Jump to content

சீக்கியனும் நானும்.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

jatayu_ravana2.jpg

அன்பார்ந்தவர்களே!

தயவு செய்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ.

என்னோடை கனகாலமாய் ஒரு சீக்கிய நண்பன் வேலை செய்கிறான். அவனுக்கு பொழுது போகாட்டி என்னை கேள்வி கேட்டு குளப்புறதுதான் அவனுக்கு வேலை கண்டியளோ.அதுவும் இலங்கை பிரச்சனையெண்டால் அவனுக்கு உடனை நினவுக்கு வாறது ராமாயணப்பிரச்சனைதான் . எனக்கும் ஒழுங்காய் இராமாயணம் தெரியாதெண்டது வேறை விசயம். :lol:

இந்த ராமாயணத்தை வைச்சு ஆயிரம் கேள்வியள் கேட்டுப்போட்டான் . எல்லாத்துக்கும் ஒருமாதிரி சமாளிச்சுப்போட்டன்.

நாசமறுப்பு இந்தகேள்விக்கு மட்டும் என்னாலை பதில் சொல்லேலாமல் கிடக்கு

அதாவது அவன் என்ன கேட்டவனெண்டால்............... :rolleyes:

சீதையை கடத்தின ராவணன் டச் பண்ணாமல் விட்டவனோ?இல்லாட்டி ஏன் டச்பண்ணாமல் விட்டவன்? :lol: :lol: :D

சத்தியமாய் போனகிழமையும் எனக்கு விசர் ஏத்துறதுக்கெண்டு நேரகாலமில்லாமல் இடைக்கிடை அந்த கெட்டகேள்வியை கேட்டுக்கொண்டிருந்தவன் :lol:

அதோடை என்னை வேறை நக்கலாய்ப்பாக்கிறான். :D

இது கொஞ்சம் வில்லங்கமான கேள்விதான்.எனக்கு விளங்குது. :D

இதை இனி ஆரிட்டை போய் கேக்கிறது?

பக்கத்து வீட்டுக்காரனிட்டை கேக்கேலுமே?

சரி கேட்டாலும் எங்கடை மாப்புவை றோட்டாலை போனவன் கேட்டமாதிரி ஆர் யு ஓகே எண்டு என்னை திருப்பி கேட்டானெண்டால்???????? :D

என்ரை மூஞ்சையை எங்கை கொண்டுபோய் வைக்கிறது?

எனவே ஐயாமாரே! அம்மாமாரே! அண்ணைமாரே! அக்காமாரே! குஞ்சு குருமன்களே! :lol:

உங்களுக்கு தனித்தனியாக வெத்திலைபாக்கு வைச்சு கூப்பிட என்னாலை ஏலாது.

தயவுசெய்து கோபதாபங்களை மறந்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ

Link to comment
Share on other sites

jatayu_ravana2.jpg

அன்பார்ந்தவர்களே!

தயவு செய்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ.

என்னோடை கனகாலமாய் ஒரு சீக்கிய நண்பன் வேலை செய்கிறான். அவனுக்கு பொழுது போகாட்டி என்னை கேள்வி கேட்டு குளப்புறதுதான் அவனுக்கு வேலை கண்டியளோ.அதுவும் இலங்கை பிரச்சனையெண்டால் அவனுக்கு உடனை நினவுக்கு வாறது ராமாயணப்பிரச்சனைதான் . எனக்கும் ஒழுங்காய் இராமாயணம் தெரியாதெண்டது வேறை விசயம். :lol:

இந்த ராமாயணத்தை வைச்சு ஆயிரம் கேள்வியள் கேட்டுப்போட்டான் . எல்லாத்துக்கும் ஒருமாதிரி சமாளிச்சுப்போட்டன்.

