Jump to content

எமது போராட்டத்தின் இன்றைய நிலைகுறித்து: இரு பதிவுகள்…


Recommended Posts

தாயகத்தில் உள்ள நம் உறவுகளினதும் போராளிகளினதும் நிலைகுறித்துச் சிந்திக்காத தமிழர்கள் என்று இன்றெவரும் இருக்கமுடியாது. எமது போராட்டம் வெற்றிகரமாக விரைவில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு எமது உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற அவசரம் இன்று எம் அனைவரிடமும் நிறையவே உண்டு. வெளிப்படையாக எத்தனை பேர் ஒத்துக்கொள்கின்றார்களோ இல்லையோ, போராட்டம் தொடர்பிலான களைப்பும் பல தமிழர்களிடம் இன்று பரந்து பட்டுக் காணப்படுகிறது. ஆனால்;, களைத்தால் கைவிடப்படக்கூடிய ஆடம்பரப் போராட்டம் அல்ல நம்முடையது. எமது போராட்டம் வாழ்வாதாரப் போரட்டம் என்ற அடிப்படையில் எம் உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் நாம் போராடியே தீரவேண்டும். எமது உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் எமது போராட்டம் தொடரப்பட்டே தீர வேண்டும் என்ற தெளிவில், எவ்வாறு எமது உரிமைகள் விரைவில் உறுதி செய்யப்படலாம் என்ற வழிகளை ஆராயும் சிந்தனைகள் தெரிந்தோ தெரியாமலோ எம்மக்களை நேசிக்கும் அனைவரின் மனங்களிலும் இன்று எழவே செய்கின்றன. அவ்வகையில், எனக்குத் தோன்றிய இரு வேறு எண்ணங்களை யாழ்களத்தோடு பகிர்ந்து உங்கள் கருத்துக்களை அறிவதற்காகக் கீழே தனித் தனியாகப் பதிவிடுகின்றேன்.

பதிவு 1

------------

ஈழப்போராட்டத்தைப் பொறுத்தவரை, இன்றெமது மக்கள் மத்தியில் உள்ள மிகப்பெரும்பான்மைக் கருத்து இழந்த நிலங்கள் விரைவில் மீட்கப்படவேண்டும் என்பதாகவே அமைகிறது. போராட்டம் அவசியம் என்பதற்கும் நிலமீட்பு அவசரம் என்பதற்குமிடையேயான வித்தியாசம் பற்றி அல்லது அவ்வாறொரு வித்தியாசம் உள்ளது என்பது பற்றி அனேகம் பேர் பேசுவதாகத் தெரியவில்லை.

மேலே செல்லுமுன்னர், சுருக்கமாகச் சில தரவுகளை மனதிருத்தி நகர்வோம்.

