Jump to content

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.


Recommended Posts

இதுவரை எல்லா மாற்று கருத்து காரரும் புலிகள் சுட்டவை எண்ட சொல்லி கொண்டிருந்தவை அனால் இபப் சிலரின்ரை பெயர்களை இப்ப சொல்லியிருக்கிறதாலை இனி அவை தங்களுக்கு தெிஞ்சமாதிரி கை கால் வைச்சு புலிகள் தான் செய்தவை எண்ட போகினம் இனி கனக்க அரசியல் அட்டாவதாணிகளிண் பேனைகள் தங்களினத துப்புத்தலக்கும் பணியை செவ்வன செய்ய சாத்திரி ஆவனை செய்துள்ளிர்கள்.

இனி கனக்க அரசியல் அட்டாவதாணிகளிண் பேனைகள் தங்களினத துப்புத்தலக்கும் பணியை செவ்வன செய்ய சாத்திரி ஆவனை செய்துள்ளிர்கள். தொடரட்டுக்கம் துப்புப்பணி.

Link to comment
Share on other sites

  • Replies 468
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி சாரைக் காண முடியவில்லையே விரதத்தில் நிற்கிராறா?

Link to comment
Share on other sites

நவராத்திரி வீட்டுப்புசைக்கும இன்ரு விசயதசமிக்கும் சாத்திரிக்கு சாத்திரம் பார்கிற வேலைகுடவாக இருக்கமெல்லே கறுப்பி அதுதூன் காணல்லப்போலை.

சாத்திரி நேற்றைய மிச்சக்கடலை அவல் இருந்தா இங்காலம் அனுப்பும்

Link to comment
Share on other sites

மேற்கோள்:

சரி உங்கள் அயலில் அந்தக் காலப்பகுதியில் மருத்துவபீடத்தில் படித்த அல்லது அங்கு பணிபுரிந்த வைத்தியர்கள் யாராவது இருப்பார்கள். அவர்களிடம் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேட்டுப் பாருங்கள்.

மாயாவி எழுதியது

மாயாவி அவர்களே அந்த காலப்பகுதியில் இருந்த மற்றவர்களை கேட்கவேண்டியதில்லை அதுதான் நானும் அந்த காலப்பகுதியில் அங்கு இருந்தேன் என்று முதலே கூறியுள்ளேன் அதைவிட நான் கேட்டதற்கான பதில் எதையும் நீங்கள் தரவில்லை உங்களை இங்கு நான் முத்திரை எந்த இடத்திலும் குத்தவில்லை எனவே ஏன் சுட்டவர் என்று நிங்கள் சொல்லும் புலிஇயக்க உறுப்பினரின் பெயரையே இங்கு தாராளமாக குறிப்பிடலாமே

ஆனால் புலத்தில் ராஜினி சம்பந்தபட்டவர்கள் புலிகளின் சாளி என்பவரும் இவர் மானிப்பாயை சேர்ந்தவர் அதனால் எனக்கு இவரை நன்கு தெரியும் . மற்றவர் செங்கதிர் என்று இன்னொரு பெயரையும் மாறி மாறி சொல்லி வரகிறார்கள் அததான் நீங்கள் தெரிந்தவரின் பெயரையும் கூறுங்கள் என்று கேட்டேன் இதற்காக இனி நான் போய் அந்த நேரம் வைத்தியராய் இரந்தவர் எல்லாரையும் தேட முடியாது தெடுவது கடினம் எனவேதான் உங்களை கெட்கிறென்

தம்பி சாத்திரி உமக்கு தெரியாத விடயங்கள் பற்றி கதைக்க வேண்டாமே.. ரஜனி திரணகம தமிழ் பெண்ணாக பிறந்தாலும் ஒரு சிங்களத்தி. அவளை ஆர் போட்டிருப்பார் என்டு உமக்கு தெரிந்தே இருக்கும். வீண் கதை பேசி மக்களுக்கு ரஜனியை நல்ல தமிழ் மகளாக காட்ட வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி சாத்திரி உமக்கு தெரியாத விடயங்கள் பற்றி கதைக்க வேண்டாமே..

:roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சாத்திரி உமக்கு தெரியாத விடயங்கள் பற்றி கதைக்க வேண்டாமே.. ரஜனி திரணகம தமிழ் பெண்ணாக பிறந்தாலும் ஒரு சிங்களத்தி. அவளை ஆர் போட்டிருப்பார் என்டு உமக்கு தெரிந்தே இருக்கும். வீண் கதை பேசி மக்களுக்கு ரஜனியை நல்ல தமிழ் மகளாக காட்ட வேண்டாம்.

நீர் ராஜனியின் கொலைக்கு புலிகளில் பழி போடுகின்றவர்களுக்கு ஒத்து ஊத வேண்டாம். மேலும் சாத்திரி இங்கே, ராஜனி நல்லவரா, கெட்டவரா என்று கூடச் சொல்லவில்லை. கொலை செய்தது, புலிகள் என்ற வாதத்தைத் தான் மறுதலிக்கின்றார் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

எனவே, எதற்கெடுத்தாலும் புலிகளில் பழி போடுவதும், அப்படி போட்ட பின், தமிழனின் வீரமாகப் பெருமிதப்படுத்துவதையும் நிறுத்த முதலில் தெரிந்திருக்க வேண்டும். யார் யாரோ செய்கின்ற கொலைகளுக்கு பழி போட புலிகளா கிடைத்தார்கள்.

Link to comment
Share on other sites

நீர் ராஜனியின் கொலைக்கு புலிகளில் பழி போடுகின்றவர்களுக்கு ஒத்து ஊத வேண்டாம். மேலும் சாத்திரி இங்கே, ராஜனி நல்லவரா, கெட்டவரா என்று கூடச் சொல்லவில்லை. கொலை செய்தது, புலிகள் என்ற வாதத்தைத் தான் மறுதலிக்கின்றார் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

எனவே, எதற்கெடுத்தாலும் புலிகளில் பழி போடுவதும், அப்படி போட்ட பின், தமிழனின் வீரமாகப் பெருமிதப்படுத்துவதையும் நிறுத்த முதலில் தெரிந்திருக்க வேண்டும். யார் யாரோ செய்கின்ற கொலைகளுக்கு பழி போட புலிகளா கிடைத்தார்கள்.

:lol::lol::lol::lol::lol: விசயம் தெரிஞ்ச ஆக்கள்.

Link to comment
Share on other sites

ஈழபோராட்டத்தில்எனது(பொய் )சாட்சியம் தொடர் பாகம்7

சுபத்திரனிடம் பொறுப்பு ஒப்படைக்க பட்டதும் அவர் அந்த வேலையை செய்து முடிக்க தங்களது திருநெல்வேலி முகாமிலிருந்து நான்கு பேரை தெரிவு செய்து பொறுப்பை ஒப்படைக்கிறார். எங்கும் சந்திக்கு சந்தி இந்திய இராணுவத்தின் காவலரண்கள் ரோந்துகள் ஒட்டுக்குளுக்கனான ஈ.என்.டி.எல்.எவ். மற்றும் ஈ.பி. ஆர்.எல்.எவ். முகாம் என்று உயர் பாது காப்பு பகுதியாக மாறியிருந்த திருநெல்வேலியில்.1989 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 21ந் திகதி காலை வழைமை போல தனது கடைமைகளிற்காக ராஜினி தன்னுடைய சைக்கிளில் யாழ் பல்கலை கழகம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறார்.

அப்போது நடந்த சம்பவத்தை பார்த்தவர்கள் கூறியது அவரிற்கு எதிரே இரண்டு சைக்கிள்களில் நான்கு இளைஞர்கள் வந்துகொண்டிருக்கின்றனர் அவரை கடந்து ஒரு சைக்கிள் செல்ல ராஜினியை கடந்து பினேசென்ற சைக்கிளில்முன்னிற்கு இருந்தவன் ஒரு பெரிய துப்பாக்கியை சாரத்தால் சுத்தியபடி வைத்திருந்தான்.

மற்றைய சைக்கிள் அவரிற்கு எதிரே நிக்க அந்த சைக்கிளில் முன்இருந்து வந்த ஒருவன் தனது கைத்துப்பாக்கியால் முதலில் ராஜினியை நோக்கி சுட சைக்கிளை ஓட்டிவந்தவனும் ராஜினியை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டான் .ராஜினி அந்த இடத்திலேயே இறந்து போனார்.

