Jump to content

தமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு மட்டும்


Recommended Posts

தமிழினத்தை அழித்தே தீருவது என்று கங்கணங் கட்டிக் கொண்டு சிங்கள அரசு தனது அராஜகப் படையை ஏவி விட்டிருக்கிறது. அந்த அராஜகப் படை தமிழ் மண்ணிலே கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர் என்ற எந்தவிதமான பாகுபாடுமின்றி தினம் தினம் நூற்றுக் கணக்கான எம்முறவுகள்; கொன்று குவிக்கப்படுகிறார்கள்.

தமது பகுதிக்கும் வந்த மக்களைக் கூடச் சிங்களப் பேரினவாதம் முகாம்களிலே அடைத்து வைத்துத் துன்புறுத்துகிறது. இந்த முகாம்களில் தங்கியிருக்கும் இளைஞர்கள் சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டு ரயர் போட்டு எரிக்கப்படுகிறார்கள். இளம் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். தமது மானத்தையே உயிராக நினைக்கும் தமிழ் சகோதரிகள் இந்த அவமானம் தாங்காது முகாம்களிலேயே தற்கொலை செய்து கொள்வதான செய்தி தற்போது கசிய ஆரம்பித்துள்ளது.

'தமிழ் பெண்கள் சிங்கள இராணுவத்திற்கு விருந்தாக வேண்டும். தமிழ் ஆண்களின் இரத்தத்தால் இந்து சமுத்திரம் சிவக்க வேண்டும்' என்று மஹிந்தவின் தம்பி மமதையுடன் சொல்லித் திரிகிறான்

சிங்கள அரசின் இந்தக் கோரத் தாண்டவத்தை ஒட்டு மொத்த சர்வதேச சமூகமும் மௌனமாய் இருந்து ஆமோதித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேசத்தின் இந்த மௌனத்திற்கு 'பயங்கரவாதத்தையே அழிக்கிறோம்' என்று சிங்கள அரசு உள்;நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்து வரும் பொய்ப் பிரச்சாரமும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது.

இந்த நிலையில் புலம்பெயர்ந்த நாடுகளில் சிங்கள அரசினாலும் அவர்களது கைக்கூலிகளினாலும் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு எம் தமிழர்களில் சிலர்

முட்டுக் கொடுத்துக் கொண்டு நிதிப் பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

உதாரணமாக சிங்களவர்களின் பிரச்சார நோக்கங்களுக்காக இங்கிலாந்திலிருந்து நான்கு பத்திரிகைகளும் கனடாவிலிருந்து இரண்டு பத்திரிகைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பத்திரிகைகளின் பிரதான வருமான மார்க்கமான விளம்பரங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை தமிழர்களால் நடத்தப்படும் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது என்பதை ஜீரணிப்பதற்குக் கஸ்டமாயிருந்தாலும் அதுதான் உண்மை.

இவ்வாறு விளம்பரங்களை வழங்கி எமது எதிரியின் ஊடகங்களைப் போசிப்பவர்களில் பிரபல வியாபார நிறுவனங்கள், சட்டத்தரணிகள், வீட்டு விற்பனை முகவர்கள், உணவகங்கள் என்பன அடங்குகின்றன.

அதுமட்டுமன்றி இந்தப் பத்திரிகைகளைத் தமது வியாபார நிலையங்களில் காட்சிப் படுத்தி விநியோகம் செய்வதிலும் தமிழ் நிறுவனங்களே முன்னிற்கின்றன.

தாயகத்தில் சிறுபான்மையினமாக இருந்த எங்கள் மீது சிங்களம் வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டது. அதனால் பிறந்த மண்ணை விட்டு புலம்பெயர்ந்து இந்த நாடுகளில் தாய் மண் குறித்த ஏக்கத்தோடும் கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நாடுகளிலாவது எம்மை அமைதியாக வாழ சிங்கள அரசும் அவர்களது அடிவருடிகளும் அனுமதிக்கிறார்களா?

