Jump to content

மீண்டும் அரங்கேறவுள்ள ஏமாற்று நாடகம் ........


Recommended Posts

125000 தமிழ் மக்கள் பங்கு பற்றி லண்டனில் வரலாற்றை எழுதிய .....

சில நூறு ஈழத்தமிழர்களை வாக்காளர்களாக கொண்ட லெஸ்ரர் பாராளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் வர முடியுமானால், பத்தாயிரத்து மேற்பட்ட ஈழத்தமிழர்களை வாக்காளர்களாக கொண்ட கரத் தோமச் வரமுடியாதா???????????

இக்கெள்விக்கு இன்று பதில் சொல்லட்டும்!!

Link to comment
Share on other sites

பொண்ட்007 சொன்ன மாதிரி, இக்கூட்டம் பிரித்தானிய தமிழ் மக்களுக்கு திரு கரத் தோமஸ் பம்மாத்து விட ஏற்பாடு செய்ததாக போனவர்கள் கூறுகிறார்கள். போன பலர் திரு கரத் தோமஸை கடுமையாக, அவர் முன்பே விமர்சித்ததாகவும், இனியும் ஏமாற மாட்டோம் என்று கூறி வந்ததாகவும் தகவல்.

நீண்ட காலமாக பிரித்தானிய தமிழ் மக்களின் 99 வீதமானவர்கள் தொழில்கட்சிக்கே வாக்களித்தும், அதன் அங்கத்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் எமக்கு தொழில் கட்சி செய்ததெல்லாம் .... அண்மைக்காலமாக சந்திக்கு வந்திருக்கிறது.

இவர்களும் நினைக்கிறார்கள், பிரித்தானிய தமிழ் மக்களுக்கு வேறு ஒரு மாற்றுவழியும் இல்லை, என்ன செய்தாலும் எமக்கே வாக்களிப்பார்கள்!!! இதை மாற்ற வேண்டும்!!!

தமிழர்கள் அதிகமாக வாழும் ஈஸ்ராம், வோல்தம்ஸ்ரோ, லூசியம், வெம்பிளி, கரோ .... போன்ற ஏறக்குறைய இருபது தொகுதிகளில் நாம் ஏன் தொழில் கட்சிக்கு மாற்றீடான இன்னொன்றை தேடக்கூடாது???????

அடுத்த தேர்தலில் பழமைவாத கட்சியான கொன்சவேட்டிவ் வெற்றி பெறுமென பெரும்பாலான தரவுகள் கூறுகின்றன. நாம் ஏன் கொன்சவேட்டிவ் கட்சியை அணுகக்கூடாது????

ஏற்கனவே குறைடன் பகுதியில் ஈழத்தமிழர் ஒருவர் கொன்சவேட்டிவ் கட்சி உள்ளூராட்சி தேர்தலுஇல் பங்கு பற்றியவர்.

மற்றும் சிங்களவரான நிரன்ஞன் தேவா, தற்போது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, இலங்கையில் நடைபெறும் பல மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கைகளை தடுத்தும் வருகிறாராம். நாம் அக்கட்சியுள் நுளைந்தால் இவரது சில நடவடிக்கைகளை தடுத்தும் நிறுத்தலாம்!!!

Link to comment
Share on other sites

ஒன்று மட்டும் நிச்சயம்.

இலங்கைத்தமிழரின் பிரச்சனை வைத்து ஈழத்தமிழன் என்று சொல்கின்றவன் தொடக்கம் எல்லாம் உலகம் முழுவதும் பெரிய கூட்டமே நன்றாக ஏமாற்றி பிழைக்கிறது... பல வருடங்களாக..

பிரச்சனைகளில் பிழைப்பவர்கள் பிரச்சனைகளைத்தீர்ப்பார்களா?

இனி சாதாரண தமிழ்மக்கள் தெருவில் இறங்கினால் தான் தமிழரின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வரும்..

