Jump to content

சொந்தக்கதை: வாழ்க்கையில அவலம் வரும்... அவலம் வாழ்க்கை ஆனால்... ?


Recommended Posts

விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி நெடுக்ஸ். கேரளா சிகிச்சை பற்றி நீங்கள் சொன்ன அதே அபிப்பிராயத்தையே நானும் கொண்டிருந்தேன். ஆனாலும்.. அவள் பெற்றோரின் நம்பிக்கை, முக்கியமாக கடவுள் நம்பிக்கைக்கு குறுக்கே ஏன் நிற்பான் என்று நான் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் கூறுவதுபோல் அங்கு சென்று ஏதாவது செய்வது என்றால் நிச்சயம் இங்குள்ள வைத்தியர்களுக்கும் அறிவிக்கவேண்டும். பிறகு இந்தியாவில் ஒருமாதம் நின்று சிகிச்சை செய்துவிட்டு இங்கு வந்ததும் ஏதாவது சிக்கல் வந்தால் அது வேறு சோலியாய் போயிடும். ஏராளனின் மின்னஞ்சல் என்னிடம் உள்ளது என்று நினைக்கின்றேன், நீங்கள் இங்கு பதிந்த தகவலை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுகின்றேன், நன்றி நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply

மிக்க நன்றி குட்டி, மல்லிகைவாசம்.

....

இதேபிரச்சனை எனது ஓர் மருமகளுக்கும் உள்ளது. அவள் இங்கு கனடாவில் பிறந்தபின்னரே இந்தப்பிரச்சனையை கண்டுபிடித்தார்கள் என்று நினைக்கின்றேன். ஓர் சிறுநீரகத்தில் பிரச்சனை, வேலை செய்யவில்லை என்றார்கள். மற்றது.. தசைகள் பலவீனம் அற்றதாக காணப்பட்டன. அத்துடன் சமநிலைப்படுத்தி உடலை வைத்து இருப்பது அவளுக்கு சற்று கடினமாக இருந்தது.

அவளை பின்னர் கடந்த பல வருடங்களாக பிரத்தியேக, சிறப்பு குழந்தைகள் இல்லத்தில்விட்டு இப்போது அவளுக்கு பன்னிரண்டு வயசு என்று நினைக்கின்றேன் பல முன்னேற்றங்கள் தெரிகின்றன. முன்புபோல் விதம்விதமான மருந்து மாத்திரைகள் எல்லாம் பாவிப்பது இல்லை. இப்போது சாதாரண பிள்ளைகள் போல் அவள் செயற்பாடுகளில் நிறைய முன்னேற்றம் தெரிகின்றது. ஆனால் பேசுவதற்கு மட்டும் அவளால் இயலாது. நானும் அவளைக்காணும் சமயங்களில் அவளை பிடித்து இழுத்து வைத்து அம்மா அப்பா என்று சொல்லிக்குடுக்கிறது. கூட்டிக்கொண்டு நடக்கும்போதும் ஏதாவது சொல்லிக்கொடுத்து முயற்சி செய்வது. அவள் செவிகளில் ஏதும் பிரச்சனை இல்லை. நன்றாக உள்ளன. ஆனால் அவளால் பேசமுடியாது.

அவள் பெற்றோர் இந்தியாவிற்கு சென்று தொடர்ந்து சிகிச்சை செய்து பார்க்கலாம் என்று யோசித்து உள்ளார்கள். கேரளாவில் ஏதோ மூலிகை வைத்தியம் மூலம் வியாதிகளை குணமாக்கக்கூடிய ஓர் பிரபல வைத்தியசாலை உள்ளதாம். அங்கு கூட்டிக்கொண்டுபோனால் அவளுக்கு இன்னமும் முன்னேற்றம் வரும் என்று திடமான நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். நீங்கள் இப்படி மூலிகை மருத்துவம் பற்றி கேள்விப்பட்டு யாராவது உடல் உபாதைகள் குணமாகி ஏதும் கேள்விப்பட்டு இருக்கிறீங்களோ? அது ஏதோ மூங்கில் சோலையினுள் வைத்திசாலை உள்ளதாம். இங்கிருந்து போன, ஆங்கில வைத்தியத்தினால் கைவிடப்பட்ட ஒருவர் தனக்கு பூரணசுகம் கிடைத்தமையால் இவர்களையும் அவளை அங்கு கூட்டிக்கொண்டுபோய் காட்டுமாறு சொல்லியுள்ளார்.

நெடுக்காலபோவன் மிக விரிவான விளக்கம் தந்துள்ளார். கரும்பு இந்த speech (language) theraphy இணைப்பைப் பாருங்கள் இதில் உள்ள கருத்துக்கள் ஏதும் ஒரு விதத்தில் பயன் பட்டால் சந்தோசம்.

http://kidshealth.org/parent/system/ill/speech_therapy.html#

http://www.growingkids.co.uk/SpeechTherapy.html

கடவுள் உங்கள் மருமகளை மற்றப் பிள்ளைகள் போல் பேச அருள் புரிவார், நம்பிக்கையாக செயல்படுங்கள்! <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதேமாதிரி என் நண்பனின் பிள்ளைக்கு...அழுதாலோ சிரித்தாலோ கதைத்தாலோ சத்தம் வெளியே வராது.

இப்போது அந்த பிள்ளைக்கு ஐந்து வயதிருக்குமென்று நினைக்கின்றேன்.

குரல்வளையில் பிரச்சனை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்களாம்.