இப்போ பெருக்கி பிரித்து பாருங்கள் கணக்கு சரியாக இருக்கும் யார் ராஜினியை கொன்றார்கள் என்று.ராஜினி கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் சிறிதரனிற்கு தலை சுற்றியது காரணம் அவரிற்கு தெரியும் அடுத்த தலை தன்னுடையததான் என்று. என்ன செய்யலாமென யோசித்தவர். இந்தியபடை காலத்தில் யாழ் அசோகா விடுதிதான் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் தலைமை முகாமாகவும் அன்றைய வடகிழக்கு முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்ட வரதராஜபெருமாளின் அலுவலகமாகவும் இயங்கிவந்தது.

எனவே;ஈ.பி. ஆர். எல்.எவ். வுடன் தொடர்புடைய ஒரு வைத்திய சாலை ஊழியரை அவசரமாக அசோகா விடுதிக்கு அனுப்பி வைத்தார். அவரை வந்து சந்திக்கும்படி அழைப்பும் கிடைத்தது.அந்த ஊழியரையும் அழைத்துக்கொண்டு அசோகா விடுதிக்கு அரக்கபரக்க ஓடினார் சிறீதரன்.அவரை மட்டும்பரிசோதனைகளின் பின்னர் உள்ளே அழைத்தனர் உள்ளே போனவரிற்கு வரதராஜபெருமாள் வணக்கம் சொன்னார்.சிரமப்பட்டு சிரித்தபடி சிறீதரனும் வணக்கம் சொல்லி எதிரே அமர ஏளனமாக பார்த்தபடியே வரதராஜபெருமாள் சொன்னார். பாருங்கள் எத்தனையாயிரம் படை எவ்வளவு ஆயுதங்கள் உலகின் மிகப்பெரிய இராணுவம் எங்கள் பக்கம்.

முழத்திற்கு முழம் சந்திக்கு சந்தி எங்கள் ஆட்கள் வடக்கு கிழக்கு எங்கும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள். இன்னமும் சில சில்லறை புலிகளே மிச்சம் சல்லடை போட்டு தேடி அழித்து அந்த புலிளை புதைத்த இடத்தில் புல்லுமுளைக்கவிடுவோம்.ஆனால

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைக் கதைத்தால், அவ்விடயம் உண்மையாகி விடும் என்று தான் ராஜன் கூல் தொடக்கம் சிறிதரன் வரைக்கும் நினைக்கினம் போல!

ஆனர்ல, முன்பு சந்திரிக்கா ஆட்சியில் இந்த அடிவருடிகளுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையை மகிந்த கொடுக்கவில்லை போலிருக்கின்றது. காலைவாரிப் பிழைக்கும் கூட்டத்தை வைத்து தன் காலை வாரிவீட்டால் என்ன செய்வது என மகிந்தவும் ஆவதானமாக இருக்கின்றார் போலும்.

Link to comment
Share on other sites

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: எனக்கு இதை விட ஒன்டும் செய்ய முடியாது. இதற்கு மேல் எழுதுவதுக்கும் எனக்கு அனுமதி இல்லை. தயவு செய்து வரலாறு எழுத கூடிய திறமை படைத்த அண்ணன்மார் எல்லாம் சரியான முறையில் தகவல்கலைப் பெற்று எழுதுங்கள். ஒன்றும் அறியா இளைய பிள்ளைகளுக்கு தவறான தகவல்களை கொடுப்பது முறையல்ல. சரியான முறையில் பாவிக்க படாத குண்டுகள் எப்போதும் எம்மையே அழிக்கும். மறந்து விட வேண்டாம். இதற்காக சாத்திரியார் எழுதிய அவ்வளவு விடயமும் தவறல்ல. அல்லது அவர் எழுதிய அந்த விடயங்கள் பற்றி எனக்கு தெரியாது. அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

வாசகன் யார் உங்களை எழுதவிடாமல் தடுத்தது தாராளமாய் வரலாற்றில் தெரிந்தவற்றையும் நீங்கள் எழுதலாம். அல்லது நான் மேலே எழுதிய ராஜினி பற்றிய தகவல் உங்களிற்கு தெரிந்திரந்தால் அல்லது நேரில் பாத்திருந்தால் எனக்கு தனிமடல் மூலம் அறிய தாருங்கள் அதை செய்தவர்வர்களின் பெயர் விபரங்கள் தெரிந்திருந்தாலும் தெரியத் தரவும் என அன்புடன் கேட்டுகொள்கிறேன்

