Jump to content

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நினைத்ததும் நடப்பதும்


Recommended Posts

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நினைத்ததும் நடப்பதும்

ஈழச்சிக்கலுக்காக தமிழகத் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும். ஈழச் சிக்கலுக்க மட்டுமல்ல, தமிழக உரிமைக்கும் இதுவே தீர்வு என்கிற கருத்தை, தொடர்ந்து மண்மொழி இதழில் எழுதி வந்ததை வாசகர்கள் பலரும் அறிவர். இந்த நிலையில் இப்படிப்பட்ட அமைப்பு தோற்றம் பெற்றதை வைத்து நண்பர்கள், வாசகர்கள் பலரும் தொலைபேசி, உரையாடல், மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும், நேர்ப் பேச்சிலும் பரவாயில்லை உங்கள் வேண்டுகோள் உருவேறி யிருக்கிறது என்கிற நிறைவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் மகிழ்ச்சி யடைந்து விட வேண்டாம். இன்னும் கடக்க வேண்டிய தடைகள் பல எவ்வளவோ இருக்கின்றன என்று அறிவுறுத்துவதாக இருக்கிறது நடந்தேறி வரும் நிகழ்வுகள்.

எனவே, இதுபற்றி வாசகர்கள் புரிதல்களுக்காகவும் தெளிவுக்காகவும் சில செய்திகள். ஈழத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தமிழகத்தில் விரிவான ஒரு பரந்துபட்ட ஈழ ஆதரவு தளத்தை உருவாக்க சில நடைமுறைகளை மண்மொழி 25 வது இதழ் பக்கம் 10இல், “ஈழச் சிக்கலும் தமிழர் கடமையும்” என்ற கட்டு ரையில் குறிப்பிட்டிருந்தோம்.

அதில் தற்போது ஈழத்துக்காக குரல் கொடுப்பவர்கள், (1) தனி ஈழக் கோரிக்கையை ஏற்பவர்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை (2) விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிப்பவர்களாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்ற தெரிவித்திருந்தோம். அதாவது ஒரு பரந்து பட்ட, விரிந்த தளத்தை உருவாக்கும் முயற்சியில் அதற்கு மேற்கண்டுள்ள இரண்டும் தடையாக, முன்னிபந்தனை யாக ஆகிவிடக் கூடாது என்கிற நோக்கில் அந்த இரண்டிலும் மாறுபட்ட கருத்து இருந்தாலும் அதற்கும் அப்பாற்பட்ட மனிதாபிமானிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சனநாயகக் சிந்தனை யாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஈழ மக்களின் மீதான படுகொலையைத் தடுத்து நிறுத்தவேண்டும். இந்திய அரசைப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரி யிருந்தோம்.

ஏறக்குறைய இதற்கு நெருக்க மாகத்தான் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்” தோற்றுவிக்கப் பட்டுள்ளது. 28-01-2009 அன்று அண்ணா நகர் ‘ராஜ் பேலஸ்’ விடுதியில் உருவாகிய இவ்வியக்கம், தன் முதல் கட்ட தொடக்க போராட்ட அறிவிப்பு செய்யும் நிகழ்ச்சியை 31-01-09 அன்று தி.நகர் சர்.டி.பி. தியாகராயர் அரங்கில் நடத்தியது. அன்றைய அறிவிப்பின் படிதான் பிப்ரவரி 4ஆம் நாள் இது இலங்கையின் சுதந்திர நாள் என்பதால் அந்த நாளில் இங்கு தமிழகத்தில் முழு அடைப்பு நடத்துவது, 7ஆம் நாள் மாலை 4 மணி முதல் 6 மணிவரை கறுப்புக் கொடி ஊர்வலம் நடத்துவது என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இந்தப் போராட்ட அறிவிப்புகளில் எவருக்கும் பெரிய அளவில் எந்த மாற்றுக் கருத்தும் இருந்ததாக, இருப்பதாகச் சொல்ல முடியாது. சிக்கல் இயக்க நடைமுறை யில்தான். இது என்ன என்பதை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

