Jump to content

பிணந்திண்ணும் சாமியார்கள்


Recommended Posts

உடலமைப்பியல் (அனட்டமி) உடற்றொழிலியல் (பிசியோலஜி) ரீதியாக நோக்கும்போது பிணத்தோடு புணர்வது எந்தளவுக்குச் சாத்தியம் என்று புரியவில்லை.

[b]மேலும் அவ்வாறு அவர்கள் பெண்களை இழிவு செய்வதைப் பொறுத்துக்கொண்டு இறந்தவர்களின் உறவினர்கள் சும்மா இருப்பார்களா?

இந்திய நடுவண் அரசுக்கு இந்த விடயங்களைப் பற்றித் தெரியாதா? ஏன் இத்தகைய அருவருக்கத்தக்க செயல்கள்இ பலரும் வந்துபோகும் காசியில் இடம்பெற அரசு அனுமதிக்கின்றது?

இப்படிப் பலகேள்விகள் எழுகின்றன.

மதம் என்னும் மோகத்திற்கு அடிமையாகிய சிலருக்கு இவைகள் எல்லாம் பெரிய விடையங்கள் அல்ல....

ஊரில் மழை இல்லை என்றால்....கன்னி கழியா பெண் ஒருவர் உடப்பில் ஒட்டுத்துணிம் இல்லாமல் ஊரை சுத்வரவேண்டும் என்றெல்லாம் சினிமாவில் பார்த்து இல்லையா?

இவை எல்லாம் நிஐத்திலும் நடந்தேறியிருக்கின்றது....

Link to comment
Share on other sites

சிறுவர்களை பாலியில் இச்சைக்கு பயன்படுத்துவதையும் மருத்துவ உலகம் ஒரு மனநோய் என்றுதான் குறிப்பிடுகின்றது.

பிணத்தை உண்பதும், அதனுடன் புணர்வதும் "இறந்தவரின் அமைதியை குலைத்தல்" அல்லது "ஆன்மாவை அவமதித்தல்" என்கின்ற அடிப்படையில் தண்டனைக்கு உரிய குற்றங்களாக பல நாடுகளின் சட்டங்களால் பார்க்கப்படுகின்றது.

ஆனால் என்னுடைய பார்வையிலும் இவர்களை தண்டிக்கத் தேவையில்லை. தேவையான சிகிச்சை கொடுத்து குணப்படுத்த முயலலாம். ஆனால் சிலர் இவர்களை சாமியார்கள் என்று சொல்வதைத்தான் சகிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

நான் கடவுள் படம் பார்தேன் இப்படிப்பட்ட சாமியார் கோஷ்டி சிறீலங்காவிலும் உண்டாம். (அந்தப்பரம்பரையில் வந்ததுதான் ராஜபக்ஸ குடும்பமோ?) :D

Link to comment
Share on other sites

ஒரு சக மனிதனைக் “கும்பிடல்” என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனினும் இதுபற்றி நான் எவருடனும் விவாதிக்க விரும்பவில்லை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு.

ஆனால் இத்திரியில் நான் பதிய விரும்புவது ஒரு சமூகவியல் சார்ந்த அவதானிப்பு.

இறந்த பிணத்தை நெருப்பில் எரித்தல், அரைகுறை எரிந்த நிலையில் பிணத்தை ஆற்றில் வீசல், அரைகுறை எரிந்த உடம்பை மீனோ முதலையோ வேறேதும் விலங்கோ உண்ணவேண்டும் என விரும்பல் முதலிய சடங்குகள் தொடர்பில் எவரிற்கும் இங்கு முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் மீனோடும் முதலையோடும் போட்டியிட்டு மனித விலங்கு பிணத்தை உண்கின்றது என்றறிந்ததும் மேடைகளும் ஒலிவாங்கிகளும் எங்கிருந்தோ வந்துவிடுகின்றன.

எரிந்த பிணத்தை ஆற்றில் எறிகையில், அதை எந்த விலங்கினங்கள் எங்கெங்கு கடித்து உண்ணும் என்பதில் எல்லாம் எவரிற்கும் எந்த மனவுழைச்சல்களும் இருப்பதாகத் தெரியவில்லை. பிணத்தின் பாகங்கள் அனைத்தும் விலங்குகளால் உண்படும் என்பது உறுதிப்படுத்தப்பட முடியாதது. சில பாகங்களில் சில விலங்குகள் முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சும் பொரிக்கலாம். இதுபற்றி எல்லாம் எவரிற்கும் முரண்பாடுகள் இருப்பதாய்த் தெரியவில்லை. ஆனால், பிணத்தை மனித விலங்கு எடுத்துப் புணர்கிறது என்றறிந்ததும் மேடைகளும் ஒலிவாங்கிகளும் எங்கிருந்தோ முளைத்து விடுகின்றன.

நிழலியிடம் ஒரு கேள்வி. எது தண்டனைக்குரிய குற்றம், எக்குற்றம் தண்டனைக்குரியது என எவர்வகுப்பது என்பன முதலிய உங்களது கேள்விகளைக் கேட்பதற்குரிய தெளிவினை உடைய உங்களால் எங்கனம் “இறந்த மனித உடலைப் புசிப்பவர்கள் மனநோயாளிகள் என்பதில் வேறு கருத்து இல்லை என்று” திட்டவட்டமாகக் கூறமுடிகிறது? தண்டனை என்ற விடயத்தில் தெளிவாகச் சிந்திக்கும் நீங்கள் “மனநோய்” என்ற விடயத்தில் அத்தெளிவைத் தொலைத்து விடுவது போல் எனக்குப் படுகறது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.