Link to comment
Share on other sites

என்ன சாத்திரியார் உங்கட வேவு வேலையை நீங்கள் கைவிடுகிறதா இல்லைப்போல கிடக்கு.... :wink: :P :P

Link to comment
Share on other sites

தலை நான் வேவு பாக்கவில்லை தெரிந்தவற்றை ஆதாரத்துடன் எழுதுகிறென் ஆனால் வாசகன் அண்ணாதான் ஏன் அண்ணா என்றேனென்றால் அவர்தான் என்னை இங்கு தம்பி சாத்திரி என்று அழைத்தார் அப்ப அவர் எனக்கு அண்ணா தானே எனவே எனக்கு இந்த வருடகடைசியில் வயது 40 ஆகிறது அப்ப அவரிற்கு என்னைவிட ஒண்று அல்லது இரண்டு வயதாவது கூட இருக்கும் எனவே என்னை விட அனுபவவும் கூடுதலாகவே இருக்கும்.எனவே எங்கள் வரலாறு பற்றிய அனுபவங்களும் என்னைவிட ஒருபடி கூடுதலாக இருக்கும் அதுதான் நானும் தெரிந்து கொள்ள அவற்றை சொல்லசொல்லி கேட்டேன் வாசகன் அண்ணாவிற்கு சொல்வதென்னவென்றால் நான் யரிழிலும் சரி மற்றும் வேறு தளங்கள் பத்திரிகைகளிலும் எழுதிவிட்டு ஒழிபவனோ அல்லது ஒழிந்திருந்து எழுதுபவனொ அல்ல எனவே உங்கள் கருத்துகளை எனக்கு தாராளமாக தெரிவிக்கலாம் எனது சொந்த பெயர் சிறீ எனது ஊர் மானிப்பாய் வசிப்பது பிரான்ஸ் தொ. பே இலக்கம் 0033611149470 நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஏன் சாத்திரியண்ணா தொலைபேசி இலக்கம்! களத்தில் உண்மை தெரிந்த வாசனால் பதில் எழுத முடியாதா என்ன?

Link to comment
Share on other sites

உங்களுக்கு 40 வயது எனும் போது நீங்கள் என்னை விட சில ஆண்டுகள் மூத்தவரே உங்களை தம்பி என்று விழித்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்டு விடுகிறேன். எனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த விடயம் பற்றி மேலும் கதைப்பதை தவிர்க்கிறேன். மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலை நான் வேவு பாக்கவில்லை தெரிந்தவற்றை ஆதாரத்துடன் எழுதுகிறென் ஆனால் வாசகன் அண்ணாதான் ஏன் அண்ணா என்றேனென்றால் அவர்தான் என்னை இங்கு தம்பி சாத்திரி என்று அழைத்தார் அப்ப அவர் எனக்கு அண்ணா தானே எனவே எனக்கு இந்த வருடகடைசியில் வயது 40 ஆகிறது அப்ப அவரிற்கு என்னைவிட ஒண்று அல்லது இரண்டு வயதாவது கூட இருக்கும் எனவே என்னை விட அனுபவவும் கூடுதலாகவே இருக்கும்.எனவே எங்கள் வரலாறு பற்றிய அனுபவங்களும் என்னைவிட ஒருபடி கூடுதலாக இருக்கும் அதுதான் நானும் தெரிந்து கொள்ள அவற்றை சொல்லசொல்லி கேட்டேன் வாசகன் அண்ணாவிற்கு சொல்வதென்னவென்றால் நான் யரிழிலும் சரி மற்றும் வேறு தளங்கள் பத்திரிகைகளிலும் எழுதிவிட்டு ஒழிபவனோ அல்லது ஒழிந்திருந்து எழுதுபவனொ அல்ல எனவே உங்கள் கருத்துகளை எனக்கு தாராளமாக தெரிவிக்கலாம் எனது சொந்த பெயர் சிறீ எனது ஊர் மானிப்பாய் வசிப்பது பிரான்ஸ் தொ. பே இலக்கம் 0033611149470 நன்றி

தொலைபேசி இலக்கம் தந்து விட்டிங்க சாத்திரி சார். இனி உங்க வீட்டு தொலைபேசி எப்போதும் அடிச்சபடிதான் இருக்கபோகுது ஒவ்வொருமுறையும் அடிக்கும்போது எங்கே நான் தான் அடிக்கிறேனா எண்டு நினைக்காதிங்கோ நான் அடிக்க மாட்டன்.