ஈழப்போர் ஒன்று பனிப்போரின் உச்சக்கட்டத்தில் நிகழ்ந்து முடிந்தது, ஈழப்போர் ஒன்றின் முடிவில் தமிழர் போராட்டம் பெருமளவில் கரந்தடிப் போராட்டமாகவே இருந்தது. இந்தியப்படைகளுடனான போராட்டம் பனிப்போர் சேடமிழுத்த காலத்தில் நிகழ்ந்தது. இந்தியப்படைகளுடனான போராட்டத்தின் பின்னர் தான் புலிகளின் சீருடையே அமுலிற்கு வந்தது என்கையில் இதர மரபு வழிகள் பற்றிப் பேசத்தேவையில்லை. ஈழப்போர் இரண்டு பனிப்போரிற்கு அப்பாலான உலக மாற்றத்தின் ஆரம்பத்தில் நிகழ்ந்தது. உலகம் தன்னை புதிதாக எவ்வாறு ஏக வல்லரசின் கீழ் வடிவமைப்பதென்று தெளிவின்றி இருந்த காலம் அது. வட அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சிநிலை படிப்படியாகச் சரிபெற ஏறத்தாள 1987 பங்குச் சந்தைச் சரிவு முதல் தொண்ணூறுகளின் முதற்பகுதிகள் வரை சென்றது. மூன்றாம் ஈழப்போர் ஏக வல்லரசின் கீழ், வடஅமெரிக்காவின் பொருளாதாச் செழிப்பான காலத்தில், உலகமயமாக்கல் சிலிர்த்தெழு முன்னர் நடைபெற்றது. மூன்றாம் ஈழப்போர் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, உலகில் யுஎஸ்எஸ்கோல் மீதான தாக்குதல் தொட்டு சீனாவுடனான அமெரிக்க முறுகல் வழியாக அமெரிக்காமீதான இஸ்லாமியத் தாக்குதல் வரை நிகழ்ந்து முடிந்தன (அமெரிக்காவில் நிகழ்ந்த தாக்குதலிற்குச் சொற்ப நாட்கள் முன்னால் சீனாவில் தரையிறங்க நேர்ந்த அமெரிக்க விமானம் தொடர்பில் நிகழ்ந்த பரப்பான செய்திகள் பலரிற்கு ஞாபகம் இருக்கலாம், இன்றைக்கு உள்ள நிலவரத்தை அச்செய்திகளின் தன்மையோடு ஒப்பிடின் பல தெளிவுகள் பிறக்கும்). அமெரிக்காவில் நிகழ்ந்த தாக்குதல்களால் தான் மாற்றம் தேவைப்பட்டதா அல்லது தாக்குதல் சந்தர்ப்பவசமாகப் பாவிக்கப்பட்டனவா அல்லது இன்னமும் ஒருபடி மேலே சென்று தாக்குதல்கள் நடைபெறட்டும் என்று அமெரிக்கா தான் விட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்ததா என்பன போன்ற விவாதங்களிற்கு அப்பால் உலகம் புதிதாகத் தன்னை வடிவமைக்க முடிவெடுத்தது...

உலகம் தனது புதுப் பாதையையும் அதன்; வேகத்தையும் தீர்மானித்ததன் பின்னர் ஈழப்போர் நான்கு ஆரம்பிக்கப்பட்டது. இன்று ஆனையிறவின் வீழ்ச்சி கடந்து ஈழப்போர் செல்கின்றது.

ஓயாத அலைகள் மூன்றிற்கு முன்னரும் “புலிகள் இனி என்ன கடலுக்கையா குதிக்கப்போயினம்” என்ற கேலி எழுந்தது தான். இப்போதும் எழுகின்றது தான். ஆனால் அன்றைக்கிருந்த சவால்களிற்கும் இன்றைக்குள்ள சவால்களிற்குமிடையே பாரிய வித்தியாசம் உள்ள நிலையில், கேலிக்குப் பதிலளிப்பதற்கு முன்னர் சற்றுச் சிந்திப்பது அவசியம்.

உலகில் எமக்கு நேரடியாக வெளிப்படையாகக் காசோலை அனுப்புவதற்கு எந்த நாடுமில்லை என்பது தெளிவானதன் பின்னர் எமது போராட்டத்தைக் கொண்டு செல்வதற்கான பணத்தைத் திரட்டுவதற்கு எமக்கிருக்கும் வழிகளை ஏறத்தாள மூன்று பாரிய பிரிவுகளிற்குள் அடக்கலாம். ஒன்று தமிழ் மக்களின் (புலம் பெயர்ந்தோர் உட்பட்ட, தாயகத்தில் வரி உள்ளடங்கலான அனைத்தும்) பங்களிப்பு, இரண்டு கறுப்புச்சந்தை மற்றும் குற்றமாகக் கருதப்படும் இதர பரிமாற்றங்கள். மூன்று பினாமிகளின் தொழிற்பாடு. (இவ்வழிகள் அனைத்தும் பாவிக்கப்படுவதாக நான் கூறவில்லை. இவைதவிர பணம் புரட்டக் கூடிய பிற வழிகளை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. அவ்வளவு தான்).

