Jump to content

அவளின் காதலன்


Recommended Posts

பல நாள் தவமிருந்து

விரதங்கள் பல பிடித்து

கிடைத்த வரம் இவள்

கொட்டிக்கிடக்கும் சந்தோசத்தில்

மணம் வீசும் மலராய்

தினமும் வளர்ந்து மங்கையானாள்

வந்தான் ஒருவன்

மலர் என்றான் தேன் என்றான்

உலகில் நீயே அழகி என்றான்

அன்பிற்கு நீயே அகராதி என்றான்

மயங்கிப் போனாள்

அன்பிற்கு புது அர்த்தம் சொன்னான்

காதலை கண்ணால் கற்பித்தான்

உறவை புது வழியில் ஒப்பித்தான்

அவனின் காதல் மொழியில்

அவள் சிறைப்பட்டுப் போனாள்

தன்னை மறந்து தன்னையே கொடுத்தாள்

பழத்தை உண்டதும் அவன் பறந்து போனான்

காத்திருந்தாள் காதலன் வரவில்லை

காதல் பொய்த்த பின்னும் காத்திருக்கிறாள்

காதலனுக்காக அல்ல

சூதுவாது எதுவும் அறியா

அந்த பிஞ்சு உயிருக்காய் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையாய் வந்த கதை நன்று .........சிலரது வாழ்கை இப்படியும் ஆகி விடுவதுண்டு....

.அவளது மனஉறுதி பாராட்ட படவேண்டும். நிகே பாராட்டுக்கள். .... ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னை மறந்து தன்னையே கொடுத்தாள்

பழத்தை உண்டதும் அவன் பறந்து போனான்

காத்திருந்தாள் காதலன் வரவில்லை

காதல் பொய்த்த பின்னும் காத்திருக்கிறாள்

காதலனுக்காக அல்ல

Link to comment
Share on other sites

நன்றி நிலாமதி அக்கா

உங்கள் கருத்துக்கு

காதல் என்ற பெயரால் பல பெண்கள் ஏமாந்து தமது வாழ்க்கையையே

தொலைக்கும் சம்பவங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

எப்போதுதான் இந்த பெண்கள் நல்லவர்களை பிரித்து உணரக் கற்றுக்கொள்வார்களோ....................

Link to comment
Share on other sites

காதலில் கொஞ்சம் காமமும் உண்டு என்று கவிஞர்கள் சொல்வர் அதுக்காக ..............

நன்றி pirasaanth

உங்கள் கருத்துக்கு

காதலில் காமம் இருக்கலாம்

அனால் காமமே காதலாகி விடக்கூடாது

இன்று காதலே வியாபாரமாகிவிட்டதே...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அழகு.

காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதே வழமையாகிட்டுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலில் ஏமாற்றம் என்பது பெண்ணுக்கு மட்டும் என்றில்லை. ஆண்களுக்கும் அந்த வலி ஏற்படுவதுதான். சில சமயங்களில் அது ஆண்களுக்குச் சம்பவமாகவும், பெண்களுக்குச் சரித்திரமாகவும் அமைந்துவிடுவதுண்டு!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படாதைங்கோ சுவி

suvy Posted Today, 05:20 PM

காதலில் ஏமாற்றம் என்பது பெண்ணுக்கு மட்டும் என்றில்லை. ஆண்களுக்கும் அந்த வலி ஏற்படுவதுதான். சில சமயங்களில் அது ஆண்களுக்குச் சம்பவமாகவும், பெண்களுக்குச் சரித்திரமாகவும் அமைந்துவிடுவதுண்டு!!!

உங்களைப்பற்றியும் யாராவது கதைப்பினம் பொறுமையாக இருங்கள்.

அது சரி என்ன அனுபவமோ?

Link to comment
Share on other sites

நன்றி கறுப்பி உங்கள் கருத்துக்கு

ஒருவரை பார்த்தவுடன் ஏற்படும் அதீத நம்பிக்கைதான் ஏமாற்றத்தில் முடிகிறது .

இதே போல் கண்டவுடன் வரும் காதல்தான் தோல்வியில் முடிகிறது .

