Jump to content

ஈழத்தமிழர்கள் -அறிந்து கொள்ளவேண்டிய அரிய செய்திகள்


Recommended Posts

(ஈழத் தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் என்று விரும்பும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய செய்திகள் - இணையதளத்தில் கிடைத்தது)

அய்ரோப்பியக் காலனியர்கள் கால்வைத்த காலத்தில், இப்பொழுது சிறீலங்கா என்றும், அப்பொழுது சிலோன் என்றும் அழைக்கப்பட்ட இலங்கைத் தீவில், மூன்று முடியரசுகள் இருந்தன; ஒவ்வொன்றும் முழு அதிகாரம் பெற்ற தனியரசாகவும், தனித்தனி நில எல்லையைக் கொண்டதாகவும் இருந்தது. அந்த மூன்று அரசுகளையும் 1833இல் பிரிட்டிஷ் அரசு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவந்தது. 1948இல் விடுதலை அளித்த பொழுது, தீவு முழுமைக்குமான ஆட்சியை, பெரும்பான்மை தேசியமான சிங்களரின் கீழ் பிரிட்டன் ஒப்படைத்தது.

நீதியும் தன்மதிப்பும் உடையவர்களாய், சம நிலையில் வாழ வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் உரிமைப்போர் நடத்து கிறார்கள். நாடு விடுதலையடைந்த காலத்தில் இருந்து, அரசியல், பொருளாதாரத் துறைகளில், பெரும்பான்மை சிங்களத் தேசியம் மேலாதிக்கம் செலுத்துகிறது; இராணுவத்தைக் கொண்டு தமிழர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது; அவர்களுக்கு எதிராக வேறுபாடு காட்டப்படுகிறது; அவர்களுடைய மனித உரிமைகள் மீறப்படுகின்றன.

1956ஆம் ஆண்டுவரை, ஓர் ஒற்றை ஆட்சியில் இருக்கத் தமிழர்கள் ஒத்துக் கொண்டனர்; 1956ஆம் ஆண்டுக்குப் பின்பு, கூட்டாட்சி அரசமைப்பில், சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழத் தயாராக இருந்தனர். ஆனால், தொடர்ந்து மோசமாக நடத்தப் பட்டதால், 1976 முதல், அதாவது விடுதலையடைந்து 28 ஆண்டுகளுக்குப் பின்பு, சிங்களப் பகுதியில் இருந்து தமிழர் தம் தாயகத்தைப் பிரித்து, விடுதலையுடன் வாழ முடிவு செய்தனர்.

தமிழர்கள், தங்களுக்கு எனத் தனி மொழியையும், நிலப்ப குதியையும் உடையவர்கள்; அவர்களுடைய நாகரிக வரலாறு 5,000 ஆண்டுப் பழமையானது, அவர்களுக்கெனத் தனித்த சமயக் கொள்கையும் பண்பாடும் உண்டு; தனித்த தேசியம் ஒன்றிற்குத் தேவையான அனைத்துக் கூறுகளும் தமிழர்களுக்கு உண்டு.

இலங்கைத் தீவில், சிங்களம், மற்றும் தமிழ்த் தேசியம், ஆகிய இரண்டும் போரிட்டுக் கொள்ளாமல் தனித் தனியாக அமைதியாக வாழ்வதுதானே சிறந்தது?

போர்ச்சுகல், ஹாலந்து, பிரிட்டன் போர்ச்சுக்கீசியர், 1505 ஆம் ஆண்டு சிலோனுக்கு வந்த, முதல் அய்ரோப்பியக் காலனியர் ஆவர். சிங்களப் பகுதியை வென்று 100 ஆண்டுகளுக்குப் பின்பு தமிழ்ப் பகுதிகளைத் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்தனர். போர்ச்சுக்கீசியரை அடுத்து, ஹாலந்து நாட்டைச் சேர்ந்த டச்சுக்காரர்களின் ஆட்சி, சிலோன் எனப்பட்ட இலங்கையில் ஏற்பட்டது. டச்சுக்காரர்களிடமிருந்து, ஆங்கிலேயர் ஆட்சியைக் கைப்பற்றினர்.

