Jump to content

தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று‏--- வி.சபேசன்


Recommended Posts

இன்று ஏப்ரல் முதலாம் திகதி. இதை உலகின் பல நாடுகளில் “முட்டாள்கள் தினம்” என்று கொண்டாடுகின்றார்கள். அன்றைக்கு ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஏமாற்றி மகிழ்வார்கள்.

இந்த “முட்டாள்கள் தினம்” ஐரோப்பாவில் இருந்து மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதியான ஒரு தினம் ஆகும்.தமிழர்களுக்கு என்றும் ஒரு “முட்டாள்கள் தினம்” உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை இதில் சொல்ல

வேண்டும். ஐரோப்பியர்களிடம் என்ன காரணத்திற்காக “முட்டாள்கள் தினம்” என்பது உருவானதோ, அதே காரணம் தமிழர்களிடமும் இருக்கின்றது.

“முட்டாள்கள் தினம்” எவ்வாறு உருவானது என்பது பற்றி பல ஆய்வுகள் உண்டு. அதில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வைப் பார்ப்போம்.

ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதலாம் நாள்தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

ஆனால் 16ஆம் நூற்றாண்டில் புதிய ஆண்டு முறை கொண்டு வரப்பட்டு ஜனவரி முதலாம் நாள் புத்தாண்டு தினமாக மாற்றப்பட்டது. ஆனால் உடனடியாக இந்தப் புத்தாண்டு அனைவராலும் ஏற்றக் கொள்ளப்படவில்லை.

ஸ்கொட்லாந்து 1660இலும், ஜேர்மனி, நோர்வே, டென்மார்க் போன்றவை 1700இலும், இங்கிலாந்து 1752இலும், பிரான்ஸ் 1852இலுமே இந்த புதிய ஆண்டு முறையை ஏற்று அங்கீகரித்தன. நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டாலும், மக்கள் அனைவரும் அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஏப்ரல் முதலாம் நாளை தொடர்ந்தும் புத்தாண்டு நாளாக கொண்டாடிக் கொண்டிருப்பவர்களை “முட்டாள்கள்” எனும் கருத்துப்பட அன்றைய நாள் “முட்டாள்கள் தினம்” என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டது. புத்தாண்டின் முதல் நாளாக இருந்த ஏப்ரல் முதலாம் நாள் இவ்வாறு முட்டாள்களுக்கு உரிய நாளாக மாறியது.

இதே நிலைமை தற்பொழுது தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

தைத்திருநாளே தமிழர்களின் புத்தாண்டு என்று தமிழறிஞர்கள் பலரால் அறிவிக்கப்பட்டு, அதை தமிழ்நாட்டின் அரசும் ஏற்று உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது. தமிழீழத்திலும் பல அமைப்புகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அதன்படி நடந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை தைத்திருநாளை எழுச்சியுடன் கொண்டாடும்படி தமிழீழத்தில் இருந்து வேண்டுகோளும் வந்திருந்தது. ஆனால் தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பேரவலத்தினால் அத்தகைகைய கொண்டாட்டங்களை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

எது எப்படி இருப்பினும் தமிழர்களின் அரசுகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு விட்டன. ஆயினும் சில தமிழர்கள் இன்னமும் ஏப்ரல் பதின்மூன்று மற்றும் பதினான்கு அன்று (இதிலும் குழப்பம் உண்டு) தமிழர் புத்தாண்டு என நம்பி கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த முறை பிறக்கின்ற ஆண்டுக்கு “விரோதி ஆண்டு” என்று வேறு பெயர் வைத்திருக்கின்றார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்களின் புத்தாண்டாகிய தைத்திருநாள் கூற, “விரோதி வருசம்” பிறக்கப் போகின்றது என்று பஞ்சாங்க ஆண்டு முறை கூறுகிறது.

இப்படி விரோதி, குரோதி என்ற பெயர்களோடு ஆண்டுகள் பிறப்பதாக நம்புபவர்களும், தமிழர்களின் புத்தாண்டு வடமொழிப் பெயர்களில் இருப்பதைப் பற்றி சந்தேகம் கொள்ளாதவர்களும், இந்த ஆண்டுகள் அனைத்தும் நாரதரும் கிருஸ்ணனுரும் அறுபது ஆண்டுகள் கலவி புரிந்து பெற்ற அறுபது பிள்ளைகள் என்று நம்புபவர்களும் அசல் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்.

இந்த வகையில் தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று அல்லது பதினான்கிலேயே வருகிறது என்பது தெளிவாகின்றது. ஆகவே “முட்டாள்கள் தினத்தை” கொண்டாடுவதற்கு நாம் இரண்டு வாரங்கள் பொறுத்திருப்போம்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை முட்டாள் ஆக்கும் தகமையை நீங்களும் பெற்றுள்ளீர்கள் என்கின்றீர்களா சபேசன் ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாத்திகம் எனக் கூறிக் கொள்ளும் சபேசன் வருடம் பிறக்க முதலே தமிழ் வருடத்தின் பெயர் என்ன? அது எத்தனையாம் திகதி பிறக்குது என பஞ்சாங்கம் பார்த்து சொல்லிற முதல் ஆளாயிருப்பார் போல[இவ்வளவு பிரச்சனைக்கு உள்ளேயும்]

ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் கருணாநிதி தமிழர்களுக்கு என்ன நன்மை செய்தார் அவர் சொன்னவுடனே இவ்வளவு காலமும் கடைப்பிடித்த சம்பிரதாயத்தை மாற்றுவதற்கு? ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் சட்டரீதியாய் சித்திரைக்கு தான் மாற்றுவார் அப்ப என்ன செய்வீங்கள்?

Link to comment
Share on other sites

சிலரை சில நேரம் முட்டாளாக்கலாம். அனைவரையும் எப்போதும் முட்டாளாக்க நினைப்பது இயலாத காரியம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உங்களுடைய கருத்தாகவே இருக்கமுடியும்.

கருணாநிதி சொன்னார் என்பதற்காக நாம் எதற்காக நம் முறையை மாற்ற வேண்டும்.

தமிழ் பற்று பேசும் அவர் உண்மையில் ஒரு தமிழனே இல்லை.

இங்கு தமிழனே சாகப்போறான். பிறகென்ன தமிழ் புத்தாண்டு.

இது தமிழ் புத்தாண்டு என்பதை விட இந்து புத்தாண்டாகவே சொல்ல முடியும்.

காரணம் இந்து சமயம் சார்பாகவே இது கணிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சமயம் பார்த்து சந்துல சிந்து பாடுகிறார்கள் போல இருக்குது.

