Jump to content

மொத்தாமான தாலிக்கொடி


Recommended Posts

ஓம்...ஓம் நல்லா இருக்கு...... நாட்டை முழுவதுமா பிடிச்சாச்சு எமது நாட்டு மக்களை திருப்பி அனுப்பலாம் என மஹிந்த ஒரு அறிக்கைவிட்டால் போதும் எல்லோரும் போக வேண்டியது தான். அதுசரி மொத்தமான தாலிக்கொடி இருந்தால் நல்லது தான் வித்தாவது சாப்பிடலாம் . ஓய் ஏன் காணும் யார் மொத்தமாய் போட்டால் என்ன மெல்லீசா போட்டால் என்ன நீங்கள் ஏன் காணும் ஓய் அதுகளை பாக்கிறீங்கள். பார்த்து விட்டு ஏன் காணும் எரிச்சலில் வார்த்தைகளை அள்ளி விடுகின்றீர்கள். இருக்கின்றவள் ஆசை உள்ளவள் போடுகின்றாள் உங்களாலும் முடிந்தால் போடுங்கள் இல்லாவிட்டால் முடியாவிட்டால் இப்படி எரிந்து புகைவது நியாயம் இல்லை

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு தாலி பற்றியது என்று நான் நினைக்கிறேன்....

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் குமாரசுவாமிஅண்ணே?

மருதங்கேணி! தாலிக்கொடியைப்பற்றிய தலைப்பிலைதான் நான் என்னக்கு தெரிஞ்ச இன்னும் இரண்டொரு விசயத்தையும் சேர்த்து என்ரை பாசையிலை சொல்லியிருக்கிறன்.

மொத்த தாலிக்கான காரணங்களிலை ஒண்டையும் மறைமுகமாக சொல்லியிருக்கிறன். :rolleyes:

சரி எல்லாத்தையும் விடுவம்.உதாரணத்துக்கு ஒரு கலியாணவீட்டிலையோ இல்லாட்டி செத்தவீட்டிலையோ அங்கை கூடியிருக்கிற ஆக்கள் மாப்புளைபொம்புளையைபற்றியோ இல்லாட்டி செத்த ஆளைப்பற்றியோ தொடர்ந்து கதைச்சுக்கொண்டிருக்க மாட்டினம்.அப்பப்ப இடைக்கிடை வேறை வேறை விசயங்களும் வந்துபோகும் கண்டியளோ?அதுமாதிரித்தான் இதுவும் எண்டு நினையுங்கோவன். :(

அதையதை அந்த இடத்திலைதான் நிண்டு சொல்லோணுமெண்டால் கனபேருக்கு கனவிசயங்கள் தெரியாமல் போடும் மருதங்கேணி. :(

மற்றது எனக்கு இந்த தலைப்பை திசை மாத்தோணும் எண்ட எண்ணம் எள்ளளவும் இல்லை :)

அதுசரி மருதங்கேணி! இஞ்சை அனேகமான தலைப்புகளிலை எல்லாம் திசைமாறி சிக்குப்பட்டு நிக்கேக்கை இதிலை மட்டும் என்னவிசயம் உங்களுக்கு சுட்டுப்போட்டுது? :lol:

மருதங்கேணி தயவுசெய்து பதிலளிக்கவம்.நான் திருந்துவதற்கு வசதியாக இருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்...ஓம் நல்லா இருக்கு...... நாட்டை முழுவதுமா பிடிச்சாச்சு எமது நாட்டு மக்களை திருப்பி அனுப்பலாம் என மஹிந்த ஒரு அறிக்கைவிட்டால் போதும் எல்லோரும் போக வேண்டியது தான். அதுசரி மொத்தமான தாலிக்கொடி இருந்தால் நல்லது தான் வித்தாவது சாப்பிடலாம் . ஓய் ஏன் காணும் யார் மொத்தமாய் போட்டால் என்ன மெல்லீசா போட்டால் என்ன நீங்கள் ஏன் காணும் ஓய் அதுகளை பாக்கிறீங்கள். பார்த்து விட்டு ஏன் காணும் எரிச்சலில் வார்த்தைகளை அள்ளி விடுகின்றீர்கள். இருக்கின்றவள் ஆசை உள்ளவள் போடுகின்றாள் உங்களாலும் முடிந்தால் போடுங்கள் இல்லாவிட்டால் முடியாவிட்டால் இப்படி எரிந்து புகைவது நியாயம் இல்லை

என்ன தங்கச்சி? ஏன் தங்கச்சி? ஏன் இதெல்லாம்? ஆர் போகப்போறான்?மகிந்தன் எப்ப சொன்னவன் வெளிநாட்டிலை இருக்கிற ஆக்களை திருப்பி அனுப்பவேண்டாமெண்டு?