பிரிட்டனின் காலனியச் செயலாளர் ஒருவர்1799இல் முதன் முதலில் சிலோனுக்கு வந்து கிளகோன் குறிப்பு (ஊடநபாடிச ஆரேவந) என ஒன்றை அளித்தார். சிலோனில் அப்பொழுது வாழ்ந்த மக்களைப் பற்றியும், அவர்களின் நில எல்லை களைப் பற்றியும் அது கூறுகிறது. சிங்கள இனத்தை நிறுவியவன் எனப் புராணப்படி, விஜயன் என்பவன் குறிப்பிடப்படுகிறான். விஜயன் சிலோனுக்கு வந்த பொழுது, அங்கு ஏற்கனவே தமிழர்கள் இருந்தனர் என்பதைச் சிங்கள வரலாற்று ஆசிரியர் பால் ஈ.போரிஸ் என்பவர் எழுதியுள்ளார். விஜயன் சிலோனில் இறங்கிய பொழுது, அந்தத் தீவில் வெவ்வேறு பகுதிகளில் அய்ந்து தொன்மையான வழிபாட்டு இடங்கள் (ஈஸ்வரங்கள்) தமிழர்களால் நிறுவப்பட்டிருந்தன.

சிங்களப் பகுதியில் உள்ள கண்டி முடியரசை 1815இல் பிரிட்டன் கைப்பற்றியது. போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டானியர் ஆகிய மூன்று காலனிய ஆட்சியரும், ஒருவரை அடுத்து ஒருவர், இலங்கையில் இருந்த மூன்று பகுதிகளையும் தனித்தனியாக ஆண்டு வந்தனர். 1833இல் பிரிட்டிஷ் ஆட்சி, மூன்று பகுதிகளையும் (அதாவது யாழ்ப்பாணம், கண்டி, மற்றும் கோட்டை ஆகியவற்றை) ஒரே நிருவாகத்தின் கீழ் கொண்டு வந்தது.

சிங்களரும் தமிழரும் தனித்தனி மக்கள், வேறுபட்ட தேசியங்கள்; தேசியத்திற்கு உரிய அனைத்து இயற்கூறுகளும் (ஹவவசரெவநள) அவை ஒவ்வொன்றிற்கும் உண்டு. அய்க்கிய நாடுகள் அவையின் சட்ட திட்டங்களின்படி (ஊடிஎநயேவேள) அவற்றிற்கு சுய நிர்ணய உரிமை உண்டு.

காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை

சிலோனுக்கு 1948இல் பிரிட்டன் விடுதலையளித்தது. அப்பொழுது, செனட் எனும் இரண்டாவது அவையைக் கொண்ட ஓர் ஒற்றை ஆட்சிமுறை அரசமைப்பு (ருவையசல ஊடிளேவவைரவடி) நடைமுறைக்கு வந்தது; அந்த அரசமைப்பின் 29ஆம் பிரிவின்படி, சிறுபான்மையருக்குச் சிறிய பாதுகாப்புத் தரப்பட்டது. சிலோன் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, பிரிட்டனின் பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்ய அனுமதி யளிக்கப்பட்டது. வெஸ்ட் மின்ஸ்டர் முறை எனும், பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையின்கீழ், சிலோனில் 74 விழுக்காடு மக்களாக உள்ள சிங்களவர், அந்நாட்டில் எப்பொழுதும், தங்களுடைய பெரும் பான்மைத் தேசியத்தின் ஆட்சியை நிறுவ முடிந்தது.

சிலோன் விடுதலை அடைந்த பின்பு முதலில் இயற்றப்பட்ட சட்டங்களில் ஒன்று, குடியுரிமைச் சட்டமாகும். அதன்படி, இந்திய வம்சாவழித் தமிழர்களில் ஒரு மில்லியன் (பத்து லட்சம்) மக்கள் குடியுரிமை யிழந்தனர். இதனால், இலங்கை நாடாளுமன்றத்தில், தமிழ் உறுப்பினர் எண்ணிக்கை 40 விழுக்காடு குறைந்தது.

(குறிப்பு: இலங்கையில் உள்ள தமிழர்களில் இருவகையினர் உண்டு. ஒரு வகையினர், ஈழத் தமிழர் எனப்படுகிறவர்கள். இவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக, சிங்களவர்களுக்கு முன்பு இருந்தே அத்தீவில் வாழ்கிறவர்கள். இன்னொருவகையினர், இந்திய வம்சாவழித் தமிழர்கள். இவர்கள் 1800களில், தமிழ் நாட்டில் இருந்து, ரப்பர், காஃபி, தேயிலை முதலிய மலைத் தோட்டத்தில் வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.)

அரசின் ஏற்பாட்டின்படி சிங்களவர் குடியமர்த்தம்

அடுத்தடுத்து வந்த சிங்கள அரசுகள், திட்டமிட்டபடி, தமிழரின் தாயகப் பகுதிகளில் சிங்களரைக் குடியமர்த்தியது; இத்தகைய தவறான நடிவடிக்கைகளைத் தடுக்கத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லை. புதிதாக நீர்ப்பாசனம் பெற்ற தமிழ்ப் பகுதிகளில், அரசு உதவி யுடன் சிங்களர் குடியமர்த்தப்பட்டனர்; தமிழர்களையும் இஸ்லாமியர் களையும் விரட்டிவிட்டு அப்பகுதிகளிலும் சிங்களரைக் குடியேற்றினர்.