Link to comment
Share on other sites

அடிக்கட்டும் கறுப்பி தொலை பேசியடிச்சு நாலு பேர் நாலு திட்டு திட்டினாத்தான் எனக்கு நித்திரை வரும் இல்லாட்டி எனது மனது கவலைப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புஸ்பராஜா புனைந்ததை சாத்திரி விடுவிக்கிறார். சாத்திரி புனைவதை யார் விடுவிப்பதோ?!

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர் முயற்சிக்கலாமே! இல்லாவிட்டால், புனைவு என்ற வார்த்தையைப் பாவித்து, புஸ்பராசா விட்ட புழுகோடு ஒப்பீடு செய்யாதீர்.

Link to comment
Share on other sites

நன்றிகள் சாஸ்திரி, தொடருக்கு...

இதில் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், ரஜனி திரணகம கொல்லப்படுவதற்கு முன் சில நாட்களாக இந்திய இராணுவம் மற்றும் ஈ.பி.ஆர்.அல்.அப் உடன், அவர் கொண்டிருந்த பாரிய முரண்பாடுகள், அக்காலத்தில் நடந்து கொண்டிருந்த மனித உரிமை மீறல்களுக்கான குரல்களை அடக்கப் பலியாக்கப்பட்டவரே ரஜனி திரணகம!

இக்கொலையை இன்று வரை புலிகள் தலையில் போட இவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆயுதம் நிர்மலா எனும் ரஜனியின் சகோதரியே! புலிகளுடன் இந்தியாவில் இருந்த காலத்தில் புலிகளின் மகளிர் கட்டமைப்பு பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்படுமென நம்பியிருந்த இவருக்கு ஏமாற்றம் கிடைத்ததும் மற்றும் இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டதிலும் கொதிப்படைந்திருந்த நிர்மலாவிற்கு, களம் அமைத்துக் கொடுத்தது லண்டன் வருகையே!!

தனது தனிப்பட்ட கோபத்துக்கு, சகோதரியின் கொலையை தொடர்ந்து பாவிக்கத் தொடங்கினார். தொடர்ந்தும் கொண்டிருக்கிறார் ....

Link to comment
Share on other sites

ம்ம் சாத்திரிக்கு கறுப்பி போண் பண்ணாமல் விட்டால் சரி....இல்லன்னா முனிஸ் ஒட தூக்கம் போய்டும்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கட்டும் கறுப்பி தொலை பேசியடிச்சு நாலு பேர் நாலு திட்டு திட்டினாத்தான் எனக்கு நித்திரை வரும் இல்லாட்டி எனது மனது கவலைப்படும்

நீங்க தான் மத்தவயள திட்டிறதா கேள்விபட்டேனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் சாத்திரிக்கு கறுப்பி போண் பண்ணாமல் விட்டால் சரி....இல்லன்னா முனிஸ் ஒட தூக்கம் போய்டும்... :lol:

மூனிஸ் ஒட தூக்கம் போகாது சுண்டல் சார்.

சும்மா சும்மா சாத்திரி சாரை விரட்டத்தான்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஈழப்போராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் பாகம் 8

இந்தவாரத்தொடர் நிர்மலா பற்றியது புஸ்பராசாவின் புத்தகம் பற்றிய விமர்சனத்தில் இருந்து சிறிது விலகிசென்றாலும் இன்றைய காலத்தின் மற்றும் இன்றைய இளம் புலம் பெயர் சந்ததியினரிற்கு சில விடயங்களையும் தெழிவு படும்தும் நோக்கத்திற்காகவும் எழுதப்படுகிறது ராஜினியின் சகோதரி நிர்மலா இவரது கணவர்பெயர் நித்தியானந்தன் நிர்மலா நித்தியானந்தன் என்கிற பெயர் 82 களில் இலங்கையில் பத்திரிகைகளில் பிரபல்யமாக அடிபட்ட பெயர்