ஒருசில வருத்தங்கள் வயது ஏறஏற மாறலாம் என வைத்தியர்கள் தெரிவித்தாலும் பெற்றோரின் கவலைகளை யாராலும் தீர்க்க முடியாது.

ஆனால் உண்மையான மூலிகை வைத்தியத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு.

Link to comment
Share on other sites

மிக்கநன்றி குட்டி. குமாரசாமி அண்ணா, இவள் நன்றாய் சத்தம் போடுவாள், உரத்து கத்துவாள். புளுகம் வந்தால் ஆ ஊ என்று சத்தம் போட்டு புரட்டி எடுப்பாள். பேச முடியாமல் காணப்படுவதற்கு நெடுக்ஸ் சொன்னது போன்ற காரணத்தையே நானும் நினைக்கின்றேன். தசைகள் பலவீனம் அடைந்தமையால் மற்றும் மூளையிலும் செயற்பாட்டு பகுதிகளில் எங்காவது பலவீனம் காணப்படலாம். இதனால் பேசமுடியாமல் உள்ளதோ தெரியாது. மூலிகை வைத்தியத்தில் சிலருக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. ஆனால் இந்தக்காலத்தில் எல்லாம் விளம்பர மயப்படுத்தப்பட்டுள்ளதால்.. மூலிகை வைத்தியமாக இருப்பினும் காசை குறிவைத்து வைத்தியம் செய்யப்படுவதால் கொஞ்சம் யோசிக்கவேண்டி உள்ளது.

Link to comment
Share on other sites

இரண்டு விடயங்கள்.

முதலாவது கேரள ஆயுள்வேத வைத்தியம்.இது யாருக்கு எந்த அளவில் உதவும் என் எனக்கு தெரியாது.எனது அக்காவும் அத்தானும் கோட்டைக்கல் என்ற இடத்தில் போய் 3 மாதம் நிண்டுவிட்டு வந்தவர்கள்.அக்காவிற்கு மூட்டு நோ,வெரிகோஸ் வெயின் போன்ற பல பிரச்சனகள் இருந்தன.வந்து சொன்னார்கள் நீங்கள் எல்லோரும் கடைசி 5 வருடத்திற்கு ஒருமுறையாவது போய் வாருங்கள் சிகிச்சை முடிந்து வெளிவரும் போது 10 வயது குறைந்த உணர்வு உண்டாகும் என்று.அங்கு அவர்களது சாப்பாடுதான் சாப்பிடவேண்டும் ஆயுர்வேத முறைப்படி எண்ணெய் மசாச்,அதைவிட அவர்களது மூலிகை மருந்துகள் பாவிக்க வேண்டும்.பின்னர் எனது பெற்றோரும் அடுத்த அக்காவும் போட்டுவந்தார்கள்.அந்த அக்காவிற்கு எக்ஸிமா போன்று உடம்பு முழுக்க ஒரு சொறித்தன்மையும்,கறுப்பு அடையாளங்களும்(சைரஸ்) கனடாவில் போகாத ஸ்பெசலிஸ்டுக்கள் இல்லை.கோட்டைகல் போய் வந்து இப்போ எதுவித அடையாளங்களும்,சொறியும் இல்லை.அங்கு முழுக்க வெளிநாட்டவர்களே இருப்பதாகவும் நல்ல சுற்றாடலில் மிக வசதிவாய்ந்த ஆயுர்வேத சிகிச்சை என்று சொன்னார்கள்.கூகிளில் போய் கோட்டைகல் ஆயுர்வேதம் என்று அடித்தால் முழு விபரமும் வரும்.

அடுத்து ஓட்டிசம் பற்றியது.இங்கு எமது பிள்ளைகளுக்கு பலருக்கு இந்த பிரச்சனை இருக்கின்றது.பிள்ளை தோற்றத்தில் சாதாரணமாகவே இருப்பார்கள் அவர்களின் மூளை கொஞ்சம் பின் தங்கியதாகவே இருக்கும்.அந்த பிரச்சனையை பெற்றோர் உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ளும் பாக்குவம் வந்து பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.பிரச்சனை தெரியாமல் பிள்ளைகளை போட்டு திட்டித்தீர்ப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை..ஓட்டிசம் வைத்தியத்தால் குணமடைய வைக்க முடியாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்கள் மருமகளுக்கு விரைவில் குணமடையும் கவலைப்பட வேண்டாம்...கேரளா வைத்தியம் பற்றி நானும் கேள்விப்பட்டு உள்ளேன் அது உண்மை எனத் தான் போய் வந்தவர்கள் சொல்கிறார்கள் ஆனால் அங்கேயே பல காலம் தங்கி இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இந்த திரியை நான் முன்பு பார்க்கவில்லை. குட்டி கூறியது மாதிரி எல்லோருக்கும் ஒரு குறையுண்டு. நம்பிக்கையுடன் அதிலிருந்து மீண்டு வருவதே வாழ்க்கை. கரும்பு உங்கள் தன்னம்பிக்கை சந்தோசமளிக்கிறது. உங்கள் மருமகள் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அர்ஜுன் கூறிய 'ஒட்டிசம்' பல குழந்தைகளுக்கு உண்டு. ஆனால் இந்த குறைபாடு ஒருத்தருகொருத்தர் வேறுபடும். பிறப்பிலேயே இப்படி வருகிறது. சில குழந்தைகளுக்கு MMR (Measles, mumps and rubella vaccination) தடுப்பூசி போடுவதாலும் வருவதாக ஒரு வதந்தி உண்டு. பிரித்தானியாவில் இதற்காக ஒரு வழக்கு நடந்தது. எனக்கு நெருங்கிய ஒரு சிறுவனுக்கு இது உண்டு. அவனுக்கு 11 வயது. சில வேலை நாங்கள் கூறுவதையே திரும்பக் கூறுவான் (Ecolalia ). இந்தப் பழக்கம் நன்றாக குறைந்து விட்டது. ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக அவதானிக்க மாட்டான். ஆனால் இவனிடம் ஒரு தனித் திறமை உண்டு. வருடத்தின் திகதியைச் சொன்னால் உடனடியாக அதன் கிழமையை கூறுவான். அத்துடன் Raw Maths (பெருக்குதல் பிரித்தல்) நன்றாக வரும். பெரியவர்களை விட விரைவாகச் செய்வான்.

