Jump to content

இதைச் செய்வது கஸ்டமா?


Recommended Posts

இதைச் செய்வது கஸ்டமா?

கனடாவிலுள்ள பிரபலமான பிற்சா உணவகத்தில் நேற்று நடந்த உரையாடல்

பிற்சா வாங்க வந்தவர் : நான் வழமையா உங்கடை கடையிலை தான் பிற்சா வாங்கிறனான். ஆனால் இனிமேல் உங்கடை கடைக்கு வர மாட்டன்

உரிமையாளர் : ஏன் தம்பி என்ன விசயம்

பி. வா. வந்தவர் : இல்லை எல்லா இடமும் கத்துகினம். சிங்களப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லி. ஆனால் நீங்கள் என்ன எண்டால் ஓறெஞ்ச் பார்லியையும் நெக்டோவையும் விக்க வைச்சிருக்கிறியள்.

உரிமையாளர் : உண்மையிலை அண்ணை. அதை நாங்கள் இப்ப விக்கிறதில்லை. அவங்கள் தந்த கூலர் எண்ட படியால் டிஸ்பிளேக்கு மட்டும் தான் இருக்குது.

பி.வா.வந்தவர் : நீங்கள் சடையிறியள்.

உரிமையாளர் : சரி அண்ணை நாளைக்கு வந்து பாருங்கோ. இந்தச் சோடா இருக்காது. சரியா?

(சிங்களப் பொருட்கள் விற்கப்படும் கடைகளில இதைப் போல வலியுறுத்துவதற்கு ஒரு இரண்டு நிமிடங்களைச் செலவளிக்க விடாமல் தடுப்பது எது???????)

Link to comment
Share on other sites

இதே போன்றே நானும் ஒரு உரையாடலை மேற்கொண்டேன். இந்த மாததுடன் இனி எந்த இலங்கைப் பொருட்களையும் விற்பதில்லை என்று உறுதிபட சொன்னார். அவரின் கடை முன்னும் சிறீ லங்கா பொருட்களை புறக்கணிக்குமாறு பிரசுரங்களும் விளம்பரமும் வைக்கப் பட்டிருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்றே நானும் ஒரு உரையாடலை மேற்கொண்டேன். இந்த மாததுடன் இனி எந்த இலங்கைப் பொருட்களையும் விற்பதில்லை என்று உறுதிபட சொன்னார். அவரின் கடை முன்னும் சிறீ லங்கா பொருட்களை புறக்கணிக்குமாறு பிரசுரங்களும் விளம்பரமும் வைக்கப் பட்டிருந்தது

நல்ல விடயம் நிழலி. அப்படியான கடைகளை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி அக்கடைக்கு வர்த்தக ரீதியாக உதவினால் (ஆதரித்தால்), அதைப் பார்த்து மேலும் பல கடைகள் இதைப் பின்பற்றும்.

நான் பொதுவாகவே தமிழ் கடைகளில் பொருள் வாங்குவது குறைவு (உங்கு வரும் போது அதிகமாக மீன் வகைகள் வாங்குவதுண்டு, அதையும் எனிவரும் காலங்களில் சால்மென் போன்ற மீன்களை கனேடிய கடைகளில் வாங்குவதாக நினைத்திருக்கிறேன்). மிளகாய்த்தூளுக்கு தான் வளியில்லை. நிரு பிரான்ட் தான் வேணும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்ச்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்!

உங்களை போல தான் நானும் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டு வந்தேன். அந்த கடையின் உரிமையாளர் சொல்லுவதில் நியாயத்தன்மை இருக்கின்றது.! ஏன் என்றால் உந்த மொத்த விற்பனை முகவர்கள் தமிழ் தேசியத்தின் தூண்கள் அவர்களை நாம் அணுகி ஆதரவு கேட்டுப்பார்க்கலாம். அதை தான் அந்த கடைக்காரர் சொன்னார்.

ஒரு சின்ன விடயம் சிறிலங்கா பொருட்களைப் புறக்கணி என்று கூறும் நாம் இந்த யுத்தத்தை தலைமையேற்று நடாத்தும் இந்திய பொருட்களை இறக்குமதி செய்வது எந்த விதத்தில் நியாயம்.