Link to comment
Share on other sites

இன்று ஏப்ரல் முதலாம் திகதி. இதை உலகின் பல நாடுகளில் “முட்டாள்கள் தினம்” என்று கொண்டாடுகின்றார்கள். அன்றைக்கு ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஏமாற்றி மகிழ்வார்கள்.

இந்த “முட்டாள்கள் தினம்” ஐரோப்பாவில் இருந்து மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதியான ஒரு தினம் ஆகும்.தமிழர்களுக்கு என்றும் ஒரு “முட்டாள்கள் தினம்” உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை இதில் சொல்ல

வேண்டும். ஐரோப்பியர்களிடம் என்ன காரணத்திற்காக “முட்டாள்கள் தினம்” என்பது உருவானதோ, அதே காரணம் தமிழர்களிடமும் இருக்கின்றது.

“முட்டாள்கள் தினம்” எவ்வாறு உருவானது என்பது பற்றி பல ஆய்வுகள் உண்டு. அதில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வைப் பார்ப்போம்.

ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதலாம் நாள்தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

ஆனால் 16ஆம் நூற்றாண்டில் புதிய ஆண்டு முறை கொண்டு வரப்பட்டு ஜனவரி முதலாம் நாள் புத்தாண்டு தினமாக மாற்றப்பட்டது. ஆனால் உடனடியாக இந்தப் புத்தாண்டு அனைவராலும் ஏற்றக் கொள்ளப்படவில்லை.

ஸ்கொட்லாந்து 1660இலும், ஜேர்மனி, நோர்வே, டென்மார்க் போன்றவை 1700இலும், இங்கிலாந்து 1752இலும், பிரான்ஸ் 1852இலுமே இந்த புதிய ஆண்டு முறையை ஏற்று அங்கீகரித்தன. நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டாலும், மக்கள் அனைவரும் அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஏப்ரல் முதலாம் நாளை தொடர்ந்தும் புத்தாண்டு நாளாக கொண்டாடிக் கொண்டிருப்பவர்களை “முட்டாள்கள்” எனும் கருத்துப்பட அன்றைய நாள் “முட்டாள்கள் தினம்” என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டது. புத்தாண்டின் முதல் நாளாக இருந்த ஏப்ரல் முதலாம் நாள் இவ்வாறு முட்டாள்களுக்கு உரிய நாளாக மாறியது.

இதே நிலைமை தற்பொழுது தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

தைத்திருநாளே தமிழர்களின் புத்தாண்டு என்று தமிழறிஞர்கள் பலரால் அறிவிக்கப்பட்டு, அதை தமிழ்நாட்டின் அரசும் ஏற்று உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது. தமிழீழத்திலும் பல அமைப்புகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு அதன்படி நடந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை தைத்திருநாளை எழுச்சியுடன் கொண்டாடும்படி தமிழீழத்தில் இருந்து வேண்டுகோளும் வந்திருந்தது. ஆனால் தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பேரவலத்தினால் அத்தகைகைய கொண்டாட்டங்களை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

எது எப்படி இருப்பினும் தமிழர்களின் அரசுகள் தைத்திருநாளை தமிழர் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டு விட்டன. ஆயினும் சில தமிழர்கள் இன்னமும் ஏப்ரல் பதின்மூன்று மற்றும் பதினான்கு அன்று (இதிலும் குழப்பம் உண்டு) தமிழர் புத்தாண்டு என நம்பி கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த முறை பிறக்கின்ற ஆண்டுக்கு “விரோதி ஆண்டு” என்று வேறு பெயர் வைத்திருக்கின்றார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்களின் புத்தாண்டாகிய தைத்திருநாள் கூற, “விரோதி வருசம்” பிறக்கப் போகின்றது என்று பஞ்சாங்க ஆண்டு முறை கூறுகிறது.

இப்படி விரோதி, குரோதி என்ற பெயர்களோடு ஆண்டுகள் பிறப்பதாக நம்புபவர்களும், தமிழர்களின் புத்தாண்டு வடமொழிப் பெயர்களில் இருப்பதைப் பற்றி சந்தேகம் கொள்ளாதவர்களும், இந்த ஆண்டுகள் அனைத்தும் நாரதரும் கிருஸ்ணனுரும் அறுபது ஆண்டுகள் கலவி புரிந்து பெற்ற அறுபது பிள்ளைகள் என்று நம்புபவர்களும் அசல் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்.

இந்த வகையில் தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று அல்லது பதினான்கிலேயே வருகிறது என்பது தெளிவாகின்றது. ஆகவே “முட்டாள்கள் தினத்தை” கொண்டாடுவதற்கு நாம் இரண்டு வாரங்கள் பொறுத்திருப்போம்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

சரியான கருத்து.....

தம்மை தமிழ் தேசிய விடுதலையின் பேராதரவாளர்கள் என்று காட்டிக் கொள்பவர்கள் எல்லாம் தமிழ் தேசிய வாதத்தினை முற்றாக எதிர்த்து நின்று கொண்டு, தமிழ் தேசியத்தினை அழிக்க எல்லா வழிகளிலும் ஆதரவும் கொடுத்து கொண்டு இருக்கும் ஆரிய கலாச்சாரத்தினை, பார்ப்பனிய கோட்பாட்டினை தூக்கி பிடிப்பது தான் வேடிக்கை. இரு படகுகளில் பயணம் செய்ய முடியாது. இரு வேடம் பல நாட்கள் நிலைக்காது. ஒன்றில் தமிழ் தேசிய விடுதலை, அல்லது அதன் எதிரியான பார்பனியத்திற்கான ஆதரவு... இரண்டில் ஒன்றைத் தான் ஒருவரால் ஆதரிக்க முடியும்.

நாத்திகம் எனக் கூறிக் கொள்ளும் சபேசன் வருடம் பிறக்க முதலே தமிழ் வருடத்தின் பெயர் என்ன? அது எத்தனையாம் திகதி பிறக்குது என பஞ்சாங்கம் பார்த்து சொல்லிற முதல் ஆளாயிருப்பார் போல[இவ்வளவு பிரச்சனைக்கு உள்ளேயும்]

ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் கருணாநிதி தமிழர்களுக்கு என்ன நன்மை செய்தார் அவர் சொன்னவுடனே இவ்வளவு காலமும் கடைப்பிடித்த சம்பிரதாயத்தை மாற்றுவதற்கு? ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் சட்டரீதியாய் சித்திரைக்கு தான் மாற்றுவார் அப்ப என்ன செய்வீங்கள்?