இதை பற்றி யாருக்கும் தெரியுமா?

Link to comment
Share on other sites

நன்றி அர்ஜுன், ரதி, தப்பிலி. அர்ஜுன் நீங்கள் சொன்னமாதிரி கூகிழில் தேடிப்பார்த்தேன். இதில் முதலாவதாக உள்ளதா நீங்கள் கூறும் வைத்தியசாலை? அவர்கள் இப்படி சொல்லி என்னிடம் விபரம் பெற்று தருமாறு சொன்னதும் நான் முன்பு ஒருமுறை தேடல் செய்தபோது வேறொரு வைத்தியசாலையின் பக்கத்திற்கு சென்று பார்த்தேன். அதை இங்கு காணவில்லை.

http://www.google.ca/#hl=en&biw=1366&bih=642&&sa=X&ei=mS6zTPrEOsuOnwemnfCoBg&ved=0CBgQvwUoAQ&q=kottakkal&spell=1&fp=2c5dd9c2b2d3395f

http://www.aryavaidyasala.com/%28S%283b44h555o4v5yi45yaqcyq55%29%29/index.aspx

http://www.kottakkalayurveda.com/

http://www.kottakkal.net/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை நான் முன்பு பார்க்கவில்லை. குட்டி கூறியது மாதிரி எல்லோருக்கும் ஒரு குறையுண்டு. நம்பிக்கையுடன் அதிலிருந்து மீண்டு வருவதே வாழ்க்கை. கரும்பு உங்கள் தன்னம்பிக்கை சந்தோசமளிக்கிறது. உங்கள் மருமகள் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அர்ஜுன் கூறிய 'ஒட்டிசம்' பல குழந்தைகளுக்கு உண்டு. ஆனால் இந்த குறைபாடு ஒருத்தருகொருத்தர் வேறுபடும். பிறப்பிலேயே இப்படி வருகிறது. சில குழந்தைகளுக்கு MMR (Measles, mumps and rubella vaccination) தடுப்பூசி போடுவதாலும் வருவதாக ஒரு வதந்தி உண்டு. பிரித்தானியாவில் இதற்காக ஒரு வழக்கு நடந்தது. எனக்கு நெருங்கிய ஒரு சிறுவனுக்கு இது உண்டு. அவனுக்கு 11 வயது. சில வேலை நாங்கள் கூறுவதையே திரும்பக் கூறுவான் (Ecolalia ). இந்தப் பழக்கம் நன்றாக குறைந்து விட்டது. ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக அவதானிக்க மாட்டான். ஆனால் இவனிடம் ஒரு தனித் திறமை உண்டு. வருடத்தின் திகதியைச் சொன்னால் உடனடியாக அதன் கிழமையை கூறுவான். அத்துடன் Raw Maths (பெருக்குதல் பிரித்தல்) நன்றாக வரும். பெரியவர்களை விட விரைவாகச் செய்வான்.

இதை பற்றி யாருக்கும் தெரியுமா?

ஒட்டிசம் என்பது பல் வேறு நடத்தைகளை வெளிக்காட்டக் கூடிய ஒரு நரம்பியல் குறைபாடு. சில ஒட்டிசம் உள்ள நபர்கள் அபரிமிதமான திறமைகள் ஒன்றை அல்லது பலவற்றைக் கொண்டிருப்பது இந்தக் குறைபாடு கண்டுபிடிக்கப் பட்ட காலத்திலிருந்தே ஆவணப் படுத்தப் பட்டிருக்கு. அஸ்பேர்கர் சின்ட்றோம் (Asperger syndrome) என்பது இப்படி அபரிமித திறமை வெளிப்படும் ஒட்டிச வகை. அண்மையில் அஸ்பேர்கர் சின்ட்றோம் உடைய ஒரு பிரிட்டிஷ் இளைஞன் அமெரிக்காவின் கணணி வலையமைப்புகளைச் சீர்குலைத்த ஒரு அதி புத்திசாலியாக அடையாளம் காணப்பட்ட செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. என்ன தான் தனித் திறமை இருந்தாலும் சமூகத்தில் மற்றவர்களுடன் உறவாட இயலாமை காரணமாக இந்த வகை ஒட்டிசம் கொண்டவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ இயலாமல் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்பு விடா முயற்சிக்கும் அனுபவ பகிர்விர்ற்கும் நன்றி.

