Jump to content

தமிழர் தகவல் மையம்


Recommended Posts

எனக்கு ஒரு யோசனை(ஐடியா) தோன்றுகிறது..

உலகின் எப்போதும் தமிழ்மக்களை நேசிக்கிற நாடு ஒன்றை தெரிவு செய்து... எமக்கு என்று ஒரு சர்வதேச செய்தி தாபனம், தகவல் மையம் எப்போதும்(24மணி) ஆங்கிலத்தில் அதாவது அல் அசிரா, சி என் என், பிபிசி போன்றதுடன் தகவல்மையம் உலகத்தமிழர்களுக்காக உண்டாக்கி.. அதன் மூலம் எங்கள் போரட்டம் நியாயமானது என்பதை சர்வதேச ரீதியில் எப்போதும் செய்யக்கூடியதாகமாற்றினால்... உலகில் எம்போரட்டதில் உடன் முன்னேற்றம் ஏற்படும்..

உதாரணத்திற்கு சுனாமி அழிவு ஏற்பட்ட போது ரிரிஎன் செய்தி தாபனமூலம் இருட்டடிப்பு வெளிச்சமாக்கியது.. தேவையான தகவல்களை வெளினாட்டு செய்தி தாபனங்களுக்கு வழங்கியது.. அது போல் இப்போதும் தேவைகள் அதிகமுண்டு...

ஏன் இதை இப்போது சொல்கிறேன் என்றால் இப்போது இந்த சிங்கள (மனசாட்சியுள்ள) பெண் சொல்லும் உண்மைகளை, இவபோன்று உலகமெல்லாம பலர் இலங்கையை கண்டித்து பல அறிக்கைகளை விடும்போது

அவை சிதறி பலன் இல்லாமல் போகவேண்டிய இடங்கள் போகாமல் தமிழருக்குள் மட்டும் உலாவி மறைகின்றன.. அகவே ஒரு மத்திய தகவல் மையம் காலத்தின் உடனடி தேவை.. உங்கல் கருத்துக்கள் தேவை.. தற்போது இருக்கும் கிடிவி கூட அந்த அளவிற்கு மாற்றியமைக்கலாம்.. அல்லது ....? செயும் போது உலகசட்டஙளை மதிக்ககூடியதாகவும் இலங்கையின் சதியினால் பூச்சாண்டியினால் மூடாமலும் பாதுகாக்கப்பட்வேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு யோசனை(ஐடியா) தோன்றுகிறது..

உலகின் எப்போதும் தமிழ்மக்களை நேசிக்கிற நாடு ஒன்றை தெரிவு செய்து... எமக்கு என்று ஒரு சர்வதேச செய்தி தாபனம், தகவல் மையம் எப்போதும்(24மணி) ஆங்கிலத்தில் அதாவது அல் அசிரா, சி என் என், பிபிசி போன்றதுடன் தகவல்மையம் உலகத்தமிழர்களுக்காக உண்டாக்கி.. அதன் மூலம் எங்கள் போரட்டம் நியாயமானது என்பதை சர்வதேச ரீதியில் எப்போதும் செய்யக்கூடியதாகமாற்றினால்... உலகில் எம்போரட்டதில் உடன் முன்னேற்றம் ஏற்படும்..

உதாரணத்திற்கு சுனாமி அழிவு ஏற்பட்ட போது ரிரிஎன் செய்தி தாபனமூலம் இருட்டடிப்பு வெளிச்சமாக்கியது.. தேவையான தகவல்களை வெளினாட்டு செய்தி தாபனங்களுக்கு வழங்கியது.. அது போல் இப்போதும் தேவைகள் அதிகமுண்டு...

