Jump to content

"அயன்" திரைப்படத்தைப் புறக்கணிப்போமா?


Recommended Posts

மீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம் போல் தோன்றுகிறது :o

தலைவன் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் :)

ஒன்றை செய்துவிட்டு துன்பியல் என்று நெழிந்தோம்.

அதை இல்லை என்றே மறுத்திருக்கலாம்.

அதையே செய்யவில்லை.

தொடர்ந்துமா?

தன் தலையிலே தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ள

சிலர் தூபமிடுகிறாகள் முனிவர்ஜீ.

இவர்கள் நாளையை பற்றி நினைப்பதேயில்லை.

எமது கருத்துகளும் தலைமைகளுக்கு முன்வைக்கப்பட்டிருந்தால்

அவர்கள் கொஞ்சமாவது யோசித்திருப்பார்கள்?

எல்லாம் அங்கு நடக்கும். அவங்களுக்கு தெரியும் என்று மேளம் தட்டிப் போட்டு

கையிலிருந்த கயிறை தூக்கி எறிஞ்சுட்டு

தப்புறதுக்கு புல்லாவது கிடைக்காதா என அலையிற பரிதாபம் இன்று.

இதை இப்ப சொல்லாதவங்க

இனி சொன்னா என்ன

சொல்லாட்டித்தான் என்ன?

எல்லாம் மண் விழுந்து போகட்டும்.

சண்ணும் - கலைஞர் டீவியும்தானே தமிழீழம் பெற்று தரப் போகுது?

ஏன் இப்படி சீப்பாக வேணுமோ?

வேதனையாக இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களுடன் முட்டி மோதுவதை ஏற்கனவே பலமுறை சொல்லியிருந்தோம்[வசம்பு ,நான் ,தலைவன் ,நிலாமதி இன்னும் சிலர்] ஆனால் நம்மவர்கள் கேட்பதாயில்லை எல்லா ஊடகங்களும் நமக்கு சார்ப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பது சுத்தபைத்தியகாரத்தனம்

இன்று சண்டீவி தயாரிக்கும் படத்தை புறக்கணிக்கவேண்டும் ஏன் இப்படி அவர்கள் என்னவோ நமக்காகவே படத்தை எடுத்தது போல் புறக்கணிங்கள் என்பது நீங்கள் விரும்பினால் பாருங்கள் இல்லாவிட்டால் ஒதுங்குங்கள் அவர்கள் யாரையும் கட்டாயபடுத்தவில்லை நம்ம ஈழமக்களுக்கு தெரியும் பார்ப்பதா வேண்டாமா என்று படம் ஓடாவிட்டால் நாளை அந்த படத்தை வாங்கியோர் நினைத்து கொள்வார் இப்படியான [இந்த நிறுவனம் தயாரித்த] படங்களை திரையிடக்கூடாது என்று .......இதை சொல்லி தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

இப்படியான செய்திகள் அந்த ஊடக நிறுவன அமைப்புக்கு சென்றையும் போது அதன் பக்க விளைவுகள் இன்னும் அதிகமாகும்

Link to comment
Share on other sites

முதலில் இலங்கை பொருட்களை வாங்குவதை மறுங்கள். ஒரு திரைப்படத்தை ஒரு நிறுவனம் தயாரத்தாலும் அந்த திரைப்படம் ஆயிரக்கணக்கான தென்னிந்திய சினிமா துறை ஊளியர்களை பாதிக்கும். நமக்காக தெருவில் இறங்கிய பல தொழிலாளர்களை இது பாதிக்கும். சன் நிறுவனத்துடன் கோபித்து என்ன பலன்? உலக ஊடகங்கள் பெரும்பாலனவை நம் விடயத்தல் அரச செய்திகளை அப்படியே ஒப்பிக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடுகையில் சன் பரவாயில்லை ஒரு கொஞ்சமாவது காட்டுது. அது மட்டுமல்லாது நாம் இப்படியே எல்லாரையும் பறக்கணித்து எதிரிகளை சம்பாதிப்பதை விட செய்ய வேண்டியதை வடிவாக செய்தால் போதும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில தியேட்டரில பார்த்ததோட சரி இங்க இதுவரைக்கும் தியேட்டர் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கினதில்ல :)

Link to comment
Share on other sites

மேற்குலக நாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறை பற்றி பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்பதில் ஒத்த கருத்தை அனைவரும் கொண்டுள்ளோம்.

