Jump to content

அச்சுறுத்தும் முரளிதரன் பந்துவீச்சு


Recommended Posts

அச்சுறுத்தும் முரளிதரன் பந்துவீச்சு

இலங்கையில் வரும் 30ம் தேதி முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.

இந்தியா, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ளதால் மூன்று அணிகளும் முழுவீச்சில் தங்களை தயார்படுத்தி வருகின்றன.

இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்கின்றனர். காரணம் மேற்கு இந்திய அணியில் முன்னணி ஆட்டக்காரர்களான லாரா உட்பட பலர் இடம் பெறவில்லை. இலங்கையை பொறுத்த வரையில் அந்த அணி முரளிதரனின் மாயாஜால பந்து வீச்சை தான் நம்பியுள்ளது.

27srilanka9hm.jpg

இந்த அணிகளுடன் இந்திய அணியை ஒப்பிட்டு பார்க்கும்போது சற்று சிறந்த அணியாக காட்சியளித்தாலும், கடந்த ஒராண்டு காலத்தில் இந்திய அணி எதுவும் பெரிதாக சாதிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது இடம் பிடித்து இருக்கும் வீரர்கள் அனைவரும் இளைஞர்கள் என்றாலும் அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என்பதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கள் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவுதான்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணி, இலங்கைக்கு எதிராக பெரிய அளவில் வெற்றிகளைப் பெறவில்லை. 1999ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணி, இலங்கையை பெரும் அளவில் பதம் பார்த்தது.

இந்திய ஆட்டக்காரர்களில் டிராவிட் மட்டுமே இலங்கைக்கு எதிராக 15 போட்டிகளில் 400 ரன்கள் மேல் எடுத்துள்ளார். மற்ற ஆட்டக்காரர்களான ஷேவாக், யுவராஜ், கைப், ஆகியோர் சொல்லி கொள்ளும் அளவுக்கு இலங்கைக்கு எதிராக சாதிக்கவில்லை.

நடந்து முடிந்த இலங்கை, மேற்கு இந்திய தீவுகளுக்கான டெஸ்டில் முரளிதரனின் ஆதிக்கம் பிரமிக்க வைக்கிறது. இவர் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி தரக்கூடும். தோள்பட்டை காயம் காரணமாக 11 மாத இடைவெளிக்கு பின்னர் களம் திரும்பி சிறந்த முறையில் பந்து வீசுவதால் அது மற்ற வீரர்களுக்கு சற்று மனவலிமையை கண்டிப்பாக கொடுக்கும். ஆட்டத்தை பொறுத்தவரை மனவலிமை மிக அவசியமான ஒன்று.

மற்ற பந்து வீச்சாளர்களான வாஸ், ஜொய்சா, ஃபெர்னான்டோ ஆகியோர் சிறந்த முறையில் பந்து வீசி வருகின்றனர். அந்த அணியின் பேட்ஸ்மேன்களான ஜெயசூரியா பற்றி சொல்லவே வேண்டாம். ஃபார்மில் இல்லை என்றாலும் இந்திய அணிக்கு எதிராக சதம் அடிக்கும் அளவுக்கு சிறப்பாக ஆடக்கூடியவர். அவரது பந்து வீச்சும் அந்த அணிக்கு கூடுதல் பலம் என்றே சொல்லலாம். மற்ற வீரர்கள் சங்ககாரா, மர்வன் அதப்பட்டு, அர்னால்ட் ஆகியோர் பக்க பலமாக இருக்கிறார்கள்.

இந்திய அணியைப் பொறுத்தவரை டிராவிட் மட்டுமே தற்போது ஃபார்மை வெளிப்படுத்தி வந்தாலும், கேப்டன் பொறுப்பு அவருக்கு கூடுதல் சுமையாகவே அமையும் என்பதும் உண்மை. ஷேவாகை பொறுத்த வரையில், களத்தில் இருந்தால்தான் ரன்கள் நிச்சயம். லஷ்மன் சிறப்பான ஆட்டத்தை காண்பது அரிது. இடைநிலை ஆட்டக்காரர்களான யுவராஜ் சிங், கைப் ஆகியோர் சிறப்பாக இணைந்து ஆடி ஓராண்டு கடந்து விட்டது.

