Jump to content

தோப்பு கரணம் = Super Brain Yoga


Recommended Posts

கிகி... நல்ல ஒரு யோகா. நல்லகாலம் இதைக் கண்டுபிடிச்சது ஒர் வெள்ளைக்காரன் எண்டு சொல்ல இல்லை. எதையும் வெள்ளைக்காரன் சூப்பர் எண்டு சொன்னாப்பிறகுதான் அதன் மகிமை விளங்கிது.

ஊரில வாத்திமார் தண்டனைக்காக மாணவர்களிற்கு வக்கிர மனத்துடன் கொடுக்கும் பயிற்சியை வெள்ளைக்காரன் சூப்பர் யோகா எண்டுற பெயரில பணம் சம்பாதிக்க பயன்படுத்துறான். வெள்ளைக்காரன் எங்களைவிட வேகமாய் முன்னுக்குபோக இதுவும் ஒரு காரணம்.

நான் சில வருடங்களுக்கு முன்னம் ஓர் பாடல் பயிற்சி பட்டறைக்கு போய் இருந்தன். அதில விரிவுரை செய்த ஆங்கிலப் பாடகர் தாங்கள் தற்போது தென்னாசியாவில இருந்து இறக்குமதி செய்த பாடல் பாடும்போது கவனிக்க வேண்டிய மிகவும் ஒரு நவீன நுட்பமாம் எண்டு ஊர் - இந்தியப் பகுதிகளில பாடுற ஒரு பாணியை - அசைவை - பாவத்தை சொல்லித் தந்தார். சிரிப்பாய் இருந்திச்சிது.

ஊரில எண்டால் வெறும் பரமேளம்.. வெளிநாட்டில எண்டால் அது அருமையான ஒரு இசைக்கருவி. இதுதான் உலகம்.. எங்கட பலம், எங்கட மகத்துவம் எங்களுக்கு தெரியாமல் இருப்பது மிகவும் துர்ப்பாக்கியமே!

குளக்காட்டானை கனகாலமாகக் காணவில்லை. அப்ப நீங்களும் சூப்பர் யோகா செய்யுறதில Busyஆய் இருக்கிறீங்களோ? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்து சொன்னால் தான் அதன் தார்ப்பரியம் புரியும். இன்றேல்.. எந்த ஆராய்ச்சியுமின்றி.. நாகரிகத்துக்கு அப்பால் ஆனது என்று நாங்களே எங்களளவில் தீர்மானித்து.. மூட நம்பிக்கை என்று தூக்கி எறிஞ்சிடுவம்..! போதாக்குறைக்கு அந்த மத அனுட்டானங்களை வைச்சு மதத்தையும் பழிப்பம்..! அதை செய்யுறவையை புரட்சியாளர்கள் என்று போற்றி.. பொன்னாடை போர்ப்பம். இதை விட நாங்க எமது சமூகத்துக்கு உருப்படியா செய்தது என்னத்தை..??! :icon_idea:

முன்னொரு விவாதத்தில் எமது மத அனுட்டானங்களின் பின்னால் விசேட அம்சங்கள் பொதிந்திருக்கின்றன என்ற கருத்தை முன் வைத்த போது.. அதை விதண்டாவாதமாக்கிக் கொண்டு.. சிலர் மத எதிர்ப்புக் கருத்துக்களை அதில் தூவிவிட்டுச் சென்றனர். இதில் படித்த பட்டம் பெற்ற மேதைகளும் அடங்கும். இவர்கள் என்ன படிப்பை படிச்சு என்ன பட்டத்தை பெறுகிறார்களோ எனக்குப் புரியல்ல..! எம்மிடம் எம்முன்னோர் கற்றுத்தந்த பல பழக்க வழக்கங்கள் மூடநம்பிக்கையின் பெயரால் அருகிவிட்டன. ஆனால் நிச்சயம் அவற்றை அறிவியல் ரீதியாக அணுகி அவற்றை எமது சமூகத்துக்கு மீள இனங்காட்ட வேண்டிய கடப்பாட்டை இது எடுத்துக்காட்டி நிற்கிறது.

