Jump to content

மாயா அருட்பிரகாசத்திற்கு (M.I.A.) ஆஸ்கார் பரிந்துரை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"Achievement in music written for motion pictures (Original song)" என்ற பிரிவில் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை Maya Arulpragasam (M.I.A.) இற்கு கிடைத்துள்ளது.

மேலதிக விபரம்

http://www.oscars.org/awards/81academyawards/nominees.html

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.tamilnation.org/diaspora/unitedkingdom/mia.htm

இவருக்கு Grammy nomination உம் கிடைச்சிருக்கு "Paper planes" என்ற பாடலுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்துக்கள் . இவவோட பாடல்கள் அனைத்தும் சூப்பர்

Link to comment
Share on other sites

இவருடைய பேட்டி மாதிரி ஒன்டு Cnn இல் இப்போ கொஞ்சம் முந்தி போச்சு. நான் போடைக்க முடிஞ்சுது. இனப்பிரச்சனை சம்மந்தமாக ஏதோ சொன்ன மாதிரி தெரிஞ்சுது.

Link to comment
Share on other sites

நல்லதொரு பேட்டி....

புலத்து பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம். பிள்ளைகளுக்கு எம் இனத்தின் பிரச்சனைகளை கதைக்கவும், விவாதிக்கவும் விடுங்கள். ஒரு MIA காணாது எம் சமுகத்திற்கு

Link to comment
Share on other sites

நல்லதொரு பேட்டி....

புலத்து பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம். பிள்ளைகளுக்கு எம் இனத்தின் பிரச்சனைகளை கதைக்கவும், விவாதிக்கவும் விடுங்கள். ஒரு MIA காணாது எம் சமுகத்திற்கு

இந்த மாயா தமிழுலகிற்கு அறிமுகமான போது எங்கள் தமிழ் உணர்வாளர்கள் குதித்த குதி தெரியாதோ நிழலி ?

தாவணிக்குள் தமிழ்மொழியறிவு தெரியாத பொம்மைகளைத்தான் எங்களது தந்தையருக்கும் அன்னையருக்கும் வளர்க்கத் தெரியும். இப்படியொரு பெண்ணை வளர்த்தால் தமிழ்ப்பண்பாட்டை எப்படி சந்ததிக்கடத்தல் செய்வது ?

மாயாவின் தந்தையார் தனது மகளுக்கு இப்படியொரு விருது கிடைத்தது பெண்ணியத்துக்குப் பெருமையென்று சொன்னதாக ஒரு பத்திரிகை தனது கருத்தொன்றை ஒட்டியிருந்தது. இதில் என்ன பெண்ணியமிருக்கென அந்தப்பத்திரிகையின் மடல்களொன்றில் எழுதப்பட்டிருந்தது.

தனது மகளுக்கு விருது கிடைத்தது பற்றி அந்தத் தந்தை ஏதாவது சொல்லியிருப்பார். ஆனால் தந்தையில் உள்ள கசப்பை மகள் மீது கொட்டிக் கொள்ளும் இத்தகைய கருத்துக்கள் கடிதங்களை எங்கள் பத்திரிகைகள் வெளியிடுவதில் என்ன மகிழ்ச்சியோ ?

மாயாவின் தந்தை அருளர் எழுதிய 'இலங்காதேவி' நாவல் ஒரு சிறந்த நாவல்.

எனது தனிவிருப்பு எனது மகளும் இத்தகையதொரு மகளாக வேண்டும். :mellow:

எமது பிள்ளைகள் தமிழோடு தமிழர்களோடு ஒட்டுகிறார்களில் என்றதொரு குற்றச்சாட்டு எங்களில் பலரிடம் இருக்கிறது. காரணத்தை யாராவது ஆய்ந்தார்களா ? எம்மிடமிருந்து கிடைக்காத வரவேற்பு அவர்களுக்கு அன்னியர்களிடமிருந்து கிடைக்கிறது. ஆக அவர்கள் தமிழர்களுடன் தமிழுடனான உறவை துண்டித்துக் கொள்கிறார்கள். இந்தச் சிக்கலை புரிந்தால் எங்கள் இளையோர் எங்களுக்குப் பலம் தரும் தூண்காளவார்கள்.