நாசமறுப்பு இந்தகேள்விக்கு மட்டும் என்னாலை பதில் சொல்லேலாமல் கிடக்கு

அதாவது அவன் என்ன கேட்டவனெண்டால்............... :rolleyes:

சீதையை கடத்தின ராவணன் டச் பண்ணாமல் விட்டவனோ?இல்லாட்டி ஏன் டச்பண்ணாமல் விட்டவன்? :lol: :lol: :D

சத்தியமாய் போனகிழமையும் எனக்கு விசர் ஏத்துறதுக்கெண்டு நேரகாலமில்லாமல் இடைக்கிடை அந்த கெட்டகேள்வியை கேட்டுக்கொண்டிருந்தவன் :lol:

அதோடை என்னை வேறை நக்கலாய்ப்பாக்கிறான். :D

இது கொஞ்சம் வில்லங்கமான கேள்விதான்.எனக்கு விளங்குது. :D

இதை இனி ஆரிட்டை போய் கேக்கிறது?

பக்கத்து வீட்டுக்காரனிட்டை கேக்கேலுமே?

சரி கேட்டாலும் எங்கடை மாப்புவை றோட்டாலை போனவன் கேட்டமாதிரி ஆர் யு ஓகே எண்டு என்னை திருப்பி கேட்டானெண்டால்???????? :D

என்ரை மூஞ்சையை எங்கை கொண்டுபோய் வைக்கிறது?

எனவே ஐயாமாரே! அம்மாமாரே! அண்ணைமாரே! அக்காமாரே! குஞ்சு குருமன்களே! :lol:

உங்களுக்கு தனித்தனியாக வெத்திலைபாக்கு வைச்சு கூப்பிட என்னாலை ஏலாது.

தயவுசெய்து கோபதாபங்களை மறந்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ

குமாரசாமி சிதை என்குறவள் புனிதம் ஆனவள்... சீதை தொட்டால் ராமன் தன்னை உயிரோட விட மாட்டான் என்று இரவணனுக்கு தெரிந்து இருக்கும்.. சும்ம தான் விரம் ஆனவன் என்று காட்ட அவளை துக்கி சென்று இருப்பான்...

உண்மையில் இரவணனின் மகள் சீதை என்றுதான் சிலர் எமக்கு சொன்னார்கள்.. இதில் உண்மை விபரம் எது என்று தெரிய வில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் சீதை ?

சீதை , ராமனுக்கு என்ன முறை ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திற்கு வந்த அமைதிப்படையில் இருந்த சீக்கியர்கள் எத்தனையோ ஈழத்தமிழ் பெண்களை மணபங்கப்படுத்தினார்கள். இது பற்றி அந்தச் சீக்கியரிடம் சொல்ல வில்லையா?

Link to comment
Share on other sites

:rolleyes::Dஇராவணன் தான் ஒரு சிவபத்தன், அதாவது அவன் முற்று முழுதாக சிவகோட்பாட்டைக் கடைப்பிடிப்பவன், அதனால் அவன் தமிழன் என்பதோடு மட்டுமில்லாது ஒருத்தனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாட்டோடு வாழ்ந்தவன். உண்மையில் இராவணன் கடத்தியது சீதையை காரணம் இராமன் வடநாட்டிலிருந்து கொண்டு எமது பழம்பெரும் மதமான இந்து மதத்தை உடைக்க நினைத்ததை தடுக்கத்தான்.... கிகிகி அப்படீன்னா இராமனோட அவதாரமா மகிந்த??? அப்ப இண்டைக்கு நேற்று உந்த ஆரிய திராவிட யுத்தம் ஆரம்பிக்கேல்ல... 3500, 4000 ஆண்டுக்கு முன்னால ஆரம்பிச்சிருக்கோ.... அப்ப அண்ணன் தான் இராவணனோ.... சரி சரி ஆகட்டும் ஆகட்டும்... இனியாவது இராமாயணத்தை மாற்றி உண்மையை எழுதி இராவாணாயணம் எண்டு ஒண்டை விடுவம்.... உணமை அழிக்கப்பட்டுள்ளதே.. அத்தோட உந்த ஆரியரான இராமன் வழித்தோன்றலுக்கும் சிங்கள இன வழித்தோன்றலுக்கும் நிறைய தொடர்பிருக்கு கண்டீங்களே???? :lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள் !