ம் புரிகிறது ஒழுங்காக சிறிலங்கா பொருட்களையே புறக்கணிக்க காணம் அதற்க்குள் இந்தியாவா என்று....நீங்கள் திட்டுவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனையாக உள்ளது .

நாம் வழமையாக பொருட்கள் வாங்கும் கடையில் இப்படி கேட்பதால் , நஷ்டம் ஏற்படப் போவதில்லை .

மாறாக கடைக்காரரை சிந்திக்க வைக்கும் .

Link to comment
Share on other sites

சமீபத்தில் நானும் தழிழ் பத்திரிகை வாங்கப்போனேன், இன்னும் லெமென் பவ் பிஸ்கற் விற்பனைக்கு வைச்சு இருக்கினம். அதைப்பாத்து மனம் நெந்துபோனேன். அதைவிட அதிச்சி சமீபத்தில் வெளியான தமிழ் பத்திரிக்கையில் ஒரு பக்கம்முழுதும் "பாரம்பரிய சிங்கள உணவு வகைகள்" விளம்பரம் என்று தமிழில் போடப்பட்டிருந்ததைப் பாத்து அதிர்ந்து போனேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரவேற்கப்பட விடையம் ஆனால் மொத்த இறக்குமதியாளர்கள் அப்படி செய்வதாக தெரியவில்லையே. எல்லா தமிழ் கடையிலும் இலங்கை சாமான்

இருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரவேற்கப்பட விடையம் ஆனால் மொத்த இறக்குமதியாளர்கள் அப்படி செய்வதாக தெரியவில்லையே. எல்லா தமிழ் கடையிலும் இலங்கை சாமான்

இருக்கே?

நண்பர்களே இலங்கையிலிருந்த வருவதைவிட தமிழகத்திலிருந்து வருவது எவ்வளவோ மேல். இதன் மூலம் முகாம்களில் இருக்கும் ஈழஅகதிகளுக்கு தொழில் வாய்பையும் ஏற்படுத்தலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்டமே; கேட்டமே,,

வாங்கிறதுதான் பிழை விக்கிறது பிழை இல்லை எண்டு சொன்னாங்க...*நல்லது நடத்துங்கோ எண்டு சொன்னம்:(

Link to comment
Share on other sites

இப்படிச் சொல்லுற சில மூதேசிகள் இருக்குது தான் தமிழ் தங்கச்சி......

முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா என்பது போல விதண்டாவாதம் பேசுவது தான் இது. மொத்த விற்பனையாளர் இறக்குமதி செ;யவதால் நாங்கள் விக்கிறம் எண்டு கடைக்காறர் சொல்ல கடைக்காறர் விக்கிறதாலை தான் நாங்கள் வாங்கிறம் எண்டு தின்னிற பசாசுகள் சொல்ல எண்டு கதை போகுது.

நாங்கள் என்ன சொல்லிறம் எண்டால் உனக்கு தமிழ் ரத்தம் ஓடுதா நீ இறக்குமதி செய்யாதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ விக்காதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ தின்னாதை. அதை விட்டுப் போட்டு அடுத்தவனைக் கைகாட்டிப் போட்டு நீ நல்லவனா நடிக்காதை.

அந்தச் சனியன்களை நாங்கள் கைகழுவி விடுவம். ஆனால் இப்படி வாடிக்கையாளர்கள் கதைச்சதாலை இந்தச் சாமான்கள் விக்கிறதைக் கன பேர் நிப்பாட்டி இருக்கினம். எங்கடை வீட்டுக்குக் கிட்ட இரு;நத 3.4 கடைகளிலை இப்ப சிங்களப் பொருட்கள் ஒண்டும் இல்லை. நாங்கள் கடைகளிலை சொல்லுவம். மனச்சாட்சி உள்ளவை கேப்பினம். மரமண்டைகள் நாசமாப் போகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிச் சொல்லுற சில மூதேசிகள் இருக்குது தான் தமிழ் தங்கச்சி......

முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா என்பது போல விதண்டாவாதம் பேசுவது தான் இது. மொத்த விற்பனையாளர் இறக்குமதி செ;யவதால் நாங்கள் விக்கிறம் எண்டு கடைக்காறர் சொல்ல கடைக்காறர் விக்கிறதாலை தான் நாங்கள் வாங்கிறம் எண்டு தின்னிற பசாசுகள் சொல்ல எண்டு கதை போகுது.

நாங்கள் என்ன சொல்லிறம் எண்டால் உனக்கு தமிழ் ரத்தம் ஓடுதா நீ இறக்குமதி செய்யாதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ விக்காதை, உனக்குத் தமிழ் ரத்தம் ஓடுதா நீ தின்னாதை. அதை விட்டுப் போட்டு அடுத்தவனைக் கைகாட்டிப் போட்டு நீ நல்லவனா நடிக்காதை.

அந்தச் சனியன்களை நாங்கள் கைகழுவி விடுவம். ஆனால் இப்படி வாடிக்கையாளர்கள் கதைச்சதாலை இந்தச் சாமான்கள் விக்கிறதைக் கன பேர் நிப்பாட்டி இருக்கினம். எங்கடை வீட்டுக்குக் கிட்ட இரு;நத 3.4 கடைகளிலை இப்ப சிங்களப் பொருட்கள் ஒண்டும் இல்லை. நாங்கள் கடைகளிலை சொல்லுவம். மனச்சாட்சி உள்ளவை கேப்பினம். மரமண்டைகள் நாசமாப் போகட்டும்

இது ரொம்ப நல்லா இருக்கே.... உங்களுக்கும் சில தேசவிரோதிகளின் இணையங்களில் கதைப்பவர்களுக்கும் வித்தியாசம் என்ன இருக்கு?

இப்படியும் சிலர் பிழைத்தால் தான் பலருக்கு நிதி கொடுக்க முடியும். இன்று உலகத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால்

பலர் வேலை இன்றி இருக்கிறார்கள் இவர்களும் கடைகளை மூடிவிட்டால் நீங்கள் வேலை கொடுக்க தயாரா?

Link to comment
Share on other sites

ஓம் தம்பி பிழைக்கிறதுக்காக என்ன வேணுமெண்டாலும் செயயலாமோ? அப்படியெண்டால் உந்த எம்பசிக்காறர் கூலிக்கு ஆள் பிடிக்கினமாம். உளவு பாக்க. அதையும் செய்யலாமோ?

Link to comment
Share on other sites

ஓம் தம்பி பிழைக்கிறதுக்காக என்ன வேணுமெண்டாலும் செயயலாமோ? அப்படியெண்டால் உந்த எம்பசிக்காறர் கூலிக்கு ஆள் பிடிக்கினமாம். உளவு பாக்க. அதையும் செய்யலாமோ?

காவியா அக்கா ஆரிடம் கேட்டால் அவையளிடம் வேலைக்கு போகலாம்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? நாய் விற்ற காசு குரைக்கவா போகுது:? :(:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் தம்பி பிழைக்கிறதுக்காக என்ன வேணுமெண்டாலும் செயயலாமோ? அப்படியெண்டால் உந்த எம்பசிக்காறர் கூலிக்கு ஆள் பிடிக்கினமாம். உளவு பாக்க. அதையும் செய்யலாமோ?

பிழைக்கிறதுக்காக என்ன வேணும் என்றாலும் செய்யலாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி செய்ய வேணும் என்றால் இவ்வளவு பேரும் புலம்

பெயர்ந்து அகதியாக வாழவேண்டிய கட்டாயம் இல்லை அதுக்கு ஊரிலேயே நீங்கள் சொல்வது போல உடம்பை வித்தோ அல்லது உளவு பார்த்தோ இருக்கலாம்

இத்தனை லட்சம் மக்கள் கஸ்டப்படத்தேவையில்லை.

ஒரு கை தட்டி ஒரு போதும் சத்தம் வராது அதைத்தான் சொன்னேன்.

உண்மையில் எத்தனை பேர் நீங்கள் மனச்சாட்சிக்கு ஏற்ப நடக்கிறார்கள். கதைக்கவேணும் (அல்லது யாழின் பக்கங்களை நிரப்பவேணும்) என்பதற்காக சொல்கிறார்கள்.