மாயாவுக்கு எங்கள் ஊடகங்கள் இதுவரை எந்த முக்கியத்தையும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் மாயா இன்னும் நிறையவே செய்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் அந்த பத்திரிகையை நடாத்திற ஆட்களில் ஒருவர் என நினைத்தேன் தவறுபோல் இருக்கிறது. ஏனெனில் மாயா அருட்பிரகாசம் பற்றி பல தடமைவகள் அந்தப்பத்திரிகையில் வாசித்திருக்கிறேன. அவை ஆங்கிலத்திலிருந்தன. இளைய தலைமுறையினரை சென்றடையவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பிரசுரித்திருக்கக் கூடும்.

அது தவிர, மாயா எந்த வகையில் பெண்ணியக்காரருக்கு (பெண்களுக்கு அல்ல) என்பது புரியவில்லை. விளக்கினால் நன்றி.

அருளர் எழுதிய புத்தகம் "லங்கா ராணி".

mia_one.jpg

Link to comment
Share on other sites

நீங்களும் அந்த பத்திரிகையை நடாத்திற ஆட்களில் ஒருவர் என நினைத்தேன் தவறுபோல் இருக்கிறது. ஏனெனில் மாயா அருட்பிரகாசம் பற்றி பல தடமைவகள் அந்தப்பத்திரிகையில் வாசித்திருக்கிறேன. அவை ஆங்கிலத்திலிருந்தன. இளைய தலைமுறையினரை சென்றடையவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பிரசுரித்திருக்கக் கூடும்.

அது தவிர, மாயா எந்த வகையில் பெண்ணியக்காரருக்கு (பெண்களுக்கு அல்ல) என்பது புரியவில்லை. விளக்கினால் நன்றி.

அருளர் எழுதிய புத்தகம் "லங்கா ராணி".

மாயா பற்றிய அறிவிப்புக்கு நன்றிகள் MI7'. அருளரின் புத்தகம் லங்கா ராணி அதை நான் தவறா இலங்காதேவி என எழுதிவிட்டேன். திருத்தியமைக்கு நன்றிகள் MI7'.

பெண்ணியத்துக்கு எந்த வகையில் பெருமை என்பதை அருளர் என்ன பொருளில் கூறினார் என்பது தெரியாது. ஆயினும் ஒரு தமிழ்ப்பெண் ஒரு விருது பெற்றிருக்கிறாள் அதையேன் நாமே விட்டேற்றித்தனமாக பார்க்க வேண்டும் ? நீங்கள் லண்டனில் இருப்பதால் அருளர் பற்றிய அரசியல் கருத்துக்கள் அடிப்படையில் யோசிக்கலாம். ஆனால் நான் யேர்மனியிலிருந்து கொண்டு அந்தக் கருத்தை பார்த்ததால் எனது கருத்தைத் தெரிவித்தேன்.

பெண்ணியக்காரர்களாக நிர்மலாக்கா ராயேஸ்அக்கா போன்ற பெண்ணியவாதிகளைப் பற்றி கேட்டுச் சலித்ததாலோ என்னவோ மாயா பற்றிய எங்கள் தமிழ்ப்பார்வைகளில் இன்னும் அரசியல்சாயம் ஊறுகிறது.

பத்திரிகையில் வந்தது வாசகர் கருத்தல்லவா ? ஆக ஒரு வாசகரின் கருத்தை ஆசிரியபீடம் அனுமதித்தே ஆக வேண்டும் அல்லவா ? ஒரு வாசகருக்கு உள்ள அதே உரிமையோடுதான் நானும் ஒரு வாசகியாக இங்கு எழுதியிருக்கிறேன். இங்கு யாரையும் தூக்கி நிமிர்த்தும் எண்ணமில்லை. புரிந்து கொள்ளுங்கள் MI7'. :)

எமது ஊடகங்கள் என நான் குறிப்பிட்டது தமிழ் ஊடகங்கள் என்ற பொருளில். நீங்கள் குறிப்பிட்ட ஒரு அச்சு ஊடகத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்ட ஊடகத்தை இங்கு எதுவும் நெற்றிக்கண் சுட்டி எதுவும் சொல்லவில்லை. பொருள் மாறி அர்த்தம் கொண்டுள்ளீர்களா தெரியாது ?

