Jump to content

நான் கதை எழுதின கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் கதை எழுதின கதை

“என்னதான் மனிச வாழ்க்கை சுத்திச் சுழண்டாலும் மனிசன் என்பவன் கனவுகளைச் சுமக்கும் கூடம்தானே”

என்று சொன்ன சிக்மன் பிராய்ட்டின் கருத்து உண்மைதான் போலிருக்கிறது. ஏனக்கு சிக்மன் பிராய்டு என்றால் தனியொரு ஈடுபாடு.

மனிதர்கள் கனவுகளைச் சுமந்தலையும் ஜடங்கள்தானே. அவர்கள் தங்களால் கூற முடியாததை தம் ஆழ் மனதில் புதைத்து விடுகின்றனர். அது இன்று என் மனதை குடைந்து குடைந்து உறங்கவும் விடாமல் உண்ணவும் விடாமல் பெரும் பூதமாக அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

உண்மையில் என்னால் என்னதான் செய்ய முடிகிறது.

“நீ யார்? நீ ஒரு மனிதன் தானே….? ”

என்னை நானே திருப்பித் திருப்பிக் கேட்டுக் கேட்டுத் தோற்றுப் போகிறேன்.

“ உன்னால் என்னதான் உருப்படியாய் சொல்ல முடிகிறது? நீ எதற்குத்தான் துணிந்தவனாக இருக்கிறாய்?”

ஏன்று அடிக்கடி பல வினாக்கள் வந்து என்னுள் அச்சுறுத்துகின்றன.

“எழுத்தாளனாக இருந்து இந்த உலகத்தில் நீ என்னத்தைச் சாதித்து விட்டாய்… அல்லது இனி என்னதான் சாதிக்கப் போகிறாய்…வாள் முனையை விட பேனா முனை கூர்மை என்றாயே… உன்னால் என்னதான் கிழிக்க முடிந்தது… உன் பேனா முனை என்ன மழுங்கி விட்டதா…? “

மீண்டும் துரத்துகின்றன எண்ணற்ற வினாக்கள்.

என்னால் என்னதான் செய்ய முடியும். நானும் ஒரு சராசரி மனிதன்தானே. எனக்கு நானே “எழுத்தாளன்” என்று பட்டம் சூட்டி எழுதத் தொடங்கி எத்தனை வருசமாச்சுது… இதுவரை காலமும் இல்லாமல் இப்படிப் பல கேள்விகள் என்னைத் துழைத்து எடுப்பது ஏன்…?

“எத்தினை கதைகள் எழுதியும் என்ன பயன்…? உன்னால் கால்மார்க்ஸ் சொன்ன சமூகத்தை எழுத முடிந்ததா? சமூகத்துக்காக உன்னால் உண்மையாக உழைக்க முடிந்ததா? “

இன்னும் வினாக்கள் என்னை நோக்கி நீண்டு கொண்டிருந்தன.

எனக்கு அருகில் முன் இருக்கையில் ஒரு சிங்கள்ப் பெண் முகத்தில் எவ்விதமான சலனமும் இல்லாமல் பொட்டில்லா முகத்திலும் பொங்கி வழியும் அழகும் மகிழ்வும் இழையோட… ஆஹா… என்ன வாழ்வு…

“நானும் இருக்கிறேன்…சீ தூ…”

என என்னை நானே மனதுக்குள் திட்டித் தீர்த்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒரு தடைவ என் சட்டைப் பையில் கைவிட்டு அடையாள அட்டையை உறுதிப் படுத்திக்கொண்டு கண்ணாடி யன்னலூடாக வெளியில் பார்க்க முனைகிறேன். மழைத் துளிகள் முகத்தில் விழுந்து குளிரூட்டின.

கண்களை மூடியபடி முகத்தை மெதுவாக உள்ளிழுத்துக் கொண்டேன். ஆமை வாழ்க்கைதான் நமக்குப் பழகிப் போனதாயிற்றே…

மூடிய கண்களினூடே விம்பங்கள் வந்து தொலைத்தன… நேற்றிரவு நான் கதை எழுத முனைந்ததும் பின் அது சரிப்படாது போகவே அது இன்றைய இரவுக்கு ஒத்தி வைக்கப் பட்டதும் மனதில் வந்து போனது.

இணையத் தளங்களினூடே அன்றாடம் பொங்கி வழிகின்ற இறப்புச் செய்திகளும் பட்டினிச் சாவு பற்றிய குறிப்புக்களும் என்னை உறங்க விடாது இறுகப் பற்றிக் கொண்டு இதயத்தைக் கனக்கப் பண்ணி, துழைத்து, துருவியெடுத்துக் கொண்டிருந்தது.

