Jump to content

"அயன்" திரைப்படத்தைப் புறக்கணிப்போமா?


Recommended Posts

சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பது பற்றி இங்கே களத்தில் விவாதித்திருக்கின்றோம். பலர் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கின்றீர்கள்.

சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பதன் ஊடாக சன் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பை விட, அது தயாரிக்கும் படங்களை புறக்கணிப்பது அதிக இழப்பை அதற்குக் கொடுக்கும்.

அடுத்ததாக சன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அயன் படம் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து சன் தொலைக்காட்சிக்கு எங்கள் உணர்வுகளை தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

இதை நாம் வெற்றிகரமாக செய்தால், அது நிச்சயமாக ஒரு தாக்கத்தை கொடுக்கும்.

"அயன்" படத்தை புறக்கணிப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply

நான் தமிழ்படம் பார்த் 3 வருடங்கள். இருந்தும் இம்முயற்ச்சிக்கு எனது ஆதரவுகள்!

Link to comment
Share on other sites

நான் தமிழ் படங்கள் பார்ப்பது இல்லை.. பாட்டு மட்டுமே கேட்பது... அதுகும் பழைய பாடல்.. உங்கள் முயற்சிக்கு என் மனபுர்வமான ஆதரவு.. :)

Link to comment
Share on other sites

இப்படித்தான் அஜித்தின் கேவலமான படம் ஒண்றை புறக்கணிக்கிறோம் என்று எங்களவர்கள் தேவை இல்லாத விளம்பரத்தை ஓட்டி காட்டினர்... படு தோல்வி அடைந்து இருக்க வேண்டிய அந்த படம் தயாரிப்பாளருக்கு விளம்பர செலவை குறைத்து ஓரளவு குறைந்த நட்டத்தையே கொடுத்தது.....!!

Link to comment
Share on other sites

எச்சரிக்கை :- உங்களின் உளவுரனை குறிவைத்தும் எதிரி தாக்குதல் நடத்தி கொண்டு இருக்கிறான்...

கவனமாக நகருங்கள்...

Link to comment
Share on other sites

நான் கடைசியாக திரையரங்கில் திரைப்படம் பார்த்தது எப்ப எண்டு ஞாபகமே இல்லை..! இருந்தாலும் வாழ்த்துகள்..!!

Link to comment
Share on other sites

படம் எப்ப ரிலீஸ்? முதல் நாளிலேயே பார்த்து விட்டுதான் மறு வேலை...!!

பகுத்தறிவு சிங்கங்கள் எல்லாம், படம் புறக்கணிப்பு என்ற போராட்டத்தில இறங்கும் அளவுக்கு தமிழீழ விடுதலைக்கான மக்கள் போராட்டம் விரிவடைந்து போயிருக்கு

கவனம்: எமக்கான முக்கிய எதிரிகளே நாங்கள் தான்... பார்த்து வரவும்

Link to comment
Share on other sites

இங்கே அயன் படத்தை புறக்கணிப்பதை ஒரு வினாவாக வைத்திருக்கின்றேன். நீங்கள் தருகின்ற கருத்துகளின் அடிப்படையில் இதைப் பற்றிய முடிவை எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் எமக்கு செய்கின்ற தீங்குகள் பற்றி இங்கே நிறையப் பேசி விட்டோம்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது பற்றி எம்மில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அது நடக்கப் போவது இல்லை. அப்படி நடக்காமல் போவதற்கு சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றனவும் முக்கிய காரணமாக இருக்கும்.

இந்தத் தொலைக்காட்சிகள் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ தீங்குகளை எமக்கு செய்து கொண்டிருக்கின்றன.

எங்களுடைய எதிர்ப்பை நாம் எப்படிக் காட்டப் போகின்றோம்?

கடிதங்கள் எழுதிப் பயன் இல்லை என்பது அனுபவம் கண்ட உண்மை.

எதிரியோடும், எதிரிக்கு துணை போகின்றவர்களோடும் சமரசம் செய்து கொள்வதை எப்பொழுது நிறுத்தப் போகின்றோம்?