ஒரு வேளை கருணாநிதி தமிழர்களுக்கு அல்லது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தந்திருந்தார் என்றால் அவரின் கருத்தை ஏற்றுக் கொண்டிருப்பீர்களா அம்மையாரே? ஜெயலலிதா எனும் பார்பனிய ஆதரவாளரின் செயலைப் பார்த்து மீண்டும் மாற வேண்டிய அவசியம் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எவருக்கும் நிச்சயம் வராது

மற்றது, 'இவ்வ்வ்வளவு பிரச்சனைக்கு உள்ளே' நின்று பெண்கள் தினத்திற்கு ஆம்பிளைகளுடன் மல்லுக்க நிற்க முடியும் என்றால், நாங்கள் தமிழர் புத்தாண்டு பற்றி இப்போது பேச / எழுத மட்டும் முடியாதா... நல்லாயிருக்குது கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் விடிஞ்சா வாழ்விருக்குமோ என்று தெரியாத நிலையில வாழ்ந்திட்டு இருக்கிறான். உங்க சில பேர் நாட்டை விட்டு ஓடி வந்து பதுங்கி இருந்து கொண்டு புகழ்வளர்க்க.. காலத்துக்கு ஒரு கட்டுரை எழுதி விட்டுக் கொண்டு திரியினம்.

இவை கொஞ்சக்காலமா வன்னி போர்க்களம் பற்றி எழுதிக் கிழிச்சு பெரிய புரட்சி பண்ணிட்டினம்.. இப்ப இப்படி எழுதி.. வெற்று வேட்டுகள். இதாலதான் வட இந்திய மற்றும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்.. தமிழீழம் என்ற சொல்லையே.. அநாதையாப் பார்க்கிறாங்க.

கருணாநிதி இப்ப போய் இராமர் கடவுளா.. எந்தப் பல்கலைக்கழகத்தில் படிச்சவர் என்று கேட்கட்டும் பார்ப்பம். இப்ப சேதுவைப் பற்றியே கதைக்கமாட்டார். கதிரைக்கு அவ்வளவு பயம். கருணாநிதி சும்மா தன்ர குறளி வித்தையைக் காட்டிட்டு.. சட்டை பையை நிரப்பிற வழியைப் பார்க்கிறது போல.. எங்களுக்குள்ளும் சாபக்கேடுகள்..! அரைகுறையளோட.. அறிவியலும் கதைக்க முடியாது.. அரியாரமும் செய்ய முடியாது.. எதுவும் செய்ய முடியாது.

ஆரியம் திராவிடம் என்ற ஆங்கிலேயக் கோட்பாடுகளே ஆட்டம் கண்டு போயுள்ள இந்த நவீன அறிவியல் உலகில்.. இப்படியும் ஒரு கூட்டம் எமக்குள்..!

உவர் தராகிக்கு.. இப்ப இதுதான் ஊர் புதுனத்திற்க முக்கியமான செய்தி போல.. தெரியுது..! :D:(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='nedukkalapoovan' date='Apr 2 2009, 08:47 PM' post='502503']

அவனவன் விடிஞ்சா வாழ்விருக்குமோ என்று தெரியாத நிலையில வாழ்ந்திட்டு இருக்கிறான். உங்க சில பேர் நாட்டை விட்டு ஓடி வந்து பதுங்கி இருந்து கொண்டு புகழ்வளர்க்க.. காலத்துக்கு ஒரு கட்டுரை எழுதி விட்டுக் கொண்டு திரியினம்.

இவை கொஞ்சக்காலமா வன்னி போர்க்களம் பற்றி எழுதிக் கிழிச்சு பெரிய புரட்சி பண்ணிட்டினம்.. இப்ப இப்படி எழுதி.. வெற்று வேட்டுகள். இதாலதான் வட இந்திய மற்றும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்.. தமிழீழம் என்ற சொல்லையே.. அநாதையாப் பார்க்கிறாங்க.

கருணாநிதி இப்ப போய் இராமர் கடவுளா.. எந்தப் பல்கலைக்கழகத்தில் படிச்சவர் என்று கேட்கட்டும் பார்ப்பம். இப்ப சேதுவைப் பற்றியே கதைக்கமாட்டார். கதிரைக்கு அவ்வளவு பயம். கருணாநிதி சும்மா தன்ர குறளி வித்தையைக் காட்டிட்டு.. சட்டை பையை நிரப்பிற வழியைப் பார்க்கிறது போல.. எங்களுக்குள்ளும் சாபக்கேடுகள்..! அரைகுறையளோட.. அறிவியலும் கதைக்க முடியாது.. அரியாரமும் செய்ய முடியாது.. எதுவும் செய்ய முடியாது.

ஆரியம் திராவிடம் என்ற ஆங்கிலேயக் கோட்பாடுகளே ஆட்டம் கண்டு போயுள்ள இந்த நவீன அறிவியல் உலகில்.. இப்படியும் ஒரு கூட்டம் எமக்குள்..!

உவர் தராகிக்கு.. இப்ப இதுதான் ஊர் புதுனத்திற்க முக்கியமான செய்தி போல.. தெரியுது..! :D:(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தனிநபர் தாக்குதலாக மாற்ற வேண்டாம். உங்களுக்கு அவரின் கருத்துப் பிடிக்கவில்லை என்றால் உங்களின் தர்க்கங்களை முன்வைய்யுங்கள், அதை விடுத்து..நீ தான் முட்டாள், நாந்தான் முட்டாள் என்று எகிறுவது சரியில்லை. கருணாநிதி செய்வது யாருக்குத்தான் பிடிக்கிறது? ஆனால் ஜெயலலிதா எனும் தற்பெருமை பிடித்த , அகம்பாவம் கொண்ட , சுயநலம் மிக்க பெண்மணியை விட கலைஞர் பரவாயில்லை. எம்மில் பலருக்கு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தும் கூட அவரை வரவேண்டும் என்று சொல்வது ஆச்சரியமளிக்கிறது. ஜெயா சொன்னால் செய்து காட்டுவார் என்று தம்பட்டம் அடிக்கும் பலரிடம் ஒரு கேள்வி, அவர் தமிழர் நலன் தொடர்பில் சொல்லிய, பின்னர் அவ்வாறே செய்துகாட்டிய ஒரு ஆக்கபூர்வமான விடயம் ஒன்றைச் சொல்லுங்களேன் கேட்கலாம்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகமெங்கும் வாழும் நாடற்ற தமிழர்களின் தற்போதைய நிலைமைக்கு காரணம் அவர்களின் மூட நம்பிக்கைகள், சாதி, மத, பிராந்திய மற்றும் பணக்காரத்துவ வேறுபாடுகளேயன்றி வேரொன்றும் இல்லை. சபேசனின் கருத்தை தர்க்க ரீதியாக ஆதரிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote name='nedukkalapoovan' date='Apr 2 2009, 08:47 PM' post='502503']

அவனவன் விடிஞ்சா வாழ்விருக்குமோ என்று தெரியாத நிலையில வாழ்ந்திட்டு இருக்கிறான். உங்க சில பேர் நாட்டை விட்டு ஓடி வந்து பதுங்கி இருந்து கொண்டு புகழ்வளர்க்க.. காலத்துக்கு ஒரு கட்டுரை எழுதி விட்டுக் கொண்டு திரியினம்.