இப்போது மூடிய கண்களை விழித்து வெளியே பார்க்கிறேன்… நான் இறங்க வேண்டிய இடம் நெருங்கிக் கொண்டிருந்தது.

இப்போது அந்தச் சிங்களப் பெண் யாருடனோ சிரித்துச் சிரித்து செல்லிடத் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தாள்.

நான் மெதுவாக என் இருக்கையை விட்டு எழுந்து பேருந்தின் முன் வாசல் பகுதி நோக்கி நகர்கிறேன்.

பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மீண்டும் அடையாள அட்டையை உறுதிப் படுத்தியபடி வேகமாக நடக்கிறேன்.

“இண்டைக்கெண்டாலும் அந்தக் கதையை எழுதி முடிச்சிட வேணும்”

என்று மனதில் எண்ணியவாறு இன்னும் வேகமாக… என் வீட்டை நோக்கி முன்னேறினேன்.

வீட்டின் படலையைத் திறந்து அடியெடுத்து வைத்ததுதான் தாமதம்

“முகங்கால் கழுவிட்டு வாங்கோ” என்றாள் மனைவி.

“ம்…இப்ப அதுதான் அவசியம்…”

என்று வாயில் முணுமுணுத்தபடி துவாயை எடுத்துத் தோழில் போட்டுக் கொண்டு நடக்கிறேன்.

“என்ன தேத்தண்ணி வைக்கவோ அல்லது……”

மீண்டும் குறுக்கிட்டாள் என் தர்ம பத்தினி.

“என்னத்தை எண்டாலும் வை வாறன்…” என்றபடி மீண்டும் நடந்தேன்.

கைகால் கழுவி மீண்ட போது ஆவி பறந்தபடி என்னை எதிர்பார்த்து காத்திருந்தது தேனீர். எடுத்து வாயில் வைத்தபோது…. அந்தக் காட்சிகள்தான் நினைவுக்கு வந்தன…

தேனீர் தொண்டையைத் தாண்டிச் செல்ல மறுத்தது. அப்படியே வைத்து விட்டு என் மேசையை நோக்கி நகர்கிறேன்:

“இப்பிடியே எத்தினை நாளுக்குத்தான் இருக்கிறது. உங்கடை உடம்பு என்னத்துக்குத்தான் ஆகிறது… கவலை ஆருக்குத்தான் இல்லை…’சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையலாம்’ கொஞ்சமெண்டாலும் சாப்பிடலாம்தானே…”

என்று மனைவி சொல்வதை ஒரு காதால் வாங்கி மறு காதால் விட்டபடி… நேற்றைய கதையினைத் தொடரும் ஆர்வத்துடன் இப்போது எழுதத் தொடங்குகிறேன்.

என் கண்முன்னே வன்னியின் இன்றை நிலைமைகள் படமாக விரிகின்றது…

“என்ரை குடும்பம் எப்பிடியோ…? வன்னியில் என் உறவுகள் அம்மா, அப்பா, உடன் பிறப்புக்கள் கடவுளே இந்தக் கஷ்ரத்துக்குள்ளை இவ்வளவு கொடுமைகளை அனுபவிச்சுக் கொண்டு எப்பிடித்தான் வாழுதுகளோ…? “

என்னையும் மீறி என் கண்களில் நீர்த் துளிகள் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிக்கின்றது.

“கொட்டுகின்ற செல் மழைக்கும் , வாட்டுகின்ற பட்டிணிக்கும் நடுவிலை எப்பிடித்தான் வாடுதுகளோ…? “

என் மனம் நார்நாராய்க் கிழிந்து காற்றில் பறந்தது.

“ஒரே நாட்டில் இருந்தும் போய் பார்க்க முடியாத பாவியாகி விட்டேனே…ஆபத்துக்கு உதவ முடியாமல் போய் விட்டேனே… என் உறவுகளின் நிலையை அறிய முடியாமல் அந்தரப் படுகிறேனே…”

என்னால் அழுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்? எதுவுமே முடியாது என்ற முடிவுடன் மீண்டும் எழுத்தொடங்குகிறேன்…

இப்போது என் பேனா எழுத மறுக்கிறது. தாளின் மையப் பகுதியில் பொட்டிட்டு அதையே சுற்றிச் சுற்றிச் சுழல்கிறது பேனா… என்னால் எதுவுமே எழுத முடியவில்லை.