போராளிகளிற்கு உதவினார்கள் என்பதாலும் ஆயுதபோராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்கிற காரணத்ததால் இலங்கையரசால் சிறையிலடைக்கப்பட்டு 83 யூலை படுகொலைகளில் வெலிக்கடை சிறையில் இருந்து உயிர் தப்பி பின்னர் அங்கு உயிர் தப்பியவர்கள் மட்டகளப்பு சிறைக்கு மாற்றபட்ட பொழுது இவர்களையும் மட்களப்பு சிறைக்கு மாற்றினார்கள் அங்கு 23ந்திகதி செப்ரெம்பர் மாதம் 83 ஆண்டு உள்ளிருந்த பல இயக்கங்களையும் சார்ந்தவர்களால் மட்டகளப்பு சிறை உடைக்கபட்டு பலர் தப்பியோடினார்கள்

அதில் நித்தியானந்தனும் தப்பிக்கொள்ள இந்நத சிறையுடைப்பு சிறையிலிருந்த ஆண்கள் தாங்கள் மட்டும் தப்பியோடும் நோக்கில் உடைக்கபட்டதால் சிறையின் பெண்கள் பகுதியிலிருந்த பெண்களையோ நிர்மலாவையோ அவர்களால் மீட்க முடியவில்லை தப்பியோடி வெளியில் வந்தவர்களிற்கு அந்த நேரம் புளொட் மற்றும் ஈபிஆர்எல் எவ் அமைப்பினர் உதவி செய்து அவர்களை இந்தியா தமிழ் நாட்டிற்கு தப்பிசெல்ல உதவினார்கள்.

பின்னர் தாங்கள் தான் அந்த சிறையை உடைத்தது என புளொட்டும் ஈபி யும் பின்னர் மாறி மாறி உரிமை கோரி கொண்டனர். இது இப்படியிருக்க 84ம் புலிகள் மட்டகளப்பு சிறையை உடைத்து நிர்மலா மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் ஊடாக தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரிற்கு புலிகள் அமைப்பினரே உதவிகள் செய்து புலிகள் அமைப்பின் ஆதரவு ஏடான விடுதலைப்புலிகள் என்கிற பத்திரிகையை நிருவகிக்கும் பொறுப்பும் இவரது கணவன் நித்தியானந்தத்துடன் இணைத்து வழங்கப்பட்டது.

இதே காலகட்டத்தில் புலிகள் அமைப்பு பெண்கள் படைப்பிரிவை கட்டியமைக்கும் பணியை ஆரம்பித்திருந்தனர் அப்போது புலிகள் இயக்கத்தில் அதிகளவு பெண்கள் இணைந்திருக்காத காலகட்டம் எனவே புதிதாய் போராளிகளை இணைக்கவும் ஏற்கனவே இணைந்த போராளிகளிற்கு அரசியல் மற்றும் போராட்டம் பற்றிய தெளிவூட்டல்கள் என்பனவற்றை வழங்க புலிகளின் தலைமை முடிவுசெய்து அதற்கான பொறுப்பை திருமதி அடேல் பாலசிங்கத்திடம் அந்த பொறுப்பு கையளிக்கப்பட்டது.

இது நிர்மலாவிற்கு வெறுப்பை உண்டு பண்ணியது.தானே பெண்ணியவாதியெனவும் படித்தஇலக்கியவாதி ஈழப்பெண்களில் போராட்டத்திறகாக சிறைசென்றபெண் நானிருக்க எப்படி அடேல் பாலசிங்கத்திற்கு அந்த பொறுப்பை கொடுக்கலாமென்று இயக்கத்தினுள் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி இயக்கத்தை விமர்சிக்க தொடங்கினார். இவரை பற்றி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய சுதந்திர வேட்கை என்கிற நூலில் பக்கம்115ல் இவ்வாறு கூறுகிறார் " விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நிர்மலாவை இணைப்பதற்கு பிரபாகரன் அவர்கள் ஆர்வமாக இருக்கவில்லை

பெண்ணிய எண்ணக்கரு தொடர்பான தெளிவான முரண்பாடு இருவரது எண்ணப்போக்கிலும் காணப்பட்டது.பிரபாரகரனுடைய சித்தார்ந்த பார்வையில் நிர்மலாவினது பெண்விடுதலைப்பார்வை ஒர் அச்சடித்த மேற்குல பெண்விடுதலைப் பார்வையாக இருந்ததேயன்றி உண்மையாக விடுதலை வேண்டி நின்ற தமிழ்பெணகளை இனம்கண்டு தழுவக்கூடிய பெண்விடுதலை இலட்சியமாக இருக்கவில்லை.