மற்ற வீரர்களான மகேந்திர சிங் தோனி, பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். புதிய வீரர்களான வேணுகோபால் ராவ், சுரேஷ் ரெய்னா, ஜெய் பி. யாதவ் ஆகியோர் இனிமேல் தான் தங்களது ஆட்டத்திறனை வெளிக்காட்ட வேண்டும்.

பந்து வீச்சில் மட்டுமே இந்திய அணி சிறந்து விளங்குகிறது. இர்பான் பதான், ஜாகிர் கான், நேஹ்ரா, பாலாஜி ஆகியோர் தற்போது இந்திய அணிக்கு நம்பிக்கை பந்து வீச்சாளராக உருவாகி இருக்கிறார்கள். சூழல் பந்து மன்னர்கள் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரும் சிறந்த முறையில் பந்து வீசி வருகிறார்கள் என்பது நமக்கு ஊக்கமளிக்கும் செய்தி.

மேற்கு இந்திய தீவு அணியில் முன்னணி வீரர்கள் இல்லை என்றாலும் ஒருநாள் போட்டி பொறுத்தவரையில் அந்த அணி தனது முத்திரையை பதித்து வருகிறது. அந்த அணியில் சந்தர்பால், ரிக்கார்டோ போவல், ஜெர்மி, ராம்டென் ஆகியோர் துடிப்புள்ள வீரர்களாக இருக்கிறார்கள்.

பந்து வீச்சில் லாசன், பெஸ்ட் இருவரை மட்டுமே அந்த அணி நம்பியுள்ளது.

ஆக மொத்தத்தில் இந்த தொடரில் மேற்கு இந்திய தீவு அணிகளை விட இலங்கை அணி சற்று பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இலங்கை வீரர் முரளிதரனின் பந்து வீச்சை மட்டும் சமாளித்து ஆடினால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் போட்டியை பொறுத்த வரையில் இந்திய அணி அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும். அப்படி செயல்பட்டால் முரளிதரனாக இருந்தாலும் சரி, மற்ற எந்த வீரர்களாக இருந்தாலும் சரி இந்திய அணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி

vikatan

Link to comment
Share on other sites

முத்தையா முரளிதரன் தற்போது எத்தினை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். எத்தனை விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் போன்ற தகவல்களைதரமுடியுமா?

Link to comment
Share on other sites

Name : Muttiah Muralitheran

Popular as : Murali

Born 17th April , 1972 in Kandy In Srilanka

Height : 5 feet 7 inches

Weight: 60 kgs

Father's Name : Sinnasamy Muttiah

Mother's Name: Lakshmi Muttiah

Brother's Names : Sritharan, Prabakaran and Sashikaran

Major Teams: Sri Lanka, Tamil Union, Lancashire ,Kent and World X1

Batting Style : Right Hand Batsman

Bowling Style : Right arm Off Break and Doosra

1991- Named 'Bata Schoolboy of the year' award

1991- Named 'Bata Schoolboy of the year' award

1991 - Joins Tamil Union Cricket Club, after School

1991 - Selected for Sri Lanka 'A' team tour of England.

1992 - Captains St. Anthony's College - Katugastota, Kandy

1992 - Makes test debut against Australia.

1993 - Plays in his first one-day international against India.

1997 - Takes 100th test wicket against New Zealand.

1998 - Takes 200th test wicket against England.

1999 - Named as one of Wisden's five cricketers of the year. First county cricket appearance for Lancashire.

2000 - Takes 300th test wicket against South Africa.

2002 - Becomes the youngest and quickest player to reach 400 test wickets, reaching the mark in Sri Lanka's third test against Zimbabwe, only the 72nd test of his career

2003 - Joins county side Kent.

2004 - Takes six for 45 off 24.2 overs on first day of first test v Zimbabwe, bowling Douglas Hondo for his sixth wicket to match former West Indies pace bowler Courtney Walsh's world mark of 519 test victims.

Link to comment
Share on other sites

2005 ஆம் ஆன்டுகளுக்கான தரவுகள் யாரிடமாவது இருந்சால் போடலாம்.

