Jump to content

தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று‏--- வி.சபேசன்


Recommended Posts

இன்று ஏப்ரல் முதலாம் திகதி. இதை உலகின் பல நாடுகளில் “முட்டாள்கள் தினம்” என்று கொண்டாடுகின்றார்கள். அன்றைக்கு ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஏமாற்றி மகிழ்வார்கள்.

இந்த “முட்டாள்கள் தினம்” ஐரோப்பாவில் இருந்து மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதியான ஒரு தினம் ஆகும்.தமிழர்களுக்கு என்றும் ஒரு “முட்டாள்கள் தினம்” உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை இதில் சொல்ல

வேண்டும். ஐரோப்பியர்களிடம் என்ன காரணத்திற்காக “முட்டாள்கள் தினம்” என்பது உருவானதோ, அதே காரணம் தமிழர்களிடமும் இருக்கின்றது.

“முட்டாள்கள் தினம்” எவ்வாறு உருவானது என்பது பற்றி பல ஆய்வுகள் உண்டு. அதில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வைப் பார்ப்போம்.

ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதலாம் நாள்தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

ஆனால் 16ஆம் நூற்றாண்டில் புதிய ஆண்டு முறை கொண்டு வரப்பட்டு ஜனவரி முதலாம் நாள் புத்தாண்டு தினமாக மாற்றப்பட்டது. ஆனால் உடனடியாக இந்தப் புத்தாண்டு அனைவராலும் ஏற்றக் கொள்ளப்படவில்லை.

ஸ்கொட்லாந்து 1660இலும், ஜேர்மனி, நோர்வே, டென்மார்க் போன்றவை 1700இலும், இங்கிலாந்து 1752இலும், பிரான்ஸ் 1852இலுமே இந்த புதிய ஆண்டு முறையை ஏற்று அங்கீகரித்தன. நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டாலும், மக்கள் அனைவரும் அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஏப்ரல் முதலாம் நாளை தொடர்ந்தும் புத்தாண்டு நாளாக கொண்டாடிக் கொண்டிருப்பவர்களை “முட்டாள்கள்” எனும் கருத்துப்பட அன்றைய நாள் “முட்டாள்கள் தினம்” என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டது. புத்தாண்டின் முதல் நாளாக இருந்த ஏப்ரல் முதலாம் நாள் இவ்வாறு முட்டாள்களுக்கு உரிய நாளாக மாறியது.

இதே நிலைமை தற்பொழுது தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

தைத்திருநாளே தமிழர்களின் புத்தாண்டு என்று தமிழறிஞர்கள் பலரால் அறிவிக்கப்பட்டு, அதை தமிழ்நாட்டின் அரசும் ஏற்று உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது. தமிழீழத்திலும் பல அமைப்புகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அதன்படி நடந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை தைத்திருநாளை எழுச்சியுடன் கொண்டாடும்படி தமிழீழத்தில் இருந்து வேண்டுகோளும் வந்திருந்தது. ஆனால் தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பேரவலத்தினால் அத்தகைகைய கொண்டாட்டங்களை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

எது எப்படி இருப்பினும் தமிழர்களின் அரசுகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு விட்டன. ஆயினும் சில தமிழர்கள் இன்னமும் ஏப்ரல் பதின்மூன்று மற்றும் பதினான்கு அன்று (இதிலும் குழப்பம் உண்டு) தமிழர் புத்தாண்டு என நம்பி கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த முறை பிறக்கின்ற ஆண்டுக்கு “விரோதி ஆண்டு” என்று வேறு பெயர் வைத்திருக்கின்றார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்களின் புத்தாண்டாகிய தைத்திருநாள் கூற, “விரோதி வருசம்” பிறக்கப் போகின்றது என்று பஞ்சாங்க ஆண்டு முறை கூறுகிறது.

இப்படி விரோதி, குரோதி என்ற பெயர்களோடு ஆண்டுகள் பிறப்பதாக நம்புபவர்களும், தமிழர்களின் புத்தாண்டு வடமொழிப் பெயர்களில் இருப்பதைப் பற்றி சந்தேகம் கொள்ளாதவர்களும், இந்த ஆண்டுகள் அனைத்தும் நாரதரும் கிருஸ்ணனுரும் அறுபது ஆண்டுகள் கலவி புரிந்து பெற்ற அறுபது பிள்ளைகள் என்று நம்புபவர்களும் அசல் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்.

இந்த வகையில் தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று அல்லது பதினான்கிலேயே வருகிறது என்பது தெளிவாகின்றது. ஆகவே “முட்டாள்கள் தினத்தை” கொண்டாடுவதற்கு நாம் இரண்டு வாரங்கள் பொறுத்திருப்போம்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை முட்டாள் ஆக்கும் தகமையை நீங்களும் பெற்றுள்ளீர்கள் என்கின்றீர்களா சபேசன் ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாத்திகம் எனக் கூறிக் கொள்ளும் சபேசன் வருடம் பிறக்க முதலே தமிழ் வருடத்தின் பெயர் என்ன? அது எத்தனையாம் திகதி பிறக்குது என பஞ்சாங்கம் பார்த்து சொல்லிற முதல் ஆளாயிருப்பார் போல[இவ்வளவு பிரச்சனைக்கு உள்ளேயும்]

ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் கருணாநிதி தமிழர்களுக்கு என்ன நன்மை செய்தார் அவர் சொன்னவுடனே இவ்வளவு காலமும் கடைப்பிடித்த சம்பிரதாயத்தை மாற்றுவதற்கு? ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் சட்டரீதியாய் சித்திரைக்கு தான் மாற்றுவார் அப்ப என்ன செய்வீங்கள்?

Link to comment
Share on other sites

சிலரை சில நேரம் முட்டாளாக்கலாம். அனைவரையும் எப்போதும் முட்டாளாக்க நினைப்பது இயலாத காரியம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உங்களுடைய கருத்தாகவே இருக்கமுடியும்.

கருணாநிதி சொன்னார் என்பதற்காக நாம் எதற்காக நம் முறையை மாற்ற வேண்டும்.

தமிழ் பற்று பேசும் அவர் உண்மையில் ஒரு தமிழனே இல்லை.

இங்கு தமிழனே சாகப்போறான். பிறகென்ன தமிழ் புத்தாண்டு.

இது தமிழ் புத்தாண்டு என்பதை விட இந்து புத்தாண்டாகவே சொல்ல முடியும்.

காரணம் இந்து சமயம் சார்பாகவே இது கணிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சமயம் பார்த்து சந்துல சிந்து பாடுகிறார்கள் போல இருக்குது.

