Jump to content

பரமேஸ்வரன் பாதுகாக்கப்படுவானா...?


Recommended Posts

பரமேஸ்வரன் பாதுகாக்கப்படுவானா...?

uk_20090418001.jpg

பனியுறை தேசத்துப்

பாராளுமன்ற வாசலுக்குள்

பரமேஸ்வரன்...!

சாவோடு தினம்

குருதிச் சேற்றோடு

சாகும் இனத்தைச்

சாக்கொண்டு போகாமல்

சாகும் வரை விரதமுடன்....

சத்தியனே பரமேஸ்வன்

செத்துவிடலாம் போலிருக்கிறது.

உனையும் திலீபன் போல

இழந்து போவோமோ ?

பயம் நெஞ்சுகளில்

நெருப்பின் கனதியோடு.....

சொகுசுக் கதிரைகளுக்குள்

சொர்க்கத்தைக் காண்கின்ற

சொக்கன்கள் இங்கும்

அதிகம் தோழனே....!

இவர்கள் வைத்த வினை

ஈழத்தமிழர்களின் இத்தனை விதிக்குமாய்

இட்ட வினை.

இதையறுத்து எமக்காய்

ஒளிதருவர் என்ற நம்பிக்கையின்

கடைசித் துருப்பாய்

உன்னையுருக்கி உணவுறுத்து

உணர்வோடு இன்னும்

அனைத்துலகம் மீதான

நம்பிக்கையொடு காத்திருக்கும் நண்ப....,

அழிவையெமக்கு ஆயுளாய்த்

தந்தவரின் வாசலிலே

இழியாத் தமிழனாய்

"சாவைத் தடு இல்லையேல் - என்

வாழ்வை எடு"

என்று சாகும் வரை நோன்புற்ற

சத்திய ஒளி நீ.

எங்கள் சந்ததியின் விதி நீ.

தமிழன் அழிந்திடுவான்

தமிழரின் தானையின்

தலைவன் முடிந்திடுவான்

விட்டது தொல்லை

பழையபடி உல்லாசம் ஏற்றுமதி இறக்குமதி

எல்லாமும் உண்டென்ற

நம்பிக்கைகளோடிருக்கும்

உலகின் முகத்தில் உன் நோன்பு

உறுத்தல்தான் இன்று.

பொறுத்திருப்போம் ஓர்

பொன்னினிய பொழுதுண்டென்று

பொறுமை காக்க முடியாமல்

பொழுதொரு நிலமையாய் நீ

பொலிவிழந்து போகிறாய்.

இன்னும் பொறுத்திருந்து

எதைப் பெறுவோம் ?

புரியவில்லைப் பரமேஸ்வரா புரியவில்லை....!

வேண்டாம் எழுந்துவாவென்று

அழைத்துன்னைப் போய்விடத்தான்

அன்னையின் உணர்வோடு

ஆன்மா துடிக்கிறது.

ஆயினும் அடையும் வரை எல்லையை

அசையேன் என்ற உன்னுரம்

அதையும் தடுக்கிறது.

நாளை புலரும் நாளிலாவது

ஐக்கிய இராச்சியம் தன்

ஆணவம் தொலைத்து உன்

ஆயுளை நீட்டுமா ?

எம் அன்னை மண் அழுகையை நிறுத்துமா ?

19.04.09 (இரவு 00.22)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருடாக்கப்பட்ட மனிதர்களும். செவிடாக்கப்பட்ட உலகத்தில் வாழும் நாம் இனியும், இன்னும் இவர்களின் அனுதாபத்துக்காய் காத்திருப்பதும். நண்பர் பரமேஸ்வரன் அவர்களின் உண்ணா நோன்பும் நாளைய சரித்திரதை தாமதாக்குமேயன்றி நிச்சயம் எதையும் சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கை இதுவரை இல்லை.

வன்னியில் புலியே உன் ஆயுதத்தை கீழே போடு என்கின்றார்கள், புலத்தின் தமிழினமே புலிக்கொடியை கீழே வைத்துவிட்டு பேசு என்கின்றனர். இரண்டுக்கும் அதிக வேறுபாடில்லை,!

இப்படிப்பட்டவர்கள் எமக்காய் பேசுவார்களா? எமக்காய் குரல் தருவார்களா? குற்றுயிராய் கிடக்கும் இந்த பரமேஸ்வரன் மீது இரக்கம் தான் காட்டுவாரா? அகிம்சை போதித்த புத்தனும் காந்தியும் இருந்த மண்னே அன்று திலீபனை கைவிட்ட போது அரைக்கிலோ இரக்கம் என்ன விலை என்று கேட்க்கும் இந்த பிரித்தானியாவில் இவை எடுபடுமா?