ஏன் இதை இப்போது சொல்கிறேன் என்றால் இப்போது இந்த சிங்கள (மனசாட்சியுள்ள) பெண் சொல்லும் உண்மைகளை, இவபோன்று உலகமெல்லாம பலர் இலங்கையை கண்டித்து பல அறிக்கைகளை விடும்போது

அவை சிதறி பலன் இல்லாமல் போகவேண்டிய இடங்கள் போகாமல் தமிழருக்குள் மட்டும் உலாவி மறைகின்றன.. அகவே ஒரு மத்திய தகவல் மையம் காலத்தின் உடனடி தேவை.. உங்கல் கருத்துக்கள் தேவை.. தற்போது இருக்கும் கிடிவி கூட அந்த அளவிற்கு மாற்றியமைக்கலாம்.. அல்லது ....? செயும் போது உலகசட்டஙளை மதிக்ககூடியதாகவும் இலங்கையின் சதியினால் பூச்சாண்டியினால் மூடாமலும் பாதுகாக்கப்பட்வேண்டும்..

நிச்சயமாக இதை தமிழர்கள் எப்போதெ அரம்பித்திருக்கவேண்டும். இனியாவது இதை செய்வார்களா?????

Link to comment
Share on other sites

தமிழின ஆர்வலர்கள், நலனில் ஆர்வமுடையவர்கள் ஒன்று சேர்ந்து அவசர தேவையாக செய்ய வேண்டும்..

மேல் உள்ள எதாவது ஒரு பெயரைப்பயன்படுத்தலாம்.. அல்லது வேறு தெரிவு செய்யலாம்

இலன்டனில் உள்ள பிரிட்டிச் தமிழ் போறம் (பி ரி எப்) போன்ற சேவையமைப்பின் உதவி நாடப்படலாம்..

முதல் வேலையாக இலங்கையின் இனவேற்றுமையை நன்கு அறிந்த எல்லா வெளி நாட்டு அமைப்புகள்,அரசியல் வாதிகள், நிருவனங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தல்..

உலகசெய்திகள். தமிழர்செய்திகள், தொழினுட்ப செய்திகள். சர்வதேச விளம்பரங்கள், முக்கிய் பேட்டிகள் இப்படி சர்வதேச செய்தி தாபனங்களின் தரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.. இதன் மூலம் பார்வையாளர்களின் அளவைக்கூட்டலாம்...

மேல் சொன்ன கூட்டமைப்பை அடிக்கடி கலந்துரையாடல், பேட்டிகள் மூலம் உலகமக்களுக்கு தெளிவான பதில்களை வழங்குதல்..

மேலும் உங்கள் கருத்துக்கள் எதிர்பார்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(...)

இலன்டனில் உள்ள பிரிட்டிச் தமிழ் போறம் (பி ரி எப்) போன்ற சேவையமைப்பின் உதவி நாடப்படலாம்..

முதல் வேலையாக இலங்கையின் இனவேற்றுமையை நன்கு அறிந்த எல்லா வெளி நாட்டு அமைப்புகள்,அரசியல் வாதிகள், நிருவனங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தல்..

உலகசெய்திகள். தமிழர்செய்திகள், தொழினுட்ப செய்திகள். சர்வதேச விளம்பரங்கள், முக்கிய் பேட்டிகள் இப்படி சர்வதேச செய்தி தாபனங்களின் தரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.. இதன் மூலம் பார்வையாளர்களின் அளவைக்கூட்டலாம்...

மேல் சொன்ன கூட்டமைப்பை அடிக்கடி கலந்துரையாடல், பேட்டிகள் மூலம் உலகமக்களுக்கு தெளிவான பதில்களை வழங்குதல்..

மேலும் உங்கள் கருத்துக்கள் எதிர்பார்கிறேன்..

ஒவ்வொரு நாட்டில் இருக்கும் தமிழ் அமைப்பிக்களினூடாக தமிழர் பிரச்சினைகளை புரிந்துகொண்ட அரசியல்வாதிகளினுடைய கருத்துக்ககை பேட்டிகளினூடு வெளிக்கொண்டு வருதல் தற்போதைக்கு முக்கியமானது என்று நினைக்கிறேன்.

தமிழின ஆர்வலர்கள், நலனில் ஆர்வமுடையவர்கள் ஒன்று சேர்ந்து அவசர தேவையாக செய்ய வேண்டும்..