பொய்யை எழுதி எழுதி, கற்பனையை எழுதி எழுதி எழுத்தாளன் ஆனதுதான் மிச்சம்… உண்மையை எழுதினால் உயிர் வாழ முடியாதென்ற உண்மையை என்னைப் போலவே என் பேனாவும் அறிந்திருக்குமோ என்னவோ… அதற்கு மேலும் நகர மறுக்கிறது பேனா…

என்னால் முடியவில்லை… இதற்கு மேலும் என்னதான் செய்ய முடியும்…? ஒரு முடிவுடன் எழுந்தேன். எழுதிய தாள்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து… ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி… குறுக்கும் நெடுக்குமாக தாறுமாறாகக் கிழித்து தீயிட்டு எரித்தேன்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை எழுத முனைந்த தீயாவுக்கு ........தங்களின் சலிப்பு தாயக உணர்வு உள்ள எந்த தமிழ் உறவுக்கும் வரும் . உறவுகள் துயர் கண்டு ,கொதித்து சலித்து ,ஒரு விடிவு வராதா என்ற ஏக்கம் கொண்டு உள்ள மன நிலையில் ...நீங்கள் நிச்சயம் எழுத வேண்டும் உங்கள் பேனா தூங்க கூடாது ...பெண்களுக்கு ஏற்படும் கொடுமையை எழுதுங்கள். உணர்வு வராத வர்களுக்கு உணர்வு வர ....எழுதுங்கள். பரப்புரை செய்யுங்கள். ஈட்டியின் முனை போன்று . பேனாவும் (கணனி எழுத்தும் ) வலிமை உள்ளது ...எங்கே உங்கள் பேனா , எழுதுங்கள் உணர்வுகளை தட்டி எழுப்புங்கள். .........பல வழிகளிலும் போராடுவோம் ஒரு வழி திறக்கும் நம்புவோம். ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை எழுத முனைந்த தீயாவுக்கு ........தங்களின் சலிப்பு தாயக உணர்வு உள்ள எந்த தமிழ் உறவுக்கும் வரும் . உறவுகள் துயர் கண்டு ,கொதித்து சலித்து ,ஒரு விடிவு வராதா என்ற ஏக்கம் கொண்டு உள்ள மன நிலையில் ...நீங்கள் நிச்சயம் எழுத வேண்டும் உங்கள் பேனா தூங்க கூடாது ...பெண்களுக்கு ஏற்படும் கொடுமையை எழுதுங்கள். உணர்வு வராத வர்களுக்கு உணர்வு வர ....எழுதுங்கள். பரப்புரை செய்யுங்கள். ஈட்டியின் முனை போன்று . பேனாவும் (கணனி எழுத்தும் ) வலிமை உள்ளது ...எங்கே உங்கள் பேனா , எழுதுங்கள் உணர்வுகளை தட்டி எழுப்புங்கள். .........பல வழிகளிலும் போராடுவோம் ஒரு வழி திறக்கும் நம்புவோம். ......

உங்கள் கருத்துக்கு நன்றி

முயற்சி செய்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான வரிகள்

theeya	  Posted Yesterday, 02:13 PM

உண்மையை எழுதினால் உயிர் வாழ முடியாதென்ற உண்மையை என்னைப் போலவே என் பேனாவும் அறிந்திருக்குமோ என்னவோ… அதற்கு மேலும் நகர மறுக்கிறது பேனா…

அதுக்காக எழுதாமல் விடக் கூடாது

Link to comment
Share on other sites

தியா , தொடர்ந்து எழுதவும். நன்றாக எழுதக்கூடியவர் போலுள்ளது. மனதை தளரவிடாமல் எழுதுங்கள். பேனாவின் வலிமை தான் தூக்கிய ஆயுதத்தை விட வலிமையானது என தராக்கி அவர்கள் கூறியது நினைவு கூரத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் அத்தனையும் சத்தியமான வார்த்தைகள் மிகவும் தத்ரூபமாக எழுதி உள்ளீர்கள்

தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான வரிகள்

theeya	  Posted Yesterday, 02:13 PM

உண்மையை எழுதினால் உயிர் வாழ முடியாதென்ற உண்மையை என்னைப் போலவே என் பேனாவும் அறிந்திருக்குமோ என்னவோ… அதற்கு மேலும் நகர மறுக்கிறது பேனா…

அதுக்காக எழுதாமல் விடக் கூடாது

இல்லை கிறுக்கன்

எழுதித்தானே ஆக வேண்டும்.

விரைவில் மீண்டும் எழுதுவேன்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியா , தொடர்ந்து எழுதவும். நன்றாக எழுதக்கூடியவர் போலுள்ளது. மனதை தளரவிடாமல் எழுதுங்கள். பேனாவின் வலிமை தான் தூக்கிய ஆயுதத்தை விட வலிமையானது என தராக்கி அவர்கள் கூறியது நினைவு கூரத்தக்கது.

