Jump to content

நெஞ்சம் மறக்குமா


Recommended Posts

கேட்ட பாடல்கள் எழுத்து மூலம் பார்ப்பதில் சந்தோசம்

வாழ்த்துக்கள் தொடர்த்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தூயா தொடர்ந்து எழுதுவதினை நிறுத்திவிட்டீர்கள். தொடர்ந்து ஈழப்படல்களினை எழுதுங்கள்

Link to comment
Share on other sites

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் (2)

பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு

போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும் (2)

ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்

பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்

போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள் - சாவை

எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள்

பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள்

பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு

கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு

அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள்

அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு

போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

Link to comment
Share on other sites

  • 2 months later...

பாடியவர்:-வர்ண.இராமேஸ்வரன்

இசைத்தட்டு:-கரும்புலிகள்

தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா -நான்

சாகும்நேரம் கடலே நீயும் மூசம்மா

போரிற் குதித்த தாயகமண்ணே நீயும் பேசம்மா -கரும்

புலியிவன் பாடும் பாடலை எங்கும் பாடம்மா

நாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள்

நம்பவேண்டும் நாளை தமிழ்ஈழமென்றுமே

நீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன்

நெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன்

சின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ்

தேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்கள்

நேற்று வரை அடுப்படியில் நீ உறங்கினாய் -உந்தன்

நீளவிழி மை கரைய நீ கலங்கினாய்

ஆற்றலுள்ள தலைவன் வழி காட்டி நிற்கிறான் -எந்தன்

அன்புத் தங்கை அச்சமில்லை என்றெழும்புவாய்

உங்களுக்காய் இன்று போரைத் தொடுக்கிறேன் -இந்த

ஊருலகம் அறியாமல் வெடிக்கிறேன்.

அகதியாகி உலகமெங்கும் அலையும் தோழனே -எங்கும்

அச்சத்தோடு ஒதுங்கி வாழும் எந்தன் நண்பனே

பிச்சையேற்று அடிமையாகி வாழும் வாழ்வினை -தூக்கிப்

போட்டெரித்து விட்டெழும்பு புலிகள் சேனையில்

மானமதே வாழ்வு தரும் என்றறிந்திடு -வெடி

மருந்துடனே நான் புகுந்தேன் கண் திறந்திடு!

Link to comment
Share on other sites

நிதர்சன் தம்பியின் இணையத்தளத்திலும் ஈழத்துப்பாடல்கள் கேட்கலாம், கீழ் உள்ள இணைப்பில் ஒளிப்பட பாடல்களை பார்க்கலாம்!

http://www.vannithendral.net/index.php?opt...id=34&Itemid=52

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி அண்ணா....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

செவ்வானம் சிவந்தது ஏன்?

அது செங்கொடியை நினைப்பதற்கே

செங்கொடியின் மத்தியிலே

ஒரு சிறுத்தை நின்று சிரிப்பது ஏன்?

[இமயமலை உச்சியிலே

முன்னர் ஏற்றி வைத்த கொடியது போல்] *2

அமைந்தது எங்கள் புலிகொடியே

அதன் போல்அணிவகுத்து நாம் நடப்போம்

(செவ்வானம் சிவந்தது ஏன்?)

[அந்நியரை நம்பி நின்றால்

நாம் அன்னல் உற வேண்டுமென்றார்] *2

சொன்ன மொழி தவறியதோ

பட்ட துன்பம் எங்கும் மாறியதே

(செவ்வானம் சிவந்தது ஏன்?)

[அண்ணன் பிரபாகரன் போல்

இங்கு ஆற்றல் மிகு தலைவன் உண்டோ] *2

எண்ணெம் எல்லாம் இனியும் உண்டோ

புலியுடன் இளைஞர்கள் நான் அணி திரள்வோம்

(செவ்வானம் சிவந்தது ஏன்?)

வேங்கை வழி சென்றிடுவோம்

இனி வேறு வழி மறந்திடுவோம்

தூங்குவதில் பயனில்லையே

அண்ணன் துயர் துடைக்கும் தலைவனென்போம்

(செவ்வானம் சிவந்தது ஏன்?

