Jump to content

எங்கள் சாம்பல் மேட்டில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சாம்பல் மேட்டில்.

காட்டுமிராண்டித்தனமாகவும்

நயவஞ்சகமாகவும்

எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட

எங்கள் மண்ணில்,

கனவான்களாகவும் கடவுளர்களாகவும்

எங்களில் தம்மைத் திணித்தபடி

இன்னும் எங்கள்மேல் தம்

வன்மங்களைக் கொட்டித் தீர்க்கப்

புறப்பட்டுக் கொண்டிருக்கிறது

ஒரு கூட்டம்.

மீட்பர்கள் என்று தம்மை அழைத்தபடி

தமக்குத் தாமே பட்டங்கள் சூட்டிப்

பாணங்கள் ஏவி

எம்மைச் சூழ்ந்து கொண்டனர்.

தம்பக்கம் சார்ந்தால் அரியாசனம்

இல்லையேல் அரக்கர் நாமம்

காலங் கடந்தும் இதுவே தொடர்கதையாய்

நீண்டு கொண்டிருந்தது.

மறைந்திருந்து பாணங்கள் ஏவுவதில்

வல்ல ராமர்கள் மீண்டும்

நாவாய்கள் ஓட்டிப்

புதர்களைக் கடந்து கரையைத் தொட்டனர்.

அம்புகள் வீழ்ந்து மீண்டும்

ஆயிரம் துளைகள் போட்டன.

நஞ்சு தடவிய பாணங்கள் நடுவில்

பிஞ்சுகள் கூட வெந்து வதங்கினர்.

உமது பாணத்தின் நுதியல்

தர்மம் குடியிருப்பதால்

பாராமுகமாய் உலகம் இருக்குமா?

உங்கள் தர்மம், நீதி, அகிம்சையென்ற

பசப்பு வார்த்தைகள் வரும் நாளில்

காற்றில் பறக்கலாம்.

தன்நெஞ்சே தன்னைச் சுட்டு நீவீர்

செத்தும் போகலாம்.

அன்றி,

காலங்கடக்கும் பின்னொரு நாளில்

உங்கள் பாதங் கழுவி திருவடி தொழுதோரை

அரக்கர் என்ற அவப் பெயர் நீக்கி

அரியணை ஏற்றி

ஆட்சியில் அமர்த்தலாம்.

அவர் காலந்தோறும் வாயில் காத்து

நன்றியுடன் உம் காலடி கிடக்கலாம்.

ஆனால்!!!

எங்கள் சாம்பல் மேட்டில்

எருக்கலைகள் பூக்காது.

ஒரு இனத்தின் சாபம்,

அவர்தம் வேட்கை காலங்கடந்தும்

இன்னும் நீளும் வலிமையாக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சாம்பல் மேட்டில்

எருக்கலைகள் பூக்காது.

ஒரு இனத்தின் சாபம்,

அவர்தம் வேட்கை காலங்கடந்தும்

இன்னும் நீளும் வலிமையாக.... ................

...இன்னும் நீளும் வலிமையாக .........நிஜமான வார்த்தைகள். வேதனியின் விளிம்பில் இனம் நிற்கிறது .

நம்பிக்கையோடு காத்திருப்போம் நல்ல முடிவுக்காக.......

Link to comment
Share on other sites

இதிகாச சம்பவங்களை கவியில் இணைத்த விதம் அழகு ..

தர்மத்தின் தாய்நாடாம் பாரதம் எமக்கு மட்டும் அதர்மம் செய்வது ஏன் என்றுதான்

புரியவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சாம்பல் மேட்டில்

எருக்கலைகள் பூக்காது.

ஒரு இனத்தின் சாபம்,

அவர்தம் வேட்கை காலங்கடந்தும்

இன்னும் நீளும் வலிமையாக.... ................

...இன்னும் நீளும் வலிமையாக .........நிஜமான வார்த்தைகள். வேதனியின் விளிம்பில் இனம் நிற்கிறது .

நம்பிக்கையோடு காத்திருப்போம் நல்ல முடிவுக்காக.......

நன்றி நிலாமதி அக்கா

nige Posted Apr 9 2009, 12:40 AM 

  இதிகாச சம்பவங்களை கவியில் இணைத்த விதம் அழகு ..

தர்மத்தின் தாய்நாடாம் பாரதம் எமக்கு மட்டும் அதர்மம் செய்வது ஏன் என்றுதான் 

புரியவில்லை

.

நன்றி நிகே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.