Jump to content

வன்னியில் இருந்து ஒரு மடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இருந்து ஒரு மடல்

அன்புள்ள அப்பாவுக்கு

உங்கள் பாசத்துக்குரிய

பத்து வயது மகளின்

கண்ணீர் கடிதம் இது…

கனடாவில்

இப்ப என்ன நேரமெண்டு

எனக்குதெரியாதப்பா

ஆனால் எங்களுக்கு இப்ப

கெட்ட நேரந்தானப்பா…

இடிமுழக்கம் கேட்டதுண்டு

இப்படி வெடிமுழக்கம்

கேட்டதில்லையப்பா…

குண்டுச் சத்தம்

காதைப் பிழக்கிறது அப்பா…

சமாதான காலத்தில்

உங்கள் பசுமையான

நினைவுகளைத் தந்தீர்கள் அப்பா

இனி நீங்கள் வரும்போது

நாங்கள்…

எங்கே…

எப்படி..இருப்போமா...

அல்லது…

நெஞ்சு கனக்கிறது அப்பா…

பள்ளிக்கூடமெல்லாம்

சனத்திரளால்

நிரம்பி வழிகிறது.

காலைக்கடன் கழிக்கக்கூட

இடமில்லையப்பா…

நடந்து நடந்து என்

பிஞ்சுக்கால்கள்

மரத்துவிட்டன அப்பா.

அடுத்த அடி எங்கு விழும்

அடுத்து நாங்கள்

எங்கு போவோம்

தெரியாது விழி

பிதுங்குகிறோமப்பா…

அப்பா நீங்கள்

முதல்முறை வந்தபோது

நட்ட தென்னைமரம்

குலை தள்ளியபோது

நாங்களும் நடைப்பிணமாக…

இனி இழப்பதற்கு

எதுவுமில்லை அப்பா….

மரத்தடியின்

தறப்பாளில்தான்

இப்ப எங்கள் வீடப்பா

அம்மாக்கு வந்த மலேரியா

இப்ப பரவாயில்லையப்பா

ஆஸ்பத்திரியிலை

மருந்தில்லை

போகவும் முடியலை

செல்லடி அகோரம்

ஆஸ்பத்திரியும் அகதியாகி

அரும்பொட்டு காணிக்குள்ள…

அப்பா நானிப்ப

பழஞ்சோறு சாப்பிடவும்

பழகிட்டனப்பா…

குப்பைக் கீரையும்

சோறும் சம்பலும்

நல்லாய்தான் இருக்கிறதப்பா

பசி வயித்தை குடையும்போது

ருசி தேவையில்லை தானேயப்பா…

அப்பா ஐ.நா என்டு

ஒரு அமைப்பிருக்காம்

உங்களுக்கு பக்கமெண்டால்

ஒருக்கால்

கதைச்சு பாருங்கோவன்

போன வெள்ளைக்காரனையும்

சிலுவைக் கொடியையும்

வன்னிக்கு அனுப்பச்சொல்லி

முடிஞ்சால் ஒரு

மனுக் குடுங்கோவன் அப்பா…

தவிச்சவாய்க்கு

தண்ணி குடுக்கிறதும்

பசிச்ச வயிறுக்கு

பழஞ்சோறாவது போடுறதும்

புண்ணியந்தானேயப்பா…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்களில் கண்ணீர் முட்டுகிறது . இது ஒரு மடல் இன்னும் எத்தனயோ ? லட்சமாக இருக்கலாம் . வாழ்கையின் மிக பெரிய துயரம் பிரிவு ..........காலம் தான் பதில் சொல்லவேண்டும் அது ஒரு சில வாரமாக ......... நாட்களாக......... இருக்க கூடாதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு சில வாரமாக ......... நாட்களாக......... இருக்க கூடாதா ?

லட்சோப லட்சம் கோடானு கோடி மக்களின் இன்றைய ஆசையும இது தான்.

Link to comment
Share on other sites

வன்னியில் இருந்து ஒரு மடல்

அப்பா ஐ.நா என்டு

ஒரு அமைப்பிருக்காம்

உங்களுக்கு பக்கமெண்டால்

ஒருக்கால்

கதைச்சு பாருங்கோவன்

போன வெள்ளைக்காரனையும்

சிலுவைக் கொடியையும்

வன்னிக்கு அனுப்பச்சொல்லி

முடிஞ்சால் ஒரு

மனுக் குடுங்கோவன் அப்பா…

தவிச்சவாய்க்கு

தண்ணி குடுக்கிறதும்

பசிச்ச வயிறுக்கு

பழஞ்சோறாவது போடுறதும்

புண்ணியந்தானேயப்பா…

ஐ.நாவும் அமைதியாய்த்தான் எங்கள் அவலங்களைப்பார்த்துக் கொண்டிருக்கிறது. கதைக்க யாரும் வரார். அறிக்கையும் ஆக மிஞ்சிப்போனால் அவசரமாய் மகிந்துவைச் சந்திப்பினம். அதைவிட்டா வேறையெதுவும் செய்யாகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி, சாந்தி உங்கள் இருவரின் கருத்துக்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.