Jump to content

கடவுளே நீ வெறும் கல் தானா ?


Recommended Posts

பகட்டான கோயில் அமைத்தோமே -நாம்

பங்கரில் வாழ்வது தெரியவில்லையா

பொங்கலும் படையலும் படைத்தோமே - இன்று

பொங்கும் எம்கண்ணீர் தெரியவில்லையா

பாலால் அபிஷேகம் செய்தோமே -குழந்தை

பாலுக்காய் தவிப்பது தெரியவில்லையா

பண்டிகையும் திருவிழாவும் செய்தோமே -நாம்

குண்டினால் சாவது தெரியவில்லையா

தேரில் வைத்து இழுத்தோமே -நாம்

தெருவில் நிற்பது தெரியவில்லையா

பன்னீரால் தீர்த்தம் கொடுத்தோமே -நாம்

செந்நீரில் தோய்வது தெரியவில்லையா

பூங்காவனத் திருவிழா செய்தோமே - இன்று

தூங்காத எம்துயர் தெரியவில்லையா

நமசிவாய என்று துதித்தோமே - காற்றில்

நச்சுவாயு வருவது தெரியவில்லையா

மேளமும் தாளமும் இசைத்தோமே -இன்று

மரணஓலம் இசைப்பது தெரியவில்லையா

கண்மூடி நீயும் இருப்பதேனோ -வெறும்

கல்லன்றி வேறில்லை என்பதாலோ

http://gkanthan.wordpress.com/index/eelam/kadavul/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளை நோக வேண்டாம் ..........துன்பங்களின் மூலம் எங்களுக்கு நிலையான் தீர்வு கிட்டும் . கடவுளை நிந்தித்தல் .....மன விரக்தியின் வடிவம் .......பொறுமை அற்றவனின் செயல் பொன் சுடபட்டு தூய்மையாவது போல தமிழ் உலகும் விடிவு பெறும் .என்று நம்பிஇருப்போம்

Link to comment
Share on other sites

கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நெஞ்சம் சொன்னாலும் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்த கண்கள் கடவுள் இல்லையென்று திட்டவட்டமாகச் சொல்கின்றனவே?

Link to comment
Share on other sites

பகட்டான கோயில் அமைத்தோமே -நாம்

பங்கரில் வாழ்வது தெரியவில்லையா

பொங்கலும் படையலும் படைத்தோமே - இன்று

பொங்கும் எம்கண்ணீர் தெரியவில்லையா

பாலால் அபிஷேகம் செய்தோமே -குழந்தை

பாலுக்காய் தவிப்பது தெரியவில்லையா

கண்மூடி நீயும் இருப்பதேனோ -வெறும்

கல்லன்றி வேறில்லை என்பதாலோ

http://gkanthan.wordpress.com/index/eelam/kadavul/

கற்களுக்குக் குழிப்பாட்டி கடவுள்களைக் காத்ததும் கருணையே கடவளே என்றதும் பொய்யாகி...கடவுள்களும் கனடா அமெரிக்கா ஐரோப்பாவெங்கும் அசேலம் அடித்து நன்றாய்த்தானே வாழ்கின்றனர். அவர்களை வாழ்விக்கவென்றே நம் பக்தப்பெருந்தகைகள் பாலூற்றல் பஜனைபாடல் நோன்புற்றலென நேர்த்திகளைச் செய்கிறார்கள். கடவுளர்கள் பெற்ற இன்பம் போதுமேயினி.

Link to comment
Share on other sites

கடவுளர்கள் பெற்ற இன்பம் போதுமேயினி.

குழந்தாய் போதாது இன்னும் வேண்டும்

Link to comment
Share on other sites

அவதிப்படும் மனிதரை கடவுள் காப்பாற்றுவதெல்லாம் கதைகளிலும் புராணங்களிலும் மட்டும் தான். நிஜவாழ்க்கையில் அவதிப்படும் மனிதர் தான் தங்களையும் காப்பாற்றி கடவுளையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை!

