Jump to content

குறுக்கு வழிகள்


Recommended Posts

மெசன்சருக்கும் இதற்கும் என்ன வேறுபாடு.. ஒலித் தெளிவுமட்டும்தானா?

Link to comment
Share on other sites

  • Replies 358
  • Created
  • Last Reply

ஆம் இதன் முக்கிய பயன்பாடு Voice Chat தான். ஒலித் தெளிவு காரணமாகத்தான் மெசன்சரை விட இது பிரயோசனமானதாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

நன்றி!

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-45

Full Screen

இன்ரநெட் எக்ஷ்புளோரரில் ஒரு சட்டத்தை திறக்கும்போது திரை நடுவில் சிறியதாகத்தான் எப்போதும் திறக்கும். இதை தடுத்து எப்போதும் பெரிய அளவில் திறக்குமாறு செய்துவிட்டால் எமக்கு சிரமம் குறையும். இதை எப்படி செய்யலாம்?

இதற்கு பல வழிகள் உள்ளன.

1) சிறிய திரையின் பக்கங்களை மொளசால் முடியுமான அளவிற்கு பெரியதாக இழுத்துவிடுஙகள். பின் File, Close ஐ கிளிக்பண்ணவும். F5 கீயை அழுத்தவும். மீண்டும் அதே லிஙை கிளிக்பண்ணினால் சட்டம் பெரிதாகவே திறக்கும்.

2) சிறிய திரையை மொளசால் Restore பட்டனை கிளிக்பண்ணி பெருப்பிக்கவும். பின் Ctrl பட்டனை அழுத்திப்பிடித்திக்கொண்டு, Close பட்டனை (X) அழுத்தி மூடிவிடவும்.

3) Ctrl+Shift+Alt ஆகிய மூன்று பட்டன்களையும் ஒன்று சேர அழுத்தி பிடித்துக்கொண்டு, மொளசால் நான்கு பக்கங்களையும் திரை முழுவதும் நிரம்பும் வகையில், முடிந்தளவு பெருப்பிக்கவும். அழுத்திபிடித்தபடியே மூலையில் உள்ள Close பட்டனை கிளிக்பண்ணி மூடிவிடவும்.

இதில் ஏதாவது ஒரு வழியில் முயன்று பாருங்கள்.

Also please see page no. 8

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்

இத்தொடரை ஐம்பதாவதுடன் நேரமின்மை காரணமாக நிறுத்திக்கொள்ள எண்ணியுள்ளேன். அக்கறையுள்ள யாராவது இதைத்தொடர்வார்களாயின் பலர் பிரயோசனப்படுவார்கள். அல்லது இதைப்போல் புதியதாக ஒன்றை உங்கள் பெயரில் ஆரம்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

ம்.. நேரமிருக்கும்போது தொடரலாந்தானே?!

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்

இத்தொடரை ஐம்பதாவதுடன் நேரமின்மை காரணமாக நிறுத்திக்கொள்ள எண்ணியுள்ளேன். அக்கறையுள்ள யாராவது இதைத்தொடர்வார்களாயின் பலர் பிரயோசனப்படுவார்கள். அல்லது இதைப்போல் புதியதாக ஒன்றை உங்கள் பெயரில் ஆரம்பிக்கலாம்.

வணக்கம் தேவகுரு, கணனி பற்றிய பல தகவல்களை அதனை பற்றி அடிப்படை அறிவே இல்லாதவர்களுக்கு கூட புரியும்படியாக இலகு தமிழில் தந்தீர்கள். அதற்கு நன்றிகள். அடிக்கடி எழுதமுடியாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போதாவது தொடரவேண்டும் இது எனது வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-46