ஏனையவர்களும் தங்களுக்கு தெரிந்த வகையில் தங்கள் சூழலில் உள்ள வசதிகளை பயன்படுத்த வேண்டும். நான் யாழில் கார் வாங்கும் போது எனது நண்பன் சொன்னது, இனிமேல் இந்த காரின் நன்மை தீமை எல்லாரையும் விட எனக்குத்தான் கூட தெரிய வேண்டும் என்று. பலசந்தற்பங்களில் மெக்கனிகிடம் கொண்டு போகும் போது நான்தான் சொல்லுவேன்..இது அப்படி, அது அப்படி..அதில கைவைக்காதிங்கோ, இதை ஒருக்கா செய்துதாங்கோ...அதுபோல் எமது உடல் பற்றின தகவல்களும், பிரச்சனைகளும் எல்லோரையும் விட எங்களுக்கு கூடுதலாக தெரிய வேண்டும். நீங்கள் அதற்க்கு உதாரணமாக உள்ளீர்கள். எல்லாம் வைத்தியர் பாப்பார், அவருடைய குளிசை, ஆபரேஷன் பார்க்கும் என்றால் சரிவர போவதில்லை.

மற்றது தனிப்பட்ட ரீதியில் கோரள, மற்றைய மருத்துவ முறைகளில் நம்பிக்கை இல்லை. பெரும்பாலான சந்தர்பங்களில் சிலவழித்த காசுக்கு மனத்திருபிதியுடன் வருவார்கள்/ அல்லது திருப்தி மாதிரி காட்டிக்கொள்வார்கள். எனக்கு தெரிய ஒருவர் மூட்டு வருத்ததிர்ற்கு போனவர்.."நல்ல ட்ரீட்மென்ட் என்று சொன்னார்" உண்மையில் அதற்கு பெரும்தொகை பணத்தை சிலவளித்து..ஓய்வு எடுத்ததுதான் செய்த வேலை. அந்த ஓய்வை வீட்டில் படுத்திருந்தாலும் அந்த வருத்தம் கொஞ்சம் குறையும். இப்ப என்வென்றால், எடுத்த ஓய்விற்கு மேலாக வேலை செய்து போய் வந்த சிலவு கட்ட வேண்டும்.

மற்றவற்றை பற்றி பிறகு எழுதுகிறேன்..

ஆஸ்திரேலியாவில் தங்கம் வென்ற தமிழனையும் வாழ்த்துகிறேன்..அந்த திரி காணவில்லை..நான் லீவில் போட்டுவர

Link to comment
Share on other sites

ஒட்டிசம் என்பது பல் வேறு நடத்தைகளை வெளிக்காட்டக் கூடிய ஒரு நரம்பியல் குறைபாடு. சில ஒட்டிசம் உள்ள நபர்கள் அபரிமிதமான திறமைகள் ஒன்றை அல்லது பலவற்றைக் கொண்டிருப்பது இந்தக் குறைபாடு கண்டுபிடிக்கப் பட்ட காலத்திலிருந்தே ஆவணப் படுத்தப் பட்டிருக்கு. அஸ்பேர்கர் சின்ட்றோம் (Asperger syndrome) என்பது இப்படி அபரிமித திறமை வெளிப்படும் ஒட்டிச வகை. அண்மையில் அஸ்பேர்கர் சின்ட்றோம் உடைய ஒரு பிரிட்டிஷ் இளைஞன் அமெரிக்காவின் கணணி வலையமைப்புகளைச் சீர்குலைத்த ஒரு அதி புத்திசாலியாக அடையாளம் காணப்பட்ட செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. என்ன தான் தனித் திறமை இருந்தாலும் சமூகத்தில் மற்றவர்களுடன் உறவாட இயலாமை காரணமாக இந்த வகை ஒட்டிசம் கொண்டவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ இயலாமல் போகிறது.

நன்றி ஜஸ்டின் உங்கள் தகவலுக்கு.

நானும் இந்த இளைஞனைப் பற்றி வாசித்தேன். இதை கவனத்தில் எடுக்கிறேன்.

Link to comment
Share on other sites

நன்றி எரிமலை. அர்ஜுன், தப்பிலி, ஜஸ்ரின் எழுதிய ஒட்டிசம் சம்மந்தமான பிரச்சனைகள் நமது குழந்தைகளிடையே வழமையில் காணப்படுமாயின் இதுபற்றி நீங்கள் விரிவான ஓர் கருத்தாடலில் உங்கள் தகவல்களை பகிர்ந்துகொண்டால் பலருக்கு பயனுள்ளதாய் அமையுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா Autism நிலைகளும் ஓரளவினதல்ல. குழந்தையாக இருக்கும் போது பல குழந்தைகளில் இவை வெளிப்படுத்தப்படுவதில்லை. அவர்கள் வளர்ந்து ஒரு இரண்டு மூன்று வயதை அடையும் போதே இது பெரிதும் தோன்ற ஆரம்பிக்கும். அல்லது பெற்றோரால் உணரப்பட ஆரம்பிக்கும். அப்போது பெற்றோர் அக்குழந்தைகள் மீது அன்பும் கவனமும் அதிகம் செலுத்த வேண்டும். இது மூளை சம்பந்தப்பட்ட ஒரு மரபணு சார்ந்த நிலை ஆகும். இந்த நிலைக்கு குழந்தைகளை குறை சொல்லக் கூடாது.

குழந்தையாக இருக்கும் போது அப்பா அம்மா சொன்ன குழந்தை திடீர் என்று அதை நிறுத்தும். கைகளை தட்டி ஓசை எழுப்பும். தலையை உடலை சுற்றி மகிழும். ஒரே விடயத்தை திரும்ப திரும்ப செய்ய முற்படும்.