வர்த்தகத்தில் அல்லது கலைத்துறையில் அல்லது கல்வித் துறையில் பரிணமிக்கும் எம் தமிழர்கள் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தப் படாதபாடு படுகிறார்கள்.

தமிழ் மக்கள் ஏதாவது ஒரு கவனயீர்ப்பு ஒன்று கூடலை ஒழுங்கு செய்தால் ஏட்டிக்குப் போட்டியாக அதே இடத்தில் தாமும் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்து எம்மை வம்புக்கு இழுக்கிறது சிங்களம்.

தமிழர் தாயகம் வல்வளைப்புச் செய்யப்பட்டதை வெற்றி விழாவாக்கி தமிழர் செறிவாக வாழும் பகுதிகளில் பட்டாசுகளைக் கொழுத்தியும் ஆரவாரம் செய்தும் வாகனப் பேரணிகளில் சென்றும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.

சிங்களத்தின் பிரச்சார ஊடகங்களுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ் வர்த்தகர்களே!

ஒரு சிறு தொகையினராக இருக்கும் இவர்களைக் கவர்வதற்காக, உங்களது சொற்ப வர்த்தக நலன்களுக்காக 5 இலட்சத்திற்கு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் மன உணர்வை, ஆதங்கத்தை, உள்ளக் குமுறல்களை எல்லாம் புறந்தள்ளிச் செயற்படப் போகிறீர்களா?

ஒரு சிறு தொகையினரான மக்களைக் கவர்வதற்காக எம்மினத்தையே காட்டிக் கொடுக்கும் இந்தப் பாதக செயலைத் தொடர்ந்து செய்யப் போகிறீர்களா?

பெரும்பான்மையான தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எதிரியின் பிரச்சார ஊடகங்களுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள்.

அறிந்தோ அறியாமலோ சிங்கள ஊடகங்களைப் போசித்துக் கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்கள் தம் தவறைத் திருத்திக் கொள்ளும் என்று நம்புவோம். ஆனால் இனியும் முட்டுக் கொடுப்போம் என்று முரண்டு பிடிக்கும் வணிக நிலையங்களுடன் எமது தொடர்பைத் தொடர்ந்து பேணப் போகிறோமா?

ஆயிரம் அவலங்களைச் சுமந்து கொண்டு வாழ்வா சாவா என்று எம் சகோதரர்கள் துடித்துக் கொண்டிருக்க அற்ப வியாபார நோக்கத்திற்காக எதிரியிடமே மண்டியிடும் இவர்களின் வர்த்தக நிலையங்களைப் புறக்கணிக்கத் தயாராவோம்

தாயகத்தில் அவலப்படும் எம்முறவுகளுக்காக என்ன செய்வது என்ற ஏக்கத்தோடும் எம் போராட்டங்கள் விழலுக்கிறைத்த நீராகி விடுகின்றனவே என்ற ஆதங்கத்தோடும் இருக்கும் உறவுகளே.

அற்ப சலுகைகளுக்காக எம்மிடையே இருக்கின்ற இந்த எட்டப்பர்களை இனங் கண்டு ஒதுக்கி வைப்பதும் எமது உறவுகளுக்காக செய்கின்ற பணிகளில் ஒன்று தான் என்பதை நினைவில் கொள்வோம்.

உணவின்றி மருந்தின்றி ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டு எம்முறவுகள் காத்திருக்க அந்த மரண அரக்கனுக்கே விருந்தோம்பல் செய்யும் பச்சோந்தித்தனத்தை துடைத்தெறிவது புலம் பெயர் தமிழர் ஒவ்வொருவரின் கைகளிலேயே தங்கியுள்ளது.

ஒன்றுபட்ட தமிழர் பலத்தின் முன்னால் எட்டப்பர்களும் அடிவருடிகளும் தொலைந்து போகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எப்படியண்ணே... நமக்கெல்லாம் லெமன்பஃவ் இல்லாட்டி செமிக்காது. லிப்டன் டீ இல்லாட்டி டீ இறங்காது... கிறீம் கிரக்கர் இல்லாட்டி காச்சல் போகாது. ஜின்ஜர் பியர் சோடா இல்லாட்டி வயிற்றுளைவு பொகாது. நெக்டோ இல்லாட்டி குழந்தையின் நாக்கு சிவக்காது... ஸ்ரீலங்கனில் பறக்காட்டி நாடுபோக முடியாது... இன்னும் எத்தனை...........

