Jump to content

இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் - 2 மாணவர்கள் மயக்கம்


Recommended Posts

இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் - 2 மாணவர்கள் மயக்கம்

செங்கல்பட்டு: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் சட்ட மாணவர்களில் 2 பேர் இன்று மயக்கமடைந்தனர்.

இலங்கை அரசின் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று அவர்களை நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, கெளதமன் ஆகியோர் சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் ஈழத்தில் போர் நிறுத்தப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக அவர்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. இன்று செம்புகுமார் மற்றும் ஆறுமுக நயினார் என்ற இரு மாணவர்கள் மயக்கமடைந்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பாமகவினர், பொதுமக்கள் மற்றும் சக மாணவர்கள் இரு மாணவர்களையும், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஏற்கனவே நான்கு மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் தற்போது மேலும் இருவர் மயக்கமடைந்துள்ளதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

thatsTamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன உணர்வுமிக்க இளைஞர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன உணர்வு மிக்க இளைஞர்கள் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் எம் நன்றிகள்.

உண்ணாவிரதம் வேண்டாம். கரம் இணைத்து இருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

தயவு செய்து உங்கள் பட்டினி போராட்டத்தை நிறுத்தி , வேறுவழியில் உங்கள் போராட்டத்தை தொடருங்கள் மாணவர்களே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு சோதரர்களே உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்,உங்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம்.ஈழத்தமிழர்களை மதிக்காதவர்களுக்கும் தனி தமிழீழத்தை அங்கீகரிக்காதவர்களுக்கும் தமிழகத்தில் இடம் இல்லை என்று காட்டுங்கள் அதுவே போதும்.

Link to comment
Share on other sites

அன்பான தமிழ்நாட்டு உறவுகளே உண்ணாவிரதத்தை கைவிட்டு எமக்கு நிறைய வழிகளில் உதவலாம். உங்களின் உயிரை பாரத தேசம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. உங்களின் உணர்வுகளுக்கு தலை வணங்குகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனையே கணக்கெடுக்காத இந்திய மத்திய அரசு இந்த மாணவர்களை எம்மாத்திரம் ஒற்றுமையே பலம் இணைந்திருங்கள் எங்களுடன் மாணவர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரத மாணவர் உடல் நலம் பாதிப்பு

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக நேற்றும்(24.1.09) உண்ணாவிரதம் இருந்தார்கள்.

திரைப்பட நடிகர் சத்யராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மற்றும் டைரக்டர் செல்வமணி, கவுதமன் ஆகியோர் நேற்று செங்கல்பட்டுக்கு வந்து உண்ணாவிரத பந்தலில் சட்டக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

இதில் உண்ணாவிரதம் இருந்த கெம்புகுமார் என்ற சட்டக்கல்லூரி மாணவரின் உடல் நலம், திடீர் என்று பாதிக்கப்பட்டது.

பாமக தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. , அவரை மருத்துவனைக்கு அழைத்துச்சென்றார்.

நன்றி: நக்கீரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலக உருண்டையின் முகங்களாக தெரியும் பல நாடுகளும் அவற்றினை ஆளும் சட்டங்களும் அதனை அமல்படுத்தும் நிர்வாக மையங்களுமே மிக மோசமான தனி மனித உரிமை மீறல்களுக்கு சிறந்த உதாரணங்களாகும்,உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாடு எனக்கூறப்படும் இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைகிறது என்றால் அதற்கு அரசியல் வாதிகள் குற்றம் கூறுவது தமிழர்களையே.மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரச இயந்திரம் தனது கடமையை ஒழுங்கு பட செய்து தனிமனித சுதந்திரத்தைப்பேணுவதை விடுத்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதிலும்,அரசியல் காழ்ப்புணர்ச்சி பழிவாங்கலுக்கு அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் தனி மனித உரிமைகளுக்கெதிரான மோசமான பயங்கரவாதிகளாகி விட்டார்கள்.

தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை அங்கீகரித்தால் ஆயுதக்கலாச்சாரம் வளர்ந்துவிடும்,பூங்கா சுடுகாடாகிவிடும் என்று இந்த அரசியல் குண்டர்கள் கூறிக்கொண்டே அரங்கேற்றும் அரசியல் படுகொலைகள் எண்ணில்லடங்காது.

தமிழன் சுதந்திரமாகக்கருத்துக்கூறம

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.