Link to comment
Share on other sites

Test Career - Batting

Tests Innings NO Runs H.Score Ave. SR 100's 50's Ct

90 115 42 940 67 12.87 68.86 0 1 50

--------------------------------------------------------------------------------

Test Career - Bowling

Overs Maidens Runs Wickets Ave. Best 5's 10's SR Econ

5120.4 1366 11998 532 22.76 9-51 44 13 58.2 2.34

--------------------------------------------------------------------------------

One Day Career - Batting

Matches Innings NO Runs H.Score Ave. SR 100's 50's Ct

237 109 44 385 19 5.92 67.90 0 0 97

--------------------------------------------------------------------------------

One Day Career - Bowling

Overs Maidens Runs Wickets Ave. Best 4's 5' SR Econ

2145.1 157 8103 366 22.13 7-30 10 8 35.1 3.77

--------------------------------------------------------------------------------

First Class - Batting

Matches Innings NO Runs H.Score Ave. SR 100's 50's Ct

174 212 62 1735 67 11.56 0 1 97

--------------------------------------------------------------------------------

First Class - Bowling

Overs Maidens Runs Wickets Ave. Best 5's 10's SR Econ

8267.3 2305 19221 1010 19.03 9-51 87 25 49.1 2.32

--------------------------------------------------------------------------------

Link to comment
Share on other sites

முரளியுடயது மட்டுமல்ல அநேகமாக எல்லா வீரர்களினதும் விளையாட்டு விபர அட்டவனையைப் பார்க்கலாம்

http://www.cricket365.com/home/index.shtml

அல்லது

http://www.cricketonly.com/clients/cricket365

Link to comment
Share on other sites

Test Career Bowling - Most Wickets

Player

Wicket

SK Warne 589

M Muralitharan 549

CA Walsh 519

GD McGrath 508

A Kumble 461

N Kapil Dev 434

RJ Hadlee 431

Wasim Akram 414

CEL Ambrose 405

IT Botham 383

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தல

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

AFRO ASIA CUP 2005 MATCH -2 (20 AUG 2005 )

ஆபிரிக்காவில் கிரிக்கெட் விளையாடும்; 3 நாடுகளான தென்ஆபிரிக்கா சிம்பாவே கென்னியா நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட டீமுக்கும் ஆசியாவின் இந்தியா இலங்கை பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட டீமுக்கும் இடையான AFRO ASIA CUP 2005 இரண்டாம் ஆட்டம் இன்று நடைபெற்றது மிகவும் விறுவிறுப்பாக நடந்த போட்டியில் ஆசியா அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது

விபரம்

ஆசியா அணி : 267-7 (50 ஓவர்)

சங்கக்காரா -61 மகல ஜெவர்தனா 52

ஆபிரிக்கா அணி :250க்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்ததுஇலங்கை சார்பில் -சங்கக் காரா .மகல . முரளி

பாக்கிஸ்த்தான் -இன்சாம் மமுல் ஹக் . ஜோகானா . ராசாக் . அத்தார்

இந்தியா - சோவாக் . சாகிர் ஹான் . நேரா

பங்களாதேஷ் ---முகமட்

அதில் சிறப்பென்னவெண்டால் இத்தனை அனுபவமிக்க ஆட்டக்காரர்கள் இருந்த போதும் ஆசியா அணிக்கு தலைமை ஏற்றிருந்தவர் முத்தையா முரளிதரன் இலங்கையில் கூட இவருக்கு இந்த தலைமைப்பதவி கிடையாது இறுதி கட்டத்தில் மிகவும் புத்திசாலித்தனமான பந்துவீச்சு மாற்றத்தால் ஆசியா அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார் இறுதியாக வென்ற அணிக்கான பரிசு வாங்கும் போது தனது முதலாவது தலைமையேற்ற போட்டியே வெற்றியை தேடித்தந்தது மிக்க மகிழ்ச்சி எனக்கூறினார்……….இப்படி அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு இலங்கையணி ஒருமுறையாவது தலைமை பதவி கொடுத்து கௌரவிக்குமா??? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

Link to comment
Share on other sites

தமிழ்ப் பெடிக்கு தலமைப் பதவியா? ...