1. இயக்கத்தின் பெயர் : நாம் வேண்டுகோளில் முன் மொழிந்து, தற்போதும் எல்லோர் வாயிலும் இயல்பாக வெளிப்பட்டு வருவதும் “ஈழத்தமிழர்” என்கிற சொல்லாடல் தான். இதுபற்றி செய்தி வெறியிட்ட ஜுனியர் விகடன் தன் 4-2-09 தேதியிட்ட இதழில் அமைப்பு பற்றி குறிப்பிட்ட மூன்று இடங்களிலும் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்றே குறிப்பிட்டுள்ளது. (பக். 8-9) அடுத்து 7-2-09 தேதியிட்ட இதழிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி எல்லோர் உள்ளத்திலும் பதிந்து போன வார்த்தை ‘ஈழத்தமிழர்’. செய்தியைப் படித்த பலரும் நம்பிக் கொண்டிருந்ததும் இந்தப் பெயரைத் தான். ஆனால் தொடக்க நாளான 31.01.09 அன்று மேடையில் கட்டியிருந்த பதாகையைப் பார்க்கும் போதுதான் தெரிந்தது, “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்” என்பது.

ஒரு அனுமானமாக யோசிப்போம். ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., இ.க.க. இதில் யார் “ஈழத்தமிழர்” என்கிற சொல்லாடலுக்கு எதிராக இருந்திருப்பார்கள். ஒரு வேளை அகில இந்தியக் கட்சியான இ.க.க., அப்புறம் பின்னால் வந்து சேர்ந்த பா.ஜ.க.வும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்திருக்கலாம். சரி, அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்ட இந்த சொல் ஒரு தடையாக இருக்க வேண்டாமே என்று கருதியும், அரசியல் உறவுகள் கருதியும், எப்படியானாலும் இன்றுவரை இலங்கை அரசமைப்புச் சட்டப்படி அவர்கள் அந்த நாட்டுக் குடிமக்கள் தானே, இலங்கைத் தமிழர்கள்தானே, தனி ஈழம் மலர்ந்த பிறகல்லவா அவர்கள் ஈழத் தமிழர்கள் என்கிற வாதம் கருதியும் அவர்கள் இந்தப் பெயரை வைத்ததாகக் கொள்வோம்.

ஒற்றுமை கருதி நாமும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வோம்.

2. கோரிக்கைகள் : தனி ஈழம் குறித்தோ, விடுதலைப் புலிகள் குறித்தோ ஆதரவாகவோ எதிராகவோ எவரும் பேச வேண்டாம் என்று முடிவெடுத்திருக் கிறார்களாம். சரி, இதுவும் கூட ஒரு பரந்துபட்ட ஒற்றுமை கருதிய ஏற்பாடாக, அப்படிப்பட்ட வாதங்களெல்லாம் இப்போது வேண்டாம், முதலில் போர் நிறுத்தம் கோருவோம், மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்வோம் என்கிற நோக்கில் முடிவு செய்யப்பட்டதாக ஏற்றுக் கொள்வோம்.

இவை இரண்டும் நமது வேண்டுகோளில் நாமே முன்வைத்தவை என்பதால் அவ்விரண்டையும் ஏற்றுக் கொள்வதில் நமக்குச் சிக்கல் இல்லை. உணர்வாளர்கள் பலருக்கும் சிக்கல் இருக்காது என்று நம்பலாம்.

ஆனால் 01-02-09 தமிழோசை நாளேட்டில் அறிவிக்கப்பட்ட 10 கட்டளைகள் படி, எந்தக் கட்சியைப் பற்றியும் எந்தத் தலைவரையும் பற்றியும் யாரும் பேசக் கூடாது, விமர்சிக்கக் கூடாது என வாய்ப்பூட்டு போடும் ஒரு நிபந்தனை உரு வாக்கப்பட்டிருக்கிறதே, அது எதற்கு? யாருக்காக இந்த நிபந்தனை. வி.சி.க., தி.மு.க.வோடு இருக்கிறது. பா.ம.க. காங்கிரசோடு இருக்கிறது. ஆகவே அவ்விரு கட்சிகள் பற்றி யாரும் பேசக்கூடாது என்று தொடங்கி பின் ம.தி.மு.க. அ.தி.மு.க.வோடு இருப்பதால், அது பற்றியும் பேசக் கூடாது என்று நீண்டு பிறகு யாருமே எந்தக் கட்சி பற்றியும், எந்தத் தலைவர்கள் பற்றியுமே பேசக் கூடாது என்று ஒரு முடிவு வந்திருக்கிறாற் போலிருக்கிறது என்று அனுமானிக்க வேண்டியிருக்கிறது.