இலங்கைத் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக வாழ்வதைக் குலைக்கும் வகையில், அவர்களின் தாயகப் பகுதியைப் பிரிக்கும் பொருட்டுத் திட்டமிட்டு புதிய சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. இடங்கள், மற்றும் தெருக்களுக்குச் சிங்கள மொழிப் பெயர்கள் வைக்கப்பட்டன; இன்னும் அது தொடர்கிறது; பவுத்தக் கோயில்களும் சிலைகளும் புதிதாகப் பாரம்பரியத் தமிழ்ப் பகுதிகளில் நிறுவப்படுகின்றன. தமிழ்ப் பகுதிகளில் இவ்வாறு திட்டமிட்டுச் சிங்களர்களைப் பெரும்பான்மை ஆக்குவதால், நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர் எண்ணிக்கை குறைகிறது.

வடகிழக்கில் பெரும்பரப்புள்ள நிலங்கள் உயர் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன; யாழ்ப்பாணத் தீபகற் பத்தில் மூன்றில் ஒரு பகுதி விளைநிலங்கள் இவ்வாறு அறிவிக்கப் பட்டிருக்கின்றன. தங்களுடைய உணவில் புரதத் சத்திற்கு மீனைப் பெரும்பாலும் சார்ந்திருப்பவர்கள் தமிழர்கள்; அவர்களுடைய தாயகப் பகுதியின் கடற்கரை முழுதும் கிட்டத்தட்ட உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லவும், வேளாண்மைத் தொழில் செய்யவும், மீன் பிடிக்கவும், வர்த்தகத்தை மேற்கொள்ளவும் தடைகள் உண்டாக்கப் பட்டிருக்கின்றன; அந்த இடங்களில் உள்ள சிங்களப் படை வீரர்களின் ஊழல், மற்றும் போர் ஆகியன வடகிழக்குப் பகுதியின் பொருளா தாரத்தை அடிமட்ட நிலைக்குத் தள்ளிவிட்டன. வெளிநாட்டில் உள்ள குடும்பத்தார் அனுப்பும் பணத்தைக் கொண்டு அங்குள்ளவர்கள் காலந்தள்ள வேண்டியிருக்கிறது.

தமிழன் அழிப்பு :

1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981 ஆகிய ஆண்டுகளில் தமிழர்கள் பெரிய அளவில் கொல்லப்பட்டனர்; தாக்குதலுக்கு உள்ளாகி இடம் பெயர்ந்தனர்; 1983இல் தமிழ் இனப்படுகொலை எனச் சொல்லும் அளவிற்குச் சிங்களர் தமிழர்களைத் தாக்கினர்; 4000 தமிழர் மாண்டனர்; தமிழரின் தொழில்களின் சொத்துகள் 95 விழுக்காடு அழிக்கப்பட்டன.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்குச் சந்திரிகா குமாரதுங்கா போட்டியிட்டபொழுது தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பட்டியலிட்டார்; கிட்டத்தட்ட எட்டு லட்சம் தமிழர்கள் நாட்டைவிட்டுச் சென்று விட்டனர்; அவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். 10 லட்சம் பேருக்கு மேலான தமிழர்கள் உள்நாட்டிலேயே பல முறை இடம்பெயர்ந்து ஏதிலிகளாய் (அகதிகளாய்) வாழ்கிறார்கள். இலங்கையில் உள்ள 30 லட்சம் தமிழர்களில் இவ்வாறு அல்லல்படு வோரின் தொகை மிக அதிக விகிதமாகும்.

சந்திரிகா இவ்வாறு உரைத்ததற்குப் பின்பு, அதைப் போன்றே அதிக அளவில் தமிழர்களுக்கு இடர்கள் ஏற்பட்டுள்ளன. ஆள் கடத்தல், சித்திரவதை, வன்புணர்ச்சி, கொலைகள், காணாமல் போதல், குண்டுப் பொழிவுக்கு இலக்காதல், கடற்பகுதிகளில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச் சூடு - போன்றவை, தமிழர்களின் வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டன. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறை யினர், துணைக் காவல் துறையினர், துணைப் படையினர் ஆகியோர், கேள்வி கேட்பாடு இன்றித் தமிழர்களை ஏதேனும் ஒரு வகையில் வதைக்கிறார்கள்.