Intel Processor Frequency ID Utility

கம்பியூட்டர்களின் உள்ளே காணப்படும் சிப் (Chip) களில் பெரிதானதுதான் கம்பியூட்டரின் மூளை எனப்படும் CPU (Central Processing Unit) அல்லது Microprocessor எனப்படுவது. Year of make, Model என்பன கார்களுக்கு எப்படியோ அப்படித்தான் இந்த processor க்கும் பெயர் வைக்கப்படுகிறது. Processor என்பது சக்திவாய்ந்த கல்குலேட்டர்தான்:வேறொன்றுமி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள்-47

Bugbear - Virus

பெரும்பாலும் வைரஸ் ஈமெயில் இணைப்புடனேயே வந்துசேர்வதுண்டு. ஆனால் முழுமையாக அப்படியென்றில்லை. Bugbear என்ற வைரஸ் ஈமெயில் உள்ளடக்கத்துடன் வந்து சேருகின்றது. இது தொற்றினால் மொளஸ”ம் ஒழுங்காக வேலை செய்யாது. புகழ் பெற்ற, விலைக்கு கிடைக்கும் Norton Anti-Virus போன்றவை அல்லது வேறு ஏதாவதொன்று பொருத்தியிருந்தால், வைரஸை காட்டித்தரும். இல்லாவிடின் நிலமை மோசம்தான்.

இந்நிலையில் நீங்கள் செய்யவேண்டியது இதுதான். Windows கீயை அழுத்தி start மெனுவை திறக்கவும். Arrows கீக்களை பாவித்து இன்ரர்னெட் எக்ஸ்புளோரரை தேர்வு செய்து Enter ஐ அழுத்தவும். பின்பு Tab கீயை அழுத்தி www. housecall.trendmicro.com என type செய்து Enter கீயை அழுத்தவும். இப்போது இதன் வெப்பக்கம் திறக்கப்படும். அதிலிருக்கும் Scan now. It is free என்ற பட்டனை கிளீக்பண்ணவும். மொளஸ் குழப்படிபண்ணுமென்பதால் கஷ்டப்பட்டு கிளிக்பண்ணவேண்டிநேரிடும். மீண்டும் Scan Now என்ற பட்டனை கிளிக்பண்ணவும்; Local disk "C" என்ற சொற்களின் இடதுபுறம் காணப்படும் பெட்டியில் கிளிக்செய்து, Autoscan, Scan என்ற பட்டன்களை கிளிக்செய்ய, ஸ்கானிங் நடைபெறும். இது அரை மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெறலாம். இதன் பின் காண்பிக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கமைவாக செயற்படவும். வேறு எந்த வைரஸ் தொற்றிவிட்டது என சந்தேகப்பட்டாலும் இம்முறையை கையாண்டு தொற்றை நீக்கலாம்

தொற்று நீக்கப்பட்டாலும் இனிமேல் வரும் தொற்றுக்களை தடுப்பதற்காக ஒரு Anti Virus புறோகிறாம் நிறுவிக்கொள்வது அவசியம். Google ஐ பாவித்து Anti Virus புறோகிறாம்களை தேடி அதில் இலவசமாக உள்ளதை அல்லது குறைந்த விலையில் கிடைப்பதை நிறுவிக்கொள்ளலாம்.

AVG என்ற புறோகிறாம் www.grisoft.com/us/us_dwnl_free.php என்ற தளத்தில் இலவசமாக கிடைக்கிறது.

Panda என்ற புறோகிறாம் குறைந்த விலையில் http://www.pandasoftware.com/, என்ற தளத்தில் கிடைக்கின்றது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள்-48