யதார்த்தபூர்வமாக சிந்திப்பதே நலம்

Link to comment
Share on other sites

பிழைக்கிறதுக்காக என்ன வேணும் என்றாலும் செய்யலாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி செய்ய வேணும் என்றால் இவ்வளவு பேரும் புலம்

பெயர்ந்து அகதியாக வாழவேண்டிய கட்டாயம் இல்லை அதுக்கு ஊரிலேயே நீங்கள் சொல்வது போல உடம்பை வித்தோ அல்லது உளவு பார்த்தோ இருக்கலாம்

இத்தனை லட்சம் மக்கள் கஸ்டப்படத்தேவையில்லை.

பாலியல் தொழிலாளர்களின் தொழிலான உடலை விற்பனைக்குட்படுத்துதலை, தன் சொந்த இனத்திற்கு எதிராக உளவு பார்க்கும் தொழிலுடன் ஒப்பிட்டு பாலியல் தொழிலாளர்களை கேவலமாக குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்

Link to comment
Share on other sites

பிரசாந்த அவர்களே!

கை தட்டிச் சத்தம் வராது என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கையைத் தட்டிப் பாருங்கள் சத்தம் கேட்கும். கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்கு உதாரணமாகத் தான் பிற்சாக் கடைச் சம்பவத்தை நான் கூறினேன். நிழலி ஒரு உதாரணத்தைக் கூறினார். இந்த முறை வெளிவந்திருக்கும் வாந ளுசடையமெய சநிழசவநச பத்திரிகையைப் பாருங்கள். தமிழ் விளம்பரங்களில் எவ்வளவு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறதென்று.

முயற்சித்தால் முடியும். காரணம் நாங்கள் அநியாயமான எதையுமு; கேட்கவில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரசாந்த அவர்களே!

கை தட்டிச் சத்தம் வராது என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கையைத் தட்டிப் பாருங்கள் சத்தம் கேட்கும்.

முதல்ல ஒழுங்கா வாசித்து பாருங்க அப்புறம் விடயத்துக்கு வாங்க.......

நான் சொன்னது ஒரு கை தட்டி சத்தம் வராது என்று தான்.

கை தட்டினால் சத்தம் வரும் என்று பாடம் நடத்தாதையுங்கோ அது எல்லோருக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலியல் தொழிலாளர்களின் தொழிலான உடலை விற்பனைக்குட்படுத்துதலை, தன் சொந்த இனத்திற்கு எதிராக உளவு பார்க்கும் தொழிலுடன் ஒப்பிட்டு பாலியல் தொழிலாளர்களை கேவலமாக குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்

நான் இரண்டு தொழில்களையும் தனித்தனிய சொன்னேன்.

Link to comment
Share on other sites

எங்களுக்குள் வேண்டா விவாதம் வேண்டாம், முரண்டுபிடிக்கவும் வேண்டாம்.

நாமே உணர்ந்து பொருட்களை வாங்காமல் விடுவோம், வியாபாரிகளுக்கும் பக்குவமாக தெளிவு படுத்துவோம்.

அதையும் மீறி விற்கத்தான்வேனும் என்பவர்களையும், வாங்கத்தான் வேண்டும் என்று முரண்டு பிடிப்பவர்களையும் யாரால் என்ன செய்யமுடீயும்?

Link to comment
Share on other sites

ஆலமரம்.. தண்ணிச்சொம்பு.. திண்ணை..

ரவுடி ரங்கன், கோயில் பூசாரி முதல் ஆசாரி வரை எல்லோரும் ஆஜர். சிறிது நேரத்தில் ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் வந்து திண்ணையில் அமர்கிறார். :D

பஞ்சாயத்து தலைவர்: என்னையா இன்னிக்கு பிராது? :(

பூசாரி: ஐயா.. இங்க திருதிருன்னு முழிச்சிண்டு நிக்கிறானே ரவுடி ரங்கன்...! பக்கத்து ஊரில சாராயம் வாங்கிண்டு வந்து நம்ம ஊரில வித்திண்டிருக்கன்...! அதைக் குடிச்சிட்டு நம்ம குடிகாரப் பசங்க போடுற ஆட்டம் தாங்க முடியல சாமி..! :(