Link to comment
Share on other sites

இன்று ஏப்ரல் முதலாம் திகதி. இதை உலகின் பல நாடுகளில் “முட்டாள்கள் தினம்” என்று கொண்டாடுகின்றார்கள். அன்றைக்கு ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஏமாற்றி மகிழ்வார்கள்.

இந்த “முட்டாள்கள் தினம்” ஐரோப்பாவில் இருந்து மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதியான ஒரு தினம் ஆகும்.தமிழர்களுக்கு என்றும் ஒரு “முட்டாள்கள் தினம்” உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை இதில் சொல்ல

வேண்டும். ஐரோப்பியர்களிடம் என்ன காரணத்திற்காக “முட்டாள்கள் தினம்” என்பது உருவானதோ, அதே காரணம் தமிழர்களிடமும் இருக்கின்றது.

“முட்டாள்கள் தினம்” எவ்வாறு உருவானது என்பது பற்றி பல ஆய்வுகள் உண்டு. அதில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வைப் பார்ப்போம்.

ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதலாம் நாள்தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

ஆனால் 16ஆம் நூற்றாண்டில் புதிய ஆண்டு முறை கொண்டு வரப்பட்டு ஜனவரி முதலாம் நாள் புத்தாண்டு தினமாக மாற்றப்பட்டது. ஆனால் உடனடியாக இந்தப் புத்தாண்டு அனைவராலும் ஏற்றக் கொள்ளப்படவில்லை.

ஸ்கொட்லாந்து 1660இலும், ஜேர்மனி, நோர்வே, டென்மார்க் போன்றவை 1700இலும், இங்கிலாந்து 1752இலும், பிரான்ஸ் 1852இலுமே இந்த புதிய ஆண்டு முறையை ஏற்று அங்கீகரித்தன. நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டாலும், மக்கள் அனைவரும் அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஏப்ரல் முதலாம் நாளை தொடர்ந்தும் புத்தாண்டு நாளாக கொண்டாடிக் கொண்டிருப்பவர்களை “முட்டாள்கள்” எனும் கருத்துப்பட அன்றைய நாள் “முட்டாள்கள் தினம்” என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டது. புத்தாண்டின் முதல் நாளாக இருந்த ஏப்ரல் முதலாம் நாள் இவ்வாறு முட்டாள்களுக்கு உரிய நாளாக மாறியது.

இதே நிலைமை தற்பொழுது தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

தைத்திருநாளே தமிழர்களின் புத்தாண்டு என்று தமிழறிஞர்கள் பலரால் அறிவிக்கப்பட்டு, அதை தமிழ்நாட்டின் அரசும் ஏற்று உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது. தமிழீழத்திலும் பல அமைப்புகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அதன்படி நடந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை தைத்திருநாளை எழுச்சியுடன் கொண்டாடும்படி தமிழீழத்தில் இருந்து வேண்டுகோளும் வந்திருந்தது. ஆனால் தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பேரவலத்தினால் அத்தகைகைய கொண்டாட்டங்களை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

எது எப்படி இருப்பினும் தமிழர்களின் அரசுகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு விட்டன. ஆயினும் சில தமிழர்கள் இன்னமும் ஏப்ரல் பதின்மூன்று மற்றும் பதினான்கு அன்று (இதிலும் குழப்பம் உண்டு) தமிழர் புத்தாண்டு என நம்பி கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த முறை பிறக்கின்ற ஆண்டுக்கு “விரோதி ஆண்டு” என்று வேறு பெயர் வைத்திருக்கின்றார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்களின் புத்தாண்டாகிய தைத்திருநாள் கூற, “விரோதி வருசம்” பிறக்கப் போகின்றது என்று பஞ்சாங்க ஆண்டு முறை கூறுகிறது.

இப்படி விரோதி, குரோதி என்ற பெயர்களோடு ஆண்டுகள் பிறப்பதாக நம்புபவர்களும், தமிழர்களின் புத்தாண்டு வடமொழிப் பெயர்களில் இருப்பதைப் பற்றி சந்தேகம் கொள்ளாதவர்களும், இந்த ஆண்டுகள் அனைத்தும் நாரதரும் கிருஸ்ணனுரும் அறுபது ஆண்டுகள் கலவி புரிந்து பெற்ற அறுபது பிள்ளைகள் என்று நம்புபவர்களும் அசல் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்.

இந்த வகையில் தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று அல்லது பதினான்கிலேயே வருகிறது என்பது தெளிவாகின்றது. ஆகவே “முட்டாள்கள் தினத்தை” கொண்டாடுவதற்கு நாம் இரண்டு வாரங்கள் பொறுத்திருப்போம்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

சரியான கருத்து.....

தம்மை தமிழ் தேசிய விடுதலையின் பேராதரவாளர்கள் என்று காட்டிக் கொள்பவர்கள் எல்லாம் தமிழ் தேசிய வாதத்தினை முற்றாக எதிர்த்து நின்று கொண்டு, தமிழ் தேசியத்தினை அழிக்க எல்லா வழிகளிலும் ஆதரவும் கொடுத்து கொண்டு இருக்கும் ஆரிய கலாச்சாரத்தினை, பார்ப்பனிய கோட்பாட்டினை தூக்கி பிடிப்பது தான் வேடிக்கை. இரு படகுகளில் பயணம் செய்ய முடியாது. இரு வேடம் பல நாட்கள் நிலைக்காது. ஒன்றில் தமிழ் தேசிய விடுதலை, அல்லது அதன் எதிரியான பார்பனியத்திற்கான ஆதரவு... இரண்டில் ஒன்றைத் தான் ஒருவரால் ஆதரிக்க முடியும்.

நாத்திகம் எனக் கூறிக் கொள்ளும் சபேசன் வருடம் பிறக்க முதலே தமிழ் வருடத்தின் பெயர் என்ன? அது எத்தனையாம் திகதி பிறக்குது என பஞ்சாங்கம் பார்த்து சொல்லிற முதல் ஆளாயிருப்பார் போல[இவ்வளவு பிரச்சனைக்கு உள்ளேயும்]

ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் கருணாநிதி தமிழர்களுக்கு என்ன நன்மை செய்தார் அவர் சொன்னவுடனே இவ்வளவு காலமும் கடைப்பிடித்த சம்பிரதாயத்தை மாற்றுவதற்கு? ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் சட்டரீதியாய் சித்திரைக்கு தான் மாற்றுவார் அப்ப என்ன செய்வீங்கள்?