ஆருக்கு தங்கச்சி எரிச்சல் பொறாமை எல்லாம்?இந்த அண்ணை நல்லதைத்தானே சொன்னவன்?நகைநட்டு வாங்கிறது இப்ப பெரிய பிரச்சனையே?எல்லாரும் எல்லாந்தான் வாங்கலாம்.அதுஅதுக்கெண்டு அளவு மதிப்புமரியாதை ஒண்டு இருக்கெல்லே தங்கச்சி :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி! தாலிக்கொடியைப்பற்றிய தலைப்பிலைதான் நான் என்னக்கு தெரிஞ்ச இன்னும் இரண்டொரு விசயத்தையும் சேர்த்து என்ரை பாசையிலை சொல்லியிருக்கிறன்.

மொத்த தாலிக்கான காரணங்களிலை ஒண்டையும் மறைமுகமாக சொல்லியிருக்கிறன். :unsure:

சரி எல்லாத்தையும் விடுவம்.உதாரணத்துக்கு ஒரு கலியாணவீட்டிலையோ இல்லாட்டி செத்தவீட்டிலையோ அங்கை கூடியிருக்கிற ஆக்கள் மாப்புளைபொம்புளையைபற்றியோ இல்லாட்டி செத்த ஆளைப்பற்றியோ தொடர்ந்து கதைச்சுக்கொண்டிருக்க மாட்டினம்.அப்பப்ப இடைக்கிடை வேறை வேறை விசயங்களும் வந்துபோகும் கண்டியளோ?அதுமாதிரித்தான் இதுவும் எண்டு நினையுங்கோவன். :)

அதையதை அந்த இடத்திலைதான் நிண்டு சொல்லோணுமெண்டால் கனபேருக்கு கனவிசயங்கள் தெரியாமல் போடும் மருதங்கேணி. :unsure:

மற்றது எனக்கு இந்த தலைப்பை திசை மாத்தோணும் எண்ட எண்ணம் எள்ளளவும் இல்லை :unsure:

அதுசரி மருதங்கேணி! இஞ்சை அனேகமான தலைப்புகளிலை எல்லாம் திசைமாறி சிக்குப்பட்டு நிக்கேக்கை இதிலை மட்டும் என்னவிசயம் உங்களுக்கு சுட்டுப்போட்டுது? :o

மருதங்கேணி தயவுசெய்து பதிலளிக்கவம்.நான் திருந்துவதற்கு வசதியாக இருக்கும். :)

குமாரசாமியண்ணே.

நீங்கள் என்னை தவறாக புரிந்துள்ளீர்கள்!

நான் உங்களை குறைகாணவுமில்லை குற்றம்சொல்லவுமி;ல்லை.

நீங்கள் எழுதிய கருத்தில் இரட்டை அர்த்தம் நிறையவே இருக்கின்றது. அதை நீங்கள் தெரியாமலும் எழுதியிருக்கலாம் தெரிந்தும் எழுதியிருக்கலாம். அதை தெரிந்துகொள்ளவே நான் பகிடியா உங்களை வினாவினேன். தலைப்பு தாலிபற்றியது என நான் நினைக்கிறேன் என்று.

நீங்கள் எழுதிய கருத்தை விலக்கிவிட்டு நான் எழுதியதை மட்டுமே பார்த்ததால்தான் உங்களுக்கு அப்படி தெரிந்திருக்கின்றது என நினைக்கிறேன். என்னை மன்னித்துக்கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்...ஓம் நல்லா இருக்கு...... நாட்டை முழுவதுமா பிடிச்சாச்சு எமது நாட்டு மக்களை திருப்பி அனுப்பலாம் என மஹிந்த ஒரு அறிக்கைவிட்டால் போதும் எல்லோரும் போக வேண்டியது தான். அதுசரி மொத்தமான தாலிக்கொடி இருந்தால் நல்லது தான் வித்தாவது சாப்பிடலாம் . ஓய் ஏன் காணும் யார் மொத்தமாய் போட்டால் என்ன மெல்லீசா போட்டால் என்ன நீங்கள் ஏன் காணும் ஓய் அதுகளை பாக்கிறீங்கள். பார்த்து விட்டு ஏன் காணும் எரிச்சலில் வார்த்தைகளை அள்ளி விடுகின்றீர்கள். இருக்கின்றவள் ஆசை உள்ளவள் போடுகின்றாள் உங்களாலும் முடிந்தால் போடுங்கள் இல்லாவிட்டால் முடியாவிட்டால் இப்படி எரிந்து புகைவது நியாயம் இல்லை

