Jump to content

மீண்டும் அரங்கேறவுள்ள ஏமாற்று நாடகம் ........


Recommended Posts

125000 தமிழ் மக்கள் பங்கு பற்றி லண்டனில் வரலாற்றை எழுதிய .....

சில நூறு ஈழத்தமிழர்களை வாக்காளர்களாக கொண்ட லெஸ்ரர் பாராளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் வர முடியுமானால், பத்தாயிரத்து மேற்பட்ட ஈழத்தமிழர்களை வாக்காளர்களாக கொண்ட கரத் தோமச் வரமுடியாதா???????????

இக்கெள்விக்கு இன்று பதில் சொல்லட்டும்!!

Link to comment
Share on other sites

பொண்ட்007 சொன்ன மாதிரி, இக்கூட்டம் பிரித்தானிய தமிழ் மக்களுக்கு திரு கரத் தோமஸ் பம்மாத்து விட ஏற்பாடு செய்ததாக போனவர்கள் கூறுகிறார்கள். போன பலர் திரு கரத் தோமஸை கடுமையாக, அவர் முன்பே விமர்சித்ததாகவும், இனியும் ஏமாற மாட்டோம் என்று கூறி வந்ததாகவும் தகவல்.

நீண்ட காலமாக பிரித்தானிய தமிழ் மக்களின் 99 வீதமானவர்கள் தொழில்கட்சிக்கே வாக்களித்தும், அதன் அங்கத்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் எமக்கு தொழில் கட்சி செய்ததெல்லாம் .... அண்மைக்காலமாக சந்திக்கு வந்திருக்கிறது.

இவர்களும் நினைக்கிறார்கள், பிரித்தானிய தமிழ் மக்களுக்கு வேறு ஒரு மாற்றுவழியும் இல்லை, என்ன செய்தாலும் எமக்கே வாக்களிப்பார்கள்!!! இதை மாற்ற வேண்டும்!!!

தமிழர்கள் அதிகமாக வாழும் ஈஸ்ராம், வோல்தம்ஸ்ரோ, லூசியம், வெம்பிளி, கரோ .... போன்ற ஏறக்குறைய இருபது தொகுதிகளில் நாம் ஏன் தொழில் கட்சிக்கு மாற்றீடான இன்னொன்றை தேடக்கூடாது???????

அடுத்த தேர்தலில் பழமைவாத கட்சியான கொன்சவேட்டிவ் வெற்றி பெறுமென பெரும்பாலான தரவுகள் கூறுகின்றன. நாம் ஏன் கொன்சவேட்டிவ் கட்சியை அணுகக்கூடாது????

ஏற்கனவே குறைடன் பகுதியில் ஈழத்தமிழர் ஒருவர் கொன்சவேட்டிவ் கட்சி உள்ளூராட்சி தேர்தலுஇல் பங்கு பற்றியவர்.

மற்றும் சிங்களவரான நிரன்ஞன் தேவா, தற்போது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, இலங்கையில் நடைபெறும் பல மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கைகளை தடுத்தும் வருகிறாராம். நாம் அக்கட்சியுள் நுளைந்தால் இவரது சில நடவடிக்கைகளை தடுத்தும் நிறுத்தலாம்!!!

Link to comment
Share on other sites

ஒன்று மட்டும் நிச்சயம்.

இலங்கைத்தமிழரின் பிரச்சனை வைத்து ஈழத்தமிழன் என்று சொல்கின்றவன் தொடக்கம் எல்லாம் உலகம் முழுவதும் பெரிய கூட்டமே நன்றாக ஏமாற்றி பிழைக்கிறது... பல வருடங்களாக..

பிரச்சனைகளில் பிழைப்பவர்கள் பிரச்சனைகளைத்தீர்ப்பார்களா?

இனி சாதாரண தமிழ்மக்கள் தெருவில் இறங்கினால் தான் தமிழரின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வரும்..