மேற்படி வழிகள் அனைத்தையும் எமது போராட்டம் பயன்படுத்துகின்றது என்று ஒரு பேச்சிற்கு எடுத்து கொண்டு மேற்படி மூன்று பிரிவுகளையும் ஒவ்வொன்றாய்ப் பார்த்தால்:

புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை, பங்களிப்பு என்று இருந்தால் அது அவர்களது வருமானத்தில் எத்தனை விகிதமானதாக இருக்கும் என்பதை வாசகர்;கள் ஊகிக்கலாம். மேலும், புலம் பெயர்ந்தவர்கள் அனைவரும் நூறு வீதம் போராட்டத்திற்காக மட்டுமே உழைத்து அனைத்தையும் போராட்டத்திற்கே கொடுத்தாலும் கூட, புலம்பெயர்ந்த எமது மொத்த மக்கள் தொகை ஒரு மில்லியனிற்கும் குறைவானது. ஆறு பில்லியன் உலக சனத்தொகையில் ஒரு மில்லியன் பற்றி நாம் அதிகம் கற்பனை செய்யத் தேவையில்லை. தாயக மக்கள் நிலவரமும் நிதி தொடர்பில் அத்தனை சாதகமாய் இல்லை.

அடுத்தது கறுப்புச் சந்தை மற்றும் குற்றமாகக் கருதப்படும் இதர வழிவகைகளும் கையாளப் படுகின்றன என்று பேச்சிற்கு வைத்துக் கொண்டால். குற்றமாகக் கருதப்படும் சந்தையிலும் கூட போட்டிகள் இல்லாமலில்லை, உண்மையில் அங்குதான் போட்டிகள் அதிகமாய் இருக்கும் என்பது ஊகிக்கக்கூடியது. அதுவும் இரண்டாயிரத்து ஒன்றின் பின்னர் இப்போட்டிகள் தடைகள் இன்னமும் அதிகரித்துள்ளன. கறுப்புச் சந்தையிலும் பலம்பொருந்தியவர்களே வெல்வர். கப்பற்போக்குவரத்து, விமானசேவை, நாடுகளிற்கிடையேயான எல்லைகள், உலக போலிஸ் காரர்கள் என்று பல விடயங்களை அடிப்படையாக் கொண்ட கறுப்புச் சந்தையிலும் போட்டிகளினதும் அதிகாரத்தினதும் உயர்வு தாழ்வுகள் பெரும்பங்கு வகிக்கும் (கருப்புச் சந்தை என்பதால் அங்கு உலக நாடுகள் போட்டியிடுவதில்லை என நாம்; நினைத்து விடமுடியாது). கருப்புச்சந்தை ஏற்கனவே பிரச்சினைகள் நிறைந்தது என்பதால் அங்கு கூட்டணிகள் அமைத்துக் கொள்ளும் பெரும் புள்ளிகளும் எம்மைப் போன்ற தடைவிதிக்கப்பட்ட அமைப்புக்களோடு கூட்டணி அமைத்து இன்னும் பிரச்சினையைக் கூட்டாதிருக்கவே விரும்புவர். எமது இயக்கம் மீதான சர்வதேச தடைகளிற்கு இப்படியும் ஒரு பரிமாணம் கற்பனை செய்யப்படக்கூடியது (றிஸக் அசெஸ் பண்ணாத வியாபாரம் இல்லை). புதிய உலக ஒழுங்கில் எமது போராட்டத்திற்குக் கருப்புச் சந்தையால் வரக்கூடிய பங்கு என்று இருந்தால் அது கூடுவதற்குப் பதில் குறைந்தே இருப்பது தவிர்க்கமுடியாதது.

பினாமிகள் என்ற செயற்பாடும் இருப்பதாய் நாம் கருதின், சர்வதேச சந்தையை எடுத்துக் கொண்டால் இங்கு சிறு வியாபாரங்கள் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் தான் எப்போதும் செயற்பட்டு வந்திருக்கின்றன இனியும் செயற்படும். பெரு வியாபார முதலைகளாய் ஆதல் என்பதற்குப் பாரிய முதலீடுகள் மட்டும் அன்றி அதற்கான சிந்தனையும் அவசியம். எமது சமூகம் இன்று வரை நூறுமில்லியன் டொலர்கள் ஆண்டு வருமானம் பெறும் நிறுவனங்களின் மட்டத்தில் கூட பெரிதாய்ச் செயற்படத்தொடங்கவில்லை. அரிதாய் ஒரு சிலரே நூறு மில்லியன் மட்டத்தில் இன்னமும் உள்ளபோது, நூறு மில்லியன் மட்டத்தையே பினாமிகள் பரந்தளவில் அடைவதற்கு இன்னமும் நாட்பிடிக்கும்.