மாரீசன்தான் மான் உருவம்கொண்டு வந்துள்ளான் என்ற செய்தி தெரிந்ததும் அந்த மானைப் பிடிக்கச் சீதை தன் கணவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாள்.

லட்சுமணன், 'இராமனுக்கு ஆபத்து வராது. ஆகவே, உன்னைத் தனியேவிட்டுப் போகமாட்டேன்' என்று தடுத்துக் கூறியும் அவனைக் கண்டபடி திட்டிப்பேசி அந்த இடத்தைவிட்டு அகலச் செய்கிறாள். இதன் மர்மம், தான் தனியே இருக்க வேண்டும்; அங்கு இராவணன் வரவேண்டும் என்ற முடிவை முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டு தன் கணவனையும் கொழுந்தனையும் துரத்திவிட்டுத் தான் மட்டுமே தனியே இருக்கிறாள்.

இராவணன் காமப்பித்தனைப்போல் சீதையை வர்ணிக்கிறான். உடல் உறுப்புகள் அத்தனையும் ஒன்றையும்விடாது அவைகளுக்கு ஒப்புவமை கூறுகிறான்.

ஆடையினுள் மறைந்திருக்க வேண்டிய அங்கங்களாகிய தொடை, பின்தட்டு, ஸ்தனங்கள் இவைகளுக்கும், அங்க உவமை கூறும் அளவுக்கு அந்த அங்கங்கள் இராவணனுக்குத் தெரிந்திருக்கின்றன!

இத்தனையும் பேசிய இராவணனுடன், 'முறுவல் கொண்டு பேசுகிறாள்; அழுது படைக்கிறாள்; "உள்ளே வாருங்கள், உட்காருங்கள்; சாப்பிடுங்கள்" என்று உபகாரம் செய்கிறாள்.

அவள் அவனுக்கு உபசரிக்கும் பொழுது, "வாயிற் படியின் வழியே தன் கணவனும், கொழுந்தனும் வருகிறார்களா என்று திரும்பிப் திரும்பிப் பாத்துக்கொண்டே உபசரிக்கிறாள்" என்று கூறபப்படுகிறது.

பிறகு இராவணன், வா என்னுடன் என்கிறான்; இவள் சம்மதித்தே அவனுடன் சென்றாள் என்பதற்கு ஆதாரங்கள் பல உண்டு. இவளுக்கும் அவனுக்கும் நடந்த மேற்கண்ட சம்பாஷைணைகளும் காட்சிகளும் மட்டும் அல்ல.

சீதை சம்மதித்துச் சென்றதற்கு ஆதாரம்

தனக்கு எவ்வளவோ மரியாதை செய்து, உபசரித்து, பிரியமாய்ப் பேசிய சீதையிடத்தில் ....... ஆசை மேலிட்டு, 'தன் ரோஹினியைப்பிடிப்பதுபோல் இடது கையால் சீதையின் தலைமயிரையும், வலது கையால் தொடைகளையும் சேர்த்துப்பிடித்தெடுத்தான் (சி.ஆர்.சீனிவாசய்யங்கார். மொழி பெயர்ப்பு, ஆரண்ய காண்டம், சர்க்கம் 49, பக்கம் 151) மேலும் தொடைகளைத் தூக்கிப் பிடித்து எடுத்து ரதத்தில் வைத்தான் என்று 157 ஆம் பக்கத்திலும் மற்றும், சீதையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ஜடாயுவை அறைந்தான் என்று 165 ஆம் பக்கத்திலும் காணப்படுகிறது.

இவ்விதம் இராவணன் சீதையைத் தொட்டு எடுத்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தொட்டு எடுத்திருப்பானாகில், சீதை இராவணனுக்கு உடன்பட்டவள் என்றே பொருள்படும்.

