Jump to content

குறுக்கு வழிகள்


Recommended Posts

குறுக்குவழிகள்-55

Disable Unwanted Startup Services

நீங்கள் தனி பாவனையாளர் , நெட்வேர்க் இல் உங்கள் கணணியை பிணைத்துக்கொள்ளாதவர் எனில், தேவைப்படாத கம்பியூட்டரின் வேகத்தை மெதுவாக்கும் கீழ்க்காணும் சேவைகளை நிறுத்திவிடலாம். இதனால் எந்த இடையூறும் நேராது. Click -->start--> (type) Services.msc or Msconfig -->ok--> Services--> Select and disable

Alerter

Clipbook

Computer Browser

Fast User Switching

Human Interface Access Devices

Indexing Service (Slows the hard drive down)

Messenger

Net Logon (unnecessary unless networked on a Domain)

Netmeeting Remote Desktop Sharing (disabled for extra security)

Remote Desktop Help Session Manager (disabled for extra security)

Remote Procedure Call Locator

Remote Registry (disabled for extra security)

Routing & Remote Access (disabled for extra security)

Server

SSDP Discovery Service ("Universal P'n'P", & leaves TCP Port 5000 wide open)

TCP/IP NetBIOS Helper

Telnet (disabled for extra security)

Universal Plug and Play Device Host

Upload Manager

Windows Time

Wireless Zero Configuration (for wireless networks)

Workstation

Link to comment
Share on other sites

  • Replies 358
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள்.. !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா எனக்கு உந்த ஸ்ராட்டப் பிரச்சனை இருந்தது அது எல்லாம் இப்ப கட் பண்ணியாச்சு

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-56

Removing Desktop Icons

எந்தவொரு விண்டோஸ் இயங்குதளத்தையாவது நாம் எமது கணணியில் நிறுவும்போது அது இயல்பாகவே ஐந்து ஐகொன்களை கணணித்திரையில் கானண்பிக்கும்.அவையாவன : My Documents, My Computer, Recycle Bin, My Network Places, Internet Explorer. பின்னர் வேறு புறோகிறாம்களை நாம் நிறுவும்போது அவையும் அவற்றிக்குரிய ஐகொன்களை திரையில் போடும். சில போடாமலும்விடும்.

இயங்குதளம் நிறுவும்போது போடப்படும் இந்த ஐந்து ஐகொன்களையும் நாம் விரும்பினால் காண்பிக்காது தடுத்துவிட முடியும். இதோ வழி

Start---> Control Panel---> Double-click "Display" --->Desktop--->Customize Desktop

இப்போது எந்த ஐகொன் ஐ மறைக்கவிரும்புகிறீர்களோ அதற்கு பக்கத்திலுலள்ள Tick ஐ எடுத்துவிட்டு OK ஐ கிளிக்பண்ணிவிடுங்கள். மீண்டும் OK ஐ கிளிக்பண்ணிவிடுங்கள். இப்போது அந்த ஐகொன் திரையிலிருந்து மறைந்துவிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கணணி Broad Band Modemஇனூடாக இணைய தளத்திற்கு இணைக்கப்படுள்ளதா? அப்படியாயின் இணைத்த பின் கணணியை start up செய்து boot ஆகியவுடன் கணணியின் programs ஆரம்பிக்க அல்லது இணையதிற்கு இணைக்க நேரம்(60-90Sec) எடுக்கிறதா? கவலையை விடுங்கள், பின்வருமாறு செய்யுங்கள்.

Control panel>Network connections>Local Area connection>properties>Internet Protocol(TCP/IP) check on Use The Folllowing IP Adderess and type there 192.168.0.1

click Ok... You may see the big diffrence :D:)

NB:

இது Windows XPக்கு தான் பொருந்தும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நாட்களுக்கு முன்னர் என் computerயை strat upசெய்தவுடன் boot பண்ணிய சில நிமிடங்களிலே freez ஆகிகொண்டிருந்தது. நிறுத்தி பின்னர் இயக்கிய போதும்கூட இதே நிலைமை தான். எனக்கு தெரிந்த வரை computerல் எந்த பிழையும் இல்லை.

