Jump to content

ஜெனிவா ஜ. நா தலைமைச் செயலகம் முன்னால் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கேள்வியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்

எம்முடைய எல்லோரது மனநிலையும் இன்று இவ்வாறுதான் உள்ளது

எல்லாவிதத்திலும் போராடியாகிவிட்டது

எல்லா அறவழியாலும் சொல்லியாகிவிட்டது

உயிர்கூட ஒன்றிருப்பதால்தான் நாம் அதை இன்னும் கொடுக்கவில்லை

பல இருந்தால் நாமும் எத்தனை தரமும் எரியத்தயாராகவே இருக்கிறோம்

இதில் எரிவது என்று நான் சொல்வது அதன் வலி எம்மை ஒன்றும் செய்யாது என்பதற்காகவும்

ஆனால் அதை பார்ப்பவர்

கேட்பவரை எம்முடைய தியாகத்தையும் வேண்டுகோளின் கடுமையையும் புரியவைக்கும் என்பதற்காகவே.

தயவு செய்து இதை ஆதரிக்கிறேன் என்று சொல்லிவிடாதீர்கள்

ஆனால் அவர்களது தியாகத்தை

அவர்கள் அறிவீலிகள் என்று சொல்லி கொச்சைப்படுத்தும் நிலையில் அவர்கள் இதைச்செய்யவில்லை

Link to comment
Share on other sites

இவர் நெல்லியடி கரவெட்டியைச் சேர்ந்தவராம். ஆனால் ஒரு சிலர் இந்த உன்னத ஆத்மாவை கொச்சபை்படுத்துகின்றனர். உண்மையாகவே இந்த செய்தியை அறிந்ததும் கண்களிலிருந்து என்னையறியாமல் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.

இந்த தியாகத்தை எவருமே (வெளிநாட்டவர்கள்) புரிந்து கொள்ள மாட்டார்கள்.

தமிழா நீ செத்து நாசமாக போய்விடு உனக்கு எது நடந்தாலும் கேட்பதற்கு ஆளில்லை. :icon_idea::huh::lol::lol::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடி? என்று சற்று விளக்கமாக சொல்லுங்கள் நுனவிலான். நாம் என்ன செய்யவில்லை? ஏன் இன்னும் இந்த உலகம் மௌனம் சாதிக்கின்றது?

விசுகு,

உண்மையில் அவரின் தியாகத்தை கொச்சைப்படுத்துவது எனது நோக்கமல்ல. மாறாய் அந்த இளைஞனைப் போலவெ இயலாமையின் ஆற்றுப்படுத்துகையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Veera_vanak_Col.jpg
Link to comment
Share on other sites

என்னத்தச் சொல்ல? அங்க தான் கொத்துக் கொத்தாச் சாகுதுகள் எண்டா இங்கயும் அதே கதை, வாழுறதுக்காகத் தானே இந்தப் போராட்டமெல்லாம், இப்படி எதிரிக்கு மகிழ்ச்சி கொடுத்துச் சாக ஏன் தான் அங்க புலிகள் உயிரப் பணயம் வைச்சுப் போராட வேணும்?. ஐ.நா. முன்னாலயே நடந்திருக்குது, ஆனா பி.பி.சியிலயோ அல்லது எந்த ஊடகத்திலயோ வரவில்ல இன்னும். ஐ.நா கூட ஒரு அறிக்கை, வருத்தம் விடவில்ல. இது தான் தியாகிகள் தீக்குளிச்சு உலகத்திற்ற நியாயம் கேட்ட முதல் தடவையா? இல்ல, பர்மா புத்த துறவியள் சம்மணம் போட்டு அமர்ந்து, குளறாமல் எரிந்து நியாயம் கேட்டும் அந்த நாட்டில் எதுவும் மாறவில்லை. இதையெல்லாம் விட்டு விட்டு, புலிகளுக்கு அதிக பட்ச, பிரசார, பொருளாதார உதவியள் செய்ய வேணும்.சமாதானம் நீதி கேட்டு ஒரு நாளும் யாரும் திரும்பிப் பார்த்ததாக எனக்குத் தெரியேல்ல.

BBC News

ஜெனிவா ஐ. நா அலுவலகத்துக்கு முன்பாக தமிழ் இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்கு முன்னதாக தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே தான் தீக்குளிப்பதாக அவர் தன்னுடன் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தின் மூலம் அவரது உடல் அடையாளம் காணமுடியாத அளவுக்கு எரிந்து போய்விட்டதாகக் கூறுகின்ற சுவிஸ் பொலிஸார், அந்த இளைஞர் தனது பெயரை முருகதாசன் என்று எழுதி வைத்திருந்ததாகவும், தான் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து சுவிஸ் வந்ததாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

தற்போது அவரை அடையாளம் காணுவதற்கான புலனாய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவ

Link to comment
Share on other sites

இவர் நெல்லியடி கரவெட்டியைச் சேர்ந்தவராம். ஆனால் ஒரு சிலர் இந்த உன்னத ஆத்மாவை கொச்சபை்படுத்துகின்றனர். உண்மையாகவே இந்த செய்தியை அறிந்ததும் கண்களிலிருந்து என்னையறியாமல் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.