ஒரு சமூக பழக்க வழக்கங்களை....... எடுத்தோம் எறிந்தோம் என நாம் கடைபிடித்தால் அது பற்றி வினாவவும் விழங்கவும் அது சார்ந்த சமூகத்திற்கு நிறையவே பங்குண்டு என நான் நினைக்கிறேன். எதை செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்ற கேள்வியில்லாமல் ஒருவன் வாழ்ந்து வந்தால் அவனால் பல இடர்களை அவனை சூழ உள்ளோர் தாங்க நேரிடும். ஆகவே அவனுக்கு தேவையான அறிவை கல்வியூடாவோ சமூக விழிப்புணர்வு ஊடாகவோ தற்போதைய உலகில் எல்லா சமூகமும் ஊட்டி வருகின்றது. இந்து கடவுளை முன்நிறுத்தி ஒரு கோவிலை நீங்கள் கட்டினால் இந்து மத கோட்பாட்டை நீங்கள் நன்கு அறிந்து அன்றி அதை அறிந்தவரை நாடி அதற்கமைவாக கட்டினால்தான் அது இந்து மதத்திற்கும் அது சார்ந்தோருக்கும் துணை நிற்கும். நான் கட்டுறன் விரும்பினா வந்து கும்பிடுங்கோ இல்லாட்டி உங்கட வேலையை பாருங்கோ என்ற எண்ணம்தான் இப்போது இந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் உள்ளார்கள் என்பது யாருக்குமே தெரியாதுபோய் வெறும் சாதி வளர்கும் அருவெருப்புடைய சமயமாக நிற்கின்றது. அதை ஆதியில் நிறுவியவர்களின் எண்ணம் நிற்சயமாக அதுவாக இருந்திராது மாறாக அந்தகால மனிதர்கள் நலன் பெற கூடியதாகவே அது இருந்திருக்கும். பிற்காலத்தில் தமது சொந்த வயிறை வளர்க்க பாம்புபுற்றிற்கு பாலுற்றி வந்த வினைகள்... நான் எழுதி தெரியவேண்டியதில்லையே. ஆகவே உங்கள் கருத்து தனிமனித சுதந்திரம் எனும் பொருள்படா. மாறக திட்டமி;ட்ட சமூக சீர்குலைப்பு என்பதுதாகவே இது பார்க்க படவேண்டும்.

Link to comment
Share on other sites

அப்ப இதன் மூலம் மற்றவன் என்ன செய்கின்றான் என அவனின் தனிப்பட்டவிடயங்களுக்குள் எல்லாம் எம் மூக்கைவிட்டு அலசி அலசி பார்க்கனும் என கூறுகின்றீர்கள்? ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால் தனி ஒரு பெண் தனது சொந்த பணத்தில் தனக்கே மொத்தமான தாலிக்கொடி போடுவதால் சமூகத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளை கூறமுடியுமா?

Link to comment
Share on other sites

31 பவுணில் தாலிக்கொடி செய்த நண்பிக்கு திருமணம் முடிந்து விட்டது. நானும் திருமணத்திற்கு சென்றதால் ஒரு விடயத்தின் அவதானித்தேன், மணமக்களுக்கு வாள்து தெரிவிக்க சென்றவர் பெரும்பாலோர் இங்கால் வந்து தமக்குள் கொடி எத்தனை பவுணாக இருக்கும் என்று தான் பேச்சு. அப்படியானால் எல்லோரும் என்னத்தை நோக்குகிறார்கள் என்பது புரியும். பெண் வீட்டார் கூட கொடி வடிவாகத் தெரிய வேன்டும் என்றதில் அக்கறையாக அவர் அணிந்திருந்த மாலைகள் கொடிYஐ மறைக்காத வண்ணம் பார்துக்கொண்டனர். எனது நண்பி தான் பாவம், மற்றவர்களுடைய விருப்பத்ற்காக தனது சொந்தப்பணத்தில் கொடி செய்து கிட்டதட்ட 1/4 கிலோதஙத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடி எப்படியிருந்தாலும் தாலி ஒரு பவுனுக்குமேல் செய்வது வழக்கமில்லை. அதுபோல் கொடிக்கும் ஒரு கட்டுப்பாடு இருந்திருந்தால் நல்லாயிருந்திருக்கும்!

