Jump to content

எல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருக வருக வதா... உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் வில்லன். நன்றிகள் உங்கள் இனிய வரவேற்பிற்கு.

"நீங்கள் உண்மையான வில்லனா, சும்மா வில்லனா?" , எதுக்கு வில்லன் என்று சொன்னால், புரிந்து நடந்துகொள்ளலாம்.

வாருங்கள் வந்து கலக்குங்கள்
Link to comment
Share on other sites

வணக்கம் சுப்பண்ணை, ஏன் அண்ணை இவ்வளவு சுணக்கம்...

ஒன்றும் மாயம் இல்லை அண்ணை, நான் எல்லாமே வெளிப்படையாகத்தான்.

இப்பதான் அண்ணை காலெடுத்து வைத்திருக்கிறேன். அதுக்குள்ளை எப்படிக் கலக்கிறது...

கண்ணா என்ன இது மாயவிளையாட்டு :) ? சரி போகட்டும் எனது வணக்கங்கள் வருக :lol::lol:

அவர் கலக்கு கலக்கு என்று கலக்கி பானையையும் கவிட்டுப்போட்டு நிக்கிறார் அப்பவும் கலக்கு என்று நீங்கள் சொல்லுறிங்கள் :)

Link to comment
Share on other sites

அன்பன்,

நன்றிகள்.

வருக வருக வதா... உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வதா வருக.பயப்படாமல் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வதா

வாருங்கள் சதா

சிங்கைத் தமிழில் சீரிய நடையில்

பொங்கும் புனலாய் பொழிக

எங்கே

அன்புடன்

தம்பர்

Link to comment
Share on other sites

நன்றியப்பா இரதி...

நான் நிறைய எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.

வணக்கம் வதா வருக.பயப்படாமல் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

தம்பர் ஐயா...

வணக்கமும் அன்பு நன்றியும்.

முடிந்தளவு எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.

வணக்கம் வதா

வாருங்கள் சதா

சிங்கைத் தமிழில் சீரிய நடையில்

பொங்கும் புனலாய் பொழிக

எங்கே

அன்புடன்

தம்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

நன்றி சுவே, உங்கள் அன்பான வரவேற்பிற்கு... அத்துடன் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!
Link to comment
Share on other sites

அண்ணை சுப்பு...

அன்பான நன்றிகள். பதிலெழுத தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும்.

அதென்னண்ணை கலக்கிறதெண்டால்? என்னத்தை, எங்கேயாம் கலக்கிறது? ஒரே குழப்பமாக இருக்கிறது.

கண்ணா என்ன இது மாயவிளையாட்டு :lol: ? சரி போகட்டும் எனது வணக்கங்கள் வருக :lol::lol:

அவர் கலக்கு கலக்கு என்று கலக்கி பானையையும் கவிட்டுப்போட்டு நிக்கிறார் அப்பவும் கலக்கு என்று நீங்கள் சொல்லுறிங்கள் :unsure:

Link to comment
Share on other sites

வணக்கம் வில்லன்,

வரவேற்பிற்கு அன்பான நன்றிகள்.

அதுசரி, நீர் யாருக்கு அல்லது எதுக்கு வில்லன், தெளிவாகச் சொன்னால், கொடுக்கல் வாங்கல்களுக்கு கொஞ்சம் வசதியாக இருக்கும். ஒரு முன்னெச்சரிக்கைக்காக.

வாருங்கள் வந்து கலக்குங்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லோரும் வாங்கோ

தமிழால் இணைவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான விளக்கம்

தோழா

இந்தியன் என்று சொல்லிக்கொள்ள அவமானத்துடன் பரிதவிக்கும் தமிழ்ன் நான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழக தமிழனுக்கு . ......(ராயல் மேன்டோர்).royal mentor

Link to comment
Share on other sites

:rolleyes: :rolleyes: வாங்கோ, தாராளமாகத் திட்டலாம், குத்தலாம், கடிக்கலாம் ஆனால் இந்த தளத்துக்குள்ளுக்க மட்டும்தான்,,, :rolleyes::huh:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழக தமிழனுக்கு . ......(ராயல் மேன்டோர்).royal mentor

நன்றி நிலாமதி.

இந்த கருத்துகளத்தில் இணைந்ததில் ஒர் ஆத்ம திருப்தி.

சொந்தங்கள் சந்திப்பதால்.

தமிழக தமிழன்

Link to comment
Share on other sites

'நம் தம்பி', அருமையான குறியீட்டுப் பெயர். முதலில் உமக்கு எனது அன்பு நன்றிகளும் கனிவான வணக்கங்களும். ஏற்றுக்கொள்ளவும்.