Build Your Own PC

ஒரு கம்பியூட்டருக்கு தேவையான மதர்போட், மெமறி, பவர் சப்ளை, ஹார்ட் டிறைவ், சீடி-றொம் டிறைவ், ஆகிய சகல பாகங்களை வாங்குவதிலிருந்து அவைகளை இணைப்பது, பின் உயிர் கொடுப்பது, எப்படி Boot பண்ணுவது, திறனை அதிகரிப்பது போன்ற சகல விபரங்களையும், 27 சிறிய அத்தியாயங்களாக விளங்கப்படுத்தப்பட்டுள்ள கட்டுரையை ஆங்கிலத்தில் நீங்கள் படிக்கவிரும்பினால் கீழ்க்காணும் லிங் ஐ கிளிக்பண்ணவும். இந்த கட்டுரைகளில் காணப்படும் லிங் களின் ஊடாக வேறு தளங்களுக்கும் சென்று கம்பியூட்டர் பாகங்களின் மேலதிக விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக RAM ஐ பற்றி தெரிந்துகொள்ள www.crucial.com. என்ற லிங் தரப்பட்டுள்ளது

மிகவும் பிரயோசனமான கட்டுரை இது என்பது எனது கருத்தாகும்

http://www.pcmech.com/byopc/

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-49

Scrap Document

1) அவசரத்திற்கு நாம் சிலவேளை சில தேவைகளுக்காக் சிறு குறிப்பு எழுதுவதுண்டல்லவா?. அது தற்காலிக குறிப்புத்தான். அந்த குறிப்பு பின்பு நிரந்தர குறிப்பேட்டுக்கு மாற்றப்படுவதுண்டு அல்லது அழிக்கப்படுவதுண்டு. இதே வேலையை நாம் கம்பியூட்டரிலும் செய்யலாம்.

ஒரு டொக்கியூமெண்டை திறவுங்கள்; Resize பட்டனை கிளிக் பண்ணி அந்த சட்டத்தை சிறியதாக்குங்கள்; ஏதாவது ஒரு பந்தியை செலக் பண்ணவும். பின்பு அதை Drag பண்ணி டெஸ்க்ரொப்பில் உள்ள ஐகொன்களுக்கு அருகில் போடவும். அது

இப்போது கோடு போட்ட கடதாசிப்பட ஐகொன்னாகவும் அதன் கீழ் Document scrap என்ற சொற்களுடனும் காணப்படும். பின்பு வேண்டுமானால் அதை இரட்டை கிளிக் பண்ண, அது Word ல் திறந்து காட்சியளிக்கும். அதை தேவைற்கேற்ற

மாதிரி Save பண்ணிக்கொள்ளலாம்.

2) டிஜிட்டல் Camera ஆல் படம் எடுப்பவர்கள், முக்கியமாக தமது கமெராவின் flash ன் வீச்செல்லைக்கு அப்பால் எடுக்கும் படங்களை edit பண்ணுவதற்கு வேண்டிய Digital Camera Enhancer மென்பொருளை கீழ்காணும் தளத்திலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.

Digital Camera Enhancer (http://www.mediachance.com/digicam/enhancer.htm)

3) பலருக்கு ஒரே முறையில் e-mail அனுப்பும்போது "CC" என்பதன் வலது பெட்டியில் அத்தனை பேரின் விலாசங்களையும் நீங்கள் type செய்து அனுப்பும்போது அத்தனை பேரும் மற்றவர்களின் விலாசங்களை பார்ப்பார்கள். ஆனால் "BCC" என்பதன் வலது பெட்டியில் அத்தனை விலாசங்களையும் type செய்து அனுப்பினால், எல்லோருக்கும் e-mail போகும், ஆனால் யாரும் மற்றவர்களுக்கு போவதை அறியமாட்டார்கள். "BCC" என்றால் blind carbon copy என்று பொருள். அதாவது அதில் எழுதப்படும் விலாசங்கள் இருட்டடிக்கப்படும்

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-50

பிரயோசனமான வெப்தளங்கள்

தேவையானவை எனக்கருதி கீழ்குறிப்பட்டுள்ள வெப்தளங்களை எனது குறிப்பேட்டில் குறித்துவைத்துள்ளேன். இவைகளை, நேரம் கிடைத்தபோது ஆராய்ந்துபார்த்து வாசித்து உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ளவும்.

வெப்தளம் --------------------- எதைப்பற்றி அறிந்து கொள்ள?