அது செங்கொடியை நினைப்பதற்கே

செங்கொடியின் மத்தியிலே

ஒரு சிறுத்தை நின்று சிரிப்பது ஏன்?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணை விழியாய் மழலை மொழியாய்

தாயின் பரிவாய் தமிழீழ மகராசன் வந்தானே வந்தானே

உறுதி உளமாய் உணர்வுக்களமாய்

தமிழர் பலமாய் தமிழீழ மாமன்னன் வந்தானே ஹேய் வந்தானே

வந்தானே.. வந்தானே... வந்தானே....

கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே

ஈழ மண்ணினை தாங்கும் கருவறை

இவன்தான் எங்கள் வாழ்வின் கலங்கரை

இதயந்துடிக்கும் ஒவ்வொரு நொடியும்

உச்சரிக்குது தலைவன் பெயரையே

--கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே-

[பெண்ணுக்குள் புது வேகம் தந்தான்

எங்கள் கண்ணிற்குள் ஒளியேற்றி வைத்தான்](2)

பெண்ணுக்குள் புது வேகம் தந்தான்

எங்கள் கண்ணிற்குள் ஒளியேற்றி வைத்தான்

பெண்ணினம் சந்திக்கும் துன்பங்கள் எல்லாம்

வென்றிடும் வீரத்தைத் தந்தான்

அண்ணனின் செயல் சிந்தனை கொண்டு

[செல்லுவோம் எங்கும் வெல்லுவோம்](2)

அன்பு மழையினில் நனைந்திடும் தமிழருக்கு

ஆசத் தமிழ்க் குழந்தை

அடிமை செய்திட நினைத்திடும் எவருக்குமே

பாயும் புலி வேங்கை

வீரம் கொண்டு விடுதலை எழுதும்

ஆயுதப் புதுக் கவிஞன்

ஏழை இனத்தின் வாழ்வில் கிடைத்த

இலட்சியப் பெருமனிதன்

இருளாய் இருந்த தமிழர் வாழ்வில்

பிரபாகரன் வெளிச்சம்

அட அவனின் காலம் ஈழம் மலரும்

அடிமைத் தனம் தெறிக்கும்

இடையினில் என்ன எதிரியே யோசனை

தமிழினம் விழித்திருக்கும்

பார் இன்னும் இருக்குது தலைவனின் சாதனை

காலம் காத்திருக்கும்

தமிழர்கள் முழக்கம் தடைகளைப் பிளக்கும்

இதயந்துடிக்கும் ஒவ்வொரு நொடியும்

உச்சரிக்குது தலைவன் பெயரையே

-கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே-

தமிழர் இனத்தின் இறைமை எல்லாம்

தொலைந்த காலத்தில்

அதை தாங்கி வந்து வீரம் கொண்டான்

தலைவன் ஈழத்தில

எளிமை வாழ்வும் எதிலும் துணிவும்

இவனின் வசமிருக்கும்

எம் புலிகள் படையால் சரிதம் எழுத

இனமே நிமிர்ந்திருக்கும்

விடுதலை கிடைக்கும் சாதனை படைக்கும்

இதயந்துடிக்கும் ஒவ்வொரு நொடியும்

உச்சரிக்குது தலைவன் பெயரையே

கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே

ஈழ மண்ணினை தாங்கும் கருவறை

இவன்தான் எங்கள் வாழ்வின் கலங்கரை

ஈழ மண்ணினை தாங்கும் கருவறை

இவன்தான் எங்கள் வாழ்வின் கலங்கரை

தமிழர்கள் முழக்கம் தடைகளைப் பிளக்கும்

இதயந்துடிக்கும் ஒவ்வொரு நொடியும்

உச்சரிக்குது தலைவன் பெயரையே

கோடி பூக்களுடன் உயிருக்குள்ளே திருவிழா

சந்தோசமே அடடா சந்தோசமே

கூடி ஆடுகின்றோம் தலைவனுக்கு பெருவிழா

உற்சாகமே ஊரெல்லாம் உற்சாகமே

பாடல் ஒலிவடிவில் கேட்பதற்கு -----> http://worldtamilpress.com/premfiles/Eelasongs.smil

நன்றி உலகத்தமிழர் ஊடகம்

Link to comment
Share on other sites

அழகான பாடல்...எங்களுடம் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி :)