Link to comment
Share on other sites

suvy Posted Today, 04:50 PM

காதலில் ஏமாற்றம் என்பது பெண்ணுக்கு மட்டும் என்றில்லை. ஆண்களுக்கும் அந்த வலி ஏற்படுவதுதான். சில சமயங்களில் அது ஆண்களுக்குச் சம்பவமாகவும், பெண்களுக்குச் சரித்திரமாகவும் அமைந்துவிடுவதுண்டு!!!

நன்றி சுவி உங்கள் கருத்துக்கு

உண்மைதான் சுவி .என்ன செய்வது ஏமாறுபவர்கள் தம் குணத்தை மாற்றிக்கொள்ளும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கவியில் பொருட் பிழை உண்டு.

காதலன் வந்தான்.. புளுகினான் தள்ளினான்.. அதில் மயங்கினாள்.. தன்னையே கொடுத்தாள்.. அப்புறம் காத்திருக்கிறாள்.. பிஞ்சு உயிருக்காய்.

ஏன் அபோசன் செய்ய மறந்தாள்..???! பறந்து போனதின்.. எச்சம் எதற்கு.. ஏன் அதற்காக காத்திருக்கனும்..??!

மயக்க என்ன காதல்.. போதையா.. போதை வஸ்தா..?! அது போதையல்ல. எல்லாரும் சுயபுத்தியோட தான் காதலிக்கினம். தெரிஞ்சு கொண்டு தான் மனசால மட்டுமல்ல உடலாலும் உறவாகினம். பிறகு பழி மட்டும்.. பழத்தை தின்றிட்டு பறந்திட்டான் என்று ஒப்பாரி வைக்கினம். அவை செய்த தவறுகளை இலகுவா மறந்திடினம்.. இல்ல மறச்சிடினம்.

காய் பழமாகி தின்னும் வரை அனுமதிக்கேக்க.. போற அறிவு ஏன் அப்புறம் மட்டும் திட்ட வந்திடுது..??!அதையும் மறந்து தொலைக்க வேண்டியதுதானே..! :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nedukkalapoovan Posted Today, 06:07 PM மயக்க என்ன காதல்.. போதையா.. போதை வஸ்தா..?! அது போதையல்ல. எல்லாரும் சுயபுத்தியோட தான் காதலிக்கினம். தெரிஞ்சு கொண்டு தான் மனசால மட்டுமல்ல உடலாலும் உறவாகினம். பிறகு பழி மட்டும்.. பழத்தை தின்றிட்டு பறந்திட்டான் என்று ஒப்பாரி வைக்கினம். அவை செய்த தவறுகளை இலகுவா மறந்திடினம்.. இல்ல மறச்சிடினம்.

காய் பழமாகி தின்னும் வரை அனுமதிக்கேக்க.. போற அறிவு ஏன் அப்புறம் மட்டும் திட்ட வந்திடுது..??!அதையும் மறந்து தொலைக்க வேண்டியதுதானே..! :D

உதுகள சொல்ல போனால் பெண்களுக்கு எதிராக பேசுராங்கள் என்றுசொல்லுராங்கப்பா என்ன உலகமடா இது :(

அண்ணாத்தை நெடுக்கு உடல் சுகத்தை அனுபவித்து ஓட போறவனின் நடத்தையை கூட கண்டு கொள்ள முடியாத பெண்களப்பா கட்டுபாடப்போட்டா நடக்குமா என்ன காலங்கடந்த பின்பே புத்தி வருகிறது பெண்களுக்கு :D:D

உங்க கவி அழகு அதில் உள்ள உன்மைகளும் அழகு நிகே :D

Link to comment
Share on other sites

தன்னை மறந்து தன்னையே கொடுத்தாள்

பழத்தை உண்டதும் அவன் பறந்து போனான்

காத்திருந்தாள் காதலன் வரவில்லை

காதல் பொய்த்த பின்னும் காத்திருக்கிறாள்

காதலனுக்காக அல்ல

சூதுவாது எதுவும் அறியா

அந்த பிஞ்சு உயிருக்காய் ........

காதலிக்கலாம் அது என்ன தன்னையே மறந்து அவளை குடுப்பது இதுக்கு பெயர்தான் காதலா? பெண்கள் கொஞ்சம் கவனமாய் இருக்க வேணமா?ஆண்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கலாமா?காலச்சாரம் ஒன்று இல்லையா>? தன்னை மறக்கு அளவுக்கு காதலா?காதல் என்ற பெயரில் ஏதோ நடக்குது இதுக்கு பெயர் காதல் இல்லை...