எப்படியாயினும் கொடி பெரிதானால் பாக்கிறவைக்கு கண்ணை உறுத்தும், கட்டியிருக்குறவைக்கு கழுத்தை அரிக்கும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு " ............அளவு ,போதும் என்ற மனம் ,பாதுகாப்பு என்பதை கருத்தில் கொண்டால் ,எல்லாமே நன்று ." படித்தவர்கள் " எல்லாருமே " வாழ்கையை" படித்தவர்கள் ஆக மாட்டார்கள் . அது வெறும் புத்தக படிப்பாக இருக்கலாம் .சிந்தித்து செயல் பட்டு ,(பின் வருவதை )வாழ்வதே வாழ்கை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :o:unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :o:unsure::unsure:

ஓமோம் அப்பத்தான் தூக்கி மாட்ட சுகம். ஆச்சிரமத்திலேயே கணக்கா எலும்புக்கூடுகள் இருக்கு அதுபற்றிய விசாரணைகளை டங்குவார் தொடங்கப்போறார்.மச்சான் சிறி பார்த்திங்களே இவற்ற வேலையை இப்படியென்றால் நான் எப்படி ஆச்சிரமத்தை கொடுப்பன் சொல்லுங்கோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் அப்பத்தான் தூக்கி மாட்ட சுகம். ஆச்சிரமத்திலேயே கணக்கா எலும்புக்கூடுகள் இருக்கு அதுபற்றிய விசாரணைகளை டங்குவார் தொடங்கப்போறார்.மச்சான் சிறி பார்த்திங்களே இவற்ற வேலையை இப்படியென்றால் நான் எப்படி ஆச்சிரமத்தை கொடுப்பன் சொல்லுங்கோ :unsure:

அது தானே ..... மச்சான் , ஆச்சிரமம் பறி போனதோடை முனிவருக்கு புத்தி பிசகீற்றுது போலை ..... :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :o:unsure::)

சரியான தீர்ப்பு. முனிபக்குவரே.! இப்ப எல்லாம் ஆண்கள் இரவில நிம்மதியா நித்திரையே கொள்ள முடியுதில்லையாம். அப்படி இருக்கேக்க.. கழுத்தில ஒரு நைலோன் கயிறை மாட்டி வைக்கிறது.. அவசரத்துக்கு பிடிச்சு.. இழுத்து.. இறுக்கி தற்காத்துக் கொள்ள ஆண்களுக்கு உதவும்..! :unsure: :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவது சரி, ஆனால் பல பெண்களுக்கு தாலிக்கொடியின் அளவு எவ்வளவு என்று தாலி கட்டும் போது தானே தெரிகிரது, எனவே அச்சந்தர்பத்தில் என்ன செய்ய முடியும். எனது கணவர் எனக்குத் தாலி கட்ட பக்கத்தில் வந்து நின்ற போது தான் புரிந்தது அதன் மொத்தம் என்ன என்று !!! எனது கணவர் 25 பவுணில் செய்யப் போகிறென் என்று எனக்குக் கூறவே இல்லை !!!!!

.சரி,நீங்கள் 25 பவுனில் செய்த கொடியை போட்டுக்கொன்டு வலம் வருவதை பெருமையாக நினக்கிறீர்களா அல்லது அவமானமாக நினைக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