மேல் உள்ள எதாவது ஒரு பெயரைப்பயன்படுத்தலாம்.. அல்லது வேறு தெரிவு செய்யலாம்

புதிதாக ஒன்று ஆரம்பிப்பதை விட, எல்லோருக்கும் தெரிந்த GTVயை நாடுவது நல்லம் என்று நினைக்கிறேன். புலம்பெயர்ந்த பொதுமக்கள்-அமைப்புக்கள் இதற்கு பொருளியல்சார்ந்த உதவிகளை வழங்குதல் கூடியபலனைத்தரும்.

Link to comment
Share on other sites

உங்கட target audience யாரு?

தமிழரா? வேற்று நாட்டவரா?

நீங்கள் கதைப்பது தனிய டெலிவிசனா?

அல்லாது தமிழரின் news wire services (reuters / AFP / AP )?

இப்படி ஒண்டு செய்ய குத்து மதிப்பா எவ்வளவு செலவாகும்.?

தொடர்ந்து மாதா மாதா செலவு என்ன மாதிரி?

KUGGOO உங்கட ஐடியா நல்லது

கட்டாயம் தேவையானது.

ஆனால் உந்த விளக்கங்களோட புலம்பெயர் மண்ணில் எந்த ஊடகமும் இல்லை.

அவை இதை நோக்கி வேலை செய்யப் போறதும் இல்லை.

நாடகம் போட்டாத்தான் சனம் பார்க்கும் என்ற சமாளிப்புக்களைத்தான் இதுவரை கேட்டிருக்கிறேன்.

நீங்கள் சொல்வதன்படி செய்ய இளம் சமதாயம் தான் தேவை.

அதுவும் world class ல செய்ய வேணும்.

பார்ப்பம்.

__________________

தமிழனுக்கு உதவாத ரிவிக்கைளை புலம்பெயர் மண்ணை விட்ட அப்புறப்படுத்தும் புனிதப் பணியில் http://tvtamil.lefora.com

Link to comment
Share on other sites

நல்ல யோசனை. யாராவது முன் வந்து செய்ய வேண்டும் . தனிப்பட செய்வது எனில் நிறைய பணம் வேண்டும்.ஏற்கனவே தொடங்கப்பட்ட தொலைக்காட்சிகள் இலாப நோக்கில் இயங்க தான் நினைக்கின்றன. அதில் ஈழப்பிரச்சனையையும் தாங்கள் கவனமெடுப்பதாக காட்டுகிறார்கள். இங்கு வளரும் தமிழ் (அடுத்த) சமுதாயமாவது செய்யலாம்.

Link to comment
Share on other sites

யோசனைகளை முன்வைப்பது மட்டும் போதாது காலம் தாமதிக்காது அவற்றினை உடனடியா முடிவெடுத்து செயற்படுத்தவேண்டிய காலத்தில இப்ப நிக்குறம், அதிலையும் உடன 108 தொடங்காமல் 1ஐ பலமா தொடங்கினா போதும், எங்கடை ஆக்கள் போட்டிக்கு போட்டி போட்டு 1000 தொடங்குறதாலதான் எல்லாம் குழம்புறது

Link to comment
Share on other sites

STOP THE WAR

Genocide of Tamils எண்டு

யாழ் நிலவன் சொன்ன மாதிரி ஆளாளுக்கு ஒண்ட தொடங்காமா ....

வன்னியில இருந்து வந்த clips எல்லாம் பார்க்க ஒரு இடம் இல்லை.

படங்கள் பார்ப்பம் எண்டா எல்லா நாயும் தன்ட வெப்சைட் பேரை குறுக்கால அடிச்சு வைச்சிருக்கும்.

சரி போஸ்டர் அடிப்பம் பெரிய படமா தாங்கள் எண்டா.... சொறி அது தங்களின்ட படமாம்.

அவனவன் உயிரைக் குடுத்து படம் அனுப்பினா இதுகள் அதை வைச்சு தங்களுக்கு விளம்பரம் தேடுதுகள்.

யாராச்சும் பொதுவா எல்லாருக்கும் கிடைக்க கூடிய மாதிரி ஏதாவது செய்யிறதெண்டா சொல்லுங்க.