ஓர் அமைப்பு என்றால் அது சில கோரிக்கைகளை வைத்துப் போராட முனைகிறது என்றால், எதிரி யார், நண்பர் யார் என்று அடையாளம் காட்டாமல், அவர்களை விமர்சிக்காமல் போராடுவது என்றால் எப்படி?

நாம் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். ஈழ மக்களுக்கு முதல் எதிரி சிங்கள அரசு, சிங்கள இராணுவம். இரண்டாவது எதிரி இந்திய அரசு, காங்கிரஸ். மூன்றாவது எதிரி தமிழக அரசு தி.மு.க. இவை மூன்றும் முக்கிய எதிரிகள். அதிகாரத்தில் உள்ள எதிரிகள். இந்த எதிரிப் பட்டியலில் ஜெய லலிதாவுக்கு இடமில்லையா என்று சிலர் கேட்கலாம். உண்டு. ஆனால் அவர் தற்போது அதிகாரத்தில் இல்லாத எதிரி. இப்போது அவர் ஈழத்துக்கு எதிராக நமது கோரிக்கைகளுக்கு எதிராக நேரடியாக எதுவும் செய்து விட முடியாது. அப்படியேதான் இ.க.க.மா.வும். அதனால் அவர்களை இம் மூவருக்கும் நிகரான எதிரிப் பட்டியலில் நிறுத்த முடியாது. நிறுத்த முடியாது என்பதால் அவர்களைப் பற்றிப் பேசவே கூடாது, விமர்சிக்கவே கூடாது என்பதல்ல, தாராளமாகப் பேசலாம். தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால் அது இந்த மூவருக்கும் நிகரான தாகவோ அல்லது இதில் மூன்றாம் எதிரியை மறைப்பதாக, அதைப் பின்னுக்குத் தள்ளுவதாகவோ அமைந்து விடக்கூடாது.

நிலைமை இப்படி யிருக்க, இதில் யாரைப் பற்றியுமே எதுவுமே பேசக் கூடாது என்றால் எப்படி? எதிரியை அடையாளம் காட்டாமல், விமர்சிக்காமல், மக்களைத் திரட்டுவதும், போராடுவதும், கோரிக்கையை வெல்வதும் எப்படி? வெறும் நிழல் சண்டை போட்டா, வெற்றிடத்தில் கத்தியைச் சுழற்றியா, யாரோடு சண்டை போடுகிறோம் என்று சண்டையிடும் மக்களுக்குத் தெரியாமல் எப்படி சண்டையிடுவது. எதிரி மக்களுக்குத் தெரிய வேண்டாமா?

தமிழகம் இவ்வளவு கொந்தளித்தும் அதைக் கிஞ்சித்தும் மதிக்காமல் கேவலப்படுத்தி, இழிவுபடுத்தும் தில்லி அரசை, அதற்குத் துணைபோய் தமிழர்களுக்குத் துரோகம் செய்தும் காட்டிக் கொடுத்தும் தமிழர்களுக்கு பாவ்லா காட்டியும் வெத்து வேட்டு வறட்டு வசனங்களால் போதையூட்டியும் தில்லிக்குக் கங்காணி வேலை பார்க்கும் கருணாநிதி அரசை மக்களுக்கு அடை யாளம் காட்டாமல், விமர்சிக்காமல் எப்படி ஈழப் பிரச்சினையைப் பேசுவது, கோரிக்கையை வென்றெடுப்பது?

நிச்சயம் முடியாது. இது நடக்கிற காரியம் அல்ல. இது போகாத ஊருக்கு வழி காட்டுவது. சரி, இந்த நிலைப்பாடு எங்கிருந்து வருகிறது. எல்லாம் கூட்டணி அரசியலிலிருந்து வருகிறது. அதாவது ஈழ மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளாளுக்கு ஒரு கூட்டணியில் இருப்பதால், அந்தக் கூட்டணிக் கட்சிகள் மனம் நோகாமல் புண் படாமல் இருக்க வேண்டுமே என்பதற்காக வருகிறது. அதாவது யாருக்கும் வலிக்காமல் பிரச்சினைக்கு வயத்தியம் பார்க்க முயல்கிறது. நோய்க்குக் காரணமான அல்லது அதை ஊட்டி வளர்க்கும், அதற்கு ஊக்கம் கொடுக்கும் கிருமிகளை அழிக்காமல் நிவாரணம் தேட முயல்கிறது.