பின்னர் பலவாறும் யோசித்த பின் மூளையில் :idea: பொறி தட்டியது. PCஐ கழற்றி பார்த்தபோது அங்கே processorஇல் ஏராளமான தூசி படிந்திருந்தது. அவற்றை கழற்றி துப்பரவாக்கியபின் எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறது

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-57

Hub, Switch, and Routers

Hub என்பது மிகவும் எளிய, மலிவான, சிறிய, நெட்வேர்க் இணைப்பிற்கு தேவைப்படும் ஒரு சாதனம். வரும் தகவல்களை தனது port களோடு இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்களுக்கு திருப்பிவிடும் எளிய வேலையை மாத்திரம் செய்கின்றது. ஒரு மின்சார Multi-plug போல இது வேலை செய்கிறது. Hub ஆனது என்ன தகவல் கம்பியூட்டர்களுக்கு போகிறது என அறிவதில்லை. Hub உடன் இணைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு கம்பியூட்டரும் மற்ற கம்பியூட்டருக்கு என்ன போகிறது என அறிந்துகொள்ளும். ஏனெனில் ஒரே மாதிரியான தகவல்கள் எல்லா கம்பியூட்டர்க்ளுக்கும் போவதால். பல வருடங்களாக கம்பியூட்டர்களை இலேசில் இணைக்கக்கூடிய ஒரு சாதனமாக இது பயன்பட்டது.

Switch என்பது Hub செய்த வேலையையே ஆனால் திறமையாக புத்திசாதுரியமாக செய்கிறது. தனது எந்த port உடன் எந்த கம்பியூட்டர் இணைக்கப்பட்டிருக்கின்றது என சரியாக தெரிந்து வைத்திருப்பதால் வெளியில் இருந்து வரும் தகவல்களை உரிய கம்பியூட்டர்களுக்கு அனுப்பும் திறமையை இது பெற்றிருக்கிறது. அதுபோல் தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்கள் அனுப்பும் தகவல்கள் எந்த கம்பியூட்டரில் இருந்து வருகிறது என பிரித்து அறியும் தன்மை கொண்டது.

Router என்பது மூவரிலும் அதி புத்திசாலி, விலைகூடியது. பிரபல்யமான நான்கு port உள்ள சிறிய router இலிருந்து இணையத்தை இயக்குகின்ற மிகப்பெரிய அளவுவரை பல வடிவங்களில் உற்பத்தியாகின்றன. இதை ஒரு விசேஷ புறோகிறாம் நிறுவப்பட்ட கம்பியூட்டருக்கு ஒப்பிடலாம். டேட்டாக்களின் தன்மைகளை விளங்கி, தரம்பிரித்து உரிய தொலைதூர கம்பியூட்டர்களுக்கு நிலைமைகளை அனுசரித்து அனுப்பக்கூடிய புறோகிறாம்கள் இவைகளில் நிறுவப்படுகின்றன. Firewall களின் உதவியோடு வெளியிலிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்களை பாதுகாக்கவல்லவை.

தன்னுடன் இணைக்கப்பட்ட கம்பியூட்டரிலிருந்து புறப்படும் தகவல்களை, மிகத்தொலைவில் உள்ள இன்னொரு கம்பியூட்டருக்கு, அதற்குரிய திசையையறிந்து அனுப்பவல்லது. அனுப்பும்வழியில் நெருக்கடியிருந்தால் திசையைமாற்றியனுப்பும் வல்லமையும் கொண்டது. ஒரு தபாலை நாம் பெட்டியில் போட அது தபாற்கந்தோரில் பொதியிடப்பட்டு, இன்னொரு கந்தோருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ர்யில் மூலமோ அல்லது விமானமூலமோ இன்னொரு கந்தோரையடைந்து கடைசியாக எம்மை வந்தடைகின்றது. அதுபோலவே நாம் அனுப்பும் தகவல்களும் பொதிகளாக்கப்பட்டு (data package) அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு router களையும் ஒவ்வொரு தபாற்கந்தோர்களுக்கு ஒப்பிடலாம். Router க்ளின் புறோகிறாம்களை Post Master க்கும் அவரது உதவியாட்களுக்கும் ஒப்பிடலாம். Router சம்பந்தமான மேலதிக தகவல்களை அறியவிரும்பினால் கீழ்க்காணும் லிஙை கிளிக்பண்ணவும்.

http://computer.howstuffworks.com/router.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்...

யாருக்காவது.. operating system's history வரலாறு தெரிந்தால் எங்காவது எடுக்க முடியுமா என்று தெரிந்தால் தந்து உதவ முடியுமா... ஆங்கிலத்தில் இருந்தால் கு}ட பறவாய் இல்லை....