ஒரு வேளை கருணாநிதி தமிழர்களுக்கு அல்லது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தந்திருந்தார் என்றால் அவரின் கருத்தை ஏற்றுக் கொண்டிருப்பீர்களா அம்மையாரே? ஜெயலலிதா எனும் பார்பனிய ஆதரவாளரின் செயலைப் பார்த்து மீண்டும் மாற வேண்டிய அவசியம் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எவருக்கும் நிச்சயம் வராது

மற்றது, 'இவ்வ்வ்வளவு பிரச்சனைக்கு உள்ளே' நின்று பெண்கள் தினத்திற்கு ஆம்பிளைகளுடன் மல்லுக்க நிற்க முடியும் என்றால், நாங்கள் தமிழர் புத்தாண்டு பற்றி இப்போது பேச / எழுத மட்டும் முடியாதா... நல்லாயிருக்குது கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் விடிஞ்சா வாழ்விருக்குமோ என்று தெரியாத நிலையில வாழ்ந்திட்டு இருக்கிறான். உங்க சில பேர் நாட்டை விட்டு ஓடி வந்து பதுங்கி இருந்து கொண்டு புகழ்வளர்க்க.. காலத்துக்கு ஒரு கட்டுரை எழுதி விட்டுக் கொண்டு திரியினம்.

இவை கொஞ்சக்காலமா வன்னி போர்க்களம் பற்றி எழுதிக் கிழிச்சு பெரிய புரட்சி பண்ணிட்டினம்.. இப்ப இப்படி எழுதி.. வெற்று வேட்டுகள். இதாலதான் வட இந்திய மற்றும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்.. தமிழீழம் என்ற சொல்லையே.. அநாதையாப் பார்க்கிறாங்க.

கருணாநிதி இப்ப போய் இராமர் கடவுளா.. எந்தப் பல்கலைக்கழகத்தில் படிச்சவர் என்று கேட்கட்டும் பார்ப்பம். இப்ப சேதுவைப் பற்றியே கதைக்கமாட்டார். கதிரைக்கு அவ்வளவு பயம். கருணாநிதி சும்மா தன்ர குறளி வித்தையைக் காட்டிட்டு.. சட்டை பையை நிரப்பிற வழியைப் பார்க்கிறது போல.. எங்களுக்குள்ளும் சாபக்கேடுகள்..! அரைகுறையளோட.. அறிவியலும் கதைக்க முடியாது.. அரியாரமும் செய்ய முடியாது.. எதுவும் செய்ய முடியாது.

ஆரியம் திராவிடம் என்ற ஆங்கிலேயக் கோட்பாடுகளே ஆட்டம் கண்டு போயுள்ள இந்த நவீன அறிவியல் உலகில்.. இப்படியும் ஒரு கூட்டம் எமக்குள்..!

உவர் தராகிக்கு.. இப்ப இதுதான் ஊர் புதுனத்திற்க முக்கியமான செய்தி போல.. தெரியுது..! :D:(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='nedukkalapoovan' date='Apr 2 2009, 08:47 PM' post='502503']

அவனவன் விடிஞ்சா வாழ்விருக்குமோ என்று தெரியாத நிலையில வாழ்ந்திட்டு இருக்கிறான். உங்க சில பேர் நாட்டை விட்டு ஓடி வந்து பதுங்கி இருந்து கொண்டு புகழ்வளர்க்க.. காலத்துக்கு ஒரு கட்டுரை எழுதி விட்டுக் கொண்டு திரியினம்.

இவை கொஞ்சக்காலமா வன்னி போர்க்களம் பற்றி எழுதிக் கிழிச்சு பெரிய புரட்சி பண்ணிட்டினம்.. இப்ப இப்படி எழுதி.. வெற்று வேட்டுகள். இதாலதான் வட இந்திய மற்றும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்.. தமிழீழம் என்ற சொல்லையே.. அநாதையாப் பார்க்கிறாங்க.

கருணாநிதி இப்ப போய் இராமர் கடவுளா.. எந்தப் பல்கலைக்கழகத்தில் படிச்சவர் என்று கேட்கட்டும் பார்ப்பம். இப்ப சேதுவைப் பற்றியே கதைக்கமாட்டார். கதிரைக்கு அவ்வளவு பயம். கருணாநிதி சும்மா தன்ர குறளி வித்தையைக் காட்டிட்டு.. சட்டை பையை நிரப்பிற வழியைப் பார்க்கிறது போல.. எங்களுக்குள்ளும் சாபக்கேடுகள்..! அரைகுறையளோட.. அறிவியலும் கதைக்க முடியாது.. அரியாரமும் செய்ய முடியாது.. எதுவும் செய்ய முடியாது.

ஆரியம் திராவிடம் என்ற ஆங்கிலேயக் கோட்பாடுகளே ஆட்டம் கண்டு போயுள்ள இந்த நவீன அறிவியல் உலகில்.. இப்படியும் ஒரு கூட்டம் எமக்குள்..!

உவர் தராகிக்கு.. இப்ப இதுதான் ஊர் புதுனத்திற்க முக்கியமான செய்தி போல.. தெரியுது..! :D:(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தனிநபர் தாக்குதலாக மாற்ற வேண்டாம். உங்களுக்கு அவரின் கருத்துப் பிடிக்கவில்லை என்றால் உங்களின் தர்க்கங்களை முன்வைய்யுங்கள், அதை விடுத்து..நீ தான் முட்டாள், நாந்தான் முட்டாள் என்று எகிறுவது சரியில்லை. கருணாநிதி செய்வது யாருக்குத்தான் பிடிக்கிறது? ஆனால் ஜெயலலிதா எனும் தற்பெருமை பிடித்த , அகம்பாவம் கொண்ட , சுயநலம் மிக்க பெண்மணியை விட கலைஞர் பரவாயில்லை. எம்மில் பலருக்கு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தும் கூட அவரை வரவேண்டும் என்று சொல்வது ஆச்சரியமளிக்கிறது. ஜெயா சொன்னால் செய்து காட்டுவார் என்று தம்பட்டம் அடிக்கும் பலரிடம் ஒரு கேள்வி, அவர் தமிழர் நலன் தொடர்பில் சொல்லிய, பின்னர் அவ்வாறே செய்துகாட்டிய ஒரு ஆக்கபூர்வமான விடயம் ஒன்றைச் சொல்லுங்களேன் கேட்கலாம்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகமெங்கும் வாழும் நாடற்ற தமிழர்களின் தற்போதைய நிலைமைக்கு காரணம் அவர்களின் மூட நம்பிக்கைகள், சாதி, மத, பிராந்திய மற்றும் பணக்காரத்துவ வேறுபாடுகளேயன்றி வேரொன்றும் இல்லை. சபேசனின் கருத்தை தர்க்க ரீதியாக ஆதரிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='nedukkalapoovan' date='Apr 2 2009, 08:47 PM' post='502503']

அவனவன் விடிஞ்சா வாழ்விருக்குமோ என்று தெரியாத நிலையில வாழ்ந்திட்டு இருக்கிறான். உங்க சில பேர் நாட்டை விட்டு ஓடி வந்து பதுங்கி இருந்து கொண்டு புகழ்வளர்க்க.. காலத்துக்கு ஒரு கட்டுரை எழுதி விட்டுக் கொண்டு திரியினம்.

