Jump to content

மாற்றம் : தமிழக அரசியல் தலைமையை மாற்றுவோம்


Recommended Posts

மாற்றம் : தமிழக அரசியல் தலைமையை மாற்றுவோம்

இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. இந்த தேர்தல் தமிழர்களுக்கு ஒரு முக்கியமான தேர்தலாக அமையப் போகிறது. தமிழர்களுக்கு இது சோதனையான காலம். ஈழத்தில் இன அழிப்பு (Genocide) நடந்து கொண்டிருப்பது ஒரு பக்கம் என்றால் அதனை இந்திய/தமிழக அதிகாரமையங்கள் நேரடியாகவும்/மறைமுகமாகவும் ஆதரித்து கொண்டிருக்கும் சூழல் மற்றொரு புறம் உள்ளது.

தமிழகம் எப்பொழுதுமே திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தான் தமிழினம் சார்ந்த எல்லாப் பிரச்சனைக்கும் எதிர்நோக்கி இருந்து வந்துள்ளது. கருணாநிதி எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுத்து விடவில்லை. என்றாலும் நிராகரிப்பும் செய்ததில்லை. அதனாலேயே அவர் தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்டார். ஆனால் தற்பொழுது தன்னுடைய பதவியை காப்பாற்றும் பொருட்டு தமிழின அழிப்பிற்கு (Genocide) துணையாக நிற்கிறார்.

மைய காங்கிரஸ் அரசு ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஒட்டுமொத்த தமிழினத்தையே ஈழத்தில் அழித்துக் கொண்டிருக்கிறது. சோனியா காந்தியின் கடைக்கண் பார்வைக்காக தமிழின அழிப்பிற்கு காங்கிரஸ் கட்சி துணை போகிறது. அந்த காங்கிரஸ் கட்சியின் தயவில் ஆட்சியை செய்து கொண்டிருக்கும் கருணாநிதி வெளிப்படையாகவே தமிழின அழிப்பிற்கு துணை செய்கிறார். இனி தமிழினத்தலைவராகவோ, ஏன் தொண்டனாகவோ இருக்க கூட கருணாநிதிக்கு எந்த தகுதியும் இல்லை.

திமுக ஒரு புறம் என்றால் அதிமுகவை பற்றி கேட்கவே வேண்டாம். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஈழப்பிரச்சனையில் எப்பொழுதுமே சிறீலங்கா அரசின் கொள்கையையே பின்பற்றி வந்திருக்கிறது. இன அழிப்பு ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட ஈழத்தமிழர்கள் என எவரும் இல்லை என ஜெயலலிதா ஆணவத்துடன் கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவின் ஆணவம், கருணாநிதியின் அலட்சியம் எங்கிருந்து பிறக்கிறது ?

ஈழத்தமிழர்களின் பிரச்சனை தேர்தல் பிரச்சனையாக மாறாது என்ற நம்பிக்கையும், அதிமுக/திமுக தவிர வேறு மாற்று கட்சிகள் இல்லாத நிலையும் தான் இந்த இரண்டு கட்சிகளையும் மக்கள் விரோதப் போக்கிற்கு தூண்டியுள்ளது.

மூன்றாவது அணி அமைக்கப் போவதாக கூறிய விஜயகாந்த் கொள்கை ரீதியில் திமுக/அதிமுக ஆகிய இரண்டு அணிகளுக்கும் தனக்கும் எவ்வித வித்யாசமும் இல்லை என்பதை தொடர்ந்து நிருபித்து வந்துள்ளார். கடந்த பல மாதங்களாக ஈழப்பிரச்சனை குறித்து எதுவுமே பேசாத விஜயகாந்த் தற்பொழுது மக்கள் மத்தியில் ஈழப்பிரச்சனை குறித்து எழுந்திருக்கும் விழிப்புணர்வை கண்டு அஞ்சி ஈழப்பிரச்சனைக்காக போராட்டங்களை முன்வைக்கிறார். விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்த பொழுது தங்களை இந்திய தேசியவாதிகளாகவும், ஹிந்தி மொழி ஆதரவாளர்களாகவும் காட்டி தமிழ் இன எதிர்ப்பாளர்களின் ஆதரவுக்காக காத்து நின்றனர்.

இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் தமிழின எதிரிகளால் தமிழக அரசியல் நிறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்த அரசியல் கட்சிகளிடம் இருந்து நமக்கு மாற்றம் வேண்டும்.

தமிழகம் தற்பொழுது 1965ம் ஆண்டு இருந்த காலக்கட்டத்திற்கு பின்நோக்கி நகர்ந்து உள்ளது. மாணவர்கள் எழுச்சி கொண்டு தங்களுடைய அரசியல் தலைமையை மாற்ற துடித்துக் கொண்டுள்ளனர். மக்கள் மத்தியில் இந்திய மைய அரசாங்கம் மீதான வெறுப்பும், கோபமும் அதிகரித்து உள்ளது. மக்கள் மத்தியில் ஒரு மௌனப் புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அந்த மௌனப் புரட்சியை அரசியல் சக்தியாக மாற்றக் கூடிய தலைமை நமக்கு தற்பொழுது இல்லாமை தான் மிகப் பெரிய அவலத்தை தோற்றுவித்துள்ளது. ஆனால் வரலாற்றை புரட்டி பார்க்கும் பொழுது சோதனையான காலக்கட்டங்கள் தான் புதிய தலைமையையும், புதிய சிந்தனைகளையும், மாற்றங்களையும் கொடுத்திருக்கிறது. தமிழனுக்கு தற்பொழுது இருக்கின்ற சோதனையான காலக்கட்டத்தில் புதிய தலைமையை நாம் அடையாளம் காண வேண்டும். அதிமுக, திமுக, கொள்கைப் பிடிப்பு இல்லாத நடிகர்களை புறந்தள்ளி நமக்கென ஒரு புதிய தலைமையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான பங்களிப்பை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளங்களிலும் முன்னெடுக்க வேண்டும்.

இணையம் இன்று பல இளைஞர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக மாற்றியுள்ளது. அமெரிக்க தேர்தலில் கூட ஒபாமாவின் மாபெரும் வளர்ச்சிக்கு இணையம் துணை புரிந்திருக்கிறது. சாமானியனின் பேச்சுரிமையை இன்றைக்கு இணையம் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் மாற்றத்தை வேண்டிய ஒரு சிறிய முயற்சியாக ஒரு வலைப்பதிவு ஒன்றினை மாற்றத்திற்காக துவங்கியிருக்கிறோம். நண்பர்கள் குழுவாக தற்பொழுது இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சில ஆயிரம் வாசகர்கள் மட்டுமே கொண்ட வலைப்பதிவு மற்றும் இணைய வெளி மூலமாக இந்த முயற்சியை சாத்தியப்படுத்தி விட முடியாது. இந்த முயற்சி இணையத்தில் துவங்கி பல்வேறு தளங்களிலும் முன்னெடுக்கப் பட வேண்டும். இணையத்தளம், வலைப்பதிவு என்பதை தொடக்கமாக மட்டும் கொண்டு வேறு பல தளங்களிலும் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.

அனைவரும் நம்மால் முடிந்த சிறிய முயற்சிகளை மேற்கொண்டால் தான் அது பெருகி மாற்றங்களை உண்டாக்கும். எனவே இந்த ”மாற்றம்” குழுவில் இணைந்து கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். “மாற்றம்” குழுவிற்கு உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறோம்.

எங்கள் இணையத்தள முகவரி : http://www.changefortn.org

இந்த மாற்றம் குழுவில் இணைந்து கொள்ள வலைப்பதிவு நண்பர்களை அழைக்கிறோம்.

மாற்றத்திற்காக கட்டுரைகளை/கருத்துக்களை அனுப்ப விரும்புவோர் changefortn@gmail.com என்ற முகவரிக்கு கட்டுரைகளையும், கருத்துக்களையும் அனுப்பலாம்

புதியதோர் தமிழகத்தை அமைக்க வாருங்கள்...

http://blog.tamilsasi.com/2009/02/change-for-tamilnadu.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.