இதுவெல்லாவற்றிற்கும் மேலால் மேலுள்ள மூன்று பிரிவுகளும் சேர்ந்து (ஒப்பீட்டு ரீதியில் குறைந்து விட்டாலும்) வளங்களைப் புரட்டுகின்றன என்று கொள்ளின், களத்திற்கும் களத்திற்குத் தொடர்பான இடங்களிற்குமான போக்குவரத்து என்பதிலும் கூடப் புதிய உலக ஒழுங்கில் உள்ள போட்டிகளால் சிக்கல்கள் நாளிற்கு நாள் அதிகரிக்கும் என்பது நாம் ஊகிக்கக் கூடியது.

ஆனால் சிங்களத்தைப் பொறுத்தவரை, உலகம் சிங்களத்தின் பக்கம் தாம் சேர்வது தான் தமது நலன்களிற்கும் சாதகம் என்று முடிவெடுத்த நிலையே உள்ளது. புலம் பெயர்ந்த சிங்களவர்கள் போரினால் ஆதாயம் தேடும் நிலை தான் அவர்களிற்கு உள்ளதே தவிர அவர்களின் பங்களிப்பு அங்கு அரசிற்குத் தேவைப்படவில்லை. இப்போதெல்லாம் சிங்களத்தின் போர் நடவடிக்கைகளில் தமது பங்கு பற்றி உலகம் ஒப்புக்குத் தன்னும் மறைக்க முனையாத நிலையே படிப்படியாகத் தோன்றிவருகின்றது.

தலைவரின் இராணுத் திட்டமிடல்த் திறனாலும், போராளிகளின் வர்ணிக்கமுடியா அர்ப்பணிப்புக்களாலும், மக்களின் நிபந்தனையற்ற ஆதரவினாலும் காலத்திற்குக் காலம் அதிசயங்கள் ஈழமண்ணில் அனைத்துச் சவால்களையும் சமாளித்து நிகழ்த்தப்பட்டவண்ணம் தான் உள்ளன என்றபோதும், போராட்டத்தின் தார்;பரியங்கள் பற்றி மக்கள் எப்போதும் தெளிவான புரிதல்களை வைத்திருப்பது அவசியம் (அப்போது தான் எமது பங்களிப்பு வினயமானதாக இடம்பெறும்).

இறுதி யுத்தத்திற்கான முழுப்பங்களிப்பு, ஒரு வீட்டிற்கு ஒரு போராளி என்று புதிய எல்லைகளைப் பரீட்சித்தபின்னரே இன்று நாம் ஒரு மாபெரும் சிங்கள இராணுவ முனைப்பை எதிர்கொண்டு நிற்கின்றோம். இழந்த நிலங்களை நிட்சயம் மீட்க முடியும் என்றபோதும் “மீழப் பிடி” என்று கோசம் எழுப்புமுன்னர் நாம் சற்றேனும் சிந்திக் வேண்டும். புலம்பெயர் மண்ணில் தொடர்ந்து வேலை இழக்கும் ஒருவர் அடுத்த வேலைக்கு விண்ணபிக்க முன்னர் தனது தகமைகள், திறன்கள், போட்டிகள் மற்றும் வேலைவாய்ப்பு நிலவர மாற்றங்கள் போக்குகள் பற்றிச் சிந்திப்பதற்குச் சொற்ப நாட்களையேனும் எடுத்துக் கொள்ளத் தவறுவதில்லை. ஆனால் போராட்டத்தைப் பொறுத்த வரை நிலத்தை இழந்தால் அதை மீளப் பிடி என்ற கோசமன்றி வேறெதுவும் ஆதரவாளர் மத்தியில் இப்போது கேட்பதாய் இல்லை.