சேர்வருக்கான செலவை நான் ஏற்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு முயற்சி இது பேச்சிலேயே இருக்காமல் செயலில் காட்ட வேண்டும் என்னால் ஆன உதவியை நான் செய்யக்காத்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி இது பேச்சிலேயே இருக்காமல் செயலில் காட்ட வேண்டும் என்னால் ஆன உதவியை நான் செய்யக்காத்திருக்கிறேன்

காலம் கடந்த, ஆனால் ஆக்கபூர்வமான சிந்தனை.

KUGGOO,Snegi, Saniyan,Nunavilan, யாழ்நிலவன்,வில்லன் ஆகியோரது கருத்துகள் ஏற்புடையதாகும். ஆனால் இவற்றை உரிய முறையிலே செயற்படுத்தும்போது மட்டுமே தடைகளைத் தகர்த்து காலூன்றி நின்று நிலைத்துச் செயற்பட முடியும். இதிலே நாம் தற்போதுள்ள காணொளிச் சேவைகளை அணுகுதல், குறிப்பாக ஜீ.ரீவீயைக் கூட அணுகலாம். நாம் ஜீ.ரீவீயை அணுகி இப்பொழுது முதலே, தினம்தோறும் நான்குதடவைகள் ஆங்கில மொழியிலே மக்களது அவலங்களை வெளிக்கொணரும் விதமாக சேவைகளை மாற்றியமைப்பது இன்றைய தேவையாகும். இதனை நாம் அனைத்துலகத் தமிழர் தகவற் பலகை என்ற ஒரு குடையின் கீழ் இணைத்து, அதனது காணொளிச் சேவைப் பிரிவாக வடிவமைத்து நடத்தலாம். புலத்திலே வாழ்கின்ற தமிழ்க்குடும்பமொன்று மாதாந்தம் பத்து யூரோ வீதம் போட்டாலே வெற்றிகரமாக நடத்தமுடியும். முன்பு சில காலங்களுக்குமுன் தமிழர் நிதியம் பற்றியும் ஊடகங்களில் பேசப்பட்டது மட்டுமே. செயலாகவில்லை. எனவே பேச்சாக இல்லாது செயலுருப்பெற வேண்டும். தமிழினத்தின் சுவடுகளையும் தொடர்ந்து எமது தலைமுறையிடம் எடுத்துச் செல்லவும் உதவும். இன்று இளையோரிடையே திறமைகள் கொட்டிக்கிடக்கிறது. முயன்றால் சாத்தியமாகும். இதனை நாம் ஒரு சுயாதீனமான அமைப்பாக நிறுவுதலும், தமிழ்த் தேசியத்தை நேசிப்போரைக் கொண்ட அமைப்பாகவும் ஏற்படுத்த வேண்டும். தமிழினம் சிந்திக்க வேண்டியதும் அவசியமானதுமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு கசப்பான விடயமும் சுட்டப்பட வேண்டும். ஏதும் அடிபிடி என்றால் வரிசையா கருத்து வரும். ஆனால், நானுட்பட நாலாவது நாள்தான் கவனிச்சிருக்கிறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி...... உடனே செயற்பட வேண்டும்.

என்னாலான சகல உதவிகளையும் செய்ய காத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வாறு யார் எங்கு ஆரம்பிப்பது யாராவது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரச்சனையை 58 க்களிலிருந்து சிந்தித்தால் இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

எமது இளையோர் சமுதாயம் புதிய வழிகளில் புதிய சிந்தனைகள் மூலம் எதிரியை ஊடறுக்கமுடியும்.

எமது பிரச்சனையை இன்றுவரை சர்வதேசசமூகம் கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை.

அவர்கள் கவனத்திலெடுத்திருந்தாலும் இடையில் சர்வதேசத்திடம் பிச்சையெடுக்கும் தென்கிழக்காசிய வல்லரசு தனது வல்லமையை பிரயோகிக்கின்றது.

எமக்கு தற்போதைய முக்கியத்துவம் அதிரடி முக்கியமும் கூட தமிழருக்கென்று ஒரு ஆங்கில ஊடகம் அதாவது ஒலிஒளி தொடர்புகள்.