ஆசாரி: அதுமட்டும் இல்லீங்கையா..! ஸ்கூல் போற பசங்களுக்கு வேற ஊத்திக் குடுக்கிறான்யா..! :(

தலைவர்: ஏண்டா ரங்கா..! உனக்கு முன்னமே எச்சரிக்கை குடுத்திருக்கம்ல..! ஊர்க்கட்டுப்பாட்டை மீறி ஏண்டா சாராயம் வித்தே..! :lol:

ரங்கன்: அல்லாரும் குடிக்கிறாய்ங்க..! அதான் விக்கிறம்..! :D

தலைவர்: அடிங்.. அல்லாரும் குடிச்சா.. நீ வித்திடுவீயா? :D

ரங்கன்: குடிக்கிறதை உட சொல்லுங்க.. நான் விக்கிறத உட்டுடுறேன்..! :D

பூசாரி: ஏண்டா..ஊர்க்காரப் பசங்களே குடிய நிறுத்த முடியாம கஷ்டப்பட்டிண்டு இருக்கா..! அவா எப்பிடி நிறுத்துவா? :(

(தொடரும்) :D

Link to comment
Share on other sites

ரங்கன்: அதை அவா கிட்டதான் கேக்கணும்..!! :D

தலைவர்: டேய்.. என்ன கொழுப்பா..! நீ விக்கலன்னா ஊர்க்காரப் பசங்களுக்கு எங்க இருந்துடா சாராயம் வரும்? :D

ரங்கன்: இந்த ரங்கன் இல்லென்னா இன்னொரு பக்கிரி.. :lol:

தலைவர் (மெதுவாக): ஏன்யா பூசாரி... இவன் சொல்லுறதில கூட ஒரு பாய்ண்ட் இருக்கு போல தெரியுதே..! :(

பூசாரி: ஐயா.. அவன் சொல்லுறதும் கரெக்டுதான்..! ஆனா அதுக்காக இப்பிடியே இவனை விட்டுட முடியுமா? நம்ம என்ன, ஊரில ஒவ்வொருத்தனா புடிச்சு குடிக்காதடான்னு சொல்லவா முடியும்? வேணும்னா குடி குடியைக் கெடுக்கும்னு விளம்பரம் பண்ணலாம்..! :(

தலைவர்: ம்ம்ம்.. அதுவும் சரிதான்.. ஏன்யா ஆசாரி.. நீ என்னையா சொல்றே..! :D

ஆசாரி: ஐயா.. விக்கிற இவனை விடுங்க.. குடிக்கிறவனையும் விட்டிடுங்க.. யாருகிட்ட இவன் சரக்கு வாங்கிறான்னு பாருங்க.. அவனைப் புடிங்க.. தீர்ந்தது மாட்டர்..! அப்புறம் ரங்கனாவது.. பக்கிரியாவது..! :D

தலைவர்: ஆஹா.. புடிச்சாண்டா பாயிண்டை..! :( ஏண்டா ரங்கா..! யாருகிட்டடா சாராயம் வாங்கி விக்கிற?

ரங்கன்: வேற யாரு.. எல்லாம் நம்ம பக்கத்தூரு முத்துகிட்ட தான்..! :(

(தொடரும்) :D

Link to comment
Share on other sites

தலைவர்: அப்போ.. அந்த முத்து காய்ச்சலைன்னா ஒனக்கு சரக்கு கெடைக்காது..! அப்பிடியா? :lol:

ரங்கன் (மனதுக்குள்): இதென்ன கேணத்தனமா ஒரு கேள்வி..! :(

ரங்கன்: ஆமா.. கெடைக்காது..! அவனை காய்ச்ச வேணாம்னு சொல்லுங்க..! நான் விக்கிறதை உட்டுடுறன்..! :D

பூசாரி: ஏண்டா.. அடுத்தவன்மேல பழியப் போட்டு தப்பிச்சுடலாமேன்னு பாக்கிறியா..! சாராயம் வித்து அடுத்தவன் குடியைக் கெடுத்தா பகவான் கோவிச்சிண்டுடுவர்..! தெரிஞ்சுக்கோ..! :(