'தமிழகத் தமிழனாக' நீர் அடையும் வேதனை எமக்குப் புரிகிறது தோழா. என்ன செய்வது? தமிழினத் தலைவர்கள் என்றும் தமிழ்த் தலைவர்கள் என்றும் தம்மைத்தாமே கூறிக்கொண்டவர்கள், அற்ப பதவிச் சுகங்களுக்காகவும், வரட்டுக் கெளரவத்திற்காகவும் சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்து தடம்புரளும்போது, உண்மையான தமிழுணர்வுள்ள உங்களைப்போன்றவர்களுக்கு நிட்சயமாக வலிக்கும் என்பது உண்மைதான். உம்மைப்போன்ற உணர்வுகொண்ட, தமிழுணர்வுகொண்ட பல இனிய இதயங்கள் இங்கே இன்னும் இணையவேண்டும். அழைத்து வந்து இத் தளத்தில் இணைத்துவிடுங்கள். எமது விடுதலைத்தீ இன்னும் பற்றிஎரியவேண்டும். விரைவிலே..... தமிழனுக்கென்று ஒரு தமிழ் நாடு இப்புவியிலே உதயமாகட்டும்..... மீண்டும் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்.

இங்கு என்னை வரவேற்ற மற்றைய உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

நன்றி நிலாமதி.

இந்த கருத்துகளத்தில் இணைந்ததில் ஒர் ஆத்ம திருப்தி.

சொந்தங்கள் சந்திப்பதால்.

தமிழக தமிழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திற்கு புதிய வரவான ,

வதாவிற்கும் , நம் ( தமிழக ) தம்பிக்கும் இனிய வணக்கங்கள் .

உங்கள் இருவரையும் வருக , வருக என வரவேற்கின்றேன் . :wub::D

ஏன் இருவரும் ஒரு அறிமுகப் பகுதியில் நிற்கின்றீர்கள் .

நம் தம்பி தனியே ஒரு அறி முகப் பகுதியை தொடங்கலாமே . உங்கள் விருப்பம் அதுவென்றால் சரி .

Link to comment
Share on other sites

  • 1 month later...

நன்றி தமிழ்ச்சிறி....

நீண்ட நாட்களாக வரமுடியவில்லை...தாமதத்துக்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பா உங்கள் வரவு நல்வரவாகட்டும் .

தோள் சேர்ப்போம் , எம் மக்களின் அமைதி வாழ்வுக்காய் ஒரு துளி சேர்ப்போம் .

செயலால் ஒரு சேதி சொல்ல உங்களையும் அழைக்கிறேன்

நன்றி

அன்புடன் ரகு PAS ( 0041 76 3888 101)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வதா மற்றும் தமிழகத்து நம்தம்பி இருவரையும் யாழ்க் கள உறவுகளோடிணைந்து வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்.

நாங்கள் இந்த அரசியல்வாதிகள் பற்றி கவலைப்படுவதில் அர்த்தமில்லை. அவர்கள் புகழ்பெற்ற நடிகர்கள். நடிகர்கள் மட்டுமல்ல தம்மினத்தையே கதிரைச் சுகத்திற்காக விற்றுவிடக் கூடியவர்கள். ஆனால் அதே மண்ணிருந்துதான் இன்று முத்துக்குமாரென்ற மான மறவனும் 1995யாழ் இடப்பெயர்வின்போது அப்துல் ரகூப்பென்;ற மான மறவனும் தீயிலே கொதித்து நீதியைக் கேட்டார்கள். பதினைந்து அகவைகளின் முன் தமிழகம் இருந்த நிலையா இன்று. தன்மானமுள்ள தமிழகத்து உறவுகளின் மனங்களிலே ஈழம் பற்றிய கனவு, ஈழத் தமிழினத்தின் நல்வாழ்வு பற்றிய கனவு இன்று பெரும் தீயாக அவர்களது மனங்களிலே எரிகிறதே, அது ஒன்றே எமது தேசத்தைப் படிப்படியாக விடுவிக்கும்.

பிரித்திருப்பது கடல் மட்டுமே. ஆனால் நாம் உணர்வால் ஒன்றித்து தமிழால் கட்டுண்டு, அந்த விடியலின் வருகைக்காகக் காத்திருக்கும் தமிழ் உறவுகளானோம் என்பதே மகிழ்ச்சிதானே.

தமிழினம் இனியெவன் கால்களுக்கும் சேவகம் செய்யாது. அரியனை ஏற்றிடும். அவள் மானத்தைக் காத்திடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.