இங்கே சூர்யாவின் படத்தை புறக்கணிப்பது பற்றிப் பேசவில்லை. சன் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தை புறக்கணித்து, சன் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு எம்முடைய எதிர்ப்பை காட்டுவது பற்றிப் பேசுகிறேன்.

நாங்கள் காட்டுகின்ற எதிர்ப்பு தமிழ்நாட்டை சென்றடைவதாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய திரைப்படம் ஒன்றைப் புறக்கணித்துக் காட்டுவதுதான் சிறந்த வழி.

Link to comment
Share on other sites

உலக நாடுகள் எமது போரட்டத்துக்கு எதிராகவே நடந்து கொள்கிறார்கள்.

அப்படியான

அனைத்து நாடுகளையும் எதிர்ப்போம்.

அவர்களிடமிருந்து பெற்றுள்ள அனைத்து வசதி வாய்ப்புகளையும் உதறித் தள்ளுவோம்.

அகதி அந்தஸ்த்து : குடியுரிமைகளைக் கூட துறப்போம்.

வாறீங்களா சபேசன்?

இன்னும் யார் தயார்?

Link to comment
Share on other sites

தலைவன்,

உலக நாடுகளுக்கு எதிராக நாம் ஊர்வலம் போகின்றோம்:. அவர்களின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துகின்றோம். வேறு பல வழிகளில் நாம் எமது எதிர்ப்பைக் காட்டுகின்றோம்.

தாயகம் என்று வருகின்ற பொழுது, எமக்கு அகதி அந்தஸ்த்து தந்து, குடியுரிமை தந்து எங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட்ட உலக நாடுகளுக்கே நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்க பின்னிற்கவில்லை.

ஆனால் எமது முளையை மழுங்கடிக்கும், எமது போராட்டத்தை இருட்டடிப்புச் செய்யும், எமது எதிரிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்களுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்பது எந்த வகையிலும் சரியாக இருக்க முடியாது.

சன் நிறுவனத்திற்கு நாம் எப்படி எங்கள் எதிர்ப்பைக் காட்டப் போகின்றோம்? இதுவரை சன் நிறுவனம் வாங்கிய படங்களில் அதிக பொருட் செலவில் உருவானது "அயன்". இது ஒரு அருமையான சந்தர்ப்பம்.

எங்கள் எதிர்ப்பை வலுவான முறையில் தெரியப்படுத்துவோம்.

Link to comment
Share on other sites

இயக்குணர் மணிவண்ணன் கூட ஈழத்தழிழருக்காகக் குரல் கொடுத்தார், நடிகர் சூரியா எம் மக்களுக்காக என்ன செய்தார் என்று ஆதரவு வழங்கத் துடிக்கிறீர்கள்?

படம் பார்கக் குடுக்கும் காசில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள், அவர்கள் உயிர் மட்டுமல்ல உங்கள் மனமும் நிறையும்.

Link to comment
Share on other sites

படம் எப்ப ரிலீஸ்? முதல் நாளிலேயே பார்த்து விட்டுதான் மறு வேலை...!!

பகுத்தறிவு சிங்கங்கள் எல்லாம், படம் புறக்கணிப்பு என்ற போராட்டத்தில இறங்கும் அளவுக்கு தமிழீழ விடுதலைக்கான மக்கள் போராட்டம் விரிவடைந்து போயிருக்கு

கவனம்: எமக்கான முக்கிய எதிரிகளே நாங்கள் தான்... பார்த்து வரவும்

புலி எண்டு சொன்னால் குறைஞ்சா போவீங்கள்....??

நேற்று ஒரு அண்னையை கண்டன்.. லண்டனிலை பல கடைகள் வைத்து இருப்பவர்... பொருட்கள் புறக்கணிப்பை பற்றி அவரிட்ட கேட்டன்... அவர் சொன்னார் நான் நிப்பாட்டி கன காலம் ஆச்சுது... ஆனால் சனம் வந்து சாமான் வாங்கி போட்டு சொல்லுதாம் தம்பி கொஞ்சம் பொறுங்கோ சாமானை இங்கை விட்டு போட்டு ஒருக்கா வெளிய போட்டு வாறன் எண்டு போகுதாம்... கேட்டால் அங்கர் பால்மா முடிஞ்சு போச்சுது அதுதான் பக்கத்து கட்டையிலை வாங்கி போட்டு வாறன் எண்று...