ஆனால் சன் நிறுவனம் போன்று இரண்டகம் செய்யும் தமிழ் ஊடகங்களுக்கு நாம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமா? இல்லையா?

சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பதும், சன் நிறுவனத்தைப் புறக்கணிப்பதும் ஒன்று அன்று. இரண்டிற்கும் சில வித்தியாசங்கள் உண்டு.

சன் நிறுவனத்துடனோ, கலைஞர், திமுக போன்றவர்களுடனோ எம்முடைய கோபம் நிரந்தரமானது அன்று. நாளையே நாம் அவர்களுடன் கொஞ்சிக் குலாவும் நேரம் வரலாம்.

ஆனால் அவர்கள் இன்றைய நிலைப்பாடு எமக்கு பெரும் கோபத்தையும், வேதனையையும் தருகின்றது என்பதை ஆணித்தரமாக தமிழ்நாட்டிற்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம்.

எங்களுடைய எதிர்ப்பை சொல்லியே ஆக வேண்டும்.

சன் நிறுவனத்தின் திரைப்படம் ஒன்றை புறக்கணிப்பது ஒரு அடையாள எதிர்ப்பு.

ஒரு சிறிய நட்டம் ஏற்பட்டாலும், முதலாளிகள் அதை விரும்பமாட்டார்கள். உயிர்ப்பலிகளோடு பெரும் மோதல்கள் நடந்த பின்பும் லாப நோக்கில் மாறன் குடும்பமும் கலைஞர் குடும்பமும் இணைந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவர்கள் சோவோ, சுப்ரமண்யசாமியோ அல்ல.

வெறும் முதலாளிகள்.

நாம் ஒரே ஒரு முறை அவர்களுக்கு ஒரு இழப்பை ஏற்படுத்தினாற் போதும். தமது நிலைப்பாட்டை மாற்றுவது பற்றி நிச்சயமாகச் சிந்திப்பார்கள்.

சிறிலங்காப் பொருட்களை புறக்கணிப்பது பற்றிப் பேசிய போதும், தமிழ் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று சிலர் சொன்னார்கள். அதே கதையை சன் நிறுவனப் புறக்கணிப்புக்கும் சொல்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம்.

சிறிலங்காப் பொருட்களை புறக்கணித்து, தமிழ்நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம், அங்கே உள்ள முதலாளிகளை எங்களின் செல்வாக்கு வளையத்திற்குள் கொண்டு வருவது பற்றித்தான் நான் சிந்திக்கின்றேன்.

தமிழ்நாட்டு அரசியலை முதலாளிகள் தீர்மானிக்கின்றார்கள். அந்த முதலாளிகளுக்கு ஒரு சந்தையை நாம் திறந்து கொடுத்து, அதன் மூலம் நாம் பேரம் பேசக் கூடிய நிலைக்கு வர வேண்டும்.

சன் நிறுவனத்திற்கும் ஒரு சந்தையை திறந்து கொடுத்து விட்டோம். ஆனால் எம்மால் அவர்கள் மீது எந்த ஒரு செல்வாக்கையும் செலுத்த முடியவில்லை. அவர்கள் விரும்பிய போக்கில் எம்மை வழி நடத்த இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இதை மாற்ற வேண்டும். சன் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து அவர்களின் இன்றைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.

வியாபாரத்தில் "நட்டம் வரும்" என்று மிரட்டுவதன் மூலம் மட்டுமே முதலாளிகளை பணிய வைக்க முடியும்.

ஆனால், சன் நிறுவனத்திற்கு எமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு உங்களுக்கு ஏதாவது சிறந்த வழிகள் தெரிந்தால், அதையும் சொல்லுங்கள். அது பற்றியும் பேசலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில தியேட்டரில பார்த்ததோட சரி இங்க இதுவரைக்கும் தியேட்டர் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கினதில்ல :o

பனிக்கு கொஞ்சம் சூடாக இருக்கட்டும் என்று பல வருடங்களுக்கு முன் ஒரே ஒருமுறை மட்டும் தியேட்டருக்குள் ஒதுங்கினேன் .

அதுவும் என் கனவுக்கன்னி நடித்த படம் அது . :)

Link to comment
Share on other sites

இப்படியான புறக்கணிப்பை தாயகத்திலிருந்து

அதன் முக்கியஸ்தர்கள் அறிவிக்கட்டும்.