1) www.wown.com------------------ இரண்டு கம்பியூட்டர்களை இணைப்பது,

2) www.winguedes.com/registry-------- றிஜிஸ்றி சம்பந்தமாக

3) www.filext.net-------------------- வ்பைல் எக்ஷ்டென்சன் சம்பந்தமாக.

4) www.mlin.net/startupcpl.shtml----- startup control சம்பந்தமாக.

5) www.pcworld.com---------------- கம்பியூட்டர் பாகங்கள் வாங்குவது.

6) http://help-site.com-------------- மதர்போட் புத்தகங்கள்

7) www.snaptel.net----------------- கம்பியூட்டரில் இருந்து போனுக்கு

8) www.jeffs-icons.com--------------- icon படங்கள்

9) www.videohelp.com-------------- DVD, CD Video

10) www.naturewallpaper.net-------- Wallpaper

11) www.tek-tips.com-------------- Forums

12) www.personal-computer-tutor.com--- Tutorials

13) www.boot-us.com-------------- Boot files and disks

14) www.powerquest.com----------- Partion magic

15) www.answersathatwork.com------- Task list

எல்லோருக்கும் எனது இனிய நல்வாழ்த்துக்கள்

-----------------<சுபம்>----------------.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களிற்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • 2 months later...

குறுக்குவழிகள்-51

பாகங்களை வாங்கி புதிய கம்பியூட்டரை உருவாக்குங்கள்

என்னென்ன பாகங்களை ஏன், எதற்காக வாங்கவேண்டும் என்பது தொடங்கி எப்படி பொருத்திக்கொள்வது என்ற விபரங்கள் வரை 18 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. கம்பியூட்டர் பாவனையில் ஆரம்பத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. கீழெ உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்.

http://www.build-a-computer-guide.com/index.html

http://www.pcmech.com/byopc/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள்...!

தமிழி எழுத்துக்களை உள்ளிட்டு வடிவங்கள் அமைக்க கு}டிய மென்பொருள்கள் பற்றி யாராவது அறிந்தால் அறியாதாருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை இவ்வளவு நாளும் பார்க்காமல் இருந்துவிட்டேன் என்று இன்று கவலைப்பட்டேன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள்-52

Home Networking (step-by-step)

நீங்கள் உங்கள் வீட்டிலுள்ள கம்பியூட்டர்களை workgroup ஆகவோ அல்லது workgroup ஐ internet உடனோ இணைக்கவிரும்பி அது பற்றிய விபரங்களை படங்களுடன் படிப்படியாக அறிய விரும்பினால் கீழ்க்காணும் லிங்குகளை கிளிக்பண்ணவும். இதில் விடயங்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன. அறையிலுள்ள கம்பியூட்டர்களை workgroup ஆக இணைத்தால் பொதுவாக ஒரு printer ஐ அல்லது ஒரு CD writer பழுதுபடின் மற்ற கம்பியூட்டருக்கு ஒரு document ஐ மாற்றி அதில் உள்ள CD writer மூலமாகவோ, எழுதவோ பாவிக்கவோ முடியும்.

இப்படியான சேகரித்து வைக்கக்கூடிய கட்டுரைகளை என்னிடமிருந்து பெறவிரும்புபவர்கள் இமெயில் மூலம் தங்களது முகவரியை தெரிவித்தால் தனிப்பட என்னால் பல கட்டுரைகளை அனுப்பிவைக்க முடியும்.

http://www.putergeek.com/home_network_2/

http://www.geekgirls.com/windowsxp_home_network.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா தகவலுக்கு நன்றி.....

நாம் கணனியை இணையத்தின் ஊடாக இணைத்தால் தனியாக CD றைற்ரர் பிறின்ரறை தானா பயன் படுத்தலாம்.... அல்லது எமது கணனியில் உள்ள வற்றை மற்ரவர்களும் பயன்படுத்தலாமா அதாவது கோப்புகளை, மற்றும் காட்றைவில் உள்ளவற்றையும் அவர்கள் பயன்படுத்தலாமா?