இப்படியே போனால் நாங்கள் எங்கட வியாபாரத்தை ஒட்டு குழுக்களின் கடைகளுக்கும், சிங்கள வியாபாரிகளிடமும் இழக்க வேண்டி இருக்கும் எண்று அவர் சொன்னதுதான் பஞ்ச்... சிங்கள , தமிழ் ஆக்கள் நல்லா திட்டம் போட்டு இலங்கை சாஅமானுக்கு எண்று மட்டும் கடைகளை திறந்தால் வியாபாரம் அள்ளலாம் எனும் நிலைமைக்கு தான் நிலமை போய் கொண்டு இருக்கு என்கிறார்...

இப்படி இருக்குது எங்கட புறக்கணிப்புகள்... எதை தொடங்கினாலும் அதை முடிக்க மாட்டினம்... அதுக்கை அடுத்ததுக்கை போக வேணும்... இப்படியே எல்லாத்தையும் கெடுத்து கொண்டு எதையும் முடிக்காமல் அரை குறையாய் விடுவது...

சிலை அரை குறையளுக்கு சொன்னாலும் புரியாது சொந்தமாகவும் புரியாது... இப்படி இருக்கு தமிழர் நிலை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சினிமா, தமிழ் நாட்டு தொலைக்காட்சிகள் ,,மற்றும் தி.மு.க. இவைகளை குறை சொன்ன யாழில சிலபேருக்கு கோவம் பொத்துக்கொண்டு வருகுது... என் எண்டுதான் எனக்கு விழங்கேல்லை...யாரவது நீண்டகால உறுப்பினர் கொஞ்சம் விளக்கம் தாறியளோ?

Link to comment
Share on other sites

தமிழ் சினிமா, தமிழ் நாட்டு தொலைக்காட்சிகள் ,,மற்றும் தி.மு.க. இவைகளை குறை சொன்ன யாழில சிலபேருக்கு கோவம் பொத்துக்கொண்டு வருகுது... என் எண்டுதான் எனக்கு விழங்கேல்லை...யாரவது நீண்டகால உறுப்பினர் கொஞ்சம் விளக்கம் தாறியளோ?

வளர்த்தால் குடும்பி சிரைச்சால் மொட்டை..! இதுதான் சிலருக்கு தெரியுதே அழகாக வெட்டி சீவ முடியும் எண்டது புரிவதில்லையே....!! ஏன் அப்படி எண்டு உங்களுக்கு தெரிஞ்சால் சொல்லுங்கோவன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் கருத்துக்கு ஆதரவு அளிக்கிறேன்.

கடந்த 2 வருடங்களாக திரையரங்குகளில் சென்று திரைப்படம் பார்ப்பது விருப்பமில்லாமல் இருக்கிறது. இதனால் திரையரங்கில் சென்று படம் பார்ப்பதை தவிர்க்கிறேன். இராமேஸ்வரம் என்ற படம் வந்தபோது ஈழத்துக்கதை என்று தெரிந்தவர் சொல்லக் கேட்டுப் போய் பார்த்தேன். அயனோ, கியனோ எதுவந்தாலும் இப்ப திரையரங்குகளுக்கு செல்வதைத் தவிர்க்கிறேன். சிறுவனாக இருந்த போது திரைப்படம் பார்ப்பது என்றால் நல்ல விருப்பம். இப்ப வயது போகப்போக இவ்விருப்பம் குறைந்து விட்டது. அத்துடன் சன் தொலைக்காட்சி தொடர்ந்து புறக்கணித்து வருபவன். கலைஞர் தொலைக்காட்சி அவுஸ்திரெலியாவில் ஒளிபரப்பாவதில்லை.