தமிழர் விழைவு

பூடான் நாட்டின் தலைநகர் திம்புவில், 1985இல் இந்தியா பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்தது. எல்லா இலங்கைத் தமிழ்ப் போராளிகளும், அரசியல்வாதிகளும் தங்களுடைய கோரிக்கையைச் கூட்டாக, ஒன்று சேர்ந்து, வேறுபாடு இன்றித் தெரிவித்தன; வெளிப்படையாகக் கூறின. தீர்வு ஒன்று காணப்படவேண்டுமானால் அக்கோரிக்கைகள் முற்றாக ஏற்கப்படவேண்டும்.

திம்புவில் வெளியிடப்பட்ட கொள்கைகள்:

அ) தமிழர்களை ஒரு தேசியமாக ஏற்க வேண்டும்.

ஆ) தமிழரின் தாயகம் எனும் கருத்தை ஏற்க வேண்டும்.

இ) தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்கவேண்டும்.

13வது அரசமைப்புத் திருத்தம்

இந்தியா - சிறீலங்கா ஒப்பந்தம் 1987இல் கையொப்பம் இடப்பட்டது. அதற்குப் பின்பு இலங்கை அரசமைப்பில் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்திருத்தத்தின்படி இலங்கையில் உள்ள தமிழரின் தாயகம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, அதன்படி மாநிலங்களுக்கு ஓரளவு தன்னாட்சி அளிக்கப்படவேண்டும்; அதுவும் நிறைவேற்றப்படவில்லை. வடக்கு மாநிலத்தையும், கிழக்கு மாநிலத்தையும் இணைத்துத் தமிழர் தாயகத்தை ஒன்றாக்குவது அரசமைப்புச் சட்டப்படி செல்லாது என உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது; ஆட்சியில் உள்ளவர்கள் எடுக்கும் நிலைக்குத்தக்கவாறு தீர்ப்புத் தரப்பட்டிருக்கிறது. தமிழ் அலுவலக மொழியாக அறிவிக்கப்பட்டிருப்பினும் நடைமுறைக்கு அது வரவில்லை.

பயங்கரவாதமா? விடுதலைப் போரா?

தமிழ் இளைஞர்கள் 1970களின் பிற்பகுதியில் ஆயுதம் ஏந்தத் தொடங்கினர்;

அ) மக்கள் வாக்கெடுப்பில் வெளிப்படுத்தியபடி தங்கள் தாயகத்தை விடுவிக்கவும்,

ஆ) அரசு பயங்கரவாதத்தை முறியடிக்கவும், அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள்.

இந்தப் போரில் ஈடுபட்டிருப்பவர்களைப் பயங்கரவாதிகள் எனக் கூறுவது சரியன்று. இராணுவம் அல்லாத பொதுவான குடிமக்களில் இதுவரை இறந்தவர்களில் 95 விழுக்காட்டினர் தமிழர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று; அவர்கள் சிங்களப் படையினராலும், துணைப் படையினராலும் கொல்லப்பட்டனர்.

சிங்கள இன ஆதிக்கம்

சிறீலங்கா விடுதலை அடைந்தவுடன், சிங்களர் தங்களுடைய மேலாதிக்கப் போக்கைத் தொடங்கிவிட்டனர். வேலை வாய்ப்பு, கல்வி, வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றில் தமிழருக்கு எதிராக வேறுபாடு காட்டி ஆட்சி செய்தனர். அரசின் உதவியுடன் திட்டமிட்டுச் சிங்களரைத் தமிழ்ப் பகுதிகளில் குடியமர்த்தினர். தமிழருக்கு எதிராக வேறுபாடு காட்டுவதும், அவர்களுக்கு மரபுவழியில் உரிய நிலப்பகுதியில் அவர்களுடைய எண்ணிக்கையின் விகிதத்தைக் குறைப்பதுமான சிங்களரின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து நடைபெறுகின்றன. 1924இல், கிழக்கு மாநிலத்தில் சிங்கள மக்கள் தொகை 4 விழுக்காட்டிற்குச் சற்று அதிகமாக இருந்தது; இப் பொழுது அது 30 விழுக்காட்டைத் தாண்டிவிட்டதாக மதிப்பிடப் படுகிறது; மேற்கொண்டும் சிங்களரைக் கொண்டு நிரப்புகிறார்கள்.

ஈழத் தமிழர்கள் சிறீலங்காவில் 12 விழுக்காட்டினர், ஆனால், அரசு உத்தியோகத்தில் 5 விழுக்காடு மட்டுமே உள்ளனர்.

