Jump to content

்வணங்கா மண்” மூழ்கடிக்க போட்டி பொடும் இலங்கையும் இந்தியாவும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஒரு இணையத்தில் குறிபிடபட்டுள்ளது

சர்வதேச கடலில் ’எம்.வி.அகத்’ என்ற கப்பலில் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கிட்டு இன்னும் சில புலி உறுப்பினர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலை இந்திய உளவுத் துறை மத்திய அரசுக்கு அறிவித்தது. 1993 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி இந்திய கடற்படையின் இரண்டு யுத்தக் கப்பல்கள் கிட்டுவின் கப்பலை சர்வதேசக் கடலில் வைத்து சுற்றி வளைத்தன. இத்தகவலை கிட்டு உடனடியாக தொலைத் தொடர்பு மூலம் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து, கிட்டுவின் கப்பல் இந்திய கடற்படையினால் சுற்றி வளைக்கப்பட்ட செய்தியை புலிகளின் தலைமை ஊடகங்களுக்கு கசியவிட்டது. ஆனால், இந்தியா அரசு செய்தி எதனையும் உடனடியாக வெளியிடவில்லை.

இதற்கிடையில் இந்திய கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த கிட்டு தனது பயணம் தொடர்பாகவும், சர்வதேசக் கடற்பரப்பினூடாக பயணம் மேற்கொள்வோரை கைது செய்யும் உரிமை இந்திய நாட்டுக்கு இல்லையெனவும் இந்திய உயரதிகாரிகளுடன் மேற்கொண்ட தொலைத் தொடர்புகளில் தெரிவித்த போதும் இந்திய கடற்படை கிட்டுவின் கப்பலை சென்னை துறைமுகத்துக்கு நேரே இந்திய கடல் எல்லைக்குள் கொண்டுவந்தது. கிட்டுவும் ஒன்பது புலி உறுப்பினர்களும் சரணடையுமாறு கேட்கப்பட்டனர். சரணடைய மறுத்தால் கப்பல் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவீர்கள் எனவும் எதிர்த்தால் கப்பல் மூழ்கடிக்கப்படும் எனவும் இந்திய கடற்படையால் எச்சரிகை விடுக்கப்பட்டது. இதையடுத்து கப்பல் மாலுமிகள் அனைவரும் கடலில் குதித்து விட்டனர். தனது கப்பலுக்குள் பாரிய குண்டுகளை வெடிக்க வைத்து கப்பலைத் தீ மூட்டிய கிட்டு சக புலி உறுப்பினர்கள் ஒன்பது பேருடன் தற்கொலை செய்து கொண்டார்.

அண்மைய இந்திய இராணுவ வட்டார செய்திகளின் படி, இந்திய கடற்படையின் `கிதோர் சென்னா` என்ற யுத்தக் கப்பல் தென் பிராந்தியத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்திய கடற்படை, வான்படை மற்றும் கடலோர காவல்படையினர் கூட்டிணைந்த வகையில் இந்திய பிராந்திய கடல் பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தென்னிந்திய கடல் பகுதிக்கு `கிதோர் சென்னா` என்ற யுத்தக் கப்பலின் தலைவர் லோட்சன் தலைமையில் கடற்படையினர் கடல் வழி கண்காணிப்புக்காக வந்தடைந்துள்ளதுடன் பாதுகாப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

’எம்.வி.அகத்’ என்ற கப்பலுக்கு நிகழ்ந்த கதிதான் அடுத்த மாதம் ஏப்பிரலில் புலிகள் ஆதரவு அமைப்புகளால் பிரித்தானியாவில் இருந்து இலங்கை நோக்கி அனுப்படவுள்ள ‘வணங்கா மண்’ கப்பலுக்கும் ஏற்படும்மென இராணுவத்துறை ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

’வணங்கா மண்’ வணங்குமா? வணங்காதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணங்கா மண் கப்பல் மனிதாவிமான அடிப்படையில் செஞ்சிலுவை சங்க கொடியோடு செல்ல இருப்பதால் அதை தடுக்க நினைத்தால் சர்வதேச அரங்கில் பெரும் அவப்பெயர் ஏற்படும் . ஏற்கெனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பெயர் நாரிக்கிடகிறது. அதால் அப்படி ஏதும் நடக்காது என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

வணங்கா மண்ணுக்கு பலரும் பங்களிக்கிறார்கள்.

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.