இவை கொஞ்சக்காலமா வன்னி போர்க்களம் பற்றி எழுதிக் கிழிச்சு பெரிய புரட்சி பண்ணிட்டினம்.. இப்ப இப்படி எழுதி.. வெற்று வேட்டுகள். இதாலதான் வட இந்திய மற்றும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்.. தமிழீழம் என்ற சொல்லையே.. அநாதையாப் பார்க்கிறாங்க.

கருணாநிதி இப்ப போய் இராமர் கடவுளா.. எந்தப் பல்கலைக்கழகத்தில் படிச்சவர் என்று கேட்கட்டும் பார்ப்பம். இப்ப சேதுவைப் பற்றியே கதைக்கமாட்டார். கதிரைக்கு அவ்வளவு பயம். கருணாநிதி சும்மா தன்ர குறளி வித்தையைக் காட்டிட்டு.. சட்டை பையை நிரப்பிற வழியைப் பார்க்கிறது போல.. எங்களுக்குள்ளும் சாபக்கேடுகள்..! அரைகுறையளோட.. அறிவியலும் கதைக்க முடியாது.. அரியாரமும் செய்ய முடியாது.. எதுவும் செய்ய முடியாது.

ஆரியம் திராவிடம் என்ற ஆங்கிலேயக் கோட்பாடுகளே ஆட்டம் கண்டு போயுள்ள இந்த நவீன அறிவியல் உலகில்.. இப்படியும் ஒரு கூட்டம் எமக்குள்..!

உவர் தராகிக்கு.. இப்ப இதுதான் ஊர் புதுனத்திற்க முக்கியமான செய்தி போல.. தெரியுது..! :):lol::(

எழுத்தாடல் என்பது எல்லாவற்றையும் ஆய்வுக்குட்படுத்தி தருவது. ஆகவே எந்த நேரத்தில் செய்யபட்டது என்பது முக்கியமல்ல என்ன செய்ய பட்தென்பதே முக்கியம். சிவப்பு வர்ணம் அடித்த வார்த்தைகள். உங்களை மிகவும் ஒரு சிறியவனாக காட்டிநிற்பதாக நான் உணருகிறேன். கொஞசம் பக்குவம் இருந்தால் மட்டுமே பக்குவமாக ஒன்றினை பகுத்தாய முடியும். இல்லையேல் உதறிய குலையில் பதறிய பழங்களாகவே இருக்கும். சித்திரையில் புதுவருடம் என்பது உலகத்தின் சுழற்சிகாரணமாக ஏற்புதலுக்கு உடையது மட்டுமல்ல பழைய காலமும் அதையே நம்பியுமுள்ளது. காரணம் இலைதுளிர்காலம் சித்திரையில்தான் தோன்றுகின்றது. பூமியில் எல்லாம் புதிதாக தோன்றுகின்றன ஒரு புதுவாழ்வை தொடங்குவதாக ஒரு உணர்வு மலர்கிறது. ஆனால் பாழாய்போன இந்த ஜனவரி ஒன்று இதற்குள் ஏன் வந்துமதட்டிற்றோ தெரியவில்லை.

இப்போதைய கேள்வியும் கருத்தாடலும். புதுவருடமென்று கொண்டாட ஏப்ரல் மாதத்திற்கு உலகத்தை அழைக்க முடியுமா என்பதே?

என்னத்தை அடிப்படையா வைச்சு.. இதை ஆராயப் போறீங்க.

புகலிடத்தில் உள்ள தமிழர்களை அடிப்படையா வைச்சா. தமிழகத்தில் வாழும் தமிழர்களை அடிப்படையா வைச்சா.. இல்ல ஈழத்தில் உள்ள தமிழர்களை வைச்சா..??!

அடிப்படையில் புகலிடத்தில் உள்ள தமிழர்கள் தம்மை அந்தந்த நாடுகளின் சமூக வாழ்வியலோடு காலவோட்டத்தில் கலக்கச் செய்து விடுவர். அதுதான் யதார்த்தம். அங்கு இந்த வெற்று வேட்டு கட்டுரைகளுக்கு மதிப்பிருக்க வாய்ப்பில்லை.

உலகம் என்பது தென்னிந்திய பூகோள அமைவிடத்தைக் கொண்டதல்ல. பூமிப்பந்து எங்கனும் பல ஒத்திசைவுகளோடு ஒத்திசைவற்ற அம்சங்களும் இருக்கின்றன. அவை அந்தந்த தேசங்களில் வாழும் மக்களின் சமூக வாழ்விலும் செல்வாக்குச் செய்கின்றன. அந்த அடிப்படைகளை ஆராயாமல்.. சகட்டு மேனிக்கு அங்க மாறுது.. இங்க மாறினா என்ன என்ற கேள்விகளை முன்வைப்பது அர்த்தமற்றது. அறிவிலித்தனமானது.

தமிழகம்.. தெளிவாக அரசியல் ரீதியான நகர்வுகளை கண்டு உணர்கிறது. அதற்கென்று தனியான ஒரு ஆய்வு மையம் இது தொடர்பான மாற்றங்களை சமூக மற்றும் வரலாற்று அறிவியல் பின்னணிகளோடு ஆராய்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது.

இக்கட்டுரை எந்த அறிவியல் அடிப்படைகளும் இன்றி.. எழுதப்பட்டுள்ள.. ஒரு மேம்போக்கான கட்டுரை மட்டுமே. இது ஈழத்தமிழர்களை நோக்கி ஒரு குழப்பகரமான அரசியல் சமூகச் சூழலில் திணிக்கப்படும் கட்டுரை. ஈழத்தமிழன் ஒன்றும் வெற்று வேட்டுக்கு அங்கீகாரம் வழங்கும் முட்டாள் அல்ல. எமக்கென்றான தனித் தன்மைகள்.. அறிவியல்.. சமூக.. வரலாற்று அணுகுமுறைகள் இருக்கின்றன. அதன் கீழ் இவற்றை ஆராய வேண்டும்.