Link to comment
Share on other sites

ஆகக் குறைந்தது திரையரங்குக்குச் சென்று பார்ப்பதையும் ஒரிஜினல் டிவிடிக்களை வாங்கிப் பார்ப்பதையுமாவது தவிர்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் கள்ளக் கொப்பியில் பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சன் திரைப்படத்தை புறக்கணிப்பதற்கு சிறந்த வழி அதை திரையிடுபவனிடம் ( அவனும் தமிழன் தானே) பேசி, வரும் தேர்தல் வரைக்குமாவது திரையிடுவதை நிறுத்த சொல்லலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை சன் நிறுவனம் தயாரிக்கும் 'அயன்' திரைப்படத்தைப் புறக்கணிப்போமா? என்று எழுதினால் நன்றாக இருக்கும் சபேசன்.

Link to comment
Share on other sites

இங்கே அயன் படத்தை புறக்கணிப்பதை ஒரு வினாவாக வைத்திருக்கின்றேன். நீங்கள் தருகின்ற கருத்துகளின் அடிப்படையில் இதைப் பற்றிய முடிவை எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் எமக்கு செய்கின்ற தீங்குகள் பற்றி இங்கே நிறையப் பேசி விட்டோம்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது பற்றி எம்மில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அது நடக்கப் போவது இல்லை. அப்படி நடக்காமல் போவதற்கு சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றனவும் முக்கிய காரணமாக இருக்கும்.

இந்தத் தொலைக்காட்சிகள் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ தீங்குகளை எமக்கு செய்து கொண்டிருக்கின்றன.

எங்களுடைய எதிர்ப்பை நாம் எப்படிக் காட்டப் போகின்றோம்?

கடிதங்கள் எழுதிப் பயன் இல்லை என்பது அனுபவம் கண்ட உண்மை.

எதிரியோடும், எதிரிக்கு துணை போகின்றவர்களோடும் சமரசம் செய்து கொள்வதை எப்பொழுது நிறுத்தப் போகின்றோம்?

இங்கே சூர்யாவின் படத்தை புறக்கணிப்பது பற்றிப் பேசவில்லை. சன் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தை புறக்கணித்து, சன் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு எம்முடைய எதிர்ப்பை காட்டுவது பற்றிப் பேசுகிறேன்.

நாங்கள் காட்டுகின்ற எதிர்ப்பு தமிழ்நாட்டை சென்றடைவதாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய திரைப்படம் ஒன்றைப் புறக்கணித்துக் காட்டுவதுதான் சிறந்த வழி.

சபேசன் உங்களைப் போன்ற தெளிவாக, பிரச்சனைகளை சரியான திசையில் இருந்து பார்த்து எழுதக் கூடியவர்கள் கூட வெறும் சினிமா புறக்கணிப்பு என்று இறங்குவதை பார்க்க கவலையாக இருக்கு.

இந்திய, முக்கியமாக தமிழக சினிமா என்பதே பார்பனியத்தினையும் அதன் இருப்பையும் பேண முயலும் ஒரு ஊடகம். அதன் மூலம் இந்திய பெரும் தேசியத்தின் வல்லாதிக்கத்தினை பார்பனியத்தின் ஊடாக தொடர்ந்து பேணுகின்றது. அது மக்களின் சினிமா அல்ல.

சன் ரீவியும் சன் நிறுவனத்தின் அனைத்து ஊடகங்களும் (கலாநிதி மாறனின் ஊடகங்கள்) பார்ப்பனியத்திற்கு காவடி தூக்கும் பங்காளிகள் தான். என்று தி. மு. க என்ற பெயரில் மட்டுமே திராவிடத்தினை தாங்கி நிற்கும் கட்சி, காங்கிரஸ் எனும் ஆரிய கட்சிக்கு பல்லாக்கு தூக்கியதோ அன்றில் இருந்தே அது தமிழ் தேசியத்திற்கு எதிராகத் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது (இந்திரா அம்மையாரை நேருவின் மகளே என்று வாழ்த்திய காலம் தொடக்கம்) . அப்படியான பின்புலத்தினைக் கொண்ட சன் ரீவியினையும் அதன் சினிமாவையும் நாம் வெறும் நட்டத்தினை ஏற்படுத்தி காட்டுவோம் என்ற பெயரில் மாத்திரமே எதிர்ப்பது வேடிக்கையானது.