இவை கொஞ்சக்காலமா வன்னி போர்க்களம் பற்றி எழுதிக் கிழிச்சு பெரிய புரட்சி பண்ணிட்டினம்.. இப்ப இப்படி எழுதி.. வெற்று வேட்டுகள். இதாலதான் வட இந்திய மற்றும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்.. தமிழீழம் என்ற சொல்லையே.. அநாதையாப் பார்க்கிறாங்க.

கருணாநிதி இப்ப போய் இராமர் கடவுளா.. எந்தப் பல்கலைக்கழகத்தில் படிச்சவர் என்று கேட்கட்டும் பார்ப்பம். இப்ப சேதுவைப் பற்றியே கதைக்கமாட்டார். கதிரைக்கு அவ்வளவு பயம். கருணாநிதி சும்மா தன்ர குறளி வித்தையைக் காட்டிட்டு.. சட்டை பையை நிரப்பிற வழியைப் பார்க்கிறது போல.. எங்களுக்குள்ளும் சாபக்கேடுகள்..! அரைகுறையளோட.. அறிவியலும் கதைக்க முடியாது.. அரியாரமும் செய்ய முடியாது.. எதுவும் செய்ய முடியாது.

ஆரியம் திராவிடம் என்ற ஆங்கிலேயக் கோட்பாடுகளே ஆட்டம் கண்டு போயுள்ள இந்த நவீன அறிவியல் உலகில்.. இப்படியும் ஒரு கூட்டம் எமக்குள்..!

உவர் தராகிக்கு.. இப்ப இதுதான் ஊர் புதுனத்திற்க முக்கியமான செய்தி போல.. தெரியுது..! :):lol::(

எழுத்தாடல் என்பது எல்லாவற்றையும் ஆய்வுக்குட்படுத்தி தருவது. ஆகவே எந்த நேரத்தில் செய்யபட்டது என்பது முக்கியமல்ல என்ன செய்ய பட்தென்பதே முக்கியம். சிவப்பு வர்ணம் அடித்த வார்த்தைகள். உங்களை மிகவும் ஒரு சிறியவனாக காட்டிநிற்பதாக நான் உணருகிறேன். கொஞசம் பக்குவம் இருந்தால் மட்டுமே பக்குவமாக ஒன்றினை பகுத்தாய முடியும். இல்லையேல் உதறிய குலையில் பதறிய பழங்களாகவே இருக்கும். சித்திரையில் புதுவருடம் என்பது உலகத்தின் சுழற்சிகாரணமாக ஏற்புதலுக்கு உடையது மட்டுமல்ல பழைய காலமும் அதையே நம்பியுமுள்ளது. காரணம் இலைதுளிர்காலம் சித்திரையில்தான் தோன்றுகின்றது. பூமியில் எல்லாம் புதிதாக தோன்றுகின்றன ஒரு புதுவாழ்வை தொடங்குவதாக ஒரு உணர்வு மலர்கிறது. ஆனால் பாழாய்போன இந்த ஜனவரி ஒன்று இதற்குள் ஏன் வந்துமதட்டிற்றோ தெரியவில்லை.

இப்போதைய கேள்வியும் கருத்தாடலும். புதுவருடமென்று கொண்டாட ஏப்ரல் மாதத்திற்கு உலகத்தை அழைக்க முடியுமா என்பதே?

என்னத்தை அடிப்படையா வைச்சு.. இதை ஆராயப் போறீங்க.

புகலிடத்தில் உள்ள தமிழர்களை அடிப்படையா வைச்சா. தமிழகத்தில் வாழும் தமிழர்களை அடிப்படையா வைச்சா.. இல்ல ஈழத்தில் உள்ள தமிழர்களை வைச்சா..??!

அடிப்படையில் புகலிடத்தில் உள்ள தமிழர்கள் தம்மை அந்தந்த நாடுகளின் சமூக வாழ்வியலோடு காலவோட்டத்தில் கலக்கச் செய்து விடுவர். அதுதான் யதார்த்தம். அங்கு இந்த வெற்று வேட்டு கட்டுரைகளுக்கு மதிப்பிருக்க வாய்ப்பில்லை.

உலகம் என்பது தென்னிந்திய பூகோள அமைவிடத்தைக் கொண்டதல்ல. பூமிப்பந்து எங்கனும் பல ஒத்திசைவுகளோடு ஒத்திசைவற்ற அம்சங்களும் இருக்கின்றன. அவை அந்தந்த தேசங்களில் வாழும் மக்களின் சமூக வாழ்விலும் செல்வாக்குச் செய்கின்றன. அந்த அடிப்படைகளை ஆராயாமல்.. சகட்டு மேனிக்கு அங்க மாறுது.. இங்க மாறினா என்ன என்ற கேள்விகளை முன்வைப்பது அர்த்தமற்றது. அறிவிலித்தனமானது.

தமிழகம்.. தெளிவாக அரசியல் ரீதியான நகர்வுகளை கண்டு உணர்கிறது. அதற்கென்று தனியான ஒரு ஆய்வு மையம் இது தொடர்பான மாற்றங்களை சமூக மற்றும் வரலாற்று அறிவியல் பின்னணிகளோடு ஆராய்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது.

இக்கட்டுரை எந்த அறிவியல் அடிப்படைகளும் இன்றி.. எழுதப்பட்டுள்ள.. ஒரு மேம்போக்கான கட்டுரை மட்டுமே. இது ஈழத்தமிழர்களை நோக்கி ஒரு குழப்பகரமான அரசியல் சமூகச் சூழலில் திணிக்கப்படும் கட்டுரை. ஈழத்தமிழன் ஒன்றும் வெற்று வேட்டுக்கு அங்கீகாரம் வழங்கும் முட்டாள் அல்ல. எமக்கென்றான தனித் தன்மைகள்.. அறிவியல்.. சமூக.. வரலாற்று அணுகுமுறைகள் இருக்கின்றன. அதன் கீழ் இவற்றை ஆராய வேண்டும்.