ரங்கன்: ஐய்.. இது நல்லாருக்கே..! போன கோயில் திருவிழாவுக்கு சுளையா பத்தாயிரம் குடுத்தனே..! அப்போ உங்க பகவான் கோவிக்கலையா? :D

பூசாரி: :( நீ சாராயம் வித்து சம்பாதிச்ச காசுன்னு தெரிஞ்சிருந்தா வாங்கிண்டிருக்க மாட்டேண்டா அபிஷ்டு..! :D

தலைவர்: சரி.. எல்லாத்தையும் விட்டிடு..! ஊர்க்கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்கே..! அதை ஏண்டா மீறினே..! :D

ரங்கன்: எதுக்கு கட்டுப்பாடு போடுறீங்க..! குடிக்கிறவனை நிறுத்த சொல்லுங்க..! காய்ச்சிறவனை நிறுத்தச் சொல்லுங்க..! அல்லாமே சரியாயிடும்..! :(

அப்போது டவுனில் படித்தவர்கள் போன்ற கெட்டப்பில் ஒரு சிலர் அங்கே வருகிறார்கள்..!

(தொடரும்) :D

Link to comment
Share on other sites

தலைவர்: யாரு டவுன் பசங்களா? என்ன இந்தப் பக்கமா காத்து வீசுது? :unsure:

"நூறு நாட்களில் கணக்கு வழக்கு" என்கிற புத்தகத்தை வைத்திருக்கிற பெண் மெதுவாக வாயைத் திறக்கிறார்.

"நாங்களும் இந்த ரங்கன் மாதிரி பல பேரிட்ட பேசிப் பார்த்திட்டம். விக்கிறது தப்பில்லையாமா..! வாங்கிக் குடிக்கிறதுதான் தப்பாம்..! சொன்னாங்க..! :( "

கையில் "கூடல் முடிந்து கூடல்" என்கிற புத்தகத்தை படித்துக்கொண்டே இன்னுமொருவர் ஆரம்பிக்கிறார்.

" நேரா சாராயக்கடைக்கே போய் நான் டாஸ்மாக் பக்கம் போறேன்னு உதார் விடுங்க..! பசங்க ஆடிப் போயிருவாய்ங்க..! <_< "

அப்போது கூட்டத்தில் சலசலப்பு..

உள்ளே பதுங்கியபடி ஒருகுரல்... "ஆமா.. இங்க சும்மாவே யாருக்கும் சரியான தொழில் கிடையாது..! இதுக்குள்ள கள்ளச் சாராயத்தை ஒழிக்கிறாங்களாமா..! கள்ளச்சாராய தொழிலை விட்டிட்டு வந்தா இவிங்க வேற வேலை குடுப்பாய்ங்களாமா? பேச வந்திட்டாங்க..! :D "

இன்னொரு குரல்... "பார்த்துப் பேசு தம்பி..! தப்புப்பண்ணி காசு சம்பாதிக்கலாம்னா ஆயிரம் தொழில் இருக்கு..! அதெல்லாம் அப்ப செய்யலாமா? சும்மா பேசிக்கிட்டு..! <_< "

இதையெல்லாம் கேட்ட ஊர்ப் பஞ்சாயத்து தலைவருக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பிக்கிறது..! ரங்கனை பக்கத்தில் வரும்படிசைகையில் அழைக்கிறார்.

ரங்கன்: என்னங்கையா? தலை சுத்துதா? மருந்து இருக்கு..! தரட்டா? :rolleyes:

தலைவர்: :wub:

(முற்றும்) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

இதையெல்லாம் கேட்ட ஊர்ப் பஞ்சாயத்து தலைவருக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பிக்கிறது..! ரங்கனை பக்கத்தில் வரும்படிசைகையில் அழைக்கிறார்.

ரங்கன்: என்னங்கையா? தலை சுத்துதா? மருந்து இருக்கு..! தரட்டா? :D

தலைவர்: :rolleyes:

ரங்கன் பயங்கர கில்லாடி போல இருக்கிறானே .......

சந்திலை பூந்து , சிந்து பாடுற மாதிரி கடைசியா பஞ்சாயத்து தலைவருக்கே மருந்தை கொடுத்திட்டானே .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.