முதலில் எமது எதிரி யார் என்பதை புரிந்து கொள்வோம். எதிரி பல்லாக்கு தூக்கிகள் அல்ல. இந்திய பெரும் தேசியவாதமும் அதனின் ஒரு அங்கமாக இருந்து அதனை பேணிவரும் இந்திய சினிமாவும் தான். ஒரு 'அயனை' எதிர்ப்பதால் இந்த இந்து/இந்திய/ பார்பனிய தேசிய வாதத்தில் எந்த ஒரு ஓட்டையும் வந்துவிடப் போவதில்லை. மாறாக எம் ஈழ / தமிழ் சமூகத்தில் இருக்கும் ஓட்டைகள் தான் மேலும் தெளிவாக வெளித் தெரியும்.

எம் பிரதான எதிரி இந்திய வல்லாதிக்க வெறியும் அதன் முதுகெழும்பான பார்பனியமும் தான்.கலாநிதி மாறனும் சன் நிறுவனமும் அதன் கோடிக்கணக்கான கண்ணிகளில் ஒன்று.. அவ்வளவு தான், நாம் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க முயல்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெரிதாக தமிழ் படங்கள் திரையில் பார்ப்பதில்லை ஆனால் இந்த படம் வெளிவந்தவுடன் நிச்சயமாக பார்ப்பேன்.

Link to comment
Share on other sites

தலைவன்,

உலக நாடுகளுக்கு எதிராக நாம் ஊர்வலம் போகின்றோம்:. அவர்களின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துகின்றோம். வேறு பல வழிகளில் நாம் எமது எதிர்ப்பைக் காட்டுகின்றோம்.

தாயகம் என்று வருகின்ற பொழுது, எமக்கு அகதி அந்தஸ்த்து தந்து, குடியுரிமை தந்து எங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட்ட உலக நாடுகளுக்கே நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்க பின்னிற்கவில்லை.

ஆனால் எமது முளையை மழுங்கடிக்கும், எமது போராட்டத்தை இருட்டடிப்புச் செய்யும், எமது எதிரிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்களுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்பது எந்த வகையிலும் சரியாக இருக்க முடியாது.

சன் நிறுவனத்திற்கு நாம் எப்படி எங்கள் எதிர்ப்பைக் காட்டப் போகின்றோம்? இதுவரை சன் நிறுவனம் வாங்கிய படங்களில் அதிக பொருட் செலவில் உருவானது "அயன்". இது ஒரு அருமையான சந்தர்ப்பம்.

எங்கள் எதிர்ப்பை வலுவான முறையில் தெரியப்படுத்துவோம்.

சபேசன்

இங்கே உங்கள் பிரச்சனை இந்திய சினிமா எதிர்ப்போ

தமிழர் பிரச்சனைகளை சண் - கலைஞர் எதிர்ப்போ அல்ல

உண்மையிலேயே ஒரு தொலைக் காட்சியின் வளர்ச்சிக்காக நீங்கள் தேசியத்தை பாவிக்க முயல்கிறீர்கள்.

நான் ஏற்கனவே கூட இது குறித்து எழுதினேன்.

உண்மைகள் கசக்கும்.

இல்லாவிட்டால் இது எதிர்காலத்தில் நமது பயணத்துக்கு தடையாகும் என்றால்

உடனே இவன் எமக்கு எதிரானவன் என்ற கருத்தே நம்மிடம் உள்ளது.

எல்லாத்துக்கும் ஓம் போட வேண்டும்.

இதுதான் எமது குணாம்சம்.

உலக நாடுகளுக்கு எதிராக நாம் ஊர்வலம் போகின்றோம்:. அவர்களின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துகின்றோம். வேறு பல வழிகளில் நாம் எமது எதிர்ப்பைக் காட்டுகின்றோம்.

தாயகம் என்று வருகின்ற பொழுது, எமக்கு அகதி அந்தஸ்த்து தந்து, குடியுரிமை தந்து எங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட்ட உலக நாடுகளுக்கே நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்க பின்னிற்கவில்லை.

இதே போல் இந்தியாவில்

அதுவும் தமிழகத்தில் மேற்கத்தைய நாடுகளை விட அதிகமான ஈழத்து மக்கள் வாழ்கிறார்கள்.

