Jump to content

மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச் சந்திக்கும் துயரோடு


Recommended Posts

மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச் சந்திக்கும் துயரோடு

aruna270209.jpg

ஆளரவமற்ற வனாந்தரத்துப்

பெருமுகத்தில் அலைகிறது ஆன்மா.

மீள் பொழுதின் வரவில் - உன்

நினைவுகளைத் தெளித்துவிட்டுக்

கனவாகிப் போனாய்....

நீயெழுதிய கடிதங்கள்

மஞ்சள் கடதாசிப்பூக்கள்

மறக்காமல் அனுப்பும்

பிறந்தநாள் புத்தாண்டு

வாழ்த்து மடல்கள் - உன்

நினைவாய்க் கிடைத்தவைகள்

எல்லாம் கண் முன்னால்

உன்னை நினைவுபடுத்திபடி....

'போய் வருகிறோம்'

போர் நிறுத்த காலத்துச்

சந்திப்பு முடிந்து பிரியும் நேரம்

'சந்திப்போம்' என்றாய்

இன்று வந்த செய்தியுன்னை

இழந்தோமென்கிறது.

மாமாவின் மரணம் கேட்ட

உன் மருமக்கள் சொல்கிறார்கள்.

'கடிதம் மாமா'

இனியெங்களுக்கு இல்லை...

இதயம் நொருங்கிச் சிதிலமாகிறது.

அவர்கள் பகிரும்

உனது ஞாபகங்களில்....

மாமா தந்த சிலுவைப் பென்ரன்

மாமா தந்த ஐஸ் கிறீம்

மாமாவுடனான

மோட்டசயிக்கிள் பயணம்

மாமாவின் மடியில் விளையாடிய

நினைவென்று நீட்டுகிறார்கள்

நினைவுகளை.....

மாமா இல்லையினி

மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச்

சந்திக்கும் துயரோடு அவர்கள்....

எங்கடை மாமாக்களும் அன்ரியவையும்

ஏனம்மா சாகினம் ?

திருப்பிச் சுடலாம் தானே ஆமிக்காறனை...?

கேட்கிறான் உங்கள் பார்த்திக்குட்டி

சொல்ல வார்த்தையில்லை.

சொல்லியழ முடியவில்லை.

இன்னும் யாரை எவரையெல்லாம்

இழக்கப்போகிறோம்.....?

வரும் நாட்கள் இனியெந்தத்

தோழனைத் தோழியை

அண்ணனைத் தம்பியை

அக்காவையென எங்கள் வீரங்களைத்

தன்னோடு கூட்டிப் போகப்போகிறது...?

29.02.09

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தமிழர் .நினைவுகள் .......தாயகம் நோக்கியிருக்க .மாவீரரை நினைக்கும்

கவிதை பொருத்தமானதே .....பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
arunnan900.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே அவர் உங்கள் மாமாவா சாந்தி? துயரம் தந்த கவிதை.

Link to comment
Share on other sites

உண்மையாகவே அவர் உங்கள் மாமாவா சாந்தி? துயரம் தந்த கவிதை.

றதி கவிதையை மேலோட்டமாக வாசித்துள்ளீர்கள் போலுள்ளது. மாமாவின் மருமக்களின் எண்ணமும் ஓர் தோழமையின் பகிர்வாகவும் பதிவாகியுள்ளது கவிதை.

மாமாவின் மரணம் கேட்ட

உன் மருமக்கள் சொல்கிறார்கள்.

'கடிதம் மாமா'

இனியெங்களுக்கு இல்லை...

இதயம் நொருங்கிச் சிதிலமாகிறது.

அவர்கள் பகிரும்

உனது ஞாபகங்களில்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதையில் உங்கள் வலி சொன்ன உங்களுக்கு எனது அனுதாபங்களும், நாட்டுக்காக உயிர் நீத்த உங்கள் மாமாவுக்கு எனது வீரவணக்கங்களும்.

எத்தனை உறவுகள், எவ்வளவு ஞாபகங்கள், இங்கே இப்படியொரு வாழ்வு...? எவ்வளவு இழந்து விட்டோம்.. எங்கள் இரத்தங்களின் மரணத்திலும் பங்குகொள்ள முடியாத சோகம்....

ஆமாம்....! எங்கள் விடுதலை கிடைத்து விடியலின் ஒளி எங்கள் மண்ணில் பரவிக்கிடந்தாலும் எங்கள் எல்லோரினதும் மனங்கள் மட்டும் என்றும் இருளிலே மூடிக்கிடக்கும்...

இளங்கவி

Link to comment
Share on other sites

  • 2 years later...

லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் 27.02.2012.

traurige-Blume-a25965971.jpg

Link to comment
Share on other sites

மறக்க முடியாத நினைவுகளில் தத்தளிக்கும் மனங்களிற்கு அனுதாபத்தை மட்டுமே உரைக்கமுடியும் , ஆனால் ஆறுதல் கூறிடினும் மனமது துயர் கடந்து செல்லப்போவதில்லை...

சோதரனாய், மாமனாய் உறவினைத் தந்து, இன்று நினைவுகளை மட்டும் உங்களில் நிறுத்திவிட்டு சென்ற துயரம் நீளும். .... ஆயினும் அமைதி கொள்ளுங்கள் சாந்தி... தமிழனாய்ப் பிறந்தாலே இழப்புக்கள் என்றாகி விட்டது. ..

மண்ணுக்காக , மக்களுக்காக உயிர் நீத்த இம் மாவீரனுக்கு எனது வீரவணக்கங்கள்...!!!!!

Link to comment
Share on other sites

  • 1 year later...
அருணாண்ணாவின் 5ம் ஆண்டு நினைவுநாளின்று.
ஆண்டுகள் ஐந்து அகன்றோடிவிட்டது. ஆயினும் நினைவுகளில் துயர் சொரியும் ஞாபகங்கள்.
 
5ம் ஆண்டு வணங்கங்கள் அருணாண்ணா.
Lep.Kenal-Arunan-600x337.jpg

வருடம் தவறாது வந்த வாழ்த்து மடல்களிலும் கடிதங்களிலும் மட்டுமே உங்கள் நினைவுகள் மிஞ்சிக்கிடக்கிறது. அண்ணனாய் ,தோழனாய் , ஆசானாய், மாமனாய் , கடிதம்மாமாவாய் எம்மோடு வாழ்ந்த வீரனே ! இன்றுங்கள் நினைவுநாள் இதயம் முட்டிய துயரோடு உங்களை நினைவு கூருகிறோம்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.