சும்மா உலகம் மாறுது.. நாமும் மாத்திக்கனும் என்பதில் அர்த்தமில்லை. உலகத்தில என்ன மாறுது.. ஏன் மாறுது.. நாம் ஏன் மாத்திக்கனும்.. அதன் நன்மை தீமை என்ன..ஏதாவது ஆராய்ஞ்சு பார்த்திருக்கமா..??! நாலு பேரு சொன்னானா.. ஆரியம்.. வகுத்தது அது... நாம காவி போட்ட திராவிடனாம்.. அதை எதிர்க்கனுமாம் என்ற கீழ்த்தரமான சிந்தனைக்கு இடமளிக்கின்ற உணர்ச்சி ஊற்றுக்கள் அல்ல.. எமது கேள்விக்கு விடை கொடுக்கக் கூடியவை.

நிறைய விடயங்கள் ஆராயப்படனும். ஆழமாக. பருமட்டாக்கக் கூட அல்ல. ஆனால்.. வெறும் இணையமும்.. கணணியும் இருக்கு என்றதற்காக சோடிப்பு வார்த்தைகள் கொண்டு எழுதுவதை எல்லாம் நம்ப வேண்டும் என்ற அவசியம் மக்களுக்கு இல்லை. அந்த அடிப்படையில்.. இந்த அடிப்படை அற்ற கட்டுரைகள் இன்றைய எமக்கு... ஈழத்தமிழருக்கு அவசியமற்றவை..! அர்த்தமற்றவை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகமெங்கும் வாழும் நாடற்ற தமிழர்களின் தற்போதைய நிலைமைக்கு காரணம் அவர்களின் மூட நம்பிக்கைகள், சாதி, மத, பிராந்திய மற்றும் பணக்காரத்துவ வேறுபாடுகளேயன்றி வேரொன்றும் இல்லை. சபேசனின் கருத்தை தர்க்க ரீதியாக ஆதரிக்கின்றேன்.

இதையே நான் பிறந்ததில் இருந்து எம்மவர் பத்திரிகைகளில்.. இணையங்களில் வாசிச்சுக் கொண்டிருக்கிறன். ஆனால்.. இரண்டு தசாப்தங்களாகியும் இவை எதுவும் எம்மவர் மத்தியில் எந்தத் தாக்கங்களையும் செய்யவில்லை. ஏன் அப்படி.. வெறும் வெட்டு வேத்துகளாகவே.. இவை இருக்கின்றன.. என்ற ஆராய்ச்சி முக்கியமானது. எத்தனை பேர் ஆதரிக்கிறது என்பது முக்கியமல்ல. சொல்லப்படுற விடயம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க.. அடிப்படைகளை அறிவை வழங்கக் கூடியதா என்பதுதான் அவசியம். அது இல்லை என்பதே தசாப்தங்கள் கடந்தும்.. மாற்றங்கள் என்பது மலினப்பட்டுப் போய் இருக்கக் காரணமாகின்றன.

கள்ளச்சாமி என்று சிறையில பிடிச்சுப் போட்டும்.. சிறையில கூட சாமி என்று கும்பிடு போடுறான் என்றால்.. ஏன் அவன் சாமியைத் தேடுறான்.. அதற்கான அவசியம் என்ன என்பதை ஆராய்வதை விடுத்து.. அவனிட்டப் போய் அவன் கள்ளச்சாமிடா என்றால் அவன் அதை ஏற்கப்போவதில்லை. நாம் மக்களை ஆராயாமல்.. வெட்டிக்கு.. புகழை பெயரை எதிர்பார்த்து வெட்டிக்கு புரட்சி என்று பதம் பாவிச்சு எழுதிறதெல்லாம்.. ஏட்டுச் சுரக்காயா.. இருக்க இதுதான் காரணம்.

இன்னும் நூறாண்டுகள் போனாலும்.. அறிவியலற்ற.. ஆராய்ச்சியற்ற.. மக்களின் மனப்பாங்கு.. தேவை.. சமூக நிலை அறியாத ஆராயாத எந்தக் கட்டுரைகளும் மக்கள் மத்தியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தா. ஆனால் சிலர் எழுதிவிட்டு.. தமக்குத் தாமே பன்னாடைகள் மன்னிக்கனும் பொன்னாடைகள் போர்த்திக்க மட்டும் இவை உபயோகமாக இருக்கும்.

உங்களிடம் ஒரு விடயத்தை முன் வைக்கிறேன்.

மூடநம்பிக்கைகள் எவை..??!

எந்த அடிப்படையில் அவை மூடநம்பிக்கைகள் என்று இனங்காட்டுகிறீர்கள்..??!

நீங்கள் மூட நம்பிக்கை என்று இனங்காட்ட பாவித்த அறிவியல் தளம் என்ன..??!

அந்த மூட நம்பிக்கையை மக்கள் நாடிச் செல்வதற்கான மக்களின் தேவை என்ன..??!

நீங்கள் இனங்காணும் அம்சங்களையும் அவற்றுக்கான அறிவியல் பூர்வமான விடைகளையும் எவ்வாறு வேறு காத்திரமான வழிகளில் முன்வைத்து மக்களை மூடநம்பிக்கையற்ற வழிக்கு வழிகாட்டப் போறீங்க..??!

இதற்கான அறிவூட்டலை மக்களிடம் எப்படிக் கொண்டு போகப் போறீர்கள்..??!

இவை அனைத்துக்கும் கணணிக்கு முன்னால் குந்தி இருந்தோ அல்லது நாலு புத்தக்கத்தை பிரட்டிட்டோ.. இல்ல 1970 களில் யாரோ ஒருவர் உணர்ச்சிப் பெருக்கில் காழ்ப்புணர்ச்சியில் மேடைகளில் பேசியதை வைச்சோ செயல்படுத்த முடியாது. நிகழ்கால உலகில்.. நிகழ்கால மக்களின் சிந்தனைப் போக்கில்.. இதனை வைச்சு ஆராயனும்.. மக்களிடம் அவர்கள் ஏற்கக் கூடிய வழிமுறைகளில் ஆதார அடிப்படைகளோடு காரண காரியங்களோடு முன் வைக்க வேண்டும். ஒரு உதாரணத்தை எடுத்து இதைச் செய்யுங்கள் பார்க்கலாம்.