அதாவது எமக்கென்று ஒரு ஆங்கில தொலைக்காட்சி,ஆங்கில வானொலி :mellow:

அங்கே எமது அவலவிடயங்கள் பிறமொழிகளில் விவரணப்படமாக ,இசையும் கதையுமாக சித்தரிக்கப்படவேண்டும்.இதுத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது GTVஉடன் தொடர்புகொண்டு இந்தமுயற்சியை ஆரம்பிக்கவும். நான்வசிக்கும்நாட்டிலிருந்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரச்சனையில் சர்வதேசம் ஒரு இரட்டை வேடம் அணிந்து வினொதமான போக்கைக்கடைப்பிடிக்கிறது,,சி

ங்கள்த்தின் இன அழிப்பு நடவடிக்கைக்கு பெயர் "மனிதாபிமான போர்". இந்தியாவில் இருந்து பறந்து வரும் முகர்ஜி போன்றவர்களின் தமிழர் மீதான கரிசனை " தமிழ்ப்பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது அனால் போர் தொடர ஆசிகள் உண்டு" சிங்கள்த்தின் அறிக்கைகள் ஏதோ தமிழன் மீதுள்ள அளவிறந்த கரிசனைகள் இப்படி தமிழர்களை ஏமாற்றிக்கொண்டு உலகம் அமைதியாக ஒரு இன அழிப்பிற்கு அங்கீகாரம் வழங்கி நிற்கிறது அவர்களின் தேவையும் அதுதானானே?

தமிழனனும் தன் பங்கிற்கு ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என்று ஒரு புறமும் மறு புறம் தனது அன்றாட சில்லறை சந்தொசங்களுக்காக பல இலட்சம் டொலர்களை வார இறுதிக்கொண்ட்டாட்டங்கள்,பிற

Link to comment
Share on other sites

நல்ல யோசனை தான். ஆனால் காலம் தாழ்த்திய யோசனை. இந்த வேலையைத் தான் மத்திய கிழக்கு மக்களுக்காக அல்ஜசீரா தொலைக்காட்சி செய்கின்றது. அப்போதே அதே போல் ஆரம்பித்திருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாம். இன்று உலகில் அல்ஜசீரா தொலைக்காட்சி முக்கிய இடம் பிடித்து விட்டது போல், எமக்கும் ஒரு இடம் கிடைத்திருக்கும். எமக்காக ஒற்றுமையாக இவ்விடயத்தை எவர் செய்ய முன் வருவார்கள் ?? எதை எடுத்தாலும் நான் பெரியவனா அல்ல நீ பெரியவனா என்ற போட்டி மனப்பாண்மை தானே முன்னுக்கு நிற்கின்றது. இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு எமக்கான விடிவிற்காக எல்லோரும் ஒற்றுமையாகச் செயற்பட்டு ஒரு தொலைக்காட்சி உருவாகி எமது பிரைச்சினைகளை வெளிக் கொணர்வதோடு, மற்றைய நாட்டவர்களின் பிரைச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றையும் ஒளிபரப்புச் செய்ய முன் வர வேண்டும். அதன் முலம் தான் ஏனைய நாட்டவர்களையும் கவரலாம்.

அதே போல் தமிழ்மொழியில் வரும் மற்றைய தொலைக்காட்சிகளை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, குறிப்பிட்ட இத்தொலைக்காட்சியின் வளர்ச்சியில் போதிய ஆக்கபபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் பல நணபர்களை நாம் சம்பாதிக்கின்றோமோ இல்லையோ நண்பர்களை எதிரிகளாக்காமல் இருக்க முடியும்.

Link to comment
Share on other sites

உலகில் அல்ஜசீரா தொலைக்காட்சி முக்கிய இடம் பிடித்து விட்டது போல், எமக்கும் ஒரு இடம் கிடைத்திருக்கும். எமக்காக ஒற்றுமையாக இவ்விடயத்தை எவர் செய்ய முன் வருவார்கள் ??

தை எடுத்தாலும் நான் பெரியவனா அல்ல நீ பெரியவனா என்ற போட்டி மனப்பாண்மை தானே முன்னுக்கு நிற்கின்றது.