Link to comment
Share on other sites

தமிழினி அவர்கட்கு

ஒபறேரிங் சிஸ்டம்களின் வரலாற்றினை தெரிந்துகொள்ள நிறைய பக்கங்கள் உள்ளன. உங்களுக்கு பரிச்சயமான search engine இன் பெட்டியில் history of operating systems என்று அடித்து தேடுங்கள். நான் தேடிப்பார்த்தேன் ஐம்பதிற்கு மேற்பட்ட பக்கங்கள் கிடைத்தன. முக்கியமான நான்கை தருகின்றேன்

http://en.wikipedia.org/wiki/History_of_op...ystems#See_also

http://www.webster-dictionary.org/definiti...ating%20systems

http://www.computerhope.com/history/windows.htm

http://www.computinghistorymuseum.org/teac...tem_Moumina.pdf

http://www.cs.vu.nl/~ast/books/mos2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா... அப்படி தான் நான் தேடினேன் சில இணையங்களில் வேறுபட்ட தகவல்கள் கிடைத்தன.. அதனால் தான் கண்டிப்பாக உங்களிடம் நல்ல தகவல் உள்ள தளத்தை பெற முடியும் என்று நினைத்தேன்.... உங்கள் தகவலுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-58

Start-up disk என்பது என்ன?

நின்றுபோன கம்பியூட்டரை திருத்தி மீண்டும் இயங்க வைக்கத்தேவையான, கையடக்கமான சில பயன்பாட்டு சிறிய utilities ஐக்கொண்ட விசேஷமான bootable floppy disk என்று இந்த start-up disk ஐ கூறலாம்.

நின்றுவிட்ட கம்பியூட்டரினுள் இந்த start-up disk ஐ செலுத்திவிட்டு கம்பியூட்டரை இயக்கினால் சில விநாடிகளில் மூன்று விருப்பத்தெரிவு திரையில் தெரியும். முதலாவது CD-Rom ஆதரவுடன் கம்பியூட்டரை இயக்கலாமா? இரண்டாவது சிடி-றொம் ஆதரவு அற்று இயக்கலாமா? மூன்றாவது உதவியை வாசிக்கப்போகிறீர்களா? என கேட்கும்.

முதலாவதை தெரிந்துவிட்டு Windows Instalation சீடியை CD-Rom drive இனுள் செலுத்தி ஹாட் டிஸ்க் ஐ partition பண்ணவோ அல்லது ஏற்கனவே c: டிறைவினுள் உள்ள இயங்கு தளத்தை repair பண்ணவோ அல்லது Format பண்ணி அழித்து புதிதாக install செய்யவோ முடியும்.

இரண்டாவதை தெரிவு செய்தால் a:> prompt ல் போய் நிற்கும். இதில் நின்றுகொண்டு இந்த டிஸ்க்கில் உள்ள சிறிய் utilities ஐ பயன்படுத்தி Fdisk, Format, extract, Scandisk, chkdsk, Edit, delete, copy ஆகிய கட்டளைகளை பயன்படுத்தி பல திருத்த வேலைகளை இயங்கு தளத்தை சீர்செய்து வழமைபோல் கம்பியூட்டரை இயக்க வழிசெய்யலாம்.

மூன்றாவதை தெரிவுசெய்து இந்த டிஸ்க்கை பயன்படுத்தி என்னென்ன செய்யலாம் என்ற முழு விபரத்தையும் வாசித்து அறிந்துகொள்ளலாம்.

Windows 95 start-up disk சீடி றொம் ஐஆதரிக்காது, ஆனால் Windows 98 ம் அதன் பின் வந்த Windows 2000. Win XP க்களின் start-up டிஸ்க்குகள் சீடி றொம் ஐ ஆதரிக்கும்.

இயங்காது நின்ற கம்பியூட்டரின் இயக்கத்தை ஆரம்பித்து பின் பொறுப்பை சீடி றொம்மிடம் பாரம் கொடுப்பதுதான் start-up disk க்குகளின் முக்கிய வேலை. பல நேரங்களில் O/S களை இன்ஸ்டால் பண்ணுவதற்கு நாம் சீடி றொம் ஐ அணுகவேண்டும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.Graphical User Interface புறோகிறாம்களை start-up டிஸ்க்கை பயன்படுத்ததி இயக்கமுடியாது என்பதும் குறிப்பிடதக்கது

சுருங்கக்கூறின் திருத்த வேலைக்காக செல்லும் ஒருவர் தன்னுடன் எடுத்துச்செல்லும் சிறிய கருவிகள் அடங்கிய ஒரு ஆயுதப்பெட்டிதான் இந்த start-up டிஸ்க்.