இவை என் அதங்கம்! எதுகுமே செய்ய முடியவில்லை என்ற ஏமாற்றம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் பாதுகாக்கப்படுவானா...?

uk_20090418001.jpg

-------

-------

பொறுத்திருப்போம் ஓர்

பொன்னினிய பொழுதுண்டென்று

பொறுமை காக்க முடியாமல்

பொழுதொரு நிலமையாய் நீ

பொலிவிழந்து போகிறாய்.

இன்னும் பொறுத்திருந்து

எதைப் பெறுவோம் ?

புரியவில்லைப் பரமேஸ்வரா புரியவில்லை....!

-------

நாளை புலரும் நாளிலாவது

ஐக்கிய இராச்சியம் தன்

ஆணவம் தொலைத்து உன்

ஆயுளை நீட்டுமா ?

எம் அன்னை மண் அழுகையை நிறுத்துமா ?

19.04.09 (இரவு 00.22)

நிச்சயம் பரமேஸ்வரன் பாதுகாக்கப் படவேண்டும் .

Link to comment
Share on other sites

குருடாக்கப்பட்ட மனிதர்களும். செவிடாக்கப்பட்ட உலகத்தில் வாழும் நாம் இனியும், இன்னும் இவர்களின் அனுதாபத்துக்காய் காத்திருப்பதும். நண்பர் பரமேஸ்வரன் அவர்களின் உண்ணா நோன்பும் நாளைய சரித்திரதை தாமதாக்குமேயன்றி நிச்சயம் எதையும் சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கை இதுவரை இல்லை.

வன்னியில் புலியே உன் ஆயுதத்தை கீழே போடு என்கின்றார்கள், புலத்தின் தமிழினமே புலிக்கொடியை கீழே வைத்துவிட்டு பேசு என்கின்றனர். இரண்டுக்கும் அதிக வேறுபாடில்லை,!

இப்படிப்பட்டவர்கள் எமக்காய் பேசுவார்களா? எமக்காய் குரல் தருவார்களா? குற்றுயிராய் கிடக்கும் இந்த பரமேஸ்வரன் மீது இரக்கம் தான் காட்டுவாரா? அகிம்சை போதித்த புத்தனும் காந்தியும் இருந்த மண்னே அன்று திலீபனை கைவிட்ட போது அரைக்கிலோ இரக்கம் என்ன விலை என்று கேட்க்கும் இந்த பிரித்தானியாவில் இவை எடுபடுமா?

இவை என் அதங்கம்! எதுகுமே செய்ய முடியவில்லை என்ற ஏமாற்றம்!

எங்களுக்காக இந்த நாடுகள் எதையும் செய்யுமென்ற நம்பிக்கையில்லை. ஆயினும் இந்த நாடுகள் ஏதாவெதொரு தீர்வைத் தரும் என்ற நம்பிக்கையில் பரமேஸ்வரன் போன்ற இளையோரை வருத்துகிறோம். தமிழனின் 50ஆண்டுகால அகிம்சைக்கு உலகம் தந்தது இதுவரை ஏதென்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

எல்லாருக்கும் நிதர்சன் உங்கள் போல் ஆதங்கப்படத்தான் முடிகிறது. அகிம்சையைத் தூக்கியெறிந்துவிட்டு எங்கள் பக்க நியாயத்தை வெளிப்படுத்துவது சிறந்தது.

இன்னும் எங்களுக்கிடையே இருக்கிற தலைமைக் கிழங்கள் (புலத்தில்) திருந்தாமல் எல்லாம் தங்கள் மடிக்குள்ளிருந்துதான் எல்லாம் நடக்க வேணும். இந்தக் கிழங்களை மீறி தனித்தனியாய் தன்னின உணர்வோடு எடுக்கப்படுகின்ற கவன ஈர்ப்புகளை தடுக்கிறதில் முனைப்போடு குழப்பும் குழப்பவாதிகள் முதலில் தள்ளி நின்றாலே பாதிக்கண்டம் தாண்டலாம்.