பிறகு என்ன செய்வது........ கொடி பிடிக்கத்தான் முடியுதே தவிர இதை செய்ய முடியல............

Link to comment
Share on other sites

சொறணை இல்லாத சிந்தனை இல்லாத மக்களை , சமூக ஒற்றுமை, இன ஒற்றுமை இல்லாத இனத்தை எவரும் காப்பாற்ற மாட்டார்கள்..

Link to comment
Share on other sites

பெரும்பான்மையான தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எதிரியின் பிரச்சார ஊடகங்களுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள்.

அறிந்தோ அறியாமலோ சிங்கள ஊடகங்களைப் போசித்துக் கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்கள் தம் தவறைத் திருத்திக் கொள்ளும் என்று நம்புவோம். ஆனால் இனியும் முட்டுக் கொடுப்போம் என்று முரண்டு பிடிக்கும் வணிக நிலையங்களுடன் எமது தொடர்பைத் தொடர்ந்து பேணப் போகிறோமா?

ஆயிரம் அவலங்களைச் சுமந்து கொண்டு வாழ்வா சாவா என்று எம் சகோதரர்கள் துடித்துக் கொண்டிருக்க அற்ப வியாபார நோக்கத்திற்காக எதிரியிடமே மண்டியிடும் இவர்களின் வர்த்தக நிலையங்களைப் புறக்கணிக்கத் தயாராவோம்

தமிழனை அழித்துக்கொண்டிருக்கும் சிங்கள பயங்கரவாத அரசின் கால்களை நக்கும் சில துரோகிகள் இதற்கும் நடுநிலை என்ற பெயரோடு கருத்து எழுத வருவார்கள் பாருங்கள்! சிங்களவன் சப்பி போடும் எலும்புத்துண்டு அவ்வளவு ருசிக்குதாம் அந்த எட்டப்பர்களுக்கு!

Link to comment
Share on other sites

கனடாவிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் The Srilanka Reporter, Anchor Man.

இவற்றை ஒருமுறை எடுத்துப் பாருங்கள். சிலர் சிங்களத்தில கூட விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்ப மட்டுமில்ல, கடந்த சில ஆண்டுகளாகவே களத்தில பலர் முன்மொழிஞ்சு வழிமொழிஞ்சு எழுதினால், நடுநிலையாளர்கள் வந்து "இது சாத்தியமில்லை, இது தமிழ் தேசிய முகமூடி அணிந்து கொண்டிருக்கிற ஆட்களின் நாடகம்" என்றெல்லாம் எள்ளி நகையாடுற ஒரு விடயம். ஆனால் தமிழர்களின் உயிர் இவ்வளவு மலினப் பட்டுப் போயிருக்கிற இந்த் சூழ் நிலையிலதான் இத திரும்பவும் முடுக்கி விடலாம். இந்த நேரம் வந்து நடுநிலை பேசுறவர்கள் தங்கட "சிங்கள ரத்னா" முகம் தெரிய வந்திரும் எண்ட பயத்தில வந்து கூக்குரலிடவும் மாட்டினம். இப்ப இந்த பகிஷ்கரிப்பு நுகர்வோர் மட்டத்தில வேலை செய்யுறதும் எனக்கு விளங்குது. நான் கனடா போயிருந்த நேரம் எனக்கு சிலோன் ரீ போட்டுத் தந்த ஒரு நண்பர் இப்ப எனக்கு ஈ-மெயில் செய்தி மேல செய்தியா அனுப்புறார், இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கச் சொல்லி. அவரை நான் குத்திக் காட்டாமல் பாராட்டி வரவேற்றிருக்கிறன். நாங்கள் இனி தமிழ் வர்த்தகர்களயும் கவனிக்க வேணும்.