என்னென்ன காரணங்களிற்காகத் தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் சந்திக்கப்படனவோ அக்காரணங்களில் எதுவும் மறைந்து விடவில்லை மறையப் போவதும் இல்லை. மேலும் புதிய சவால்கள் உருவாவது தான் எதிர்பார்;க்கக் கூடியது. இந்நிலையில் எமது போராட்டத்தின் வடிவம் ஆதரவாளர்களால் சிந்தனைக்குட்படுத்தப்படவேண

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டீ பொனொ வின் "Lateral thinking" என்று கேள்விப் பட்டிருக்கிறேன், என் மர மண்டைக்கு ஒரு நாளும் சரி வந்ததில்லை. இப்போது புரிகிறது. நன்றி இன்னுமொருவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வித்தியாசமான கருத்துக்கள். நேரங்கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள்.

உங்களை முன்னுதாரணமாக கொண்டு புலம்பெயர் மக்கள் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும். அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டும்.

சில கேள்விகள்:

உலகபொருளாதார மந்த நிலையால் ஆயுத விலைகளும் சரிந்து விழும் தானே ?

Link to comment
Share on other sites

நல்ல கட்டுரை..... போராட்டம் தெற்கு நோக்கி நகர்வதற்கான சந்தர்ப்பங்கள் மிக அரிதாயினும், ஒரு புதிய சிந்தனையாக இதனைக் கொள்ள முடியும். அமெரிக்கா ஆப்கனிற்கு போவதற்கும் புலிகள் தெற்கிற்கு போவதற்கும் நிறைய வித்தியாசம்., தள வேறுபாடு என்பன உண்டு.

நல்ல வித்தியாசமான கருத்துக்கள். நேரங்கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள்.

உங்களை முன்னுதாரணமாக கொண்டு புலம்பெயர் மக்கள் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும். அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டும்.

சில கேள்விகள்:

உலகபொருளாதார மந்த நிலையால் ஆயுத விலைகளும் சரிந்து விழும் தானே ?

பொருளாதார சரிவின் போது தான் ஆயுதங்களின் தேவை இன்னும் அதிகரிக்கும். வறுமையும், வளப் பங்கீட்டில் இடம் பெறும் சமமின்மையும் அரசுகளின் இருப்புக்கு சவாலாக மாறுகையில், அவ் அரசுகளால் இனக் குழுமங்களிடையே பேதங்கள் ஊக்குவிக்கப் பட்டு உள் நாட்டு கிளர்ச்சி வெடிக்கும். அல்லது அரசுக்கு எதிரான அமைப்புகள் எழுச்சி பெற்று ஆயுதக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆபிரிக்காவில் சூடான், எத்தியோப்பியா, உகண்டா போன்ற நாடுகள் இவற்றிற்கு நல்ல உதாரணம். அங்கு உணவுக்கு வழியில்லை எனும் நிலையிலும் கிளர்ச்சிக்கான ஆயுதங்கள் பெரும் செலவில் வாங்கப் பட்டு, ஒவ்வொரு பிரதேசத்திலும் குட்டி சர்வாதிகாரிகள் தோன்றினர். ஆயுதங்களின் தேவை அதிகரிக்கும் போது, அதனை உற்பத்தி செய்யும் நாடுகளின் பொருளாதாரமும் சரிவடையும் போது ஆயுதங்களின் விலை மேலும் அதிகரிக்கும். அத்துடன் உலக வல்லரசுகள், தம்மை பொருளாதார அழிவிலிருந்து மீட்க ஆயுதம் நிறைய விற்க கூடியவாறு பலகீனமான தேசங்களில் பிரச்சனைகளையும் கலவரங்களையும் தோற்றுவிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு 2 ஒரு நல்ல விடயம் தான் ,,பதிவு 1 சீ சீ சீ அந்த பழம் புளிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.