நமது தமிழ் ஊடகங்கள் நிறையவே இருக்கிறது. அவை யார் ஏ.ஆர்.ரகுமானுக்கு கொடுத்து முக்கியத்துவத்தை மாயாவுக்குக் கொடுத்தார்கள் ?

Link to comment
Share on other sites

name='MI7' பெண்ணியக்காரருக்கு (பெண்களுக்கு அல்ல) என்பது புரியவில்லை. விளக்கினால் நன்றி.

இதன் அர்த்தம் புரியவில்லை. விளக்கினால் புரிந்து கொள்ளலாம். நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரத்தில் வசனத்தை சரியாக முடிக்கவில்லை. மன்னிக்கவும். மாயா ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையானது அவர் ஈழத்துப்பெண் என்ற வகையில் பெரிய சாதனைதான். அதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அவர் பெண் என்பதால் பெண்கள் பெருமைகொள்ளலாம். ஆனால் பெண்ணியக்காரர் பெருமை கொள்ளவதற்கு இதில் என்ன இருக்கிறது?

Link to comment
Share on other sites

அருளர் எழுதிய புத்தகம் "லங்கா ராணி".

mia_one.jpg

மாயாவின் வெளித்தெரியும் மார்புக்குள்ளால் நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் பெண்ணியம் வாழ்க கோ.MI7'பி.

இலங்காராணியின் அழகை நன்றாகத்தான் இந்தப்படம் ஊடாக ரசிக்கிறீர்கள் ! வாழ்க ஊடகப்பணியும் உங்கள் பெண்ணியக்கற்பனையும் கருத்தும்.

சரி தமிழ் உணர்வுக்கும் இந்தப்படத்துக்கும் என்ன சம்பந்தம் ? விளக்குவீங்களா உங்கள் மொழியில் ?

Link to comment
Share on other sites

அவசரத்தில் வசனத்தை சரியாக முடிக்கவில்லை. மன்னிக்கவும். மாயா ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையானது அவர் ஈழத்துப்பெண் என்ற வகையில் பெரிய சாதனைதான். அதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அவர் பெண் என்பதால் பெண்கள் பெருமைகொள்ளலாம். ஆனால் பெண்ணியக்காரர் பெருமை கொள்ளவதற்கு இதில் என்ன இருக்கிறது?

பெண்ணியக்காரர் பெருமை கொள்வதாக நீங்கள் தான் கற்பனை பண்ணிக் கொள்கிறீர்கள். அவசரத்தில் சரியாக முடிக்காமல் விட்டீங்களா ? அவசியத்தால் முடிக்காமல் விட்டீங்களா ? மூடிகளை கவனமாக அணியுங்கள்.

உங்களுக்கு தற்போது லண்டனில் உள்ள பிரச்சனை என்னவென்றால் லண்டன் மேய்ப்பர் தலைமையை யார் பறிப்பது அல்லது மேய்ப்பது என்பதுதான். அதனை பறிக்க அருமையான முயற்சிகள் மாயாவைச் சாட்டாக வைத்து நடாத்துகிறீர்கள். சரி அதை லண்டனில் செய்யுங்கோ. ஆனால் சாவுக்குள் நிற்கும் மக்களைப்பற்றி யார் ஒருவரி சொன்னாலும் அவர்களை நாங்கள் உள்வாங்க வேண்டும். (உங்களுக்கு இதெல்லாம் சரிவராது)

தமிழ் உணர்வென்று வைத்து இன்று நாம் யேர்மனியக் குழந்தைகளுடன் உங்கள் இரண்டாவது சந்ததியை ஒன்றாக நிறுத்திப் பேச விட்டுப் பாருங்கள் உணர்வு எங்கிருந்த ஊற்றெடுக்கும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

மூச்சுவிடவே ஆங்கிலம் அல்லாது மூச்சுவிட முடியாத சந்ததியை உருவாக்கியது மட்டுமன்றி அந்தச் சந்ததிக்கு தமிழின் வாசமே அறிவிக்காமல் அருளரையும் இன்னும் உள்ளவர்களையும் சிண்டு முடித்துக் குந்துரஞ்சும் தொழிலைச் சரிவரச் செய்யுங்கோ தமிழ் இனப்பற்று உங்களால் காக்கப்படும்.