எனக்கு தாலிக்கொடியின் அளவு பற்றி அக்கரை இருந்ததில்லை. ஆனால் அதற்கு எண்டு ஒரு மரியாதை உண்டு, அதை வைத்திருக்கிரேன். என்னைப் பொறுத்த்வரையில் அதன் அளவு என்பது அணிவிப்பவரின் விருப்பம் அது 5 பவுணாக இருந்தாலும் சரி 50 பவுணாக இருந்தாலும் சரி, எந்தவிதமான குறையும் சொல்லாமல் அணிய வேண்டியது மனிவியின் கடமை. ஆனால் என்னுடைய கொடியைப் பார்த்து பலர் பகிடி பண்ணியது உண்டு. தவறு என்று சொல்ல மாட்டேன் ஏனென்றால் நானும் அவ்வறு கடந்த காலத்தில் நினைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதன் மூலம் மற்றவன் என்ன செய்கின்றான் என அவனின் தனிப்பட்டவிடயங்களுக்குள் எல்லாம் எம் மூக்கைவிட்டு அலசி அலசி பார்க்கனும் என கூறுகின்றீர்கள்? ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால் தனி ஒரு பெண் தனது சொந்த பணத்தில் தனக்கே மொத்தமான தாலிக்கொடி போடுவதால் சமூகத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளை கூறமுடியுமா?

கொடி மட்டும் இல்லை இந்த நகை போடுற விசயமே மற்றவன் பாக்கிறதுக்காக செய்யிறதுதானே.உதாரனத்துக்கு நான் நேரடியாக பார்த்த இரன்டு சம்பவத்தை கூறுகிறேன்.ஒருமுறை நான் கொழும்பில் விடுதியில் தங்கி நின்ற போது ஒரு வெளிநாட்டுக் குடும்பம் வந்து இறங்கியது.அதில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரம் ஒரு நடமாடும் நகைக்கடை.அப்போது அங்கு ஏற்கனவே இருந்த ஒரு உள்ளூர் தாய்யும் மகளும்.அதில் அந்த மகள் தாய்யைப்பார்த்து,அம்மா அங்க பார் அவர்கள் போட்டிருக்கிறதுகளை என்று.அதுக்கு அந்த அம்மா,அதுகளுக்கென்ன அதுகள் வெளிநாட்டுச்சனம் அதுகள் போடுங்கள் தானே என்று சொன்னா.இது பாதிப்புஇல்லையா?(எந்தக்காரனத்தால வெளிநாட்டுக்கு வந்து கிலோக்கணக்கில நகை வாங்க கூடியதாக இருந்துதோ அதே காரனத்தால அங்கு நொந்து நூலாய்ப்போயிருக்கும் மக்களுக்கு பிலிம் காட்டுறது)மற்றது ஊரில ஒரு அண்ணன் வெளி நாட்டிலிருந்து வந்து நிக்கும் தன் தங்கையிடம் சொல்கிறார் பெட்டி நிறைய நகையிருந்தும் ஆசைக்கு போட முடியவில்லை என்று(கள்ளர் பயமாம்)ஆசைக்கு போட வேண்டும் என்றால் இரவில் வீட்டைப்பூட்டிப்போட்டு போட்டுக்கொன்டு அங்கும் இங்கம் கொஞ்ச நேரம் நடந்து திரியலாம் தானே.ஆனால் அது இல்லையே ஆசை.நாலு பேர் பார்க்க வேனும்,ஏங்க வேனும்,விசாரிக்க வேனும்.இது தானே நோக்கம்.இப்ப உங்களுக்கு பிடிச்ச ஒரு சாப்பாடு சாப்பிடுகிறீர்கள்.அது மற்றவர்களுக்கு தெரிந்தாலும் சரி தெரியாவிட்டாலும் சரி உங்களுக்கு திருப்தி.ஆனால் நகை விசயம் அப்படி இல்லையே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதன் மூலம் மற்றவன் என்ன செய்கின்றான் என அவனின் தனிப்பட்டவிடயங்களுக்குள் எல்லாம் எம் மூக்கைவிட்டு அலசி அலசி பார்க்கனும் என கூறுகின்றீர்கள்? ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால் தனி ஒரு பெண் தனது சொந்த பணத்தில் தனக்கே மொத்தமான தாலிக்கொடி போடுவதால் சமூகத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளை கூறமுடியுமா?

தாலியை ஒரு பெண் தானாகவே அணிந்தால் நீங்கள் சொல்வது பொருத்தமானதே.

ஆனால் அது ஒரு சமூகத்திற்கு சாட்சியாக வழங்கபடுகிறது. சமூகத்தின் கலாச்சார பின்னணியே இங்கு தலைநிமிர்ந்து நிற்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25 பவுணோ,50 பவுணோ காசு செலவழித்து வாங்கிய பின்னர் பெட்டிக்கு உள்ளையும்,லொக்கருக்கு உள்ளையும் சும்மா இருக்கும் போது அதை விட விலை கூடிய உடுப்புகள்,JACKET வேண்டி போட்டுக் கொண்டு திரியலாம்.தாயகத்தில் எவ்வளவு சனம் சாப்பாடு இல்லாமல் கஸ்டப்படுது.தாலியை சின்னதாக செய்து கொண்டு மிச்ச காசை அவர்களுக்கு குடுத்தால் புண்ணியமாவது கிடைக்கும்.