CD-Rom டிறைவினுள் எந்த சீடியும் இல்லாத வேளையில் இந்த start-up டிஸ்க்கை அதன் டிறைவினுள் நுழைத்து ஆராய்ந்து பார்க்கவும்.கெடுதல் ஏற்படாது. கட்டளைகளை கொடுத்து Enter கீயை தட்டாது பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி செய்யின் இருந்ததும் கெட்டுப்போகலாம்

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-59

USB port என்றால் என்ன?

டிஜிட்டல் கமெரா, ஸ்கானர், பிரிண்டர், மெளஸ், இவைகளில் பொதுவாக காணப்படுவது என்னவெனில் Port என அடித்துக்கூறலாம். Port என்றால் நினைவிற்கு வருவது serial, parallel, com port கள்தான். இவைகளில் pin கள் கொண்ட Male port, துவாரங்கள் கொண்ட Female port என இருவகையுண்டு. இவைகள் வட்டமாகவோ அல்லது D என்ற எழுத்து வடிவத்திலோ அதிகமாக காணப்படும். ஆனால் இந்த port களை எல்லாம் பாவனையிலிருந்து ஒதுக்கிக்கொண்டு முன்னுக்கு வந்துகொண்டிருப்பது Universal Serial Bus (USB) port ஆகும். தற்போதைய நவீன சாதனங்கள் பலவற்றிலும் காணப்படும் இந்த போட் வினோதவடிவங்கொண்டவை. நீள்சதுர பெட்டி போன்ற தோற்றம்கொண்டவை; அடிக்கடி கழற்றி பூட்டவேண்டிய சாதனங்களை இணைப்பதற்காக கம்பியூட்டரின் முன்புறமும் சிலவேளைகளில் காணப்படும். அப்படி காணப்படாதவிடத்து பின்புறமிருந்து extension cord மூலம் இன்னொரு USB port ஐ முன்பக்க மேசைக்கு கொண்டுவரலாம்.

இந்த USB port உடன் சாதனத்தை இணைக்கும் வயரின் இரு முனையிலும் இரண்டு கனெக்டர்கள் காணப்படும். அவை Type A, Type B எனப்படும். Type A கம்பியூட்டருடனும் Type B சாதனத்துடனும் இணையும்.

USB Port Type A Connector Type B Connector

தற்போது USB Flash Memory என அழைக்கப்படும் Key tag ல் கொழுவக்கூடிய, பேனா கத்தி போன்ற தோற்றம்கொண்ட, கையடக்கமான drive கள் பாவனைக்குவந்துள்ளன. இவைகள் 32 எம்பி, 128 எம்பி, 256 எம்பி, 512 எம்பி அளவிகளில் கிடைக்கின்றன. இதை USB port இனுள் சொருகிவிட்டால் Floppy Drive போல் வேலைசெய்யும். தகவலை பதிந்து விநாடியில் கழற்றி எடுத்துக்கொண்டு செல்லலாம். Floppy disk ல்1.44 எம்பி ஆனால் இதிலோ 512 எம்பி கொள்ளும்; Floppy disk இலும் பார்க்க காவிச்செல்ல வசதியானது.

இந்த் USB port , Plug and Play தொழில்நுட்பத்தில் இயங்குகின்றது; Serial and Parallel bus கள்போல் தகவல்களை கம்பியூட்டருக்கும் சாதனத்திற்குமிடையில் பரிமாற்றம்செய்கிறது; மென்பொருள் போல் திருத்திய பதிப்புகளைகொண்டது; பழையது பதிப்பு 1.1, 2002 ல் அறிமுகப்படுத்தப்பட்ட பதிப்பு 2.0. புதிய பதிப்பு பழையதிலும் பார்க்க 40 மடங்கு வேகமானது அத்தோடு பழைய பதிப்போடு ஒத்திசைவானது. (Backward compatible with Version 1.1)

அதிகம் மின்சாரம் தேவைப்படாத சாதனங்கள் தமக்கு தேவையான மின்சாரத்தை USB port இலிருந்து பெற்றுக்கொள்ளலாம். 127 சாதனங்களை இந்த USB port ஒவ்வொன்றிலும் Hot Swap முறையில் இணைக்கலாம். அதாவது கம்பியூட்டரை நிறுத்தி, இணைத்து, பின் reboot செய்யாது கம்பியூட்டர் வேலைசெய்துகொண்டிருக்கும்போ