Link to comment
Share on other sites

நீங்களும் அந்த பத்திரிகையை நடாத்திற ஆட்களில் ஒருவர் என நினைத்தேன் தவறுபோல் இருக்கிறது.

தனிமடலைப்பாருங்கள் இவ்வசனத்துக்கான பதில் அனுப்பியுள்ளேன்.

நான் எந்தப்பத்திரிகைக்கும் பங்குதாரரில்லை. :icon_idea:

தவறைத் திருத்திக் கொள்ளுங்கள். எல்லாரையும் நீங்கள் தான் மேய்க்க வேண்டும் என்ற தலை ஆசையை விட்டிட்டு உணர்வு மிக்க சந்ததியை நிலைநாட்டுங்கள். ஏதாவது உங்களால் மாயாபோல செய்ய முடியுமென்றால் (இல்லாட்டியும் காரியமில்லை) செய்யுங்கோ. லண்டனில் பிரபல தொலைக்காட்சிகள் ஊடகங்கள் இருக்கின்றன தானே அவற்றில் ஏதாவது ஒரு துரும்பையேனும் எடுத்துப் போடுங்கோ தினம் சாகும் தமிழருக்காக. (கனக்க செய்யிறோம் இதையெல்லாம் உங்களுக்கு விளக்கமாச் சொல்லவோ எண்டு கேக்காதையுங்கோ) எல்லாரும் செய்யினம் ஏதோ ஒரு வகையில். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ...... இருங்கோ .......

( நான் மவுனமாக கொட்டாவி விடப்போகின்றேன் )

Link to comment
Share on other sites

சும்மா ...... இருங்கோ .......

( நான் மவுனமாக கொட்டாவி விடப்போகின்றேன் )

சரி நாவடக்கம் நாவடக்கம் :icon_idea:

இலங்காராணியை நேரமிருக்கேக்க வாசியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது ஐயப்பாட்டை நீக்காமல் வேறேதோ எல்லாம் எழுதியிருக்கிறீர்கள் ..

முதலில் எனது நிலைப்பாட்டை விளக்குகிறேன் ..

- மாயா என்கிற அற்புதமான ராப் பாடகி மீது எனக்கு அபிமானமிருக்கிறது

- அவரது "பேப்பர் பிளேன்" பாடலை "சிலம்டோக் மில்லியனரில்" இன்னமும் மெருகூட்டி அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார

Link to comment
Share on other sites

எனது ஐயப்பாட்டை நீக்காமல் வேறேதோ எல்லாம் எழுதியிருக்கிறீர்கள் ..

ஐயம் விலகியும் விலகாதது போல நடிக்கிறீங்கள். :huh: வேறு ஏதும் எழுதவில்லை. நீங்கள் கொண்டுள்ள தவறான வியாக்கியானத்துக்கத் தான் எழுதியுள்ளேன்.

- மாயா அண்மையில உலகளவில் பிரசித்திபெற்ற ஊடகங்களில் ஈழத்தில் மக்கள் படும் அவலம் பற்றியும், தனது அடையாளம் பற்றி விளக்கியிருக்கிறார். கொஞ்சம் வளர்ந்தாலே, தங்கள் அடையாளங்களை மறைப்பவர்களுக்கிடையில், அவர் துணிச்சலாக கருத்துத் தெரிப்பது. உணமையில் மெச்சத்தக்கது. மற்றவர்கள் எல்லோரும் மிகுந்த சிரமப்பட்டு செய்யும் கவனயீர்ப்பை .. தனது கலைத்துறை திறமைகளை பாவித்து இலகுவாகச் செய்கிறார் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

பாராட்டுகிறீர்கள் ஒரு பக்கத்தால் முறுபக்கத்தால்...!!!! :icon_idea:

Link to comment
Share on other sites

- மாயா தனது பேட்டிகளில், விடுதலைப்புலிகள் பற்றிச் சொன்ன கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும். வட்டமும் சதுரமும் போன்று வேறுபட்டவர்கள் என்று குறிப்பிட்டது அவரது அறியாமையைக் காட்டினாலும், விடுதலைப்புலிகளை அல்கைதாவுடன் ஒப்பிட்டமை தவறானது.