இப்படி இருந்தால் இது என்ன ஆகும்? இன்றோ நாளையோ நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் படலாம். அதனுடன் சேர்ந்தே சட்டமன்றத் தேர்தலையும் நடத்தி, ‘மைனாரிட்டி தி.மு.க.’ என்கிற இழி சொல்லையும் அழித்துக் கொள்ள கருணாநிதியும் முயற்சிக்கலாம்.

அப்படி ஒரு அறிவிப்பு வந்தால் என்ன ஆகும். அந்தந்த கட்சியும் அந்தந்த கூட்டணிக்குப் போய் தேர்தல் பிரச்சாரம் செய்யும். ஈழச் சிக்கல் என்னாகும்? இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ன ஆகும். முன்பு அம்போ ஆன தமிழ் பாதுகாப்பு இயக்கம் போல இதுவும் அம்போ என்று நடுத்தெருவில் நிற்கும். ஒன்றுமில்லை, திருமங்கலம் என்கிற ஒரு தொகுதி இடைத் தேர்தலின் போதே ஈழச்சிக்கல் பற்றிய கவனம் குறைந்து, அதில் ஒரு தேக்கம் ஏற்பட்ட நிலையில் நாடு தழுவிய பொதுத் தேர்தல் வந்தால், இந்த இயக்கம் என்னாகும் என்பது கேள்விக்குறி.

இந்தச் சிக்கல் எல்லாம் எதனால் வருகிறது? ஈழத்துக்கு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு ஒரு கூட்டணி, என்று வெவ்வேறு கூட்டணி வைப்பதனால் உருவாகிறது. ஆகவே இதற்கு மாற்றாக, எந்தச் சிக்கலும் எந்த முரணும் இல்லாத ஒரு ஆலோசனையை முன் வைக்க விரும்புகிறோம். அதாவது, தேர்தலுக்கு ஒரு கூட்டணி, ஈழத்துக்கு ஒரு கூட்டணி என்றில்லாமல், இரண்டுக்குமான ஒரே கூட்டணியை உருவாக்கக் கோரு கிறோம். இதன்படி இப்போதுள்ள “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமே” தேர்தலுக்கான கூட்டணியாகவும் அமைந்தால் எந்தச் சிக்கலும் இருக்காது. ஈழத்துக்காக எதைப் பேசுகிறோமோ அதையே தேர்தலுக்கும் பேசலாம். தேர்தலுக்குரிய பிரச்சினைகளுள் ஒன்றாக ஈழப் பிரச்சினையையும் ஆக்கி ஈழம் சார்ந்த கோரிக்கைகளையும் மக்கள் முன் வைத்து பிரச்சாரம் செய்யலாம். அதையே வாக்குறுதிகளில் ஒன்றாகவும் முன் வைக்கலாம்.ஈழ எதிர்ப்புக் கட்சிகளையும்அம்பலப்படுத்தி அவற்றைத் தனிமைப்படுத்தலாம். இதைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது மட்டுமல்ல. இதைத்தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இ.த.பா.இ. தலைவர்கள் என்ற செய்கிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை இது ஈழத்துக்கான கூட்டணியே தவிர, தேர்தலுக்கான கூட்டணி அல்ல என்று தம் பிடித்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இப்படி சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். அவரவர்கள் சார்ந்துள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு சந்தேகம் வந்து விடக்கூடாது, வருத்தம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது ரெண்டு பெண்டாட்டிக் காரன் மாதிரி இரண்டு பேரையுமே திருப்திப் படுத்த இரண்டு குதிரை சவாரி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இது நடைமுறைக்கு ஆவாத, ஒவ்வாத கதை. தமிழீழத்துககு தமிழகத்துக்கு பலன் தராத பாதை. ஆகவே, இ.த.பா.இ. தலைவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் வி.சி.க, தி.மு.க. உறவை விட்டும், பா.ம.க. காங்கிரஸ் உறவை விட்டும் வெளியேற வேண்டும். இப்படி வந்தால் ம.தி.மு.க.வும் அ.தி.மு.க. உறவை விட்டு வெளியேறி வந்துவிடும். அதைத் தொடர்ந்து இ.க.க.வும் வரலாம். வரவேண்டும். இப்படி இந்த நான்கு கட்சிகளும் உறுதியாக நின்றால் இந்த நோக்கில் இருக்கிற சிறு கட்சிகளும் அமைப்புகளும் இதற்கு ஆதரவாக நிற்கும். எப்போதும் இம் முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்கிற திரு. பழ.நெடுமாறன் அவர்களும் தமிழீழ ஆதரவு அமைப்புகளும் உடன் நிற்கும். இந்த அணி வலுப்படும். தற்போது இந்த அணியில் பல்வேறு தமிழ் அமைப்புகள், சமய அமைப்புகள் எல்லாம் இருக்கின்றன. பா.ஜ.க.வும் இருக்கிறது. இவ் வமைப்புகள் எல்லாம் இருப்பது பற்றி நாம் குறை ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் எந்த ஒரு அமைப்பும், தான் செல்லும் திசை அறிந்து, தன் நோக்கம் அறிந்து, அதற்கான செயல் திட்டத்தோடு இயங்க வேண்டும்.