விடுதலைக்குப் பின்பு தங்களுக்கு நேரிட்ட கேடுகளைக் களைய, மக்களாட்சி வகையில் நாடாளுமன்ற முறையில், வன்முறையற்ற காந்திய சத்தியாகிரக வழியில் தமிழர்கள் கிளர்ச்சி செய்தனர்.

சிறீலங்கா ராணுவத்தில் 99 விழுக்காடும், காவல்துறையில் 95 விழுக்காடும் சிங்களவர் உள்ளனர். சிங்களக் காடையர்கள் தமிழர்களுக்கும், அவர்களுடைய உடைமைகளுக்கும், எதிராக வன்முறையில் ஈடுபடும்பொழுது, ராணுவமும் காவல்துறையும் கண்டுகொள்வது இல்லை.

1952-1956-1976

சிங்களருடன் முதலில் தமிழர்கள் ஒற்றையரசு (ருவையசல ளுவயவந) முறையில் வாழவிரும்பினர். 1952ஆம் ஆண்டுத் தேர்தலில், தமிழர்கள், கூட்டரசுக் கட்சியை எதிர்த்து, ஒற்றையரசு முறையை ஆதரித்த தமிழ் காங்கிரசுக்கு பெரிய அளவில் வாக்களித்தனர்.

தங்களுக்கு எதிராக வேற்றுமை காட்டியதாலும், அடக்கு முறை ஏவப்பட்டதாலும் 1956 தேர்தலில், கூட்டரசுக் கட்சிக்கு வாக் களித்தனர். அந்தத் தேர்தலில், தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் எனக்கூறிப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் டுதோல்வியடைந்தனர். இதிலிருந்து, 1956இல், விடுதலையை விடக் கூட்டாட்சி முறையையே ஈழத் தமிழர்கள் விரும்பினார்கள் என்பது தெளிவாகிறது.

தமிழரின் எதிர்ப்புக்கு இடையே, 1956இல், சிங்களத்தை மட்டும் அலுவல் மொழியாக்கும் சட்டத்தை சிறீலங்கா நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இதையடுத்துத் தீவு முழுவதும், தமிழர்கள் பெரும் அளவில், 1956, 1958ஆம் ஆண்டுகளில் தாக்கப்பட்டனர்; பலர் கொல்லப்பட்டனர்.

1960ஆம் ஆண்டிற்குப் பின்பு, வடகிழக்குப் பகுதியில் ராணுவம் நிலையாக நிறுத்தப்பட்டது. இதைக் கையகப்படுத்தும் ராணுவம் (யசஅல டிக டிஉஉரயீயவடி) எனப் பிரதமர் வருணித்தார்.

சிறீலங்காவின் தேசியக் கொடியில், சிங்களவரின் சின்னமாகிய சிங்கம் பெரிய அளவில் இடம் பெற்றது. அந்நாட்டின், நாட்டுப் பண் சிங்கள மொழியில் அமைந்ததாகும்.

தமிழர்களின் கூட்டரசக் கட்சிக்கும், ஆட்சியில் இருந்த சிங்களக் கட்சி அரசுகளுக்கும் இடையில் இரண்டு முறை, தமிழர்களுக்குத் தன்னாட்சி தருவதற்கான ஒப்பந்தங்கள்செய்யப்பட்டன. ஒவ்வொரு முறையும் சிங்கள எதிர்க்கட்சி ஒப்பந்தத்தை எதிர்த்த காரணத்தால், 1957, மற்றும் 1965 ஒப்பந்தங்களை சிறீலங்கா அரசு தானே பின்வாங்கிக் கொண்டது.

தமிழர்கள் பங்கு பெறாமலேயே, 1972இல் சிறீலங்கா புதிய அரசமைப்பை உருவாக்கியது. அதன்படி நாடு குடியரசு ஆயிற்று, பவுத்தம் அரசு மதம் ஆயிற்று, செனெட் சபை ஒழிக்கப்பட்டது, பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்வது நீக்கப்பட்டது, சிறுபான்மை யருக்குச் சிறிது அளவு பாதுகாப்புத் தந்த 29ஆம் அரசமைப்புச் சட்டப் பிரிவும் இடம்பெறாமல் போயிற்று.

தங்களுடைய இடர்களுக்கு எவ்வகை நிவாரணமும் கிடைக்கப் பெறாததாலும், தொடர்ந்து அடிக்கடி பெருந்தாக்குதலுக்கு ஆட்பட்டதாலும் 1976இல் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக இணைந்தன. தமிழ் முடிமன்னர்கள்ஆண்டுவந்த, தமிழர்களின் மரபுவழித் தாயகத்திற்கு விடுதலை பெற முயலுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டு, அக்கட்சிகள் ஒருங்குகூடித் தீர்மானம் நிறைவேற்றின. தங்களுடைய பிரதிநிதிகளுக்கு, தமிழ் மக்கள் அளித்த ஒப்பளிப்பு (ஆயனேயவந) இதுவாகும்.