அகதிகளாக வாழ்வதை விட அங்கே சும்மா வாழ்கிறார்கள்.

இல்லை என்று யாராலும் சொல்ல முடியுமா?

அவர்களுக்கும் நீங்கள் பிரச்சனை கொடுக்கப் போகிறீர்கள்.

இங்கே நாம் தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள்தான் போகிறோம்.

அங்கே மட்டுமல்ல (தமிழகம் : பம்பாய் . டெல்லி)

அமெரிக்கா : மலேசியா போன்ற இடங்களில்

ஊர்வலம் போவது இந்திய தமிழர்

அங்கே தீயிட்டு தன்னையே சாகடித்துக் கொள்வது இந்திய தமிழர்.

இவர்களது உணர்வை : அன்பை இழக்கப் போகிறீர்கள்.

ஏதோ புலம்பெயர் நாடுகளின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துவதாக சொல்கிறீர்களே?

போராடுவதாக சொல்கிறீர்களே?

இந்த நாடுகள் தொடர்ந்து பண உதவிகளை செய்கிறது.

தொடர்ந்தும் ஆதரவு வழங்குகிறது.

சும்மா வீதிகளை தடைசெய்து ஒன்றும் நடக்காது.

கூட்டம் கூட்டி மட்டும் ஒன்றும் ஆகாது.

உங்களைப் போன்றவர்கள் ஒரு குழுவாக போய்

இங்குள்ள அரசியல் தலைமைகளை சந்தியுங்கள். பேசுங்கள்.

போராடுங்கள்.

எமது மக்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது

எமது சொந்தங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது.

எமது குடியுரிமையை வைத்து எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

நீங்கள் அந்த அரசுக்கு உதவி வழங்குகிறீர்கள்?

அல்லது கண்டும் காணாமல் இருக்கிறீர்கள்.

எமது குடியுரிமையை வைத்து என்ன பிரயோசம்

நாங்களும் இந்நாட்டு பிரஜைதானே?.

எனவே எமது குடியுரிமையை

நாம் திருப்பித் தர முடிவெடுத்திருக்கிறோம்.

நாங்கள் அங்கே போய் சாகப் போகிறோம்.

தாங்க முடியவில்லை.

இப்படி சொல்ல எத்தனை பேரால் முடியும்?

சொல்லுங்கள். செய்யுங்கள்?

மனுவெல்லாம் கொடுக்க முன்னர்

அவர்களிடம் எழுத்து மூலம் அனுமதி பெறுங்கள்.

நாங்கள் இந்த நாளில் நடத்தும் கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்

நாங்கள் மனுக் கொடுக்கவிருப்பதாக எழுதி

அவர்களது பதிலுக்கு பின் கவனயீர்ப்போ : போராட்டமோ நடத்தி

அவர்களிடம் மனுக்கொடுக்க முயலுங்கள்.

அதை விட்டு விட்டு

அங்க போய் நின்று

வா வெளியே மனுக் கொடுக்க வேணும்

என்று சண்டித்தனம் காட்டாதீர்கள்.

வீதிகளை தடை செய்வதை பெரிய காரியமாக சொல்கிறீர்கள்.

இதை பார்த்து இவர்கள் நகைக்கிறார்கள்?

எம்மை வெறுக்கிறார்கள்?

ஒரு நாட்டின் முகுகெலும்பே போக்கு வரத்துதான்.

ஒரு விபத்து நடந்தாலே

ஒரு சில நிமிடங்களிலேயே அதை சரி செய்து

பாதையை திறக்கிறார்கள் அவர்கள்.

நாம் பல மணி நேரம்

அப்படியானவர்களது ஒழுங்கு முறைகளை மீறுகிறோம்.

ஒருநாள் இருநாள் விடுவார்கள்.

வெகு விரைவில் கைவைப்பார்கள்.

அதன் பின் அது தொடரும். உள்ளே போடுவார்கள்.

அவர்களது நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பதில்லை என

நாடு கடத்துவார்கள்?

இதையே பேசி வருகிறார்கள். இது நடக்கும்.

இது எங்கட நாடு அல்ல.