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-60

பல ஆயிரக்கணக்கான கம்பியூட்டர் பாவனையாளர்கள் தங்களது பிரச்சனைகளை போஸ்ட் செய்து வேறு பல ஆயிரக்கணக்கான பாவனையாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் அதற்கு விடையெழுதி தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொண்ட மிகவும் பிரபல்யமான forum தான் Annoyances.org இங்கே Win 98, Win 2000,.Win XP, Registry Tips, Getting Started, Software, Using Windows, Customizing, Annoyances, Networking, Reducing Clutter, Performance, Troubleshooting, Applications, Humor, என பல பகுதிகள் உண்டு. இது லாபநோக்கற்ற organisation என்பது கவனிக்கத்தக்கது. இத்தளத்தில் விளம்பரங்கள் எதுவும் கிடையாது. நுழையுங்கள்; ஆராயுங்கள்; பயனடையுங்கள்

http://www.annoyances.org/exec/forum/winxp

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள் - 61

System File Checker என்றால் என்ன?

எமது கம்பியூட்டர் இருந்தாற்போல அல்லது நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போ

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள்-62

புறோகிறாமை இயக்க குறுக்குவழி

நாம் அடிக்கடி பாவிக்கும் எந்த ஒரு புறோகிறாமையும் இயக்கவேண்டுமெனில் நாம் வழமையாக செய்வது டெஸ்க்ரொப்பில் உள்ள ஐகொன் ஐ மொளசால் கிளிக்பண்ணி திறப்பதுதான். இதற்கு ஒரு குறுக்குவழியுண்டு. உதாரணத்திற்கு இன்ரர்நெட் எக்ஸ்புளோரருக்கு குறுக்குவழியை ஏற்படுத்திப்பாறர்ப்போம்.

நியூமெரிக் கீபேட்டில் உள்ள Num Lock கீயை அழுத்தவும். மேலே பச்சை விளக்கு எரிந்தால் ஆன் என அர்த்தம். டெஸ்க்ரொப்பில் உள்ள e ஐகொன் ஐ வலது கிளிக்பண்ணி வரும் மெனுவில் புறோபட்டீஸ் என்பதை தேர்வுசெய்யவும். பின் shortcut tab ஐ தேர்வுசெய்யவும். பின் shortcut Key fபீல்டில் கிளிக்பண்ணி அந்த புறோகிறாமை இயக்க எந்த நம்பர் கீ தேவையோ அதை நியூமெரிக்கீபாட்டில் அழுத்தவும்.பின் OK ஐ அழுத்தவும்.

இப்போது கம்பியூட்டரை ஆன் செய்தவுடன் அந்த் கீயை அழுத்தியவுடன் படார் என அந்த புறோகிறாம் திறக்கும். இப்படி வேண்டிய எந்த புறோகிறாம்களுக்கும் செய்துகொள்ள்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி அண்ணா...

அண்ணா எப்படி சேவிஸ்பாக் எக்ஸ்பி- 2 ஜ இடாமல்.. இயங்கு தளத்தை அப்டேற்பண்ணுவது.....? முடிந்தால் கூறுங்கள்...

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-63

Recovery Console

Windows 98, start-up புறோகிறாம் ஒரு floppy disk ல் அடக்கப்பட்டது. Windows 2000, start-up disks தயாரிக்க 4 floppy disk தேவைப்பட்டது. Windows XP ல் தயாரிக்க 6 மென்தட்டு தேவைப்பட்டது. இனிமேல் வெளிவரும் Windows வெளியீடுகளுக்கு start-up disk கள் மென்தட்டில் இருக்காது. CD யில் தான் இருக்கும். அதை Bootable CD என்பார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. CD யின் பரந்த பாவனையும், அதன்பின் அண்மையில் வந்துள்ள usb drive வும் (usb flash memory) floppy disk ன் பாவனையை தேவையற்றதாக்கி விட்டன.

