Jump to content

குறுக்கு வழிகள்


Recommended Posts

மெசன்சருக்கும் இதற்கும் என்ன வேறுபாடு.. ஒலித் தெளிவுமட்டும்தானா?

Link to comment
Share on other sites

  • Replies 358
  • Created
  • Last Reply

ஆம் இதன் முக்கிய பயன்பாடு Voice Chat தான். ஒலித் தெளிவு காரணமாகத்தான் மெசன்சரை விட இது பிரயோசனமானதாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

நன்றி!

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-45

Full Screen

இன்ரநெட் எக்ஷ்புளோரரில் ஒரு சட்டத்தை திறக்கும்போது திரை நடுவில் சிறியதாகத்தான் எப்போதும் திறக்கும். இதை தடுத்து எப்போதும் பெரிய அளவில் திறக்குமாறு செய்துவிட்டால் எமக்கு சிரமம் குறையும். இதை எப்படி செய்யலாம்?

இதற்கு பல வழிகள் உள்ளன.

1) சிறிய திரையின் பக்கங்களை மொளசால் முடியுமான அளவிற்கு பெரியதாக இழுத்துவிடுஙகள். பின் File, Close ஐ கிளிக்பண்ணவும். F5 கீயை அழுத்தவும். மீண்டும் அதே லிஙை கிளிக்பண்ணினால் சட்டம் பெரிதாகவே திறக்கும்.

2) சிறிய திரையை மொளசால் Restore பட்டனை கிளிக்பண்ணி பெருப்பிக்கவும். பின் Ctrl பட்டனை அழுத்திப்பிடித்திக்கொண்டு, Close பட்டனை (X) அழுத்தி மூடிவிடவும்.

3) Ctrl+Shift+Alt ஆகிய மூன்று பட்டன்களையும் ஒன்று சேர அழுத்தி பிடித்துக்கொண்டு, மொளசால் நான்கு பக்கங்களையும் திரை முழுவதும் நிரம்பும் வகையில், முடிந்தளவு பெருப்பிக்கவும். அழுத்திபிடித்தபடியே மூலையில் உள்ள Close பட்டனை கிளிக்பண்ணி மூடிவிடவும்.

இதில் ஏதாவது ஒரு வழியில் முயன்று பாருங்கள்.

Also please see page no. 8

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்

இத்தொடரை ஐம்பதாவதுடன் நேரமின்மை காரணமாக நிறுத்திக்கொள்ள எண்ணியுள்ளேன். அக்கறையுள்ள யாராவது இதைத்தொடர்வார்களாயின் பலர் பிரயோசனப்படுவார்கள். அல்லது இதைப்போல் புதியதாக ஒன்றை உங்கள் பெயரில் ஆரம்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

ம்.. நேரமிருக்கும்போது தொடரலாந்தானே?!

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்

இத்தொடரை ஐம்பதாவதுடன் நேரமின்மை காரணமாக நிறுத்திக்கொள்ள எண்ணியுள்ளேன். அக்கறையுள்ள யாராவது இதைத்தொடர்வார்களாயின் பலர் பிரயோசனப்படுவார்கள். அல்லது இதைப்போல் புதியதாக ஒன்றை உங்கள் பெயரில் ஆரம்பிக்கலாம்.

வணக்கம் தேவகுரு, கணனி பற்றிய பல தகவல்களை அதனை பற்றி அடிப்படை அறிவே இல்லாதவர்களுக்கு கூட புரியும்படியாக இலகு தமிழில் தந்தீர்கள். அதற்கு நன்றிகள். அடிக்கடி எழுதமுடியாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போதாவது தொடரவேண்டும் இது எனது வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-46