சாதகம் பார்த்து திருமணம் செய்யும் நம்மவர்கள் அதில் வைக்கும் நம்பிக்கையை விட.. இரத்தப் பரிசோதனை.. மரபணு பரிசோதனைகள் செய்து அவற்றின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டால்.. இப்படியான குழந்தைகளை உருவாக்கும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கலாம். இதுகளைச் சொன்னா.. உவர் பெரிய விஞ்ஞானி என்று சொல்லி தட்டிக்கழிக்கும் சமூகத்தில் இருந்து கொண்டு நல்லதை சொல்லவோ செய்விக்கவோ வாய்ப்புக் குறைவாகவே உள்ளது. ஏன் மேற்குநாடுகளில் வாழும் நம்மவர்கள் ([பெற்றோர்கள்) மரபணு பரிசோதனைக்கு இணங்குவதையே செய்ய பயப்படுகின்றனர்.

மேலும்.. Autism spectrum என்று அதில் பல அளவீட்டு நிலைகள் உள்ளன. பிள்ளைகளை தொடர்ச்சியாக பல மூளை பயிற்சி செயற்பாடுகளுக்கு உட்படுத்தி அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று கண்டறியலாம். அதற்கேற்ப அவர்களுக்கு பாடசாலைகளில் கல்வி மற்றும் வாழ்க்கைத் தேவைக்கான சிறப்பு வசதிகள் பயிற்சிகள் அளிக்கக் கோரலாம். மேற்கு நாடுகளில் அரசாங்கங்கள் இவ்வாறான குழந்தைகளுக்கு முழு அளவிலான உதவிகள் வழங்குவதுடன் பெற்றோருக்கு disability living allowance என்று வாராந்தம் பண உதவித்தொகையும் அளிக்கின்றன.

Autism குறிப்பாக Mild (குறைந்த நிலை) நிலையில் உள்ளவர்களின் அந்த நிலையில் இருந்து முற்றாக வெளிவர வாய்ப்பு இருக்கிறது. மூளையின் செயற்பாட்டை பயிற்சிகள் மூலம் வழமை நிலைக்கு உயர்த்துவது இதில் அடங்குகிறது.

தற்போது gene therapy மூலம் இதனை குணப்படுத்தும் ஆராய்ச்சிகள் வெற்றி கண்டுள்ளன. இருந்தும் இன்னும் சில காலத்தின் பின்னே தான் அவை மேற்குநாடுகளில் வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படலாம்.

Link to comment
Share on other sites

குழந்தையாய் இருக்கும் பொழுது நான் முன்னைய பதிவில் கூறிய சிறுவனிடம் வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. 3 வயதிலேயே இசைப் பெட்டியில் (Multi CD Stereo) தனக்கு விரும்பிய பாடலை தெரிவு செய்து போடுவான். கை தட்டுவது, ஆடிக்கொண்டிருப்பது (Rocking ), மற்றவர்களைப் பார்த்து பிரதி பண்ணுவது போன்ற பழக்க வழக்கங்கள் நீண்டகாலமாய் இருந்தது. இப்பொழுது நன்றாக குறைந்து விட்டது. 9 வயது வரை பேச்சு அவ்வளவாக வரவில்லை. இப்பொழுது நன்றாக கதைக்கிறான். தமிழில் மிக ஆர்வம். தமிழ் சஞ்சிகைகளைப் பார்த்து எழுதிப் பழகுவான். ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்கும் தமிழ் கருத்துக் கேட்பான். அவனுடைய நிலையில் முன்னேற்றம் தெரிவதாகத்தான் நினைக்கிறேன். தாய் தந்தையரின் ஒத்துழைப்பு நிறைய உண்டு. பாடசாலையில் பாடங்களில் உதவுவதற்கு உதவியாளர் உண்டு.

மற்றைய குறைபாடுகள் போல ஒட்டிசம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் மத்தியில் இக்குறைபாடு அதிகம் உள்ளது என்பது எனது தனிப்பட்ட கணிப்பு. அறிவயல் காரணம் தெரியவில்லை. புலம்பெயர் தமிழர் மத்தியில் இதனைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

நான் இக்குறைபாடு உள்ளவர்களை இலங்கையில் காணவில்லை. சிலவேளை அங்குள்ள வாழ்க்கை முறைகளில் குழந்தை வளர வளர இக்குறைபாடு மெல்ல மெல்ல குணமாகிறதோ தெரியாது.

நெடுக்ஸ் கூறியபடி எதிகால சந்ததினரின் நலன் கருதி திருமணத்தின் முன் 'மரபணு பொருத்தம்' பார்ப்பது அவசியம். இன்றுள்ள அறிவயல் வளர்ச்சியை எங்களின் தேவைகளுக்கு பாவிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

