Jump to content

. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை .............பிறக்கும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை .............பிறக்கும்.

டிரிங் .........டிரிங் .......என்ற மணியோசை அவள் தூக்கத்தை கலைக்க ........எழுந்து தெலிபோனை எடுத்தால் .மறுமுனையில் அவள் தங்கை சாந்தி .........அக்கா என்ன இன்று இவ்வளவு நேரம் படுகிறாயா .............இல்லையாடியம்மா .நேற்று அம்மாவை கனாக்கண்டேன் அது தான் ....இரவு முழுக்க நித்திரையில்லை விடிந்தது தெரியாமல் தூங்கி விடேன் . இப்போது எத்தனை மணி உங்க நாடில்.? .காலை எட்டு மணியாகிறது . அக்கா வார ஞாயிறு ஆவணி இருபத்திநாலு ........அம்மாவின் இறந்த நாள் .........என்று அவர்கள் சம்பாஷனை போனது .........அத்தொலைபேசி உரையாடல் முடிந்தாலும் அவள் நினைவு மட்டும் தாயகதை நோக்கி பறந்தது ........

தமிழ் ஈழத்தின் தீவக பகுதியில் அவள் வாழ்விடமும் பிறந்த மண்ணும். தொண்ணூறுசிதறியோடி ஒரு கோவிலை அடைந்த ஒரு பொழுதில் ..........நாள் முழுக்க நடந்த களை சரியான உணவு இல்லத நிலை .ஒரு கொடிளைல் தஞ்சமடைய சென்ற நேரத்தில் ,அது ஜனதிரளால் நிறையவே , அவள் குழந்தைகளுடன் அருகிலிருந்த பள்ளியில் தஞ்சமடைந்தாள். கடைசியாக அம்மாவையும் அப்பாவையும் கடைசி தங்கையையும் கண்டது அதுவாக தான் இருக்க போவது தெரியாது அவளுக்கு. அந்த சனத்திரள் மத்தியிலும் அம்மா சொல்கிறா .இங்க சன கூடம் நாங்க சமாளிக்கிறோம் நீயும் பிள்ளைகளும் உன் மாமா மாமியுடன் பள்ளிக்கூட பக்கமாய் போய் ஒதுங்க்குங்கோ ....பிள்ளைகளுக்கு பால் மா பிஸ்கட் கொண்டு வந்தனியே ....? இது தான் கடைசி வார்த்தை . ஓம் அம்மா ரண்டு நாளுக்கு சமாளிக்கலாம். ஆமி போன பின் வீடுக்கு போகலாம் தானே .......ஹெலி சத்தம் கேட்குது ஓடுங்கோ ....இரவிரவாய் நித்திரை விழிப்பு ..........

ஒரு உறவினர் துணையுடன் . அவள் அராலி .........கடந்து நடக்க ஆரம்பித்தாள் ........எதுவுமே தணிந்த பாடாய் இல்லை ........ஒவ்வொரு இடமாய் நடந்து .......தங்கி ...இரவைக் கழித்து .ஒரு மறை ..... மாவட்ட கோவிலை அடைந்தாள். லங்கையிலே பிரபலமான கோவில். ....அங்கு அவளுக்கு முன்பே ........அந்த வளவும் கோவிலும் நிறைந்து விட்டு இருந்தன...........ரண்டு வாரங்களின் பின் இடியோசை போல ஒருசேதி ...........அவளின் தாய் , ஹெலி யில் இருந்து ஏவப்பட்ட ஒரு துப்பாக்கி சன்ன்தால் இவர்கள் புறப்பட்ட அன்று இரவே .........காலமாகி விடார் என்று .........ஐயோ கடவுளே நானும் அங்கு இருந்து இருந்தால் .......நினைக்கவே நெஞ்சு பதறியது .........என் தாயை கடைசியில் கட்டையிலும் பார்க்கவிலையே .........அம்மா என்று அவள் மீது விழுந்து அழவில்லியே ..........ரத்தத்தை பாலாகி ஊட்டி வளர்த்த அந்த தாய் ..........நோயிலும் பசியிலும் அரவணைத்த தாய் .......பருவத்தே பள்ளி விட்டு , சபையோர் புகழ....கல்வியிலே முன்னிர்ற்க வைத்த தாய் .........எழு புத்திர பாக்கியத்தில் நான்காவதாய் என்னை பெற்ற தாய் ....மண் கொண்டு போய் விடதே. காலம் தான் எவ்வளவு வேகமாய் .........இன்று இத்தனை வருடங்கள் சென்றும்