அணியில இருக்கிறதே பெரிய விசயம் :wink:

Link to comment
Share on other sites

இப்படி அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு இலங்கையணி ஒருமுறையாவது தலைமை பதவி கொடுத்து கௌரவிக்குமா??? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

ஆனால் அனைத்து நாட்டு கிரிக்கெட் அணியிலும்

துடுப்பாட்டத்தில் சிறந்தவர்களுக்கு மட்டும் தானே

தலைமைப் பதவி கொடுக்கிறார்கள்? :?:

Link to comment
Share on other sites

ஆனால் அனைத்து நாட்டு கிரிக்கெட் அணியிலும்

துடுப்பாட்டத்தில் சிறந்தவர்களுக்கு மட்டும் தானே

தலைமைப் பதவி கொடுக்கிறார்கள்? :?:

பாகிஸ்தான் முன்னாள் தலைவர் வக்கார் யூனிஸ் ஓர் பந்துவீச்சாளராவர். :idea:

Link to comment
Share on other sites

வெங்கட்ராகவன் இந்திய அணிக்கு தலைமை தாங்கினாரே!

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் முன்னாள் தலைவர் வக்கார் யூனிஸ் ஓர் பந்துவீச்சாளராவர்.

வக்கார் யுூனிஸ் மாத்திரமல்ல, வசீம் அக்கரம், சேன் போலக் போன்ற பந்து வீச்சாளர்களும் அணித் தலைவர்களாக செயற்பட்டிருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

ஆனால் அனைத்து நாட்டு கிரிக்கெட் அணியிலும்

துடுப்பாட்டத்தில் சிறந்தவர்களுக்கு மட்டும் தானே

தலைமைப் பதவி கொடுக்கிறார்கள்?

பந்துவீச்சாளர் கப்டன்களாக :

இந்தியா - வெங்கட்ராகவன் . கபில்தேவ்

பாகிஸ்தான் - இம்ரான்கான் . வக்கா யுனீஸ்

தென்ஆபிரிகா - பொலக்

மேற்கிந்திய தீவுகள் - பிசப் . அம்புரோஸ்

சிம்பாவே - ஸ்ரிக்

இப்படி எனக்குத் தெரிந்தவை..........

Link to comment
Share on other sites

ஜோவ்வ் முகத்தார் யார் சொன்னது நேற்று நடந்த 20-08௨-2005 ஆசிய லெவன் அணிக்கு ஆபிரிக்க லெவன் அணிக்கும் நடைபெற்ற போட்டிக்கு முரளி ஆசிய அணிக்கு தலைமை தாங்கினது என்று?? அந்த போட்டிக்கு தலைமை தாங்கியது பாகிஸ்த்தானின் மலை இன்சமாம் உல் ஹக் தெரியுமா?? முரளி ஒன்லி பந்து வீச்சுத்தான்.. (அதுதான் முரளிண்ட தலையில எழுதி இருக்குப்போல) இருந்தாலும் 10 ஒவர்களை போட்டு 1 விக்கட்டை கைப்பற்றி இருந்தார்.. :idea: :evil:

Link to comment
Share on other sites

என்ன இதுதான் உம்மடை புலநாய்வுத்துறை அறிவா முதலாவது மச்தான் இன்சாம் மமல் ஹக் தலைமை தாங்கினார் இரண்டாவது மச் முரளிதான் தலைமை ஆனால் இன்சாம் விளையாடினார் கடைசியா பரிசு வாங்குவதற்கு வந்த முரளியிடம் கேட்டார்கள் இது முதல் அனுபவம் உமக்கு எப்பிடி இருந்தது எண்டு அதுக்கு முரளி சொன்னார் இது தான் எனது முதலும் கடைசியுமான தலைமையேற்பது என..... இன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது அதில் சில வேளை மாற்றங்கள் வரக்கூடும் நேற்று ARY DIGITAL (DUBAI CHANNEL) குந்தியிருந்து பார்த்த எங்களிடமே சந்தேகமா.....