நிச்சயம் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.

நான் வாழும் நாட்டில ஒரு கடைக்காரரிடம்

சிறீலங்காவிலிருந்து வரும் பொருட்களை விக்கிறதை நிறுத்துங்களேன் அண்ணன் என்றேன்.

என்னிடம் ஏன் அண்ண சொல்றியள்

கொண்டு வந்து போடுறவையிட்ட சொல்லுங்களேன் .

அவங்க ஆக்கள்தானே கொண்டு வந்து போடுறதெண்டு

நக்கலா சிரிக்கிறார்.

மூஞ்சு பேயறைஞ்ச மாதிரி ஆகிட்டு.

முன்ன எல்லாக் கடைகளையும் எடுக்க கொஞ்சம் பேர் திரிஞ்சினம் அண்ண.

பிறகு திறந்த கடைகளையும் வித்து போட்டினம்.

எங்கட கடைகளாவது இருக்கிறதால சாமானும் வாங்கிறியள்

நிதியும் வாங்குறியள்.

இப்ப எங்களையும் பிச்சை எடுக்க வச்சிட்டு

ஆருக்கிட்டு நிதி வாங்கிறது என்றார்.

பேச முடியவில்லை.

முன்ன எல்லாரும் தியைட்டருக்கு போனவை.

இப்ப DVDயில என்ன Home Cinemaவில அந்த மாதிரி

அகண்ட திரையில சனம் பாக்குது.

அன்றைக்கும் இன்றைக்கும்

எத்தனை தியெட்டரில படம் ஓடுது?

கொஞ்சம் பேர் விசிலடிக்க

பெட்ட பெடியன்கள் பார்க்க

ரொமாண்ஸ் நக்கல்விட சில இளசுகளும்

பல பெரிசுகளும் தியைட்டருக்கு போகுது.

அதோட சரி.

விக்காத பொருளுக்கு தடை விதிச்சு விளம்பரம் தேடிக் குடுக்கிற மாதிரி

்இது இன்னொரு கூத்து.

படமே ஓடுறதில்லை.

அதை தடை செய்றதா பீத்தி

நமக்கு இருக்கிற ஆதரவையும் கெடுக்கிற சாணக்கியம் :)

ஆனால் சன் நிறுவனம் போன்று இரண்டகம் செய்யும் தமிழ் ஊடகங்களுக்கு நாம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமா? இல்லையா?

சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பதும், சன் நிறுவனத்தைப் புறக்கணிப்பதும் ஒன்று அன்று. இரண்டிற்கும் சில வித்தியாசங்கள் உண்டு.

சன் நிறுவனத்துடனோ, கலைஞர், திமுக போன்றவர்களுடனோ எம்முடைய கோபம் நிரந்தரமானது அன்று. நாளையே நாம் அவர்களுடன் கொஞ்சிக் குலாவும் நேரம் வரலாம்.

ஆனால் அவர்கள் இன்றைய நிலைப்பாடு எமக்கு பெரும் கோபத்தையும், வேதனையையும் தருகின்றது என்பதை ஆணித்தரமாக தமிழ்நாட்டிற்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம்.

எங்களுடைய எதிர்ப்பை சொல்லியே ஆக வேண்டும்.

சன் நிறுவனத்தின் திரைப்படம் ஒன்றை புறக்கணிப்பது ஒரு அடையாள எதிர்ப்பு.

ஒரு சிறிய நட்டம் ஏற்பட்டாலும், முதலாளிகள் அதை விரும்பமாட்டார்கள். உயிர்ப்பலிகளோடு பெரும் மோதல்கள் நடந்த பின்பும் லாப நோக்கில் மாறன் குடும்பமும் கலைஞர் குடும்பமும் இணைந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஆனால், சன் நிறுவனத்திற்கு எமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு உங்களுக்கு ஏதாவது சிறந்த வழிகள் தெரிந்தால், அதையும் சொல்லுங்கள். அது பற்றியும் பேசலாம்.

வன்னியல சிறீலங்கா இராணுவம்தான் மோதுவதாக தகவல்.

இப்பதான் தெரியுது சண்காரர் அங்க களத்தில நிக்கினம் எண்டு :lol:

எதிரியென்றால் எதிரி . நண்பனென்றால் நண்பன்.

பிறகென்ன கொஞ்சல் குலவல்.