எனவே பெண்கள் பிரிவை கட்டியெழுப்பும் எந்தவொரு பொறுப்பையும் நிர்மலாவிடம் கொடுக்கும் திட்டம் பிரபாகரனிடம் இருக்கவில்லை" . இப்படி எழுதியிருக்கிறார்.அதைவிட புலிகள் அமைப்பில் ஆயுதம் தாங்கிய முதல் பெண் போராளி என்று பார்த்தாலும் கூட அது திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களே. தனக்கு பதவிகள் பொறுப்புக்கள் தராததால் நிர்மலா வெறுப்படைந்து புலிகள் இயக்கத்தை விமர்சிக்க தொடங்கினார் அதே நேரம் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் புலிகளின் தலைமைக்கு மிகநெருங்கியவராகவும் இருந்த வடக்கு புன்னாலைகட்டுவனைச்சேர்ந்த சின்னையா சிவகுமார் (ராகவன்) என்பரிற்கும் இவரிற்கும் காதல் பூத்து கனிந்தது

இதனை அறிந்த நித்தியானந்தன் புலிகளின் தொடர்புகள் மற்றும் அவர் நடாத்திய பத்திரிகையின் பொறுப்புகளை விட்டு வெளியேறி வெளிநாடொன்றிக்கு சென்றுவிட நிர்மலா ராகவனைப் பயன் படுத்தி புலிகளின் தலைமைக்கு எதிராகவும் அதே நேரம் புலிகள் அமைப்பை உடைத்து அதனை கைப்பற்றும் நோக்குடன் காய்கள் பழங்கள் எல்லாத்தையும் நகர்த்திப்பார்த்தார்.

ஊகூம் ஒண்றும் நடக்கவில்லை அதுமட்டுமல்ல ஒரு விடுதலைப்போராட்டத்தை கட்டுக்கோப்புடன் உறுதியாக கொண்டு நடாத்தகூடிய வல்லமை ராகவனிடம் இல்லையென்பது ராகவனுக்கே தெரியும் அதுமட்டுமல்ல நிர்மலாவின் பேச்சைகேட்டு யாரும் அவரை நம்பி பின்னால் போகிற நிலைமையிலும் இருக்கவில்லையென்பதும் உண்மையே . எனவே இவர்கள் இருவரும் இயக்கத்திலிருந்து வெளியேறி அவர்கள் விரும்பிய படி விரும்பிய இடத்திற்கு சென்று அவர்களின் சொந்த வாழ்க்கை தொடர இயக்கத்தின் தலைமை வழியனுப்பி வைத்தது.

இவர்கள் இருவரும் புலத்து பெண்ணியம் பேசும் ராயேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் உதவியுடன் இங்கிலாந்து வந்து குடியேறி எங்கிருந்து என்ன செய்கிறார்கள் என்றே பல ஆண்டுகள் சத்தமில்லாமல் இருந்தவர்கள் தற்சமயம் புலிகள் இலங்கை அரசுடன் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்பின்னர் பழைய குருடியின் வீட்டுகதவை தட்டதொடங்கியிருந்தாலும் தமிழர்கள் யாரும் இவர்கள் கதை கேட்கும் குருடர்களாய் இல்லை என்பது மட்டுமல்ல ராஜினியுடன் அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே தொடர்புகள் ஏதும் இல்லாதிருந்த திரணகமவும் மற்றும் மனைவின் நடத்தைகளால் அவரைவிட்டு பிரிந்த நித்தியானந்தனும் இவர்களுடன் சேர்ந்து புலியெதிர்ப்பு கதைப்பது வேடிக்கை.

கூடவே சேர்ந்து வேறு பலபுலத்து புலியெதிர்பு காரர்களையும் நிர்மலா ஒண்றிணைத்து மனிதவுரிமைவாதிகள் என்கிற பெயரில் புலிக்கு புல்லு தீத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை புண்ணாக்காவது தீத்தியே தீருவது என்று புலம்பி திரிகிறார்கள். மீண்டும் புஸ்பராசாவின் புத்தகத்தை தட்டுவோம்.அதில் பத்மநாபாவை மட்டுமல்ல இந்திய படை காலத்தில் வடகிழக்கு மாகாண முதலமைச்சராய் இருந்த வரதராயபெருமாள்பற்றி பக்கம் 326 ல் இப்படி சொல்கிறார் வடகிழக்கிற்கு முதலமைச்சராக வரும் எல்லா தகுதியும் கொண்ட ஒரவரையே பத்மநாபா முதலமைச்சராக்கினார்்