சும்மா உலகம் மாறுது.. நாமும் மாத்திக்கனும் என்பதில் அர்த்தமில்லை. உலகத்தில என்ன மாறுது.. ஏன் மாறுது.. நாம் ஏன் மாத்திக்கனும்.. அதன் நன்மை தீமை என்ன..ஏதாவது ஆராய்ஞ்சு பார்த்திருக்கமா..??! நாலு பேரு சொன்னானா.. ஆரியம்.. வகுத்தது அது... நாம காவி போட்ட திராவிடனாம்.. அதை எதிர்க்கனுமாம் என்ற கீழ்த்தரமான சிந்தனைக்கு இடமளிக்கின்ற உணர்ச்சி ஊற்றுக்கள் அல்ல.. எமது கேள்விக்கு விடை கொடுக்கக் கூடியவை.

நிறைய விடயங்கள் ஆராயப்படனும். ஆழமாக. பருமட்டாக்கக் கூட அல்ல. ஆனால்.. வெறும் இணையமும்.. கணணியும் இருக்கு என்றதற்காக சோடிப்பு வார்த்தைகள் கொண்டு எழுதுவதை எல்லாம் நம்ப வேண்டும் என்ற அவசியம் மக்களுக்கு இல்லை. அந்த அடிப்படையில்.. இந்த அடிப்படை அற்ற கட்டுரைகள் இன்றைய எமக்கு... ஈழத்தமிழருக்கு அவசியமற்றவை..! அர்த்தமற்றவை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகமெங்கும் வாழும் நாடற்ற தமிழர்களின் தற்போதைய நிலைமைக்கு காரணம் அவர்களின் மூட நம்பிக்கைகள், சாதி, மத, பிராந்திய மற்றும் பணக்காரத்துவ வேறுபாடுகளேயன்றி வேரொன்றும் இல்லை. சபேசனின் கருத்தை தர்க்க ரீதியாக ஆதரிக்கின்றேன்.

இதையே நான் பிறந்ததில் இருந்து எம்மவர் பத்திரிகைகளில்.. இணையங்களில் வாசிச்சுக் கொண்டிருக்கிறன். ஆனால்.. இரண்டு தசாப்தங்களாகியும் இவை எதுவும் எம்மவர் மத்தியில் எந்தத் தாக்கங்களையும் செய்யவில்லை. ஏன் அப்படி.. வெறும் வெட்டு வேத்துகளாகவே.. இவை இருக்கின்றன.. என்ற ஆராய்ச்சி முக்கியமானது. எத்தனை பேர் ஆதரிக்கிறது என்பது முக்கியமல்ல. சொல்லப்படுற விடயம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க.. அடிப்படைகளை அறிவை வழங்கக் கூடியதா என்பதுதான் அவசியம். அது இல்லை என்பதே தசாப்தங்கள் கடந்தும்.. மாற்றங்கள் என்பது மலினப்பட்டுப் போய் இருக்கக் காரணமாகின்றன.

கள்ளச்சாமி என்று சிறையில பிடிச்சுப் போட்டும்.. சிறையில கூட சாமி என்று கும்பிடு போடுறான் என்றால்.. ஏன் அவன் சாமியைத் தேடுறான்.. அதற்கான அவசியம் என்ன என்பதை ஆராய்வதை விடுத்து.. அவனிட்டப் போய் அவன் கள்ளச்சாமிடா என்றால் அவன் அதை ஏற்கப்போவதில்லை. நாம் மக்களை ஆராயாமல்.. வெட்டிக்கு.. புகழை பெயரை எதிர்பார்த்து வெட்டிக்கு புரட்சி என்று பதம் பாவிச்சு எழுதிறதெல்லாம்.. ஏட்டுச் சுரக்காயா.. இருக்க இதுதான் காரணம்.

இன்னும் நூறாண்டுகள் போனாலும்.. அறிவியலற்ற.. ஆராய்ச்சியற்ற.. மக்களின் மனப்பாங்கு.. தேவை.. சமூக நிலை அறியாத ஆராயாத எந்தக் கட்டுரைகளும் மக்கள் மத்தியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தா. ஆனால் சிலர் எழுதிவிட்டு.. தமக்குத் தாமே பன்னாடைகள் மன்னிக்கனும் பொன்னாடைகள் போர்த்திக்க மட்டும் இவை உபயோகமாக இருக்கும்.

உங்களிடம் ஒரு விடயத்தை முன் வைக்கிறேன்.

மூடநம்பிக்கைகள் எவை..??!

எந்த அடிப்படையில் அவை மூடநம்பிக்கைகள் என்று இனங்காட்டுகிறீர்கள்..??!

நீங்கள் மூட நம்பிக்கை என்று இனங்காட்ட பாவித்த அறிவியல் தளம் என்ன..??!

அந்த மூட நம்பிக்கையை மக்கள் நாடிச் செல்வதற்கான மக்களின் தேவை என்ன..??!

நீங்கள் இனங்காணும் அம்சங்களையும் அவற்றுக்கான அறிவியல் பூர்வமான விடைகளையும் எவ்வாறு வேறு காத்திரமான வழிகளில் முன்வைத்து மக்களை மூடநம்பிக்கையற்ற வழிக்கு வழிகாட்டப் போறீங்க..??!

இதற்கான அறிவூட்டலை மக்களிடம் எப்படிக் கொண்டு போகப் போறீர்கள்..??!

இவை அனைத்துக்கும் கணணிக்கு முன்னால் குந்தி இருந்தோ அல்லது நாலு புத்தக்கத்தை பிரட்டிட்டோ.. இல்ல 1970 களில் யாரோ ஒருவர் உணர்ச்சிப் பெருக்கில் காழ்ப்புணர்ச்சியில் மேடைகளில் பேசியதை வைச்சோ செயல்படுத்த முடியாது. நிகழ்கால உலகில்.. நிகழ்கால மக்களின் சிந்தனைப் போக்கில்.. இதனை வைச்சு ஆராயனும்.. மக்களிடம் அவர்கள் ஏற்கக் கூடிய வழிமுறைகளில் ஆதார அடிப்படைகளோடு காரண காரியங்களோடு முன் வைக்க வேண்டும். ஒரு உதாரணத்தை எடுத்து இதைச் செய்யுங்கள் பார்க்கலாம்.