Link to comment
Share on other sites

இது ஜீரணிக்க முடியாதது.இந்த காலக்கட்டத்தில் கூட தமது பிழையை திருத்தி எம் மக்களின் பின் நிற்காமல் சிங்களவனின் பிரச்சாரத்துக்கு துணை போகும் எம்மவர்களை மன்னிக்கவே கூடாது. நான் இருக்கும் இடத்தில் இந்த பத்திரிகைகள் இல்லை.மணிவாசன் இந்த பத்திரிகைகளில் விளம்பரம் செய்வோரை களத்தில் பதியுங்கள். இலங்கை பொருட்ளுடன் இவர்களையும் நாம் புறக்கணிபோம்.இது நாம் ஒவொருவரும் செய்யவேண்டயது.நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து எமது போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டிய காலகட்டம் இது.இதில் எமது பங்களிப்பு இல்லையெனில் வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது.புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளே தயவு செய்து இந்த புறக்கணிப்பில் எல்லோரையும் ஈடுபட பண்ணுவது உங்கள் கடமையும் கூட.இதுவும் ஒரு போராட்ட வடிவமே.நம்புங்கள் நாம் வெல்வோம்.போராட்டம் வெல்லும்.தமிழீழம் அமையும்.

Link to comment
Share on other sites

ஏற்கனவே தமிழ் இரத்தம் ஓடி தான் 24 மாவீரர்களும் 1 லட்சம் மக்களும் மடிந்து விட்டார்கள்.

எனக்கு வேற அது ஓடனுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே தமிழ் இரத்தம் ஓடி தான் 24 மாவீரர்களும் 1 லட்சம் மக்களும் மடிந்து விட்டார்கள்.

எனக்கு வேற அது ஓடனுமா?

24,000 மாவீரர்கள் .

பின்னுக்கு வாற சைவரை விட்டுப்போட்டீங்களே ..... வடிவேல் .

Link to comment
Share on other sites

மணி உங்கட ஆதங்கம் நியாயபூர்வமானது. உண்மையில பிரச்சனை என்ன எண்டால் எங்கட உறவினர்கள், அயலவர்கள் எண்டு எம்மைச்சுற்றி இருக்கிற பலரே தாயகப்போராட்டத்தை உளப்பூர்வமாக ஆதரிக்க இன்னமும் தயாராகவில்லை எண்டுறதுதான் கசப்பான உண்மை!

நான் தாயக மக்கள் அவலங்கள் பற்றி அறிஞ்சவர்கள், நண்பர்கள், உறவினர்கள் எண்டு பலருடன் உரையாடுவது. அப்ப என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலதை இதுல போடுறன். உதுகளுக்கு என்ன பதில் சொல்லிறது? ஏதாவது விளக்கம் சொன்னால்.. என்ன எனக்கே காது குத்திறியோ... யாருக்கு காது குத்துறாய் எண்டு நையாண்டி செய்யுறீனம்.

* இப்ப பேரணிகளில புலிக்கொடியை தூக்கிறீனம். இப்பிடியான நிலமையில நாங்கள் எப்பிடி பேரணிக்கு (கவனயீர்ப்பு) போறது? (கவனயீர்ப்பு பற்றி கதைச்ச பொழுது)

* புலிதானே சனங்களை பிடிச்சு வச்சு இருக்கிது? தமது கட்டுப்பாட்டில இருந்து தப்பிப்போற சனத்தை புலிதானே சுடுகிது? (சிறீ லங்கா அரசாங்கத்தால சனங்கள் சாகிதுகள் எண்டு சொன்னதுக்கு)

* எல்லாத்தையும் விட்டுப்போட்டு சும்மா இருந்தால் இல்லாட்டிக்கு விட்டுப்போட்டு ஓடினால் நீங்கள் தேடிவந்து சுட்டுப்போட்டுடுவீங்கள். இதனால அவங்கள் காட்டிக்கொடுத்தாவது தங்கட உயிரை காப்பாற்றுறாங்கள். (ஈபீடீபி, கருணா குழுக்களின் துரோகத்தனம் பற்றி கதைச்சபோது)

Link to comment
Share on other sites

இவ்வளவு மக்கள் இழப்பும் அழிவிற்கும் பிறகு சொறணை உள்ளவர்கள் தாங்களாகவே சிந்தித்து விலத்துவார்கள்

சிலர் மற்றவர்கள் சொல்லி விலத்துவார்கள்.