உண்மை இதுதான், இதை புறந்தள்ளிவிடவேண்டும்.... அத்தோடு ஒரே இலக்காக திட்டமிட்ட பயணம் ஒன்றினை நேரிய இலக்கில் பரந்துபட்ட தேசத்தில் நிலைநிறுத்தவேண்டும்.... நினைத்தால் முடியும், சாதிக்கலாம், யார் ஆரம்பிப்பது, யார் தலமைதாங்குவது என்னும் ஓர் கேள்வியே இங்கே நீடிக்கின்றது.... இதில் அனுபவமுள்ளவர்களாக முகாமைத்துவத்திலும் தமிழிலும் அனுபவம் உள்ளவரான லோசனை இங்கே நிறுத்தலாம்... இது என் தனிப்பட்ட கருத்து... சரிவிலிருந்த ஓர் வானொலியை தட்டி எழுப்பிய பெருமை அவரைச்சாரும் என்பதானால் ஒழிய வேறெந்த கருத்துமில்லை.....

Link to comment
Share on other sites

முதலில் கருத்துக்கள் ஆலோசனை எழுதிய எல்லோருக்கும் நன்றி..

ஒரு விடையம் எல்லோரும் இதன் தேவையை உணர்ந்துள்ளீர்கள்..

இனி ஜி ரிவி யுடன் ஒரு பகுதியாக முக்கிய நேரங்களில் ஆங்கிலத்தில் செய்திகளாக ஆரம்பிக்கலாம்.

அல்லது சர்வதேச செய்தி தாபனமாக முழு நேர ஆங்கிலத்தில் மற்றைய செய்தி தாபனங்களுக்கு நிகராக தமிழ்மக்கள் நலன் அன்பர்கள் எல்லாம் எம்மக்களின் கதியை கருத்திற்கொண்டு எந்த வேற்றுமையின்றி ஒற்றுமையாக தனிப்பட்ட இலாபம் இன்றி

எமது தமிழரின் உண்மையான செய்திகள் உலகம் முழுவதும் சென்று அடைதல்

என்பதே முழு நோக்காக செயல்படவேண்டும்..

எந்தவித நெருக்கடிவந்தாலும் தொடர்ந்து நடத்தக்கூடியதாக அடித்தளம் உறுதியாக அமைத்தல். முக்கியமானது..

எமது நோக்கம் எப்போதும் சரியான திசையில் செல்லவேண்டும்..

எமக்கு எப்போது சுயவிளம்பரம் இல்லாத எம்மினத்தின் இக்கட்டு நிலையை எப்போதும் மறவாமல் எம்மால் முடியும் என்னும் துணிச்சலுடன்

யார் குத்தினாலும் அரிசியாக வேண்டும்.. அதாவது எமது நோக்கம் சரியாக நிறை வேற வேண்டும்..

உங்கள் ஊக்கம் என்னை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுகிறது.. நன்றி.

மேலும் பயனுள்ள கருத்துக்கள், தகவல்களை தாருங்கள்..