சிறந்த வழி

நீங்க இப்ப பேசாமல் இருந்தாலே போதும். :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அண்ணா நம் மக்களுக்கு தெரியாததா என்ன நம்மளோடு இருந்த நோர்வே காரனே நமக்கு குழியடிக்கும் போது[எரிக்சொகெய்யும்,ஜப்பான் காரன் அகாசி ஆகியோர் ] ஏன் தற்பொழுது இந்த சண் டீவி,கலி[லை]ஞர் போன்ற தொலைகாட்சிகள் இப்படி செய்கின்ரன இவை அனைத்தும் நம் எதிகள் யார் நண்பர்கள் யார் என்பதை பறை சாற்றுகின்றன இப்போதே தெரிகிறதே ஆதலால் நாம் எல்லோரும் எடுக்கும் முடிவுகள் சரிதான் அது அந்த மக்களுக்கும் தெரியும் அல்லாவா இதை பெரிதுபடுத்தி எரியும் அடுப்பில் எண்ணெய்யை ஊத்தல் ஆகாது

அவர்களின் குடும்ப ஆட்சி இருக்கும் போது அனைத்தையும் தாங்கித்தான் ஆகவேண்டும் காலம் ஒரு நாள் மாறும் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்வார்கள் அதை ஈழ தமிழர்கள் மன்னிப்பார்களா அல்லது மறந்து ஏற்றுக்கொள்வார்களா என்பது எனக்கு தெரியாத ஒன்று :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் நம்பும்படி

சொல்லும் திறனிருந்தால்

சொல்லிலே உண்மை இல்லை

உள்ளதை உள்ளபடி

சொல்லும் மனிதனிடம்

உணர்ந்திடும் திறமையில்லை

உண்மையும் நம்பவைக்கும்

திறனும் அமைந்திருந்தால்

உலகம் அதை ஏற்பதில்லை

அது இருந்தால் இது இல்லை

இது இருந்தால் அது இல்லை

அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்

அவனுக்கிங்கே இடமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்படம் எல்லாம் ஒரு ஜுஜுபி! அடுத்துவருவம் (உவங்கள் தயாரிக்கிற, மற்ரும் பெரியவர் நடிக்கிற) படத்தை வேணுமெண்டால் ஒட்டு மொத்தமா (பாட்டில்லிருந்து படம்வரை) தவிருங்கோ..அடிச்சாலும் பொக்கெற்ரோட சேர்ந்து தோலும் கிளியிறமாதிரி அடிக்கோணும், சும்மா கீறிப்போட்டு விடக்கூடாது.

சிலபேற்ற மாற்றுக்கருத்துகளை நான் ஏற்க மறுக்கிறேன்...

தமிழ் நாட்டில் ஒரு மிகமுக்கியத்துவம் வாய்ந்த ஊடகம், உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு நீதிகிடைக்காவிடினும் அதை சுட்டிக்காட்டவேண்டும், தலையங்கமாக்கவேண்டும்.

அரசியலுக்காக இயங்கும் ஊடகங்களுக்கும் நேர்மையான ஊடகங்களுக்கும்மிடையில் வித்தியாசம் காண உலகத்தமிழ் மக்களுக்கு பகுத்தறிவு உண்டு. தயவுசெய்து தமிழனின் பகுத்தறிவை கேலி செய்யாதீர்.

எங்களின் ஆதரவும் வர்த்தகமும் உனக்கு வேணுமெண்டால், எங்கள் அபிப்பிராயத்தை நீ கேட்டே ஆகவேண்டும்.

நடந்துகொண்டிருப்பது எமதின அழிவு...இத்தருணத்தில் உன் கடமை செய்யப்படாவிட்டால் எப்போ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி திரைப்படத்தை புறக்கணித்தால் போல்த்தான் இருக்கும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாரை இன்னும் விட்டு வைப்பதாக இருக்கின்றீர்கள். யப்பானைப் புறக்கணிப்போம் என்றீர்கள். பலர் யப்பான் காரை ஓடவே பயப்படுகின்றார்கள். அதுவும் 90 ஆண்டு தயாரித்த கார்களைக் கூட..

எதிரியானவன் தன்னுடைய முழுப்பலத்தையும் பாவித்து தமிழ்மக்கள் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றான். இந்தப் போருக்காக அவன் எதையும் விட்டு வைத்திருக்கவில்லை. அப்படியான சூழ்நிலையில் இப்படியான சின்னச் சின்ன வேலைகளுக்கு நேரத்தை மினக்கெடுத்துவது பொருத்தமாகத் தெரியவில்லை.