1977ஆம் ஆண்டுத் தேர்தலிலும், அதற்குப் பின்பு நடந்த தேர்தல்களிலும், இலங்கைத் தமிழர்கள், விடுதலையைக் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துக்கொண்டு இருக்கிறார்கள்; அதில் மாற்றம் இல்லை.

செயல் அதிகாரம் படைத்த குடியரசுத் தலைவர் ஆட்சி முறையைக் கொண்ட, புதிய அரசமைப்பு 1978இல் நிறை வேற்றப்பட்டது. இதை வரைவதிலும் தமிழரின் பகராளர்கள் (பிரதிநிதிகள்) கலந்துகொள்ளவில்லை. ஆணைப் பெண்ணாக மாற்றுவதைத் தவிர, மற்ற எல்லா அதிகாரங்களையும் தான் பெற்றிருப்பதாக, ஜெயவர்த்தனே, இந்த அரசமைப்பைப் பற்றிக் கூறினார். தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அக்கறை செலுத்தவில்லை; ஆனால், என்னுடைய சிங்கள மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என, ஜெயவர்த்தனே இங்கிலாந்து நாட்டின் டெய்லி டெலகிராஃப் (னுயடைல கூநடநபசயயீ) இதழுக்குப் பேட்டி கொடுத்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் ஜெயவர்த்தனே கொண்டுவந்தார். இனஒதுக்கல் கொள்கையைப் பின்பற்றிய தென் ஆஃபிரிக்காவில்கூடக் காணப்படாத, உலகிலேயே மிக மிக மோசமான அடக்கு முறைச் சட்டம் என, பன்னாட்டு சட்ட வல்லுநர், பால் சீகர்ட் கருத்தறிவித்தார்.

1983

பிரிவினையைப் பற்றிப் பேசுவது குற்றம் என, 1983இல் இயற்றப் பெற்ற அரசமைப்புத் திருத்தம் விதித்தது. இதைத் தொடர்ந்து, சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் இருந்த தமிழ் உறுப்பினர்கள், இந்தியாவிற்கு வெளியேறிவிட்டனர்.

1983ஆம் ஆண்டிற்குப் பின்பு ஈழத்தமிழர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இன்றிப் போய்விட்டது; ஏன் என்று கேட்பார் இன்றி, சிங்களப் படையினர் தமிழருக்கு எதிராக எதையும் செய்யலாம் எனும் நிலை உருவாகிவிட்டது. தமிழர்களுடைய வாழ்வு சகிக்கமுடியாத ஒன்றாக ஆகிவிட்டது. பெரும்பாலான காலங்களில் தமிழர் பகுதிகள் நெருக்கடி ஆட்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. படைவீரர்கள் தமிழர் களை அச்சுறுத்தியும், அடக்கியும் வருகின்றனர்.

ஈழத்தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்; மேலும் மூன்றில் ஒரு பகுதியினர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழ்கின்றனர்; அடிக்கடி அவர்கள் இடம் மாறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இலங்கைத் தீவில் தமிழ்ப் பகுதிகள் மிக மிக ஏழ்மைப் பகுதிகளாக உள்ளன; படைவீரர்களின் துணையைக்கொண்டு, சிங்கள ராணுவத்தில் இருந்தவர்கள், அல்லது இருக்கின்றவர்கள் ஆளுநர் களாக இருந்து அப்பகுதிகளை ஆள்கிறார்கள்.

விடுதலைக்காகப் போரிடும் தமிழ்ப்போராளிகளுக்கு, பயங்கர வாதிகள் என்ற முத்திரையக் குத்தி, சிறீலங்காவின் சிங்கள அரசு உலகச்சமுதாயத்தை ஏமாற்றி வருகிறது.

சாவா, உரிமை வாழ்வா - என்ற உணர்வில் தமிழ்ப் போராளிகள், சிறீலங்கா ராணுவத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். அமெரிக்கா நாட்டின் வெர்ஜினிய மாநிலத்தைச் சேர்ந்த பேட்ரிக் ஹென்றி, எனக்கு உரிமையைக் கொடுங்கள், அல்லது சாவைக் கொடுங்கள் என முதல் முழக்கம் செய்தவர் ஆவார்.