சொல்லியும் செய்யாதவர்களை மற்றைய தமிழர்கள்தான் திருத்துவார்கள் செயலால்.

எமது இனத்திற்கு மட்டும்தான் இந்த சாபக்கேடு.

சிங்களவர்களை பாருங்கள் தங்கள் நாடு என்று வந்தவுடன் எவ்வளவு ஒற்றுமை.. ரனில் என்ன, மகிந்தா என்ன, சந்திரிக்கா என்ன தமது இனத்திற்கு ஆபத்து என்றவுடன் எல்லாம் மறந்து ஓற்றுமையாக வெளி உலகத்திற்கு காட்டுகிறார்கள்.

வெளி நாடுகளில் எவ்வளவு சிங்களவர் பிரச்சாரங்களில், தமிழரை, புலிகளை பயங்கரவாதிகளாக கொச்சைப்படுத்துகிறார்கள்.

தமிழனில் பலரின் செயல்பாடுகள் இந்த இக்கட்டு நிலையில் போதாது..

எம்மினம் அழியும் போது மௌனமாக இருத்தல், எதிர்ப்புக்களை வெளிப்படுத்தாமல் இருத்தல் எம்மின அழிவுக்கு ஆதரவாக இருத்தலுக்கு சமனாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தாயக மக்கள் அவலங்கள் பற்றி அறிஞ்சவர்கள், நண்பர்கள், உறவினர்கள் எண்டு பலருடன் உரையாடுவது. அப்ப என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலதை இதுல போடுறன். உதுகளுக்கு என்ன பதில் சொல்லிறது? ஏதாவது விளக்கம் சொன்னால்.. என்ன எனக்கே காது குத்திறியோ... யாருக்கு காது குத்துறாய் எண்டு நையாண்டி செய்யுறீனம்.

* இப்ப பேரணிகளில புலிக்கொடியை தூக்கிறீனம். இப்பிடியான நிலமையில நாங்கள் எப்பிடி பேரணிக்கு (கவனயீர்ப்பு) போறது? (கவனயீர்ப்பு பற்றி கதைச்ச பொழுது)

* புலிதானே சனங்களை பிடிச்சு வச்சு இருக்கிது? தமது கட்டுப்பாட்டில இருந்து தப்பிப்போற சனத்தை புலிதானே சுடுகிது? (சிறீ லங்கா அரசாங்கத்தால சனங்கள் சாகிதுகள் எண்டு சொன்னதுக்கு)

* எல்லாத்தையும் விட்டுப்போட்டு சும்மா இருந்தால் இல்லாட்டிக்கு விட்டுப்போட்டு ஓடினால் நீங்கள் தேடிவந்து சுட்டுப்போட்டுடுவீங்கள். இதனால அவங்கள் காட்டிக்கொடுத்தாவது தங்கட உயிரை காப்பாற்றுறாங்கள். (ஈபீடீபி, கருணா குழுக்களின் துரோகத்தனம் பற்றி கதைச்சபோது)

இதைத்தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்று சொல்வார்களோ?

இப்படியான கேள்விகளே அவர்களை யார் என்று காட்டிக் கொடுக்கிதே? பிறகு அவர்களுக்கு விளக்கம் கொடுத்தென்ன விளக்கெண்ணை கொடுத்தென்ன!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி , பெப்சி .