ஏகனைப் புறக்கணித்தீர்கள். அதனால் யாருக்கு நட்டம் என்று பார்த்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்டது ஐங்கரன் தான். வேறு யாருமே துண்டைப் போடவே இல்லை.

இத்தனை மக்கள் அவலங்கள் நடந்தபோதும், அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், நான் கடவுளுக்கு சபேசன் விமர்சனம் எழுதிக் கொண்டிருந்தார். ஏன் அதையும் ஒரு காரணம் சொல்லிப் புறக்கணிக்கவில்லை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாரை இன்னும் விட்டு வைப்பதாக இருக்கின்றீர்கள். யப்பானைப் புறக்கணிப்போம் என்றீர்கள். பலர் யப்பான் காரை ஓடவே பயப்படுகின்றார்கள். அதுவும் 90 ஆண்டு தயாரித்த கார்களைக் கூட..

எதிரியானவன் தன்னுடைய முழுப்பலத்தையும் பாவித்து தமிழ்மக்கள் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றான். இந்தப் போருக்காக அவன் எதையும் விட்டு வைத்திருக்கவில்லை. அப்படியான சூழ்நிலையில் இப்படியான சின்னச் சின்ன வேலைகளுக்கு நேரத்தை மினக்கெடுத்துவது பொருத்தமாகத் தெரியவில்லை.

ஏகனைப் புறக்கணித்தீர்கள். அதனால் யாருக்கு நட்டம் என்று பார்த்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்டது ஐங்கரன் தான். வேறு யாருமே துண்டைப் போடவே இல்லை.

இத்தனை மக்கள் அவலங்கள் நடந்தபோதும், அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், நான் கடவுளுக்கு சபேசன் விமர்சனம் எழுதிக் கொண்டிருந்தார். ஏன் அதையும் ஒரு காரணம் சொல்லிப் புறக்கணிக்கவில்லை??

இது எல்லாம் எங்க சொல்ல முடியுது :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

இதில கஸ்ரப்படாமல் இதை செம்மையா செய்ய ஒரே வழி.. பல இலவச இனையத்தளங்களில் டிவிடி தரத்துடன் தரவேற்றம் செய்துவிட்டு அதன் லிங்குகளை அனைத்து தமிழ் இணையத்தளத்திலும் குடுத்துவிடுங்கள், ஒருதரம் தமிழ் படத்தை பார்த்தவன் மீண்டுமொருமுறை படத்தை பார்க்க தியேட்டர் வரை போகமாட்டான்.... அப்படி போனால் அவன் தெலுங்கன் எண்டு அர்த்தம்... :rolleyes:

Link to comment
Share on other sites

அகதி அந்தஸ்த்து : குடியுரிமைகளைக் கூட துறப்போம்.

வாறீங்களா சபேசன்?

இன்னும் யார் தயார்?

என்ன தலைவன் சும்மா பகிடிக்குத்தானே கேட்கிறீங்கள்?

Link to comment
Share on other sites

அப்ப அயன் படம் வர முன்னம் நிறைய பேருக்கு இப்ப படம் வருகுது எண்டது தெரிய படித்தி போட்டியள் எண்டு பாத்தால் .... சண் நிறுவனத்தாலை மிகுந்த பொருட் செலவிலை வந்த படம் இதுதான் எண்டு இன்னும் ஒரு விளம்பரம் ஓடி இருக்கிறதை பாக்கேக்கை புல் அரிக்குது...

(புறக்கணிப்புக்கு இங்கை ஆதரவை வழங்கி போட்டு வெளியாலை போய் படத்தை கட்டாயம் பாக்க வேணும் போல ஆர்வமா கிடக்குது... அப்பதான் நான் தேசீய வாதி )

அது சரி ஆந்திராவிலை காங்கிரஸ் கட்ச்சிக்கு திரிசா பிரச்சாரம் செய்ய போறாவாம் அவவின் படங்களை புறக்கணிக்க கூடாதோ...??

அவவை வைச்சு எடுத்து வாற படங்களை ஐங்கரன் முன்னமே வாங்காமல் பண்ண மாட்டியளோ.... ??? அது சரி ஐங்கரன் தமிழன் ஒருவனுக்கு சொந்தமான நிறுவனம் தானே எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன....