.....இன்னும் மோசமாக செல்லும் என் தேசம் .........கடவுளே இதற்கு ஒரு கங்கு கரை இல்லயா .......? வன்னியிலே மக்கள் படும் கஷ்டம். .......இனம் தினம் அலையும் சேதி ..........வயது இன வேறுபாடின்றி .......அழிக்க க்கப்படும் மக்கள். புனர் வாழ்வு .... தீர்வு என்று .......சர்வ தேசத்தின் இழுத்தடிப்பு ...........ஆட்சியாளனின் இன வெறி ..........ரத்தம் குடிக்கும் பாது காப்பு தலைவனின் ..........கோர முகம் கொண்ட கொலை வெறி ........இத்தனைக்கும் என தேசம் .............ரத்தமும் சதயுமாய் .......கிபீர் கொத்துக்குண்டுகள்.எனறு அத்தனை அழிவு கருவிகளும் என் இனத்தை பதம் பார்க்க ...........கொடியவனுக்கு ஒரு சாவு வராதோ ? பாது காப்பு வலயம் எனும் பெயரில் ....வடித்தெடுத்து .......கொலைக்களம் ,,,,சித் திரவதை கூடம் அனுப்பும் .......நடவடிக்கை. என்று தான் தீருமோ ? வெள்ளத்திலும் ....கொடிய வெயிலிலும் பங்கர் எனும் அகழி வாழ்கை ..........துன்பமும் துயரமும் என் தலை முறையுடன் போகட்டும்.....புதிய யுகம் பிறக்கட்டும் ...அமைதி நிலவட்டும் .......மதி கெட்ட இன வெறி மகிந்த ஆட்சி மறையட்டும் .........புதிய உலகம்பிறக்கட்டும் என் இனம் புத்துணர்ச்சி யுடன் நம் தலைவன் வழியில் மலரட்டும் .............தமிழ் ஈழம் தான் .........ஒரே தீர்வு .........

.பலவாறு சிந்தனையில் மிதந்தவள் ....பாடசாலை விட்டு வ்ரும் பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து விட்டு ............வீதியில் நடக்கும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ள ...........புறப்படுகிறாள் .......அங்கு ........அவளுக்கு முன்பே சனக்கூட்டம் ........நிறைந்து கோஷங்கள் கேட்கிறது . நிறுத்து ......நிறுத்து ......இனப்படுகொலையை.....தேவை ...ஒரு யுத்த நிறுத்தம் ..கொண்டு வா ....அமைதியை ..... தேவை .........தமிழ் ஈழம் ........விடுதலைப்போராளி பிரபாகரன் .......வாழ்க . எங்களுக்கு தேவை தமிழ் ஈழம்.........இன்று உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகள் எல்லாம் உரத்து ....ஒலிக்கும் ஓசை ....கேட்குமா ?

தீருமா அவலம் நிறைந்த தேசத்தின் அவலம் .........பிறக்குமா தமிழ் ஈழம் ........அது ஏற்கனவே இருக்கு .........கிடைக்குமா அங்கீகாரம் ........காலமும் கடமையும் ...இணைந்து ஒரு விடிவு பிறக்கும்

. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை ..............பிறக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டோ பயாகிராபியா அக்கா..... அசத்திட்டீங்க போங்க

தாகமும்... சோகமும்... தெரிகிறது

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி .......சரவெடி

Link to comment
Share on other sites

நிலாமதி அவர்களே

தங்களின் கதை கண்டு இரசித்தேன்.

தமிழ் நன்று, உணர்வு நன்று.

தங்கள் ஆக்கங்கள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நல்ல கதை

தாயக உணர்வுடன் வந்த கதை அற்புதம்

தங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான ஆக்கம் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா!

நடந்த கொடுமைகளை நினைத்தால் உணவும் இறங்க மறுக்கிறது. சாப்பிட சிறிது நேரம் தாமதமானால், வயிறு காந்தும்பொது, "அய்யோ, எம்மின மக்கள் பல நாள் பட்டினி கிடந்து மாண்டு போனார்களே" என்னும் எண்ணம் வதைக்கிறது. இப்படியே ஒவ்வொரு விடயத்திலும். இன்னும் தீவிரமாக ஏதாவது செய்திருக்க வெண்டுமோ என்று அடித்துக்கொள்ளுகிறது. ஆயினும் மனதை தளரவிட்டேனில்லை. நீங்களும் மனம் தளர வேண்டாம். தீவிரமாக நம்பிக்கை கொள்ளுவோம். நிச்சயம் ஈழம் மலரும்.

Link to comment
Share on other sites

அக்கா ஒவ்வொரு தன்மான தமிழனும் தெளிந்த சிந்தனையுடன் செயல் பட்டால்

நிச்சயமாக...... கட்டாயமாக.......உறுதியாக நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்....

உங்களின் தனி நாடு மலரும் என்று................

உங்கள் ஆக்கம் இன்றய நிலையை உணர்த்தி நிற்கிறது!!!!!!

நன்றி அக்கா!!!!!

அன்புடன்

மாறன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.