Link to comment
Share on other sites

இங்கே படிதவர்கள் மொத்தமாக தாலிகொடி போடுவதால் அவர்களையும் கண்டித்து இருக்க்றீர்கள் ஆனால், அதே படிப்பை காரணம் காட்டி சீதனம் வாங்குகிறார்களே அதை என்னவென்று கூறுவது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை நான் நினைச்சதை நீங்கள் சொல்லிட்டிங்கள் ஆமா.....றூம் போட்டிருந்து யோசிப்பிங்களோ?

அப்புறம் தாலிக்கொடி போடுறதெல்லாம் வந்து வேள்விக்கு ஆடு வெட்ட முதல் மாலை போட்டு,நல்லா குழை எல்லாம்

குடுத்திட்டு வெட்டுறது போலத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேசாமல் நைலோன்[மஞ்சள்] கயிரை கட்டலாம் என நினைக்கிறேன் :D:o:(

எண்டைக்கோ ஒருநாளைக்கு பெட்டையள்(சிஷ்யைமார்) உங்களை தூக்கி கட்டத்தான்போறாளவையள்.அது நிச்சயம். :o

எதுக்கும் நைலோன் கயிறை விட்டுட்டு சணல்கயிறாய் பாத்து கட்டுங்கோ. பிற்காலத்துக்கு உதவும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணை ,

நீங்கள் பொருத்தமான இடங்களில் , பொருத்தமான படங்கள் போடுவதில் வல்லவர் .

மொத்தமான தாலிக்கொடி படத்தை போட்டு விடுங்கோவன் , பாத்து பசியாறுவம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்டைக்கோ ஒருநாளைக்கு பெட்டையள்(சிஷ்யைமார்) உங்களை தூக்கி கட்டத்தான்போறாளவையள்.அது நிச்சயம். :)

எதுக்கும் நைலோன் கயிறை விட்டுட்டு சணல்கயிறாய் பாத்து கட்டுங்கோ. பிற்காலத்துக்கு உதவும் :D

ச்ச கு.சா அண்ணை நான் தாலியெல்லாம் கட்டுவதில்லை அதனால கயிறு தேவைப்படாது என நினைக்கிறேன் மற்றது பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் அப்படி யெல்லாம் செய்யாது :):)

தமிழ் சிறி Posted Today, 09:38 AM

குமாரசாமியண்ணை ,

நீங்கள் பொருத்தமான இடங்களில் , பொருத்தமான படங்கள் போடுவதில் வல்லவர் .

மொத்தமான தாலிக்கொடி படத்தை போட்டு விடுங்கோவன் , பாத்து பசியாறுவம் .

தமிழ்சிறி நீங்கள் படம் கேட்க கு.சா அவர்ர மனைவியின் தாலிக்கொடியை கழட்ட அவா இவர் அடகுவைக்க போறார் என்று போட்டு அடிக்க என்ன வேலை இது நல்லா இல்லை அமா சொல்லிபோட்டன் :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் , நான் நினைக்கிறன் குமாரசாமியண்ணை " கமெரா " வோடை தாலிக்கொடி படம் பிடிக்கபோயிட்டார் . :o

கடவுளே ....... என்று நொந்து ... நூடில்ஸ் ஆகாம , அவர் வரவேணும். :)

Link to comment
Share on other sites

நான் 9 பவுனில் தான் தாலி போட்டு இருக்கிறன். அதனால் அது எப்பவுமே எனது கழுத்தில் தான் இருக்கிறது. எனது திருமணத்தின் போது எனது கணவர் கேட்டார் எத்தனை பவுன்னில் வேண்டும் என்று ,குறைந்தது எத்தனை பவுனில் செய்யலாமோ அதில செய்யச்சொன்னன் ஏனெனில் அது எப்பவுமே எனது கழுத்தில் இருக்கனும் என்று நினைத்தேன் அத்தோடு என் கணவருக்கு பணக்கஸ்டத்தை கொடுக்க விரும்பவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.