காரணம், இராவணன் தன்மேல் இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில், அவன் தலை சுக்கு நூறாகிவிடும் என்பதாக ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று மற்றொரு சாபமும் இருக்கின்றன. இந்த சாபங்கள் ஒன்றாகிலும் இராவணனைப் பாதிக்காமல் இருக்குமானால் அவள் இஷ்டப்பட்டாள் என்றுதான் பொருள்படும். இதன் படியே இராவணனுக்குத் தலைவெடிக்கவும் இல்லை, உடல் தீப்பற்றி எரியவும் இல்லை. ஆகவே, சீதை இராவணனுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பொருள்.

மேலும், சீதை இராவணனுடன் செல்லுகையில், அவனுடைய மடியின்மேல் இவள் உட்கார்ந்திருக்கையில் அவளுடைய முகம் 'காம்பறுந்த தாமரை மலரைப்போல் இருந்தது. அவளுடைய ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு இராவணன் மேல் - புரண்டன' (பக்கம் 167) என்று கூறப்படுகிறது.

இலங்கைக்குக் கொண்டு சென்றபின், தன் அந்தப் புரத்தில் வைத்தான் (பக்கம் -173) என்று கூறப்படுகிறது.

சீதைக்கும், ராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டது

'விசித்திரமாக அமைக்கப்பட்ட தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதையுடன் ஏறும்போது, துந்துபி அடிப்பது போல் சப்தம் உண்டாயிற்று.'

(பக்கம் 155, சர்க்கம் 55)

குறிப்பு : எனவே, இருவரும் மாடியில், அந்தப்புரத்திற்கு சென்றடைந்து விட்டனர். அதுவும் இருவரும் மாடியில் 'ஏறும்பொழுது' துந்துபி அடிப்பதைப் போல் இருந்ததாம். இருவர் நடையும், அதாவது இராவணன் எவ்வளவு சந்தோஷமாகவும், ஒய்யாரமாகவும், ஆனந்தமாகவும், கம்பீர நடையுடன் காலடி எடுத்து வைத்தானோ, அதேபோல் சீதையும் ஒய்யார நடையுடன், இருவரும் ஒருவர் தோளின்மேல் ஒருவர் கையைப் பிடித்து அணைத்துக் கொண்டு ஏறி இருக்கவேண்டும். அந்தக் காலடியின் சப்தம் துந்துபி அடிப்பதைப்போல் இருந்திருக்கிறது. அன்றியும், இனியும் மேலே நடப்பதைக் கவனிப்போம்.

இராவணனைப் பார்த்து சீதை, 'பிறகு வருவதைப் பார்த்துக் கொள்வோம். இப்போது கிடைக்கும் சுகமே பெரியதென்று நினைக்கிறாயே' (பக்கம் 171) என்று கேட்கிறாள். இதனால், இராவணன் சீதையிடம் சுகம் அனுபவித்துவிட்டான்! ஆராய்ந்து பார்த்தால் அவளிடம் சுகம் அனுபவிக்கும் நேரத்தில் இவ்வார்த்தைகளைச் சீதை இராவணனிடம் கூறுவது நன்கு தெரியும்.

இதற்கு இராவணன் சமாதானம் கூறுகையில், 'சீதே! அக்கினி சாட்சியாக உன் கையைப் பிடித்த கணவனைக் கைவிடுவது அதர்மமென்றெண்ணி வெட்கப்படுகிறாயோ? நம் இருவருக்கும் நேர்ந்த சம்பந்தம் தெய்வகதியால் ஏற்பட்டது. இது ரிஷிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது' (பக்கம் 177) என்று சமாதானம் கூறுகிறான். சீதை வருத்தப்படுவதாகவோ, ஆத்திரப்படுவதாகவோ கூறவில்லை. வெட்கப்படுகிறாளாம் விருப்பம் இல்லாவிட்டால் வெட்கப்படுவது தான் விருப்பமில்லை என்பதைக் காட்டும் அறிகுறி போலும்! ஆத்திரமோ, கோபமோ கொண்டிருப்பாளாகில் விருப்பம் இல்லை என்று கூறலாம்.