இப்போது இருக்கும் அத்தனை அரசியல் வாதிகளிற்கும் சவால்விட கூடிய கூர்மையான அறிவுத்திறண் கொண்டஒரு இளம் அரசியல் வாதியாக அவரைப்பார்த்தேன் எங்களது மக்களிற்காக ஜெனரல் கல்கத்தடன் அவர் எவ்வளவோ வாதாடினார். சந்தேகம் கொள்பவர்கள் ஒரு சுதந்திரமான சூழலில் அவரை அரசியல் களத்தில் விட்டுப்பாருங்கள் என்று சவால் விடுகிறேன் என்று சவாடல் விட்டு அவர் சார்ந்திருந்த ஈ பி அர் எல் எவ் இயக்கத்தை பற்றி அவர் வைக்கின்ற புழுகு பூக்களை வைக்க எமது காதின் அளவு போதாது. அதேநேரம் ஒரு கணிசமான தொகை உறுப்பினர்களையும் பலத்தையும் கொண்டிருந்த அதே நேரம் எண்பதுகளின் முக்கியமான 5 இயக்கங்களின் வரிசையில் இருந்த ஈபிஆர் எல் எவ் இயக்கத்தை பற்றி ஆகா ஓகொ என்று புகழ்ந்தவரால் அந்த இயக்கம் இயங்கிய காலத்தில் இலங்கை அரசபடைகளிற்கெதிராக உருப்படியாக செய்த ஒரு தாக்குதலை கூட அவரது புத்கத்தில் விபரிக்க முடியவில்லை

காரணம் அப்படி எந்த தாக்குதல்களுமே அந்த இயக்கத்தால் செய்யப்பட்டிருக்கவில்லை.ஆனா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நிர்மலாவிற்கு வெறுப்பை உண்டு பண்ணியது.தானே பெண்ணியவாதியெனவும் படித்தஇலக்கியவாதி ஈழப்பெண்களில் போராட்டத்திறகாக சிறைசென்றபெண் நானிருக்க எப்படி அடேல் பாலசிங்கத்திற்கு அந்த பொறுப்பை கொடுக்கலாமென்று இயக்கத்தினுள் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி இயக்கத்தை விமர்சிக்க தொடங்கினார். இவரை பற்றி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய சுதந்திர வேட்கை என்கிற நூலில் பக்கம்115ல் இவ்வாறு கூறுகிறார் " விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நிர்மலாவை இணைப்பதற்கு பிரபாகரன் அவர்கள் ஆர்வமாக இருக்கவில்லை

ஆனா நான் இருக்கும் நாட்டில் இருக்கும் ஒருவர் சொன்னார் முதல் சிறை உடைப்பின் போது நிர்மலாவை விட்டுவிட்டர்கள் என்றும் ஆனா புலிகள் அதேமாதிரி தாக்குதலை நடத்தி நிர்மலாவுக்கு உயிர் பிச்சை கொடுத்து இந்தியா அனுப்பியது என்றும் யாரோ ராகவன் என்பவருக்க்கும் நிர்மலாக்கும் சம்திங் சம்திங் எல்லாம் வந்ததாகவும் நித்தியானந்தன் நல்ல ஒரு அறிவிப்பளர் என்றும் பிரபாகரன் மீது ந்லல மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்றும் இதனால் பல பிரச்சனைகளுக்கு புலிகள் முகம் கொடுத்த போது தான் நிர்மலாவின் நடத்தையையும் கருத்தில் கொண்டு தான் அவாவையும் ஓரங் காட்டினார்கள் என்று சொன்னார்கள்

ராகவனும் தலைவர் பிரபாகரனோடு நடப்பாக இருந்தாலும் ந்நிர்மலாவின் இன்பத்தின் இம்சைக்குல்ளே உள் வாங்கப்பட்டார் என்று சொன்னார்கள் இதை சொன்னது

லண்டனில் இருக்கும் முன்னால் யாழ் இந்து கல்லுரியின் மாணவனும் லெப் கெண்ல ராதா அண்ணாவுடன் படித்த நன்பர் என்ற ஜூட் என்பவர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.