விடுதலைக்குப் போராடும் ஈழத்தமிழ்ப்போராளிகள், பயங்கரவாதிகள் அல்லர்:

தங்களுடைய தாயகத்திற்கு வெளியில் ஓர் அங்குல நிலத்தையும் தமிழ்ப்போராளிகள் விரும்பவில்லை.

பன்னாட்டு நலன் எதற்கும் எதிராகத் தமிழ்ப் போராளிகள் இல்லை.

தங்களுடைய மரபுவழித் தாயகத்தில், சிறீலங்காவின் வடகிழக்கில் தாயகத்தில் அரசியல் உரிமையோடு வாழவிரும்புகிறார்கள்.

மக்கள் நாயகமா? பெரும்பான்மை ஆட்சியா?

ஒரு மக்கள் (ஒரு தேசிய இனம்), கிட்டத்தட்ட ஒரு மனதுடன், விடுதலையுடன் வாழவேண்டும், காலனி ஆதிக்கத்தில இருந்த தங்கள் மரபுவழித் தாயகத்தை ஆளவேண்டும் எனவும் முடிவு செய்வது மக்கள் நாயக முடிவு அல்லவா?

தாங்கள் மக்களாட்சி முறையில் அமைந்த அரசு என உலகத்திற்குப் காட்டுவதற்கு சிறீலங்கா அரசு முயல்கிறது; ஆனால் அந்நாட்டின் நாடாளுமன்றம் எப்பொழுதும் நிலையாகச் சிங்களப் பெரும்பான்மை உடையதாகவே இருக்கும். இலங்கைத் தீவு முழுவதும் ஒரே வகையான மக்கள் வாழக்கூடிய இடமாக இருப்பதாயின், ஆட்சியில் உள்ள ஒரு கட்சி, அடுத்த தேர்தலில் பெரும்பான்மையை இழந்து பதவியில் இருந்து விலகலாம்; எதிர்க் கட்சி ஆட்சிக்கு வரலாம். ஆனால், சிறீலங்கா ஒன்றுக்கு மேற்பட்ட இனத்தினர் வாழும் நாடு. அங்கு சிங்கள தேசியத்தார், அவர்களுடைய பகராளர் (பிரதிநிதி) களையும், தமிழ்த் தேசியத்தார் தங்களுடைய பகராளர்களையும் தேர்ந்தெடுக்கின்றனர். இரு தேசியத்தார்களின் எண்ணிக்கை பலத்தின் காரணமாக, சிறுபான்மையராக இருக்கும் தமிழர்கள், என்றைக்குமே, குடியரசுத் தலைவராகவோ, பிரதமராகவோ, படைத் தலைவராகவோ வர இயலாது.

அனைத்துக்கட்சிப் பிரதிநிதிக்குழு

இன மோதலுக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஒன்று (ஹ ஹடட ஞயசவல சுநயீசநளநவேயவஎந ஊடிஅஅவைவநந - ஹஞசுஊ) அமைக்கப்பட்டிருக்கிறது. அது பெயரளவிற்குத்தான் அனைத்துக் கட்சிக் குழுவாக இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரைக் கொண்ட முக்கியத் தமிழர் கட்சி அதற்கு அழைக்கப்படக்கூட இல்லை. சிறீலங்காவின் தென்பகுதிக்கட்சிகளின் குழுவாகவே அக்குழு இருக்கிறது. இக்குழுவின் அறிக்கை வெளியாவது பலமுறை ஒத்திப் போடப்பட்டிருக்கிறது. அரசியல் தீர்வு என்ற பெயரால், இராணுவத்தீர்வு காண்பதற்கு, அந்தக் குழு ஒரு கண்துடைப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா 2008இல் அழுத்தம் கொடுத்தன் காரணமாக, சிறீலங்காவின் குடியரசுத் தலைவர் மற்றொரு அனைத்துக் கட்சி அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதிலும் தமிழரின் முக்கியக் கட்சி விலக்கப்பட்டிருக்கிறது.

எதிர்கால அமைதிப்பேச்சுகள்

வெளிப்பூச்சுக்கான பேச்சுகளாக அல்லாமல், உண்மையான சமாதானப் பேச்சுகள், தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டுமானால், எந்த அடிப்படையில் அவை இருக்கவேண்டும் என்பதைத் தமிழர்கள் அறிய வேண்டும்.