எனவே, சீதையிடம் இராவணன் செய்த காம லீலைகளுக்கும் அவள் உட்பட்டிருக்கிறாள். ஆனால், பெண்களின் இயற்கைக் குணப்படி வெட்கப்பட்டிருக்கிறாள்.

மேலும் ஆரண்யகாண்டம் 55 ஆவது சர்க்கம் 678 ஆவது பக்கத்தில் தாத்தா தேசிகாச்சாரியார். மொழி பெயர்ப்பில் கூறப்படுவதாவது - 'இனி நீ நாணமுறற்க. இதனால் தர்மலோபமொன்றுமிலது. உனக்கும் எனக்கும் இப்பொழுது தெய்வத்தினாலே சேர்க்கை நேர்ந்தமையின் இதுவும் தர்மமேயாகும. இஃது ரிஷிகளாலும் உகுக்கப்பட்டது' என்று கூறப்படுகிறது.

'இனி நீ நாணமுறற்க' இதன் பொருள் என்னவென்றால் இனிமேல் எதற்காக வெட்கப்பட வேண்டும்? உனக்கும் எனக்கும் தெய்வகதியால் சேர்க்கை நேர்ந்துவிட்டது. என்கிறான். அதாவது காரியம் முடிந்துவிட்டது. இனிமேல் வெட்கப்பட்டு என்ன பலன் என்ற கருத்தில் இராவணன் கூறுகிறான். எனவே இருவருக்கும் சேர்க்கை நேர்ந்தது என்பதை இதன்படி உறுதிப்படுத்தலாம்.

மேலும் இராவணன் கூறியதாக அதே மொழி பெயர்ப்பாளர் இந்தச் சம்பவத்திற்குக் குறிப்புத் தருகையில் 'இராவணன் பிராட்டியாரை முன்போலவே தாசனாகச் செய்து கொள்ளும்படி விண்ணப்பம் செய்தான்பூ என்கிறார். அதாவது முன்போலவே என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது இருவருக்கும் சம்பந்தம் ஏற்பட்ட முன் சம்பவத்தைப் போலவே இனி மேலும் இருக்க வேண்டும் என்ற கருத்தில் வேண்டினான் என்கிறார். ஆகவே, மொழி பெயர்ப்பாளரின் ஆராய்ச்சியின் படியும் சீதைக்கும் இராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்பது உறுதி.

(கானகத்தில் சீதையை விட்டுப் பிரிந்த இராமன், சீதையை நினைத்துக் காமத்தால் மனம் உருகிப் பேசுகின்றவைகளையும், இலட்சுமணனிடம் கூறும்போது, தான் சீதையுடன் அனுபவித்த இன்பத்தை வெட்கமின்றி விளக்குவதையும் ஆரண்ய காண்டத்தில் கண்டுள்ளவைகளை எடுத்துக் கூறினேன்)

இனி, கிஷ்கிந்தா காண்டத்தில் லட்சுமணனிடம் ராமன் கூறுகின்றான்;

என்னிடம் இன்பங்களை அனுபவித்தாள்!

அவளுடன் சுகித்திருக்க, ஏகாந்தமாய் வந்த இடத்தில் அவளைக் கவர்ந்து சென்றானே! இப்படிப்பட்டவளிடம் போகங்களை அனுபவிப்பார்கள் பாக்கியசாலிகள்!

சீதையுடன் சுகிப்பதே போதும்; ராஜ்யம் தேவையில்லை.

--------தந்தைபெரியார்-நூல்:"இராமாயணக்குறிப்புகள்"

http://thamizhoviya.blogspot.com/2008/03/blog-post_28.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னடா வம்பா போச்சு நான் பதில் சொல்ல கத்தி கோடரி எல்லாம் எடுத்து வருவாங்கள் நம்ம அறுத்துனர்கள் :)

இப்படியான கேள்விகளை கேட்கும் கு.சாவை வன்மையாக கண்டிக்கிறேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில் கருத்து சொன்ன சுஜிக்கு நன்றி.