Start-up disk க்கு பதிலாக கைதேர்ந்தவர்களால் பாவிக்ககூடிய இன்னொரு புறோகிறாம் Recovery Console ஆகும். இது Win 2000 யிலிருந்து பாவனைக்கு வந்துள்ளது. Last known good configuration, Start-up Options, அல்லது வேறெந்த வழிகளிலும் கம்பியூட்டரை இயக்கமுடியாது விடின் Recovery Console ஐ பாவித்து services களை நிற்பாட்டியோ, தகவல்களை எழுதியோ அழித்தோ, சேதமடைந்த கோப்புக்களை திருத்தியோ அல்லது பிரதி பண்ணியோ, உங்கள் இயங்குதளத்தை சீர்செய்து கம்பியூட்டரை இயக்கலாம். Set-up CD ஐ அதன் டிறைவில் இட்டு Recovery Console ஐ வரவழைத்து பாவிக்கலாம். அல்லது Recovery Console ஐ எமது ஹாட் டிறைவில் பதிந்து வைத்துக்கொண்டும் தேவைப்படும் போதும் இயக்கலாம். ஹாட் டிறைவில் இது இன்னொரு இயங்கு தளம்போல் பதியப்படுமாதலால் இதை இயக்கி இதில் நின்றுகொண்டு வழமையான O/S தை சீர் செய்யலாம். XP CD ஐ அதன் டிறைவில் இட்டு Run பெட்டியில் D:/i386/winnt32.exe /cmdcoms என் ரைப் செய்து OK ஐ கிளிக்பண்ண ஹாட்டிஸ்க்கில் பதியப்படும். Recovery Console ஐ பாவித்து Formating ம் செய்யலாம்.Boot Sector அல்லது Master boot record ஐ திருத்தலாம். இதன் பிரதான வேலை சேதமடைந்த System file ஐ Windows CD யிலிருந்து பிரதி பண்ணுவது அல்லது குழப்படி பண்ணும் ஒரு சேவையை திருத்தியமைப்பது. மேலதிக தகவல் வேண்டுவோர் www.Support.microsoft.com தளத்திற்கு சென்று பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Operating system பதிந்துள்ள 160Gb Hard disk driveஐ எப்படி இரண்டாக partion பண்ணுவது?

trial softwareஐ install பண்ணி, delete பண்ணிய பின்னர் அதன் fileகளை registryஇல் இருந்து நீக்குவது எப்படி? அதாவது அதை மீண்டும் எப்படி உபயோகிக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா எப்படி சேவிஸ்பாக் எக்ஸ்பி- 2 ஜ இடாமல்.. இயங்கு தளத்தை அப்டேற்பண்ணுவது.....? முடிந்தால் கூறுங்கள்...

திருட்டு windows xpக்கு sp 2ஐ install பண்ண முடியாது. sp1க்கு இனி update இல்லை. விரைவில் sp2க்கும் crack வரலாம் பொறுத்திருக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sp2 install பண்ணிய பின்னர் என் கண்ணியில் பல நிகழ்வுகள் பிரச்சனை கொடுக்கிறது. கணணியை நிறுத்தும் போதும் பல பிரச்சனைகள். இதற்க்கு ஏதும் தீர்வு உண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எஸ்.பி 2 வை அகற்றிவிடுங்கள் ..நானும் அந்த அதை போட்டு பட்ட பாடு சொல்லேலாது.... பல பல பிரச்சனைகள்.... இப்ப புதிசா போட்ட இயங்குதளம் தானே அது இனும் அப்டேற்பண்ணலை அந்த கண்றாவி வந்திடும் என்று அதை இல்லாமல் தான் அப்டெற்பண்ணனும் யாரன் சொன்னால் தான் வழி.. எனக்கு வேறை தீர்வு தெரியாது இந்த முறையை தான் நான் செய்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sp2 install பண்ணிய பின்னர் என் கண்ணியில் பல நிகழ்வுகள் பிரச்சனை கொடுக்கிறது. கணணியை நிறுத்தும் போதும் பல பிரச்சனைகள். இதற்க்கு ஏதும் தீர்வு உண்டா?

என்க்கும் பிரச்சனை தான்.. நான் sp2 வை அகற்றிவிட்டேன்.. :lol:

Link to comment
Share on other sites

ஒர் partition ஐ உண்டாக்கி அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும்சரி அதில் o/s மற்றும் application களை நிறுவிவிட்டால் பின்பு அதை இரண்டாக பிரிக்க Microsoft ல் வழியிருப்பதாக தெரியவில்லை. ஆனால் தனியார் software ஆகிய Partition Magic ஐ பாவித்து இதை செய்யலாம் என அறிந்துள்ளேன். இதை பாவிக்க எனக்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இதை விலைக்கு வாங்கவேண்டும் அல்லது நண்பர்கள் யாராவது வைத்திருப்பார்கள்

ஒரு software ஐ நிறுவிய பின் எப்படி uninstall பண்ணுவது எஞ்சிய கோப்புக்களை எப்படி அழிப்பது என அறிய கீழ்க்காணும் லிங் ஐ கிளிக்பண்ணவும்.

http://www.geekgirls.com/tip_weekly.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.