Intel Processor Frequency ID Utility

கம்பியூட்டர்களின் உள்ளே காணப்படும் சிப் (Chip) களில் பெரிதானதுதான் கம்பியூட்டரின் மூளை எனப்படும் CPU (Central Processing Unit) அல்லது Microprocessor எனப்படுவது. Year of make, Model என்பன கார்களுக்கு எப்படியோ அப்படித்தான் இந்த processor க்கும் பெயர் வைக்கப்படுகிறது. Processor என்பது சக்திவாய்ந்த கல்குலேட்டர்தான்:வேறொன்றுமி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள்-47

Bugbear - Virus

பெரும்பாலும் வைரஸ் ஈமெயில் இணைப்புடனேயே வந்துசேர்வதுண்டு. ஆனால் முழுமையாக அப்படியென்றில்லை. Bugbear என்ற வைரஸ் ஈமெயில் உள்ளடக்கத்துடன் வந்து சேருகின்றது. இது தொற்றினால் மொளஸ”ம் ஒழுங்காக வேலை செய்யாது. புகழ் பெற்ற, விலைக்கு கிடைக்கும் Norton Anti-Virus போன்றவை அல்லது வேறு ஏதாவதொன்று பொருத்தியிருந்தால், வைரஸை காட்டித்தரும். இல்லாவிடின் நிலமை மோசம்தான்.

இந்நிலையில் நீங்கள் செய்யவேண்டியது இதுதான். Windows கீயை அழுத்தி start மெனுவை திறக்கவும். Arrows கீக்களை பாவித்து இன்ரர்னெட் எக்ஸ்புளோரரை தேர்வு செய்து Enter ஐ அழுத்தவும். பின்பு Tab கீயை அழுத்தி www. housecall.trendmicro.com என type செய்து Enter கீயை அழுத்தவும். இப்போது இதன் வெப்பக்கம் திறக்கப்படும். அதிலிருக்கும் Scan now. It is free என்ற பட்டனை கிளீக்பண்ணவும். மொளஸ் குழப்படிபண்ணுமென்பதால் கஷ்டப்பட்டு கிளிக்பண்ணவேண்டிநேரிடும். மீண்டும் Scan Now என்ற பட்டனை கிளிக்பண்ணவும்; Local disk "C" என்ற சொற்களின் இடதுபுறம் காணப்படும் பெட்டியில் கிளிக்செய்து, Autoscan, Scan என்ற பட்டன்களை கிளிக்செய்ய, ஸ்கானிங் நடைபெறும். இது அரை மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெறலாம். இதன் பின் காண்பிக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கமைவாக செயற்படவும். வேறு எந்த வைரஸ் தொற்றிவிட்டது என சந்தேகப்பட்டாலும் இம்முறையை கையாண்டு தொற்றை நீக்கலாம்

தொற்று நீக்கப்பட்டாலும் இனிமேல் வரும் தொற்றுக்களை தடுப்பதற்காக ஒரு Anti Virus புறோகிறாம் நிறுவிக்கொள்வது அவசியம். Google ஐ பாவித்து Anti Virus புறோகிறாம்களை தேடி அதில் இலவசமாக உள்ளதை அல்லது குறைந்த விலையில் கிடைப்பதை நிறுவிக்கொள்ளலாம்.

AVG என்ற புறோகிறாம் www.grisoft.com/us/us_dwnl_free.php என்ற தளத்தில் இலவசமாக கிடைக்கிறது.

Panda என்ற புறோகிறாம் குறைந்த விலையில் http://www.pandasoftware.com/, என்ற தளத்தில் கிடைக்கின்றது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள்-48