Link to comment
Share on other sites

மிஸ்டர் முகத்தார்,, குந்தி இருந்து ஏ ஆர் வை டிகிற்றலை பார்த்தீங்க சரி அந்த ஏஆர் வை டிக்கிட்டைலை ஓன் செய்துவிட்டுப்பார்த்தீர்கள

Link to comment
Share on other sites

அங்கை போய் பாக்காதையும் இங்கை போய்ப் பாரும் புள்ளடி என்னதுக்கு போட்டாங்களோ ஆருக்குத் தெரியும் அப்ப டிவி நேரடியா என்னத்தைப்பாத்தம்

Mutthiah Muralitharan, who was leading the side in place of Inzamam-ul-Haq, managed to get only one wicket, while Shoaib, opening the attack, grabbed two wickets.

http://inhome.rediff.com/cricket/2005/aug/20asia.htm

Link to comment
Share on other sites

இந்தியா - வெங்கட்ராகவன் . கபில்தேவ்

பாகிஸ்தான் - இம்ரான்கான் . வக்கா யுனீஸ்

தென்ஆபிரிகா - பொலக்

மேற்கிந்திய தீவுகள் - பிசப் . அம்புரோஸ்

சிம்பாவே - ஸ்ரிக்

இவர்கள் துடுப்பாட்டத்திலும் சிறந்தவர்கள் தானே?

Link to comment
Share on other sites

ஆகா.... முகத்தாருக்கும் "டண்"னுக்கும் சண்டை "என்ஜாய்"

:lol: :P

(ஊர் இரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்)

Link to comment
Share on other sites

இவர்கள் துடுப்பாட்டத்திலும் சிறந்தவர்கள் தானே

மேற்கிந்திய தீவுகள் - பிசப் . அம்புரோஸ்

இவர்கள் எங்கடை முரளியைவிடவே மொசமான துடுப்பாட்க்காரர்கள்

இதிலை என்ன சொல்வதென்றால் அனுபவமிக்வர்கள் எண்டு பார்த்துக் குடுத்தால் என்ன இலங்கையணியில்

ஜெயசூரியா

முரளி

அதபத்து

மகல

வாஸ்

சங்கக்காரா

இந்த வரிசையில்தான் அனுபவபெற்றவர்கள் இருக்கிறார்கள் இதில் ஜெயசூரியா ஏற்கனவே தலைமை ஏற்றவர் ஆனால் அந்தப் பொறப்பால் தன்னால் சரியாக துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தமுடியவில்லை எண்டு தானாகவே பதவியை துறந்தவர் அப்போ 2வது நிலையில் இருக்கும் முரளிக்கு குறைந்தது உப தலைவர் பதவி ஏன் குடுபடவில்லை என்பதுதான் ??

ஆசியா டீமுக்கு இன்சாம் கப்டன் ஆக அறிவித்தது ஆனால் அவருக்கு காலில் ஏற்பட்ட காயத்தால் தலைமைப் பதவியை ஏற்க முடியவில்லை உடனே பதில் தலைவihக யாரைப் போடலாம் என யோசித்து முரளியை சொல்லியிருக்கிறார் எண்டால் வெளியிருப்பவர்களுக்கு முரளியில இருக்கும்; நம்பிக்கை ஏன் இலங்கை கிரிக்கெட் சபைக்கு தெரியவில்லை இங்கையும் அரசியல் புகுந்துள்ளது தான் வேதனைக்குரியது

Link to comment
Share on other sites

உங்களுககுத் தெரியுமா ஆரம்பகாலங்களில் முரளியை டீமிலிருந்து தட்டுவதற்கு எவ்வளவு முயற்சிகள் எடுக்கப்பட்டது அப்போதிருந்ந இலங்கை அணி கப்டன் அருச'சுணாதான் மிக போராட்டங்கள் மத்தியில் முரளியை தொடர்ந்து வைத்திருந்தார் இதை முரளிகூட ஒருசமயம் தெரிவித்தார் தான் இந்த நிலைக்கு வருவதற்கு அர்ச்சுணாவும் அரவிந்தாவும்தான் காரணம் எண்டு அரசியல் வேறை விளையாட்டு வேறை இதற்கு அருச்சுணா ஒரு சு.கட்சி ஆள் ஒருவேளை முரளி கதிர்காமர் மாதிரி மாறினால் இந்தப் பதவிகள் கிடைக்கக் கூடும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.