Jump to content

கல்பனா ஒரு காவியம் ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்பனா ஒரு காவியம் .........

அந்த சிற்றூரின் அமைதியை கிழித்து கொண்டு இழவு வீட்டின் பறையொலி ....கேட்டது. அந்த ஊரின் இளைப்பாறிய வைத்தியரின் வளர்ப்பு மகள் இறந்து விடாள். அவள் தான் கல்பனா .

கல்பனா , மிகவும் அழகான் சிறு பெண் .நான் என் இள ம வயதில் கண்ட போது வைத்தியரின் வேலைகார சிறுவன் ,இவளின் பாடசாலை ப்பை , தண்ணீர் போத்தல் என்பவற்றை தூக்கி கொண்டு , வெயிலுக்கு மறைப்பாக கையில் குடை பிடித்த படி அழைத்து செல்வதை பார்த்திருக்கிறேன். அவள் ராணி மாதிரி வருவாள்.

வைத்தியர் செல்வராஜா , மனைவி கமலாவுடன் அந்த ஊருக்கு மாறலாகி வந்தபோது சிறுமி கல் பனா மூன்று வயதிருக்கும் .கால போக்கில் அந்த வைத்தியர் ஊர் மக்களுடன் உறவாடி ஒரு அங்கத்தவர் ஆகினார் .பேச்சு வாக்கில் அவருக்கு குழந்தை பேறு இல்லிஎன்றும் கல்பனா அவரது வளர்ப்பு மகளென்றும் தெரிந்து கொண்டனர். நானும் என் மேற்படிப்புக்காக வெளியூர் சென்று விடேன் .

காலம் தான் எவ்வளவு வேகமாக் போய்கொண்டு இருகிறேது .ஒரு பத்து வருடங்களின் பின் அவள் ஒரு விடுதியில் சேர்க்க படாள் என்றும் அவளுக்கு பத்து வயதாயிருக்கும் போது வைத்தியருக்கு ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள் கிடைத்தனர் என்றும் இதனால் அவளை (கல்பனாவை) வேலைகாரி போல நடத்த படாள் என்றும் அறிந்தேன். வீடுப் பிரச்சினைகள், தாயாரின் புறக்கணிப்பு ,சகோதரங்களின் அனுசரித்து போகாமை போன்ற காரணங்களால் அவள் விடுதியில் சேர்க்க படாள் என்றும் அறிந்தேன்.

விடுதியில் மேற்படிப்பு முடிய ,ஒரு பத்திரிகை நிறுவனத்தில் வேலை பார்த்தாள் . மிக நீண்ட நாட்க்களுக்கு பின் அன்று தான் நம் ஊர் திரும்பியிருந்தேன் . அப்போது தான் அந்த சம்பவம் நடந்து இருந்தது . இவள் வேலை செய்யும் நிறுவன வருடாந்த , விழாவில் கலந்து கொள்வதற்காக ,அயல் வீட்டு பெண்ணிடம் நகை வாங்கி சென்றாள் என்றும் ,அதை திருப்பி தர தாமதித்தால் ,அப்பெண் ஏசியதால் மனமுடைத்து அவள் தற்கொலை செய்ததாகவும் சொன்னார்கள் .வேறு சில்ர்,வேலை செய்யும் இடத்தில ஒருவனை காதலித்ததாகவும் ,அவன் ஏமாற்றியதால் ,தற்கொலை செய்ததாகவும் சொன்னார்கள். தேடலின் முடிவில் அயல்வேட்டு பெண்ணின் மோதிரத்தில் வைர கல் தொலைந்து போனது உண்மை . குழந்தையாக சுவீகாரம் செய்த போது இருந்த அன்பும் அரவணைப்பும் தொலைந்து போன சோகமாகவும் இருக்கலாம்.

என்ன இருபினும் கல்பனா ஒரு காவியமாகி விடாள். உண்மை யாருக்கும் புரியாத புதிராகி விட்டது ..அந்த பெண்ணுக்கு ஒரு சராசரி வாழ்வை இறைவன் எழுதி வைத்து வாழ விடவில்லை , விதி எழுத படவில்லை .......

கதை உண்மை .......பெயர்கள் யாவும் கற்பனை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உண்மை கதை அழகு அம்மணி.

கதைதான் சோகம்.

நகைகள் இரவல் வாங்கக்கூடாது

காதல் தரும் ஏமாற்றம்...........அதுதரும் விபரீத முடிவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்பனா ஒரு காவியமல்ல.. கடதாசி. இதைக் காவியமாக்கினா.. தன்னைத்தானே புரிஞ்சுக்க முடியாத மனப்பலவீனமானவங்க எல்லாம் காவிய நாயகர் நாயகிகள் ஆகிடுவினம்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உண்மை கதை அழகு ...............

Link to comment
Share on other sites

கண்ணீரை வரவைக்கும் நியக்கதை .அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்பனாவின் காவியத்துக்கு கருத்து பகிர்ந்த .......கறுப்பி .......நெடுக்ஸ் ....புத்தன்....நிகே ...

.யாவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். .....

Link to comment
Share on other sites

உண்மை கதை சோகமானது. கல்பனா தனது சோகத்தை யாருடனும் பகிராமல் விட்டதன் விளைவு தற்கொலை எனும் முடிவை எடுக்க தூண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.