Build Your Own PC

ஒரு கம்பியூட்டருக்கு தேவையான மதர்போட், மெமறி, பவர் சப்ளை, ஹார்ட் டிறைவ், சீடி-றொம் டிறைவ், ஆகிய சகல பாகங்களை வாங்குவதிலிருந்து அவைகளை இணைப்பது, பின் உயிர் கொடுப்பது, எப்படி Boot பண்ணுவது, திறனை அதிகரிப்பது போன்ற சகல விபரங்களையும், 27 சிறிய அத்தியாயங்களாக விளங்கப்படுத்தப்பட்டுள்ள கட்டுரையை ஆங்கிலத்தில் நீங்கள் படிக்கவிரும்பினால் கீழ்க்காணும் லிங் ஐ கிளிக்பண்ணவும். இந்த கட்டுரைகளில் காணப்படும் லிங் களின் ஊடாக வேறு தளங்களுக்கும் சென்று கம்பியூட்டர் பாகங்களின் மேலதிக விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக RAM ஐ பற்றி தெரிந்துகொள்ள www.crucial.com. என்ற லிங் தரப்பட்டுள்ளது

மிகவும் பிரயோசனமான கட்டுரை இது என்பது எனது கருத்தாகும்

http://www.pcmech.com/byopc/

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-49

Scrap Document

1) அவசரத்திற்கு நாம் சிலவேளை சில தேவைகளுக்காக் சிறு குறிப்பு எழுதுவதுண்டல்லவா?. அது தற்காலிக குறிப்புத்தான். அந்த குறிப்பு பின்பு நிரந்தர குறிப்பேட்டுக்கு மாற்றப்படுவதுண்டு அல்லது அழிக்கப்படுவதுண்டு. இதே வேலையை நாம் கம்பியூட்டரிலும் செய்யலாம்.

ஒரு டொக்கியூமெண்டை திறவுங்கள்; Resize பட்டனை கிளிக் பண்ணி அந்த சட்டத்தை சிறியதாக்குங்கள்; ஏதாவது ஒரு பந்தியை செலக் பண்ணவும். பின்பு அதை Drag பண்ணி டெஸ்க்ரொப்பில் உள்ள ஐகொன்களுக்கு அருகில் போடவும். அது

இப்போது கோடு போட்ட கடதாசிப்பட ஐகொன்னாகவும் அதன் கீழ் Document scrap என்ற சொற்களுடனும் காணப்படும். பின்பு வேண்டுமானால் அதை இரட்டை கிளிக் பண்ண, அது Word ல் திறந்து காட்சியளிக்கும். அதை தேவைற்கேற்ற

மாதிரி Save பண்ணிக்கொள்ளலாம்.

2) டிஜிட்டல் Camera ஆல் படம் எடுப்பவர்கள், முக்கியமாக தமது கமெராவின் flash ன் வீச்செல்லைக்கு அப்பால் எடுக்கும் படங்களை edit பண்ணுவதற்கு வேண்டிய Digital Camera Enhancer மென்பொருளை கீழ்காணும் தளத்திலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.

Digital Camera Enhancer (http://www.mediachance.com/digicam/enhancer.htm)

3) பலருக்கு ஒரே முறையில் e-mail அனுப்பும்போது "CC" என்பதன் வலது பெட்டியில் அத்தனை பேரின் விலாசங்களையும் நீங்கள் type செய்து அனுப்பும்போது அத்தனை பேரும் மற்றவர்களின் விலாசங்களை பார்ப்பார்கள். ஆனால் "BCC" என்பதன் வலது பெட்டியில் அத்தனை விலாசங்களையும் type செய்து அனுப்பினால், எல்லோருக்கும் e-mail போகும், ஆனால் யாரும் மற்றவர்களுக்கு போவதை அறியமாட்டார்கள். "BCC" என்றால் blind carbon copy என்று பொருள். அதாவது அதில் எழுதப்படும் விலாசங்கள் இருட்டடிக்கப்படும்

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-50

பிரயோசனமான வெப்தளங்கள்

தேவையானவை எனக்கருதி கீழ்குறிப்பட்டுள்ள வெப்தளங்களை எனது குறிப்பேட்டில் குறித்துவைத்துள்ளேன். இவைகளை, நேரம் கிடைத்தபோது ஆராய்ந்துபார்த்து வாசித்து உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ளவும்.

வெப்தளம் --------------------- எதைப்பற்றி அறிந்து கொள்ள?