2002ஆம் ஆண்டுப் போர்நிறுத்த ஒப்பந்தம், அதற்கு முந்திய ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டனவற்றை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தவில்லை. விடுதலை வீரர்கள், இடைக்காலத் தன்னாட்சி அதிகாரியம் (ஐவேநசஅ ளுநடக-ழுடிஎநசபே ஹரவாடிசவைல) என ஒரு யோசனையைத் தெரிவித்தனர்; இதற்கு முந்திய (ரனில் விக்ரமசிங்கே) அரசு அதற்கு மாறான ஒரு யோசனையைக் கூறியது. அந்த யோசனைகளின் அடிப்படையில் பேச்சுகள் நடக்குமா? அல்லது இப்பொழுது உள்ள ராஜபக்சே அரசு, பேச்சு வார்த்தைக்கான வேறு யோசனைகளைக் கூறுமா?

ஈழத்தமிழ் மக்களை வலிவிழக்கச் செய்தபின்பு, சிறீலங்கா அரசு சுமத்துகிற தீர்வுக்கான பேச்சுகள் என்றால், அவற்றில் முன்னேற்றம் ஏற்படாது. பன்னாட்டு அமைப்பு ஒன்றின்கீழ், அல்லது முடிவு எடுப்பதை உறுதியளிக்கும் வல்லமை வாய்ந்த முக்கிய நாடு ஒன்றின் ஆதரவில் பேச்சுகள் நடக்கவேண்டும். தமிழர்கள் நியாயம் வேண்டுகிறார்கள், ஒவ்வொரு துறையிலும் சமத்துவத்தைச் கோருகிறார்கள்; மரியாதையான வாழ்வை விரும்புகிறார்கள்.

இவற்றை அவர்கள் பெறவில்லை எனில், முழு உரிமையுள்ள, இறையாண்மை கொண்ட தனிநாட்டை அவர்கள் இலக்காகக் கொண்டுள்ளனர்.

போரிட்டுக்கொள்ளும் ஓர் அரசுக்கு மாற்றாக அமைதியாக வாழும் இரு அரசுகள்:

கடந்த சில பத்தாண்டுகளில், பல புதிய நாடுகள் நிறுவப்பட்டுள்ளன - கிழக்குத் தைமூர், கசோவா, ஜெக் குடியரசு, ஸ்லோவாக் குடியரசு, எரித்ரியா, வங்காள தேசம், மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்து தனியாகச் சென்றவை ஆகிய அத்தகைய நாடுகள் ஆகும்.

அமைய வேண்டும் எனக் கூறும் ஈழத்தைவிடக் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட 70 நாடுகளும், குறைந்த நிலப்பரப்புக்கொண்ட 60 நாடுகளும் சுதந்திரமாக வாழ்கின்றன.

நன்றி : தமிழோவியா

பிரதியாக்கம் : யாழ்நிலவன்

Link to comment
Share on other sites

இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான வரலாற்று சுருக்கம். சென்ற 31ம் திகதி ஊர்வலத்தில் எமது இளையோரின் ஆத்மார்த்தமான பங்களிப்பு மெய் சிலிர்க்க வைத்தது. அவர்களுக்கு இப்படியான கட்டுரைகளை வாசிக்கச் செய்வதன் மூலம் மேன்மேலும் ஈழதமிழர் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

இதைவிட ஐபிசி போன்ற ஊடகங்களில் மத்திய அலை வரிசையில், இவர்களாகவே ஈழத்து வரலாறு, மக்கள் படும் அவலம் இதற்க்கு இளையோர் என்ன செய்யலாம் போன்ற விடயங்களை ஆங்கிலத்தில் உரையாடி நிகழ்ச்சிகளை வாராவாரம் தயாரித்து வழங்கலாம். இது இங்குள்ள இளையோருக்கும் நல்லது, ஆங்கிலேயரும் கேட்க்கச்செய்யலாம். மொத்தத்தில் தமிழினத்துக்கே ஒரு நல்லதாய் அமையும்.

Link to comment
Share on other sites

நன்றி தெரிவித்த மற்றும் கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள், அத்தோடு இது என் ஆக்கம் கிடையாது. சில வரலாற்று நூல்கள் தேடிக்கொண்டிருக்கின்றேன். அதாவது ஈழத்தமிழர் வரலாறு புத்தகங்கள் அண்மையில் சில வெளியாகின யாராவது இரவலாவது வழங்கியுதவ முடியுமா என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • 1 year later...

சில வரலாற்று நூல்கள் தேடிக்கொண்டிருக்கின்றேன். அதாவது ஈழத்தமிழர் வரலாறு புத்தகங்கள் அண்மையில் சில வெளியாகின யாராவது இரவலாவது வழங்கியுதவ முடியுமா என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி யாழ்நிலவன்....... இதுவரை நமது இனத்தின் வரலாற்றினை முழுமையாக அறிந்து கொள்ளாதவர்களுக்கு சுருக்கமான விளக்கத்தினைக் கொடுக்கும் என நம்புகின்றேன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.