சும்மா ஆளாளுக்கு வந்து.. மூடநம்பிக்கை என்றீங்க.. பகுத்தறிவு இல்லை என்றீங்க.. அதுக்கு ஒத்தூதுறீங்க.. ஆனால் சமூகத்தில.. பகுத்தறிவு பேசிறவனே.. தன்னை ஒளிச்சு வைச்சிட்டு.. தன்ர மனிசியை கோவிலுக்கு விட்டு யாகம் பண்ணுவிக்கிறான். சமூகத்துக்கு தாலி வேண்டாம் என்பவனே தனக்கு என்றவுடன் 20 பவுனில் கட்டிக்கிறான். கற்பு என்றால் என்ன என்பவனே தனக்கு கன்னிப் பெண் வேணும் என்கிறான். சிவனை நிந்திக்கிறவன் ஜேசுவைப் போற்றுறான். ஜேசுவை நித்திக்கிறவன் அல்லாவை மெச்சுறான். இந்தப் பிறழ்வுகளோடு.. சமூகத்தை அணுகினால்.. நிச்சயம்.. நூற்றாண்டென்ன மிலேனியங்கள் கடந்தாலும்.. உண்மையான மாற்றங்களை இவ்வாறான எழுத்துக்கள் உண்டு பண்ணா..! இவையே வெற்று வேட்டுக்கள் என்றாகின்றன.:lol::D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை கருணாநிதி தமிழர்களுக்கு அல்லது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தந்திருந்தார் என்றால் அவரின் கருத்தை ஏற்றுக் கொண்டிருப்பீர்களா அம்மையாரே? ஜெயலலிதா எனும் பார்பனிய ஆதரவாளரின் செயலைப் பார்த்து மீண்டும் மாற வேண்டிய அவசியம் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எவருக்கும் நிச்சயம் வராது

மற்றது, 'இவ்வ்வ்வளவு பிரச்சனைக்கு உள்ளே' நின்று பெண்கள் தினத்திற்கு ஆம்பிளைகளுடன் மல்லுக்க நிற்க முடியும் என்றால், நாங்கள் தமிழர் புத்தாண்டு பற்றி இப்போது பேச / எழுத மட்டும் முடியாதா... நல்லாயிருக்குது கதை

எனது கருத்தினை நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டு உள்ளீர்கள் நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாங்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் ஒரு பழக்கத்தை மாற்றுவதற்கு கருணாநிதி யார் என்று தான் கேட்டேன்.இந்தியாவில் அது தானே நடைமுறையில் உள்ளது திமுக ஆட்சியில் இருக்கும் போது ஒரு சட்டம் கொண்டு வரும் பிறகு அதிமுக ஆட்சிக்கு வ்ந்தால் அதை மாற்றி விடும்.மாறி,மாறி இது தானே நடக்கிறது.கருணாநிதியாலேயோ,ஜெ

யலலிதாவாலேயோ நாங்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் பழக்கத்தை மாற்ற முடியாது என்பது எனது கருத்து.

உங்களை இங்கு கருத்து எழுத வேண்டாம் என நான் எப்போ சொன்னேன்? நான் சொன்னது ஈழத்தில் சனங்கள் செத்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சபேசனுக்கு வருடப் பிறப்பு கேட்குதா என்ற அர்த்ததில் தான் எழுதினேன்.சபேசன் வந்து எழுதிய பிறகு தான் எனக்கு வருடப் பிறப்பு எத்தனையாம் திகதி பிறக்குது எனத் தெரியும்.

அதே மாதிரி தான் மற்றவர்களும் இருப்பார்கள் என நினைத்தது என் தப்பு தான்.உங்கள் ஆனாதிக்கத்தை காட்டியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

உறவே நீங்கள் சொன்னது மிக மிக சரி நாங்கள் எங்களுக்க ஆயிரம் பிரிவையும்

கருத்து வேறுபாடுகளையும் சுயநலத்தையும் தருணம் பார்த்து தள்ளி விழுத்தும் மனநிலயையும் வைச்சுக் கொண்டு

பேந்து ஏன் மற்ரவனை குறை கூற வேண்டும்??????. நாளைக்கு எங்கட நாடு விடுதலை பெற்றால் மற்ரவையே

போய் இருக்க போயினம்.............

Link to comment
Share on other sites

எனது கருத்தினை நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டு உள்ளீர்கள் நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாங்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் ஒரு பழக்கத்தை மாற்றுவதற்கு கருணாநிதி யார் என்று தான் கேட்டேன்.இந்தியாவில் அது தானே நடைமுறையில் உள்ளது திமுக ஆட்சியில் இருக்கும் போது ஒரு சட்டம் கொண்டு வரும் பிறகு அதிமுக ஆட்சிக்கு வ்ந்தால் அதை மாற்றி விடும்.மாறி,மாறி இது தானே நடக்கிறது.கருணாநிதியாலேயோ,ஜெ

யலலிதாவாலேயோ நாங்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் பழக்கத்தை மாற்ற முடியாது என்பது எனது கருத்து.

உங்களை இங்கு கருத்து எழுத வேண்டாம் என நான் எப்போ சொன்னேன்? நான் சொன்னது ஈழத்தில் சனங்கள் செத்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சபேசனுக்கு வருடப் பிறப்பு கேட்குதா என்ற அர்த்ததில் தான் எழுதினேன்.

கருணாநிதி சொல்லித் தான் / சட்டம் கொண்டுவந்த பின் தான் தமிழ் புத்தாண்டு என்பது சித்திரையில் அல்ல என்றும் அது ஆரிய/ பார்ப்பன கோட்பாட்டின் அடிப்படையில் நடை பெற்று வரும் ஒரு தமிழ் தேசியத்திற்கு எதிரான ஒரு வழக்கம் என்றும் அறிந்து கொண்டுள்ளோம் என்று நீங்கள் எம்மைப் பற்றி அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். நன்றி உங்களின் புத்திசாலித்தனத்தினை காட்டியமைக்கு

ரதி, உங்களளவுக்கு நான் அறிவுஜீவியோ அல்லது புத்திசாலியோ அல்ல. உங்களைப் போன்ற wisdom fruit (ஞானப் பழம்) களுடன் என்னப் போன்றவர்கள் விவாதிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி சொல்லித் தான் / சட்டம் கொண்டுவந்த பின் தான் தமிழ் புத்தாண்டு என்பது சித்திரையில் அல்ல என்றும் அது ஆரிய/ பார்ப்பன கோட்பாட்டின் அடிப்படையில் நடை பெற்று வரும் ஒரு தமிழ் தேசியத்திற்கு எதிரான ஒரு வழக்கம் என்றும் அறிந்து கொண்டுள்ளோம் என்று நீங்கள் எம்மைப் பற்றி அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். நன்றி உங்களின் புத்திசாலித்தனத்தினை காட்டியமைக்கு

ரதி, உங்களளவுக்கு நான் அறிவுஜீவியோ அல்லது புத்திசாலியோ அல்ல. உங்களைப் போன்ற wisdom fruit (ஞானப் பழம்) களுடன் என்னப் போன்றவர்கள் விவாதிக்க முடியாது.