Link to comment
Share on other sites

சிலர் என்னை எதிர்த்து கருத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

தயாரிப்பாளரை இலக்கு வைத்து அவருடைய பொருளை எதிர்ப்பது அந்தப் பொருளுக்கு விளம்பரமாக அமையாது. சிறிலங்காவின் பெர்ருளாதாரத்தை இலக்காக கொண்டு சிறிலங்காப் பொருட்களை புறக்கணியுங்கள் என்பது அந்தப் பொருட்களுக்கான விளம்பரமா? நெக்ரோவை குடியாதீர்கள் என்று சொன்னதன் பிற்பாடு, அதைக் குடிப்பவர்கள் அதிகரித்து விட்டார்களா?

ஆனால் சில திரைப்படங்களுக்கான எதிர்ப்பு, அதற்கு விளம்பரமாக அமைந்ததும் உண்டு. உதாரணம் "பயர்"

லெஸ்பியன் உறவைச் சித்தரிக்கும் படம் என்பதால், அதை இந்துத்துவவாதிகள் எதிர்க்க முற்பட்டு, அந்தப் படத்திற்கு பெரும் விளம்பரத்தை செய்தார்கள்.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். படத்தில் உள்ள ஒரு விடயத்திற்காக, அந்தப் படத்தை எதிர்க்க முற்பட்டால், அது விளம்பரமாக அமைந்து விடும்.

உதாரணமாக

அயன் திரைப்படத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் வருகின்றது என்று சொன்னால், அப்படி என்னதான் சொல்லியுள்ளார்கள் என்ற ஆவலில் பலர் போய்ப் பார்ப்பார்கள்.

அல்லது

தமன்னா மேலாடை இன்றி நடித்து தமிழ் கலாச்சாரத்தை(?) கெடுத்து விட்டார் என்று சொல்லி எதிர்த்தாலும், பலர் போய்ப் பார்ப்பார்கள்.

அதாவது ஒரு படத்தில் சொல்லப்படுகின்ற விடயம், வருகின்ற காட்சிகள் போன்றவைகளை வைத்து திரைப்படங்களை எதிர்க்கின்ற பொழுது அவைகள் அந்தப் படத்திற்கு விளம்பரமாக அமைந்து விடுகின்றன.

எனக்கு "அயன்" படத்தின் கதையும் தெரியாது, அதில் வரும் காட்சிகள் பற்றியும் தெரியாது.

எமக்கு எதிராக செயற்படும் சன் நிறுவனம் எம்மிடம் விற்க முற்படும் ஒரு பொருளை இங்கே எதிர்க்கின்றோம். அது இன்றைக்கு அயனாக இருக்கின்றது. நாளை வேறாகவும் இருக்கலாம்.

இந்த எதிர்ப்பு ஒரு போதும் விளம்பரமாக அமையாது. இது தயா போன்றவர்களுக்கு புரியாது என்று நான் நம்பவில்லை.

ஆகவே நண்பர்களே!

சன் நிறுவனத்திற்கு எமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமா? இல்லையா?

வர்த்தக நிறுவனமாகிய சன் நிறுவனத்தின் பொருட்களை (தொலைக்காட்சி, திரைப்படங்கள்) புறக்கணிப்பதன் ஊடாக எமது எதிர்ப்பை தெரிவிப்பதை விட சிறந்த வழிகள் உண்டா?

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை தெரிவியுங்கள்

Link to comment
Share on other sites

தாயகத்தில் மக்கள் அவலப்படுகிறார்கள், நாங்கள் கேளிக்கை படம் ஒண்றை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்து கொண்டு இருக்கிறோம்...

இந்தளவு அவலத்திலையும் துன்பத்தையும் நினைக்காமல் கேளிக்கை படம் பார்க்க ஒருவன் தியட்டருக்கு போவானாக இருந்தால் அவன் எந்த கோரிக்கையையும் ஏற்று போகாமல் இருக்க போவதில்லை... அவனுக்காக மினக்கெடும் சபேசனை பார்க்க பாவமாகவே இருக்கிறது...

இங்கை எனது கோரிக்கை தேவை இல்லாது மக்களின் மனதை கேளிக்கை பக்கம் திருப்ப வேண்டாம் என்பதே... அதோடு புலம்பெயர்ந்த மக்கள் இந்த அவல சூழலில் கேளிக்கை பக்கமாக தான் இருக்கிறார்கள்.. அந்த கேளிக்கைகளில் ஒரு படத்தை புறக்கணியுங்கள் எண்று கேட்ப்பது இந்த மக்களை அவமதிக்கும் செயல்...