எனது உறவுகளிலேயே ஒருவர் இருக்கின்றார்.இப்போ வயது 20.பிறந்ததிலே இருந்து எமது கண்முன் வளர்ந்துவருபவர்.மிகவும் அழகான் சிறுவனாக இருந்தார்.8 மாதமளவில் கதை துப்பரவிற்கு இல்லை என்று குடும்ப வைத்தியரிடம் போனார்கள்.ஒரு தமிழ் பெண் வைத்தியர் ஆண்பிள்ளகள் கொஞ்சம் பிந்தித்தான் கதைப்பார்கள் என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டா.பின்னர் ஒரு 3,4 மாதங்களின் பின் அவர்கள்திரும்ப வைத்தியரிடம் போக உள்நாக்கை கொஞ்சம் வெட்டினால் சரியென்று அதையும் செய்தார்கள்.பின் 2 வயது வரை பெரிதாக கதையில்லை ஆனால் அம்மா,அப்பா என ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.டே கெயருக்கு போகத்தொடங்க அங்கு இவர் ஒருவருடனும் சேருவதில்லை தனியே ஏதோ சத்தம் போட்டபடியே இருக்கின்றார் என சொன்னார்கள்.பின் அவர்களாகவே மொழிபழக்குபவரென ஒருவரை நியமித்து தனிக்கவனம் செலுத்தினார்கள்.இருந்தும் அவர் பேசுவதுதாமதமாகவே இருந்து வந்தது.வேறொரு உறவினரின் ஆலோசனையின் பெயரில் டவுன்ரவுணில் ஒரு மூன்றுமாதங்கள் சத்தம் தான் அவரது பிரச்சனையென்று ஒரு $4000 செலவழித்து ஒரு சிகிச்சை கொடுத்தார்கள்.அந்த சிகிச்சை இவர் தாயின் வயிற்றில் இருக்கும் போது முழுமையாக சத்தங்களி உணரவில்லை என்று அதே சத்தத்தை டேப் பண்ணி இவருக்கு இயர் போன் மூலம் கேட்கப் பண்ணுவார்கள்.பிள்ளை ஊஞ்சலில் ஆடியபடியே ஒவ்வொரு நாளும் 3 மணித்தியாலம் இந்த சத்தத்தை கேட்ட வேண்டும்.அந்த சிகிச்சை வேலை செய்ததோ இல்லையோ என அந்தப் பெற்றோருக்கு இன்றுவரை சரியாகசொல்லமுடியவில்லை.ஆனால் அவர் சும்மா சத்தம் போடுவது கொஞ்சம் குறைததாக சொல்வார்கள்.

பின்னர் அவர் பாடசாலை போக ஆரம்பிக்கும் போது தான் பெரிய பிரச்சனை தொடங்கியது.அவர் போக வேண்டிய பாடசாலையில் இருந்து ஒரு கடிதம் வந்தது உமது மகன் வேறு ஒரு பாடசாலைக்கு கல்வி திணைகளத்தால் சிபார்சு செய்யப்படுகின்றாரென்று

Link to comment
Share on other sites

அந்த பாடசாலை குறைபாடுகள் உள்ளவர்களுக்கான பாடசாலை.ஆனால் எல்லோரும் ஒரே குறைபாடுகளுள்ளவர்களல்ல.இதனால் வேறுபல பிரச்சனைகள் அவர்களுக்கு உருவாகத்தொடங்கிவிட்டது.அங்கு இருக்கும் பலவிதமான குறைபாடுள்ளவர்களையும் பார்த்து இவர்கள் பிள்ளை இமிடேட் பண்ண தொடங்கிவிட்டது கல்வித்திணைக்களத்துடன் அவர்கள் எவ்வளோ வாதாடியும் அவர்களால் ஒன்று செய்ய முடியவில்லை.ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு பாடசாலைகளுக்கு 5ஆம் வகுப்புவரை போனார்.அவர்கள்போகாத ஸ்பெசலிட்டுகள் இல்லை.பிரச்சனை ஒன்றென்றாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி தீர்வு சொன்னார்கள்.ஆனால் பலர் இவருக்கு இருப்பது ஓட்டிசம், கைப்பர் அல்ல எனவே றிடிலின் என்ற பிள்ளைகளை அமைதியாக்கி ஒருமனதாக்கும் மருந்தை கொடுக்க வேண்டாம் என்றார்கள்.காரணம் வளர்ந்தபின் பக்க விளைவுகள் ஏதும் வரலாம் அல்லது ஆயுள்முழுக்க எடுக்க வேண்டிவரலாம்.சாதரணபிள்ளைகளுடன் பெரிதாக பழகாததால் பிள்ளை ஒரு மாறுபட்ட குணாம்சங்களுடன் இருந்தது.டீ.வீ நிகழ்சிகள்,படங்கள் பார்த்தால் அந்த நடிகர்களி அப்படியே கொப்பி பண்ணித்தான் கதைக்கும்.தனியா எந்த நேரமும் ஏதோ கதைத்தபடி.

5ஆம் வகுப்பு வர இனியும் தாமதித்தால் ஆபத்து என உணர்ந்த பெற்றோர் தனியார் பாடசாலைகளில் படிப்பிக்க முயற்சி எடுத்து பலரால் நிராகரிக்கப் பட்ட நிலையில் ஓரிடத்தில் அனுமதி கிடைத்தது.இவ்வளவிற்கு கணிதமும்,விஞானமும் அவரின் வகுப்பிற்கேற்ப பழைய பாடசாலைகளில் படிப்பிற்கப் படவில்லை.முதல் வருடம் மிகவும் கஸ்டப் பட்ட அந்தப்பிள்ளை மெதுவாக முன்னேறத்தொடங்கினார்.பழக்க வழக்கங்களும் மெதுவாக மாறத்தொடங்கியது.இருந்தும் தன்னில் இருக்கும் குறைபாட்டை உணரும் நிலை வந்ததால் குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள்ளேயே வாழ்ப் பழகி 10 வகுப்பு வர திரும்ப பப்ளிக் பாடசாலைக்கு போகத்தொடங்கியது

தொடரும்.

Link to comment
Share on other sites

ஒருவரின் உடலில் உள்ள குறைபாடு என்பது அவர்களின் குறை அல்ல. அது பார்ப்பவர்களின் மனதில் உள்ள குறை.