எவனையும் நம்ப முடியாத நிலை.. போரட்ட கால இழுத்தடிப்பு சமாதான சாத்தான்களின் சதி.. போரட்டத்தை தமக்கு சாதகமாற்றி சுய நல வசதி வாழ்க்கை.. வெட்கம் கெட்ட பிழைப்புகள்.. வாழ்க வளர்க... உங்கள் சந்ததியும் கைகட்டி பொய் சொல்லி கூனிக் குறுகி.... நாசமாய் போகட்டும்...

காலம் ஒரு நாள் எமது இனத்திற்கு இன்னல் விளைவித்தவர்களை சங்காரம் செய்யும்.. விடுதலைக்காக தினமும் தமது இளம் வாழ்க்கையை அர்ப்பணித்து உயிரைவிடும் மானத்தமிழர்கள் ஒரு புறம்..

மானத்தை விற்று வயிறு பிழைக்கும் மானம் கெட்ட தமிழினம் ஒரு புறம்

விடுதலை எப்போது எண்ணி தெருவில் இறங்கும் அப்பாவி தமிழினம் ஒரு புறம்..

எம்மினம் எம்மக்களை விற்கும் போது வெள்ளையளை குறை சொல்லி என்ன பலன்?

எனவே எம்மினமே நீங்களே எப்போதும் விழிப்பாக அனுபவஙளில் இருந்து பாடங்கள் கற்று, பாடம் புகட்டி நல்ல வழிகாணுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்துடனோ இந்தியாவுடனோ கதைத்து எந்த விதமான பிரயோசனமும் இல்லை, செவிடன் காதில் ஊதிய சங்கே.

எனக்கு தெரிந்த சில தமிழ்நண்பர்கள் தொழில் கட்சி உறுப்பினராய் உள்ளனர். அவர்கள் தொழில் கட்சி பிரமுகர்,மேயர், பாராளுமன்ற உறுப்பினர்

போன்றவர்களுடன் எமது நெருக்கடி நிலமையை பற்றி பேசும் போது ,அவர்கள் தமது அரசு இலங்கை அரசின் அட்டூழியங்களுக்கு எதுவும்

சொல்லப்போவது இல்லை, ஏனெனில் அது ஒரு ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசு ,உங்கள் போராட்டம் தான் பயங்கரவாதம் என

முத்திரை குத்த முயல்கிறார்கள் என விரக்தியுடன் சொல்கிறார்கள்.

பி.பி.சி போன்ற ஊடகங்களே எமக்கு நடக்கும் அட்டூழியங்களை இருட்டடிப்பு செய்கின்றன.

இந்த நாட்டின் பெரும்பாலான துறைகளில் இந்தியரின் ஆதிக்கமே பரவியிருப்பதும் எம் நியாயமான போராட்டத்தினை வெளிக்கொணர

முடியாவண்ணம் தடுத்து வரும் ஒரு காரணியாகும்.

சீக்கியரின் போராட்டத்தினை எவ்வாறு இந்தியா நசுக்கியதோ, அதே முறையை இலங்கைக்கு கற்பித்து வருகிறது.

மிகமோசமான வெளியுறவு கொள்கைகளில் இங்கிலாந்தும் இந்தியாவும் சாடியும் மூடியும் போன்றவை. அமெரிக்கா கூட தன்நிலை மாறினாலும்

இவை மாற்ற மாட்டா

Link to comment
Share on other sites

நன்றிகள் தயா!! ......... உறுதியாக எமது ஆதங்கங்களை சொல்வதற்கான தருணம் வந்து விட்டது!!

Link to comment
Share on other sites

தயா, சசிகலா, ... போன்ற ஈழத்தமிழ் கவுன்ஸிலர்கள் முதலில், எம்மின அழிப்பில் பிரித்தானிய பங்குக்காக தொழில்கட்சியில் இருந்து விலகி தமது எதிர்ப்பை காட்ட வேண்டும்!!

நாங்க்கள் ஈஸ்ராம் கவுன்ஸிலரும், ஒட்டுக்குழு அரசியல்வாதியுமான போல் சத்தியநேசனிடம் இந்த கோரிக்கையை வைக்க முடியாது!! அவர் தனது எஜமானர்களான சிங்களத்தின் சொல்களுக்கு ஆடுபவர். அவரை விடுவோம், அடுத்த கவுன்ஸில் தேர்தல்வரை!!!!!!!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.