அப்படி அல்லாமல் பொத்தாம் பொதுவான ஆதரவு என்றால் உணர்வுள்ள எல்லோரும் தான் அதில் அங்கம் வகிப்பார்கள். ஆனால் இயக்கத்தின் நட வடிக்கைகளைப் பொறுத்து போகப் போகத்தான் எத்தனை பேர் இதில் உறுதி யாக நிற்கிறார்கள், யார் யார் தொடர்ந்து உடன் வருகிறார்கள், யார் யார் பின் தங்குகிறார்கள், முரண் படுகிறார்கள், எதிராகப் பேசுகிறார்கள் என்பது தெரிய வரும். ஆகவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போதுள்ள இ.த.பா.இ. தலைவர்களுக்கு நாம் ஆலோசனைகளாகச் சொல்ல விரும்புவது.

1. ஈழத்துக்கு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு ஒரு கூட்டணி என்று முரண்பட்ட இரண்டு கூட்டணிகளை வைத்துக் கொள்ளாமல் இரண்டுக்கும் சேர்ந்து ஒரே கூட்டணியை உருவாக்க முயலுங்கள்.

2. இப்படி உருவாகும் கூட்டணி, ஈழ மக்கள் ஆதரவுக்கு குரல் கொடுக்கும் அதே வேளை, தமிழக உரிமைகளுக்கும் தமிழர் நலன்களுக்கும் குரல் கொடுக்கும், அதாவது தமிழீழ, தமிழக உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் ஒரே கூட்டணியாக இது அமையும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

3. இப்படி அமைய இந்த இயக்கம், தனக்கான குறைந்த பட்ச வேலைத் திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு இந்த வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொள்கிற அதற்காக செயல்பட முன் வருகிற, அமைப்புகளை மட்டும் இதில் இணைத்துக் கொண்டு ஒன்றாகச் செயல்பட முனையுங்கள். இப்படி முதலில் இந்த மூன்று அம்சங்களின் அடிப்படையில் ஒரு இயக்கத்தைத் தொடங்கினால் போகப் போக இதன் வளர்ச்சிப் போக்கில் கிடைக்கப் பெறும் அனுபவங்களை வைத்து மற்றதை முடிவு செய்து கொள்ளலாம்.

இதில் சிலருக்கு சில கேள்விகள் எழலாம். அதற்கான சில விளக்கங்கள்:

1. ஈழத்தமிழர் பாதுகாப்பென்று அமைப்பு தோற்றுவித்துக் கொண்டு தமிழகத் தமிழர் உரிமைக்கு குரல் கொடுக்க முடியுமா, சாத்தியப் படுமா என சிலர் வினவலாம். ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்பது தமிழகத் தமிழர் உரிமையோடு தொடர்புடையது. தமிழகத் தமிழர் உரிமை பல பறிபோய் இருப்பதுதான், அதாவது பேச்சுரிமை, எழுத்துரிமை, இல்லம் தேடி வந்தோர்க்கு அடைக்கலம் தந்து விருந்தோம்பும் உரிமை, சிகிச்சை அளிக்கும் உரிமை, பிற உதவிகள் செய்யும் உரிமை மறுக்கப் பட்டிருப்பதுதான் ஈழ மக்கள் படும் துயருக்கு பெரும் காரணம். இந்த உரிமைகள் மட்டும் தமிழக மக்களுக்கு இருந்திருந்தால் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும். எனவே இதை யெல்லாம் கருத்தில் கொண்டு கவனத்தில் கொண்டு நாம் செயல் பட வேண்டும். அதற்கு தற்போதுள்ள அமைப்பின் பெயரில் உள்ள இலங்கையை நீக்கிவிட்டு “தமிழர் பாதுகாப்பு இயக்கம்” என்பதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இது ஏற்கெனவே காணாமல் போன தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் போல தொலைந்து போய்விடாமல் உரிய திட்டம் வகுத்து செயல்படவேண்டும்.