Link to comment
Share on other sites

நம் உறவுகள் தினம் தினம் கொல்லப்படும் போது ஏன் எம்மக்கள் உணர்ச்சி கொண்டு ஒருவேளை எழுகின்றார்கள் மறுநிமிடமே அடங்கிப்போகின்றனர். 50 பேர் கொல்லப்பட்டனர் எண்டதும் ஒருமுறை கொதித்தெழுந்தனர், பின்னர் 100 என்று வந்ததும் அதற்கு கொதித்தெழுந்தனர், பின்னர் 100இற்கு கீழ் மதிப்பற்று போனதும் பின்னர் 300 எண்டதும் எல்லாரும் பதைத்தனர், துடித்தனர், ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர், பின்னர் தாமாக அடங்கிக் கொண்டனர், அதன் பின்னர் 300இற்கு கீழ் மதிப்பிழந்துபோனது, அப்படியானால் இனி மீண்டும் எம்மவர்கல் கொதித்தெழ வேண்டுமாயின் இழப்பு 300இலும் கூடவாக இருகவேன்டுமா??? அப்போ எங்கள் மக்களின் இறப்பிலேயே போராட்டம் கொண்டுசெல்லப்பட வேண்டுமானால் போராட்டம் முற்றுப்பெறும் சந்தர்ப்பத்தில் எம்மவர்கள் யாரும் இருக்கமாட்டார்கல் போலும்.... எப்படி காசாவில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தனர்? சிறிது காலத்துக்குள் அவர்களால் ஈர்க்க முடிகின்றது? அப்படியானால் நாம் போராடும் வழிமுறைத்தவறா இல்லை நாம் இன்னமும் பலமாக போராடவேண்டுமா? இனியும் காலம் தாழ்த்தாது நாம் எல்லாரும் விரைவாக செயற்படவேண்டியகாலமிது.... சரியான வழிகாட்டிகள் இல்லாமையே இப்போராட்டங்கள் மழுங்கடிக்கப்படக்காரணமோ அல்லது நம்மவர்கள் தாம் ஒவ்வொருவரும் தாம், தம் பெயர் நிலைக்க வேண்டுமென போராடுகின்றதனாலோ இச்சரிவு நிலை. உறுதியாக ஒரு சொல்லில் போராடுவோம். வேற்றுமை மறப்போம். ஓரனியிற் திரள்வோம்.

Link to comment
Share on other sites

நண்பர்களே,

நான் அண்மையில் இடம்பெற்ற ஓர் சம்பவம் பற்றி அறிந்ததும் மனவேதனை அடைந்தேன், ஏன் எம்மவர்கள் இவ்வாறு இருக்கின்றார்கள் என்று நினைத்து வருந்தினேன்....அதனை தங்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

நம்மவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர் காணொளிகளை நீங்கள் வெளிநாட்டவருக்கு அனுப்புங்கள் என்று... நானும் சந்தோசப்பட்டேன் ஓய்வு நேரத்தில் அவர்கள் அவற்றினை அவதானித்து எம்மவர்களின் பிரச்சனைகள் பற்றி புரிந்துகொள்வார்கள் என்று...

இங்கே நடந்திருப்பதோ யாரும் எதிர்பார்க்காதது, எம்மவர்கள் காணொளிகளை யூ ரியூப்பிலிருந்து தரவிறக்கம் செய்து இறுவட்டில் தரவேற்றம் செய்து அனுப்பியுள்ளார்கள் அதன் பிரதி ஒன்று கிடைக்கப்பெற்றது நானும் அவதானித்தேன், அதிலே நம் உறவுகள் கொல்லப்பட்டுக்கிடக்கும் நிறைய காணொளிகள் காணப்பட்டன ஆனால் உற்றுக்கெட் கும்போதே தெரிந்துகொண்டேன் அவற்றை சிங்களவர்கள் தரவேற்றம் செய்திருக்கின்றார்கள் என்று. எமது காணொளிகளுக்கே ஆங்கிலத்தில் அவர்கள் தவறான வழிகாட்டல்களைக் கொடுத்திருக்கின்றார்கள். ஆங்கிலம் சரியாகத் தெரியாத நம்மவர்கள் சிலரும் அவற்றை தரவிறக்கம் செய்து அவற்றினை அனுப்பியதனால் கடைசியாக வென்றது அவர்களே தான். எம்மவர்கள் அவர்களது பொய்ப் பிரச்சாரத்தை தெரிந்தோ தெரியாமலோ அனுப்பியதனால் அதனைப் பார்த்தவர்கள் கண்டிப்பாக தமிழர்களது நியாயமான போராட்டத்தினை தவறாகவே எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்பது ஓர் சிறந்த உதாரணம் நாம் மிக விரைவில் எமக்கான ஓர் ஆழமான ஊடகம் தேவை என்பது....

Link to comment
Share on other sites

நாங்கள் எல்லாம் அடிப்படை சரியில்லாம கதைக்கிறம் எண்டு நினைக்கிறன்.

முதலாவது: ஊடகம் எண்டா தொலைக்காட்சியை மட்டும் அடிப்படையா வைச்சுக் கதைக்கிறம்.