பரமேஸ்வரன் போன்ற இளைஞர்களின் முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டைகள் இன்னும் குறையாமல் இருப்பதை மாற்றவும் உரியவர்கள் முயற்சியெடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

தன் இளமை காலம் அதை தன் மனம் போன போக்கில் வாழ்ந்து தன் வாழ்க்கையை

சந்தோசமாக வாழ்ந்து முடிக்க வேண்டிய வயதில் இப்படி வீர மனம் கொண்டு பிறந்தால்

சாவு ஒரு நாள் வந்தே தீரும் அதை நான் என் தொப்புள் கொடி உறவுகளின் வடிவிற்காய்

தியாகம் செய்கிறேன் என்ற உயர்;ந்த உள்ளத்தோடும் தெளிந்த சிந்தனையுடனும் சிரித்த

முகத்துடனும் தன் வெற்றிப் பயணத்தை தொடரும் பத்தரை மாதத்துத் தங்கம் எங்கள்

பரமேஷ்வரன் நிச்சயம் இன்னும் பற்பல ஆண்டு சுகத்தோடு வாழ்வான். இவனைப் போல்

ஏனைய நாடுகளிலும் உண்ணா நோன்பு இருக்கும் அத்தனை உறவுகளையும் எங்கள் இதயங்களில்

சுமந்து நிற்கிறோம்

தமிழ் சிறி உங்கள் கவிதை அற்புதம்

இதை கட்டாயமாக பரமேஷ்வரன்

அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்

Link to comment
Share on other sites

இது புதுமை உலகம். அகிம்சை போராட்டங்கள் யாராலும் கணக்கில் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. ஆயுதங்கள் தான் பேசுகின்றன. அதற்காக பரமேஸ்வரனின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை. நிலைமை இப்படி உள்ளது . இது எனது தனிப்பட்ட கருத்து. மனிதாபிமானற்ற உலகில் வாழ்வதை எண்ணி வெட்கப்பட தான் முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக இந்த தைரியத்தமிழன் பத்திரமாக பாதுகாக்கப்படவேண்டும் அது தான் எனது விருப்பம்

Link to comment
Share on other sites

அண்ணாவின் நிலை மிகவும் கவலையளிக்கின்றது...

Link to comment
Share on other sites

நிச்சயமாக இந்த தைரியத்தமிழன் பத்திரமாக பாதுகாக்கப்படவேண்டும் அது தான் எனது விருப்பம்

மெளனம் பேசிக்கொள்கிறது சர்வதேசம். :icon_idea:

அகிம்சையை வேண்டிய தமிழினத்தின் முடிவின் நிலமையை கொல்கிறது சர்வதேசம்.

மனிதாபிமானற்ற உலகில் வாழ்வதை எண்ணி வெட்கப்பட தான் முடிகிறது.

மானிடராய்ப் பிறந்தற்காக வெட்கப்பட வேண்டிய தருணமிது. மனிதம் பேசும் நாடுகளும் மனிதவுரிமை பேசும் நமது மாணிக்கங்களும் துளித்தளியாய் தமிழினத்தை உலகெங்கிலுமிருந்தும் பலியெடுத்துக் கொண்டிருக்கிறது. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சர்வதேசம் வெறும் பேச்சுக்குத்தான் மனிதாபிமானம் பற்றிக்கதைக்கிறது வேற ஒண்டுமே இல்லை யார் செத்தா என்ன கிடந்தால் என்ன என்டு இருக்கிறானுகள்

Link to comment
Share on other sites

இவ்வளவு தொலைவிலிருந்து எம்மக்கள் அவலங்கள் கேட்டு ஆத்திரமடைகிறேம், லண்டனில் இத்தனை ஆயிரம் மக்களுக்கமுன்னால் பரமேஸ்வரன் தனது உயிரைத் தினமும் மெழுகாய் உருக்கிக்கொண்டு இருப்பதை என்னவென்று சொல்ல? அவரின் முதலாவது கோரிக்கையாவது நிறைவேற்றி பரமேஸ்வரனின் உயிர் பாதுகாக்கமாட்டுதா இந்த பிரித்தானிய அரசாங்கம் என்ற ஆதங்கத்துடன் தினமும் சென்று ஓங்கிக் குரல் கொடுக்கும் ஆதரவாழர்களில் நானும் ஒருவன்.

அங்கு தினமும் வருகைதரும் ஆதரவாழர்களுக்கு ஓர் தாழ்மையான வேண்டுகோள், ஆதரவு தருவதற்காக அங்கே கூடிய ஒவ்வேரு துளி நேரத்தையும் ஓரமாகவும், பின்புறமாகவும் கூடி நின்று சிரித்துக் கதைத்து வீண்ணாக்காமல் முன் பக்கமாக வந்து உங்கள் குரல்களை ஓங்கி உரக்க மற்ற சமுதாயத்தினருக்கு வெளிப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.