Jump to content

அசையாத திலீபன்களும் அன்னை பூபதிகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசையாத திலீபன்களும் அன்னை பூபதிகளும்

கவிதை - இளங்கவி

குட்டித் திலீபன்களாய்

எங்கள் குமரர்கள் வீதியிலே

கட்டிவத்தி விட்டதையா

காளை இரத்தம் அவர் உடம்பினிலே.....

அன்னை பூபதியாய்

எங்கள் அம்மாக்கள் தெருக்களிலே

அகிம்சை போராட்டம்

குளிரிலே அமைத்த

அந்தக் குடிலினிலே.....

கொண்டகொள்கை மாறாது

தங்கள் உயிர் பாராது

தமிழினத்தின் விடியலுக்காய்

தான் எரியும் மெழுகுகளாய்

தங்கள் உடலெல்லாம் கசங்க

கண்களும் பார்வை மங்க

நீர்த்துளிகள் சிலகண்டாலும்

நெல்லரிசி காணாமல்

தமிழர் விடியலுக்காய்

பல உயிர்கள்

வேள்விகள் நடத்துகின்றார்......

பரமேஸ்வரன் இன்றும் மரணத்தை

பார்த்தவண்ணம் நடக்கின்றான்

பாதையது தவறாமல்

தன் லட்சியத்தை தொடர்கின்றான்

வேதனை விழிகளின்

கண்னீரில் நனைகின்றான்

வேண்டாம் விடுஎன்றால்

வெறுப்பாய் பதில் சொல்கின்றான்....

அனைத்து உலகெங்கும்

அன்னை பூபதியாய்

அசையாமல் பல திலீபன்களாய்.....

அகிம்சை போர்களினால் உலகை

அசைத்தவண்ணம் இருக்கின்றார்.....

அசைந்துவிடு மேற்குலகே

எங்கள் அனைத்து உயிர் காப்பாற்று

அணையமுன்னர் நம் விளக்குகளை

அவசரமாய் காப்பாற்று

பிள்ளையையும் கிள்ளிவிட்டு

தொட்டிலையும் ஆட்டிவிடும்

உங்கள் போலி அரசியலை

புரியாத நம் குழந்தைளை காப்பாற்று.....

இளங்கவி

இத்துடன் நான் ஆங்கல மொழியிலும் ஓர் கவிதையை எழுத முயற்சித்து இருக்கிறேன். ஆங்கிலக்கவிதக்குரிய இலக்கணங்கள் அவ்வளவாகத் தெரியாவிட்டாலும் இலகு அங்கிலமொழியில் ஓர் முயற்சி. நன்றாக இருந்தால் பாராட்டுங்கள் இன்னும் எழுதத்தூண்டும், பிழையாக இருந்தால் ஓர் பாடசாலைச் சிறுவன் தவறாக எழுதியதாக நினைத்து மன்னித்துவிடுங்கள்.

So-called ‘’No fire zone’’

Poem- By iLangkavi

We want ceasefire…!

We want ceasefire…!

This is a word

Shaking the world…

But no countries respond

To even our single word…

Government declared ‘’No fire zone’’

Most horrific place in our land…..

Three hundred thousand people are living

In that piece of narrow land…

The SL army is us by none- stop shelling

Because we are Tamils……

The Government never considered

Even we are as mammals……

Hundreds of people

Is being killed every day……

Our night sky is lit up

Like bright sunny day……

Due to army attack

Sky is covered with smoke…..

Because of huge smoke

The sky look like sun is not in wake…

All Tamils force to hunger

Because of there is no food…..

Cannot supply anything

Because there is no route…..

Genocide of Tamils

Srilanka doing now in vanni…

And they won’t stop that

Until world act without funny….

Flooding with blood

All over our land….

Even Street Trees have

Human fleshes are on the hang…

Hungry is a word

Full of our dictionary page…

Please don’t delay

Until all Tamil are in carnage…

iLangkavi

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.