நீங்கள் சொன்னது உண்மை தான் நிழலி நான் ஞானப்பழம் தான் உங்களை மாதிரி நான் பத்திரிகையில் எழுதியதில்லை.கருணாநிதி தானே இதை சட்டமாகக் கொண்டு வந்தார் அதுக்கு அடிப்படையாக எந்த தமிழறிஞர்கள் இருந்தார்கள் என அவர்கள் பெயர் விபரங்களோடு ஆதாரத்துடன் விபரமாக கூற முடியுமா? அவர்கள் யாரக இருந்தாலும் பாரம்பரியமாக கடைப் பிடிக்கும் ஒரு வழக்கத்தை திடிரென மாற்ற முடியாது என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

ரதி,

தைத்திருநாளை தமிழர் புத்தாண்டாக கொண்டு வருவதற்கு 1930களிலேயே பல அறிஞர்கள் முயற்சி எடுத்து வந்திருக்கிறார்கள். மறைமலை அடிகள், சோமசுந்தரப் பாரதியார், மீனாட்சி சுந்தரனார் போன்ற பல அறிஞர்கள் இதற்காக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

கலைஞர் மிகவும் காலம் பிந்தியே இதைச் சட்டமாக இயற்றினார். தைப் புத்தாண்டு கலைஞருக்கு சொந்தமானது அன்று. அது தமிழர்களுக்கு சொந்தமானது.

மக்கள் பாரம்பரியமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கத்தை திடீரென மாற்ற முடியாது என்று சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மைதான். அதனாற்தான் முட்டாள்களுக்கான நாளும் உருவாகியது.

16ஆம் நூற்றாண்டில் புதிய ஆண்டுமுறை ஐரோப்பாவில் அறிவிக்கப்பட்டும் அதை மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. தமிழர்களும் தைப் புத்தாண்டை ஏற்றுக் கொள்ள நாள் ஆகலாம். அப்படியே ஏப்ரல் பதின்மூன்று தமிழர்களின் முட்டாள்கள் நாளாகவும் ஆகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

தைத்திருநாளை தமிழர் புத்தாண்டாக கொண்டு வருவதற்கு 1930களிலேயே பல அறிஞர்கள் முயற்சி எடுத்து வந்திருக்கிறார்கள். மறைமலை அடிகள், சோமசுந்தரப் பாரதியார், மீனாட்சி சுந்தரனார் போன்ற பல அறிஞர்கள் இதற்காக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

கலைஞர் மிகவும் காலம் பிந்தியே இதைச் சட்டமாக இயற்றினார். தைப் புத்தாண்டு கலைஞருக்கு சொந்தமானது அன்று. அது தமிழர்களுக்கு சொந்தமானது.

சபேசன் நீங்கள் மேலே குறிப்பிட்டவர்கள் எல்லாரும் தைப் பொங்கலை தான் வருடப் பிறப்பாக கொண்டு வர முயன்றார்கள் என்றால் அதற்கான ஆதாரம் எங்கே,எந்த நூலில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்?

என்ன கார‌ணத்திற்காக தைப் பொங்கலை தமிழர்களின் வருட‌ப் பிறப்பு ஆக மாற்றச் சொன்னார்கள்?[ஆதாரத்துடன் சொல்லுங்கள்]

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் 1930 ம் ஆண்டுக்கு முதல் தமிழறிஞர்களே இல்லை போல கிடக்குது.

Link to comment
Share on other sites

ரதி,

உங்களுக்கு நேரம் கிடைத்தால், நான் குறிப்பிட்டிருக்கும் அறிஞர்கள் பற்றி தேடி வாசியுங்கள். அல்லது திருவள்ளுவர் ஆண்டு முறை பற்றி வாசித்தாலும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

இதில் அவுஸ்ரேலியா சபேசன் எழுதிய இரண்டு கட்டுரைகள் இருக்கின்றன. இவைகளையும் படியுங்கள்

http://www.tamilnaatham.com/articles/2008/jan/sabesan/14.htm

http://www.tamilnaatham.com/articles/2008/apr/sabesan/11.htm

Link to comment
Share on other sites

இதைத் தனிநபர் தாக்குதலாக மாற்ற வேண்டாம். உங்களுக்கு அவரின் கருத்துப் பிடிக்கவில்லை என்றால் உங்களின் தர்க்கங்களை முன்வைய்யுங்கள், அதை விடுத்து..நீ தான் முட்டாள், நாந்தான் முட்டாள் என்று எகிறுவது சரியில்லை. கருணாநிதி செய்வது யாருக்குத்தான் பிடிக்கிறது? ஆனால் ஜெயலலிதா எனும் தற்பெருமை பிடித்த , அகம்பாவம் கொண்ட , சுயநலம் மிக்க பெண்மணியை விட கலைஞர் பரவாயில்லை. எம்மில் பலருக்கு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தும் கூட அவரை வரவேண்டும் என்று சொல்வது ஆச்சரியமளிக்கிறது. ஜெயா சொன்னால் செய்து காட்டுவார் என்று தம்பட்டம் அடிக்கும் பலரிடம் ஒரு கேள்வி, அவர் தமிழர் நலன் தொடர்பில் சொல்லிய, பின்னர் அவ்வாறே செய்துகாட்டிய ஒரு ஆக்கபூர்வமான விடயம் ஒன்றைச் சொல்லுங்களேன் கேட்கலாம்?!

இப்படி விரோதி, குரோதி என்ற பெயர்களோடு ஆண்டுகள் பிறப்பதாக நம்புபவர்களும், தமிழர்களின் புத்தாண்டு வடமொழிப் பெயர்களில் இருப்பதைப் பற்றி சந்தேகம் கொள்ளாதவர்களும், இந்த ஆண்டுகள் அனைத்தும் நாரதரும் கிருஸ்ணனுரும் அறுபது ஆண்டுகள் கலவி புரிந்து பெற்ற அறுபது பிள்ளைகள் என்று நம்புபவர்களும் அசல் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்.

ஒருவர் ஒட்டுமொத்த சமுதாயத்தையே முட்டாள் என்று கூறுவார். அதை நாங்கள் சகித்துக்கொள்ள வேண்டும். அவரை முட்டாள் என்று திருப்பி கூறினால் அது தனி மனித தாக்குதல். நல்லாயிருக்கின்றது உங்களது நியாயம்.

இந்துக்களின் நம்பிக்கைகளை முட்டாள்தனம் என்று கூறுபவர்களே

முதலில் உங்கள் குடும்பத்தில் அதனை செயற்படுத்துங்கள்.