சும்மா ஆளாளுக்கு வந்து.. மூடநம்பிக்கை என்றீங்க.. பகுத்தறிவு இல்லை என்றீங்க.. அதுக்கு ஒத்தூதுறீங்க.. ஆனால் சமூகத்தில.. பகுத்தறிவு பேசிறவனே.. தன்னை ஒளிச்சு வைச்சிட்டு.. தன்ர மனிசியை கோவிலுக்கு விட்டு யாகம் பண்ணுவிக்கிறான். சமூகத்துக்கு தாலி வேண்டாம் என்பவனே தனக்கு என்றவுடன் 20 பவுனில் கட்டிக்கிறான். கற்பு என்றால் என்ன என்பவனே தனக்கு கன்னிப் பெண் வேணும் என்கிறான். சிவனை நிந்திக்கிறவன் ஜேசுவைப் போற்றுறான். ஜேசுவை நித்திக்கிறவன் அல்லாவை மெச்சுறான். இந்தப் பிறழ்வுகளோடு.. சமூகத்தை அணுகினால்.. நிச்சயம்.. நூற்றாண்டென்ன மிலேனியங்கள் கடந்தாலும்.. உண்மையான மாற்றங்களை இவ்வாறான எழுத்துக்கள் உண்டு பண்ணா..! இவையே வெற்று வேட்டுக்கள் என்றாகின்றன.:lol::D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை கருணாநிதி தமிழர்களுக்கு அல்லது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தந்திருந்தார் என்றால் அவரின் கருத்தை ஏற்றுக் கொண்டிருப்பீர்களா அம்மையாரே? ஜெயலலிதா எனும் பார்பனிய ஆதரவாளரின் செயலைப் பார்த்து மீண்டும் மாற வேண்டிய அவசியம் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எவருக்கும் நிச்சயம் வராது

மற்றது, 'இவ்வ்வ்வளவு பிரச்சனைக்கு உள்ளே' நின்று பெண்கள் தினத்திற்கு ஆம்பிளைகளுடன் மல்லுக்க நிற்க முடியும் என்றால், நாங்கள் தமிழர் புத்தாண்டு பற்றி இப்போது பேச / எழுத மட்டும் முடியாதா... நல்லாயிருக்குது கதை

எனது கருத்தினை நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டு உள்ளீர்கள் நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாங்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் ஒரு பழக்கத்தை மாற்றுவதற்கு கருணாநிதி யார் என்று தான் கேட்டேன்.இந்தியாவில் அது தானே நடைமுறையில் உள்ளது திமுக ஆட்சியில் இருக்கும் போது ஒரு சட்டம் கொண்டு வரும் பிறகு அதிமுக ஆட்சிக்கு வ்ந்தால் அதை மாற்றி விடும்.மாறி,மாறி இது தானே நடக்கிறது.கருணாநிதியாலேயோ,ஜெ

யலலிதாவாலேயோ நாங்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் பழக்கத்தை மாற்ற முடியாது என்பது எனது கருத்து.

உங்களை இங்கு கருத்து எழுத வேண்டாம் என நான் எப்போ சொன்னேன்? நான் சொன்னது ஈழத்தில் சனங்கள் செத்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சபேசனுக்கு வருடப் பிறப்பு கேட்குதா என்ற அர்த்ததில் தான் எழுதினேன்.சபேசன் வந்து எழுதிய பிறகு தான் எனக்கு வருடப் பிறப்பு எத்தனையாம் திகதி பிறக்குது எனத் தெரியும்.

அதே மாதிரி தான் மற்றவர்களும் இருப்பார்கள் என நினைத்தது என் தப்பு தான்.உங்கள் ஆனாதிக்கத்தை காட்டியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

உறவே நீங்கள் சொன்னது மிக மிக சரி நாங்கள் எங்களுக்க ஆயிரம் பிரிவையும்

கருத்து வேறுபாடுகளையும் சுயநலத்தையும் தருணம் பார்த்து தள்ளி விழுத்தும் மனநிலயையும் வைச்சுக் கொண்டு

பேந்து ஏன் மற்ரவனை குறை கூற வேண்டும்??????. நாளைக்கு எங்கட நாடு விடுதலை பெற்றால் மற்ரவையே

போய் இருக்க போயினம்.............

Link to comment
Share on other sites

எனது கருத்தினை நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டு உள்ளீர்கள் நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாங்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் ஒரு பழக்கத்தை மாற்றுவதற்கு கருணாநிதி யார் என்று தான் கேட்டேன்.இந்தியாவில் அது தானே நடைமுறையில் உள்ளது திமுக ஆட்சியில் இருக்கும் போது ஒரு சட்டம் கொண்டு வரும் பிறகு அதிமுக ஆட்சிக்கு வ்ந்தால் அதை மாற்றி விடும்.மாறி,மாறி இது தானே நடக்கிறது.கருணாநிதியாலேயோ,ஜெ

யலலிதாவாலேயோ நாங்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் பழக்கத்தை மாற்ற முடியாது என்பது எனது கருத்து.

உங்களை இங்கு கருத்து எழுத வேண்டாம் என நான் எப்போ சொன்னேன்? நான் சொன்னது ஈழத்தில் சனங்கள் செத்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சபேசனுக்கு வருடப் பிறப்பு கேட்குதா என்ற அர்த்ததில் தான் எழுதினேன்.

கருணாநிதி சொல்லித் தான் / சட்டம் கொண்டுவந்த பின் தான் தமிழ் புத்தாண்டு என்பது சித்திரையில் அல்ல என்றும் அது ஆரிய/ பார்ப்பன கோட்பாட்டின் அடிப்படையில் நடை பெற்று வரும் ஒரு தமிழ் தேசியத்திற்கு எதிரான ஒரு வழக்கம் என்றும் அறிந்து கொண்டுள்ளோம் என்று நீங்கள் எம்மைப் பற்றி அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். நன்றி உங்களின் புத்திசாலித்தனத்தினை காட்டியமைக்கு

ரதி, உங்களளவுக்கு நான் அறிவுஜீவியோ அல்லது புத்திசாலியோ அல்ல. உங்களைப் போன்ற wisdom fruit (ஞானப் பழம்) களுடன் என்னப் போன்றவர்கள் விவாதிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி சொல்லித் தான் / சட்டம் கொண்டுவந்த பின் தான் தமிழ் புத்தாண்டு என்பது சித்திரையில் அல்ல என்றும் அது ஆரிய/ பார்ப்பன கோட்பாட்டின் அடிப்படையில் நடை பெற்று வரும் ஒரு தமிழ் தேசியத்திற்கு எதிரான ஒரு வழக்கம் என்றும் அறிந்து கொண்டுள்ளோம் என்று நீங்கள் எம்மைப் பற்றி அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். நன்றி உங்களின் புத்திசாலித்தனத்தினை காட்டியமைக்கு

ரதி, உங்களளவுக்கு நான் அறிவுஜீவியோ அல்லது புத்திசாலியோ அல்ல. உங்களைப் போன்ற wisdom fruit (ஞானப் பழம்) களுடன் என்னப் போன்றவர்கள் விவாதிக்க முடியாது.