Link to comment
Share on other sites

நண்பர்களே! எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா? கீழ் உள்ள இசைத்தட்டுகளில் இருந்தும் முடிந்தளவு பாடல் வரிகளை தரமுடியுமா? இவைகள் என்னிடம் உள்ள சில பாடல்கள் இவற்றை பாடல் வரிகளுடன் இணையத்தில் தரவேற்றம் செய்ய இருக்கின்றேன்! இந்த முயற்சிக்கு உங்கள் உதவி தேவை செய்வீர்களா?

tamil6kl.jpg

Link to comment
Share on other sites

கீழ் உள்ள இணைப்பை பாருங்கள் இதில் அழகாக செய்யலாம் என்று நினைத்தேன்! ஆனால் அவர்களின் இணையப்பக்கம் எனக்கு பிடிக்கவில்லை! உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்! வேற ஏதாவது நல்ல இணையம் இருந்தால் சொல்லுங்கள் , முயற்சி செய்து பார்ப்போம்

http://www.esnips.com/web/maveerar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும்

கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்

[புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்

எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே

தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே

இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே

தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த தீரர்களே

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே

உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே

காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும்

இனி காலம் யாவும் நீளும் போது எங்கள் பெயர் வெல்லும்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்

உயிர் ஓடும் குருதி யாவும் சொரியும் நிலத்தில் நிற்கின்றோம்

தலைவன் வழியில் புலிகள் அணியாய் நடந்து செல்கின்றோம்

வரும் தடைகள் யாவும் உடையும் உடையும் நிமிர்ந்த கொள்கின்றோம்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

ஒலிவடிவில் பாடலினைக் கேட்பதற்கு --->>>

http://worldtamilpress.com/premfiles/vinva...arumegankal.smi

நன்றி உலகத்தமிழ் ஊடகம்

Link to comment
Share on other sites

நல்ல பாடல்....நன்றி பிறேம்

Link to comment
Share on other sites

நன்றி அன்பர்களே...எல்லா பாடல்களும் கருத்தும் விடுதலை வேட்கையும் உள்ளவை...

என்னை மிகவும் பாதித்தது கீழ்க்கண்ட பாடல்....

அடைக்கலம் தந்த வீடுகளே போய்வருகின்றோம் நன்றி...

என்ற பாடல்.

நன்றி.

Link to comment
Share on other sites

வரிகளை முழுமையாக போடுங்கள் யூகே. பெடியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யூலை 05 கரும்புலிகள் நாளினை முன்னிட்டு கரும்புலிகள் நினைவு தாங்கிவரும் பாடல்......

பாடல் இசைத்தட்டு: கரும்புலிகள்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

நாளை சென்றுவீழும் சேதிசொல்ல இங்கெவரால் முடியும்

வாழ்க்கை என்னும் பயணம் இதை மாற்றிடவா முடியும்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