உங்கடை கருத்தையும் சீக்கியனுக்கு பதிலாய் சொல்லிப்பாக்கிறன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூனாவிலானின் இனைப்பு அப்படியே பெண்களை அவமதிக்கும் விதமாக உள்ளது.நூனாவிலானிடமிருந்து இதை நான் எதிர் பார்க்கவில்லை இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் முற் பிறப்பில் சாபம் காரணமாகத் தான் சீதையை தொடவில்லை.

இராவணன் பெண்களின் அனுமதி இல்லாமல் அவர்களை தொட முடியாது தொட்டால் சுக்கு நூறாகி விடுவான்.இராவணன் கடைசி வரை சீதையை தொடவில்லை.சீதை பதிவிரதை அதனால் தான் தீக் குளித்த பின் மீண்டும் உயிர்த்து வருகிறார்.

Link to comment
Share on other sites

ரதி என்னுடைய தனிப்பட்ட கருத்து இல்லை. ஒரு இணையத்தில் போடப்பட்டதை தான் இணைத்தேன். உங்களால் விவாதிக்க முடியுமெனில் வரவேற்கிறேன். அதற்காக பெண்களை அவமதிக்கிறேன் என்ற அனுமானத்துக்கு வரவேண்டாம்.

மற்றது கற்பனை கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீதையை தொடாரா ? இல்லயா என்பது ராவணனுக்கும் சீதைக்கும் தான் தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூனாவிலான் மன்னிக்கவும் இதை நீங்கள் எழுதியது என கூறவில்லை இதை நீங்கள் இனைத்தை தான் கண்டிக்கிறேன் என எழுதினேன்[பகுடிக்கு]

எனக்கு இலக்கியம் தெரியாது சீதை ராமனை நினைத்து தான் ஏங்குகிறாள். அதுக்காக தான் சீதையை கவர இராவணன் பல வேடங்கள் எடுத்தான்.சீதைக்கு ஆபத்து எனத் தெரிந்து தான் இலக்குவனன் கோடு போட்டு செல்கிறான் கடைசியில் இராவணன் வயதான கிழவன் வேசம் போட்டு தாகம் என சொல்லி நீர் கேட்டுப் போனதாலேயே சீதை கோட்டை தாண்டி வந்தாளே தவிர இராவணன் மேல் இச்சை கொண்டு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராவணனுக்கு தலை வெடிக்குதோ இல்லையோ எனக்கு வெடிக்குது.அப்ப கு.சாவுக்கு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூனாவிலான் மன்னிக்கவும் இதை நீங்கள் எழுதியது என கூறவில்லை இதை நீங்கள் இனைத்தை தான் கண்டிக்கிறேன் என எழுதினேன்[பகுடிக்கு]

எனக்கு இலக்கியம் தெரியாது சீதை ராமனை நினைத்து தான் ஏங்குகிறாள். அதுக்காக தான் சீதையை கவர இராவணன் பல வேடங்கள் எடுத்தான்.சீதைக்கு ஆபத்து எனத் தெரிந்து தான் இலக்குவனன் கோடு போட்டு செல்கிறான் கடைசியில் இராவணன் வயதான கிழவன் வேசம் போட்டு தாகம் என சொல்லி நீர் கேட்டுப் போனதாலேயே சீதை கோட்டை தாண்டி வந்தாளே தவிர இராவணன் மேல் இச்சை கொண்டு இல்லை.

கற்பனை கதைகள் பொதுவாகவே எதிர்கால நோக்கில் வருடபடுபவை. தற்போது வேற்று கிரக மனிதர்களுடன் போர் புரிவது போன்ற கதைகள்தான் வியாபாரத்தில் முன்நிலையில் நிற்கின்றன. பல காலங்கள் கடந்து.... ஒரு வேளை பூமியில் வாழும் மனிதர்கள் செவ்வாய்க்கு சென்று பின்னொருகாலத்தில் செவ்வாய் மனிதர்களுக்கும் புவிமனிதருக்கும் சண்டைநடப்பின்.....