1) www.wown.com------------------ இரண்டு கம்பியூட்டர்களை இணைப்பது,

2) www.winguedes.com/registry-------- றிஜிஸ்றி சம்பந்தமாக

3) www.filext.net-------------------- வ்பைல் எக்ஷ்டென்சன் சம்பந்தமாக.

4) www.mlin.net/startupcpl.shtml----- startup control சம்பந்தமாக.

5) www.pcworld.com---------------- கம்பியூட்டர் பாகங்கள் வாங்குவது.

6) http://help-site.com-------------- மதர்போட் புத்தகங்கள்

7) www.snaptel.net----------------- கம்பியூட்டரில் இருந்து போனுக்கு

8) www.jeffs-icons.com--------------- icon படங்கள்

9) www.videohelp.com-------------- DVD, CD Video

10) www.naturewallpaper.net-------- Wallpaper

11) www.tek-tips.com-------------- Forums

12) www.personal-computer-tutor.com--- Tutorials

13) www.boot-us.com-------------- Boot files and disks

14) www.powerquest.com----------- Partion magic

15) www.answersathatwork.com------- Task list

எல்லோருக்கும் எனது இனிய நல்வாழ்த்துக்கள்

-----------------<சுபம்>----------------.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களிற்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • 2 months later...

குறுக்குவழிகள்-51

பாகங்களை வாங்கி புதிய கம்பியூட்டரை உருவாக்குங்கள்

என்னென்ன பாகங்களை ஏன், எதற்காக வாங்கவேண்டும் என்பது தொடங்கி எப்படி பொருத்திக்கொள்வது என்ற விபரங்கள் வரை 18 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. கம்பியூட்டர் பாவனையில் ஆரம்பத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. கீழெ உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்.

http://www.build-a-computer-guide.com/index.html

http://www.pcmech.com/byopc/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள்...!

தமிழி எழுத்துக்களை உள்ளிட்டு வடிவங்கள் அமைக்க கு}டிய மென்பொருள்கள் பற்றி யாராவது அறிந்தால் அறியாதாருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை இவ்வளவு நாளும் பார்க்காமல் இருந்துவிட்டேன் என்று இன்று கவலைப்பட்டேன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள்-52

Home Networking (step-by-step)

நீங்கள் உங்கள் வீட்டிலுள்ள கம்பியூட்டர்களை workgroup ஆகவோ அல்லது workgroup ஐ internet உடனோ இணைக்கவிரும்பி அது பற்றிய விபரங்களை படங்களுடன் படிப்படியாக அறிய விரும்பினால் கீழ்க்காணும் லிங்குகளை கிளிக்பண்ணவும். இதில் விடயங்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன. அறையிலுள்ள கம்பியூட்டர்களை workgroup ஆக இணைத்தால் பொதுவாக ஒரு printer ஐ அல்லது ஒரு CD writer பழுதுபடின் மற்ற கம்பியூட்டருக்கு ஒரு document ஐ மாற்றி அதில் உள்ள CD writer மூலமாகவோ, எழுதவோ பாவிக்கவோ முடியும்.

இப்படியான சேகரித்து வைக்கக்கூடிய கட்டுரைகளை என்னிடமிருந்து பெறவிரும்புபவர்கள் இமெயில் மூலம் தங்களது முகவரியை தெரிவித்தால் தனிப்பட என்னால் பல கட்டுரைகளை அனுப்பிவைக்க முடியும்.

http://www.putergeek.com/home_network_2/

http://www.geekgirls.com/windowsxp_home_network.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா தகவலுக்கு நன்றி.....

நாம் கணனியை இணையத்தின் ஊடாக இணைத்தால் தனியாக CD றைற்ரர் பிறின்ரறை தானா பயன் படுத்தலாம்.... அல்லது எமது கணனியில் உள்ள வற்றை மற்ரவர்களும் பயன்படுத்தலாமா அதாவது கோப்புகளை, மற்றும் காட்றைவில் உள்ளவற்றையும் அவர்கள் பயன்படுத்தலாமா?