ஆனால் குழந்தைக்கு ஆக வாழும் அந்த பெண்ணை பாரட்டதான் வேணும்.. உங்கள் கவிதை அழகு நிகே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கவியில் பொருட் பிழை உண்டு.

காதலன் வந்தான்.. புளுகினான் தள்ளினான்.. அதில் மயங்கினாள்.. தன்னையே கொடுத்தாள்.. அப்புறம் காத்திருக்கிறாள்.. பிஞ்சு உயிருக்காய்.

ஏன் அபோசன் செய்ய மறந்தாள்..???! பறந்து போனதின்.. எச்சம் எதற்கு.. ஏன் அதற்காக காத்திருக்கனும்..??!

மயக்க என்ன காதல்.. போதையா.. போதை வஸ்தா..?! அது போதையல்ல. எல்லாரும் சுயபுத்தியோட தான் காதலிக்கினம். தெரிஞ்சு கொண்டு தான் மனசால மட்டுமல்ல உடலாலும் உறவாகினம். பிறகு பழி மட்டும்.. பழத்தை தின்றிட்டு பறந்திட்டான் என்று ஒப்பாரி வைக்கினம். அவை செய்த தவறுகளை இலகுவா மறந்திடினம்.. இல்ல மறச்சிடினம்.

காய் பழமாகி தின்னும் வரை அனுமதிக்கேக்க.. போற அறிவு ஏன் அப்புறம் மட்டும் திட்ட வந்திடுது..??!அதையும் மறந்து தொலைக்க வேண்டியதுதானே..! :D

இந்த கருத்து பிழையானதல்ல ஒரு விதத்தில் பெண்கள் மேல் மிகவும் அக்கறையும் ஆழ்ந்த அன்பும் கொண்ட ஒருவரால்தான் இப்படியான கருத்துக்களை முன்வைக்க முடியும். காரணம் பெண்கள் ஆண்களிடம் ஏமாந்துவிட கூடாது மிகவும் கண்டிபோடு இருக்கவேண்டும் என்ற அறிவுறுத்தல் இந்த கருத்துக்குள் மறைந்திருப்பது நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆனாலும். காதல் என்பது ஒரு சுவையான அனுபவம். ஒரு ஆணும் பெண்ணும் காதல் உறவில் தம்மை ஒன்றிணைத்தபின்பு உடல் சுகம் என்பது இருவராலும் விரும்பபடும் ஒன்றுதான். அது காதலின் இன்னொரு பக்கம் ஆகவே ஒரே பக்கத்தில் காதலில் நின்றுகொண்டிருக்க முடியாது அது முழுமையான காதலும் ஆகாது. உடல் சம்ந்தமான இணைவை தவறு என்றால் தப்பை இருவரும் செய்கிறார்கள். அது சரியெனபட்டால் இருவரும் தமது காதலின் இன்னொரு பகுதிக்கு செல்கிறார்கள்.

ஆனால் காதல் உறவை முறித்துகொண்டு ஒருவர் மட்டுமே வெளியேறிய பின்பு. இன்னnhருவர் ஏமாற்றபடுகிறார் என்பது நிதர்சனமானது. அந்த நீதியை அவளும் சேர்ந்துதானே படுத்தாள்? என்னும் கேள்வியின் ஊடாக மறைக்கவோ நீதியை கொல்லவோ நினைத்தால். அங்கேதான் ஆணாதிக்கம் பிறப்பெடுக்கின்றது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் தங்கள் சில கருத்துக்கள் நியாயமானதுதான் .

ஆனால் நீங்கள் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியாது .

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் .கல்லே கரையும் என்னும்போது பெண்ணின் மென்மையான மனத்தை கரைப்பது கடினமானதா?

பெண்கள் எளிதில் எல்லோரையும் நம்பி விடுவதால்தான் இப்படியான தவறுகள் நடக்கின்றன .நான் இங்கு அந்த பெண் செய்தது சரி என்று சொல்ல வரவில்லை .

என்ன ஆண் ஏமாற்றப்பட்டால் அது சமூகத்துக்கு அதிகம் தெரிவதில்லை .காரணம்

அவர்களில் உடல் ரீதியான மாற்றங்கள் நிகழ்வதில்லை .ஆனால் பெண் ஏமாற்றப்படும்போது அவளின் உடலில் ஏற்படும் மாற்றம் சமூகத்துக்கே அவளை

ஒரு குற்றவாளியாக காண்பித்துவிடுகிறது.

