Jump to content

மிஞ்சியிருப்போரையும் இழப்போமா இல்லை....?


Recommended Posts

இழப்போமா இல்லைப் பலி கொடுப்போமா....?

(11.02.09 அன்று வன்னியில் எறிகணைக்குப் பலியான உறவின் நினைவில் ஒரு கவிதை)

பாயுமில்லைப் படுத்துறங்க வீடுமின்றிப்

பதுங்குளி வாசலிலும்

பாதையோரச் சகதியிலும்

உழன்ற பொழுதுகளில்

உனக்கும் சாவுவரும்

என்றெண்ணியிருப்பாயா ?

நம்பிக்கையறுந்த வாழ்வு

நாளையுனக்கு இல்லையென்று

எப்போதாவது எண்ணியிருந்தாயா ?

எங்களைப்போல உனது மகளும்

மனைவியும் அம்மாவும் அக்காவும்

மருமக்களும் பற்றித்தானே

மனசுக்குள் அழுதிருப்பாய் ?

சாவரும் நாளின் முன்னிரவு

உனக்குச் சாவு நாளையென்று

சகுனம் ஏதும் அறிந்திருந்தாயா ?

போரின் கொடிய வாய்க்குள்

போய்விடும் சலனம் ஏதும் தெரிந்ததா ?

பாழும் பொஸ்பரஸ் குண்டுகள்

உன்மேல் வீழும்வரை உனக்கு எந்த

விபரீதமும் தெரிந்திருக்காது அல்லவா ?

ஒருவயது மகளும்

உன்னையே நம்பிய அம்மாவும்

உன் அன்பினியவளும்

மட்டும்தானே - உன்

மனதில் நின்றிருப்பர்.

செத்து நீ கிடந்த தெருவில்

உனைப்பார்க்கவே முடியாமல்

யாவரும் தாண்டியோடினராம்....

பின் வந்து பார்த்த போது

குருதிச் சேற்றில் நீ

முடிந்து மணிகள் ஆகியிருந்ததாம் ?

சுண்ணமிடிக்கச் சுடுகாடு கொண்டு செல்ல

உறவு கூடி ஒப்பாரி வைத்துன்

இழப்பின் வலி குறைக்க

அவகாசமில்லாமல் ஐயனே

அருகில் மண்கிண்டி

அப்படியே புதைத்துவிட்டு

உறவெல்லாம் திசைக்கொன்றாய்

சிதறியதாம்....

ஐயனே !

அந்தக்கணங்கள்

நேரில் நின்றது போல்

நெஞ்சு வலிக்கிறது.

34வயதில் போர் உன் வாழ்வு தின்று

போய்விட்டாய் கோபி.

இங்கு நம் வீடுகளில்

உன் நினைவுகளில்

அழுகையும் ஆற்றுதலில்லாத்

துயரமுமாய்....

மிஞ்சியிருப்போரையும்

இழப்போமா இல்லை

உயிருடன் பார்ப்போமா ?

15.02.09

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கும் விலைகள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது எத்தனை உயிர்கள் :mellow::lol:

Link to comment
Share on other sites

மரணத்தின் கடைசித்துளிகளில் என்ன எண்ணியிருப்பார் என்று நினைக்கவே மனதை பிசைகிறது.......... :)

கடைசித்துளிகள் யாருமற்று அனாதையாய் வீதியில் இறக்கும் கொடுமை என்னென்ன அவன் மனதில் உதித்திருக்குமோ ? தமிழன் விதியிதுவென்று எழுதப்படாத சட்டமாய்ப் போயிற்று எங்கள் வதி. :)

கொடுக்கும் விலைகள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது எத்தனை உயிர்கள் :(:(

கொடியவெறி அடங்காமல் கொத்தணிக்குண்டுகளைக் கொட்டிக் கொள்கிறான் பகைவன். என்ன சொல்ல ? இந்தவிதி மாறாதா ???????????

Link to comment
Share on other sites

எப்ப எங்களுக்கு விடிவு :icon_idea::)

இதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்திருக்கிறோம். விடியுமென்ற நம்பிக்கைகள் இன்னும் இருக்கிறது.

இதயத்தில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் கவிதை...

இவன் நினைவில் அழுவதா இன்னும் எவர் உயிர் பிரிந்திடுமோ என ஏங்குவதா புரியவில்லை ? தொலைபேசிகள் அழைத்தால் உயிர் வலிக்கிறது. யாரைக்கொன்ற செய்தி வருமோ என்ற ஏக்கம் :D

Link to comment
Share on other sites

கவிதை நெஞ்சை பிழிகிறது. நாளொன்றுக்கு ஐந்தாறாக கொல்லப்பட்ட எம்மக்கள் என்று நூறு எனுமளவிற்கு கூடிவிட்டது. வன்னியில் ஒருவரை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

Link to comment
Share on other sites

கவிதை நெஞ்சை பிழிகிறது. நாளொன்றுக்கு ஐந்தாறாக கொல்லப்பட்ட எம்மக்கள் என்று நூறு எனுமளவிற்கு கூடிவிட்டது. வன்னியில் ஒருவரை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

சாவுகளையும் துயரங்களையும் இடையிடை சில தொடர்புகள் சொல்லிவிடுகின்றன. இழப்புக்கள் எங்களைத் துரத்தியபடிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பின் வலியை எடுத்து வந்த கவிதை கண்டு எம் ஒவ்வொருவரது இதயத்திலும் இரத்தம் கசிகிறது. எம் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளின்றித் தவிக்கிறோம்

Link to comment
Share on other sites

  • 4 years later...

ak_zps61b8b11e.png

 

புஸ்பநாதன் ஜெயகாந்(கோபி)11.02.2009 அன்று எறிகணைவீச்சில் உயிரிழந்தார். இன்று 5ம் ஆண்டு நினைவுநாள்.

 

5ஆண்டு நினைவு நாளின்று எங்கள் உயிரறுந்த பொழுதின் நினைவும் இன்று....!  உனது மகள் இன்று உன்னைப்போலவே உலகை வெல்லும் சக்தியாய் வளர்கிறாள்.

Link to comment
Share on other sites

மறக்க நினைத்தாலும் முடியவில்லை. இறக்குமட்டும் மாறாத வலி. மாற்றுவதற்கு கையிலேயே மருந்து உண்டு. மருந்தை வாய்க்குக் கொண்டுசெல்வதற்கு, ஒன்றுசேர மறுக்கும் விரல்கள் மோதிரங்கள் தேடுகின்றன. :(

 

கோபிக்கு அஞ்சலிகள்!!

Link to comment
Share on other sites

மறக்க நினைத்தாலும் முடியவில்லை. இறக்குமட்டும் மாறாத வலி. மாற்றுவதற்கு கையிலேயே மருந்து உண்டு. மருந்தை வாய்க்குக் கொண்டுசெல்வதற்கு, ஒன்றுசேர மறுக்கும் விரல்கள் மோதிரங்கள் தேடுகின்றன. :(

 

கோபிக்கு அஞ்சலிகள்!!

இந்த அவலமான இழப்புகளிலிருந்து மீள்வது ஒவ்வொருவரின் மரணத்தின் பின்னரேதான். இட்ட விதி இதுவாய் போனது என்ன செய்வோம். ஈரவிழி கசிய இழந்த உயிர்களின் நினைவுகளைச் சுமப்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.