Link to comment
Share on other sites

அண்ணா தகவலுக்கு நன்றி.....

நாம் கணனியை இணையத்தின் ஊடாக இணைத்தால் தனியாக CD றைற்ரர் பிறின்ரறை தானா பயன் படுத்தலாம்.... அல்லது எமது கணனியில் உள்ள வற்றை மற்ரவர்களும் பயன்படுத்தலாமா அதாவது கோப்புகளை, மற்றும் காட்றைவில் உள்ளவற்றையும் அவர்கள் பயன்படுத்தலாமா?

கவிதன் அவர்கட்கு !

இன்றைய உலகில் எல்லாமே சாத்தியம்தான். நீங்கள் வெளி நாடு சென்றிருந்தால் அங்கேயுள்ள ஒரு கணணிமுன் இருந்துகொண்டு, உங்கள் வீட்டு கணணியை (அதன் முன்னால் இருந்து இய்க்குவதுபோல்) இயக்க முடியும். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் கணணியை POWER ON செய்து விட்டால் போதுமானது. அப்போது உங்கள் கணணியை யாரும் பார்த்தால் பயப்படக்கூடியளவிற்கு அதிசயமாக இருக்கும். மெளஸ் போண்டர் தானாக அங்குமிங்கும் ஓடும். ஜன்னல்கள் திறந்து மூடும். ஆனால் இவையெல்லாவற்றிக்கும் அதன் அதற்குரிய மென்பொருள்கள் வேண்டும். (உ.ம்: PC anywhere)

ஆனால் இவை எல்லாவற்றையும் உங்கள் அனுமதியுடன் தான் செய்யலாம். நீங்கள் கவனயீனமாக இருந்தால் அனுமதியின்றி பலர் நுழைந்துவிடமும் இடமுண்டு.

அடுத்த வீட்டுக்காரருக்கு அனுமதி கொடுத்தால் அவரும் இதை செய்யலாம். அல்லது குறிப்பிட்ட ஒரு கோப்பை மாத்திரம் பார்க்க அனுமதி கொடுக்கலாம். அல்லது உங்கள் பிரிண்டரை இன்னொருவர் 4 மணியிலிருந்து 5 மணிக்குள் மாத்திரம் பாவிக்க அனுமதி கொடுக்கவும் முடியும். உங்கள் hard-drive ஐ பார்க்க அனுமதிகொடுத்தால் அதில் உள்ள சகலதையும் மற்றவர்களால் பார்வையிடமுடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள் - 53

தங்கச்சுரங்கம் (பிரத்தியேகமாக XP பாவனையாளர்களுக்கு, பொதுவாக எல்லோருக்கும்)

கீழ்க்காணும் லிங் ஐ கிளிக்பண்ணி பார்க்கவும். இது தங்கச்சுரங்கமா, அறிவுக்கழஞ்சியமா அல்லது அப்பலோ வைத்தியசாலையா என ஆச்சரியப்படுவீர்கள். பக்கம் பக்கமாக பிரஜோசனமான விடயங்கள். A to Z என வகைபடுத்தப்பட்டுள்ள விடயங்களையும் காணலாம். Troubleshooting, Tweaks, Conflicts, Top 10 FAQ, Utilities, Registry Edits, Support, Knowledge Base articles, and many more

http://www.kellys-korner-xp.com/xp.htm

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-54

To disable CD Autoplay in XP

சீடியை செலுத்தியதும் தானாகவே இயங்குவதை நிறுத்த வேண்டின்

1 Click Start-->Run->(type) Gpedit.msc-->computer Configuration-->Administrative Templates-->Systems

2.Locate the entry for "Turn Autoplay Off" , right click and select the "Properties"

3.Select "Disable" and click "OK"

தேவைப்படும்போது இதே நடைமுறையை பின்பற்றி "Enable" செய்துகொள்ளலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.