Link to comment
Share on other sites

வியாபாரத்துக்காக எதையும் விற்கத் துணிந்த இவர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எப்போதும் பல விடயங்களில் பின்தங்கிப் போனதற்கான காரணமாக இருப்பது எம்மிடையேயான ஒற்றுமையின்மையே. இது ஒரு சாபக்கேடு. ஆனால் இங்கு முதலிலே நடைபெற வேண்டிய விடயம் யாதெனில், தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்கள் முதலிலே தமக்கென ஒரு கட்டுப்பாட்டை வகுத்துக் கொள்ள வேண்டும். " பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் " என்ற போக்கு மாறவேண்டும். நான் பல தடவைகள் அவதானித்த விடயம், கதைக்கும்போது ஆமாப் போடுவதும், பின்னர் சிறீலங்காப்; பொருட்களின் கொள்வனவில் ஈடுபடுவதுமே தொடர்கிறது. கேட்டால் சொல்லுவார்கள், கடை வைத்திருப்பவரும் தமிழர்தானே என்று, கருணாக்களும் தமிழன் தானேயென எண்ணுவதில்லை.தாங்கள் பங்களிக்கிறோம் பிறகென்ன என்று சொல்பவர்களும் உண்டு. குறைந்தது நாளொன்று ஒரு யூரோவோ , பவுனோ கொடுக்கிறோம் என்றால் மாதாந்தக் கொள்வனவாகக் குறைந்தது 200 யூரோகளை எட்டுகிறது. அப்படியாயின், ஆதாயம், வரி , எனப் பலவற்றைக் கழித்துப் பார்த்தாலும் பெரும் தொகைப்பணம் சிறீலங்காவைச் சென்றடைகிறது. (200யூரோவில் குறைந்தது 40யூரோ சிறீலங்கா அரசிற்கு நேரடியாகக் கிடைக்கிறது என்பது எமது அறியாமையே, இதில் கணிசமான வேலைவாய்ப்புப் போன்ற விடயங்கள், விமானத்தில் அனுப்புதல் என்று துணை வருமானங்கள் வேறாக உள்ளது) எடுத்துக்காட்டாக 2.99 யூ. விற்கிறது எம்.டீயின் ஊறுகாய். 435 இ.ரூபாய், 1 கிலோ பனங்கிழங்கு 5.50 யூ 800.00இ.ரூபாய், என்றால் ஏனைய பொருட்களையும் ஒப்பீடு செய்தால் எவளவு பணத்தை நுகர்வென்ற போர்வையில நாம் கொடுக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். 2006 ஆம் ஆண்டு தமிழ்ப் பாடசாலையொன்றிலே பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றபோது, சிலர் ஒரு கருத்தை முன்வைத்தார்கள் தமிழ்க்கடைகளையே, அதாவது தாயகத்தை நேசிக்காத தமிழ்க்கடைகளையே புறக்கணிக்க வேண்டுமென்ற போது, அங்கிருந்த தலையாரியே அதைவிடுங்கோ, அதை இதில கதைக்க வேண்டாமென்று சொல்லி விட்டார். பின்னர் அங்கிருந்த ஒருவர் மூலமாக அறிந்தேன். அவர்தானாம் அந்தக் கடையின்ர லீகல் அட்வைசர் என்று. இப்பிடியும் " பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் " காட்டிற சிலபேர் இருக்கினம் கண்டியளோ. இவையளையும் தோலுரிச்சுக் காட்ட வேணும். என்னைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியத்தை நிராகரிக்கும், புறக்கணிக்கும் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டியது எமது தலையாய கடனாகும். அது தனிமனிதர்களது நடவடிக்கையாயினும் சரி.சிறீலங்காவோடு, இவர்களையும் ஒதுக்கி ஓரம்கட்டுவது மட்டுமே தமிழினம் உலகிலிருந்து ஒதுக்கப்படாது, அழிக்கப்படாது இருக்க வழி செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம் அழிவை நாமே தேடிக்கொள்கின்றோம் என்பதுதான் உண்மை.

22,000ற்கும் மேற்பட்ட மாவீரர்களை இழந்ததற்கு கூட காரணம் நாம் தானே? சிதறிக்கிடக்கின்றோம். அதனால் சிங்களவன் நம்மைச் சின்னாபின்னப்படுத்துகின்றா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எப்படியண்ணே... நமக்கெல்லாம் லெமன்பஃவ் இல்லாட்டி செமிக்காது. லிப்டன் டீ இல்லாட்டி டீ இறங்காது... கிறீம் கிரக்கர் இல்லாட்டி காச்சல் போகாது. ஜின்ஜர் பியர் சோடா இல்லாட்டி வயிற்றுளைவு பொகாது. நெக்டோ இல்லாட்டி குழந்தையின் நாக்கு சிவக்காது... ஸ்ரீலங்கனில் பறக்காட்டி நாடுபோக முடியாது... இன்னும் எத்தனை...........