எதிர்கொண்டவற்றை எல்லாம் எதிர்ப்பவன் புரட்சியாளன் கிடையாது. ஒன்றை சரியான காரண காரியங்களோடு ஆய்வுக்குள்ளாக்கிய தரவுகளோடு எதிர்ப்பவனே சரியான மாற்றத்துக்கு வழிகோலக் கூடியவன்.

காணொளி இணைப்புக்கு நன்றி குளக்காட்டான்.

Link to comment
Share on other sites

ஏன் நெடுக்ஸ் எப்ப பார்த்தாலும் மதம் மதம் என்று அலம்பிக்கொண்டு... குளக்காட்டான் இதில மதம் பற்றி ஏதாவது எழுதினவரோ இல்லையே? பிறகு ஏன்? :lol:

ஓஓ இப்படி எழுதினா யாராவது வம்புக்கு வருவினம் பிறகு ஒரு 15 பக்கத்துக்கு இங்க சண்டைபிடிக்கலாம் என்றா? :lol: சம்பந்தப்பட்டவையோட ஏதாவது மனஸ்தாபம் என்றா புதுசா ஒரு தலைப்பை திறந்து சண்டை பிடிக்கலாமே? :icon_idea: அதை விட்டுட்டு கனகாலத்துக்கு பிறகு வந்த குளக்காட்டானை ஏன் ஓட வைக்க ஆயத்தமாகிறீங்கள்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நெடுக்ஸ் எப்ப பார்த்தாலும் மதம் மதம் என்று அலம்பிக்கொண்டு... குளக்காட்டான் இதில மதம் பற்றி ஏதாவது எழுதினவரோ இல்லையே? பிறகு ஏன்? :lol:

ஓஓ இப்படி எழுதினா யாராவது வம்புக்கு வருவினம் பிறகு ஒரு 15 பக்கத்துக்கு இங்க சண்டைபிடிக்கலாம் என்றா? :lol: சம்பந்தப்பட்டவையோட ஏதாவது மனஸ்தாபம் என்றா புதுசா ஒரு தலைப்பை திறந்து சண்டை பிடிக்கலாமே? :icon_idea: அதை விட்டுட்டு கனகாலத்துக்கு பிறகு வந்த குளக்காட்டானை ஏன் ஓட வைக்க ஆயத்தமாகிறீங்கள்.. :lol:

தோப்புக்கரணத்துக்கும் விநாயக வழிபாட்டுக்கும் தொடர்பு இருக்குத்தானே..!

நீங்கள் எனது கருத்தை மேலோட்டமாகப் பார்க்கிறீங்க. அது தவறு. இதில் யாரையும் குறிப்பிட்டு சாட வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். முன்னர் பல விவாதங்களில் எமது மூதாதையர் கற்றுத்தந்த பழக்க வழக்கங்கள்.. இலக்கிய குறிப்புக்கள்.. அவை இனங்காட்டும் வரலாற்று அம்சங்கள் அறிவியல் ரீதியாக அணுகப்பட வேண்டும் என்ற கருத்தை பல தடவைகள் முன்வைத்த போது அதை எள்ளி நகையாடியோரும் இங்குளர். அவர்கள் தமது எண்ணங்களை விரிவுபடுத்த வேண்டும் என்ற இங்கு அதை எழுதக் காரணம்..!

குளக்காட்டானை சொல்லேல்ல. அவர் மதங்களை சகட்டு மேனிக்கு எதிர்ப்பவராக இனங்காணப்பட்டவரும் அல்ல.

தோப்புக்கரணம் என்பது வழி வழியாக விநாயக வழிபாட்டுடன் கடத்தப்பட்டு வந்தது. அதற்கு அவர்கள் வேறு காரணங்களைக் கூறிக் கொண்ட போதிலும் உண்மையான அதன் நோக்கம் உடற்பயிற்சியே... என்பது இப்போது அறிவியல் ரீதியாகவும் உணரப்படுகிறது..!

நாம் இதை ஏலவே கற்று இருக்கிறோம். ஆனால் அங்கீகரித்திருக்கிறோமா..??! அல்லது இன்னும் தெளிவாக ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா.. இல்லை..!