2. இப்படி பெயர் வைத்தால் இது தமிழர் உரிமைக்கு மட்டும் தான் போராடுமா, மற்றவர்கள் உரிமைக்குப் போராடாதா என்று சிலர் கேட்கலாம். தமிழ் நாட்டில் எத்தனை சாதி இருந்தாலும், எத்தனை மதம் இருந்தாலும், எத்தனை அரசியல் கட்சிகள், அமைப்புகள் இருந்தாலும், பேசும் மொழியாலும், தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்ற வகையிலும் தமிழர்கள். இதில் மொழிச் சிறுபான்மையினர் கொஞ்சம் பேர் இருக்கலாம். அது ஒரு சிறு எண்ணிக்கை அளவுதான். மற்றபடி பெருமளவும், அடிப் படையாகவும், தொன்று தொட்டும் இங்கு வாழ்பவர்கள் தமிழர்கள்தாம். எனவே இங்குள்ள தமிழருக்கும் அண்டையில் உள்ள ஈழத் தமிழர்க்கும் இத்துடன் உலகெங்கும் வாழும் தமிழர்க்கும் இந்த அமைப்பு குரல் கொடுக்கும்.

இதனால் தமிழர் அல்லாத எவரும் பாதிக்கப்பட்டால் இவ்வமைப்பு குரல் கொடுக்காது என்பதல்ல, மனித நேய அடிப்படையில் மனித உரிமை நோக்கில் உலகின் எந்த மூலையில் எந்த மனிதன் பாதிக்கப் பட்டாலும் இது குரல் கொடுக்கும் என்பதை இதன் நோக்கங்களில் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம். இதனடிப் படையில் விரிவான தளத்தில் இவ்வமைப்பு இயங்கலாம். ஆனால் அடிப்படை, முதன்மை தமிழர் நலம், தமிழர் உரிமைதான்.

ஆகவே இந்த அடிப்படையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்பதில் உள்ள இலங்கையை நீக்கி விட்டு “தமிழர் பாதுகாப்பு இயக்கம்” என்பதை மட்டும் வைத்து, தற்போது இன்னலுக்குள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு உடனடியாகவும், தொலை நோக்கில் உரிமை பறிக்கப்பட்டு அந்த உணர்வின்றி வாழும் தமிழனுக்கு இதனூடாக விழிப் பூட்டியும், தமிழீழ மற்றும் தமிழக மக்களின் நலன் காக்க, உரிமை காக்கப் போராட இவ்வமைப்பு வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.

சரி, இலக்குகளையும் செயல் திட்டங்களையும் சொல்லியாகி விட்டது. இனி இதற்கு யார் யார் இணங்குவார்கள், இதில் யார் வருவார்கள் என்று யோசிப்போம். முதலில் அடிப்படையாக ஐந்து அமைப்புகள், ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., இ.க.க., தமிழ், தமிழீழ ஆதரவு அமைப்புகள் ஆகியவை ஒன்று சேர்ந்து இயங்கலாம். இந்த ஐந்து அமைப்புகளும் ஏற்றுக் கொள்ளும் குறைந்த பட்ச செயல் திட்டத்துடன் இவர்கள் இந்த அமைப்பைத் தொடங்கி வழி நடத்தலாம். சரி, வெறும் தமிழர் பாதுகாப்பு இயக்கமாய் செயல்படுகிற வரை இது சரி. ஆனால் தேர்தலுக்கும் இதே அணிதான் என்றால் பிரச்சினை வராதா என்று சிலர் கேட்கலாம். நியாயம்தான். ஆனால் பிரச்சினை எதில் வரும்? கொள்கை கோட்பாட்டில் எழாது. ஏனென்றால், தமிழர் நலன் காக்கும் கொள்கையில் தான் ஏற்கெனவே எல்லோரும் ஒன்றுபட்டு நிற்கிறார்களே. ஆகவே அதில் பெரும் பாலும் பிரச்சினை வராது. இதில் மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளுடன் கூட்டு வைத்தால்தான் சிக்கல் வரும். இது ஒத்த கருத்துள்ள கட்சிகளின் கூட்டணி என்பதால் அதுபோன்ற சிக்கல்கள் எழாது. ஆனால், பிரச்சினை யார் பெரிய கட்சி, யாருக்கு அதிக இடங்கள் என்று தொகுதியைப் பங்கிட்டுக் கொள்வதில்தான் சிக்கல் வரும்.