பூமியிலே சாகும் தேதி யாரிற்கிங்கு தெரியும்

கரும்புலிகளிற்கு மட்டும் தானே போகும் தேதி புரியும்

சாமிகளும் வாழ்த்திவிழும் சரித்திரங்கள் இவர்கள்

தமிழ் சந்ததியில் அழியாத சத்தியத்தின் சுவர்கள்

சத்தியத்தின் சுவர்கள்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

வாழ்வினிலே வசந்த காலம் துறந்தவர்கள் சிலரே

இளம் வாசலிலே இளமைராகம் மறந்தவர்கள் சிலரே

கரும்புலிகள் விரும்பி இங்கு இருப்பிழந்து போவார்

எங்கள் கண்ணெதிரே நின்றபின்னர் உருக்குலைந்து போவார்

உருக்குலைந்து போவார்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

தோளில் ஏற்றிப் போவதற்கு நாலு பேர்கள் வேண்டும்

இந்த தோள்கள் இன்றி கரும்புலியின் தீயின் வாய்கள் தீண்டும்

வாழும் காலம் நீள்வதிலே வந்திடுமா பெருமை

இல்லை வாய்கள் நூறு போற்றிப்பாட சாவதுதான் பெருமை

சாவதுதான் பெருமை

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்

அச்சமின்றி குண்டழைத்து ஆடிப்பாடிப் போவார்

எங்கள் அண்ணன் பெயர் சொல்லிச் சொல்லி கரும்புலிகள் சாவார்

சக்கை வண்டி தன்னில் ஏறி சரித்திரங்கள் போவார்

வரும் சந்ததியின் வாழ்வுக்காக தங்கள் உயிர் ஈவார்

தங்கள் உயிர் ஈவார்

இங்கு வந்து பிறந்த பின்பே இருந்து இடம் தெரியும்

நாளை சென்றுவீழும் சேதி சொல்ல இங்கெவரால் முடியும்

வாழ்க்கை என்னும் பயணம் இதை மாற்றிடவா முடியும்

வாழ்க்கை என்னும் பயணம் இதை மாற்றிடவா முடியும்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு

நன்றி தமிழர்இணைப்பகம்

Link to comment
Share on other sites

பிறேம், பாடலையும் பாடல் வரிகளையும் தந்தமைக்கு மிக்க நன்றி..

கரும்புலிகள் நினைவாக நீங்கல் செய்யும் இந்த விடயம் பாராட்டபட வேண்டியது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலி மறவர் நினைவுகளுடன் மீண்டும் ஓர் பாடல்

பாடல் இடம்பெற்ற இசைத்தட்டு 'சத்திய வேள்வி'

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

கண்ணில் நீர்க்கோலம் ஆகின்ற நெஞ்சங்களே

நெருப்பாகி வாருங்களே நெருப்பாகி வாருங்களே

கருவேங்கை வெடியாகிப் போகின்ற நேரம்

காற்றிற்கும் விழியோரம் கசிகின்ற ஈரம்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

இமைமூடும் நேரத்தில் வெடியாகினார்

இதழோரம் சிரிப்போடு விழி மூடினார்

அமைகின்ற தமிழீழ உயிராகினார்

அமைகின்ற தமிழீழ உயிராகினார்

அழியாத வரலாறு உருவாகினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

தெரியாத முகமாக நடமாடினார்

தெளிவான உணர்வோடு படமாகினார்

வரிவேங்கை கருவேங்கை எனவாகினார்

வரிவேங்கை கருவேங்கை எனவாகினார்

வெடியாகி தமிழீழ விடிவாகினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

நடமாடும் தெய்வங்கள் இவராகினார்

நமதீழத் திருநாட்டின் கருவாகினார்

பகைவீழும் படியாக புயலாகினார்

பகைவீழும் படியாக புயலாகினார்

பலகோடி ஜென்மங்கள் குடியேறினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

பாடலினை ஒலி வடிவில் கேட்பதற்கு

நன்றி தமிழர் இணைப்பகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகள் இசைத்தட்டு

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

வரும் வார்த்தைகளால் உம்மை தொழ முடியாது

தாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாது

எங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[நேற்று வரை இங்கு பூத்திருந்தீர்

பெரும் நெருப்பெனப் போகவாக் காத்திருந்தீர்] (2)

போற்றியே பாடிட மொழிகளில்லை

கரும்புலிகளின் நினைவுகள் அழிவதில்லை

வாய்விட்டுப் பெயர் சொல்லி அழமுடியாது

[காற்றுடன் காற்றெனப் போனீர்கள்

அந்தக் கடலிலும் அலையென ஆனீர்கள்] (2)

வேற்றுடலோடு இங்கு வாருங்கள்

உங்கள் வேரினில் நீர் தெளித்தாடுங்கள்

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[எதிரிக்கு நீங்களோ வெடிகுண்டு உம்மை இழந்த பின் இருக்கிறோம் இடியுண்டு] (2)

விதியினை மாற்றிய புலியென்று

இங்கு வீசிடும் காற்றிலும் பெயருண்டு

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[இந்த மண் யாரிற்கும் பணியாது தமிழீழமண் எதிரிமுன் குனியாது] (2)

பொங்கிடும் உணர்வுகள் உறையாது கரும்புலிகளின் வேகங்கள் குறையாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

வரும் வார்த்தைகளால் உமைத் தொழமுடியாது

தாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாது

எங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

பாடல் ஒலிவடிவில்

நன்றி தமிழர் இணைப்பகம்

Link to comment
Share on other sites

பிறேம் பாடலையும் பாடல் வரிகளையும் இணைத்தமைக்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.