பிறகு என்ன செய்வது........ கொடி பிடிக்கத்தான் முடியுதே தவிர இதை செய்ய முடியல.......

அதுதானே எல்லாரும் யாழில வந்து எழுதிட்டு போறதே தவிர ஒவ்வொருவர் வீட்டிலையும் அவன்ரை சாமான் இல்லாமல் புகையாதே(அடுப்பு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனின் சொந்த முகவரி

@@சூடு சுரணை கொஞ்சமும் இல்லை@@

பணம் ஐயா பணம்

வன்னியில் விழும் பிணம் தருமோ?

இந்த சொரணை இனியும் தமிழனிற்கு வருமோ?

ஏற்படும் ஐயம் ஏங்க வைக்கின்றது.கண் கெட்ட பின்னே

சூரிய உதயம் எந்தப் பக்கம் ஆனால் எனக்கென்ன போய்யா!வாழ்க தமிழின ஒட்டுணர்வு

Link to comment
Share on other sites

இதற்குள் சிங்களவைனைப் பார்த்து 'மோட்டுச் சிங்களவன்" என்று அடைமொழி பேசித்திரிகிறார்கள்.

தமிழனிடம் பணம் பெற்று தமிழனை அழிக்கிற சிங்களவன் மோடனா? அல்லது தன்னினத்தை அழிக்க எதிரிக்கு வாரி வழங்கும் தமிழன் மோடனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் சிங்களவைனைப் பார்த்து 'மோட்டுச் சிங்களவன்" என்று அடைமொழி பேசித்திரிகிறார்கள்.

தமிழனிடம் பணம் பெற்று தமிழனை அழிக்கிற சிங்களவன் மோடனா? அல்லது தன்னினத்தை அழிக்க எதிரிக்கு வாரி வழங்கும் தமிழன் மோடனா?

சரியான கேள்வி.

நாங்கள் எதோபெரிய புத்திமான்கள் போல் கதைப்பதோடு சரி. கடந்த நூறு ஆண்டுகளாக சிங்களவரின் அரசியல் இராசதந்திர நகர்வுகளை எம்மால் உடைக்க முடியவில்லை. இதிலே பெருமைவேறு. எமக்குள் எம்மை மட்டந்தட்டவும், புறம் சொல்லுவதிலுமே மிகவும் கெட்டிக்காரர்கள். அப்படி ஏதாவது நல்ல விடயங்களை சுட்டினாலோ, செய்ய முற்பட்டாலோ நாம் அதனையும் குழப்புவதில் வல்லவர்கள் என்பதே உண்மை.அல்லது செய்யமுற்படுவோரை எப்படித் தள்ளிவிட்டு, அதிலே நான் ஏறிக்கொள்வது என்று சிந்திப்பவர்களே தமிழர்கள்.புலத்தில பார்க்கிறம்தானே எத்தனை கூத்துகள். கேவலம், கேவலத்திலும் கேவலம்............... !

இதுவரை சிங்களவனை மோடனாக்க முடிந்ததா? இல்லவே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

24,000 மாவீரர்கள் .

பின்னுக்கு வாற சைவரை விட்டுப்போட்டீங்களே ..... வடிவேல் .