இந்த தியாகத்தை எவருமே (வெளிநாட்டவர்கள்) புரிந்து கொள்ள மாட்டார்கள்.

தமிழா நீ செத்து நாசமாக போய்விடு உனக்கு எது நடந்தாலும் கேட்பதற்கு ஆளில்லை. :icon_idea::huh::lol::lol::o

இந்தியாவில் மட்டுமல்ல மேலத் தேசங்களிலும் தீக்குளித்துள்ளார்கள்.

அது குறித்து மேலே இணைத்துள்ள தமிழோசை நிகழ்சியில் ஒரு ஆய்வே இடம்பெற்றுள்ளது.

கேளுங்கள்.

இருந்தாலும்

இப்படியான நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

அறிவு ஜீவிகளாக இருப்போரே இங்கே தீக்குளிக்கின்றனர்.

அவர்கள் உயிரோடு இருந்து போராட்டத்துக்கு பலம் சேர்க்கலாம்.

உலகெங்கும் கொடுமைகள் நடைபெறுகின்றன

தாயத்தின் நிலை கூட பெரும் கொடுமையாக தொடர்ந்து கொண்டே போகிறது

தொடர்ந்து செய்திகளாக கேட்கும் போது

நாம் மன அழுத்தத்துக்கே உள்ளாகிறோம்.

அந்த மன அழுத்தம் இப்படியான செயல்களில் இறங்க வைத்துவிடுகிறது.

தொடரும் கவனயீர்ப்பு போராட்டங்களில்

இப்படியான நிகழ்வுகள் புலத்தில் நடந்தால்

நமது கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு கூட தடை ஏற்படுத்திவிடுவார்கள்.

இதன் பாதிப்புகள் எங்கு கொண்டு போயும் முடியலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BBC News

குறிப்பு :

பீபீசியில் இது குறித்து ஒரு ஆய்வே இடம்பெற்றுள்ளது.

தமிழோசையை ஒலி வழி கேட்கவும்

ஆமாம், இந்தச் செய்தி தமிழோசையில் வந்ததால் உலகம் முழுக்கப் பரவி எங்கள் வேதனையை வெளிக்கொண்டு வந்து விட்டது.தமிழன் பி.பி.சி தமிழோசை பார்த்தா தலைவன் தெரிந்து கொள்ள வேணும்? ஆங்கிலத்திலோ, எல்லோரும் பார்க்கும் இணையச் செய்தியிலோ வரவில்லை என்பதைச் சொன்னேன்.

Link to comment
Share on other sites

எப்பிடி? என்று சற்று விளக்கமாக சொல்லுங்கள் நுனவிலான். நாம் என்ன செய்யவில்லை? ஏன் இன்னும் இந்த உலகம் மௌனம் சாதிக்கின்றது?

நாம் ஜனநாயக ரீதியாக புலம் பெயர்ந்தவர்களால் நடாத்தப்படுகிறது என்பது உண்மை. ஒரு சில மாற்றங்கள் ஊடகங்களில் ஏற்பட்டதை கண்கூடாக பார்க்கிறோம். இதனை நாம் தொடர்ந்து செய்யும் போது குறிப்பிட்ட சில மாற்றங்களை கொண்டுவரலாம்.

அடுத்த பக்கம் தமிழ் ஈழ மக்களின் காவலர்களாக விளங்கும் வி.புலிகளினை ஆயுத ரீதியாக பலப்படுத்த வேண்டிய மிகப்பெரிய கடமைப்பாடும் உண்டு.இதனை பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை. எமது ஆயுத பலம் தான் எம்மை பாதுகாக்கும். அரசு ஏவும் ஸெல்கள் போல் எம்மிடம் இருக்குமிடத்து இவ்வளவு மக்களை நாம் இழந்திருக்க மாட்டோம்.இது தான் வேதனைகளை சாதனைகளை ஆக்குவதன் சாராம்சம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌  கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது  ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
    • சுவீட்னர் நியாபகத்தை பாதிக்குமாம் - நான் ஏற்கனவே கண்ணாடியை கட்டிலுக்கு கீழே வைத்து விட்டு, பிரிஜ்ஜுக்குள் தேடுற ஆள்🤣. அதனால் இப்போ எல்லாம் பப்பாயா ஜூஸ் வித் அவுட் சுகர்தான்.  சொர்கம் அண்ணா இலங்கை - எங்க போனாலும் கிடைக்கும். இந்த நாட்டில் போய் பப்பாயா ஜூஸ் எண்டு கேட்டா ஒண்டு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி பாக்கிறார்கள் அல்லது பப்பாளி தோட்டத்தின் விலை சொல்கிறார்கள். (சில கொச்சிகாய்களை தூவி விட்டுளேன் - உங்களுக்கு அல்ல, விலக்கி விட்டு குடிக்கவும்🤣).
    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.