இங்கு தப்பு செய்தது இருவராக இருந்தாலும் சமுகம் தூற்றுவது என்னவோ பெண்ணைத்தானே.......

ஏன் அபோசன் செய்ய மறந்தாள்..???! பறந்து போனதின்.. எச்சம் எதற்கு.. ஏன் அதற்காக காத்திருக்கனும்..??!

அபோசன் என்பது கருவை கலைக்குமே தவிர மனதின் காயத்தை கலைக்கப்போவதில்லை .ஆற்றவும் போவதில்லை. அவனது காதல் பொய் எனினும் அவள் அவன் மீது கொண்ட காதல் நியம . இது தவிர இந்த இருவரும் செய்த

தவறுக்காய் தப்பே செய்யாத அந்த பிஞ்சு உயிரை கொள்வது எந்த வகையில்

நியாயம் .

தாய்மை என்பது புனிதமானது .அதை உணரத்தான் முடியுமே தவிர வார்த்தையால் வரையறுத்துவிட முடியாது . அவன் மீது அவள் கொண்ட காதலும் தாய்மை உணர்வுமே அந்த பிஞ்சு உயிரை அவள் எதிர்பார்த்து இருப்பதன் காரணம் .....

Link to comment
Share on other sites

வணக்கம் 'முனிவர் ஜீ'

உதுகள சொல்ல போனால் பெண்களுக்கு எதிராக பேசுராங்கள் என்றுசொல்லுராங்கப்பா என்ன உலகமடா இது :lol:

நியாயமான கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் பெண்கள் எப்பவும் பின் நிற்பதில்லை .

அண்ணாத்தை நெடுக்கு உடல் சுகத்தை அனுபவித்து ஓட போறவனின் நடத்தையை கூட கண்டு கொள்ள முடியாத பெண்களப்பா கட்டுபாடப்போட்டா நடக்குமா என்ன காலங்கடந்த பின்பே புத்தி வருகிறது பெண்களுக்கு :D:D

ஆண்கள் இப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்று தெரியாத பெண் போல இருக்கு .

இந்தியாவில் ஒரு ஆண் 56 பெண்களை திருமணம் செய்த கதை அறிந்திருப்பீர்கள்

இதில் பல திருமணங்கள் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தவை .பெற்றோர்களாலேயே இப்படிப்பட்ட ஒருவனை இனங்காண முடியாத

போது இந்த பெண்ணால் மட்டும் எப்படி முடியும் .............

Link to comment
Share on other sites

வணக்க Maruthankerny

உங்கள் கருத்து நியாயமானதுதான் இங்கு தவறு செய்தது இருவரும்தான் .ஆனால் தாய் என்ற அந்தஸ்தை பெற அவள் தயாராய் இருக்கிறாள் .தந்தை என்ற அந்தஸ்தை பெற அவன் தயாராய் இல்லையே ...

பெண்கள் காதல் என்ற பெயரில் எப்பவும் தமது கற்பை இழந்துவிடக் கூடாது. தாலி

கழுத்தில் ஏறும் வரை கற்பை வேலியாக கொண்டு வாழ்வதே பெண்ணிற்கு

என்றும் பெருமை

நன்றி சுஜி தங்கள் கருத்திற்கு

பெண் தன் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் மீறியதால் தான் இத்தனை சிக்கலும் ...காதலிக்கலாம் ஆனால் காதலுக்காக கற்பை இழந்து விடக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்து பிழையானதல்ல ஒரு விதத்தில் பெண்கள் மேல் மிகவும் அக்கறையும் ஆழ்ந்த அன்பும் கொண்ட ஒருவரால்தான் இப்படியான கருத்துக்களை முன்வைக்க முடியும். காரணம் பெண்கள் ஆண்களிடம் ஏமாந்துவிட கூடாது மிகவும் கண்டிபோடு இருக்கவேண்டும் என்ற அறிவுறுத்தல் இந்த கருத்துக்குள் மறைந்திருப்பது நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆனாலும். காதல் என்பது ஒரு சுவையான அனுபவம். ஒரு ஆணும் பெண்ணும் காதல் உறவில் தம்மை ஒன்றிணைத்தபின்பு உடல் சுகம் என்பது இருவராலும் விரும்பபடும் ஒன்றுதான். அது காதலின் இன்னொரு பக்கம் ஆகவே ஒரே பக்கத்தில் காதலில் நின்றுகொண்டிருக்க முடியாது அது முழுமையான காதலும் ஆகாது. உடல் சம்ந்தமான இணைவை தவறு என்றால் தப்பை இருவரும் செய்கிறார்கள். அது சரியெனபட்டால் இருவரும் தமது காதலின் இன்னொரு பகுதிக்கு செல்கிறார்கள்.

