,

நீங்கள் பொருத்தமான இடங்களில் , பொருத்தமான படங்கள் போடுவதில் வல்லவர் .

மொத்தமான தாலிக்கொடி படத்தை போட்டு விடுங்கோவன் , பாத்து பசியாறுவம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்டைக்கோ ஒருநாளைக்கு பெட்டையள்(சிஷ்யைமார்) உங்களை தூக்கி கட்டத்தான்போறாளவையள்.அது நிச்சயம். :)

எதுக்கும் நைலோன் கயிறை விட்டுட்டு சணல்கயிறாய் பாத்து கட்டுங்கோ. பிற்காலத்துக்கு உதவும் :D

ச்ச கு.சா அண்ணை நான் தாலியெல்லாம் கட்டுவதில்லை அதனால கயிறு தேவைப்படாது என நினைக்கிறேன் மற்றது பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் அப்படி யெல்லாம் செய்யாது :):)

தமிழ் சிறி Posted Today, 09:38 AM

குமாரசாமியண்ணை ,

நீங்கள் பொருத்தமான இடங்களில் , பொருத்தமான படங்கள் போடுவதில் வல்லவர் .

மொத்தமான தாலிக்கொடி படத்தை போட்டு விடுங்கோவன் , பாத்து பசியாறுவம் .

தமிழ்சிறி நீங்கள் படம் கேட்க கு.சா அவர்ர மனைவியின் தாலிக்கொடியை கழட்ட அவா இவர் அடகுவைக்க போறார் என்று போட்டு அடிக்க என்ன வேலை இது நல்லா இல்லை அமா சொல்லிபோட்டன் :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் , நான் நினைக்கிறன் குமாரசாமியண்ணை " கமெரா " வோடை தாலிக்கொடி படம் பிடிக்கபோயிட்டார் . :o

கடவுளே ....... என்று நொந்து ... நூடில்ஸ் ஆகாம , அவர் வரவேணும். :)

Link to comment
Share on other sites

நான் 9 பவுனில் தான் தாலி போட்டு இருக்கிறன். அதனால் அது எப்பவுமே எனது கழுத்தில் தான் இருக்கிறது. எனது திருமணத்தின் போது எனது கணவர் கேட்டார் எத்தனை பவுன்னில் வேண்டும் என்று ,குறைந்தது எத்தனை பவுனில் செய்யலாமோ அதில செய்யச்சொன்னன் ஏனெனில் அது எப்பவுமே எனது கழுத்தில் இருக்கனும் என்று நினைத்தேன் அத்தோடு என் கணவருக்கு பணக்கஸ்டத்தை கொடுக்க விரும்பவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.