Jump to content

பிணங்களைக் காக்கவோ வருவர் ?


Recommended Posts

பிணங்களைக் காக்கவோ வருவர் ?

08_01_09_tharmapuram_17.jpg

நினைவுகளோடு வாழும்

நிலமற்ற அகதிகள் நாங்கள்.

'நாளைய பொழுது நமக்கானது'

கனவுகள் பொய்த்துக்

காலிடை மிதியும்

பிணங்களை விலக்கி

உடலில் வழியும்

குருதியைத் துடைத்து

ஓடுதல் ஒதுங்குதல்

உயிர் வாழுதல் பற்றிய

ஏக்கமும் துயரும்....

கடற்கோள் கொள்ளையிட்ட

துயரைவிடக் கொடுமையிது

காப்பிடமற்ற விரிந்த வெளியில்

கூப்பிடவும் யாரும்

கேட்காத் தொலைவிருந்து

காத்திடுவர் தூதர்

கடலிடை வந்து மீட்டிடுவர்

என்றான நம்பிக்கையும்

களவு போய்

பிணங்களின் நடுவேயான கூக்குரலும்

குழந்தைகளின் கதறலும்

ஏழ்கடல் நுனிவரையும்

எங்களின் அழுகை....

எறிகணை துரத்தித் துரத்தி

எறிந்திருப்பது கடைசி முனை....

எங்களைப் பற்றி உலகம் பேசுகிறதாம்

எஞ்சிய மிச்சமும்

எறிகணை கொல்ல மிஞ்சிய

பிணங்களைக் காக்கவோ வருவர் ?

கடவுளர் எங்கே எங்களைக் காத்திடக்

கடல்தாண்டி நிற்கிறோமென்றவர்

நிலமைதான் என்ன ?

இனியொரு பொழுதிலும்

துளிர்விடா வண்ணமாய் - எம்

பொன்செளித்த நிலமெங்கும்

புதையுறும் கொல்லிகள்

நூறாண்டு போனாலும் ஆறாமல்

அடிவேரோடு தமிழ்ச்சாதியை

அகற்றிடும் மூச்சுடன்

ஆழப்புதைகின்றன உயிர்க்கொல்லிகள்.

பனி பூத்த வெளிகளில்

பாலைவனப் படர்வுகள்

பூப்பூத்த மரங்களின்

வேரின் தடயங்கள் அழிகின்றன.

இனியெந்த அகழ்வும்

இல்லையெனும்படியாய் யாவும்

இல்லாதொ(த)ழிக்கப்படுகின்றன.

இயற்கையின் பொழிவுகள்

கந்தகக்காற்றில் செத்து மடிகின்றன.

கிரோசிமாவின் மிச்சமாய் நாளை

பச்சையம் செத்து எம் பரம்பரை

வீரியமற்று சாகட்டுமென்றா

ஆரியர் துணையாய் இவ்வுலகு

ஆயுதம் களை

அகிம்சையைத் தரியென்கிறது...?

18.02.09

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிணங்களை காக்கவோ வருவர் ............

வேண்டாம் சஞ்சலம் .லில்லி பூவின் .....நிலத்தடி கிழங்காய்....சாம்பலில் உயிர்த்து எழும் பீனிக்ஸ் பறவையாய் .....விடுதலை வீரர் உள்ளவரை ....நம்பியிரு .செய்ய வேண்டியது உன்னால் முடிந்தவரை பங்களிப்பு ,பணமாய் ..பொருளாய் ...சரீர உதவியாய் ..பரப்புரையாய் ....தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் அழிவிலிருந்து ,,,,,உயிர்ப்புக்காய் ...வெற்றிக்காய் காத்திருப்போம் ........சாந்தி (அமைதி )

Link to comment
Share on other sites

பிணங்களை காக்கவோ வருவர் ............

வேண்டாம் சஞ்சலம் .லில்லி பூவின் .....நிலத்தடி கிழங்காய்....சாம்பலில் உயிர்த்து எழும் பீனிக்ஸ் பறவையாய் .....விடுதலை வீரர் உள்ளவரை ....நம்பியிரு .செய்ய வேண்டியது உன்னால் முடிந்தவரை பங்களிப்பு ,பணமாய் ..பொருளாய் ...சரீர உதவியாய் ..பரப்புரையாய் ....தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் அழிவிலிருந்து ,,,,,உயிர்ப்புக்காய் ...வெற்றிக்காய் காத்திருப்போம் ........சாந்தி (அமைதி )

சஞ்சலம் இல்லை நிலாமதி நம்பிக்கை இன்னும் இருக்கிறது. சாம்பல் பூத்த தேசத்திலிருந்து எங்கள் வீரர்கள் சர்வதேசத்தின் நீதிக்கதவுகளைத் திறப்பார்கள் என்ற நம்பிக்கையோடு எங்களால் இயன்றதைச் செய்கிறோம். ஆயினும் எமது வீரர்களை ஆயுதம் களையுங்கள் அமைதி தருவோம் என்பது போன்ற அகிலத்தின் துரோகத்தை சூது கொண்ட அநியாயத்தை எழுதாமல் இருக்க முடியவில்லைத் தோ(ழா)ழி.

தங்கள் நம்பிக்கையூட்டும் வரிகளுக்கு நன்றி நிலாமதி. உயிர்ப்பும் நிமிர்வும் நமது தேசத்தைப் புதுப்பிக்க வேண்டும். நம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்த வரிகள். என்ன செய்வது கடவுளுக்கும் கண்ணில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.