Jump to content

எனக்கொரு மகன் பிறப்பான்


Recommended Posts

எனக்கொரு மகன் பிறப்பான்.....

-------------------------

எனக்கொரு மகன் பிறப்பான் -அவன்

என்னைப்போல இருக்கான்..

ஆமிக்கும் சாமிக்கும் பயந்து ஊரை விட்டுப்போகான்

அடுத்தவர் காணியில் கதியால் தள்ளி நடவான்...

பூனைக்கும் நாய்க்கும் சகுனம் வைத்து

தொடங்கும் முயற்சியை விடமாட்டான்

காதல் அறியாவிட்டாலும்

காமம் எண்ணி அலையான்

வீணுக்குப்போகும் பயல்களுக்காக

வேலியை உயர்த்தி அடையான்

சோத்துக்கு அலையும் பயல்கள் போல்

சோம்பேறி மடத்தில் தங்கான்

நாட்டுக்குப் பாரமாக நடு வீட்டில் அலையான்

மதிப்பற்ற பயலாக மதில் மேல் குந்தான்

படத்தைப் பார்த்துப் படிப்பான்

பவுடர்ப் பொடிக்கு மயங்கான்

உலகம் போற்றும் சயன்ஸு தெரியாவிட்டாலும்

உயிர்கள் கொல்லும் சைலன்ஸு அறியான்

வெள்ளை வான்கள் அறியா

வெள்ளை மனது கொள்வான்

எனக்கொரு மகன் பிறப்பான் -அவன்

என்னைப்போல இருக்கான்..

-எல்லாள மஹாராஜா :) :)

Link to comment
Share on other sites

வணக்கம் உண்மையில் கவிதை நல்லாய் இருக்கு

உண்மையில் கவிதை நல்லாயிருந்தால் போதாது உண்மையும் சுட வேண்டும்.... உங்கள் இளைய மனதை எண்ணி நான் சுடாமல் இருக்கின்றேன் .. வாழ்க்கையின் யதார்த்தங்களை மறுதலிக்க்கும் வயது... இளமையின் வலிமை இமய மலையை விட உயர்வு... எக்கு போல் மனம் ஏறு போல் நடை.... :) :)

Link to comment
Share on other sites

எல்லாள மவா ராசனிற்கொரு மகன் பிறப்பான்

அவன் என்னைப்போலவேயிருப்பான்

மாமிக்கும் மச்சாளிற்கும் பயந்து ஓடமாட்டான்

தன்வீட்டு காணிக்கே வேலியடைக்கமாட்டான்

பூனை நாய் மட்டும்ல

ஆடு மாட்டிற்கும் வால்பிடியான்

காதலையும் காமத்தையும் கழிப்றையிலேயே கழிப்பான்

ஏனெனில் காயடிக்கப்பட்வனல்ல

வீணாகவேனும் ஒண்ணுக்கு போகான்

வேலி கறையானை கொல்லான் :) :) :):D

Link to comment
Share on other sites

எல்லாள மவா ராசனிற்கொரு மகன் பிறப்பான்

அவன் என்னைப்போலவேயிருப்பான்

மாமிக்கும் மச்சாளிற்கும் பயந்து ஓடமாட்டான்

தன்வீட்டு காணிக்கே வேலியடைக்கமாட்டான்

பூனை நாய் மட்டும்ல

ஆடு மாட்டிற்கும் வால்பிடியான்

காதலையும் காமத்தையும் கழிப்றையிலேயே கழிப்பான்

ஏனெனில் காயடிக்கப்பட்வனல்ல

சாத்து உண்மையைச் சொல்ல வேணும் எந்த ராணியோட உமக்குத் தொடசல்... 1008 ராணியை வைச்சிருக்கிறதில இதுவொரு கரைச்சல் என்ரை பூனப்படையும் புனுகுப்படையும் துப்பறியிறதில இந்த விசயத்தில மட்டும் தோத்துத் தான் போட்டுது....

இல்லையெண்டால்... 1987..இல என்ரை முதல் அமைச்சர் அடிச்ச(சாத்திரி மாதிரி) கொட்டத்துக்கு 2007 இல எல்லாத்தையும் வெட்டி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி களுவேத்தினதை என்னவெண்டு கொல்ல....

"காதலையும் காமத்தையும் கழிப்றையிலேயே கழிப்பான்

ஏனெனில் காயடிக்கப்பட்வனல்ல

வேலி கறையானை கொல்லான் :) :) :):D

"

சாத்து உப்பிடி ஒரு விசயம் இருக்கிறது உண்ணாணை எனக்குத் தெரியாது.... இது தான் அனுபவத் திரட்டல்.... அல்லது கழித்தல்....வாழ்க சாத்துவின் அனுபவப்பகிர்வுகள்....

"ஒண்ணுக்கு இருக்கக் கத்துக்கணும்... காக்கா கூட்டத்தைப் பாருங்க... அதுக்கு கத்துக் கொடுத்த யாருங்க...."

டாங்ச்ஸு.... சாத்து :D :D

கற்றுக் கொள்ளும் ஆவலுடன் எல்லாள மஹாராஜா...

"

சாத்து உப்பிடி ஒரு விசயம் இருக்கிறது உண்ணாணை எனக்குத் தெரியாது.... இது தான் அனுபவத் திரட்டல்.... அல்லது கழித்தல்....வாழ்க சாத்துவின் அனுபவப்பகிர்வுகள்....

"ஒண்ணுக்கு இருக்கக் கத்துக்கணும்... காக்கா கூட்டத்தைப் பாருங்க... அதுக்கு கத்துக் கொடுத்த யாருங்க...."

டாங்ச்ஸு.... சாத்து :D :D

கற்றுக் கொள்ளும் ஆவலுடன் எல்லாள மஹாராஜா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குப் பாரமாக நடு வீட்டில் அலையான்

மதிப்பற்ற பயலாக மதில் மேல் குந்தான்


படத்தைப் பார்த்துப் படிப்பான்

பவுடர்ப் பொடிக்கு மயங்கான்


உலகம் போற்றும் சயன்ஸு தெரியாவிட்டாலும்

உயிர்கள் கொல்லும் சைலன்ஸு அறியான்

கவிதை நல்லாயிருக்குது

Link to comment
Share on other sites

ஆமிக்கும் சாமிக்கும் பயந்து ஊரை விட்டுப்போகான்

அடுத்தவர் காணியில் கதியால் தள்ளி நடவான்...

வீணுக்குப்போகும் பயல்களுக்காக

வேலியை உயர்த்தி அடையான்

சோத்துக்கு அலையும் பயல்கள் போல்

சோம்பேறி மடத்தில் தங்கான்

நாட்டுக்குப் பாரமாக நடு வீட்டில் அலையான்

மதிப்பற்ற பயலாக மதில் மேல் குந்தான்

-எல்லாள மஹாராஜா :) :)

அடுத்தவர் காணியில் கதியால் வைத்தவர்களெல்லாம் இப்ப காணியுமில்லாமல் வேலியுமில்லாமல் உலகமெல்லாம் அலைகிறார்கள். உங்கள் மகன் பற்றிய உங்கள் கவிதையின் கனவுபோல் ஆக வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் எல்லாளமகாராஜா.

சாத்துவின் அனுபவ வரிகளும் அசத்தலாக இருக்கு. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.