சிலபோர் இல்லை பலபேர் சொல்லுவார்கள் இது புதிதல்ல முன்னைய காலங்களிலேயே இது நடந்திருக்கின்றது என்றும் அதற்கு ஆதாரமாக தற்போதைய கற்பனைகளை கட்விழ்த்து விடுவார்கள். ஆனால் அறிவுடன் அதை நோக்கினால் மட்டுமே உண்மையை புரிய முடியும். தவறின் சீதைக்கும் ராமனுக்கும் கோவில்கட்டி பசியுடன் இருக்கும் கன்றை கட்டிவைத்து மாட்டில் பாலைகறந்து பசியுடன் இருக்கும் குழந்தைக்கும் கொடுக்காது கல்லிலே ஊற்ற வேண்டியதுதான். கேட்டால் கடவுள் என்று கதைவிடவேண்டியதுதானே.

சீதையை இராவணன் தொட்டானோ இல்லையோ ஆனால் இராவணன் விமானத்தில் சீதையை கொண்டுசென்றான் என்பதை இராமாயணம் வலியுறுத்துகின்றது. அந்த விமானம் எந்த ராக இயந்திரத்தை கொண்டுடது என்றால் உண்மையில் இராமாயணம் எழுதியவனுக்கு அதைபற்றி கற்பனை செய்யவே அறிவு இருந்திருக்காது. ஆனாலும் தற்கால ராமர்கள் சும்மா விடுவினமோ? கடலால்தான் கொண்டுசென்றான் ஆனால் விமானம்பறப்பதுபோல் வேகமாக சென்றான் என்றுதான் இராமாயணம் சொல்கிறது என்று கதைவிடலாம். இது நேரத்தை வீணடிக்கும் வீண் விவாதம்.

Link to comment
Share on other sites

ரதி,

வான்மீகி ராமாயணம் வேறு, கம்பராமாயணம் வேறு. ராமாயணத்தை கம்பர் தமிழ்படுத்திய போது, பல சம்பவங்களை தமிழ் பண்பாட்டிற்கு ஏற்றபடி மாற்றி விட்டார்.

குமாரசாமி,

உங்களுக்கும் இதுதான் பதில்: சீக்கியனிடம் சொல்லுங்கோ! வான்மீகியில் ராமாயணத்தில் ராவணன் சீதையை தொட்டு விட்டான். சீதையும் அதை விரும்பி விட்டாள். தமிழ் ராமாயணத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

"உம்பி புல்லினால் செய்த சாலையில் இருந்தாள்" என்று அனுமன் ராமனிடம் சொல்கிறான். அதாவது இலக்குமணன் செய்த அந்த பர்ணசாலையை இராவணன் அப்படியே பெயர்த்து எடுத்து வருகின்றான். சீதையை தொடவில்லை.

வான்மீகி இராமாயணத்தின்படி

1.தசரதனின் மனைவிகள் பார்ப்பனர்களுடன் கூடி இராமன், பரதன், லக்குவன், சத்துருக்கனை பெறுகின்றனர். அசுவமேத யாகத்தில் குதிரையின் ....... பிடித்தபடி இருக்கின்றனர்.

2.இராமன் சீதையை வில்லை உடைக்கும் போதே பார்க்கின்றான். முதலிலேயே அண்ணலும் அவளும் நோக்கவில்லை. கண்ணும் கண்ணும் கவ்வவில்லை.