நீங்கள் கடந்துவந்த பாதையின் கடினத்தன்மையை புரிந்துகொள்ள முடிகின்றது!அதற்காக எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!!! :D

எதையும் எதிர்கொண்ட அனுபவமும், எதையும் எதிர்கொள்ளும் தைரியமும் இருக்கும்போது.. என்ன கவலை!

தன்னம்பிக்கையும் தளராத மனமும்... உங்களை மேலும் நல்ல நிலைக்கு கொண்டுவரும்! :)

வாழ்த்துக்கள் நண்பா! :)

நட்புடன்...

பார்த்தீபன்

Link to comment
Share on other sites

மிக்க நன்றி பார்த்தீபன்.

+++

இங்குள்ள ஆட்டிசம் சம்மந்தமான கருத்துக்களை இணைத்து ஓர் புதிய திரி ஆரம்பிக்கின்றேன், இதுபற்றி புதிய திரியில் குறிப்பிட்ட உபாதை பற்றியதான விபரம் தெரிந்தவர்கள் கருத்து கூறுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

உங்களின் இந்த நிலைக்கு காரணம்.. உடலில் உள்ள தசை நார்கள் பலவீனப்பட்டுக் கொண்டு போவதுதான். இலங்கையில் இதற்கு எவ்வாறான சிகிச்சை அளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வழமையாக கூட்டுச் சிகிச்சை முறையே பாவிக்கப்படுகிறது. உங்களின் தசை நார்களை வலுப்படுத்தும் physio therapy முறைகளும் உபகரணங்களும் மேற்கு நாடுகளில் உள்ள. மருந்துகள் மூலம் தசைகளின் செயற்பாட்டை ஊக்கு வித்தலையும் செய்வார்கள். சத்திரசிகிச்சையும் அளிப்பார்கள். சரியான உபரகணங்களை உதவி வழங்கும் கருவிகளை பாவித்து வருவீர்களானால் உங்கள் தசைநார்கள் வலுவிழப்பதை குறைக்க முடியும். மற்றவர்களின் உதவி இன்றி உங்களின் செயற்பாடுகளை செய்யக் கூடிய வகைக்கு அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன் வர வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளில் செல்வந்த வைத்தியசாலைகளில் இவை இருக்கும். அதுமட்டுமன்றி stem cell theraphy மூலம் இதனை குணமாக்கலாம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று சொன்னீர்கள். அப்படியான சிகிச்சை முறை இதற்கு பாவிக்கப்படுகிறது தான். அதன் மூலம் உங்களின் பழைய தசைக்கலங்களை நல்ல பலமுள்ள தசைக்கலங்களை செலுத்தி பின்னர் அவற்றை பெருக வைத்து பழைய பலவீனமான தசைகளை படிப்படியாக குறைப்பது இந்த முறையாகும். இது நீண்ட காலம் எடுக்கும் மிகவும் நவீன செலவு கூடிய ஒரு சிகிச்சை முறை. இருந்தாலும் நீங்கள் முயன்று பார்க்கலாம்.

ஆராய்ச்சி ரீதியில் இது ஒரு வெற்றி பெற்ற சிகிச்சை முறையாகும்.

http://www.news-medical.net/news/2009/03/05/46604.aspx

நீங்களும் இந்த நிலையில் இருந்து மீண்டு சாதாரண பிரஜைகள் போல வாழ எனது மனப்பூர்வ வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இறைவனையும் வேண்டுவோமாக.

இலங்கையில் உள்ள உங்களின் டாக்டர்கள் மூலம் ஒரு அறிக்கையைப் பெற்று மேற்குநாடுகளில் சிகிச்சைக்கு என்று விசா பெற்று.. வந்து சிகிச்சை பெற முடியும். அந்த வகையில் சிந்தித்து செயற்பட்டீர்கள் என்றால் நல்லது. இன்றேல் இந்தியாவிலும் சிகிச்சை பெறலாம்.

பிரித்தானியா அவுஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்த வசதிகளை அளிக்கின்றன.

http://www.visaforuk.co.uk/medical_treatment.html

(உங்களை தகவலை இன்று தான் படித்தேன். இந்தளவு தாமதத்துடன் எம்மால் இயன்ற பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்.)

நன்றி நெடுக்கண்ணை.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

stem cell theraphy இன்னும் ஆராட்சி வகையிலேயே இருப்பதாகவும் சுண்டெலிகளில் பரீட்சித்து பார்த்த போது சாதகமான முடிவை தந்ததாகவும் ஒரு சிறுவனிடம் பரீட்சித்து பார்த்த போது சிறிய முன்னேற்றம் காணப்பட்டதாகவும் எனது வைத்தியர் தெரிவித்தார்.ஆனால் இதன் மூலம் Duchchune MD மற்றும் Becker MD ஆகியவற்றுக்கே சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவித்தார்.எனக்கு இருப்பது Limb Girdle மது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.ஆனால் அதில் கூட ஏராளமான வகைகள் உள்ளதாகவும் அதுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.எனக்கு நடக்கும் போது கெண்டைப்பகுதியிலும் குதிக்காலுக்கு மேலேயுள்ள நரம்பு பகுதியிலும் பயங்கர நோ இருக்கும் சமீப காலமாக அது அதிகரிக்கிறது என்னால் உணர முடிகிறது.நீச்சல் தசைகளை செயற்திறனுடன் வைத்திருப்பதற்கு உதவும் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது.துரதிஸ்டவசமாக அதுவும் எனக்கு கடினமாக உள்ளது.மற்றவர்கள் போல எல்லாம் செய்ய முடியாவிட்டாலும் எனக்கென்று ஒரு வாழ்க்கை உள்ளதாக உணர்கிறேன்.