நீங்கள் சொன்னது உண்மை தான் நிழலி நான் ஞானப்பழம் தான் உங்களை மாதிரி நான் பத்திரிகையில் எழுதியதில்லை.கருணாநிதி தானே இதை சட்டமாகக் கொண்டு வந்தார் அதுக்கு அடிப்படையாக எந்த தமிழறிஞர்கள் இருந்தார்கள் என அவர்கள் பெயர் விபரங்களோடு ஆதாரத்துடன் விபரமாக கூற முடியுமா? அவர்கள் யாரக இருந்தாலும் பாரம்பரியமாக கடைப் பிடிக்கும் ஒரு வழக்கத்தை திடிரென மாற்ற முடியாது என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

ரதி,

தைத்திருநாளை தமிழர் புத்தாண்டாக கொண்டு வருவதற்கு 1930களிலேயே பல அறிஞர்கள் முயற்சி எடுத்து வந்திருக்கிறார்கள். மறைமலை அடிகள், சோமசுந்தரப் பாரதியார், மீனாட்சி சுந்தரனார் போன்ற பல அறிஞர்கள் இதற்காக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

கலைஞர் மிகவும் காலம் பிந்தியே இதைச் சட்டமாக இயற்றினார். தைப் புத்தாண்டு கலைஞருக்கு சொந்தமானது அன்று. அது தமிழர்களுக்கு சொந்தமானது.

மக்கள் பாரம்பரியமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கத்தை திடீரென மாற்ற முடியாது என்று சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மைதான். அதனாற்தான் முட்டாள்களுக்கான நாளும் உருவாகியது.

16ஆம் நூற்றாண்டில் புதிய ஆண்டுமுறை ஐரோப்பாவில் அறிவிக்கப்பட்டும் அதை மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. தமிழர்களும் தைப் புத்தாண்டை ஏற்றுக் கொள்ள நாள் ஆகலாம். அப்படியே ஏப்ரல் பதின்மூன்று தமிழர்களின் முட்டாள்கள் நாளாகவும் ஆகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

தைத்திருநாளை தமிழர் புத்தாண்டாக கொண்டு வருவதற்கு 1930களிலேயே பல அறிஞர்கள் முயற்சி எடுத்து வந்திருக்கிறார்கள். மறைமலை அடிகள், சோமசுந்தரப் பாரதியார், மீனாட்சி சுந்தரனார் போன்ற பல அறிஞர்கள் இதற்காக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

கலைஞர் மிகவும் காலம் பிந்தியே இதைச் சட்டமாக இயற்றினார். தைப் புத்தாண்டு கலைஞருக்கு சொந்தமானது அன்று. அது தமிழர்களுக்கு சொந்தமானது.

சபேசன் நீங்கள் மேலே குறிப்பிட்டவர்கள் எல்லாரும் தைப் பொங்கலை தான் வருடப் பிறப்பாக கொண்டு வர முயன்றார்கள் என்றால் அதற்கான ஆதாரம் எங்கே,எந்த நூலில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்?

என்ன கார‌ணத்திற்காக தைப் பொங்கலை தமிழர்களின் வருட‌ப் பிறப்பு ஆக மாற்றச் சொன்னார்கள்?[ஆதாரத்துடன் சொல்லுங்கள்]

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் 1930 ம் ஆண்டுக்கு முதல் தமிழறிஞர்களே இல்லை போல கிடக்குது.

Link to comment
Share on other sites

ரதி,

உங்களுக்கு நேரம் கிடைத்தால், நான் குறிப்பிட்டிருக்கும் அறிஞர்கள் பற்றி தேடி வாசியுங்கள். அல்லது திருவள்ளுவர் ஆண்டு முறை பற்றி வாசித்தாலும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

இதில் அவுஸ்ரேலியா சபேசன் எழுதிய இரண்டு கட்டுரைகள் இருக்கின்றன. இவைகளையும் படியுங்கள்

http://www.tamilnaatham.com/articles/2008/jan/sabesan/14.htm

http://www.tamilnaatham.com/articles/2008/apr/sabesan/11.htm

Link to comment
Share on other sites

இதைத் தனிநபர் தாக்குதலாக மாற்ற வேண்டாம். உங்களுக்கு அவரின் கருத்துப் பிடிக்கவில்லை என்றால் உங்களின் தர்க்கங்களை முன்வைய்யுங்கள், அதை விடுத்து..நீ தான் முட்டாள், நாந்தான் முட்டாள் என்று எகிறுவது சரியில்லை. கருணாநிதி செய்வது யாருக்குத்தான் பிடிக்கிறது? ஆனால் ஜெயலலிதா எனும் தற்பெருமை பிடித்த , அகம்பாவம் கொண்ட , சுயநலம் மிக்க பெண்மணியை விட கலைஞர் பரவாயில்லை. எம்மில் பலருக்கு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தும் கூட அவரை வரவேண்டும் என்று சொல்வது ஆச்சரியமளிக்கிறது. ஜெயா சொன்னால் செய்து காட்டுவார் என்று தம்பட்டம் அடிக்கும் பலரிடம் ஒரு கேள்வி, அவர் தமிழர் நலன் தொடர்பில் சொல்லிய, பின்னர் அவ்வாறே செய்துகாட்டிய ஒரு ஆக்கபூர்வமான விடயம் ஒன்றைச் சொல்லுங்களேன் கேட்கலாம்?!

இப்படி விரோதி, குரோதி என்ற பெயர்களோடு ஆண்டுகள் பிறப்பதாக நம்புபவர்களும், தமிழர்களின் புத்தாண்டு வடமொழிப் பெயர்களில் இருப்பதைப் பற்றி சந்தேகம் கொள்ளாதவர்களும், இந்த ஆண்டுகள் அனைத்தும் நாரதரும் கிருஸ்ணனுரும் அறுபது ஆண்டுகள் கலவி புரிந்து பெற்ற அறுபது பிள்ளைகள் என்று நம்புபவர்களும் அசல் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்.

ஒருவர் ஒட்டுமொத்த சமுதாயத்தையே முட்டாள் என்று கூறுவார். அதை நாங்கள் சகித்துக்கொள்ள வேண்டும். அவரை முட்டாள் என்று திருப்பி கூறினால் அது தனி மனித தாக்குதல். நல்லாயிருக்கின்றது உங்களது நியாயம்.

இந்துக்களின் நம்பிக்கைகளை முட்டாள்தனம் என்று கூறுபவர்களே

முதலில் உங்கள் குடும்பத்தில் அதனை செயற்படுத்துங்கள்.