எவனையும் நம்ப முடியாத நிலை.. போரட்ட கால இழுத்தடிப்பு சமாதான சாத்தான்களின் சதி.. போரட்டத்தை தமக்கு சாதகமாற்றி சுய நல வசதி வாழ்க்கை.. வெட்கம் கெட்ட பிழைப்புகள்.. வாழ்க வளர்க... உங்கள் சந்ததியும் கைகட்டி பொய் சொல்லி கூனிக் குறுகி.... நாசமாய் போகட்டும்...

காலம் ஒரு நாள் எமது இனத்திற்கு இன்னல் விளைவித்தவர்களை சங்காரம் செய்யும்.. விடுதலைக்காக தினமும் தமது இளம் வாழ்க்கையை அர்ப்பணித்து உயிரைவிடும் மானத்தமிழர்கள் ஒரு புறம்..

மானத்தை விற்று வயிறு பிழைக்கும் மானம் கெட்ட தமிழினம் ஒரு புறம்

விடுதலை எப்போது எண்ணி தெருவில் இறங்கும் அப்பாவி தமிழினம் ஒரு புறம்..

எம்மினம் எம்மக்களை விற்கும் போது வெள்ளையளை குறை சொல்லி என்ன பலன்?

எனவே எம்மினமே நீங்களே எப்போதும் விழிப்பாக அனுபவஙளில் இருந்து பாடங்கள் கற்று, பாடம் புகட்டி நல்ல வழிகாணுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்துடனோ இந்தியாவுடனோ கதைத்து எந்த விதமான பிரயோசனமும் இல்லை, செவிடன் காதில் ஊதிய சங்கே.

எனக்கு தெரிந்த சில தமிழ்நண்பர்கள் தொழில் கட்சி உறுப்பினராய் உள்ளனர். அவர்கள் தொழில் கட்சி பிரமுகர்,மேயர், பாராளுமன்ற உறுப்பினர்

போன்றவர்களுடன் எமது நெருக்கடி நிலமையை பற்றி பேசும் போது ,அவர்கள் தமது அரசு இலங்கை அரசின் அட்டூழியங்களுக்கு எதுவும்

சொல்லப்போவது இல்லை, ஏனெனில் அது ஒரு ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசு ,உங்கள் போராட்டம் தான் பயங்கரவாதம் என

முத்திரை குத்த முயல்கிறார்கள் என விரக்தியுடன் சொல்கிறார்கள்.

பி.பி.சி போன்ற ஊடகங்களே எமக்கு நடக்கும் அட்டூழியங்களை இருட்டடிப்பு செய்கின்றன.

இந்த நாட்டின் பெரும்பாலான துறைகளில் இந்தியரின் ஆதிக்கமே பரவியிருப்பதும் எம் நியாயமான போராட்டத்தினை வெளிக்கொணர

முடியாவண்ணம் தடுத்து வரும் ஒரு காரணியாகும்.

சீக்கியரின் போராட்டத்தினை எவ்வாறு இந்தியா நசுக்கியதோ, அதே முறையை இலங்கைக்கு கற்பித்து வருகிறது.

மிகமோசமான வெளியுறவு கொள்கைகளில் இங்கிலாந்தும் இந்தியாவும் சாடியும் மூடியும் போன்றவை. அமெரிக்கா கூட தன்நிலை மாறினாலும்

இவை மாற்ற மாட்டா

Link to comment
Share on other sites

நன்றிகள் தயா!! ......... உறுதியாக எமது ஆதங்கங்களை சொல்வதற்கான தருணம் வந்து விட்டது!!

Link to comment
Share on other sites

தயா, சசிகலா, ... போன்ற ஈழத்தமிழ் கவுன்ஸிலர்கள் முதலில், எம்மின அழிப்பில் பிரித்தானிய பங்குக்காக தொழில்கட்சியில் இருந்து விலகி தமது எதிர்ப்பை காட்ட வேண்டும்!!

நாங்க்கள் ஈஸ்ராம் கவுன்ஸிலரும், ஒட்டுக்குழு அரசியல்வாதியுமான போல் சத்தியநேசனிடம் இந்த கோரிக்கையை வைக்க முடியாது!! அவர் தனது எஜமானர்களான சிங்களத்தின் சொல்களுக்கு ஆடுபவர். அவரை விடுவோம், அடுத்த கவுன்ஸில் தேர்தல்வரை!!!!!!!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.