அதை விடுத்து வணங்கா மண் கப்பலுக்கும் பொருள், பணம் கொடுக்கும் செயல்களுக்கும் பிரச்சாரம் செய்து பொழுதை போக்குவது நல்லது...

அஜித்தின் ஏகன் புறக்கணிப்பை பற்றி லக்கிலுக்கின் பதிவு ஒண்றில் இப்படி எழுதி இருக்கிறார்... ( எனக்கு அதில் முழுமையான உடன்பாடு...)

http://www.luckylookonline.com/2008/11/blog-post.html

அஜித்தின் பேட்டியை வாசித்து உடனே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டு விட்டார்கள். இவர்களுக்கும் தமிழ்நாட்டு விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமில்லை. அஜித்தின் படத்தை இந்த ஸ்டேட்மெண்டால் புறக்கணிக்கிறார்களாம். அஜித்தின் படங்கள் தொடர்ந்து த்ராபையாக வருகிறது, புறக்கணிக்கிறோம் என்று சொன்னாலாவது நியாயம். போராட்டம் பற்றிய அறிவில்லை என்று ஒத்துக்கொண்டவரின் நேர்மையை பாராட்டுவதை விட்டு விட்டு அவர் படத்தை புறக்கணிப்பது அநியாயம் அல்லவா? தேவையில்லாமல் மட்டமான படமான ஏகனுக்கு சென்சேஷனல் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள் சிலர். இதனால் இன்று நடக்கும் உண்ணாவிரதத்துக்கு கறுப்பு சட்டையோடு வந்து 'நானும் தமிழன் தான்' என்று பறைசாற்றியிருக்கிறார் அஜித்குமார். என்ன கொடுமை?

தமிழ் திரையுலகின் ஒட்டுமொத்த போராட்டத்தையும், உணர்வையும் கொச்சைப்படுத்துவதல்ல நமது நோக்கம். வீரன் வேலுத்தம்பி, கேப்டன் பிரபாகரன் என்றெல்லாம் படத்துக்கு பெயர் வைத்து தங்கள் உணர்வை இதே திரையுலகம் வெளிப்படுத்திய காலமும் உண்டு. பாரதிராஜா, சீமான், அமீர், மகேந்திரன், ராம.நாராயணன், பாலுமகேந்திரா போன்ற ஏராளமான திரையுலகினரின் உணர்வுகளை சந்தேகம் கொண்டால் நம் நாக்கும் அழுகிவிடும்.

Link to comment
Share on other sites

சீனா எம்மை அழிக்க ஆயுதம் தருவதாலும் ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை படுகொலைகளை பற்றி பேசுவதை தடுத்தமையாலும் நான் இன்றில் இருந்து சீன பெண்களை...சீ சீ... சீன பொருட்களை புறக்கணிக்க யோசித்து இருக்கிறன். ஏனெனில்

> எனக்கு இராஜீய உறவுகளை வளர்ப்பது என்பதே என்ன என்று தெரியாது

> உலகின் எந்த ஒரு குட்டான் குட்டி நாடுகள் அல்லது இனக் குழுமத்தின் ஆதரவைக் கூட எடுக்க தெரியாது

>எம்மை எதிர்ப்பவர் அனைவரையும் எதிர்த்தே பழக்கப் பட்டு போனதால்

> எந்த சர்வதேச உதவியும் இன்றி என் வீட்டின் உறுப்பினர்கள் உதவியினால் மாத்திரமே என் வீட்டில் பால் பொங்க எல்லாக் காலத்திலும் முடியும் என்ற வைராக்கியம் இருப்பதால்

>நான் தமிழன் என்பதால் (றோயல் family)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா எம்மை அழிக்க ஆயுதம் தருவதாலும் ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை படுகொலைகளை பற்றி பேசுவதை தடுத்தமையாலும் நான் இன்றில் இருந்து சீன பெண்களை...சீ சீ... சீன பொருட்களை புறக்கணிக்க யோசித்து இருக்கிறன். ஏனெனில்

> எனக்கு இராஜீய உறவுகளை வளர்ப்பது என்பதே என்ன என்று தெரியாது

> உலகின் எந்த ஒரு குட்டான் குட்டி நாடுகள் அல்லது இனக் குழுமத்தின் ஆதரவைக் கூட எடுக்க தெரியாது

>எம்மை எதிர்ப்பவர் அனைவரையும் எதிர்த்தே பழக்கப் பட்டு போனதால்

> எந்த சர்வதேச உதவியும் இன்றி என் வீட்டின் உறுப்பினர்கள் உதவியினால் மாத்திரமே என் வீட்டில் பால் பொங்க எல்லாக் காலத்திலும் முடியும் என்ற வைராக்கியம் இருப்பதால்

>நான் தமிழன் என்பதால் (றோயல் family)

உண்மை தான்.