3. ராமன் மேலும் பல பெண்களை திருமணம் செய்து கொண்டான் என்பது போன்றும் சொல்லப்படுகிறது

4. ராமன் மது, மாமிசம் உண்டான்

5. வாலி இறந்த பிறகு வாலியின் மனைவி சுக்ரீவனோடு கூடி கும்மாளம் அடிக்கின்றாள்

இப்படி வான்மீகி இராமாயணத்தில் இருந்த பலவற்றை கம்பர் மாற்றி தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ற முறையில் எழுதினார். இராவணனுக்கும் சீதைக்கும் நடந்த கசமுசா பற்றி வான்மீகி ராமாயணத்தில் இருந்தவைகளையும் கம்பர் மாற்றி விட்டார்.

வான்மீகி ராமாயணம் உண்மையென்றால் சீதை ராவணன் மீது ஆசைப்பட்டு ஓடி வந்திருக்க வேண்டும். பின்பு ராமன் ராவணனைக் கொன்று சீதையைக் கூட்டிக் கொண்டு போய், ஓடிப் போன குற்றத்திற்காக காட்டிற்குள் துரத்தி விடுகின்றான். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுங்கோ சீதையிட்ட கேட்டுச்சொல்லுறன் ஆனா நேக்கும் சின்னதா ஒரு டவுட்டுத்தான் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் சீதை ?

சீதை , ராமனுக்கு என்ன முறை ? :icon_idea:

பிறகென்ன எனக்கு புதிசாய் இன்னுமொரு கூட்டு கிடைச்சுட்டுது :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன எனக்கு புதிசாய் இன்னுமொரு கூட்டு கிடைச்சுட்டுது :icon_idea:

சந்தோசம் குமாரசாமி அண்ணை . :huh:

( விடிய , விடிய ராமாயணம் ....... ) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திற்கு வந்த அமைதிப்படையில் இருந்த சீக்கியர்கள் எத்தனையோ ஈழத்தமிழ் பெண்களை மணபங்கப்படுத்தினார்கள். இது பற்றி அந்தச் சீக்கியரிடம் சொல்ல வில்லையா?

66.jpg

ஓம் சொன்னனான்.அவன் சொல்லுறான் தாங்கள் பிந்தரன்வாலேன்ரை ஆக்களாம். :lol:

சீக்கிய ஆக்கள் யாழ்ப்பாணத்திலை செய்தது எல்லாம் கூடாத வேலையெண்டும் சொன்னவன்.

இதைவிட பங்களாதேஷ்சிலை படுமோசமாய் தங்கடை ஆக்கள் அட்டூழியம் செய்தவங்களாம்.

அதோடை தங்கடை ஆக்கள் எல்லாம் காங்கிரசுக்கோ இல்லை ஜனதா கட்சிக்கோ சப்போட் பண்ணுறேல்லையாம் :huh:

அப்பப்ப sing is king எண்டு சவுண்டு வேறை விடுறான் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

66.jpg

ஓம் சொன்னனான்.அவன் சொல்லுறான் தாங்கள் பிந்தரன்வாலேன்ரை ஆக்களாம். :icon_idea:

எனக்கு , தலையை மூடி கட்டிய சிங்குகளையும் ......... ,

இத்தாலி ....ஒடுகாலிகளையும் கண்டால் பிடிக்காது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் வான்மூகி இராமயணத்திற்கும் கம்ப இராமயணத்திற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை கம்பர் தமிழுக்காக சில கற்பனைகளை புகுத்தினாரே தவிர இராமயணத்தில் பெரிதாக மாற்றம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னடா வம்பா போச்சு நான் பதில் சொல்ல கத்தி கோடரி எல்லாம் எடுத்து வருவாங்கள் நம்ம அறுத்துனர்கள் :icon_idea:

இப்படியான கேள்விகளை கேட்கும் கு.சாவை வன்மையாக கண்டிக்கிறேன் :D

இப்ப நான் என்னவில்லங்கமாய் கேட்டுப்போட்டனெண்டு முனி கண்டிக்குது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இராவணனுக்கு தலை வெடிக்குதோ இல்லையோ எனக்கு வெடிக்குது.அப்ப கு.சாவுக்கு :icon_idea:
அண்ணை :)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.