நன்றி நுணாவிலான் நன்றி

நான் தொடர்ந்து எழுதுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அத்தனையும் சத்தியமான வார்த்தைகள் மிகவும் தத்ரூபமாக எழுதி உள்ளீர்கள்

தொடர்ந்து எழுதுங்கள்

நான் இதை வேண்டுமென்று எழுதவில்லை. எழுதத் தூண்டிவிட்டது காலம்.

பட்டால்தானே நோவு தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் முடியவில்லை… இதற்கு மேலும் என்னதான் செய்ய முடியும்…? ஒரு முடிவுடன் எழுந்தேன். எழுதிய தாள்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து… ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி… குறுக்கும் நெடுக்குமாக தாறுமாறாகக் கிழித்து தீயிட்டு எரித்தேன்…

நல்ல வேலை செய்தீர்கள் தியா! இனி கணணியில் மட்டும் உ ங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்கள்!

Link to comment
Share on other sites

நான் இதை வேண்டுமென்று எழுதவில்லை. எழுதத் தூண்டிவிட்டது காலம்.

பட்டால்தானே நோவு தெரியும்

அது உண்மைதான் தியா பட்டால்தான் நோவு தெரியும்..ஆனாலும் தொடர்ந்து எழுதுங்கள்.. நல்ல எழுத்தாளர்கள் மனசு நொந்து போக கூடாது.. விடா முயச்சிய் ஒரு நாள் நல்ல முடிவை தரும் என்று சொல்லுவார்கள்..அதே போல் உங்கள் எழுத்துக்களும் உங்கள் நொந்த மனசுக்கு ஒரு விடிவை தரும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் தன்னைத் தேடுகிறான்,முடிவில்லாத் தொடர் கதையாக அந்தத் தேடுதல் தொடர்கிறது.....என்று தேசத்தின் குரல் அன்டன் பாலசின்கம் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்,.....சிக்மன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் முடியவில்லை… இதற்கு மேலும் என்னதான் செய்ய முடியும்…? ஒரு முடிவுடன் எழுந்தேன். எழுதிய தாள்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து… ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி… குறுக்கும் நெடுக்குமாக தாறுமாறாகக் கிழித்து தீயிட்டு எரித்தேன்…

நல்ல வேலை செய்தீர்கள் தியா! இனி கணணியில் மட்டும் உ ங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்கள்!

உங்கள் ஆலோசனைக்கு நன்றி சுவி,

தொடர்ந்து எழுதுவேன் எழுதிக் கொண்டேயிருப்பேன்...

சுஜி	  Posted Yesterday, 09:11 PM


QUOTE (theeya @ Mar 6 2009, 11:18 AM) *

நான் இதை வேண்டுமென்று எழுதவில்லை. எழுதத் தூண்டிவிட்டது காலம்.


பட்டால்தானே நோவு தெரியும்


அது உண்மைதான் தியா பட்டால்தான் நோவு தெரியும்..ஆனாலும் தொடர்ந்து எழுதுங்கள்.. நல்ல எழுத்தாளர்கள் மனசு நொந்து போக கூடாது.. விடா முயச்சிய் ஒரு நாள் நல்ல முடிவை தரும் என்று சொல்லுவார்கள்..அதே போல் உங்கள் எழுத்துக்களும் உங்கள் நொந்த மனசுக்கு ஒரு விடிவை தரும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றி

நன்றி சுஜி

உங்கள் கருத்துக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மனிதன் தன்னைத் தேடுகிறான்,முடிவில்லாத் தொடர் கதையாக அந்தத் தேடுதல் தொடர்கிறது.....என்று தேசத்தின் குரல் அன்டன் பாலசின்கம் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்,.....சிக்மன
Link to comment
Share on other sites

தினம் தினம் துயர்தரும் கதைகள் நிறைந்திருக்க எங்கே இயல்பாய் எழுத முடிகிறது தீயா. நல்ல கதையென்று ஒற்றைவரியில் சொல்லிவிட முடியாதபடி கதையின் அந்தரிப்பும் துயரமும் அவலமாய் தொடர்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

சாந்தி

தினம் தினம் துயர்தரும் கதைகள் நிறைந்திருக்க எங்கே இயல்பாய் எழுத முடிகிறது தீயா. நல்ல கதையென்று ஒற்றைவரியில் சொல்லிவிட முடியாதபடி கதையின் அந்தரிப்பும் துயரமும் அவலமாய் தொடர்கிறது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.