அவர்கள் அதிக சிரமப்பட்டு உருவாக்கிய நாடு.

நமக்கு அவர்களைப் போல் வாழ வழியமைத்திருப்பதை கெடுக்காதீர்கள்.

போராட்டம் செய்யுங்கள்.

அது எங்கே அனுமதி தந்துள்ளார்களோ அங்கே?

அவனவன் நேரத்துக்கு தன் பணிகளுக்கு செல்வதற்காக என்று

தான் திரும்பி உடனடியாக வீடு திரும்பி

தன் குழந்தையை அல்லது தன் மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு குழந்தையை கவனிக்க

அல்லது பள்ளிக்கு அனுப்ப அல்லது

எங்காவது அனுப்ப

அல்லது நேரத்துக்கு தனது அட்டவனைப்படி ஒருவரை சந்திக்க செல்லும் போது

அவனது நேரத்துக்கு அவனது வேலையை செய்ய முடியாவிட்டால்

இவை அவர்களை வெறுப்படைய வைக்கும்.

அவர்கள் தனது நாட்டு போலீஸிடம் : அரசிடம் முறையிடுவார்கள்.

ஒரு மின்அஞ்சல் போதும்.

அதை பரிசீலிப்பார்கள்? முடிவு?

இது போன்ற காட்சிகளை எத்தனை இந்திய படத்திலேயே பார்த்து நாமே திட்டி இருப்போம்.

எத்தனை பிரசவ வேதனைகளை

எத்தனை இழப்புகளை

எத்தனை அவசர தேவைகளை

இழந்து மக்கள் அவலப்படுவதை வெறுத்து பேசியிருக்கிறோம்?

இப்போது நாமே அதை செய்கிறோமே?

இதன் பெயர்தான் அறிவா?

புலம் பெயர்ந்தும் : இங்கு படித்தும் : இத்தனை நாடுகளைப் பார்த்தும் நாமே திருந்தாமல் இருக்கும் போது

அந்த நாடுகள் மட்டும் எப்படி திருந்தும்?

அந்த நாட்டிலுள்ளவர்கள் மட்டும் எப்படித் திருந்துவார்கள்?

வேகமாக போகும் ஒருவனுக்கு வீதி விளக்கின் சிகப்பு விளக்கை கண்டே எரிபவன் அவன்.

உங்கள் செயல்கள் வினையாகவே முடியும்.

இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

உங்கள் எதிர்ப்பை விட

அந்த நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதில்லை

உரியவர்களுக்கு எழுதினாலே போதும்

இப்போ உள்ளதும் இல்லாமல்தான் போகும்.

உங்களால் இதையெல்லாம் சிந்திக்க எங்கே நேரம்.

எதையாவது குட்டிச் சுவராக்கிவிட்டு

தலையை சொறியத்தான் நேரம் இருக்கும்.

அதே இந்திய சினிமா நடிகர்களை கொண்டு வந்து நிகழ்ச்சி நடத்தும் போது

உங்களுக்கு வராத கோபம் எல்லாம் இப்ப பொத்துக் கொண்டு வருது.

இதனால் பாதிப்படையப் போவது சண் - கலைஞர் மட்டுமல்ல

அங்கு வேலை செய்யும் எமக்கும் ஆதரவான பல்லாயிரம் மக்களும்தான்.

ஒரு நிறுவனத்தை அடித்து உடைத்தால்

அந்த நிறுவனம் சமாளித்துக் கொள்ளும்.

அதை நம்பி வாழும் ஊழியர்களது குடும்பங்கள் பசியோடும் பட்டினியோடும் வேதனைப்படும்.

அவர்களில் பலர் எமக்கு சார்பானவர்களாகவே இருப்பார்கள்.

ஒரு சுப்பிரமணியசாமியும் : சோவும்

நமக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும் போது

பல சுப்பிரமணியங்களையும் : சாமிகளையும் : சோக்களையும் : சாக்குகளையும் உருவாக்கும்.

இதுக்குத்தான் சொல்லுறது

பொல்லுக் குடுத்து அடி வாங்கிறதென்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம் போல் தோன்றுகிறது :o

தலைவன் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.