எங்கள் எதிரி சிங்கள அரசு மட்டும் தான் என்பதைப் பலர் மறந்து போகின்றார்கள்

Link to comment
Share on other sites

ஏகன் படப் புறக்கணிப்போடு இதை ஒப்பிடுவது தவறானது.

அயன் படப் புறக்கணிப்பு பற்றிய விவாதம் சூர்யாவையோ, தமிழ் திரையுலகத்தையோ இலக்காகக் கொண்டது அன்று.

எமக்கு எதிரான பரப்புரைகளுக்கு துணைபோகும் ஊடகம் ஒன்றிற்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கும் ஒரு செயற்பாடாக, அதனுடைய விற்பனைப் பொருள் ஒன்றைப் புறக்கணிப்பது பற்றியே இங்கே நான் பேசுகிறேன்.

Link to comment
Share on other sites

சன் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையில் எங்கள் பிரச்சினை பற்றி அவர்கள் எழுதுவதை படித்தாலே ரத்தம் கொதிநிலைக்கு போறதுண்டு. பிறகு இவர் எங்கட இலங்கை அமைச்சர் 'இந்தியாதான் யுத்தத்தை நடத்துது" என்று சொன்னபிறகு எனக்கு விளங்கிட்டுது... ஏன் தினகரன் முதலான சில பத்திரிகைகள் இப்படி விஷத்தை கக்கினம் என்று.!! எல்லாம் 'றோ" செயல். இதற்கு விலைபோகாத நக்கீரன் போன்ற இதழ்களுக்கு தலைவணங்கவேணும்!

பணமுதலைகள் மேலும் கொழுக்க பணத்தை கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கட்டும். ஒவ்வொருவரும் தானே உணர்ந்தால் படம்பார்க்க தியேட்டருக்கு போகமாட்டினம். ஆனா இஞ்ச ரிலீஸ் பண்ணுறது ஐங்கரனாம்.. சன் நிறுவனத்துக்கு நிறைய பணம் குடுத்துத்தான் அயனை வாங்கி இருப்பினம்! ஓகே அவர்களும் பாவம்தானே! படத்தை விரும்பிறவை பார்க்கட்டுமே. என்ன வந்திச்சு! ( அடப்பாவிளா நான் ஐங்கரனிடம் இருந்து வாங்கி படம் விநியோகம் பண்ணுறன் எண்டு நினைச்சிடாதீங்கோ :rolleyes: )

மற்றது முக்கியமான விசயம் இப்படியான விசயங்கள் எழுதேக்கை வேற பெயரில சபேசன் எழுதுவது உத்தமம். ஏனென்டா உங்கள் எதிர்ப்பாளர்கள் உங்கள் மூலமா கருத்தை பார்க்காமல் கருத்தை கருத்தா பார்த்து கருத்து வைப்பினம். என்ன நான் சொல்லுற கருத்து சரியா?

ஐயோ நிழலி நான் உங்களை சொல்லவில்லை :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையில் எங்கள் பிரச்சினை பற்றி அவர்கள் எழுதுவதை படித்தாலே ரத்தம் கொதிநிலைக்கு போறதுண்டு. பிறகு இவர் எங்கட இலங்கை அமைச்சர் 'இந்தியாதான்

மற்றது முக்கியமான விசயம் இப்படியான விசயங்கள் எழுதேக்கை வேற பெயரில சபேசன் எழுதுவது உத்தமம். ஏனென்டா உங்கள் எதிர்ப்பாளர்கள் உங்கள் மூலமா கருத்தை பார்க்காமல் கருத்தை கருத்தா பார்த்து கருத்து வைப்பினம். என்ன நான் சொல்லுற கருத்து சரியா?

ஐயோ நிழலி நான் உங்களை சொல்லவில்லை :rolleyes:

:):rolleyes::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.