சிறு வயதில் ஏராளமான கேலிகள் நையாண்டிகளுக்கு முகம் கொடுத்தாலும் கல்வி என்ற இறைவன் கொடுத்த வரத்தினால் என்னால் மற்றவர்களுக்கு முகம் கொடுத்து வாழ முடிகிறது.இந்த தசை சிதைவு நோயினால் என்னுடைய சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறாத போது மனதுக்கு கடினமாக உணருவேன்.என்றாலும் வாழ்க்கையை வாழவேண்டும் என்ற அவா எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளி, இன்று தான் இந்தத்திரியை வாசிக்கமுடிந்தது. வாசித்து ஒரு கருத்துகூட முன்வைக்கவில்லையே........என்று வெட்கி தலைகுனிகிறேன்.

முரளி, உங்களின் வாழ்க்கைப்போராட்டங்களை பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள். உங்கள் தன்னம்பிக்கைக்கும் கடந்துவந்த வெற்றிப்பாதைக்கும் வாழ்த்துகள்.

நீங்கள் சாதிக்க பிறந்தவர்.

என் மனதில் நீங்கள் உயர்ந்த இடத்தை பிடித்திருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் கரும்பு அவர்கட்கு, ஆரம்பத்திலிருந்து இவ் இடுகையை வாசித்தே வந்துள்ளோன், ஆனால் என்ன காரணமோ தெரியாது கருத்தெழுத முயலவில்லை. ஆனால் தற்போது அதற்கான சந்தர்ப்பம் காரணம் இவ்விடுகையில் அண்மையில் எழுதிய தங்கள் கருத்தை நான் வாசிக்கும்போது ஏதோ மனக்கிலேசத்தில் இருப்பதுபோல் உள்ளது. அனைத்தும் நல்லபடியே நடக்கும் இயற்கையை; வேண்டியபடி, எனது வாழ்த்துக்கள் தங்களுக்கும் எராளனுக்கும் உரித்தாகுக. தேடலே வெற்றிக்கு வழிவகுக்கும் ஏராளன் அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்சியை இணையத்தின்மூலம் பார்த்தேன் சிலவேளை இவ்விடையம் உங்களுக்குப் பயன்படலாம். சித்தவைத்தியம் எனும் ஒரு விடையம் தமிழர் மத்தியில் பிரபல்யம் தற்போது தமிழநாட்டில் மீண்டும் பிரபல்யமாகத் தொடங்கியுள்ளது. ஆனால் இது பல்லாயிரமாண்டு பழைமைவாய்த ஒரு பாரம்பரிய வைத்தியமுறை. தமிழநாட்டில் திரு தேவநாயகம் எனும் பிரபல்யமான சித்தவைத்திய நிபுணர் ஒருத்தர் வாழ்கிறார் பெரிசாகச் செலவுவராது அவரைச் சந்திக்க முயன்றுபாருங்கள். கீழகாணும் இணைப்பை விருப்பமென்றால் பார்க்க முயற்சிக்கவும்.

http://www.thiraimovie.com/video/neeya-naana-12-12-2010/

Link to comment
Share on other sites

  • 1 year later...

யாழ் இணையத்தின் நாளாந்த அறிக்கையில் சில தடவைகள் இவ்விடயமும் இணைக்கப்பட்டுள்ளதை அவதானித்தேன். இப்படியும் ஒரு சமாச்சாரத்தை நான் முன்பு எழுதிப்போட்டது நினைவில் வந்தது.

முக சீர் திருத்த சிகிச்சை என்பது பலபடிமுறைகளைக்கொண்டது. ஒரே தடவையிலோ, இரண்டு, மூன்று தடவைகளிலோ உடனடியாக சீரமைக்கமுடியாது. ஒவ்வொரு தடவையிலுமாக சிறிய சிறிய மாற்றங்களாகவே முன்னேற்ற முடியும்.

இந்த வருடம் ஜனவரி மாத ஆரம்பத்தில் மேலும்மொரு Rhinoplasty சத்திரசிகிகிச்சைக்கு உள்ளாகினேன். நாளை மீண்டுமொரு Rhinoplasty சத்திரசிகிகிச்சை எனக்குள்ளது. இத்துடன் மூக்கில் ஆறாவது தடவையாக கத்தி வைக்கப்படுகின்றது. அதிக பிரயத்தனம் செய்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆரம்பித்த நீண்டபயணம். ஒன்றும் செய்யமுடியவில்லை. இடைவழியில் விட்டுச்செல்லமுடியாது. சத்திரசிகிச்சையில் வெட்டுக்கொத்து வாங்கி பழகிவிட்டது. முன்பு இரண்டு தடவைகள் காதில் கசியிழையத்தை வெட்டி எடுத்து மூக்குப்பகுதியில் வைத்து சத்திரசிகிச்சை செய்தார்கள். நாளையும் காதிலும், மூக்கிலும் வெட்டு உள்ளது. இதன்பின்னர் மொகரக்கட்டை Apperance சற்று முன்னேற்றம் வரும் என்று நினைக்கின்றேன், பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை உங்களுக்கு நடைபெற இருக்கும் அறுவைச்சிகிச்சை மிகச்சிறப்பாக வெற்றிகரமாக நிகழும்...அதற்கு என் மனதின் வாழ்த்துக்கள் கரும்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.