ஒரு மண்ணும் புரியவில்லை

கொஞ்ஞம் விளக்கமா சொல்லுங்கப்பா

Link to comment
Share on other sites

2008 FEB

கனடிய சிறிலங்கா தூதரகத்தின் பத்திரிக்கையான The srilankan ANCHORMAN

இதை தமிழர் மத்தியிலிருந்து அகற்றுவது எமது கடமை

முதலில் இப்பத்திரிக்கைக்கு விளம்பரம் கொடுக்கும் தமிழ்வர்த்தகர்களை அகற்றுவது முதலாவது கடமையாகும்

இரண்டாவது இப்பத்திரிக்கைகளை அனுமதிக்கும் வர்த்தக நிறுவனங்களை முதலில் நிறுத்தச் சொல்ல வேண்டும்

அல்லது இந்த வர்த்தக நிறுவனங்களை தமிழர் புறக்கணிக்க வேண்டும்

அவர்களில் சிலர்

ESAA PARA ESHANADA -- REAL ESTATE AGENT

GANESH PARA GANESHANANDA -- MORTGAGE

கரு கந்தையா - வீடு விற்பனை முகவர்

மோகன் சுப்ரமணியம் --வீடு விற்பனை முகவர்

குல செல்லதுரை--SCOTIA BANK

KUMAR----CEYCAN TRANSCONTINENTAL INC

கனகாம்பிகை நகை மாளிகை

vince sinnadurai -- MORTGAGE SPECIALISTS

BOBBY SIVA -- FINACIAL ADVISOR

NETCOM COLLEGE

CELL TELL MOBILITY

ANTON F.DHARMASEELAN -MORTGAGE

POOJAH'S BAKE HOUSE

SERANDIB TRAVEL

WIMAL NAVARATNAM-MORTGAGE

VYRA KARUNANANTHAN-- MORTGAGE

CITY TIME --RAAJ

GASA RESTAURANT

MANIKANDAN --TAKE OUT CATERING

EESWARAN INC--TAKE OUT CATERING

ARUN BAKERY --TAKE OUT CATERING

JAFFNA SUPER STORE

RANI MAHAL - TAKE OUT CATERING

http://suthumaathukal.blogspot.com/2008/01...-anchorman.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2008 FEB

கனடிய சிறிலங்கா தூதரகத்தின் பத்திரிக்கையான The srilankan ANCHORMAN

இதை தமிழர் மத்தியிலிருந்து அகற்றுவது எமது கடமை

முதலில் இப்பத்திரிக்கைக்கு விளம்பரம் கொடுக்கும் தமிழ்வர்த்தகர்களை அகற்றுவது முதலாவது கடமையாகும்

இரண்டாவது இப்பத்திரிக்கைகளை அனுமதிக்கும் வர்த்தக நிறுவனங்களை முதலில் நிறுத்தச் சொல்ல வேண்டும்

அல்லது இந்த வர்த்தக நிறுவனங்களை தமிழர் புறக்கணிக்க வேண்டும்

அவர்களில் சிலர்

ESAA PARA ESHANADA -- REAL ESTATE AGENT

GANESH PARA GANESHANANDA -- MORTGAGE

கரு கந்தையா - வீடு விற்பனை முகவர்

மோகன் சுப்ரமணியம் --வீடு விற்பனை முகவர்

குல செல்லதுரை--SCOTIA BANK

KUMAR----CEYCAN TRANSCONTINENTAL INC

கனகாம்பிகை நகை மாளிகை

vince sinnadurai -- MORTGAGE SPECIALISTS

BOBBY SIVA -- FINACIAL ADVISOR

NETCOM COLLEGE

CELL TELL MOBILITY

ANTON F.DHARMASEELAN -MORTGAGE

POOJAH'S BAKE HOUSE

SERANDIB TRAVEL

WIMAL NAVARATNAM-MORTGAGE

VYRA KARUNANANTHAN-- MORTGAGE

CITY TIME --RAAJ

GASA RESTAURANT

MANIKANDAN --TAKE OUT CATERING

EESWARAN INC--TAKE OUT CATERING

ARUN BAKERY --TAKE OUT CATERING

JAFFNA SUPER STORE

RANI MAHAL - TAKE OUT CATERING

http://suthumaathukal.blogspot.com/2008/01...-anchorman.html

ரொறன்ரோவில் நான் கேள்விப் பட்ட பிரபலமான தமிழ் வர்த்தகமெல்லாம் இதுக்கு ஆதரவா? இதை அவர்களுக்கு எங்கள் தமிழ் அமைப்பு ஏதாவது எடுத்துச் சொல்ல முடியாதா? :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.