உங்கள் பிள்ளைக்கு சாதகம் கணிக்காத உங்கள் வைபங்களுக்கு நாள் நட்சத்திரம் பார்க்காத உங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆபத்தான நேரத்தில் கடவுளே என்பிள்ளையை காப்பாற்று என்று வேண்டாத யாரும் உண்மையில் இருக்கின்றீர்களா? இல்லை. ஆனால் மற்றவனுக்கு உபதேசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களது உரிமை என்பது மற்றவனின் மூக்கில் உங்கள் விரல் துனி படும் வரையிலே...!

உங்களுக்கு முட்டாள்த்தனமாக படுபவை மற்றவனுக்கு சரியாகப்படலாம். உங்களுக்கு சரியாகப்படுபவை மற்றவர்களுக்கு முட்டாள்த்தனமாக தெரியலாம். இவை அனைத்தும் தனி நபர் சார்ந்த விடயங்கள்.

ஊரே பற்றி எறியும் போது தீயை அணைக்க வழிதேட வேண்டும், மாறாக தீ எரிகிறது எரிந்து முடியும் அது முடிந்த பின் புதிய வீடுகட்ட வேண்டும் அதற்கு பொருட்கள் சேகரிக்க வேண்டும் என்று நாம் விட்டுவிடுதல் ஆகாது. ஒரு கருத்தை வைக்கும் போது சூழ்நிலைக்கு ஏற்ப வைத்தல் நன்று அதை விடுத்து எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் திணித்தால் யாராலும் ஜீரணிக்க முடியாது.

நான் சித்திரை புத்தாண்டையும் கொண்டாடுகின்றேன்... அதே போல தமிழ் புத்தாண்டான தைப் பொங்கலையும் கொண்டாடுகின்றேன். காரணம் அடிப்படையில் நாம் தமிழர்... ஆனால் எமது நம்பிக்கை என்ற ஒன்றின் அடிப்படையில் சித்திரைப்புத்தாண்டை ஆதரிக்கின்றேன். எப்படி வியாபார ஸ்தாபனங்கள் எல்லா திருநாட்களையும் வைத்து சம்பாதிக்க முடியுமோ அப்படியே நாமும் மகிழ்ந்திருக்க கூடிய சந்தர்ப்பங்களை நழுவ விடுவதில்லை. ஆனால் இப்போது புத்தாண்டு கொண்டாடும் மன நிலை யாருக்கு இருக்கிறது என்பது கட:டுரையாளாருக்கு மட்டுமே வெளிச்சம்.

நிழலி அவர்கள் சொன்னக்கு ஒரு கருத்து...

பார்ப்பனியம் என்றால் என்ன? எங்கு தொட்டாலும் பார்ப்பனியம்... பார்ப்பான் என்று தான் பொதுவாக பகுத்தறிவு மிக்கவர்கள் பேசுகின்றனர். ஆனால் எந்த பார்ப்பனியர்கள் சித்திரை வருடப்பிறப்பை புதுவருடமாக கொண்டாடுகின்றனர்? இதை சற்று தெளி படுத்துங்கள். அது மட்டுமன்றி இந்த சித்திரை புத்தாண்டு எந்த வகையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக அமைகின்றது?

________________

கருணாநிதி ஒரு துரோகி என்றால்... ஜெயலலிதா எதிரி.... நேரடியான எதிரியை விட மறைமுகமான துரோகி ஆபத்தானவன்...

கருணாநிதி தேர்தலில் தோற்று ஜெயலலிதாவின் கட்சி வெற்றி பெற்றால் சந்தோசப்படுபவர்களில் நானும் ஒருவன்!

Link to comment
Share on other sites

உங்கள் பிள்ளைக்கு சாதகம் கணிக்காத உங்கள் வைபங்களுக்கு நாள் நட்சத்திரம் பார்க்காத உங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆபத்தான நேரத்தில் கடவுளே என்பிள்ளையை காப்பாற்று என்று வேண்டாத யாரும் உண்மையில் இருக்கின்றீர்களா?

நான் இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கிறேன்

ஓம் அண்ண நீங்களே சொல்லித்தான் தெரிய வேண்டி இருக்குது நீங்கள் இருக்கிறீங்கள் என்று. என்ன செய்வம்.. இவ்வளவு சுய விளம்பரம் கொடுத்தும்.. கனக்கெடுக்கிறாங்கில்லையே..!! :(

தாலியை இழிச்சுப் பழிச்சு கதையெழுதிய தாங்களே.. அம்மாவிற்காக தாலி கட்டி திருமணம் செய்பவராச்சே..! அப்படி இருக்கேக்க.. இதென்ன.. நாளை உங்கள் தாத்தாவிற்காக.. பிள்ளையின் குறிப்பையும் எழுதி வைக்கமாட்டீங்களா என்ன..??! யார் கண்டா உங்கள் வீட்டுத்தோட்டத்தில மேயுற பன்றிக் குட்டிகளை..??! இணையத்தில எழுத்தால உருமறைப்புச் செய்தாப் போல பன்றிக் குட்டி.. பசுக்கன்றாக முடியுமா..??! :lol: :lol:

Link to comment
Share on other sites

சில விடயங்களை சிலருக்கு நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்: ஆனால் சாமி கும்பிடாத, சாதகம் பார்க்காத வைபவங்களுக்கு நாள் நட்சத்திரம் பார்க்காத பலர் இருக்கின்றார்கள். நானும் இருக்கின்றேன்.

நான் சாமி கும்பிடுவது இல்லை. சாதகம், நாள், நட்சத்திரம் நான் பார்ப்பது இல்லை. தாய்க்கோ, மனைவிக்கோ, பிள்ளைக்கோ நோய் வருகின்ற பொழுது கடவுளை வேண்டுவது இல்லை. நேர்த்தி வைப்பது இல்லை.

தாலி கட்டியதும் நான் நேரம் பார்த்து செய்யவில்லை. நாள் பார்த்தோ, நேரம் பார்த்தோ திருமணம் செய்யவில்லை.

தாலி கட்டியது என்னுடைய அம்மாவிற்காக அன்று. இதைப் பற்றி நிறையப் பேசியாகி விட்டது.

தாலிக்கு சமூகம் கொடுக்கும் அர்த்தமற்ற புனிதத்தையும் முக்கியத்துவத்தையும் எதிர்ப்பது, கேலி செய்வது என்பது வேறு. தாலியை ஒரு அன்புப் பரிசாக அணிவதை ஆதரிப்பது வேறு. இரண்டையும் பகுத்து அறிய வேண்டும். அதற்கு பகுத்தறிவு வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.