Link to comment
Share on other sites

கடவுள் மனிதனை படைக்கும் போது நல்லவனாக தான் படைக்கிறான்

மனிதன் தான் மிருகத்தை விட மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு மனிதனின் தரம் கெட்ட வாழ்க்கை முறையையும் நினைத்து நினைத்து

கடவுள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாராம்!!!!. அது மட்டுமல்லாமல்

மனிதர்களை படைத்த இடத்தில் ஆறுகளையும் மலைகளையும் அழகிய மலர்களையும்

குளங்களையும் ஏனைய இயற்கை வழங்களையும் மட்டும் தனியே படைத்திருந்தால்

தான் சந்தோசமாக திட்டு வாங்காமல் இருக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்!!!!!

அதனால் கடவுள் பாவம் அவரை நாங்கள் திட்டாமல் இருப்போம்............

Link to comment
Share on other sites

பகட்டான கோயில் அமைத்தோமே -நாம்

பங்கரில் வாழ்வது தெரியவில்லையா

பொங்கலும் படையலும் படைத்தோமே - இன்று

பொங்கும் எம்கண்ணீர் தெரியவில்லையா

பாலால் அபிஷேகம் செய்தோமே -குழந்தை

பாலுக்காய் தவிப்பது தெரியவில்லையா

பண்டிகையும் திருவிழாவும் செய்தோமே -நாம்

குண்டினால் சாவது தெரியவில்லையா

தேரில் வைத்து இழுத்தோமே -நாம்

தெருவில் நிற்பது தெரியவில்லையா

பன்னீரால் தீர்த்தம் கொடுத்தோமே -நாம்

செந்நீரில் தோய்வது தெரியவில்லையா

பூங்காவனத் திருவிழா செய்தோமே - இன்று

தூங்காத எம்துயர் தெரியவில்லையா

நமசிவாய என்று துதித்தோமே - காற்றில்

நச்சுவாயு வருவது தெரியவில்லையா

மேளமும் தாளமும் இசைத்தோமே -இன்று

மரணஓலம் இசைப்பது தெரியவில்லையா

கண்மூடி நீயும் இருப்பதேனோ -வெறும்

கல்லன்றி வேறில்லை என்பதாலோ

http://gkanthan.wordpress.com/index/eelam/kadavul/

கவிதை சிறப்பாகவுள்ளது. வாழ்த்துக்கள்

ஒரு சிறிய, பொதுவான ...பகுத்தறிவு வாதம்...

கண்மூடியிருப்பது கடவுளின் தப்பா?

இல்லை...

கண்ணிருந்தும் குருடனாயிருப்பது மனிதனின் தப்பா?

கடவுளுக்காய் மனிதனா?

இல்லை

மனிதனுக்காய் கடவுளா?

Link to comment
Share on other sites

மனிதனுக்கென்று கடவுள்? - இருந்தால் நல்லது, ஆனால் இருப்பதாகத் தெரியவில்லை

கடவுளுக்கென்று மனிதன்? - இப்படித்தான் இத்தனை காலமும் வாழ்ந்து விட்டோம், கடைசியில் கண்டது ஒன்றுமில்லை.

இன்று காலத்தின் தேவை என்னவென்றால் மனிதனுக்காக மனிதன், தமிழனுக்காகத் தமிழன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் மனிதனை ஒருத்தனை ஒருத்தன் அடிமைப்படுத்தி.. அடிபட்டுச் சா என்றா படைச்சு விட்டார்.. இல்லையே. அவனா அடிச்சுக்கிறான் அப்புறமா கடவுளை திட்டிக்கிறான்..????! இதைப் பார்த்தா ஏண்டா கடவுள்.. நீ ஏன் மனிசனை படைச்சா என்று கடவுள் தான் தன் தலையை தானே பிச்சுக்குவார்..! :mellow::huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.