மதத்தை நிந்திப்பதற்கு செலவு செய்த நேரத்தில் எத்தனை சதவீதத்தை அது கொண்டுள்ள காரியங்களுள் அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கு செலவிட்டிருக்கிறோம். என்பதுதான் எனது ஆதங்கம்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கோயிலை மட்டும் தான் தோப்பு கரணம் போடுறனான். <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிகி... நல்ல ஒரு யோகா. நல்லகாலம் இதைக் கண்டுபிடிச்சது ஒர் வெள்ளைக்காரன் எண்டு சொல்ல இல்லை. எதையும் வெள்ளைக்காரன் சூப்பர் எண்டு சொன்னாப்பிறகுதான் அதன் மகிமை விளங்கிது.

ஊரில வாத்திமார் தண்டனைக்காக மாணவர்களிற்கு வக்கிர மனத்துடன் கொடுக்கும் பயிற்சியை வெள்ளைக்காரன் சூப்பர் யோகா எண்டுற பெயரில பணம் சம்பாதிக்க பயன்படுத்துறான். வெள்ளைக்காரன் எங்களைவிட வேகமாய் முன்னுக்குபோக இதுவும் ஒரு காரணம்.

நான் சில வருடங்களுக்கு முன்னம் ஓர் பாடல் பயிற்சி பட்டறைக்கு போய் இருந்தன். அதில விரிவுரை செய்த ஆங்கிலப் பாடகர் தாங்கள் தற்போது தென்னாசியாவில இருந்து இறக்குமதி செய்த பாடல் பாடும்போது கவனிக்க வேண்டிய மிகவும் ஒரு நவீன நுட்பமாம் எண்டு ஊர் - இந்தியப் பகுதிகளில பாடுற ஒரு பாணியை - அசைவை - பாவத்தை சொல்லித் தந்தார். சிரிப்பாய் இருந்திச்சிது.

ஊரில எண்டால் வெறும் பரமேளம்.. வெளிநாட்டில எண்டால் அது அருமையான ஒரு இசைக்கருவி. இதுதான் உலகம்.. எங்கட பலம், எங்கட மகத்துவம் எங்களுக்கு தெரியாமல் இருப்பது மிகவும் துர்ப்பாக்கியமே!

உண்மைதான் மாப்பு!

எங்கடை சைவசமய பழக்கவழக்கங்களெல்லாம் இயற்கையோடை அண்டினதுமட்டுமில்லை தேகாரோக்கியத்துக்கும் உன்னதமானது.இதை இனி ஒவ்வொண்டாய் புட்டுப்புட்டு வைக்கேலாது.ஏனெண்டால் எங்கடையள் இப்ப அவசர உலகத்திலை வாழுதுகள்.வெள்ளைக்காரன் சொன்னால்த்தான் கேக்குதுகள்.

மாடுசொன்னால் கேக்காது மணிகட்டினமாடு சொன்னால்த்தான் எங்கடை சனம் கேட்கும்.

போனகிழமை என்னோடை வேலை செய்யிற வெள்ளை ஒண்டு மஞ்சளைப்பற்றி எனக்கு விளக்கம் சொல்லுது............... என்ன கொடுமையடா முருகா? <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கோயிலை மட்டும் தான் தோப்பு கரணம் போடுறனான். <_<

என்னைப்போன்ற ஆண்சிங்கங்களை பார்த்து நக்கல் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன் நெற்றியில் குட்ட உள்ளே அமிர்தம் இளகும் பின் காதின் சோணையை நுள்ளிப் பிடிக்க மூளை சிலிர்த்து இயங்கும். அத்துடன் முழங்கால்வரை மடித்து நன்றாக குந்தி யெழும்ப உடம்பின் அத்தனை நரம்புகளும் தொழிற் படும்! இப்படி தினமும் காலை. மாலை மும்முறை செய்யின் உடற் சுறுசுறுப்புக்கும் உணவு செரிமானத்துக்கும் மிக மிக நல்லது!!!

இணைப்புக்கு நன்றி குளக்காட்டான்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா சொல்லி தொப்புக்கரனம் போட்டால் .......கடவுளை கும்பிட்ட மாதிரியும் இருக்கும் .....உடம்புக்கும் நல்லம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.