இதற்குள்ளும் உங்கள் புலமையை திறமையாக வெளிப்படுத்துகிறீர்கள். ஆனாலும் ஏதோ ஒரு வகையில் தவறான புரிதல்களுடன் தமிழர்கள் பற்றி ஒரு உலக ஊடகத்துக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார் மாயா.

அல்கைதாவுடன் மாயா புலிகளை ஒப்பிட்டது பிழை. ஆனால் புலிகள் என்பதன் அர்த்தம் அனைத்துலக ஊடகங்களில் 'கிளர்ச்சியாளர்கள்' எனவே விளிக்கிறார்கள். ஏன் இந்த வார்ர்தையை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் ? எங்கே உங்கள் திறமையால் 'கிளர்ச்சியாளர்கள்' என்ற சொல்லை "விடுதலைப்போராளிகள்" என்று சொல்ல வையுங்கள் பார்ப்போம்.

30ஆண்டுகள் கடந்த நிலையில் தான் ஈழம் பற்றி எதையாவது உலக ஊடகங்களில் சொல்ல முடிகிறது. அதிலும் அங்கை ஆங்கிலப் பிழை இங்கை பெண்ணியப்பிழையென்று முட்டையில் புடுங்கும் மேதாவித்தனத்தை என்னென்று சொல்ல ?

- அவரது அரசியல் கருத்துகளில் உள்ள தெளிவின்மையை தவிர்த்தால், அவரை மதிக்கிறேன். அவர் ஒரு தமிழ்ப் பெண் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

இந்த முரண்பாட்டை ஏன் மாயாவுக்கு அல்லது அவர் சார்ந்தவர்களுக்கோ கேட்கவில்லை நீங்கள் ? நீங்கள் நான் ஏன் எம்மில் பலருக்கு சரியான அரசியல் தெளிவில்லை. அப்படித் தெளிவிருந்தால் இப்படி முரண்பட மாட்டோம்.

ஒவ்வொரு அரசியல் சார்ந்தவர்களுக்குள்ளும் ஒவ்வொரு கருத்து உண்டு.அந்த வகையில் மாயாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் இருக்கலாம். ஆனால் நான் நினைப்பதை அவர்கள் சொல்ல வேணுமெண்டு முரண்டு பிடிப்பதற்கு அர்த்தம்....????????????????

ஆனால் அவர் பெண்ணியவாதிகளுக்கு பெருமை சேர்க்கிறார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திரும்பவும் முட்டையில் புடுங்குகிறீர்கள். :icon_idea: அருளர் மாயாவின் தந்தை அவர் சொன்னதை நான் கேட்கவில்லை. ஆக இதற்கான பதில் அருளரிடம் நீங்கள் கேட்டாலே பதில் கிடைக்கும். :huh:

பொதுவாக உடல் கவர்ச்சி, பாலுணர்வை தூண்டும் விடயங்கள் போன்றவற்றில் பெண்ணியவாதிகள் ஈடுபடுவதில்லை. அதற்காகவே மாயாவின் படத்தை இணைத்திருந்தேன். அதுதவிர, வேறெந்த விகல்ப்பமான எண்ணங்களும் எனக்கு இல்லை.

இந்த விவாதத்துக்கு புறம்பான விடயங்களை தவிர்த்து, பெண்ணியம் தொடர்பில் இவ்விடயத்தை விளக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

சரி உங்களுக்கு அந்தப்படத்தை விட வேறெந்தப்படமும் கிடைக்கவில்லையா ?

இலங்காராணியென்ற இறுதி வரிகளுடன் மாயாவின் மார்பு வெளித்தெரியும் படம் போட வேண்டியதன் அர்த்தம் ? சரி ஒன்றுமில்லாமல் நீங்கள் போட்டிருக்கிறீர்கள். போகட்டும்.

அதுசரி பெண்ணியமெண்டா என்ன ? அதற்கு விளக்கம் சொன்னீங்களெண்டா ஏதாவது நமக்கும் தெரிஞ்சா விளக்கலாம்.

இன்னொரு வியடம் !