இது தவிர்க்க முடியாததுதான் என்றாலும், இதை அவ்வப்போது பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான் தமிழர் நலன், தமிழர் உரிமை, தமிழர் ஒற்றுமை கருதி ஒருவருக் கொருவர் சற்று விட்டுக் கொடுத்துதான் அமைப்பைப் பாதுகாக்க வேண்டும்.

சரி, இதில் தேர்தலில் பங்கு கொள்ளாத அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சி சாராத தமிழர் அமைப்புகள் பங்கு என்ன என்று சிலர் கேட்கலாம்.

மேற்குறித்த 5 அமைப்புகள் உருவாக்கும் குறைந்தபட்ச வேலைத் திட்டத்தை பரிசீலித்து அதில் திருத்தங்களோ மாற்றங்களோ முன் மொழிந்து, அதில் ஒருமித்த கருத்து ஏற்படும் பட்சத்தில் இவை இவ்வமைப்பில் இணைந்து அங்கமாகச் செயல் படலாம்.

தேர்தல் வரும்போது அதில் பங்கேற்கலாம். பங்கேற்காமல் போகலாம். பிரச்சாரம் செய்யலாம், செய்யாமலும் போகலாம். வாக்களிக்கலாம், அளிக்கா மலும் போகலாம். இது அவரவர் உரிமை சார்ந்த சேதி. எனவே, இந்த உரிமை யில் எவரும் தலையிடாமல் இதில் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் வகையில் ஒரு ஏற்பாட்டுக்கு வந்து இதைச் செயல் படுத்தலாம்.

இப்படியெல்லாம் திட்ட வட்டமாகவும் தெளிவாகவும் பேசி ஒரு முடிவுக்கு வந்து, அதற்கு உரிய அளவில் இயக்கத்தை மறு சீரமைப்பு செய்து, இலக்குகளையும், அதற்கான வேலைத் திட்டத்தையும், உருவாக்கிக் கொண்டு செயல்பட்டால் தான், தமிழீழ, தமிழக மக்கள் நலன், உரிமை பாதுகாக்கப் படும்.

அல்லாமல் அப்போதைக்கப்போது ஒரு கூட்டணி, அப்போதைக் கப்போது ஒரு செயல்பாடு என்று ஏதோ அந்தந்த நேரத்துப் பிரச்சினைக்கு அந்தந்த நேரத் திற்கு ஒரு செயல்பாடு என்று இருந்தால் ஏதோ எல்லா பிரச்சினைக்கும் நாமும் மாரடித்தோம், ஒப்பாரி வைத்தோம் என்றுதான் பேர் இருக்குமே தவிர, ஒரு பிரச்சினையும் உருப்படியாகத் தீராது. தமிழர் வாழ்விலும் நலன் பிறக்காது. எனவே, இப்படி பேருக்கு வாழ்ந்து மறைவதற்காக பிறந்திருக்க வில்லை நாம்.மாறாக தமிழீழம் காத்து தமிழகஉரிமைகள் காத்து தமிழினத்தை பாது காக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அப்படிப்பட்ட வரலாற்றைப் படைக்கப் பிறந்தவர்கள் நாம் என்பதைத் தமிழகத் தலைவர்கள் உணர வேண்டும். அந்த நோக்கில் ஒன்றுபட்டு செயல் திட்டம் வகுத்துத் தமிழினத் துக்காகப் போராட முன் வரவேண்டும்.

இராசேந்திர சோழன் எழுதிய கட்டுரை

நன்றி : கீற்று

http://changefortn.blogspot.com/2009/02/blog-post_23.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.