ஆனால் காதல் உறவை முறித்துகொண்டு ஒருவர் மட்டுமே வெளியேறிய பின்பு. இன்னnhருவர் ஏமாற்றபடுகிறார் என்பது நிதர்சனமானது. அந்த நீதியை அவளும் சேர்ந்துதானே படுத்தாள்? என்னும் கேள்வியின் ஊடாக மறைக்கவோ நீதியை கொல்லவோ நினைத்தால். அங்கேதான் ஆணாதிக்கம் பிறப்பெடுக்கின்றது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

உங்கள் கருத்து நியாயமானது தான்.சில ஆண்கள்(இங்கு சில பெண்களும்)காதலின் அந்தப்பக்கத்துக்காகமட்டும் காதலிக்கிறார்கள்.சரி இருவருக்கும் அது தான் தேவை என்றால் பின் விழைவுகள் வரமல் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளளாமே.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்து நியாயமானது தான்.சில ஆண்கள்(இங்கு சில பெண்களும்)காதலின் அந்தப்பக்கத்துக்காகமட்டும் காதலிக்கிறார்கள்.சரி இருவருக்கும் அது தான் தேவை என்றால் பின் விழைவுகள் வரமல் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளளாமே.

:lol: அந்த அவசரத்தில் அந்த கவனம் வருமோ? :D

Link to comment
Share on other sites

தீயா ,sagevan , jil

தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகே உங்கள் கவிதைக்கு என் வாழ்த்துக்கள்

இப்படிப்பட்ட ஆண்களுக்கு ஒரே ஒரு தண்டனைதான் உண்டு

அது ஒரு படத்தில் விவேக்கின் பஞ்சாயத்தீர்ப்பு!!!

Link to comment
Share on other sites

தாய்மை என்பது புனிதமானது .அதை உணரத்தான் முடியுமே தவிர வார்த்தையால் வரையறுத்துவிட முடியாது .

தாய்மைக்கு முதன்மை தான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், தவறு செய்யும் ஆண்களுக்கும் மனசாட்சி இல்லாமல் போகுமா? சிலர் அதை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக குடி, சிகரட் என்று தம்மைத்தாமே அழிக்கிறார்கள்.

பலாத்காரம் செய்தால் அது ஒருவரில் முழுப்பிழை எனலாம். ஆனால் காதலர்களாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, இருவர் ஒன்று சேர்ந்தபின், யாரேனும் ஒருவரில் முழுப்பழியையும் சுமத்தக்கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.

இருந்தாலும் உங்கள் கவிதைக்கு என் வாழ்த்துக்கள் நிகே.

Link to comment
Share on other sites

தாய்மைக்கு முதன்மை தான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், தவறு செய்யும் ஆண்களுக்கும் மனசாட்சி இல்லாமல் போகுமா? சிலர் அதை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக குடி, சிகரட் என்று தம்மைத்தாமே அழிக்கிறார்கள்.

பலாத்காரம் செய்தால் அது ஒருவரில் முழுப்பிழை எனலாம். ஆனால் காதலர்களாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, இருவர் ஒன்று சேர்ந்தபின், யாரேனும் ஒருவரில் முழுப்பழியையும் சுமத்தக்கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.

இருந்தாலும் உங்கள் கவிதைக்கு என் வாழ்த்துக்கள் நிகே.