அது ஏன் ஒருவாசகரின் கருத்தை நான் எழுதியதற்கு இத்தனை நேரம் செலவளித்து ஓடிவந்து அக்கருத்தை தூக்கி நிறுத்தி பதில் தேடுகிறீர்கள் ? அப்ப அந்தக்கருத்துக்குச் சொந்தக்காரன் நீங்களோ எ ஐயம் வருவதைத் தவிர்க்க முடியாவில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நான் ஏன் எம்மில் பலருக்கு சரியான அரசியல் தெளிவில்லை. அப்படித் தெளிவிருந்தால் இப்படி முரண்பட மாட்டோம்.

இங்கு நாங்கள் முரண்படவில்லை. கருத்துப்பரிமாறிக் கொள்கிறோம் அவ்வளவுதான். இதனை உங்களுடன் முரண்பட்டுக் கொள்கிறேன் என நீங்கள் நினைப்பது தவறு.

ஒவ்வொரு அரசியல் சார்ந்தவர்களுக்குள்ளும் ஒவ்வொரு கருத்து உண்டு.அந்த வகையில் மாயாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் இருக்கலாம். ஆனால் நான் நினைப்பதை அவர்கள் சொல்ல வேணுமெண்டு முரண்டு பிடிப்பதற்கு அர்த்தம்....????????????????

அவர்களுக்கு தங்கள் கருத்தினைக் கூற இருக்கிற உரிமைபோல் எனக்கு அதனை எதிர்த்துக் கருத்து எழுத இல்லையா?

சரி உங்களுக்கு அந்தப்படத்தை விட வேறெந்தப்படமும் கிடைக்கவில்லையா ?

இலங்காராணியென்ற இறுதி வரிகளுடன் மாயாவின் மார்பு வெளித்தெரியும் படம் போட வேண்டியதன் அர்த்தம் ? சரி ஒன்றுமில்லாமல் நீங்கள் போட்டிருக்கிறீர்கள். போகட்டும்.

நான முன்னரே எழுதிய மாதிரி, அவர் பெண்ணிய வாதிகளின் கருத்துக்களுக்கு முரணாக, பெண் என்பவள் போகப் பொருள் என்பது போல நடந்து கொள்கிறார் என்பதைச்சுட்டிக்காட்டவே அந்தப்பட்த்தை தேர்ந்தெடுத்து இணைத்தேன்.

அதுசரி பெண்ணியமெண்டா என்ன ? அதற்கு விளக்கம் சொன்னீங்களெண்டா ஏதாவது நமக்கும் தெரிஞ்சா விளக்கலாம்.

நான் அறிந்தவரை பெண்ணியம் என்பது:

பால்களுக்கிடையில், அரசியல், பொருளாதாரம், சமூக மட்டம் ஆகியவற்றில் சமஉரிமையை ஏற்படுத்துவது. பெண்ணியவாதிகள் எனக் கருதப்படுபவர்கள், இந்த உரிமைகளுக்காக போரிடுபவர்கள்.

இதில் மாயா அடங்கவில்லை. அருந்ததி ராய், மேதா படகர் (நர்மதா பச்சோவா அந்தோலன் அமைப்பின் தலைவி) போன்றோரை பெண்ணிய வாதிகள் என்று குறிப்பிடுவேன். இன்னும் பலர் இருக்கிறார்கள். சந்திரிகா குமாரதுங்க. சானியா மைனோ காண்டி, (சோனியா காந்தி), மடோனா, பிறிற்னி பியர்ஸ் போன்றோரை பெண்ணியவாதிகள் என்று சொன்னால் மாயாவையும் அப்படிச் சொல்லலாம்.

இன்னொரு வியடம் !

அது ஏன் ஒருவாசகரின் கருத்தை நான் எழுதியதற்கு இத்தனை நேரம் செலவளித்து ஓடிவந்து அக்கருத்தை தூக்கி நிறுத்தி பதில் தேடுகிறீர்கள் ? அப்ப அந்தக்கருத்துக்குச் சொந்தக்காரன் நீங்களோ எ ஐயம் வருவதைத் தவிர்க்க முடியாவில்லை. :icon_idea:

உங்களுக்கு என்னுடன் கருத்தாடுவதில் உடன்பாடு எனின் சம்பந்தமில்லாத விடயங்களை இங்கு சேர்க்காதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.