Link to comment
Share on other sites

அண்ணா தகவலுக்கு நன்றி.....

நாம் கணனியை இணையத்தின் ஊடாக இணைத்தால் தனியாக CD றைற்ரர் பிறின்ரறை தானா பயன் படுத்தலாம்.... அல்லது எமது கணனியில் உள்ள வற்றை மற்ரவர்களும் பயன்படுத்தலாமா அதாவது கோப்புகளை, மற்றும் காட்றைவில் உள்ளவற்றையும் அவர்கள் பயன்படுத்தலாமா?

கவிதன் அவர்கட்கு !

இன்றைய உலகில் எல்லாமே சாத்தியம்தான். நீங்கள் வெளி நாடு சென்றிருந்தால் அங்கேயுள்ள ஒரு கணணிமுன் இருந்துகொண்டு, உங்கள் வீட்டு கணணியை (அதன் முன்னால் இருந்து இய்க்குவதுபோல்) இயக்க முடியும். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் கணணியை POWER ON செய்து விட்டால் போதுமானது. அப்போது உங்கள் கணணியை யாரும் பார்த்தால் பயப்படக்கூடியளவிற்கு அதிசயமாக இருக்கும். மெளஸ் போண்டர் தானாக அங்குமிங்கும் ஓடும். ஜன்னல்கள் திறந்து மூடும். ஆனால் இவையெல்லாவற்றிக்கும் அதன் அதற்குரிய மென்பொருள்கள் வேண்டும். (உ.ம்: PC anywhere)

ஆனால் இவை எல்லாவற்றையும் உங்கள் அனுமதியுடன் தான் செய்யலாம். நீங்கள் கவனயீனமாக இருந்தால் அனுமதியின்றி பலர் நுழைந்துவிடமும் இடமுண்டு.

அடுத்த வீட்டுக்காரருக்கு அனுமதி கொடுத்தால் அவரும் இதை செய்யலாம். அல்லது குறிப்பிட்ட ஒரு கோப்பை மாத்திரம் பார்க்க அனுமதி கொடுக்கலாம். அல்லது உங்கள் பிரிண்டரை இன்னொருவர் 4 மணியிலிருந்து 5 மணிக்குள் மாத்திரம் பாவிக்க அனுமதி கொடுக்கவும் முடியும். உங்கள் hard-drive ஐ பார்க்க அனுமதிகொடுத்தால் அதில் உள்ள சகலதையும் மற்றவர்களால் பார்வையிடமுடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள் - 53

தங்கச்சுரங்கம் (பிரத்தியேகமாக XP பாவனையாளர்களுக்கு, பொதுவாக எல்லோருக்கும்)

கீழ்க்காணும் லிங் ஐ கிளிக்பண்ணி பார்க்கவும். இது தங்கச்சுரங்கமா, அறிவுக்கழஞ்சியமா அல்லது அப்பலோ வைத்தியசாலையா என ஆச்சரியப்படுவீர்கள். பக்கம் பக்கமாக பிரஜோசனமான விடயங்கள். A to Z என வகைபடுத்தப்பட்டுள்ள விடயங்களையும் காணலாம். Troubleshooting, Tweaks, Conflicts, Top 10 FAQ, Utilities, Registry Edits, Support, Knowledge Base articles, and many more

http://www.kellys-korner-xp.com/xp.htm

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-54

To disable CD Autoplay in XP

சீடியை செலுத்தியதும் தானாகவே இயங்குவதை நிறுத்த வேண்டின்

1 Click Start-->Run->(type) Gpedit.msc-->computer Configuration-->Administrative Templates-->Systems

2.Locate the entry for "Turn Autoplay Off" , right click and select the "Properties"

3.Select "Disable" and click "OK"

தேவைப்படும்போது இதே நடைமுறையை பின்பற்றி "Enable" செய்துகொள்ளலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.