Jump to content

போர்ப்பகுதியில் இருந்து கடைசி தமிழன் வெளியேறும்வரை சண்டையை நிறுத்தி வைக்க வேண்டும்: இந்தியா கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் தமிழர் கொலைகளை நிறுத்த இந்தியா வலியுறுத்து. அவசர உயர் மட்டக் கூட்டத்தில் முடிவு

[23 ஏப்ரல் 2009, வியாழக்கிழமை 7:05 மு.ப இலங்கை]

வன்னியில் தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அப்பாவித் தமிழர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்து இந்தியா கவலை அடை கின்றது.

அதேவேளை பொதுமக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கும் காட்டுமிராண் டித்தனத்தை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு நேற்றிரவு புதுடில்லியில் நடைபெற்ற அரசாங்க உயர் மட்டத்தினரின் அவசர கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் தமிழ்ப் பொதுமக்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்து நாங்கள் மிகவும் மனவருத்தம் அடைகின்றோம். இந்தப் படுகொலைகள் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச் சர் பிரணாப் முகர்ஜி அவசர கூட்டத்தின் பின்னர் தெரிவித்தார்.இலங்கைப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கவென அவசரக் கூட்டம் ஒன்று நேற்றிரவு இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்புத்துறை அமைச்சர் எல்.கே.அந்தோனி, தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் போரை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் எதிர்பார்க்கப்பட்டது போன்று ஆணித்தரமான முடிவு எதுவும் எடுக்கப்படாமை குறித்து தமிழக அரசியல் வட்டாரங்கள் மிகுந்த கவலை தெரிவித்தன. இது வெறும் தேர்தல் "ஸ்ரண்ட்"" என்று அவதானி ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார். தமிழக எதிர்க்கட்சித் தலைவரான செல்வி ஜெயலலிதாவும் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இந்தப் பின்னணியிலேயே பிரதமர் தலைமையிலான அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் இலங்கை அரசை போரை நிறுத்தக் கோரும் அழுத்தம் அதிகரித்து வருவதையடுத்து அதனைத் தணிக்குமுகமாகவும் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியாவுக்கு எடுத்துரைக்குமுகமாகவும் ஜனாதிபதியின் சகோதரரும், அவரது ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ விரைவில் இந்தியா செல்லவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பை இந்தியா அழைத்துப் பேச்சு நடத்தி யிருந்ததும் குறிப்பிடத்தக்கது. (அ)

உதயன் பத்திரிகை

Link to comment
Share on other sites

இலங்கை நிலவரம் தொடர்பாகஇ பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் 2 வது நாளாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாகஇ மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கை பிரச்சினையில் தீவிரவாதிகள் மீது எங்களுக்கு அனுதாபம் கிடையாது. அப்பாவி மக்களுக்காகத்தான் பெரிதும் கவலைப்படுகிறோம். போர்ப்பகுதியில் இருந்து கடைசி தமிழனும் வெளியேறும்வரைஇ ராணுவ தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம் என்றார்.

Link to comment
Share on other sites

இந்தியாவை மட்டுமல்ல முழு உலகையே ராஜபக்ச (ச)கோதரர்கள் ஏமாற்றிவிட்டார்கள்

இதை இறயாண்மையுள்ள தமிழன் கூறும் போது புரியவில்லையா?அல்லது இப்பவும் நடிக்கிறீர்களா?

இலங்கையரசு போரை நிறுத்தவில்லை என்கிறீர்களே?கூட்டணியினருக்கு என்ன சொன்னீர்கள்? நிரந்தர போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை(இது யார் கூறியது? யாருக்காக கூறியது?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்பவர்களே நிறுத்த சொன்னால்........

சும்மா தலையை மட்டும் ஆட்டுபவர்கள் எவ்வாறு நிறுத்துவது. இதெல்லாம் பழைய தேர்தல்கால அவியல்கள். காலத்தை உணர்ந்து ஏதாவது புதிதாய் அவிப்பீர்கள் என்று எதிர்பர்ர்த்த எமக்குதான் ஏமாற்றம்.

தமிழ் மக்களின் கொலைகளைபற்றி மிகவும் வருத்தம் அடைகின்றார்களாம். இந்திய ஆட்சியாளர்கள்?

புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கின்றார்களாம்? சமாதனகாலத்தில் எல்லா பாதைகளும் திறந்துதானே இருந்தன?

பதவிவெறியர்களின் கையில் ஆட்சி போனதால் நாட்டு மக்களின் நிலை சொல்லியாளதது. ஆடுங்கள் ஆடுங்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஆடுவீர்கள்?

Link to comment
Share on other sites

காங்கிரஸ் பன்றிகளே மூடுங்கள் உங்கள் நாத்தம் பிடித்த வாயை..

போரை நடத்துவதே நீங்கள்தானே பரதேசிகளே!

Link to comment
Share on other sites

சிறு விளக்கம் தேவை: இந்த இடுகையை துவக்கியது நான் தான் - எப்படி மாறியது? நல்ல கருத்துக்களுக்கு தவறுதலாக ஏற்பட்டிருப்பின் பரவாயில்லை... மாறியதால் வருந்தவில்லை ஆனால் எப்படி என்று அறிய விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.