இரண்டாவது: அல்ஜசீரா எண்டுறம். அவங்கட ரிவில தனிய மத்திய கிழக்கு நாடுகளின்ட பிரச்சனையை மட்டும் கதைக்கிறல்ல.

அதோட அதில வேலை செய்யிற நிரம்பப் பேர் வெள்ளைக்காரங்கள்.

எங்களால எங்கட பிரச்சனையை unல கதைச்ச மெக்சிகோவ கூட ஏனப்பா நீ கதைச்சனி எண்டு கேட்டு சொல்ல ஒருத்தர் இல்லை.

சரி அது கிடக்கட்டும். இப்பவாவது யோசிக்கிறமே.

எண்ட முக்கியமான கேள்வி.

ஊடகம் ரிவி எண்டெ வைச்சுக் கொள்வம்.

அதை மற்ற நாட்டவர்கள் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?

ஏதோ அல்ஜசீரா மாதிரி வளர்ந்திட்டுது.

கொஞ்ச சனம் பார்க்குது எண்டே வைச்சக் கொள்வம்.

பிறகு....

அவையள் பார்த்தா என்ன நடக்கும்?

நாடு கிடைச்சிடுமா?

நான் பேய்த்தனமா கேக்கிறன் எண்டு நினைக்காதீங்கோ.

எதை செய்ய போறம் . .அதின்ட விளைவு என்னவா இருக்க வேணும் எண்டதில தெளிவு முக்கியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(...)

எண்ட முக்கியமான கேள்வி.

ஊடகம் ரிவி எண்டெ வைச்சுக் கொள்வம். அதை மற்ற நாட்டவர்கள் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? ஏதோ அல்ஜசீரா மாதிரி வளர்ந்திட்டுது. கொஞ்ச சனம் பார்க்குது எண்டே வைச்சக் கொள்வம்.

பிறகு....

அவையள் பார்த்தா என்ன நடக்கும்?

நாடு கிடைச்சிடுமா? நான் பேய்த்தனமா கேக்கிறன் எண்டு நினைக்காதீங்கோ. எதை செய்ய போறம் . .அதின்ட விளைவு என்னவா இருக்க வேணும் எண்டதில தெளிவு முக்கியம்

Saniyan, நாடுகிடைச்சிடும் என்பதற்காக தொலைக்காட்சியை தொடங்க விருப்பப்படவில்லை. முக்கியமாக பல்லின அடித்தட்டு மக்களுக்கு நமதுபோராட்டத்தின் நியாயம் சென்றடையவேண்டும் என்பதே குறிக்கோள். முக்கியமாக பலஸ்தீன் பிரச்சினை பற்றிதெரிந்திருக்கும் உலகமக்களுக்கு தமிழீழப்பிரச்சினைபற்றி நூற்றுக்கு 1விகிதம்கூட தெரியாது. இதுக்கு நாமன்றி வேறுயார் காரணமாக இருக்கமுடியும்? :rolleyes:

------------------------------------------

உறவுகளே... இப்பகுதியில் காத்திரமான தொலைக்காட்சியை எப்படி உருவாக்குவது என்பதை பற்றிய ஆக்கங்களை மட்டும் முன்வையுங்கள். இப்பகுதிக்கு தேவையற்ற விவாதங்கள், பத்தியின் முக்கியத்தன்மையை குறைப்பதுடன், நமது targetஐ வேறுதிசையில் கொண்டு சென்றுவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி இலவச பக்கங்களை நாம்பாவிப்பதால்தான் சிலவிடையங்கள் நமக்கெதிராக வந்து முடிகின்றது. இதனால்தான் யாழ் மாதிரி தமிழர்கள் தமக்காக பதிவேற்றம் செய்யத்தக்கதொரு இணையத்தளம் தேவை. அதை கண்காணிப்பதற்கு உலகத்தில் உள்ள (குறைந்தபட்சம்) யாழில் உள்ள இணைய தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவி தேவை. ஆரம்பித்து வைக்க நான் தயார். கொண்டு நடத்த யாழ் உறவுகள் தயாரா????? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.