குட்டி தம்பி யாரும் பழி ஆண்கள் மேல் சுமத்த வில்லை என்று நினைக்கிறேன்... தப்பு பண்ணும் போது இருவரின் மேல்தான் தப்பு.. ஒருவரை மட்டும் நாம் சொல்ல முடியாதுதான்...ஆண்கள் சிகிரெட் குடி இது எல்லாம் கவலையில்தான் பண்ணுறார்களா? இது என்ன புது கதை... கவலையை இப்படித்தான் காட்டணுமா??????? சிகிரெட் குடி இதை எல்லாம் பண்ணி விட்டு ஆண்கள் பெண்கள் மேல் பழி போடுவது சரி இல்லை.. அவரவர் பண்ணும் தப்புக்க்கு அவரவர்தான் காரணம்... குடி எல்லாம் இப்போது கவலையில் யாரும் குடிப்பாதாய் தெரிய வில்லை... நண்பர்கள் மதிக்க மட்டார்கள் பாட்டிக்கு போனால் குடிக்கணும் இல்லை என்றால் போன இடைத்தில் மரியதை இல்லை அப்படி எல்லாம் குடிக்குறார்கள்..

ஒரு பெண் ஏமாற்றம் அடைந்தால் தாய்மை பெண்தான் ஏர்க்கிறாள்.. ஆண்களுக்கு அதை பத்தி கவலையே இருக்காது... காதல் என்று வந்தால் பெண்கள் கழுத்தில் தாலி ஏறும் வரை கொஞ்சம் ஆண்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லம்... அவன் நல்லவனாய் இருந்தாலும் பெண்கள் அவதனமாய் இருந்தால் ஆண்களின் ஆசை வார்த்தைக்கு மயங்காமல் இருந்தால் அதுவே நல்லம்..அவர்களிடம் இருந்து எமறாமல் இருக்கலாம்..

Link to comment
Share on other sites

உங்கள் கருத்து நியாயமானது தான்.சில ஆண்கள்(இங்கு சில பெண்களும்)காதலின் அந்தப்பக்கத்துக்காகமட்டும் காதலிக்கிறார்கள்.சரி இருவருக்கும் அது தான் தேவை என்றால் பின் விழைவுகள் வரமல் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளளாமே.

அது இதுதான் வேணும் என்று போறவர்களை காதலிக்கிறார்கள் என்று சொல்லாமா> நல்ல அறிவுரை எச்சரிக்கையிடன் இருப்பது நல்லமா> ? இது எந்த நாட்டு காலச்சாரம்... காதல் எவ்வளவு புனிதமானது.. இப்படி போவர்களை நான் காதலர்கள் என்று சொல்ல மாட்டன் நாய்கள் என்றுதான் சொல்லுவன்.. இது என்னோட கருத்து.. யாரயும் நோக அடிக்கனும் என்று சொல்ல வில்லை.. :lol::D

காதலில் கொஞ்சம் காமமும் உண்டு என்று கவிஞர்கள் சொல்வர் அதுக்காக ..............

காதலில் காமம் இருக்கலாம் காமமே காதலாகி விட கூடாது... பார்த்து தங்கள் காதலிக்கு கோபம் வர போகிறது... இப்படி அப்படி கொமென்ஸ் எழுதுறிர்கள் அவர்கள் பார்த்துட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்... எதுக்கு கவனமாய் இருப்பது நல்லம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது இதுதான் வேணும் என்று போறவர்களை காதலிக்கிறார்கள் என்று சொல்லாமா> நல்ல அறிவுரை எச்சரிக்கையிடன் இருப்பது நல்லமா> ? இது எந்த நாட்டு காலச்சாரம்... காதல் எவ்வளவு புனிதமானது.. இப்படி போவர்களை நான் காதலர்கள் என்று சொல்ல மாட்டன் நாய்கள் என்றுதான் சொல்லுவன்.. இது என்னோட கருத்து.. யாரயும் நோக அடிக்கனும் என்று சொல்ல வில்லை.. :lol::wub:

காதலில் காமம் இருக்கலாம் காமமே காதலாகி விட கூடாது... பார்த்து தங்கள் காதலிக்கு கோபம் வர போகிறது... இப்படி அப்படி கொமென்ஸ் எழுதுறிர்கள் அவர்கள் பார்த்துட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்... எதுக்கு கவனமாய் இருப்பது நல்லம்..

ஜயோ..காமம் என்றாலே என்ன என்று தெரியாத அப்பிராணி நான் :lol: அப்பவே நினைச்சன் உந்த கவிஞர் என்று சொல்லுகிற பெரியாக்களின்ரை கருத்தை சின்னப் பிள்ளையள்

சொல்லப்படாது என்று. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.