உங்கள் பிள்ளைக்கு சாதகம் கணிக்காத உங்கள் வைபங்களுக்கு நாள் நட்சத்திரம் பார்க்காத உங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆபத்தான நேரத்தில் கடவுளே என்பிள்ளையை காப்பாற்று என்று வேண்டாத யாரும் உண்மையில் இருக்கின்றீர்களா? இல்லை. ஆனால் மற்றவனுக்கு உபதேசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களது உரிமை என்பது மற்றவனின் மூக்கில் உங்கள் விரல் துனி படும் வரையிலே...!

உங்களுக்கு முட்டாள்த்தனமாக படுபவை மற்றவனுக்கு சரியாகப்படலாம். உங்களுக்கு சரியாகப்படுபவை மற்றவர்களுக்கு முட்டாள்த்தனமாக தெரியலாம். இவை அனைத்தும் தனி நபர் சார்ந்த விடயங்கள்.

ஊரே பற்றி எறியும் போது தீயை அணைக்க வழிதேட வேண்டும், மாறாக தீ எரிகிறது எரிந்து முடியும் அது முடிந்த பின் புதிய வீடுகட்ட வேண்டும் அதற்கு பொருட்கள் சேகரிக்க வேண்டும் என்று நாம் விட்டுவிடுதல் ஆகாது. ஒரு கருத்தை வைக்கும் போது சூழ்நிலைக்கு ஏற்ப வைத்தல் நன்று அதை விடுத்து எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் திணித்தால் யாராலும் ஜீரணிக்க முடியாது.

நான் சித்திரை புத்தாண்டையும் கொண்டாடுகின்றேன்... அதே போல தமிழ் புத்தாண்டான தைப் பொங்கலையும் கொண்டாடுகின்றேன். காரணம் அடிப்படையில் நாம் தமிழர்... ஆனால் எமது நம்பிக்கை என்ற ஒன்றின் அடிப்படையில் சித்திரைப்புத்தாண்டை ஆதரிக்கின்றேன். எப்படி வியாபார ஸ்தாபனங்கள் எல்லா திருநாட்களையும் வைத்து சம்பாதிக்க முடியுமோ அப்படியே நாமும் மகிழ்ந்திருக்க கூடிய சந்தர்ப்பங்களை நழுவ விடுவதில்லை. ஆனால் இப்போது புத்தாண்டு கொண்டாடும் மன நிலை யாருக்கு இருக்கிறது என்பது கட:டுரையாளாருக்கு மட்டுமே வெளிச்சம்.

நிழலி அவர்கள் சொன்னக்கு ஒரு கருத்து...

பார்ப்பனியம் என்றால் என்ன? எங்கு தொட்டாலும் பார்ப்பனியம்... பார்ப்பான் என்று தான் பொதுவாக பகுத்தறிவு மிக்கவர்கள் பேசுகின்றனர். ஆனால் எந்த பார்ப்பனியர்கள் சித்திரை வருடப்பிறப்பை புதுவருடமாக கொண்டாடுகின்றனர்? இதை சற்று தெளி படுத்துங்கள். அது மட்டுமன்றி இந்த சித்திரை புத்தாண்டு எந்த வகையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக அமைகின்றது?

________________

கருணாநிதி ஒரு துரோகி என்றால்... ஜெயலலிதா எதிரி.... நேரடியான எதிரியை விட மறைமுகமான துரோகி ஆபத்தானவன்...

கருணாநிதி தேர்தலில் தோற்று ஜெயலலிதாவின் கட்சி வெற்றி பெற்றால் சந்தோசப்படுபவர்களில் நானும் ஒருவன்!

Link to comment
Share on other sites

உங்கள் பிள்ளைக்கு சாதகம் கணிக்காத உங்கள் வைபங்களுக்கு நாள் நட்சத்திரம் பார்க்காத உங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆபத்தான நேரத்தில் கடவுளே என்பிள்ளையை காப்பாற்று என்று வேண்டாத யாரும் உண்மையில் இருக்கின்றீர்களா?

நான் இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கிறேன்

ஓம் அண்ண நீங்களே சொல்லித்தான் தெரிய வேண்டி இருக்குது நீங்கள் இருக்கிறீங்கள் என்று. என்ன செய்வம்.. இவ்வளவு சுய விளம்பரம் கொடுத்தும்.. கனக்கெடுக்கிறாங்கில்லையே..!! :(

தாலியை இழிச்சுப் பழிச்சு கதையெழுதிய தாங்களே.. அம்மாவிற்காக தாலி கட்டி திருமணம் செய்பவராச்சே..! அப்படி இருக்கேக்க.. இதென்ன.. நாளை உங்கள் தாத்தாவிற்காக.. பிள்ளையின் குறிப்பையும் எழுதி வைக்கமாட்டீங்களா என்ன..??! யார் கண்டா உங்கள் வீட்டுத்தோட்டத்தில மேயுற பன்றிக் குட்டிகளை..??! இணையத்தில எழுத்தால உருமறைப்புச் செய்தாப் போல பன்றிக் குட்டி.. பசுக்கன்றாக முடியுமா..??! :lol: :lol:

Link to comment
Share on other sites

சில விடயங்களை சிலருக்கு நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்: ஆனால் சாமி கும்பிடாத, சாதகம் பார்க்காத வைபவங்களுக்கு நாள் நட்சத்திரம் பார்க்காத பலர் இருக்கின்றார்கள். நானும் இருக்கின்றேன்.

நான் சாமி கும்பிடுவது இல்லை. சாதகம், நாள், நட்சத்திரம் நான் பார்ப்பது இல்லை. தாய்க்கோ, மனைவிக்கோ, பிள்ளைக்கோ நோய் வருகின்ற பொழுது கடவுளை வேண்டுவது இல்லை. நேர்த்தி வைப்பது இல்லை.

தாலி கட்டியதும் நான் நேரம் பார்த்து செய்யவில்லை. நாள் பார்த்தோ, நேரம் பார்த்தோ திருமணம் செய்யவில்லை.

தாலி கட்டியது என்னுடைய அம்மாவிற்காக அன்று. இதைப் பற்றி நிறையப் பேசியாகி விட்டது.

தாலிக்கு சமூகம் கொடுக்கும் அர்த்தமற்ற புனிதத்தையும் முக்கியத்துவத்தையும் எதிர்ப்பது, கேலி செய்வது என்பது வேறு. தாலியை ஒரு அன்புப் பரிசாக அணிவதை ஆதரிப்பது வேறு. இரண்டையும் பகுத்து அறிய வேண்டும். அதற்கு பகுத்தறிவு வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.